ஆர்எஸ்எஸ்அமைப்பின்முஸ்லிம்களுடனானஉரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
உலகின்மிகப்பெரியஇமாம்களுக்கானஅமைப்பாகஅகிலஇந்தியஇமாம்அமைப்புஆர்எஸ்எஸ்தலைவருக்குஅழைப்புவிடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களதுஅழைப்பைஏற்றுஆர்எஸ்எஸ்தலைவர்மோகன்பாகவத், அகிலஇந்தியஇமாம்அமைப்பின்அலுவலகத்திற்குவருகைதந்ததுமிகுந்தமகிழ்ச்சிஅளிக்கிறது. அவர்நமதுநாட்டின்தந்தை. நான்கேட்டுக்கொண்டதற்குஇணங்க, தாஜ்வீதுல்குரான்மதரசாவைஅவர்பார்வையிட்டார். அங்குகல்விபயிலும்மாணவர்களுடன்அவர்கலந்துரையாடினார். அப்போது, நமதுமரபணுஒன்றுதான்என்றும், கடவுளைவழிபடும்முறைதான்வேறானதுஎன்றும்மோகன்பாகவத்கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.
ஆர்எஸ்எஸ்தலைவர்மோகன்பகவத்மசூதிமற்றும்மதரஸாவுக்குவிஜயம்செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.
சுமுகமானபரஸ்பரபேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.
மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
[1] Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.
தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!
திருப்பதி அருகே முஜாஹித்தீன் தீவிரவாதிகள்: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீசார் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து 10 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிஜேபி பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பிரம்மோஸ்தவம் நடக்கும் வேலையில் புத்தூரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம்: இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் (சித்தூர் மாவட்டம்) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் மேதரா வீதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். கதவை தட்டியபோது இரண்டு போலீசாரை அரிவாளால் வெட்டினர், இதில் இருவரும் படுகாயமுற்றனர். இதனையடுத்து போலீசாருக்கும், பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
தில்லியிலிருந்து எஸ்-ஐ.டி படை வந்தது: இன்று காலையில் தில்லியிலிருந்து எஸ்.ஐ.டி படை வந்தது. மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தின[2]. இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக போலீஸ்காரர் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் இறந்ததாக கூறப்பட்டது[3]. போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து போனில் பேசிவந்தது தெரிந்தது. ஜிஹாதிகள் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒடரு வீட்டில் பதுங்கியுள்ளனர். உள்ளே ஒருவேளை குண்டுக்லள் வைத்திருக்கக் கூடும் என்பதால், போலீசாரார் அதிரடியாக உள்ளே நுழைய பயப்படுகின்றன்சர் என்று தெலுங்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.
தமிழகத்தின் “அல்முஜாகிதீன் படை”[4]: மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது அல்-உம்மா, அல்-முஜீஹித்தீனாக மாறியது போலும். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை” என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது ஜிஹாத் தமிழகத்தில் “தியாகத்தோடு” செயல்படுவது மெய்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இவ்விதமாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் போலிருக்கிறது. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான்.பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
பீடிசுற்றும் தொழிலாளிகள் போர்வையில் ஜிஹாதி குடும்பங்கள்:போலீஸ் விசாரணை அல்-உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் பீடிசுற்றும் தொழிலாளிகள் என்ற போர்வையில் அவ்வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளான்[5]. பீடி உற்பத்தி செய்யும் முஸ்லிம் தொழிற்சாலை அதிபர்கள் இந்துவிரோத பிரசுரங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை முந்த்யைய ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த இடம் “முஸ்லிம் காலனி” என்றே அழைக்கப்படுகிறது. குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதாவது “தியாகம்” செய்யவேண்டிய நிலை வரும் போது, “குடும்பங்கள்” சென்று விடும் போலிருக்கிறது. பிலால்மாலிக்கின் குடும்பத்துனருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். ஜிஹாதிகளுக்கு இப்படித்தான் “லாஜிஸ்டிக்ஸ்” கிடைக்கிறது போலும்!
