Archive for the ‘உதய சூரியன்’ category

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

ஏப்ரல் 20, 2016

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

16-04-2016 னிக்ஹ்ட் Taking-the-opposition-coalition-dmk-protest-in-vaniyambadiதிமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை?: உளுந்துார்பேட்டையை போல வாணியம்பாடி தொகுதியை, அண்ணா அறிவாலயத்தில், ‘சரண்டர்’ செய்து விடு’ என, முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு, தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது[1] என்ற செய்தி வியப்பாக உள்ளது. என்ன மீலாது நபி விழாக்களில் கலந்து கொண்டு, ரம்ஜான் நோன்பு விழாக்களில் நன்றாக சாப்பிட்டு முஸ்லிம்களை புகழ்ந்த திராவிடர்களா, முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. வேலுார் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், 10ல் தி.மு.க., போட்டியிடுகிறது; மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியும், வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகிறது[2]. வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், முகமது பாரூக் போட்டியிடுகிறார்.

Fight among the mohammedan parties in Tamilnaduஉளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடம் ஒப்படைத்தது ஏன்?: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ம.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்தது[3]. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.  இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்[4]. ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா வெள்ளி மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்பு உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக வசம் அளித்ததாகத் தெரிவித்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ள நிலையில் ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் நிலவரம்:

  1. ராமநாதபுரம்: ஜவாகிருல்லா.
  2. தொண்டாமுத்தூர்: எம்.ஏ.சையது முகமது.
  3. நாகப்பட்டிணம்: ஏ.எம்.ஜபருல்லா.
  4. ஆம்பூர்: வி.எம்.நஜீர் அகமது.

தொகுதி உடன்பாடு பிரச்சனையில் திமுக கூட்டணியிலிருந்து எஸ் .டி.பி.ஐ.கட்சி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது[5]. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை.

கருணாநிதி முஸ்லிம்களுடன். எஸ்.டி.பி.ஐவாணியம்பாடி திமுகவுக்கே: கடந்த, 37 ஆண்டுகளாக, கூட்டணி கட்சிகளுக்கே, வாணியம்பாடி ஒதுக்கப்பட்டு வந்துள்ளதால், இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். தொகுதி முழுவதும், சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தொகுதி கைமாறியதால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர்[6]. நேற்று முன்தினம் இரவு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வினர், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க., போட்டியிட வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[7]. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, உளுந்துார்பேட்டை தொகுதியை, தி.மு.க.,விடம் சரண்டர் செய்தது[8]. அதேபோல், வாணியம்பாடி தொகுதியையும் சரண்டர் செய்ய வேண்டும் என, முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது பாரூக்கை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக, 16-04-2016 அன்று தகவல் பரவியது[9].

SDPI, MMK, IUML all in DMK 2016முஸ்லிக் லீக் நிர்வாகி திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை பற்ரி கூறுவது: இது குறித்து, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இதன் பின்னணியில், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் தேவராஜ் உள்ளார். அவரது மைத்துனர் அசோகன், ஆலங்காயம் ஒன்றிய செயலராக இருக்கிறார். அவரது துாண்டுதலில் தான், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆம்பூரிலும் எதிர்ப்பு: ஆம்பூர் தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் நடத்திய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பின், நகர தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ‘ஆம்பூர் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்’ என, கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்[10].

