Archive for the ‘உருது மொழி’ category

சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன!

திசெம்பர் 5, 2022

சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன!

 சென்னை மதரஸாவில் பிகார் குழந்தைகள் துன்புறுத்தப் பட்டது: சென்னையில் இயங்கிவரும் மதரஸா (இஸ்லாமிய மதப் பள்ளி) ஒன்றில் பிகாரிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறார்கள் அடித்து துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[1]. சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் இந்த மதரஸா இயங்கி வருகிறது[2]. இங்கு படிக்கும் சிறார்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் அவா்கள் வேதனையில் அழுதபடி கூச்சல் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்[3]. அதனடிப்படையில் போலீஸார் அங்கு 29-11-2022 அன்று சென்று விசாரணை நடத்தினா்[4]. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது[5]

பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், தமிழக மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவது: இதுவே விசித்திரமாக உள்ளது, ஏனெனில், வடவிந்தியாவில் இல்லாத “அரபி வகுப்புகள் நடத்துவதற்கு இல்லாத வசதி” தமிழகத்தில், அதிலும் சென்னையில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு உருதில் தேர்ச்சி, புலமை பெற்ற உருது-ஆசிரியர்கள்-பண்டிதர்கள் இந்த சிங்காரச் சென்னையில் இருக்கிறார் போலும். அந்நிலையில் தான் இந்தி வேண்டாம், இந்தி திணிப்பு என்றெல்லாம் திராவிடத்துவ வாதிகள் ஆர்பாட்டம்-போராட்டம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழும் படிப்பதில்லை, சொல்லிக் கொடுப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், “மெட்ராஸ் பாஷை” இன்றும் அதிகமாகி, பெறுகி, பிஎச்.டி லெவலுக்குச் சென்று விட்டது. பேச்சு, பாட்டு, கவிதை என்றெல்லாம் வளர்ந்து, சினிமாக்களில் சென்று விட்டு, உயர்ந்துள்ளது.

 வழக்குப் பதிவு செய்யப்படல்: இதையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்[6].  இதனால், குழந்தைகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதில், பிகார் மாநிலத்திலிருந்து சிறுவா்களை அழைத்து வந்து அவா்களுக்கு மத போதனை நடத்தப்படுவதும், சரியாகப் படிக்காதவா்களை கடுமையாக தாக்கியதும் தெரியவந்தது. 10 முதல் 12 வயது வரையுடைய அந்தச் சிறார்களை குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கியிருப்பதும், கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் அவா்கள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி உடனே தகுந்த நடவடிக்கை எடுத்தார்[7]. என் லலிதா, சிறார் நலத்துறை உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் புகார் கொடுத்தார். அதன்படி, ஐபிசி 342 (தவறான முறையில் அடைத்து வைத்தல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் ஜேஜே சட்டம் பிரிவு 75 (குழந்தைக்கு கொடுமைப்படுத்துதல்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[8].

சிறார்கள் மீட்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது: அதனைத் தொடா்ந்து, அங்கிருந்த 12 சிறார்களை போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்[9]. தொடர்ந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 குழந்தைகளை மீட்டனர்[10]. பின்னர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்[11]. தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிஹாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு போதிய வசதி இல்லாததால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதரஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருகின்றனர். சரியாக படிக்காத குழந்தைகள், சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை நிர்வாகிகள் துன்புறுத்தி உள்ளனர். இதில் சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த பள்ளி நிர்வாகிகள் அக்தா் (26), பிகாரைச் சோ்ந்த ஆசிரியா் அப்துல்லா (24) ஆகிய இருவரை கைது செய்தனா்.  அன்வர், அக்தர் மற்றும் அப்துல்லா என்று மூவர் கைது செய்யப் பட்டதாக மற்ற ஊடகங்கள் கூறுகின்றன[12]. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையிலெடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம்[13], இதுதொடா்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் மாநில அரசு தலைமைச் செயலாளா்களுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[14].