தமிழக ஜிஹாதிகள்-போலீசார் துப்பாக்கி சண்டை: தமிழக-ஆந்திர எல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் பக்ருதீன் பிடிபட்டான். இதற்குள் மற்ற தீவிரவாதிகள் சித்தூரில், ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக போலீசார், அவ்வீட்டை வளைத்தனர். விசயம் தெரிந்த தமிழக ஜிஹாதிகள், போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளால் சுட்டதாகவும் தெரிகிறது[6]. ஒரு போலீஸ்காரரை – சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமண மூர்த்தி – தமிழக ஜிஹாதி குத்தித் தப்பிச் சென்றுவிட்டதாக ஆங்கில செனல்களில் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. போலீஸ் உடனே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, இன்னொரு போலீசார் காயமடைந்துள்ளார். சுமார் 30 போலீசார், இந்த வேட்டையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமிழக-ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்.டி.டிவி இதனை என்கவுன்டர் என்று வர்ணித்துள்ளது[7]. அதாவது, சட்டரீதில் ஜிஹாதிகளுக்கு உதவ ஆலோசனையை சூசகமாகத் தெரிவிக்கிறது. உடனே, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிடுவார் என்பது தெரிய வரும்.
பிலால்மாலிக்குடன் போலீசார் பேச்சு-வார்த்தை[8]: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையா, பேரமா, உடன் படிக்கையா என்பது பிறகு தான் தெரிய வரும். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. பிறகு,வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்[9]. இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப் படுவர். உபசரிக்கப் படுவர். அதற்குள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்படும்!
[5] According to the local people, four people, who claimed to be working in the beedi manufacturing industry, had taken the house on rent a few months ago. Locals said that they had no information about these people as they only came back home late in the night.
[7] Firing between suspected militants and police in Andhra Pradesh; one cop killed: report
Hyderabad: A policeman has been killed and another injured in an on-going encounter with suspected militants in the Chittoor district of Andhra Pradesh, according to reports. A team of 30 policemen have reportedly surrounded the men, who are believed to be heavily armed. Police sources say the men are suspected to be behind the killing of Bharatiya Janata Party’s Tamil Nadu unit general secretary V Ramesh, who was attacked fatally with sharp-edged weapons near his house in July.
மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு
லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.
வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள் நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.
இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!
இஸ்லாமிய அடிப்படைவாதி கைது: இஸ்லாமிய வெறியர்களின் குரூரக்கொலைகளைக் கண்டும் இனி காணாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும், இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, பங்களாதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. வியாழக்கிழமை 14-03-2013 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)] என்ற அந்த அடிப்படைவாத இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவனான, சிட்டகாங்கில் இந்துக்கள் மற்றும் கோவில்களைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்த ஆலம்கீர் கபீர் சௌத்ரி என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
தொடரும் குற்றங்கள்: ஜமாத்தின் இளைஞர் இயக்கமான இஸ்லாமி சத்ரா ஷிபிர் முன்னரே குறிப்பிட்டபடி பல இடங்களில் இந்துக்களைத் தாக்கி, அவர்களது, உடமைகள், வீடுகள், கோவில்கள் என்று அனைத்தையும் சூரையாடினர்[1]. போலீஸ் மற்றும் குற்றத்தடுப்பு விரைவு நடவடிக்கை படையினர் சேர்ந்து அவனை கைது செய்தனராம்[2]ளதாவது அந்த அளவிற்கு முஸ்லீம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்று தெரிகிறது. பங்சாலி என்ற இடத்தில் நடந்த தாக்குதல்களில் 70ற்கும் மேற்பட்ட கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்துக்கள் ஆவர்[3]. 1971 குற்றங்களுக்கு ஒரு வெறியன் தண்டிக்கப்படுகிறான் என்றால், அதை வைத்துக் கொண்டு, அதே மாதிரியான குற்றங்களை முஸ்லீம்கள் செய்துள்ளனர்[4]. இந்துக்களால் அழத்தான் முடியும் போலிருக்கிறது[5]. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[6].
இன்னும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: காஜல் தேவ்நாத், பங்களா பூஜா உட்ஜாபன் பரிஷத்தின் தலைவர், “அப்பகுதியில் இருக்கும் இந்துக்கள் இன்னும் பீதியில் தான் வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் எம்.பி மற்றும் இதர முஸ்லீம்கள் அத்தகைய குரூரத் தாக்குதல்கள் நடத்த ஆதரவாக இருந்தனர். அவாமி லீக் மற்றும் முக்கிய எதிர் கட்சியான பி.என்.பி Bangladesh Nationalist Party (BNP) கட்சியினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர்”, என்று கூறியுள்ளார்[7].