IUML splinter groupsதங்களது மக்கட்தொகைக்கு அதிகமாக முஸ்லிம்கள் சீட்டுகள் பெறுவது: தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15 சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர “தேர்தெடுக்கும் முறையில்” ஒரு எம்.பி பதவியையும் சேர்த்து பேரத்தில் பேசி வருகிறார்கள். தவிர அரசு ஒதுக்கீடு இடங்கள், கடைகள், குத்தகைகள் முதலியவற்றி;உம் முஸ்லிம்கள் கணிசமான இடங்களைப் பெறுகிறார்கள், கோடிகளை அள்ளுகிறார்கள். இதெல்லாம், மற்ற திராவிட அரசியல்வாதிகளை பாதிக்கின்றன. 30-50 ஆண்டுகள் என்று உழைத்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று வந்தவர்கள் சீட் பெற்று பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. திராவிடக் கட்சித் தலைவர்கள் அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகின்றனரே தவிர மற்றவர்களுக்கு, தொண்டர்களுக்கு எந்த லாபமுன் இல்லை.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்தமிழகத்தில் முஸ்லிம் அரசியல் நிலை என்ன?: 1948 முதல் 1972 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்), திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஆதாரங்கள் பெற்றன. 1970-80களில் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்றது, இலங்கை (மலேசியா, சிங்கப்பூர் முதலியவற்றைச் சேர்த்து) வியாபார இணைப்புகள், தங்கம், போதை மருந்து கடத்தல் போன்றவற்றில் கோடிகளை அள்ளினர். இதற்காகத்தான் அவர்களது அரசியல் உறவுகள் உதவின. பணம் அதிகமாக வரவர, மசூதிகள், டிரஸ்டுகள், நிறுவனங்கள் அதிகமாகின. அதற்கேற்றப்படி, முக்கியஸ்தர்கள் அரசியல் ஆதாயம் பெற விரும்பினர். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 1987ல் ஷாபானு வழக்கு உதவியது. இதை வைத்துக் கொண்டு, ஐ.யூ.எம்.எல் அடக்கி வாசிக்கிறது, இந்துத்த்வத்திற்கு துணை போகிறது என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தன. 1992ல் ராமஜென்பபூமி விவகாரம் அவர்களுக்கு பெரிதும் உதவியது. இதனால், 1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தனர். 1997ல் கோயம்புத்தூரில் கான்ஸ்டெபில் செல்வராஜ் முஸ்லிம்களால் கொலை செய்யப் படுகிறார். பிப்ரவரி 14, 1998ல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. அதில் 58 பேர் கொல்லப்படுகின்றனர், 200ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைகின்றனர். 2009ல் மனிதநேயக் கட்சி தோன்றியது. இப்படியாக முஸ்லிம் கட்சிகள் தீவிரவாத அரசியலில் இறங்கின.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

முஸ்லிம் கட்சிகளினால் தமிழகத்திற்கு கிடைத்த பலன் என்ன?: ஒவ்வொரு திராவிட கட்சி அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ, தான் பதவியில் இருந்த காலத்தில், தான் மக்களுக்காக இதை செய்தேன் – அதை செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் பதவிக்கு வந்தால், தமிழக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இதுவரை யாரும் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கட்சி வேட்பாளராக நின்று வெற்ற்ப்பெற்றப் பிறகும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்து, தங்களது நலன்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர மற்ற மக்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கும்பகோணம் போன்ற தொகுதிகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும், அங்குள்ள கோவில்களை, கோவில் சொத்துகளை பாதிக்கும் வகையில் தான் நடந்து கொள்கின்றனர். கோடிக்கணக்கில் வருகின்ற பக்தர்கள் மூலம், வியாபாரங்களில் லாபங்களை அள்ளுகின்றனரே தவிர, பதிலுக்கு அவர்கள் எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை. பிறகு அரசியல் மற்றும் அரசியல் இல்லாத நிலைகளில் அவர்களினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனும் போது, விகிதாசாரத்திற்கு அதிகமாக அவர்களாஇத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதனால் என்ன பலன்?

© வேதபிரகாஷ்

20-04-2016

[1] தினமலர், தொகுதியை சரண்டர் செய்‘: முஸ்லிம் லீக்கிற்கு தி.மு.., மிரட்டல், ஏப்ரல்,18,,220016.011:22..

[2] மாலைமலர், கூட்டணிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: வாணியம்பாடியில் தி.மு..வினர் போராட்டம், பதிவு: ஏப்ரல் 17, 2016 16:37, மாற்றம்: ஏப்ரல் 17, 2016 16:40.

[3] இன்னேரம்.காம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு தொகுதி திமுகவிடம் ஒப்படைப்பு!, சனிக்கிழமை, 16 April 2016 00:44.

[4]http://www.dinamani.com/tamilnadu/2016/04/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/article3382392.ece

[5] http://www.inneram.com/news/tamilnadu/8641-mmk-one-seat-submitted-to-dmk.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1503913

[7] தினமணி, உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு, By  சென்னை, First Published : 16 April 2016 12:47 AM IST

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மமக அறிவிப்பை தொடர்ந்து .பேட்டையில் திமுக போட்டி..ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக அறிவிப்பு, By: Karthikeyan, Updated: Friday, April 15, 2016, 20:32 [IST].

