Archive for the ‘உறவினர்’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?

ஏப்ரல் 7, 2013

நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?

Murdered Murugan -  Paramakkudi

பரமக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, பதற்றம், சாலைமறியல்: ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெரிய கடை அஜாரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்[1]. பரமக்குடியில் மார்ச் 19, 2013ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, மெயின் பஜாரில் தனது வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு விரட்டு கடைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டு மோட்டார் கைக்கிள்களில் வந்த நால்வர் வழிமறித்தனர்.  திடீரென்று “பைப்” குண்டுகளை வீசினர், ஆனால், அவை வெடிக்கவில்லை. தப்பித்து ஓட முயன்ற முருகனை நால்வரும் துரத்திச் சென்று, பயங்கர ஆயுதங்களால் கண்ட-துண்டமாக வெட்டிக் கொன்று ஓடிவிட்டனர்[2]. முருகனின் வெட்டப்பட்ட உடல் தெருவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இவ்வளவும் பட்டப்பகலில் நடந்தது[3].

Paramakudi - Murugan murder - pipe bomb

இதனால் பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், குறிப்பாக, பஜார் தெருவில் மூடப்பட்டன. இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்[4]. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது[5]. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால், பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, கம்ப்யூட்டரில் படங்களை வரைந்து உருவாக்கி, அவற்றை மக்களிடம் காணித்து விசாரணையை நடத்தினர்[6].

Paramakudi - Murugan murder

ரபீக்ராஜாஇமாம் அலி கூட்டாளி, போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் எப்படி இதில் சம்பந்தப் பட்டான்: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தொகுத்துப் பார்த்ததில் கிடைத்துள்ள விவரங்கள் அவர்களது பின்னணியை வேறுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட நால்வர்[7]

  1. என். ராஜா முஹம்மது [N. Raja Mohamed (58)] – தற்போது சென்னை டி.நகரில் குடியிருந்து வரும் பரமக்குடி நாகூர் கனி மகன்[8],
  2. எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் [his nephew M. Manoharan (41) of Paramakudi] – திருவள்ளுவர் நகர் முத்துச் சாமி மகன்[9],
  3. எஸ். ரபீக் ராஜா அல்லது “வாழக்காய்” [‘Vazhakai’ alias S. Rafeeq Raja one of (35) two Madurai based mercenaries] – மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான் அலாவுதீன் மகன்[10].
  4. ஏ. சாஹுல் ஹமீது [A. Sahul Hameed (37) another mercenary] -மதுரை தாசில் தார் பள்ளிவாசல் தெரு அகமது மகன்[11].

இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான‌ போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது[12].

Paramakudi - the arreseted four

தீவிரவாதிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகள் கூலிப்படைக்குக் கிடைக்குமா?: ரபீக் ராஜா, சாஹுல் ஹமீது மற்றவர்கள் உபயோகப்படுத்திய குண்டுகள் ஆச்சரியமாக உள்ளது. அவை மேம்படுத்தப் பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு [Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives] வகையைச் சேர்ந்தது என்பதுதாகும். அவர்கள் அவற்றை கோயம்புத்தூரில் வாங்கியதாகச் சொல்கிறார்கள்[13]. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த இரண்டு பைப் வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்து, போலீஸார் புலனாய்விற்கு எடுத்துச் சென்றனர்.

பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்படும் ரபீக் ராஜா இங்கு எப்படி வந்தான்?: கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை என்ற இடங்கள், அவற்றின் தொடர்புகள் விஷயத்தை வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறது. கிடைத்துள்ள வெடிகுண்டுகள், வெறும் குண்டுகள் அல்ல. அப்படியென்றால், –

  • கோயம்புத்தூரில் அத்தகைய குண்டுகளைத் தயாரிப்பவர்கள் யார்?
  • எங்கு தயாரிக்கிறார்கள்?
  • அத்தகைய தொழிற்நுட்பம் எப்படி கிடைத்தது?
  • அதற்கான பொருட்கள் – குறிப்பாக ஜெல், எப்படி கிடக்கின்றன?
  • யார் அவற்றை வாங்கி, விநியோகிக்கின்றனர்?
  • கோயம்புத்தூரில் அப்படி அவை விற்க்கப்படுகின்றனவா?

இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான‌ போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர்[14]. இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர். முருகன், “பணம் தரமாட்டோம்’ என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்[15].

பரமக்குடி – இந்து-முஸ்லீம் பிரச்சினை, ஜாதி-கலவரம் என்றுள்ளது: பரமக்குடியில் 2011ல் ஜாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு அடிக்கடி கொலை நடப்பதும் சகஜமாகி உள்ளது. முஸ்லீம்களின் ஜனத்தொகை இங்கு கனிசமாகப் பெருகி வருவதால், புதிய பிரச்சினையாக இந்து-முஸ்லீம் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கு மாமா-மைத்துனன் முஸ்லீம்-இந்து என்று இருப்பது, வினோதமா, வேடிக்கையா, விபரீதமா என்று தெரியவில்லை. ஆனால், கொலை என்று முடிந்துள்ள போதில், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி, சாதாரண நிலத்தகராறு என்பதனையும் கடந்து, செயல் பட்டுள்ள நிலையை நோக்கும் போது, வேறு ஆழ்ந்த சதிதிட்டம் இருக்குமோ சந்தேகிக்க வேண்டியுள்ளது.

யார் இந்த போலீஸ் பக்ருதீன்? – விவரங்கள்[16]: ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான‌ போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது, இதர விஷயங்களை இணைக்கிறது. அத்வானியைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காட்டுகிறது. இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.

இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.

பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.அவ்வழக்கு நடந்து வருகிறது.

மேம்படுத்தப்பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு : பைப் குண்டு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவதைப் பற்றி, முன்னர் சில இடுகைகளை இட்டுள்ளேன்[17]. திருப்பத்தூர் தொடர்பு அம்மோனியம் நைட்ரேட், குண்டு வெடிப்பு மற்றும் ஜோஸப் பாஸ்கர் – இவை நினைவிற்கு வருகின்றன[18]. கட்டுப்பாட்டில் இருக்கும் ரசாயனங்கள், அவற்றை வாங்குபவர்கள், குறிப்பிட்ட உபயோகம் தவிர, குன்டுகள் தயாரிக்கத் திருப்பி அனுப்பி வியாபாரம் செய்வது[19], உபயோகம், ஜெல், முதலியவை, பெரிய சதிதிட்டத்தைக் காட்டுகிறது[20].

வேதபிரகாஷ்

07-04-2013


[13] The team found that the mercenary gang had travelled up to Tirupur before committing the murder and could have purchased the pipe bombs from Coimbatore, sources said. Examination of two of the live bombs recovered from the scene showed that the Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives. The special team is investigating into this aspect, the SP said.

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மார்ச் 22, 2013

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.

மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

நவம்பர் 12, 2011

மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

 

நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.

 

கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].

 

இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?

 

நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.  அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10].  இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?

 

வேதபிரகாஷ்

11-11-2011


[1] என்னுடைய உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும்: தாவூத் இப்ராகிம்

புதுடெல்லி , வியாழன், 10 நவம்பர் 2011

http://tamil.webdunia.com/newsworld/news/national/1111/10/1111110033_1.htm

[5] Zubair Khan, son-in-law of Dawood Ibrahim’s sister Haseena Parkar, is making a film on the life and crimes of the dreaded don which is titled Lakeer Ka Fakir. The film also deals with roles of Karim Lala and Chhota Shakeel and their association with Dawood.

http://searchandhra.com/cinema/a-film-on-dawood-ibrahim-by-his-relative

[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!

In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.

http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm

[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.

[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.

[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/

[11] Zee News said the Mumbai Crime Branch was also aware of the don’s desire to be buried in India. Himanshu Rai, chief of the Crime Branch, has been quoted as saying, “We have received credible inputs regarding this.”