இந்துக்களைப் பற்றிப் பேச யாரும் இல்லை: இந்தியாவில் ராஜ்யசபாவில் பி.ஜே.பி மட்டும் தான் இந்துக்களைக் காக்கும் படி, கோரிக்கையை வைத்தது, தாக்குதல்கள் பற்றியும் பேசியுள்ளது[8]. கோவில்கள் தாக்கப்படுவது, இன்னும் தொடர்ந்து வரவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன[9]. இவ்வளவு நடந்தும், நடந்து கொண்டிருந்தாலும், போர்க்குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் நம்பகமாக இல்லை என்று குற்றவாளிகள் சார்பில் வாதம் புரிகின்றனர்[10].
வேதபிரகாஷ்
15-03-2013
[1] Chowdhury’s arrest came two weeks after suspected activists of Jamaat and its student affiliate Islami Chatra Shibir went on rampage at their southeastern stronghold attacking and vandalizing several houses and temples of Hindu community alongside the local government establishments.
[2] “Police and (elite anti-crime Rapid Action Battalion) RAB teams jointly arrested Banshkhali upazila chairman Alamgir Kabir Chowdhury on charges of inciting violence against Hindu community and attack on their temples and property,” a police official in the port city of Chittagong told PTI by phone.
[3] Banskhali was one of the areas where the followers of the Hindu faith came under attacks during the recent violence which saw deaths of over 70 people, including six policemen, while several dozen Hindu temples were vandalized.
[7] “A sense of fear is still there among the Hindu community although no fresh violence was reported in the past two days … we are disappointed that the lawmakers of the (ruling) Awami League and main opposition BNP and peoples representatives at local levels are not taking initiatives for social and political resistance,” Bangladesh Puja Udjapon Parishad vice-president Kazal Debnath told PTI.
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!
09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.
ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.
ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?
மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.
பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.
திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்காகூத்துகளைஎதிர்க்கும்இஸ்லாம், தமிழகத்தில் திராவிடகூத்துகளைஒத்துக்கொள்கிறது[1].
பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!
பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.
ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.
ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!
உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!
முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.
உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலகஅமைத்திற்காகபிரார்த்தனைசெய்துகொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].
பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனதுஅழைப்பின்பேரில்தான்அஷ்ரஃப்மற்றும்அவரதுகுடும்பத்தினர்வருகின்றனர். அவர்களின்புனிதயாத்திரைக்குத்தேவையானஉதவிகளைநான்செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?
[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.
பாகிஸ்தானில் கிருத்துவர்கள் மீது, தொடர்ந்து தூஷண வழக்குகள் போடப்படுவது ஏன்?
பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்களின் நிலை: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. மதத்தின் அடிப்படையில் தான் அது உருவாக்கpபட்டுள்ளது. ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டம் தான் அங்கு அமூலில் உள்ளது. இதன்படி, முஸ்லீம்கள் அல்லாதவர்கள் காஃபிர்கள் எனப்படுவர். இஸ்லாமிய சட்டத்தில் அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. முஸ்லீம் யாராவது புகார் கொடுத்துவிட்டால், அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லீம் முஸ்லீமுக்குத்தான் சாட்சி சொல்ல முடியும், ஆனால், காபிருக்கு சாதகமாகச் சொல்ல முடியாது. ஆனால், பாதகமாக வேண்டுமானல் சொல்லலாம், அது இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும், அதன்படியே தண்டனையும் கொடுக்கப்படும்[1].
கடந்த வருடங்களில் நடந்த வழக்குகள்: கடந்த மே மாதத்தில் அப்படி பொய் வழக்குப் போட்டதாக, இரு கிருத்துவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கர்மா பத்ராஸ் என்ற பாஸ்டரும் கைது (அக்டோபர் 2012) செய்யப்பட்டு, பைளில் / ஜாமீனில் (பிப்ரவரி 2013) விடுவிக்கப்பட்டுள்ளார்[2]. ரிம்ஸா மஷிஹ் (Rimsha Masih) என்ற 14 வயது பெண்ணும், இதே போல கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாள்[3]. அவள் குரானின் சில பக்கங்களை எரித்ததாக குறாஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டாள். ஆனால், யாருமே அவள் அவ்வாறு செய்ததை கண்ணால் பார்க்கவில்லை அதாவது பார்த்ததாக சாட்சி சொல்லவில்லை என்பதனால் விடுதலை செய்யப்பட்டாள்[4]. 1990லிருந்து இதுவரை 250ற்கும் மேற்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், 52 பேர் கொல்லப்பட்டூள்ளனர் / தூக்கிலிடப்பட்டுள்ளனர்[5].