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-contest-ulundurpet-constituency-251346.html

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/17163725/1005449/cni-47.vpf

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)

முஸ்லிம்ம் லீக் பேட்டி 2016 தேர்தல்

முஸ்லிம் கட்சிகளின் அபாயகரமான அரசியல் சூழ்ச்சிகள்: கடந்த 2011 தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் போட்ட வேடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளேன். வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொண்டு தங்களுக்கு அதிக அளவில் இடங்களை கைப்பற்ற யுக்திகளை எப்படி கையாளுகின்றன முதலியவை அப்பொழுது வெளிப்பட்டன. வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்! முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? இதை பயங்கரமான அரசியல் சூழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும்.

Fight among the mohammedan parties in Tamilnaduகாபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்தம்: காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? “எதிரியின் எதிரி” நண்பன் என்று இந்த விரோதிகள் ஒன்றாக கூடியுள்ளனர். அதாவது, காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்த போலிருக்கிறது. குரானில், ஹதீஸில், ஷரீயத்தில் அத்தகைய கொள்கை உள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளனர் போலும். கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். அரசாட்சி, அதிகாரம் பணம், புகழ் வரவேண்டும் அவ்வளவே தான்! ஆனால், இப்பொழுது, திமுக காங்கிரசுடன் சேர்ந்து விட்டது. அதாவது, ஊழல்- ஊழலோடு ஐக்கியமாகி விட்டது. இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

SDPI, MMK, IUML all in DMK 2016கருணாநிதியும் முஸ்லிம் கட்சிகளும் (மார்ச்.21, 2016): “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உங்களோடு நீண்ட நாட்களாக கூட்டணியிலே உள்ள கட்சி. இப்போது மனிதநேய மக்கள் கட்சி உங்கள் கூட்டணியிலே சேருகிறது. அதனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு உள்ள இடம் குறையுமா?,” என்று கருணாநிதியிடம் கேட்டபோது, “குறையாது” என்று பதிலளித்துள்ளார்[1]. “இடவொதிக்கீடு” பாணியில், தனித்தனியாக ஒதுக்கீடு செய்வாரா அல்லது அருந்ததியரை / எஸ்.சிக்களை ஏமாற்றியது போல, உள்-ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவாரா? அதாவது, முஸ்லிம் கட்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சமயோஜிதமாக கூறியுள்ளது தெரிகிறது[2]. நாளைக்கு, திமுகவுக்கு பாதகமான தொகுதிகளை இவர்களுக்கு ஒதுக்கி விட்டு, கணக்குக் காட்டிக் கொள்ளலாம். முஸ்லிம்களால் ஜெயிக்க முடியும் என்ற தொகுதிகளை தாம் அவர்களுக்குக் கொடுப்பது என்பதை யுக்தியாகக் கொண்டுள்ளனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சியினர், கூட்டணி முஸ்லிம் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக, தமது கட்சி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் என்று நினைத்தாலும், வெற்றி பெற்றப் பிறகு, முஸ்லிம் முஸ்லிமாகதான் நடந்து கொள்ளும் போது, மதவாதத்திற்கு திராவிடக் கட்சிகளும் துணைபோய் கொண்டிருக்கின்றன.

2011 அதிமுக, ம்மக ஒப்பந்தம்அதிமுகவிலிருந்து திமுக கூட்டணியில் தாவியுள்ள மனிதநேய மக்கள் கட்சி (மார்ச்.19, 2016): தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்[3]. அதிமுகவிலிருந்து, திமுகவுக்குத் தாவியிருப்பது நோக்கத்தது[4]. முஸ்லிம் கட்சியினர், இவ்வாறு அதிமுக-திமுக கூட்டணிகளில் தாவி-தாவி விளையாடிக் கொண்டிருக்கும் “சர்க்கஸ் கூத்துகளை” மக்கள் கவனிக்க வேண்டும். இதில் முஸ்லிம் கட்சிகளுக்கு கவலையே இல்லை, ஏனெனில், அவர்கள் எப்படியாவது சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஜனநாயகமற்ற, கொள்கையற்ற, சித்தாந்தம் மறந்த வேசி அரசியலை கவனிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ansar, Jawahirullaஸ்டாலினை ஜவாஹிருல்லா சந்தித்து பேசியது: இந்நிலையில், சென்னையில் 19-03-2016 அன்று (சனிக்கிழமை) கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும்” என்றார்[5]. ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மமக இணைந்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்[6].