பீகார் மாநிலத்திற்கு சென்று விசாரிக்க ஆணை: மேலும், இந்த சிறுவர்கள் பீஹாரிலிருந்து, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆணையம் அதன் சிறப்பு அறிக்கையாளர் டாக்டர் ராஜீந்தர் குமார் மாலிக்கை பீகார் மாநிலத்திற்கு சென்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது[15]. இளம் அனாதை சிறார்களை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அவர் உண்மையைக் கண்டறியும் விசாரணையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது[16]. பீகார் மாநிலத்தில் சட்டப்பூர்வமான கடமையைச் செய்யத் தவறிய பொறுப்புள்ள ஏஜென்சிகளைப் பற்றி ஆணையம் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், சம்பவம் குறித்து மேலும் அறிய, பாதிக்கப்பட்ட சிறார்களை சென்னையில் சந்தித்து பரிசோதனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவரது அறிக்கை ஒரு மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இது தேசிய அளவில் அறியப் பட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] தினமணி, மதரஸாவில் சிறார்கள் அடித்து துன்புறுத்தல்: தமிழகம், பிகார் அரசுகளுக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ், By DIN  |   Published On : 05th December 2022 12:19 AM  |   Last Updated : 05th December 2022 12:19 AM

[2]https://www.dinamani.com/india/2022/dec/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3961336.html

[3] தமிழ்.இந்து, அடித்து உதைத்த விவகாரம்; மதரஸாவில் மாணவர்கள் சித்ரவதை: பள்ளி நிர்வாகிகள் இருவர் கைது, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2022 07:31 AM; Last Updated : 01 Dec 2022 07:31 AM. https://www.hindutamil.in/news/crime/908355-torture-of-students-in-madrasa-1.html

[4] https://www.hindutamil.in/news/crime/908355-torture-of-students-in-madrasa-1.html

[5] காமதேனு, கேபிள் வயரால் அடித்து சித்ரவதை: சென்னை மதரஸா பள்ளியில் படித்த பிஹாரைச் சேர்ந்த 12 குழந்தைகள் மீட்பு, Updated on : 29 Nov, 2022, 7:23 pm

[6] https://kamadenu.hindutamil.in/national/12-children-from-bihar-rescued-from-madrasa-school-chennai

[7] நான்காவது கண், விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 12 பீகார் சிறுவர்கள் மீட்பு: மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி நடவடிக்கை, CRIMEPOLICE NEWSசெய்திகள், By Fourth Eye Last updated Nov 30, 2022.

[8]  India Express, Three held for torturing 12 boys from Bihar at Chennai Madrassa, Published: 01st December 2022 02:49 AM  |   Last Updated: 04th December 2022 04:14 PM.

The police registered a case under four sections – IPC 342 (wrongful confinement), 323 (voluntarily causing hurt.), 324 (voluntarily causing hurt by dangerous weapons) and JJ Act section 75 (cruelty to child).

[9] https://fourtheyenews.com/archives/5585

[10] இ.டிவி.பாரத், மதரஸா பள்ளியில் வடமாநில குழந்தைகள் சித்ரவதை! 12 குழந்தைகள் மீட்பு, Published on: November 30, 2022, 7:22 AM IST.

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/12-bihar-children-rescued-from-arabic-madrasa-school-in-madhavaram-at-chennai/tamil-nadu20221130072233794794832

[12] After an investigation police said, three men – Anwar, Akthar and Abdullah – were running a madrassa where minor boys are taught to learn the Quran.

https://www.newindianexpress.com/cities/chennai/2022/dec/01/three-held-for-torturing-12-boys-from-bihar-at-chennai-madrassa-2523894.html

[13] NHRC notice to the Governments of Tamil Nadu and Bihar over reported torture of 12 orphaned juveniles brought from Bihar to a Madrasa in Chennai, New Delhi:3 December, 2022.

[14] https://nhrc.nic.in/media/press-release/nhrc-notice-governments-tamil-nadu-and-bihar-over-reported-torture-12-orphaned

[15] ANInews, NHRC issues notice to governments of Bihar and Tamil Nadu over torture of 12 orphaned juveniles, ANI | Updated: Dec 03, 2022 19:42 IST

[16] https://www.aninews.in/news/national/general-news/nhrc-issues-notice-to-governments-of-bihar-and-tamil-nadu-over-torture-of-12-orphaned-juveniles20221203194248/

குமுதம் ரிப்போர்டட் 13-2-2022, ‘மதரஸ்ஸா” பெயரில் பணம் வசூல் செய்ததாக் கூறுகிறது…

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பு, அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்குஅழைப்பு விடுத்தது (1)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (1)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மசூதி மற்றும் மதரஸாவுக்கு விஜயம் செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.