3000 கிருத்துவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன: லாஹூரில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி சவன் அல்லது பப்பி (Savan, alias Bubby) என்ற கிருத்துவன் விமர்சித்துள்ளதாக தெரிகிறது. இதைக் கேள்வி பட்ட சபிக் அஹமது (Shafiq Ahmed) கத்தியுடன் சவன் வீட்டிற்குச் சென்றுள்ளான். ஆனால், அவன் அங்குக் காணப்படவில்லை. இதனால் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சபிக் அஹமது வெள்ளிக்ழமை அன்று (08-03-2013) சுமார் 3000 பேர்களுடன் நூர் சாலையில் இருக்கும் ஜோஸப் காலனியில் உள்ள கிருத்துவர்கள் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்[6]. சவனுடைய அப்பா சனமன் மஸ்ஹி (Chaman Masih, 65) இருந்துள்ளார், அவரை நன்றாக அடித்து உதைத்துள்ளனர்[7]. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாயின[8], கிருத்துவர்கள் உயிருக்குப் பயந்து கொண்டு ஓடிவிட்டனர்[9]. சவன் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான்[10].
பாஸ்டர் மீது அவதூறு வழக்கு: இதேபோல, கடந்த மாதமும் அஸ்கர் நிஜாம் ராஞ்சா என்ற பாஸ்டர் உயிருக்கு பயந்து ஓடியிருக்கிறார். அவரும் இஸ்லாமிற்கு விரோதமாக ஏதோ பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தனக்கு வேண்டாதவர்கள் அவ்வாறு திரித்துக் கூறியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவர் மீது தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், தான் தாக்கப்படலாம் என்று ஓடிவிட்டார்[11].
கிருத்துவ பெண் மீது வழக்கு: இதே போல, மார்த்தா என்ற கிருத்துவப் பெண்மணியும் அவதூறு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாள். அவள் ஷெர்-இ-ரப்பானி என்ற மசூதி அருகில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி அவதூறாகப் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது[12]. தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், மரணதண்டனை அளிக்கப்படும்.
கிருத்துவர்கள் பேசுவது எப்படி தூஷணமாகின்றன?: கிருத்துவர்கள் அப்படி என்ன பேசியிருக்கிறார்கள், அவை ஏன் இஸ்லாமிற்கு எதிராக உள்ளன. பைபிளில் உள்ளவற்றை பேசினால், இஸ்லாமிற்கு தூஷணமாகுமா? ஏசுகிருஸ்துவைப் பற்றி பேசினால், குரானில் சொல்லப்பட்டதற்கு விரோதமாக போகுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், செய்திகளில் விவரங்கள் சொல்லப்படவில்லை.
வேதபிரகாஷ்
09-03-2013
[1] முகலாயர்கள் / முகமதியர்கள் இந்தியாவை ஆண்டபோது, அப்படித்தான் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இந்தியர்களை நடத்தினர், ஆட்சி செய்தனர். அதனால் தான் கோவில் உடைக்கப்பட்டன, ஜெசியா வர் விதிக்கப்பட்டது என்றெல்லாம் சரித்திரத்தில் உள்ளது.
[2] Karma Patras, a 55-year-old pastor of Bado Malhi, Sangla Hill, had been languishing in Sheikhupura District Jail since October after preaching on Christ’s sacrifice at a funeral attended mainly by Christians. Some Muslims present thought he was speaking against the Islamic animal slaughter ritual observed at the time, and Patras was confused when police showed up at his home later that day (Oct. 13, 2012) and arrested him on charges of defaming Islam .
[4] Rimsha Masih, believed to be no older than 14, was charged with burning pages of the Koran in August but was granted bail in September after a cleric was detained on suspicion of planting evidence to stir up resentment against Christians. Masih’s lawyer, Tahir Naveed, said the Islamabad High Court’s decision to throw out the case was based on the fact that no one had seen her burning pages of the Koran.The case provoked international concern and she could, in theory, have faced execution under Pakistan’s blasphemy law despite her age and reported mental problems.
[5] The number of blasphemy cases brought under the law is rising. Since 1987, there have been almost 250 cases, according to the Center for Research and Security Studies think-tank.Convictions are common, although the death sentence has never been carried out. Most convictions are thrown out on appeal but mobs often take the law into their own hands.The think-tank said 52 people had been killed after being accused of blasphemy since 1990. http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120
மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்!
மலேசியா முஸ்லீம் நாடானது: இந்து நாடாக இருந்த மலேசியா எப்படி முஸ்லீம் மயமாக்கப் பட்டது என்று முன்னமே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம்[2]. 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது[3]. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே. அந்நாட்டுச் சட்டதிட்டங்கள், இந்துக்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அதாவது இஸ்லாமிய-ஷரீயத் சட்டம் அமூலில் உள்ளதால், காபிர்களான இந்துக்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. வெளிப்படையாக பார்த்தால் ஒன்றும் இல்லாதது போல தெரியும். ஆனால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் அதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
தொடர்ந்து கோவில்கள் இடிக்கப்படுதல்: கோவில்கள் உடைப்பது, இடிப்பது முதலியன சர்வசகஜமான காரியங்கள், விஷயங்களாக உள்ளன. கோவில்களில் ஏதாவது நடந்தால், அது “திருடர்கள்” செய்தார்கள் என்றுதான் செய்திகள் வரும், அதாவது நம் ஊரில் “சமூக விரோதிகள்” என்பதுபோல. ஏப்ரல் 26, 2006ல் கோலாலம்பூரில் நூறாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்த மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் புல்டோசர்களால் இடித்துத் தள்ளிப் பட்டது[4]. ஆயிரக்கணக்கில் இந்துக்கள், அழுது-புலம்பி வேண்டியும், அதிகாரிகள் கொஞ்சமுன் இரங்காமல், போலீசை வைத்து இடித்துத் தள்ளியது. 107 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலுக்கு, இஸ்லாம் அரசு அனுமதி மறுத்து வந்தது. 1977லிருந்து விண்ணப்பித்தும், அதனை வேண்டுமென்றே நிராகரித்து வந்தது. இதுபோல நூற்றுக்கணக்கான கோவில்கள் இடுத்துத்தள்ளப்பட்டன.
இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்!
ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர்.
Malaysian Muslims protest against proposed construction of Hindu temple[5]
August 29, 2009|Associated Press
KUALA LUMPUR, Malaysia – Dozens of Malaysian Muslims paraded yesterday with the head of a cow, a sacred animal in Hinduism, in a dramatic protest against the proposed construction of a Hindu temple in their neighborhood.
The unusual protest by some 50 people in Shah Alam, the capital of Selangor state, raises new fears of racial tensions in this multiethnic Muslim-majority country where Hindus make up about 7 percent of the 27 million population.
The demonstrators who marched from a nearby mosque after Friday prayers dumped the cow head outside the gates of the state government headquarters. Selangor adjoins Kuala Lumpur.
மைக் சகிதம் வைத்துக் கொண்டு, “தாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டனர். தலையை அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டுவிட்டு சென்றனர்[6]. பசு இந்துக்களுக்கு புனிதமான விலங்கு, அதனை தெய்வமாகப் போற்றுகின்றனர். 7% இருக்கின்ற இந்துக்கள் மதரீதியிலாக பாதிப்பில் இருந்து வருகின்றனர். வேடிக்கை என்னவென்றால், மலேசிய உள்துறை அமைச்சர் அதனை ஆதரித்துள்ளார்[7].இவ்வளவு குரூரமான செயல் நடந்தும், போலீஸ் ஒன்றும் செய்யமுடியவில்லையாம்.