IUML conference, Trichy entrance 24-11-2015 those who selectedதிமுக தலைமையிலானமதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும்: திமுக கூட்டணியில் முஸ்லிம்களின் அடிப்படைவாத-தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ இணைந்துள்ளது. இது பற்றி அதன் தலைவர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான “மதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணி யில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இணைந்துள்ள திமுக கூட்டணி மதசார் பற்றகூட்டணியாம். தமிழர்களை எவ்வளவு வடிகட்டின முட்டாள்களாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது தமாஷாகத்தான் இருக்கிறது. அப்படி தமிழக மக்கள்களை மூடர்களாக மாற்றி வைத்துள்ளது திராவிட போலி நாத்திக கூட்டங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டும் வரிந்து கட்டி கொண்டு செயல்படும் இயக்கங்களான தவ்கீத்ஜமாத், எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரி வான மனித நேயமக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மதவாத பிஜேபியை வளரவிட மாட்டோம் என்று சொல்வது, வேடிக்கைதான்.

05-karunanidhi-iuml-head-khadeவிஜயகாந்தை மிரட்டிய எஸ்டிபிஐ திமுக கூட்டணியில் சேர்ந்தது (19-03-2016): சென்ற மாதம் பிப்ரவரி 21ம் தேதி விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியது ஞாபகம் கொள்ளலாம்[7]. தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  “234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு எஸ்டிபிஐ கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. எஸ்டிபிஐ இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றிபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது,” என்றெல்லாம் பேசியது உள்ளே விவகாரம் உள்ளது என்பதுதான் தெரிகிறது[8]. அப்படி 234 தொகுதிகளிலும் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதனை ஆராய வேண்டும். இப்பொழுதோ, 23-03-2016 அன்று விஜயகாந்த், முட்டாள்தனமாக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருப்பது அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஓட்டுகளைப் பிரிக்கும் யுக்திதான். ஒன்று பிஜேபி அடியோடு ஓரங்கட்டப்பட்டு விட்டது. அரசியல் தெரியாத தமிழக பிஜேபிக்காரர்களின் நிலை இதுதான் என்று தெரிந்து விட்டது. இனி அமித் ஷா வந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினத்தந்தி, தி.மு.. கூட்டணிக்கு தே.மு.தி.. வரலாம்: இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லைகருணாநிதி பேட்டி, பதிவு செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 1:26 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 5:45 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/India/2016/03/22012602/Didnt-lose-hope-of-DMDK-joining-DMK-alliance-Karunanidhi.vpf

[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணியில் மமக தேர்தலை எதிர்கொள்ளும்: ஜவாஹிருல்லா,  Published: March 19, 2016 14:39 ISTUpdated: March 19, 2016 14:39 IST

[4] தமிழ்.ஒன்.இந்தியா, திமுக கூட்டணியில் இணைந்தது ..: மு.. ஸ்டாலினுடான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா அறிவிப்பு, By: Mathi, Updated: Saturday, March 19, 2016, 17:46 [IST].

[5] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/mmk-join-dmk-alliance-jawahirullah-meets-mk-stalin-249330.html

[7] தினமணி, பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேரக் கூடாது: எஸ்டிபிஜ கட்சி வலியுறுத்தல், By திண்டுக்கல், First Published : 22 February 2016 08:58 AM IST

[8]http://www.dinamani.com/edition_madurai/dindigul/2016/02/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A/article3290737.ece

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4)

மார்ச் 22, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4)

மூன்றும் மூன்றும் ஆறு! முஸ்லீம் அரசியலின் தந்திரம்! முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுஇக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதாவது, எங்கும் அவர்கள் நாடகமாடியது போல எதிர்து போட்டியிடவில்லை. இதோ பட்டியல்:

