Archive for the ‘உடைப்பு’ category

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

ஏப்ரல் 19, 2016

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

Kupwaraa, Handwara JK map

வீடியோ மூலம் வதந்தி, கலவரம் ஆரம்பித்து வைக்கும் போக்கு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 12-04-2016 செவ்வாய் கிழமை அன்று, இளம் பெண் ஒருவரிடம் ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்ததாக யாரோ சிலர் வேண்டும் என்றே வதந்தியை கிளப்பிவிட்டனர்[1]. ஹந்த்வாரா நகரில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு/ சிறுமிக்கு ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதற்குள் ஒரு இளம்பெண் கற்பழிக்க பட்டாள் என்பது போன்ற வதந்திகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் முதலியவற்றில் மொபைபோன்கள் மூலம் பரப்பி விடப்பட்டன. நம்பிய இளைஞர்கள் இதனை கண்டித்து பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சீல் ஈடுபட்டனர். “கல்லடி கலாட்டா” என்பது கலவரத்திற்கு ஆரம்பம் என்பது அறிந்ததே. சிறுவர்கள்-பெண்களை முன் வைத்து, பிரிவினைவாதிகள் பின்னிருந்து செய்யும் கலவரம் ஆகும். பிறகு கண்டித்து பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது[2].

Scene after massive stone-pelting in Handwara on Tuesday 1204-2016- Firdous Hassan-GK

வழக்கம் போல பிண ஊர்வலத்தை வைத்து கலவரத்தைப் பெரிதாக்கியது: ஆனால், இதற்கு பிரிவினைவாதிகளின் சதிதிட்டம் இருப்பது ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றே துப்பாக்கி சூட்டில் ராஜா பேகம் என்ற பெண் காயமடைந்தாள். 13-04-2016 புதன் கிழமை அன்று, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாலும், பலனின்று இறந்ததும், அவளது பிணம் லங்கேட் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டதும், கலவரம் ஆரம்பித்தது. இவ்வாறு யாதாவது ஒரு அப்பாவி இறப்பது, அப்பிண ஊர்வலத்தை சாக்காக வைத்துக் கொண்டு, மறுபடியும் இன்னொரு கலவரத்தை ஏற்படுத்துவது, மனித உரிமைகள் மீறல் என்ற வாதங்களை வைப்பது, உடனே அவற்றை ஊடகங்கள் பெரிதாக்கி, செய்திகளை போடுவது, பரப்புவது என்பனவெல்லாம் வாடிக்கையாகி விட்டன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwaraபிரிவினைவாத கோஷங்கள் எழுப்புவது, போலீஸார்ராணுவ வீரர்களைத் தாக்குவது முதலியன: ஹந்த்வாராவுக்கு அருகே உள்ள டிரக்மல்லா பகுதியில் 13-04-2016 அன்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுதந்திரத்துக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன, என்று ஊடகங்கள் செய்திகளைப் போட்டாலும், பிரிவினைவாத-தேசவிரோத கோஷங்கள் என்று குறிப்பிடுவதை மறைக்கும் போக்கை கவனிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து மாநில போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பலன் எதுவும் ஏற்படாததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இப்படி வழக்கமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை, நல்லெண்ணம் படைத்த காஷ்மீர் அறிவிஜீவுகள் யாரும் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. கலவரம் ஏற்பட வேண்டும், அதில் யாராவது சாக வேண்டும், அதை வைத்து மேலும் கலவரத்தை பெரிதாக்க வேண்டும் என்ற போக்கு சகஜமாகவே கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் ஒரு குண்டு ஜெகாங்கிர் அகமது என்ற வாலிபரின் தலையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே ராணுவத்தை கண்டித்த ஹந்த்வாரா, குப்வாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இதனால் பதற்றத்தை தணிக்க பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான நிலையே நீடித்து வருகிறது[3].