இந்துஉரிமைகள்போராட்டக்குழு: 2007ல் நடந்த இக்குழுவின் போராட்டத்தில், அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசிய நாட்டு தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டதால், இன்ட்ராப் குழு தனது போராட்டங்கள் முதலியவற்றை அடக்கிக் கொண்டது. அக்டோபர் 18, 2008ல் இன்ட்ராப் பொது ஒழுங்கு மற்றும் நேர்மை முதலியவற்றிற்கு குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டுவதாகக் குற்றஞ்சாட்டப் பற்றி தடைச்செய்யப்பட்டது[8]. இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான வைத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆறுவயது பெண்குழந்தை முதலியோர் கைது செய்யப்பட்டனர். ஆகமொத்தத்தில், இந்தியாவில், தமிழகத்தில் தமிழர்களின் உரிமைகள் என்றெல்லாம் கூச்சலிட்டுத் திரியும் கூட்டங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லீம்தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததிராய், இம்மக்களின் உரிமைப்பறிப்புகள், கைதுகள் பற்ரி மூச்சுக் கூடவிடவில்லை.
இந்துக்கோவில்கள் தாக்கப்படுவது சகஜமான விஷயம்: முன்பு பல கோவில்கள் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரசாங்கமே இடுந்துத் தள்ளியுள்ளது. மலேசிய தமிழ் அரசியல்வாதிகள், “நம்மவூர் நாத்திகத் திராவிடர்கள்” போல முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே இஸ்லாமிய அரசிற்கு சாதகமாகவும், வெளியில் ஏதோ மலேசிய இந்துக்களுக்கு உதவுவதுமாதிரிக் காட்டிக் கொள்வர்.
ஏப்ரல் 3, 2012ல் மறுபடியும் வெறியாட்டம்: பங்குனி உத்திரம் வந்தால், மலேசியர்களுக்கு வெறி பிடிக்கும் போல இருக்கிறது. குறிப்பாக கோவில்களைத் தாக்க அவ்வெறித்தூண்டுதல் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில், எட்டு சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கிழக்கு பகுதியில் டெர்ரங்கானு என்ற இடத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் சபை கோவில் உள்ளது. கம்புங் பகுட் குயாங் (Kampung Bukit Kuang) என்ற இடத்திலிருந்து, துறைமுகத்தில் வேலைசெய்து வரும் தொழிலாளி ஒருவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நேராகச் சென்று மாரியம்மன் கோவிலிலுள்ள சிலைகளை உடைத்துப் போடு என்று தனக்கு யாரோ ஆணைட்டதாக உணர்ந்தததால், மோட்டார் சைக்கிளில் விரைவாக அன்று சென்றான். யூனிபாம் போட்டு வந்தவன், நேராக கோவிலுக்குள் நுழைந்தான். 29 வயதான அவன் கோவில் கதவை சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று, எட்டு சிலைகளை உடைத்துள்ளான். இந்த சம்பவத்தை பார்த்த பூசாரியும், கோவில் நிர்வாகியும் பயந்து போய், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சிலைகளை உடைத்த நபரை கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில், கோவில் சிலைகளை உடைக்கும்படி அசரீரி கூறியதாகக் குறிப்பிட்டுள்ளான்[9]. உடனே அவன் மனம் நலம் பாதிக்கப்பட்ட நபராக உள்ளான் என்று கூறி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
“கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’: தமிழர்களை, குறிப்பாக தமிழ் இந்துக்களை முஸ்லீம்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளார்கள். “கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’ என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகவே, மலேசியனுக்கு திடீர்-திடீர் என்று இவ்வாறு மனநிலை சரியாமல் போய்விடும்; யாரோ விக்கிரகத்தை உடை என்று சொல்வார்கள்; அவனும் உடைத்து விடுவான்; ஜாலியாக ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்து அனுப்பி விடுவர். இந்துக்களுக்கு மட்டும் சுரணையில்லாமல், காசு வருகிறது என்று அவர்களது கால்களை நக்கிக் கொண்டிருப்பார்கள் போலும்.
[8] After several warnings by the Malaysian government HINDRAF was officially banned on October 15, 2008, confirmed by Malaysian Home Minister Datuk Seri Syed Hamid Albar.In a statement issued at the ministry, Syed Hamid said the decision to declare HINDRAF as an illegal organisation was made following the ministry being satisfied with facts and evidence that showed HINDRAF had and was being used for unlawful purposes and posed a threat to public order and morality. “Based on powers vested under Section 5(1) of the Societies Act, HINDRAF from today is declared an illegal organisation,” he said.