சுமுகமான பரஸ்பர பேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய  வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.

மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1]  Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.

[2] தமிழ்.இந்து, ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ – மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும், செய்திப்பிரிவு, Published : 23 Sep 2022 03:26 AM; Last Updated : 23 Sep 2022 03:26 AM.

[3] https://www.hindutamil.in/news/india/871799-background-of-mohan-bhagwat-meeting-with-the-muslim-leader.html

[4] விகடன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் `தேசப்பிதா‘ ” – தலைமை இமாம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM

[5] https://www.vikatan.com/government-and-politics/politics/mohan-bhagwat-is-rashtra-pita-says-top-muslim-cleric-after-rss-chief-visits-mosque

[6] தினகரன், மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், 2022-09-23@ 00:19:20

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=801407

[8] தமிழ்.ஒன்.இந்தியா, நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான் தேசத்தின் தந்தை.. இஸ்லாமிய தலைவர் உமர் அகமது இலியாசி, By Vigneshkumar, Updated: Thu, Sep 22, 2022, 21:20 [IST].

[9] https://tamil.oneindia.com/amphtml/news/delhi/top-muslim-cleric-says-rss-chief-mohan-bhagwat-is-rashtra-pita-477061.html

[10] g7tamil, மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், By G7tamil, September 23, 2022.

[11]https://g7tamil.in/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

பிப்ரவரி 7, 2021

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[1], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[2]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும். பெரியார் என்கின்ற ஈவேராவின் கதை அப்படியென்றால், காயிதே மில்லத் என்கின்ற முகமது இஸ்மாயில் கதை (5.6.1896 – 5.4.1972) இப்படியுள்ளது.

மணிச்சுரரில் வெளியான பெரியாரின் கையறுகதறிய நிலை: 06-0-2021 தேதியிட்ட “மணிச்சுடர்” என்கின்ற முஸ்லிம் நாளிதழ், ஈவேரா மற்றும் முகமது இஸ்மாவிலைப் பற்றி, இவ்வாறு, வெளியிட்டுள்ளது[3]: “கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மீது இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரும் மரியாதையும் மாறாத பேரன்பும் கொண்டிருந்தனர். குறிப்பாக காயிதே மில்லத் அவர்களை தந்தை பெரியார் அவர்களும் , மூதறிஞர் ராஜாஜி அவர்களும் தம்பி என்றும், பெருந்தலைவர் காமராஜர் அண்ணன் என்றும், அன்பொழுக உறவு முறை கூறி அழைக்கும் அளவுக்கு நெருக்கமான நல்லுறவு அவர்களிடையே நிலவியது.


“1972
ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது.தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.


திராவிட இயக்கங்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் இடையே நிலவி வந்த பிரிக்க முடியாத நல்லுறவை தந்தை பெரியார் நன்கு உணர்ந்தவர். காயிதே மில்லத்தையும், இஸ்லாமிய சமுதாயத்தையும் தன் நெஞ்சத்தில் ஏந்தி நேசித்தவர் தந்தை பெரியார். திராவிட இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையேயான இந்த பேரன்பும் நல்லுறவும் இன்றளவும் இம்மியளவு கூட குன்றாமல் குறையாமல் வாழையடி வாழையாகத் தொடர்கிறது”. காயிதே மில்லத் புராணம், அவ்வப்போது, ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன[4]. இதில் எந்த விதிவிலக்கோ, ஆராய்ச்சியோ இல்லை, அப்படியே, இருப்பவற்றை, திரும்ப-திரும்ப வெளியிடுவது வழக்கமாக உள்ளது[5].

 அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முயன்றதை முகமது இஸ்மாயில் எதிர்த்தது[6]: இதே போல, முகமது இஸ்மாயில் பற்றி, முகமதியர் எழுதுவது தான் உள்ளது. அவை எவ்வாறு 100% ஆராய்ச்சிக்கு ஏற்றது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு – புதுமடம் ஜாபர் அலி என்பவர் காயிதே மில்லத் பற்றி, போற்றி எழுதியதிலிருந்து தெரியும் விசயங்கள் கொடுக்கப்படுகின்றன[7]. “……..காயிதே மில்லத்என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்என்று இதற்குப் பொருள். 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஹோட்டல் எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியைக் கையகப்படுத்திய அரசு, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. இதை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதினார். அப்போதைய உள்துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயனைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார், காயிதே மில்லத். அப்போது அமைச்சர் சுப்பராயன், ‘ஒரு கல்லூரிக்காகப் போராடுவதில் காட்டும் உழைப்பை, முஸ்லிம் சமூகத்துக்காக உங்கள் சமூகத்தில் உள்ள செல்வந்தர்களிடம் பேசி தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கல்லூரிகளைத் தொடங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டினால் அதிக பலன் கிடைக்குமேஎன்று யோசனை தெரிவித்தார்.

முகமதிய கல்லூரிகள் தமிழகத்தில் உருவானது[8]: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “இந்த யோசனையில் இருக்கும் நன்மையைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத், உடனடியாகத் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வந்தர்களைச் சந்தித்து, ‘முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்து, தனது இந்தத் திட்டம் பற்றி விளக்கி அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில்செய்து வந்த முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டிட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து அவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டிடங்களுக்காக செலவிட்டார். இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மாமலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டிடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி,” என்று எழுதியது.

1972ல் எம்ஜிஆர் மூன்று கிமீ நடந்து, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் துணை நின்றார். தேர்தலின்போது அவரது இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினார் அண்ணா. எந்த முகமதியன் கல்லூரியை அரசு மகளிர் கல்லூரியாக மாற்ற காயிதே மில்லத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே கல்லூரிக்கு காயிதே மில்லத்தின் பெயரையே சூட்டினார், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் காயிதே மில்லத்தின் வாழ்க்கை பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார். காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்தார்,” என்று எழுதியது.

© வேதபிரகாஷ்

07-02-2021


[1]  பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[2]  ம.வென்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள்.

[3]  மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[4] தினமலர், முகம்மது இஸ்மாயில் () காயிதே மில்லத் 5.6.1896 – 5.4.1972, திருநெல்வேலி, பதிவு செய்த நாள்: 04ஜூன் 2018 00:00.

[5] https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43039&cat=1360

[6] தமிழ்.இந்து, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, Published : 05 Jun 2017 09:08 AM; Last Updated : 06 Jun 2017 10:18 AM

https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

[7] புதுமடம் ஜாபர் அலி, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

[8] https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

AIADMK Iftar

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிலைப்பாடு:  ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].

Jeyalalita at Quade millat tombமூன்றாவது  அணிக்கு  வேலையில்லை:  இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர்  காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.

M . H. Jawahirullah, Hyder Ali of TMMKதமிழகத்தை பொறுத்தவரை .தி.மு.., மற்றும் தி.மு..வை தவிர மூன்றாவது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

IUML members with Jeyalalita

ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டுஅனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.

IUML splinter groups

அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

Muslims aiming to capture Parliament - banner

ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

makkal-nala-kuutani

அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினமலர், .தி.மு.., கூட்டணியில் தொடர்வோம் முஸ்லிம் லீக் தலைவர் தகவல், பிப்ரவரி.28, 2016. 07:31.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467302

[3] மாலைமலர், 3 –வது  அணிக்கு  வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)?

மார்ச் 10, 2014

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)?