Activists from the Muslim Khawateen Markaz -MKM-take part in a protest in Srinagar over the killing of youth in Handwara-AFP Photoமொபைல் இன்டர்நெட் சேவை ரத்து: இப்பொழுதெல்லாம், இப்பிரிவினைவாத-தேசவிரோத செயல்களுக்கு பலரை வேலைக்கு அமர்த்தி இன்டெர்நெட் மூலமும் பிரச்சாரம் நடந்து வருகிறது. அங்கங்கு எடுத்த புகைப்படங்கள், விடியோக்கள் முதலியவற்றை கலந்து, தூண்டிவிடும் பேச்சுகள் முதலியவற்றைச் சேர்ந்து பரப்பி விடுகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சேவை நிறுவனங்கள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க சேவை நிறுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குப்வாரா, பாராமுல்லா, பாந்திபோரா, கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது[4]. ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் மக்களும் இன்டர்நெட் சேவையை அணுக முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். அங்கு நிலை சீரடைந்த பின்னர் சேவை வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Army attacked by the JK youth 12-04-2016கலவரம் பெரிதாகி, துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் இறத்தல்: அங்கு கலவரம் வெடிக்க, இன்று ஸ்ரீநகரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர்[5]. இது வெறும் வதந்தி தான் உண்மை அல்ல என்பதை உணராத கந்தர்பால் மாவட்ட மக்கள் மற்றும் போராட்டகாரர்கள் சிலர் ராணுவத்தினரை தாக்க முயன்றனர்[6]. அப்போது ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் காஷ்மீர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது, கூடவே முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

Handwara, Kupwara, JK girl stated no molestation 12-04-2016.முதலமைச்சர், துணைமுதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறியது: துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் சந்தித்து பேசினர். ராணுவத்தினர் எந்த காரணத்திற்காக இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதனைதான் ராணுவ அமைச்சரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்[7]. வன்முறையை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என்று அப்போது அவர் கூறினார்[8]. மேலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மாகம், லங்காடே, ஹண்ட்வாரா, குப்வாரா உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரம் காரணமாக ஸ்ரீ நகரில் கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்[9]. ராணுவ வீரரின் தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10].

Handwara, Kupwara, JK girl viedo turned riot 12-04-2016.பாத்ரூம் சென்ற பெண்ணை கலாட்டா செய்து பொய் செய்தியை பரப்பிய விதம்: அதன் பிறகு சம்பந்தபட்ட பெண் கூறுகையில், தன்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என விளக்கம் கொடுத்தார்[11]. உண்மையில் அவள் தன் தோழியுடன் பொதுக்கழிப்பறை / பாத்ரூம் சென்று வரும் போது, சில இளைஞர்கள் அவளிடம் கலாட்டா செய்துள்ளனர். பள்ளி சீறுடை அணிந்த ஒருவன் அவளது பையினைப் பிடுங்கிக் கொண்டு, “ராணுவ வீரருடன் உனக்கென்ன பேச்சு, காஷ்மீரில் என்ன பையன்களா இல்லை”, [அதாவது எங்களை விடுத்து ஏன் மற்றவர்களிடம் போலீஸார்-ராணுவத்திடம் செல்கிறாய்] என்று நக்கலாக பேசி, கன்னத்தில் அறைந்துள்ளனர். ஹிலால் என்ற பையன் “நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய்?…………………..” [தான் யாருடனோ உறவு கொண்டிருப்பதைப் போன்ற தொணியில்] பேசினான்[12]. அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன். இந்நிலையில் பல மாணவர்கள் அங்கு கூடினர். அப்போது அருகில் போலீஸ் காவலர் ஒருவர் நின்றிருந்தார். அவரை சுட்டிக்காட்டி புத்தகப் பையை தராவிடில் அவருடன் நான் காவல் நிலையம் செல்வேன் என்றேன். உடனே அந்த மாணவர் எனது பையை தராமல் என்னை கெட்ட வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து பிற மாணவர்களும் பிரச்சினை செய்யத் தொடங்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சதிச் செயலில் ஈடுபட்டதாக கருதுகிறேன்” என்றார்[13]. உண்மையில் அங்கு ராணுவத்தினர் யாரும் இல்லை என்று விளக்கினாள்[14]. ஆனால், ஒருவேளை, இதனை வேறு கோணத்தில் வீடியோ எடுத்து, அதற்கு வசனத்தையும் சேர்த்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

19-04-2016

[1] வெப்துனியா, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது, திங்கள், 18 ஏப்ரல் 2016 (04:51 IST)

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210714

[3] http://www.dailythanthi.com/News/India/2016/04/14112558/Mobile-internet-services-suspended-in-Kashmir.vpf

[4] தினத்தந்தி, காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஏப்ரல் 14,2016, 11:25 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஏப்ரல் 14,2016, 11:25 AM IST

[5] http://www.4tamilmedia.com/newses/india/36206-2016-04-13-06-18-32

[6] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/jammu-kashmir-girl-denies-molestation-by-army-soldier-116041800005_1.html

[7] http://www.thehindu.com/todays-paper/more-troops-sent-to-kashmir-valley/article8484421.ece

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210593

[9] தினகரன், காஷ்மீரில் நீடிக்கிறது வன்முறை: பதட்டம் நீடிப்பதால் ராணுவம் குவிப்பு, ஏப்ரல்.17, 2016.09.09.51.