வேட்பாளர் தொகுதி கட்சி கூட்டணி
ராமநாதபுரம் ஜவாஹிருல்லா மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தமீமுன் அன்சாரி
ஆம்பூர் அஸ்லாம் பாஷா
வானியம்பாடி அப்துல் பாசித் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் .தி.மு.க
சென்னை துறைமுகம் அல்டேப் உசேன்
நாகை முகமது ஷேக் தாவூத்

திமுக-அதிமுக; கருணாநிதி-ஜெயலிதா: ஆனால் முஸ்லீம்கள் ஒன்றுதான்: திமுகவினர் அதிமுகவினரைத் திட்டுவார்கள்; அதிமுகவினர் திமுகவினரைத் திட்டுவார்கள்; கருணாநிதி ஜெயலலிதாவை வசை பாடுவார்; ஜெயலலிதா கருணாநிதியை வசை பாடுவார்; ஆனால், முஸ்லீம்கள் எல்லோரையும் திட்டுவர்-வசை பாடுவர்! ஆஹா, இதுதான் ராஜ தந்திரம? இல்லை பெரியாரை வென்ற ஜின்னாத்தனமா? ஜின்னா எப்படி பெரியாரை ஏமாற்றினர் என்று முன்னமே எட்த்துக் காட்டப்பட்டது. இனி பார்ப்போம், மேடைகளில் இவர்கள் எவ்வாறு பேசப் போகிறார்கள் என்று!

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா போட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அந்தக் கட்சி நேற்று அறிவித்தது.”ராமநாதபுரம் தொகுதியில் ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ம.ம.க., துணை பொதுச்செயலர் தமீமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா போட்டியிடுவர்’ என, த.மு.மு.க., பொதுச்செயலர் ஹைதர் அலி அறிவித்தார். பின், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்[4].

1. ஜவாஹிருல்லா ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர். வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

2. தமீமுன் அன்சாரிசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.

3. அஸ்லாம் பாஷா ஆம்பூர்: ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்‌கள் அறிவிப்பு: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இன்று காலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் முஸ்லீம் போட்டியிடும் வானியம்பாடி தொகுதிக்கு அப்துல் பாசித், சென்னை துறைமுகம் தொகுதிக்கு திருப்பூர் அல்டேப் உசேன், நாகை தொகுதிக்கு முகமது ஷேக் தாவூத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[5].

4. அல்தாப் உசேன் துறைமுகம் தொகுதி: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடர்ன் சிட்டி தெருவில் வசிக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், துறைமுகம் தொகுதி முன்னாள் எம்.எல். ஏ.,வுமான திருப்பூர் மைதீனின் மகன்.60 வயது நிறைந்த அல்தாப் உசேன் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகள் தெரிந்தவர். டன்லப் நிறுவன முன்னாள் ஊழியர். தடா சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் தர்ணா செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியை நடத்திய இவர், கடந்த மார்ச் 10ல் தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார்.

5. அப்துல் பாசித் வாணியம்பாடி: வாணியம்பாடி வேட்பாளர் அப்துல் பாசித், வேலூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவை சேர்ந்தவர். வயது 48. டிப்ளமோ பட்டதாரியான இவர், தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். தோல் காலணி இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்கிறார். வாணியம்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ.,.
6. முகம்மது ஷேக் தாவூது நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வேட்பாளர், முகம்மது ஷேக் தாவூதுக்கு வயது 60. ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர் என அழைக்கப்படும் இவர், நாகூர் தெற்கு தெருவில் வசிக்கிறார். டிப்ளமா பட்டதாரி. நாகூர் கல்வி அறக்கட்டளை மற்றும் கவுதியா சங்க தலைவராக உள்ளார். நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளரான இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேச தெரிந்தவர்

வேதபிரகாஷ்

22-03-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3),

https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/

[3] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[4] தினமலர், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா போட்டி, மார்ச் 22, 2011

http://election.dinamalar.com/election_news_detail.php?id=891

[5] தினமலர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்‌கள் அறிவிப்பு, மார்ச் 18, 2011

http://election.dinamalar.com/election_news_detail.php?id=534

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2)

மார்ச் 15, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2)

திமுக-அதிமுக கட்சிகளுடன் கூட்டணி ஏன்? முஸ்லீம் லீக்குகள் அரசியல் ரீதியில் எத்தனை கட்சிகளாக பிரிந்து இருந்தாலும், பிரிதுள்ளது போல இருந்தாலும், காட்டிக் கொண்டாலும் அவர்களின் அரசியல் நாடகங்கள் வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை[1]. எனவே அவர்கள் அத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவதில் வல்லவர்கள் என்பதனை மறுபடியும் நிரூபித்து விட்டார்கள். வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்!