 

இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் அனைவரையும் ஏமாற்றி வருகின்றனர். இஸ்லாம் என்றல் “அமைதி” என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் ஒருபக்கம், ஆனால், ஜிஹாதிகள் இஸ்லாம் பெயரில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போது அவற்றைத் தடுப்பதில்லை. மதத்தின் பெயரால் பாரதத்தை இரண்டாக்கி, பாகிஸ்தானை உண்டாக்கினர். ஆனால், இஸ்லாம் அதனை ஒன்றாக வைத்துக் கொள்ள முடியவில்லை, இரண்டாகி, பங்களாதேசம் உருவானது. செக்யூலரிஸம் பேசி, கம்யூனலிஸத்தில் ஊறிய மதவெறி வகைகள், அரசியல்வாதிகளை ஓட்டுவங்கி பெயரில் மிரட்டியே, இந்தியாவை மிரட்டி வருகின்றனர். ஒருபக்கம், விசுவாசியாக இஸ்லாமின் புகழ் பாடுவது, மறுபக்கம் செக்யூலரிஸ போர்வையில் ஜாதிகளை வைத்துக் கொள்வது மற்றவற்றை தொடர்ந்து கடைப் பிடிப்பது என்று நடித்து வருகின்றனர். இப்பொழுது, தேர்தல் சமயத்தில், மறுபடியும், இஸ்லாம் “ஜாதி இல்லை, ஜாதி உண்டு” என்ற விசயத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது.

 

ஜனவரி  –  பிப்ரவரி 2014களிலேயே   ஆரம்பித்து  விட்ட  இடவொதிக்கீடு  பேரங்கள்: முஸ்லிம்களுக்கு இடவொதிக்கீடு கொடுத்தது கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விட்டனர். முஸ்லிம்களின் ஓட்டுகளைக் கவர திராவிட கழகங்களின் தலைவர்கள் இப்படி மாறிமாறி முஸ்லிம்களை தாஜா பிடிப்பது, தேர்தல் வரும்போது அதிகமாகும் என்பது தெரிந்ததே. ஜனவரி 29.2014 அன்று முஸ்லிம்கள் – தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் [Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) ] கோயம்பத்தூரில், கல்வி நிறுவனங்களில் 3.5% இடவொதிக்கீட்டை  7%க்கு எந்த கட்சி உயர்த்தித்தருமோ  அதற்கு ஓட்டளிப்போம் என்று கோரினர்[1]. 23 கோடி முஸ்லிம்களில் 15 கோடி முஸ்லிம்கள் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள், ராணுவத்தில் 1% தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினர்[2]. ஆகவே இஸ்லாமிய ஓட்டுகள் இப்படித்தான் பேரம் பேசப்படுகின்றன என்று முஸ்லிம்களே ஒப்புக்கொள்கின்றனர். மத்திய அரசும் சென்ற மாதத்தில் [பிப்ரவரி 20.2014] ஆந்திராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 4.5% இடவொதிக்கீடு செய்ய, உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது[3]. முன்னர் உச்சநீதி மன்றம் மறுத்தது[4]. இதற்குள் தெலிங்கானா உருவாக்கி விட்டதால், முஸ்லிம்கள் அங்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள்[5]. அங்கு அவர்களது சதவீதம் 18% என்கிறார்கள்! இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று ஊடகங்களே விமர்சித்தன.

 

இரண்டு  சாத்தான்களில், தீயசக்திகளில்  எது  நல்லது  அல்லது  கெட்டது: இருப்பினும், காங்கிரசுக்கு அதைப் பற்றி கவலையில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், கலாட்டா செய்து கொண்டு, இரண்டு திராவிட கட்சிகள் மாநில அளவில், மத்தியில் காங்கிரஸ் என கட்சிகளை மிரட்டியே சாதித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் ஏற்கெனவே இந்த இரண்டு சாத்தான்களில், தீயசக்திகளில் [கருணாநிதி அல்லது ஜெயலலிதா] எது நல்லது அல்லது கெட்டது என்று வெளிப்படையாகவே விவாதித்துள்ளன[6]. உண்மையில், சட்டரீதியில் மத அடிப்படையில் கொடுக்க முடியாது. இதனால், சமூகம் மற்றும் படிப்பறிவில் பிந்தங்கியுள்ள வர்க்கங்கள் [socially and educationally backward classes] என்ற நீதியிலுள்ள இடவொதிக்கீட்டில் இவர்களை பிசி / BC என்று இடவொதிக்கீடு கொடுக்கப் படுகிறது[7]. இதை முஸ்லிம்களின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் ரஹ்மான் கானே ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, இஸ்லாம், குரான், முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, இடவொதிக்கீடுதான் வேண்டும். மிகப்பிற்பட்ட வகுப்பினர் என்றும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுகிறது. கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்[8].