[10] தமிழ்மீடியா, காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிராக பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு, WEDNESDAY, 13 APRIL 2016 08:18.

[11] http://www.indiatvnews.com/news/india-no-molestation-girl-clarifies-after-2-protesters-killed-seeking-arrest-of-army-jawan-323730

[12] தமிழ்.தி.இந்து, உள்ளூர் இளைஞர்கள்தான் தொந்தரவு செய்தனர்: ராணுவ வீரர் பாலியல் தொல்லை தரவில்லைகாஷ்மீர் பள்ளி மாணவி விளக்கம், Published: April 14, 2016 10:07 ISTUpdated: April 14, 2016 10:08 IST.

[13]http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8475117.ece

[14] “I went to the (public) washroom and handed my bag to a friend. When I came back, a Kashmiri student heckled me and snatched my bag. The boy in school uniform slapped me and asked ‘if there were no boys in the valley’ (angrily insinuating that the girl was in a relationship with a soldier). I was shocked and confused about what he had said. Suddenly, several boys gathered. The boy asked me to go to the police station with him. There was a police uncle nearby. I told the boy to return my bag so that I could go to police station with the cop. He said he would not return my bag and started abusing me.” There was no soldier there (near or in the washroom). I saw Hilal (an acquaintance). He slapped me and asked me what I was doing there. I asked him how he too could accuse me of any such thing (allegation of an illicit relationship) knowing me and our family. He too started abusing. It seemed that they had conspired in advance. The boy instigated all other boys too to create trouble,” the girls says in the video.

http://timesofindia.indiatimes.com/india/JK-firing-Handwara-girl-says-no-soldier-molested-her-accuses-local-youth-of-harassment/articleshow/51808725.cms

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

திசெம்பர் 7, 2013

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

06-12-2013

சென்டிரல் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறியதாவது[1]: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்’ கதவு(வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே போலீசார் 250 பேரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்

டிசம்பர் 6ம் நாள் நினைவு தினமா, எதிர்ப்பு தினமா அல்லது தீவிரவாதிகளைத் தூண்டிவிடும் தினமா?: உதாரணத்திற்காக, சென்ட்ரல் பற்றிய செய்தி கொடுக்கப்பட்டது, ஆனால், இதே நிலைதான் மற்ற ரெயில்வே மற்றும் பேரூந்து நிலையங்களில். டிசம்பர் 6ம் நாள் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, ஆனால், மாற்ற நாட்களில் சாதாரணமாக இருந்து விடுகிறார்கள். சில நேரங்களில் அவ்வாறான நாட்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து, அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். ஆகவே, தீவிரவாதிகள் அல்லது டிசம்பர் 6ம் தேதியில் பழி வாங்க வேண்டும் என்று கங்கணல் கட்டிக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இந்த உண்மையினை உணரவேண்டும். ஏனெனில், இவர்களது பிரச்சாரம், அத்தகைய ஜிஹாதி மற்றும் தீவிரவாத முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதாகும் என்பது தெள்ளத்தெரிந்த விசயமே, பிறகு ஏன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்?

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்- எதற்கு

06-12-2013 மிரட்டல், பீதி, ஆர்பாட்டங்கள்: திண்டுக்கல்லில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில்பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்[2]. சென்னையில் கைது! பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்[3], பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்புக்கு எந்த அமைப்பும் வேண்டுகோள் வைக்கவில்லையெனினும், சில ஆண்டுகளுக்கு முன் சில சமுதாய அமைப்புகளால் வைக்கப்பட்ட வேண்டுகோள் வழமையாக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்நாளில் கடைகள் அடைக்கப்படுகிறது[4], இப்படி செய்திகள் தொடர்கின்றன.