சமஸ்கிருதம் தெரியாத முஸ்லீமின் மனு நிராகரிக்கப் பட்டது[1]: தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத இஸ்லாமியர் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அந்த துறைக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நல்ல முகமது என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, தொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்’, `கியுரேட்டர்’ (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நான் அந்த 4 பதவிகளுக்குமே விண்ணப்பித்தேன். குறிப்பாக கியுரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் தேர்வு எழுதமுடியாதவாறு எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கியுரேட்டர் பதவிக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், நான் இந்து மதத்தினர் அல்லாததால் மற்ற 3 பதவிகள் அளிக்க முடியாது என்றும் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதற்கான உத்தரவை கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் தான் நிராகதரித்தோம். கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.
நீதிபதியின் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “தொல்லியல்துறை என்பது இந்து சமய துறையல்ல. அதில் சில பணிகளுக்கு மட்டும் தான் இந்து சமயத்தினராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. ஆகையால் தொல்லியல்துறையில் பணிகளுக்கு இந்துக்கள் தான் சேர வேண்டும் என்று மததத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.கியுரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றால் அதை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விண்ணப்பித்த பிறகு அந்தக் காரணத்தை காட்டி நிராகரிப்பது முறையன்று.எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் பிரதிவாதிகள் வழங்க வேண்டும்”, என்று அவர் அதில் கூறியிருந்தார். [ரூ.5,000/- என்றிருக்க வேண்டும்]
உருது / அரேபிக் தெரிந்த இந்துவிற்கு முஸ்லீம்கள் அதே மாதிரியான வேலை கொடுப்பார்களா? மசூதிகள், மதரஸாக்கள், முஸ்லீம் கட்டிடக் கலை, போன்ற துறைகள், முஸ்லீம் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில், உருது / அரேபிக் மொழி தெரிந்திருந்தால் மட்டும், வேலை கொடுத்துவிடுவார்களா? சென்னை நியூ காலேஜில் எப்படி படிப்படியாக இந்துக்கள் வேலைக்கு அமர்த்துவதை நிறுத்திவிட்டார்கள் என்பதனை, அங்கு வேலைசெய்த் இந்துக்களுக்குத் தான் தெரியும். உள்ள இந்துக்கள் வேலையிலிருந்து சென்ற பிறகு, ஓய்வு பெற்றப் பிறகு, அந்த இடங்களுகு முஸ்லீம்களாகப் பார்த்துதான் வேலைக்கு வைக்கிறார்கள். ஏதாவது, ஒரு இந்து ஒருவேளை வந்து விட்டால், அவருடன், மற்றவர்கள் ஒத்துழைக்க மாட்டடர்கள். அவரே வேறு இடத்தில் வேலைத் தேடிக்கொண்டு சென்றுவிடுவார் அல்லது செல்லுமாறு செய்யப்படும். இதுதான் உண்மை. ஆதிசங்கரர் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பல முஸ்லீம்கள், கிருத்துவர்கள் உள்ளார்கள், ஏன், வேந்தராகவே முஸ்லீம்கள் உள்ளனர். அதுமாதிரி, அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்திற்கு, ஒரு இந்து வேந்தராக முடியுமா? இதைத்தான் கனம் நீதிபதி அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.
மோடியை பாராட்டிய முஸ்லீம் வேந்தர் ஏன் மிரட்டப்படவேண்டும்? இன்றுவரை, தியோபந்த் பல்கலைக் கழக துணை வேந்தர், மோடி பற்றி ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக, முஸ்லீம்கள் தமகுள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள். இதோ, இதை எழுதும் போது, இங்கு துப்பாக்கி சூடு[2] நடப்பதாக செய்தி[3] வந்துக் கொண்டிருக்கிறது! இதற்கு நீதிபதி என்ன விளக்கம் அளிப்பார்? முஸ்லீம் முஸ்லீமாஅ இல்லாமல், இந்தியனாக செயல்படுவான் என்ற உத்திரவாதம் கிடைக்கும் வரை அல்லது அதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கும் வரை, இந்தியர்கள் இத்தகைய அனுபவ்ங்களைத் தொடர்ந்துப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான், தாமஸ் கேட்கிறார், எத்தனையோ கிரிமினல்கள் எல்லோரும் அமைச்சர்களாக, எம்.பிகளாக உள்ளார்களே, நான் இருக்கக் கூடாதா, என்று! அதாவது, எதர்கெல்லாம், எப்படி ஒப்புமை செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் பொய் விட்டது.