 

OBC Reservation to Muslim Minorities

            The Government has already provided reservation to some Muslim communities under Other Backward Classes (OBC) category. The State-wise details   of Muslim community included in the Central List of OBCs as on 24th August 2010 are as follows:

S.no. Name of the state Entry no. In central list Name of the caste  
1. Andhra  Pradesh 37 Mehtar (Muslim)  
2. Assam 13 Manipuri Muslim  
3. Bihar 130 Bakho (Muslim)  
    84 Bhathiara(Muslim)  
    38 Chik(Muslim)  
    42 Churihar(Muslim)  
    46 Dafali (Muslim)  
    57 Dhobi (Muslim)  
    58 Dhunia(Muslim)  
    119 Idrisi or Darzi{M\tslim)  
    5 Kasab(Kasai)(Muslim)  
    91 Madari(Muslim)  
    92 Mehtar }
Lalgbegi }  (Muslim)
Halalkhor}
Bhangi}
 
    93 Miriasin(Muslim)  
    102 Mirshikar(Musiim)  
    103 Momin(Muslim)  
    99 Mukri (Mukcri) (Muslim)  
    67 Nalband(Muslim)  
    63 Nat (Muslim)  
    68 Pamaria (Muslim)  
    109 Rangrez(muslim)  
    111 Rayeen or Kunjra (Muslim)  
    116 Sayees (Muslim)  
    131 Thakurai (Muslim)  
    129 Saikalgarf (Sikligar)(Muslim  
4. Chandigarh NIL    
5. Dadra Nagar Haveli 9 Makarana(Muslim)
6. Daman & Diu NIL  
7. Delhi NIL    
8. Goa NIL    
9. Gujarat 3 Bafan (Muslim)  
    17 Dafar (Hindu Muslim)  
    19 Fakir, Faquir (Muslim)  
    20 Gadhai (Muslim)  
    22 Galiara (Muslim)  
    23 Ganchi (Muslim)  
    24 Hingora (Muslim)  
    28 Jat (Muslim)  
    27 Julaya, Garana, Taria, Tari and Ansari (All Muslim)  
    32 Khatki or Kasai
Chamadia Khatki
Halari Khatki (All Muslim)
 
    43 Majothi Kumbhar
Darbar or Badan
Majothi (All Muslim)
 
    44 Makrani (Muslim)  
    45 Matwa or Matwa-Kureshi (Muslim)  
    40

Mir

Dhabi

Langha

Mirasi (All Muslim)

 
    49 Miyana, Miana (Muslim)  
    54

Pinjara

Ganchi-Pinjara

Mansuri-Pinjara (All Muslim)

 
     59 Sandhi (Muslim)  
    65 Sipai Pathi Jamat or Turk Jamat (All Muslim)  
    70 Theba (Muslim)  
    73 Hajam (Muslim), Khalipha (Muslim)  
    76 Vanzara (Muslim)  
    76 Wagher (Hindu & Muslim)  
10. Haryana nil    
11. Himachal Pradesh nil    
12. J&K nil    
13. Karnataka 13 chapper Band (Muslim)  
    179

Other Muslim excluding:

i)        Cutchi Menon

ii)       Navayat

iii)      Bohra or Bhora or Borah

iv)      Sayyid

v)       Sheik

vi)      Pathan

vii)     Mughal

viii)    Mahdivia/Mahdavi

ix)      Konkani or Jamayati   Muslims

 
 
14. Kerala 39A

Other Muslim excluding:

i)         Bohra

ii)       Cutchi Menmon.

iii)      Navayat

iv)       Turukkan

v)       Dakhani Muslim

 

 
 
15. Madhya Pradesh 59

Islamic Groups:

1. Ranrej

2.Bhishti Bhishti-Abbasi

3. Chippa/Chhipa

4.Hela

5. Bhatiyara

6. Dhobi

7. Mewati,Meo

8.  Pinjara, Naddaf,

Fakir/Faquir,

Behna, Dhunia; Dhunkar, Mansoori

9. Kunjara,Raine

10. Manihar

11. Kasai,Kasab,Kassab, Quasab, Qassab, Qassab-Qureshi

12.Mirasi

13. Barhai (Carpenter)

14.Hajjam(Barber)

Nai (Barber)

Salmani.

