Archive for the ‘உரூஸ்’ category

“திருமணம் என்னும் நிக்காஹ்” படம், ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

மே 30, 2014

“திருமணம்  என்னும் நிக்காஹ்”  படம்,  ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு,  முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

திருமணம் என்னும் நிக்காஹ்.2

திருமணம் என்னும் நிக்காஹ்.2

இந்து பையன், முஸ்லிம் பெண் காதல் முதலியன:  “திருமணம் என்னும் நிக்காஹ்” என்ற தலைப்பும்,  அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே,  அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது[1] என்று “தமிள்.ஒன்.இந்தியா” போட்டு வைத்தது.  சென்ற வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை,  காரணமும் சொல்லப் படவில்லை[2]. மே 15  வெளிவருகிறது என்று அறிவித்தார்கள்,  ஆனால்,  தேதி தள்ளிவைக்கப்பட்டது என்றார்கள்[3]. “தி இந்துவில்”  வந்த விமர்சனம் இப்படத்தின் கதையை அலசியுள்ளது.  ஒரு இந்து பிராமண பையன், முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறான்.  இரு குடும்பங்களை மையமாக வைத்துக் கொண்டு விவரணங்கள் செல்கின்றன.  இத்தகைய படங்களை எடுப்பதில் அபாயம் இருக்கிறாதா என்ற கேள்வியை எழுப்பி, படத்தில் சரிசமமாக எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப்படுகின்றன. அதேபோல, ஆவணிஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்க ப்பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[4]

 

Indian Express photo

Indian Express photo

ஷியா முஸ்லிம்கள் இயக்கம் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் மனு: இம்மாதம்  14ம் தேதி வெளியிடுவதாக இருந்தது,  வெளிவரவில்லை[5].  ஆனால், கதை தொடர்ந்தது.  நஸ்ரியாவுக்கு இது திருப்புமுனை என்றெல்லாம் அளந்தார்கள்.  அந்நிலையில் தான், ஷியா முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகர் ஜெய்,  நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார், அனீஸ் இயக்கியுள்ளார். “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது[6].  இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத்தலைவர் டேப்லெஸ் /  டப்ளஸ்  அலிகான் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்  உரிமையாளர் வி. ரவிசந்திரன்.  அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப் பட்டுள்ளனர்.  அதிலும்,  ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவு படுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எற்கெனவே,  இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை[7].எனவே,  இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்”, என மனுவில் கோரப் பட்டுள்ளது.

 

Muharram festival

Muharram festival

விடுமுறை  நீதிமன்ற  இடைக்கால  நடவடிக்கை:  இந்த மனு விடுமுறைக் கால நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை (மே 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[8]. மனுவுக்கு ஜூன் 4– ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்[9].  போற போக்கைப் பார்த்தால் எல்லா தமிழ்ச் சினிமாவையும் இனிமேல் கோர்ட்டு தான் ரிலீஸ் செய்யும் போலிருக்கு..  திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடைகேட்டு இன்றைக்கு கோர்ட் படியேறியிருக்கிறது, ஒருகூட்டம்[10] என்று காட்டமாகக் கூட ஒரு இணைதளம் கமென்ட் அடித்துள்ளது.

 

M2U00474

M2U00474

சினிமா தயாரிப்பாளர் விளக்கம்[11]: பட சர்ச்சை குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில்,  ‘‘படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’  சான்றிதழ் தந்துள்ளது.  குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுத்திருந்தால் தணிக்கைக் குழு அனுமதிக்குமா? இது இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.  படத்தை இயக்கியவர்,  இசையமைத்தவர், குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்.  படம் வெளிவரும் முன்பே அவதூறாக கூறியாரும் விளம்பரம் தேடக்கூடாது. திட்டமிட்டபடி படம் வெளிவரும்.  எப்போது ரிலீஸ் என்பதை சனிக்கிழமை அறிவிப்போம்’’  என்றார்.

 

Muharram Hyderabad 2009

Muharram Hyderabad 2009

முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?:  ஷியா முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  மொஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் முதலியவை சினிமாவில் காட்டுவதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை!   முதலில் இவற்றிற்கெல்லாம் விடுமுறை கூட இல்லை, ஆனால், செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் விடுமுறை அளித்து,  பிறகு அவற்றை தேசிய விடுமுறைகளாக்கினர். முஸ்லிம் நாடுகளிலேயே அவ்வாறு விடுமுறை அளிப்பது கிடையாது.  இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப் படுகின்றன. அதேபோல,  ஆவணி ஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்கப் பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[12].  ஆக  அந்த “முர்ஸித் / கொலு” தான் பிரச்சினை போலும்! ஒருவேளை, சுன்னி முஸ்லிம்கள் தூண்டி விட்டு, ஷியாக்கள் எதிர்த்திருக்கலாம். “மாரடி விழா” முதலிய ராயப்பேட்டையிலேயே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹைதரபாதில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மற்ற வட இந்திய நகரங்களில் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள். ஆகவே, இவற்றைக் காண்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகவே, வேறு பிரச்சினையை மதப்பிரச்சினையாக்கி, இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.