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

திண்டுகல்-மதுரையில்போலீஸ்பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்கள், மசூதிகள் உள்ள பகுதியில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ரெயில் தண்டவாள பகுதியிலும், பார்சல் அலுவலகங்கள் உள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் எல்லைப் பகுதியில் நுழையும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பஸ்நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.06-12-2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பொது  அமைதியை  குலைக்க  சதித்திட்டம்  தீட்டுவதாக  ரகசிய  தகவல்: திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல்–தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனி அருகில் உள்ள பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது[5]. அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்[6]. பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக நிறுவனர் முபாரக் (வயது 34), ஜாபர் அலி (35), கணவா சையது (29), யாசிக் (24), ஷேக்பரீத் (24), அசனத்புரத்தைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா (28) என தெரியவந்தது[7].

Tindigul Muslims adopting part of IED

அகில  உலக  இஸ்லாமிய  முன்னேற்ற  கழக  மாவட்ட  தலைவர்  ஹபிபுல்லா  முதலியோர்  சிறையில்  அடைப்பு: அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசின் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தோடும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்பட சதித்திட்டம் தீட்டியதாக திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[8]. கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டு, 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேதகிரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Dindigul Muslims adopting part of IED technology

 ஆணிகளை  எறிந்து  பொதுமக்களை  கொல்லசதி:   மதுரை,   திண்டுக்கல்லில்   10 பேர்  கைது[9]: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்[10].

மதுரையில்  பெட்ரோல்  குண்டுவீசி,   அரிவாளால்  வெட்டி  ஒருவர்  கொல்லப்பட்டதற்கு  பழிக்குப்  பழியாக  சம்பவம்  நடந்தது  போல்  திட்டமிட்டவர்கள்  மதுரையிலும்  கைது: மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட “பைப்’களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் “ரிங்’ ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

© 07-12-2013


[5] தினமணி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக 6 பேர் கைது, By திண்டுக்கல், First Published : 07 December 2013 12:17 AM IST

[6] தினத்தந்தி, பாபர்மசூதிஇடிப்புதினத்தில்பொதுஅமைதியைகுலைக்கசதித்திட்டம்தீட்டிய 6 பேர்கைதுதிண்டுக்கல்லில்பரபரப்பு, பதிவு செய்த நாள் : Dec 06 | 08:51 pm

[9] தினமலர், ஆணிகளைஎறிந்துபொதுமக்களைகொல்லசதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர்கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013,23:01 IST

அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!

ஒக்ரோபர் 15, 2013

அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!

Allah quran etc symbolism

2009 முதல் 2013 முதல் கடவுளுக்கு எந்த சொல்லை உபயோகிப்பது?: 2009ம் ஆண்டு மலேசியாவில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவ பத்திரிகை “ஹெரால்ட்” அல்லா என்ற வார்த்தையை கிருத்துவக் கடவுளுக்காக உபயோகப்படுத்தி இருந்தது[1]. குறிப்பாக மலாய் மொழி பைபிளில் கடவுளுக்குப் பதிலாக “அல்லா” என்ற வார்த்தை உபயோகப் படுத்தப் பட்டது[2]. அதை எதிர்த்து முஸ்லிம் இயக்கத்தினர் வழக்குத் தொடர்ந்தன. அதனால், “ஹெரால்ட்” பத்திரிக்கைக்காரர்கள் அதனை உபயோகிக்கக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தது[3]. இதற்கு எதிராக கிருத்துவ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இடைக்கால தடையை அது ரத்து செய்தது.  இதில் உள்துறை அமைச்சகம் தலையீடு இருந்தது. இதனால், 2010ல் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள், குறிப்பாக, சர்ச்சுகள் தாக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு, கற்கள், பெயிண்ட் முதலியை அத்தாக்குதல்களில் உபயோகப் படுத்தப் பட்டன[4]. அரசு மேல்முறையீடு செய்தது.