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/

ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

ஒக்ரோபர் 7, 2011

ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது: காஷ்மீரில் மக்களுக்கு உயிர் போவது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குண்டுகள் வெடிப்பது முதலியவை ஒன்றும் புதியதான நிகழ்ச்சிகளோ, செய்திகளோ இல்லை. இருப்பினும், இப்பொழுது ஒருவர் மர்மமான முறையில் இறந்திருப்பதைப் பற்றி அதிகமாகவே அரசியல் கட்சிகள் கலாட்டா செய்து வருகின்றன. ஊடகங்களுக்கோ தேவையில்ல, வெறும் வாயிற்கு அவல் கிடைத்தக் கதை தான். தேசிய மாநாட்டுக்கட்சி தொண்டர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, தன் தந்தை மரணம் குறித்து முதல்வர் ஓமர் பொய் சொல்வதாக, இறந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்[1]. இவரைத் தவிர, மற்றொரு கண்ணால் பார்த்ததாக அப்துல் சலாம் ரேஷி[2] என்பவர் சைது முஹம்மது யூசுப், ஒமரின் வீட்டிற்குள் செல்லும் போது நன்றாகத்தான் இருந்தார். வெளியே வரும்போது, பேசமுடியாமல் வாந்தி எடுக்கும் நிலையில் இருந்தார்[3]. அந்நிலயில் தான் போலீஸார் அவரைப் பிடித்துச் சென்றதாகக் கூறுகிறார்.

காஷ்மீர் சட்டமேலவை பதவிக்கு லஞ்சம்: தேசிய மாநாட்டு கட்சித்தொண்டர் சையது யூசுப் (61). அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சட்டமேலவை உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் ரூ. 1 கோடியே 18 லட்சம் பெற்றுள்ளார். இவர் லஞ்ச வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி போலீஸ் காவலில் யூசுப் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓமர் அப்துல்லா, கட்சித்தொண்டர் மரணத்திற்கு தான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், யூசுப் மகன் தலிப் உசேன் கூறுகையில், தனது தந்தையை போலீஸ் காவலில் வைத்து அடித்து உதைத்ததாகவும், ஓமருக்கு தெரிந்தே இது நடந்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.

மகனுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி – கூறுவது அப்பா!: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபருக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்[4]. இந்த விஷயத்தில் பெரிய சதி இருப்பதாக எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக ஆகியவை குற்றம்சாட்டின. ஓமர் அப்துல்லா பதவி விலக வேண்டுமெனவும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இந்நிலையில் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் கட்சி எதையுமே மறைக்கவில்லை. யூசுப் இறந்தது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும்.

தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நீடிப்பது எதிர்க்கட்சிகள் விரும்பவில்லையாம்: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அரசியல் ஆதாயத்துக்காகவும், எப்படியாவது மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். எந்த விஷயத்தை வைத்தாவது எங்களை குற்றம்சாட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதும், காங்கிரûஸ தவிர்த்து விட்டு எங்கள் கட்சியை மட்டும் குறிவைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எங்கள் கட்சியில் நேர்மையான முறையில்தான் பதவிகளுக்கும், தேர்தலில் போட்டியிடவும் நபர்களைத் தேர்வு செய்கிறோம். இங்கு வந்திருக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர்களைக் கேட்டு இதனை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

ராஜினாமா செய்ய முடியாது: காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்[5].காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சயித் முகமது யூசுப், 61, போலீஸ் காவலில் உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை, நீதி விசாரணையில் உண்மைகள் விரைவில் வெளிவரும், என தெரிவித்தார்.

ஒமர் பதவி கொடுக்க பணம் வாங்கினாரா? அப்துல் சலாம் ரேஷி[6], “யூசுப் என்னை ஒமருக்கு அறிமுகப்படுத்தினார்[7]. பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுப்பதாகக் கூறினர். ஆனால், கொடுக்காததால் பணத்தைத் திரும்பக் கேட்டேன். முழுப்பணத்தைக் கொடுக்காததால் விடாமல் கேட்டேன்”. ஒருவேளை, ஒமருக்குண்டான தொடர்பு தெரிந்து விட்டது என்று, யூசுப் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதேப்போலத்தான், அமர்சிங் காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, பீஜேபி எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து, கட்சி மாற முயன்றுள்ளனர், ஆக காங்கிரஸ் இப்படி ஒரு வழியைக் கடைபிடித்து, எல்லா மாநிலங்களிலும் கோடிகளை அள்ளுகிறது போலும்!