 

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

© வேதபிரகாஷ்

30-05-2014

[1] http://tamil.oneindia.in/movies/news/petition-seeks-ban-on-thirumanam-ennum-nikkah-202275.html

[2] http://www.deccanchronicle.com/140514/entertainment-kollywood/article/thirumanam-ennum-nikkah-release-soon

[3] http://www.kollytalk.com/video/video-news/jai-nazriyas-thirumanam-ennum-nikkah-postponed-153313.html

[4] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

[5]Rumours were rife that Anis’s Thirumanam Ennum Nikkah, starring Jai and Nazriya, was postponed from May 15, the date slated for release, due to certain issues. However, when DC quizzed the director on it, he said, “There were plans of postponing it owing to trivial reasons. However, going by the present scenario, it is highly likely that the movie might release on the fixed date itself.” Thirumanam Ennum Nikkah, produced by Aascar Ravichandran, bagged a ‘U’ certificate recently. The songs scored by Ghibran has already topped the charts.

[6]தினமலர்,  “திருமணம்எனும்நிக்காஹ்திரைப்படத்துக்குதடைகோரிவழக்கு, By dn, சென்னை, First Published : 30 May 2014 03:09 AM IST

[7]தினத்தந்தி,திருமணம்என்னும்நிக்ஹாபடத்துக்குதடைவிதிக்கவேண்டும்; சென்னைஐகோர்ட்டில்வழக்கு, பதிவுசெய்தநாள் : May 30 | 12:20 am

[8]http://www.dinamani.com/cinema/2014/05/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2253242.ece

[9] http://www.dailythanthi.com/2014-05-30–marriage-nikha-film-to-be-banned-case-in-the-madras-hc

[10] http://www.tamilcinetalk.com/some-muslims-ask-ban-on-thirumanam-ennum-nikkah/

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article6064424.ece

[12] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மார்ச் 22, 2013

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

நாகூர் தர்கா கந்தூரி விழா:கொடியேற்றம்,சந்தனம் பூசும் நிகழ்ச்சி, ரதங்களில் ஊர்வலம்!

மே 11, 2010
நாகூர் கந்தூரி விழா கொடியேற்றம்
மே 11,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24900

நாகப்பட்டினம் : நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா துவக்கத்திற்கு ஏற்றப்படும் கொடி, சிங்கப்பூரில் இருந்து நாகைக்கு நேற்று மாலை வந்தது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில் 453 ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 25ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

சோழ மன்னர் சரபோஜி கட்டித்தந்த பெரிய மினவரா உட்பட ஐந்து மினவராக்களிலும் வரும் 15ம் தேதி இரவு 9.30 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றப்படும் கொடி ஆண்டு தோறும் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து நாகைக்கு கொண்டு வரப்படும். நாகையில் இருந்து ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக புறப்பட்டு நாகூருக்கு வந்த பின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கும்.

பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றுவதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கொடி நேற்று காலை சென்னை வந்தது. அங்கிருந்து கார் மூலம் நாகை செம்மாரக்கடை தெருவில் உள்ள வாப்பாக்கண்ணு என்பவர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொடியை யானை மீது ஏற்றி முஸ்லிம் ஜமாத்தார்கள் ஊர்வலமாக, யாஹஈசைன் பள்ளித்தெரு அமீது சுல்தான் வீட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு தொடர்ந்து ‘பாத்தியா’ ஓதப்பட்டு வரும் 15ம் தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக நாகூர் தர்காவிற்கு சென்று கொடி ஏற்றப்படும்.

நாகூர் தர்கா கந்தூரி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
மே 16,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25112

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா, கொடியேற்றத்துடன் நேற்று (15-05-2010) துவங்கியது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா, நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் நாகை மீரா பள்ளிவாசலில், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு ‘துவா’ ஓதப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம் மற்றும் செட்டிப் பல்லக்கு, கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்ட இரண்டு வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு நாகூர் தர்கா வந்தடைந்தது.

தர்கா ஆலோசனை கமிட்டி தலைவர் செய்யது காமில் தலைமையிலான நிர்வாகிகள், கொடிகளுக்கு வரவேற்பு கொடுத்தனர். தர்காவில் மவுலியாக்கள் சிறப்பு ‘துவா’ ஓதிய பின், ஐந்து மினவராக்களிலும் கொடி  ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்திரிகர்கள் பங்கேற்றனர்.