Christian usage of Allah

மலேசிய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளைப் போலத்தான் செயல்படுகின்றனர்: 2009ல் நஜீப் ரஸாக் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது, மலாய் முஸ்லிம் மற்றும் முஸ்லிம்-அல்லாத சிறுபான்மையினருடன் குறிப்பாக சீன மற்றும் இந்திய வம்சாவளி மக்களுடன் தாஜா செய்து கொண்டிருந்தார்[5]. பிறகு முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுகிறார். மலேசியாவின் மக்கட்தொகையில் 60% முஸ்லிம்கள், 9% கிருத்துவர்கள். இப்ராஹிம் அன்வர் கடந்த மலேசிய மேமாத தேர்தல், ஒரு பெரிய பிராடு / மோசடி என்று வர்ணித்தார்[6]. எது எப்படியாகிலும், முஸ்லிம்-அல்லாதோர் மலேசியாவில் அவஸ்தைப் படவேண்டியதுதான். நஜீப் ரஸாக், இப்ராஹிம் அன்வர் முதலியொர் பேசுவது, நடந்து கொள்வது, சோனியா, திக்விஜய் சிங், முல்லாயம் சிங் யாதவ், கருணாநிதி போன்றே உள்ளது. ஆகவே, அடிப்படைவாதிகளுக்குக் கொண்டாட்டம் தான்!

The court case has sparked debate in Muslim-majority Malaysia

அல்லா முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானவர்: “அல்லா” என்ற சொல்லை கடவுளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது[7]. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை 14-10-2013 அன்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், கடந்த 2009ல் கீழ் நீதிமன்றம் ஹெரால்ட் என்ற பத்திரிகைக்கு அல்லா என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்து, இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அல்லா என்ற வார்த்தை இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே உபயோகத்தில் இருந்தது, கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு. என்றெல்லாம் வாதிடப்பட்டது[8]. மூன்று நீதிபதிகள் கொண்ட இத்தீர்ப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.

Allah for muslims only - Vedaprakash

“அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும்: இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது. மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர். “அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும் என்று சபா பிராந்திய, எஸ்டர் மோய்ஜி என்பவர் பிபிசியிடம் முறையிட்டுள்ளார்[9].

Allah for muslims only - Vedaprakash.2

கிருத்துவ-முகமதிய இறையியல் மோதல்கள்: “ஹெரால்ட்” செய்தித்தாளின் ஆசிரியர் லாரன்ஸ் ஆன்ட்ரூ [ Lawrence Andrew, editor of the Catholic newspaper, The Herald] மேல்முறையீடு செய்ய தீர்மானிக்த்துள்ளார்[10]. 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டன. ஜெப்ரிஜால் அஹமது ஜாபர் என்பவர், “ஒரு முஸ்லிமாக நான் அல்லா என்ற வார்த்தையை ஜிஹாத் போல கருதுகிறேன். அதனை நான் ஆதரிக்கிறேன்”, என்று கூறுகிறார்[11]. இந்தோனியா, போனியோ மற்றும் அரபு நாடுகள், முதலியற்றில் உள்ள கிருத்துவர்கள் அவ்வார்த்தையைத் தொடர்ந்து உபயோகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளனர்[12].

Allah for muslims only - Vedaprakash.3

© வேதபிரகாஷ்

14-10-2013


[5] Prime Minister Najib Razak, who took office in 2009, has walked a tight-rope between pleasing his ethnic Malay Muslim base while not alienating the country’s non-Muslim ethnic Chinese and Indian minorities.

[8] Lawyers for the Catholic paper had argued that the word Allah predated Islam and had been used extensively by Malay-speaking Christians in Malaysia’s part of Borneo island for centuries.

http://www.reuters.com/article/2013/10/14/us-malaysia-court-allah-idUSBRE99D01J20131014

[9] “If we are prohibited from using the word Allah then we have to re-translate the whole Bible, if it comes to that,” Ester Moiji from Sabah state told the BBC.

http://www.bbc.co.uk/news/world-asia-24516181

[11] “As a Muslim, defending the usage of the term Allah qualifies as jihad. It is my duty to defend it,” said Jefrizal Ahmad Jaafar, 39. Jihad is Islamic holy war or struggle.

http://www.reuters.com/article/2013/10/14/us-malaysia-court-allah-idUSBRE99D01J20131014

[12] Christians in Indonesia and much of the Arab world continue to use the word without opposition from Islamic authorities. Churches in the Borneo states of Sabah and Sarawak have said they will continue to use the word regardless of the ruling.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/malaysia/10376674/Malaysian-court-rules-only-Muslims-can-use-the-word-Allah.html