15. Julaha-Momin

Julaha-Ansari

Momin-Ansari

16. Luhar,

Saifi,

Nagauri Luhar Multani Luhar

17.Tadavi

18. Banjara, Mukeri, Makrani

19. Mochi

20. Teli

Nayata, Pindari (Pindara)

21.Kalaigar

22.Pemdi

23.Nalband

24. Mirdha(Excluding Jat Muslims)

25. Nat (Other than those included in the SC List)

26. Niyargar,

Niyargar-Multani

Niyaria

27. Gaddi

       
       
       
       
       
       
 16. Maharashtra 187 Chhapparband (including Muslim)  
17 Manipur nil    
18. Orissa nil    
19. Puducherry nil    
20. Punjab nil    
21. Rajasthan 23 Julaha (Hindu &, Muslim)  
22. Sikkim nil    
23. Tripura nil    
24. Tamilnadu 26 Dekkani Muslim  
25. Uttar Pradesh 44 Muslim Kayastha  
    22 Teli Malik (Muslim)  
26. Uttrakhand nil    
27. West Bengal nil    
28. Andaman & Nicobar nil    
29. Mizoram No OBC    
30. Nagaland No OBC    

இவ்வாறு எங்களிடையே ஜாதியில்லை, வேறுபாடில்லை, என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம்கள் ஜாதிகள் அடிப்படையில் இடவொதிக்கீட்டைக் கேட்டுப் பெற்று அனுபவித்துதான் வருகிறார்கள். இதெல்லாம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஜாட் / ஜட் இந்துக்களுக்கு பிசி பிரிவில் இடவொதிக்கீடு கொடுத்தால், அது முஸ்லிம்களை பாதிக்குமாம். இப்படியும் கதை உள்ளது[9]. அதாவது, செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கம்யூனிஸம் மற்றும கட்சிகள் தான் இந்நாடகம் ஆடிவருகின்றன. இதே நாடகம் தான், திராவிடக் கட்சிகளும் அரங்கேற்றி வருகின்றன.

 

வேதபிரகாஷ்

10-03-2014

 


[1] The Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) staged a protest in front of HotelTamil Nadu at Gandhipuram in the city on Tuesday, demanding the state government increase the reservation quota for Muslims to 7 percent from 3.5 percent in educational institutions. They claimed that the TNTJ would support AIADMK in the coming Lok shaba polls if the reservation is increased.

http://webcache.googleusercontent.com/search?q=cache:http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Muslims-stage-protest-demanding-7-per-cent-reservation-in-educational-institutions/articleshow/29523268.cms

[3]  In a politically significant move, the Centre on Wednesday sought the Supreme Court’s nod to provide a 4.5% quota for Muslims in education and jobs on the lines provided in Andhra Pradesh. Abench comprising Justices KS Radhakrishnan and Vikramjit Sen, however, desisted from hearing the matter, but said it would urge the Constitution bench hearing the Andhra case to look into the government’s plea.

http://articles.economictimes.indiatimes.com/2014-02-20/news/47527120_1_constitution-bench-ap-backward-quota

[6]  Md. Ali, TwoCircles.net, Who will be “lesser evil” for Muslims in TN: Amma or Kalaignar?,  28 April 2011 – 12:28pm But there are people who regard both the regional parties as “evil” and call for choosing the lesser of the two.

http://twocircles.net/2011apr28/who_will_be_%E2%80%9Clesser_evil%E2%80%9D_muslims_tn_amma_or_kalaignar.html

[7] “Backward Muslims are already getting reservations under BC reservation category of 27 percent as per the Mandal Commission’s recommendations. We are just creating a sub quota within the OBC group as backward minorities were not able to get their share,” Minority Affairs Minister K Rahman Khan said.

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மார்ச் 22, 2013

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா!