[2] Abdul Salam Reshi, a key witness in the alleged killing of National Conference activist Syed Mohammad Yousuf, has broken his silence claiming that the latter was hale and hearty when he was taken to another room in the chief minister’s residence but was vomiting and unable to speak when he was being taken to the crime branch headquarters in a police vehicle.

[6] “I was introduced to Farooq Abdullah and Omar Abdullah by Yusuf. He came to my residence with the chief minister in a chopper. He also took me to meet Farooq Abdullah at his Jammu residence,” Reshi said in Srinagar. Reshi said his relations with Yusuf turned sour, after he demanded return of his money.  “When I went to meet Omar sahib in July, he made sure I will get back some money. I was given Rs 10 lakh after a month and another Rs 10 lakh later. It was only after Mohammed Bhat of Ganderbal complained that he paid .`85 lakh to Yusuf for a ministerial berth did the Chief Minister decide to confront Yusuf,” he added.


கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியா, உறவினரா, சகோதரரா!

செப்ரெம்பர் 4, 2010

கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியாம்!

கூட்டாளியா, சகோதரரா, உறவினரா? ஊடகங்கள் கைது செய்யப்பட்ட அப்துல் ஆஸிசை கூட்டாளி என்றும், உறவினர், சகோதரர் என்றும், கட்சியின் நிதியாளர்……….என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளதால், ஊடகங்கள் குழப்புகின்றனவா அல்லது திசைத்திருப்புகின்றனவா என்று ஒன்றும் புரியவில்லை.

மதானி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்

செப்டம்பர் 05, 2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=77822

மதுரை : பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். இவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான முயற்சியில் மதானி சகோதரர் அப்துல் அசீஸ் ஈடுபட்டிருந்தார். அப்துல் அசீஸ் மீது செக் மோசடி தொடர்பாக வழக்குகள் உள்ளன. இது தொ,டர்பாக சி.பி.ஐ., போலீசார் விசாரணை செய்து வந்தனர். பெங்களூருவில் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அப்துல் அசீஸ், நேற்று இரவு 12.30 மணிக்கு மதுரை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஜெகநாதன் வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின், மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.


மதானி கொடுத்த தகவல் படி அப்துல் ஆஜீஸ் கைது (04-09-2010): அப்துல் ஆஜீஸ், மதானி கொடுத்தத் தகவலின்படித்தான் கைது செய்யப் பட்டிருப்பதாக, செய்தி வந்துள்ளது. மதானிக்கு பிணை-விடுதலை ஏற்பாடு செய்ய அப்துல் ஆஜீஸ் வந்ததாகவும், அவன் பெங்களூரு குண்டுவெடிப்பில் சம்பந்தம் கொண்டிருப்பதால்,  கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

Daijiworld Media Network – Bangalore (SP)
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=84793&n_tit=Bangalore%3A+Madani%92s+Close+Aide+Arrested+by+CCB+Police

Bangalore, Sep 4: Abdul Aziz, a Kerala-based close aide of Abdul Nasser Madani, was arrested by the policemen of city crime branch on Friday September 3.

Aziz, a prominent leader of People’s Democratic Party floated by Madani, was in the city, trying to get bail for Madani. The policemen, who got wind about his presence here, gathered information about his whereabouts and arrested him. Abdul Aziz reportedly had played a major role in the serial blasts of 2008 in the city and subsequent blasts near Chinnaswamy Stadium last year at the time IPL matches were in progress.

The arrests were made on the basis of information provided by Madani, who is in judicial custody here, during interrogation. Aziz had been nominated by Madani for guiding terrorist activities in the city, it is learnt.

Madani also had revealed that Aziz had duped a bank before getting involved with the above blasts, it is learnt.