ஆர்வமா, வேறு நோக்கமா என்பதை காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்: என்னத்தான் பாரசீக மொழி தெரிந்திருந்தும், ஏ.ஏ.எஸ்.ரிஸ்வி போன்ற பண்டிதருடன் இருந்தாலும், இர்ஃபான் ஹபீப் முதலியவர்கள் நண்பர்களாக இருந்தாலும், எஃப்.ஜே.ஏ. ஃபிளின் என்ற ஆஸ்திரேலிய முனைவர்-ஆராய்ச்சியாளர், இந்திய தொல்துறை பொருட்களை திருடித்தான் சென்றார்[4]. அவர்கூட, தனக்கு இந்தியாவில் எல்லா உரிமைகளும் உண்டு என்றுதான் உள்ளே நுழைந்தார். ஆனால், கடைசியில் தனது நிலைமை, தகுதி, சலுகை முதலியவற்றை துர்பிரயோகம் செய்து, பல தொல்பொருட்களை கடத்திச் சென்றார். அதே மாதிரி எத்தனை தொல்துறை அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப் பட்டன, உடைக்கப் பட்டன, அழிக்கப் பட்டன என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆக, இங்கு முஸ்லீம், கிருத்துவர் என்று மற்றவர்கள் பார்ப்பதில்லை, ஆனால், சமயம் வரும்போது, அவர்கள் அவ்வாறே செயல்படுவதால் தான், அத்தகைய எண்ணம் வருகிறது. இங்கு கூட, அந்த மனுதாரர், உண்மையிலேயே ஆர்வத்துடன் அந்த வேலைக்கு வருவதாகத் தெரியவில்லை, ஏதோ உள்நோக்கத்துடந்தான் வந்துள்ளார். இப்பொழுதே, இப்படி பிரச்சினை செய்பவர், நாளைக்கு, உள்ளே நுழைந்து விட்டால், என்ன செய்வாரோ?
[2] A meeting on the fate of Ghulam Mohammad Vastanvi, the newly elected vice-chancellor of the Darul Uloom Deoband, turned violent as gun-toting men gate crashed the gathering on Tuesday. The meeting, held in Deoband’s Abulmali locality at the house of one Haji Riyaz Mahmood, was convened by Arif Siddiqui, the local president of a Jamiat-Ulema-i-Hind faction. It also included supporters of Rashtriya Lok Dal MP Mahmood Madani. The men, who are supporters of Vastanvi, fired in the air indiscriminately to intimidate the students of the Islamic seminary and local Muslim leaders who were present. Taslim Qureshi, an eye witness, said at least 10 of them were carrying guns. “About 20 people entered the house and began threatening those present. Soon, about 10 more gun-toting men joined them and opened fire,” he said. The men are allegedly followers of Maviya Ali, the former state secretary of the Samajwadi Party. Ali was suspended from the party last week. “We have registered cases against four persons under Section 307 for attempt to murder,” a police officer said.
தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?
முஸ்லீம்கள் ஏதாவது ஒரு விஷயம், பிரச்சினை, பொருள், சின்னம்………….தங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால், அது எத்தகைய இஸ்லாம்-விரோதமாக இருந்தாலும் அமைதியாக இருந்து விடுவர். அதே விஷயம், பிரச்சினை, பொருள்………….இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறது என்று, இன்னொரு இடத்தில் பயங்கரமாக விளக்கி, இமாந்தாரர்களை மிரட்டுவர். இத்தகைய இருநிலைகள் ஏன் என்று தெரியவில்லை.
மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம்: சென்னை 05-06-2010 – ஞாயிற்றுக் கிழமை: காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாளை முன் னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு வந்த கருணாநிதி, மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஸ்டாலின், அமைச்சர்கள் உடனிருந்தனர். காலை 11 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கட் சிப் பிரமுகர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலர் அன்வர்ராஜா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச் சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக
திராவிட நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆரூண் எம்.பி., உள் ளிட்ட காங்கிரசாருடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் கட்சியினருடன், காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், முன் னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, பொதுச்செயலர் ஜகிருதீன் அகமது உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக
இஸ்லாமியருக்கு திருமாவின் அறிவுரை: இந் நிலையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர்.
திருமா-முல்லா-2010
அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
அண்மைய பின்னூட்டங்கள்