ஒன்று அரசியல் மற்றொன்று மதம்: முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மதக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்கிறார்களா, சித்தாந்த போலித்தனமா, என்ன? மக்களுக்கு ஒன்றுமே புரியாமல் இருக்கலாம். ஆக இத்தகைய கட்சிமாறி போக்கு, நிலையிலா அரசியல் தாக்கம், சித்தாந்த போலித்தனம் முதலியவை அவர்களின் பச்சோந்தித்தனத்தை மக்களை ஏமாற்றிவரும் போக்கை, ஏன் நாட்டிற்கு துரோகத்தை செய்யும் முறையினையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில், நாட்டின் நலன் முக்கியம் என்றால், அதற்கு எதிராக கூட்டணி கட்சிகளின் கோரிக்கைக்களுக்கு ஒப்புக்கொடு அவ்வாறு தேர்தலில் கூட்டு சேரமாட்டார்கள். அரசியல் நிர்ணய சட்டத்தின் சரத்துகளை மீறும் கோரிக்கைகளை மறைமுகமாக செயல்படுத்த மாட்டார்கள். ஆனால், செய்வதை சொல்வோம், சொல்லியதை செய்வோம் என்று வசனம் பேசி, நாட்டை அப்படி சீரழித்து வரும் அரசியல் கட்சிகளை அடையாளங்கொள்ள வேண்டிய காலம் மக்களுக்கு வந்துள்ளது. ஏனெனில் இத்தகைய அரசிய நாடகங்கள், ஊழல் கோடிகளில் நடந்துள்ள நிலையில் நடக்கின்றன. முதலில் தியாகத்தை செய்து விட்டது போல அறிக்கை விட்டார்கள்.

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[2]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார். இப்பொழுது வேறு மாதிரி பேசுகிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவை ஆதரிப்போம்! இப்படி அறிவித்தால் கருணாநிதி என்ன செய்வார் என்று பார்க்கிறார்களா? அல்லது பயந்து கொண்டு இன்னொரு தொகுதியைக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா? 3 தொகுதிகளைக் கொடுத்து பின்னர் அதிலும் ஒன்றை பிடுங்கிக் கொண்டதால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஒருபிரிவினர் காயிதே மில்லத் பேரனான தாவூத் மியா கான் தலைமையில் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். இவர்கள் அதிமுகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்[3]. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியும் கருணாநிதி முன்னிலையில் இணைந்தன[4].
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் ஆனால் இரட்டை இலையை ஆதரிப்போம் என்றால் என்ன? திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதன் தலைவராக இருப்பவர் காதர் மொஹைதீன். இக்கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை முதலில் கொடுத்தது. மூன்றிலும் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முரண்டு காரணமாக பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடமிருந்து தலா ஒருதொகுதியை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. இது முஸ்லீம் லீக் கட்சியினரிடையே பெரும் மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த பாத்திமா சயத் இதற்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்திருந்தார். மேலும் நெல்லை மாவட்ட முஸ்லீம் லீக், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது[5].

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிலை என்ன? இந்த நிலையில் தற்போது கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மறைந்த காயிதேமில்லத்தின் பேரனுமான தாவூத் மியாகான் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இன்று காலை மியாகான் தலைமையில் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அக்கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் தாவூத் மியாகான் வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்கள் சம உரிமை பெறுவதற்காக காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கினார். இந்த இயக்கம் தோன்றி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பல்வேறு கட்சியினரிடமும் பலர் இந்த கட்சியை அடகு வைத்து விட்டனர். இதனால் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குழப்பம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 3.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே இருந்ததை விட குறைவான பலன்களே கிடைக்கிறது. எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளது”, என்று அவர் கூறியுள்ளார்.

வேதபிரகாஷ்

15-03-2011


[2] தினமணி, எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக், First Published : 09 Mar 2011 03:53:36 PM IST http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=388118&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=