மௌதானியின் ஆலோசகர், நிதியுதவியாளர், முக்கியமான ஆள் கைது: முஹம்மது அப்துல் ஆஜீஸ் என்பவன் 1994லேயே, போலீஸாரால் பேங்க் ஆஃப் இன்டியா மற்றும் பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா வங்கிகளில்[1] பண மோசடி வழக்குகளில் போலி “டிமாண்ட் டிராஃப்ட்”கள் மூலம், கோடிகளை சுருட்டியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்[2]. ஆனால், பெயிலில் வெளிவந்த அவன் தனது வேலைகளை இன்னும் வளர்த்து அதிகமாகத்தான் செய்து கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் இந்தியாவில் காணப்படவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு துபாயில் 16 வருடங்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இப்பொழுது, திடீரென்று சென்னை சி.பி.ஐக்கு தகவல் வந்ததால், பெங்களூரில் ஷேசாத்ரிபுரம் என்ற இடத்தில் லாட்ஜில் தங்கியிருந்த முஹம்மது அப்துல் ஆஜீஸ் சி,பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளான்[3]. இன்டர்போல் “சிவப்பு நிற எச்சரிக்கை நோட்டீஸ்” அனுப்பியதால், சி.பி.ஐ இவனை கைது செய்துள்ளது.

மதானியின் பைலிற்கு பாக்டுபம் கூட்டம்: இதற்கிடையில், மௌதானியை எப்படியாவது பெயிலில் எடுத்துவிட வேண்டும் என்று பலர் ராமநகரம் என்ற இடத்தில் வந்து குவிகின்றதாக கேரள போலீஸார் மற்றும் ஐ.பி கர்நாட போலீஸாரை உஷார் படுத்தியுள்ளனர்[4].  போலீஸார் மௌதானியின் பெயிலை கடுமையாக எதிர்ப்பதாக தெரிகிறது[5]. கைதிற்குப் பிறகு, இனி இதற்கும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்களோ என்னவோ?

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்த போலீஸாரின் மர்மம்: கோயம்புத்தூரில் சிறையிலிருந்த விடுதலையாகிய பிறகு, ஷாஜஹான், நபீல், சஜீவன் மற்றும் பஷீர் என்ற போலீஸார் மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்[6]. ஆகையால், அவர்களை விசாரிக்க கர்நாடக போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர்கள் வரவில்லை. ஆகவே, மறுபடியும் நோட்டீஸுகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது. கேரள போலீஸார், இவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை அல்லது தாமதப்படுத்துகிறது என்று சொல்லப் படுகிறது[7].


[1] மும்பை வங்கியிலும் மோசடி செய்துள்ளாதகத் தெரிகின்றது.

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/Fraudster-held-in-Bangalore-turns-out-to-be-a-Madani-aide/articleshow/6488655.cms

[3] http://www.deccanchronicle.com/bengaluru/madani-aide-arrested-city-lodge-529

[4] http://www.thehindu.com/news/states/kerala/article612117.ece

[5] http://news-views.in/police-oppose-bail-to-maudany-final-hearing-on-sep-6/

[6] http://twocircles.net/node/219009

[7] இதனால் தான், ஒருவேளை, கர்நாடக போலீஸாருக்கே நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது.

முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!

ஜூன் 24, 2010

முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Breastfeed-fatwa-for-women

Breastfeed-fatwa-for-women

செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார்.

Pathwa-issued-cleric

Pathwa-issued-cleric

இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.

Saudi women wait for their drivers outsi

 

சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள்.

saudi-women-breastfeeding-men-drivers

saudi-women-breastfeeding-men-drivers

ஏனெனில் ரத்தப்பந்தத்தைவிட, முலைப்பால் பந்தம் இஸ்லாத்தில் உயர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பெண்கள் ஆடவர்களுக்கு, அதிலும் அந்நியர்களுக்கு எப்படி முலைப்பால் கொடுப்பார்கள், கொடுக்கவேண்டும் ……………..என்றெல்லாம் விவரிக்கப் படவில்லை.

Saudi-woman-breastfeed

Saudi-woman-breastfeed

இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

Muslim-woman-driver

Muslim-woman-driver

சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!

Women working in the gulf increasing

வளைகுடா நாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது.

சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம்.