மார்ச் 18, 2013

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[1]. [एक औद्योगिक प्रशिक्षण संस्‍थान के शिलान्‍यास के मौके पर पहुंचे बेनी ने प्रदेश के लिए मुलायम सिंह यादव और बसपा प्रमुख मायावती को लुटरा करार देते हुए कहा कि यह लुटेरा और गुंडा दोनों है। इन दोनों से आप अपने प्रदेश को कैसे बचाओगे। मंत्री जी यहीं नहीं रुके और उन्‍होंने कहा कि मुलायम के आतंकवादियों से इसके रिश्ते हैं और अगर वह मुझको मरवा डालेंगे तो सौ बेनी प्रसाद पैदा होंगे।] ருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார்.

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”: பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[2], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[3]. अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ”

இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[4], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[5].

வழக்கம் போல பாராளுமன்றத்தில் கலாட்டா: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று மத்திய உருக்கு துறை அமைச்சர் பெனிபிரசாத் பேச்சால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[6]. இவ்வாறு முலாயம்சிங்கை பேசியது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லக்னோ அருகே உள்ள அவரது குண்டா தொகுதியில் மத்திய அமைச்சர் வர்மா பேசுகையில், “முலாயம் சிங் கொள்ளையர்கள், மற்றும் பயங்கரவாதிகளுக்குதொடர்பு வைத்துள்ளார். இவர் எப்படி நமது மாநிலத்தை காத்திட முடியும்?”, என பேசினார்.
மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் – இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மத்தியஅமைச்சர்கமல்நாத்வருத்தம்: எப்படியாகிலும், முல்லாயம் அல்லது மாயா என்று உபி அரசியல்வாதிகளின் தயவு வேண்டும் என்பதனால், காங்கிரஸ்காரர்கள் தாஜா செய்ய ஆரம்பித்துள்ளனர். தலைவர்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி மறைமுகமாக அமைச்சர் பெனிபிரசாத்தை சாடியுள்ளார். மத்திய அமைச்சர் கமல்நாத் இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்[7].

முஸ்லீம் கூட்டுத் தேவை[8]: ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[9]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[10], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

18-03-2013


குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

மார்ச் 17, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

mulayam-singh-yadavs-iftar-diplomacy-muslims

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

Mullah Mulayam and Imam - 2012

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

Mullah Mulayam and Imam

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

 

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

 

லல்லு-பாஷ்வான்-குல்லா

லல்லு-பாஷ்வான்-குல்லா

ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

Azam CD - poster of nude Jataprada

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

 

Omar Abdullah - Rahul-Mullah-Topi

Omar Abdullah – Rahul-Mullah-Topi

எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].

 

வேதபிரகாஷ்

17-03-2013


[2] However, while Maulana Bukhari indicated that he was not averse to another round of talks with Mr. Singh, he said the discussions should be centred around solid assurances.

http://www.thehindu.com/news/national/other-states/maulana-bukhari-severs-ties-with-sp/article4516659.ece

[4] Sources said that the fissures came to the fore after Ahmad was removed from the post of chairman, UP Pollution Control Board (UPPCB), following stinging charges of corruption against him. Though Ahmad was later adjusted in the Civil Defence Council, the shifting allegedly fuelled animosity between Bukhari and Akhilesh Yadav.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

[5] Jaya Prada, who is seeking re-election from Rampur constituency in Uttar Pradesh, alleged, “they (Khan and supporters) have released my CDs and posters just to scandalize my image”. “I am yet to see the content of the CDs but the posters released by them are very bad in taste, damaging my reputation. I am approaching the Election Commission to check this sort of campaigning,” she said.

http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/india/28155645_1_azam-khan-rampur-jaya-prada-posters

[6] Samajwadi Party general secretary Amar Singh filed a complaint with the Election Commission charging SP rebel Azam Khan with distributing ‘nude’ photographs and obscene CDs of actor and Rampur candidate Jaya Prada.

http://www.dnaindia.com/india/report_seedy-cd-amar-wants-to-get-azams-scalp_1255500

[7] In April 2012, Bukhari entered into a murkier spat with minority affairs minister Azam Khanwho questioned the Imam’s claim of being a “Muslim leader”. It all started after Bukhari’s son-in-law Umar was nominated by SP as its candidate in the Legislative Council. Azam was peculiarly against Umar citing his failure during the assembly elections. Mulayam tried to pacify Bukhari, who, however, remained unmoved and retaliated by lambasting the SP of relying too much on Azam, while leaving nothing important for others.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms