Archive for the ‘ஈ. வே. ரா’ category

இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [1]

ஏப்ரல் 2, 2020

இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [1]

mysterious Shincheonji Church of Jesus, South Korea

தென்கொரியாவில் ஒரு கிருத்துவ சர்ச் மூலம் கொரோனா பரப்பப் பட்ட நிகழ்ச்சி [மார்ச்.2020]: தென்கொரிய டேகு நகரத்தில் [the southern city of Daegu] உறுதி செய்யப் பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus]  உடன் சம்பந்தப் படுகிறது[1]. 75% தில்லி நிஜாமுத்தீன் தப்லிக் மசூதி போல, தென் கொரியாவில், ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus] கொரோனா வைரஸ் பரப்புவதில் சிக்கியுள்ளது. சுமார் 7,400 பேர் தாக்குதலில் உறுதி செய்யப் பட்ட நிலையில், அவர்களுடைய தொற்றுக்கு மூலம, அந்த சர்ச் என்று அறியப் பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட நோயாளி எண்.31 [Patient No. 31] என்றழைக்கப் படும் பெண்மணி தான், முதன்முதலில் அந் த வைரஸைப் பெற்று, மற்றவர்களுக்குப் பரப்பியதாக தெரிகிறது. அதன் படி, பரிசோதனை செய்ததில், 63.5% கொரோனா வைரஸ் பரப்பு மூலம் அந்த சர்ச் தான் என்று காட்டியது. வைரஸ் பாதிப்பில் சைனாவுக்கு அடுத்தபடியாக, தென்கொரியா உள்ளது. ரகசியமாக கூடுதல், மாஸ்க் அணியாமல் இருத்தல், நெருக்கமாக இருந்து வேண்டுதல், முதலிய காரணங்களினால் கோவிட்-19 பரவியது, இதனால், கொரிய அரசு உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

mysterious Shincheonji Church of Jesus, South Korea, apologized

சர்ச் தலைவர் மன்னிப்பு கேட்டது [31-03-2020]: ஆனால், சர்ச் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. இந்த சர்ச்சின் எதிரிகள் மற்றும் பிடிக்காத கணவன் – மனைவிமார் தான் புகார் கூறியுள்ளனர் என்கிறது. மேலும், அச்சர்ச்சை சேர்ந்தவர்களை பலர் வேலையிலிருந்தும் நீக்கியுள்ளனர். 27% ஒவ்வாத, கிருத்துவர்கள் இருக்கும் தென்கொரியாவில் புரொடெஸ்டென்ட் சர்ச்சுகள் அதிகம். இதனை கிருத்துவ-எதிர் சர்ச்சாகக் கருதுகின்றனர். ஆக தென்கொரியாவிலும், கிருத்துவர்களா, கிருத்துவர்கள் அல்லாதவர்களா என்ற பிரச்சினையை விட தொற்று நோயை எதிப்பில் தான் நிற்கிறது. அந்த பெண்ணின் விவரங்கள், சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் என்று ஆய்ந்து வருகிறது, தொடர்பில் பல தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் அந்த சர்ச்சின் தலைவர் லீ மேன் ஹீ [Lee Man-hee] மன்னிப்புக் கேட்டார்[2]. இருப்பினும், சென்ற உயிர்கள் திரும்ப வராது. அதனால், கிளம்பியுள்ள பீதியும் அடங்கவில்லை. தனிமைப் படுத்துதல், வீட்டில் அடைப்பட்டு கிடத்தல், உணவு அத்தியாவச பொருட்களுக்காக கவலைப் படுதல் முதலிய கஷ்டங்கள் தொடர்ந்து இருக்கின்றன.

Parppaniyam, corona Viduthalat, 30-03-2020

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே என்று திராவித்துவவாதிகள் கூறுவது [30-03-2020, விடுதலை]: தில்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய தமிழக துலுக்கர்களில் பலர், இந்த கொரோனா தொற்றுக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே மதுரையில் 25-03-2020 அன்று ஒருவர் இறந்தாகி விட்டது. இந்நிலையில், திராவிட சித்தாந்திகள், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், “பார்ப்பனியம், கொரோனா வைரஸை விட கொடியது,” என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்[3]. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசிய உரையில், “மக்களை, உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக் கக்கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே. பார்ப்பனீயத்தையே பதற வைக்கக்கூடிய திராவிடர் கழகம் துணிச்சலோடு எதையும் எதிர்கொள்ளும். எங்கள் தலைவர் ஆசிரியர்கரோனாபற்றிய விழிப்பு ணர்வை மக்கள் மத்தியில் விதைத்து உள்ளார். எங்கள் பெரியார் மருத்துவக் குழுமம் விழிப்புணர்வைபாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தி வருகிறது. அதாவது உலகத்தில் என்ன நடந்தாலும், அவற்றை எல்லாம் மறைத்து, பிராமணர்களை எதிர்த்து துவேசமாக பேசுவது, காழ்ப்புடன் சித்தரிப்பது, பொது இடங்களில் கிண்டல் செய்வது, பூணூல் அறுப்பது, அடிப்பது, ஏன் கத்தியால் வெட்டுவது என்ற நிலைக்கு வந்துள்ளது. அந்நிலையில், இவர்கள் இன்றும் இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலிவற்றை வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள் என்றால், வன்மம், வன்முறை, அவதூறு போன்றவை அவர்களிடம் தான் நோய் போன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஆகவே, இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் எங்கிருந்து வந்தது என்று பார்க்க வேண்டியுள்ளது.

DK veeramani questions the conduct of yagna 01-04-2020

திராவிடத்துவவாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்து வந்துள்ளனர்: திமுக, முஸ்லிம்லீக்குடன் எப்பொழுதுமே கூட்டு வைத்துக் கொண்டிருந்தது. அதே போல திகவும் இஸ்லாத்தை விமர்சித்தது கிடையாது. ஈவேரா முதல் இப்பொழுது வரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. புத்தகக் கண்காட்சிகளில், அடுத்த-அடுத்த ஸ்டால்களில் திகவும், முஸ்லிம் புத்தக விற்பனை நடந்தது சகஜமாக இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத, நாத்திகக் கூட்டம் என்றால், முஸ்லிம்களால் அவ்வாறு இருக்க முடியாது. ஆனால், இவர்கள் எல்லொருக்கும் தெரியும், அவர்கள் இந்து மதம், இந்து கடவுள், இந்து மத நூல்கள் முதலியவற்றைத் தான் எதிர்க்கிறார்கள், மற்ற மதங்களை அல்ல என்பது. 01-04-2020 அன்று முகநூலில், கீழ்கண்ட விசயங்களை, குறிப்பாகச் சுட்டிக் காட்டினேன்:

  1. தமிழ், தமிழ் என்று சொல்லி, போராட்டங்கள் நடத்தி, கடைசியில் தமிழ்நாட்டிற்கு இழுக்கைத் தேடி தந்துள்ளனர்!
  2. நிஜாமுத்தீன் மர்கஸ்-லிருந்து, பெரியார் மண் ஈரோடு வரை, என்னத்தான் நடந்தது, தம்பி, சொல்வாயா, அண்ணன் கேட்கிறான்?
  3. கொரோனாவா, வெங்காயமா, பெரியார் பிஞ்சா, தடியா? வாங்க பெரியார் திடலில் பட்டி மன்றம் நடத்தலாம்! இனமான தலைமையில்!
  4. கழகக் கண்மணிகளே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தமே, கடைசியில் கொரோனா வைரஸ் நிலைக்கு போய் விட்டதே, எல்லாமே அந்த ஆரிய சதிதான்!
  5. திராவிடனும், துலுக்கனும் ஒன்றாக சேர்வான் – இனம் இனத்தோடு சேரும் என்றான் அண்ணன், ஈரோட்டில், மதுரையில் சேர்ந்து விட்டனரே!
  6. கொரோனா என்றால் குரானா ஞாபகம் வருகிறது, ஆட்சி கலைக்க அன்று திட்டமிட்டவர்களுள் ஒருவர், இன்றோ, இது எல்லாவற்றையும் ஆட்டுகிறது!
  7. தப்லிக் என்றால் என்ன, மர்கஸ் என்றால் என்ன, மார்பகத்தில் மச்சம் உள்ளதா, நாடாவை கழட்ட பார், தமிழில் பாட்டு பாடு!
  8. ஹேய்..அட்டக் பட்டக்…அப்சகல்லு மாலியா, லாலாக்கு டோல் டப்பிம்மா, கூட தப்லிக், மர்சஸ் எல்லாம் சேர்த்திருப்பேனே, என் கொரோனா!
  9. வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது என்றாயே, இப்பொழுது பார் தம்பி, தில்லியிலிருந்து உனக்கு கொரோனா வருகிறது!
  10. அன்று அடியே மீனாக்ஷி மூக்குத்தியை கழட்டடி என்றேன், இன்று தப்லீக்கைக் காட்டடி மர்கஸை மறைக்காதே என்பேன் [10]

இன்றைக்கும், ஸ்டாலின் அத்தகைய வன்ம-வார்த்தை பிரயோகங்களை செய்து வருகிறார்.

Tabliq attendees portent to spread Covid-19, quarantined, Tamil Hindu, 01-04-2020

திராவிடத்துவம், கம்யூனிஸம், ஜிஹாதித்துவம் எல்லாம் ஒன்றாகி செயல்படுவதால் அவற்றை சித்தாந்த ரீதியில் எதிகொள்ள வேண்டியுள்ளது: இதனால், சில நண்பர்கள், எதிர்த்து, சரி இல்லை என்று பதிவு செய்தனர். அதனால், அதன் பின்னணியை கீழ்கண்டவாறு, சுருக்கமாக விளக்கினேன்:

  1. அண்ணாதுரையின் “ஆரிய மாயை” படித்தால், என்னுடைய பதிவுகளுக்கான ஆதாரமும், பின்னணியும் புரியும்.
  2. அண்ணாதுரை தான் ஜின்னாவை சந்தித்தப் பிறகு, “இனம் இனத்தோடு சேரும்,” என்ற தத்துவத்தை பாகிஸ்தான் – திராவிடஸ்தான் பிரிவினைவாதத்திற்கு வைத்தார். ஈவேரா ஜின்னாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். ஆனால், ஜின்னா திராவிடர்களைத் தூக்கியெறிந்தார், ஈவேராவையும் சாடினார்[4].
  3. ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்றவர்களுக்கு, என்றுமே இந்துவிரோதத் தனம் சகஜமாக இருந்தது. அவர்களது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றில் தான் என்றுமே வன்மம், வார்த்தை குரூரம் என்றெல்லாம் இருந்தது.
  4. திராவிட-கம்யூனிஸ-இந்துவிரோத சித்தாந்திகளை, நிச்சயமாக, எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை ஆகிறது. ஏனெனில், செக்யூலரிஸ-பகுத்தறிவு போர்வையில், அவர்கள் இந்து விரோதிகளாக இருக்கின்றனர்.
  5. இப்பொழுது கூட “கரோனா வைரசை விட கொடியது” என்று 30-03-2020 அன்று திக-வீரமணி-விடுதலை செய்தி வெளியிட்டது.
  6. அதிலும் திருமண ஒப்பந்தம் போது, அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்ரவாதம், வெறுப்பு-காழ்ப்புகளுடம் பீரிட்டது.
  7. கல்யாணத்திற்கும், பார்ப்பன எதிர்ப்புக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றால், அது என்ன என்று பகுத்தறிவுவாதிகள் விளக்கவேண்டும்.
  8. நிஜாமுத்தீன் மர்கஸ் மாநாட்டிற்கும் துலுக்கர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை, என் கருத்தை எதிர்ப்பவர்கள் தான் மெய்ப்பிக்க வேண்டும்.
  9. எனக்கு அரசியல் ஆதரவு எதுவும் இல்லை, தவறு இருந்தால், எல்லா கட்சிகளையும் விமர்சித்து வருகிறேன். இந்துத்துவம், தவறு என்றாலும் சுட்டிக் காட்டுகிறேன்.
  10. ஆமாம், நகைச்சுவை, கிண்டல், நக்கல் முதலியவற்றுடன் தான் அவர்கள் உபயோகப் படுத்திய சொற்கள், சொற்றோடர்களை உபயோகப் படுத்தியுள்ளேன்

©  வேதபிரகாஷ்

01-04-2020

Tabliq flouted tourist visas, The Pioneer, 01-04-2020

[1] Of the confirmed cases, about 75% are from the southern city of Daegu and 73% of those have been linked to the Shincheonji Church. https://www.bbc.com/news/world-asia-51701039

[2] BBC News, Coronavirus: South Korea church leader apologises for virus spread, 2 March 2020

[3] விடுதலை, கரோனா வைரசை விட கொடியது பார்ப்பனீயம்பிரபாகரன்சந்திரலேகா மணவிழாவில் கழகப் பொதுச் செயலாளர் முழக்கம், மார்ச்.30, 2020, பக்கம்.3.   http://www.viduthalai.in/page1/197844.html

[4] K. V. Ramakrishna Rao, The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar, in “Proceeding volume of the Twenty first Annual session”, of South Indian History Congress-2001, School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai, January 2002,  pp.128-136.

https://velivada.com/2019/05/09/the-historic-meeting-of-ambedkar-jinnah-and-periyar/

https://archive.org/stream/TheHistoricMeetingOfAmbedkarJinnahAndPeriyar/The Historic Meeting of Ambedkar%2C Jinnah and Periyar_djvu.txt

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

ஏப்ரல் 10, 2016

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

இறைதூதர் கருணநிதி

எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்: மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொரி ஆறுமுகம், நாகை நாகராஜன் முதலியோர் பேசினர். தீப்பொரி ஆறுமுகம் 1960களில் பேசும் அலாதியே தனிதான். மெட்ராஸ் பாஷை, கெட்ட வார்த்தை முதலியவை சரளமாக வரும். நாகை நாகராஜன் பேசும் போது, முஸ்லிம் கட்சிகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கலைஞரிடம் கூட்டு சேர்ந்துள்ளன, என்று விவரிக்க ஆரம்பித்தார். ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன், “இந்தத் தேர்தலில் தான் சிறுபான்மை இனத்திலே மிகப்பெரிய இனமான இஸ்லாமிய இனத்தின் அத்தனை அமைப்புகளும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியைப் பார்த்துநீங்கள் தான் நபிகள் நாயகத்திற்குப் பிறகு எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்,” என்று பேசியுள்ளார்[1]. இந்த வீடியோவிலும் அப்பேச்சைக் கேட்கலாம்[2]. திமுகவிடம் கூட்டு வைத்துக் கொண்டு, கெஞ்சி-கூத்தாடி அதிகமான சீட்டுகளை வாங்கிக் கொண்டுள்ளன முஸ்லிம்களின் பிளவுபட்ட கட்சிகள். ஒருவேளை வெளியில் சண்டைப் போட்டுக் கொள்வது போன்று நாடகம் ஆடி, இவ்வாறு அரசியல் செய்கின்றனரா என்று “செக்யூலரிஸ்டுகளுக்கு” தோன்றுகிறது.

நாகை நாகராஜன், கருணாநிதி, முஸ்லிம் கட்சிகள் கூட்டுமனித நேயக்கட்சி அறிவித்த கண்டனம்: கடந்த மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது[3]. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார். மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம். எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று மனித நேயக்கட்சி தலைமையகம் அறிவித்தது[4].

கருணாநிதி இறைதூதர் - தமிழ்நாடு இமாம் கவுன்சில் எதிர்ப்பு - -7-04-2016எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு.![5]: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது.  இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது.  திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும். தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி, மாநில செய்தி தொடர்பாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு[6].

இறைதூதர் கருணாநிதி - நாகை நாகராஜன்- முஸ்லிம்கள் எதிர்ப்பு 07-04-2016போலீஸ் புகார் கொடுக்காமல் மிரட்டும் முஸ்லிம் கட்சிகள்: கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது நல்ல தமாஷாகத் தெரிகிறது. ஏனெனில், இப்படியெல்லாம் மிரட்டும் இவர்கள் போலீஸாரிடம் உரிய புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவ்வாறு புகார் கொடுத்திருக்கலாம். வழக்குப் பதிவு செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் இப்பிரச்சினை வரும் போது, விவரங்கள் அலசப்படும் போது, பேசியது உண்மையிலேயே இந்தி சட்டங்களின் பிரிவுகளை மீறியவையா, குற்றமாகுமா, எந்த தண்டனை கொடுக்கலாம் என்று வாத-விவாதங்கள் உண்டாகும். ஆனால், அவற்றைத் தடுக்கவே முஸ்லிம் கட்சிகள் இவ்வாறி மிரட்டி அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது. மேலும், இதை பிரச்சினையாக்கினால், முஸ்லிம் கட்சிகளின் ஒதுக்கீடு காலியாகி விடும், ஒரு சீட்டுக் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் அறிவிப்பு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டை முற்றுகை இடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது[7]. இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை தொடர்பு கொண்டு கேட்டபோது,   “சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் நாகராஜ் என்பவர், கருணாநிதியை இறைதூதர் என்று குறிப்பிட்டு பேசினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே இசுலாமியர்கள் இறைதூ தராக நினைக்கிறார்கள்.  ஆகவே நாகராஜை கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, இன்று (08-04-2016) மாலை நான்கு மணி அளவில் அவரது கோபாலபுர இல்லத்தை முற்றுகையிடப்போகிறோம்” என்றார்[8].

Fight among the mohammedan parties in Tamilnadu

முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்பு[9]: காலைமலர் என்ற இணைதளம், “முஹம்மது நபி அவர்களை திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் என்பவர் கலைஞருடன், இணைத்து இழிவு படுத்திய போது பொங்காத பேராசிரியர்! தன்னுடை மமக கட்சியை தீவிரவாத இயக்கம் என்று சொன்ன ஹைச்.ராஜாவை நோக்கி பொங்காத பேராசிரியர்! கலைஞரை ஜாதியை சொல்லி இழிவு படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வைகோவை நோக்கி மட்டும் டிவி சேனலில் பொங்க காரணம் என்ன? நாயவான்களே! நீங்களே சொல்லுங்கே! சீட்டு, பதவிக்காக தன்னையே மறந்து செயல்படும் ஜவாஹிருல்லாஹ்வின் செயல்பாடுகள் அவரின் மோசமான அரசியலை பிரதிபலிக்கின்றது. அரசியலுக்காக கலைஞரை இவர் மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டாரோ? என்று முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்படைந்து உள்ளனர்”, என்று சாடியுள்ளது[10]. இது ஜவாஹிருல்லாஹுக்கு எதிராக செயல்படும் முஸ்லிம் கூட்டம் போலிருக்கிறது.

Karus warning to Nagai Nagarajan for comparing Mohammed and himself 08-04-2016

தி.மு.. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: “சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை[11]. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்[12]. ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

10-04-2016

 

[1] http://www.seythigal.com/?p=9486; https://youtu.be/Rdj8_gblPD8

[2] https://www.facebook.com/1416474845231879/videos/1695088387370522/

[3] முக்கண்ணாமலைப்பட்டி அறிவிப்பு, இறைதூதர் தலைவர் கருணாநிதி, Muckanamalaipatti, 00:38, ஏப்ரல்.2016.

[4] http://muckanamalaipatti.blogspot.in/2016/04/blog-post_88.html

[5] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[6] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[7] பத்திரிக்கை.காம், இன்று மாலை கருணாநிதி வீடு முற்றுகை: இந்திய தேசிய லீக் அறிவிப்பு, Posted by : டி.வி.எஸ். சோமு, on Friday, April 8, 2016 @ 11:03 am.

[8] https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/

[9] காலைமலர்.நெட், கலைஞரை இறைதூதர் என்று சொன்னதை ஜவாஹிருல்லா ஏற்றுக்கொண்டாரா? By Mathiyalagau, Apr 7, 2016.

[10] http://kaalaimalar.net/kalingar-javahi-is-no-comment/

[11] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am

By : Sam Kumar.

[12] http://www.tamilnewsbbc.com/2016/04/07/532916.html

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4)

மார்ச் 22, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4)

மூன்றும் மூன்றும் ஆறு! முஸ்லீம் அரசியலின் தந்திரம்! முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுஇக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதாவது, எங்கும் அவர்கள் நாடகமாடியது போல எதிர்து போட்டியிடவில்லை. இதோ பட்டியல்:

வேட்பாளர் தொகுதி கட்சி கூட்டணி
ராமநாதபுரம் ஜவாஹிருல்லா மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தமீமுன் அன்சாரி
ஆம்பூர் அஸ்லாம் பாஷா
வானியம்பாடி அப்துல் பாசித் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் .தி.மு.க
சென்னை துறைமுகம் அல்டேப் உசேன்
நாகை முகமது ஷேக் தாவூத்

திமுக-அதிமுக; கருணாநிதி-ஜெயலிதா: ஆனால் முஸ்லீம்கள் ஒன்றுதான்: திமுகவினர் அதிமுகவினரைத் திட்டுவார்கள்; அதிமுகவினர் திமுகவினரைத் திட்டுவார்கள்; கருணாநிதி ஜெயலலிதாவை வசை பாடுவார்; ஜெயலலிதா கருணாநிதியை வசை பாடுவார்; ஆனால், முஸ்லீம்கள் எல்லோரையும் திட்டுவர்-வசை பாடுவர்! ஆஹா, இதுதான் ராஜ தந்திரம? இல்லை பெரியாரை வென்ற ஜின்னாத்தனமா? ஜின்னா எப்படி பெரியாரை ஏமாற்றினர் என்று முன்னமே எட்த்துக் காட்டப்பட்டது. இனி பார்ப்போம், மேடைகளில் இவர்கள் எவ்வாறு பேசப் போகிறார்கள் என்று!

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா போட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அந்தக் கட்சி நேற்று அறிவித்தது.”ராமநாதபுரம் தொகுதியில் ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ம.ம.க., துணை பொதுச்செயலர் தமீமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா போட்டியிடுவர்’ என, த.மு.மு.க., பொதுச்செயலர் ஹைதர் அலி அறிவித்தார். பின், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்[4].

1. ஜவாஹிருல்லா ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர். வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

2. தமீமுன் அன்சாரிசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.

3. அஸ்லாம் பாஷா ஆம்பூர்: ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்‌கள் அறிவிப்பு: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இன்று காலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் முஸ்லீம் போட்டியிடும் வானியம்பாடி தொகுதிக்கு அப்துல் பாசித், சென்னை துறைமுகம் தொகுதிக்கு திருப்பூர் அல்டேப் உசேன், நாகை தொகுதிக்கு முகமது ஷேக் தாவூத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[5].

4. அல்தாப் உசேன் துறைமுகம் தொகுதி: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடர்ன் சிட்டி தெருவில் வசிக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், துறைமுகம் தொகுதி முன்னாள் எம்.எல். ஏ.,வுமான திருப்பூர் மைதீனின் மகன்.60 வயது நிறைந்த அல்தாப் உசேன் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகள் தெரிந்தவர். டன்லப் நிறுவன முன்னாள் ஊழியர். தடா சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் தர்ணா செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியை நடத்திய இவர், கடந்த மார்ச் 10ல் தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார்.

5. அப்துல் பாசித் வாணியம்பாடி: வாணியம்பாடி வேட்பாளர் அப்துல் பாசித், வேலூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவை சேர்ந்தவர். வயது 48. டிப்ளமோ பட்டதாரியான இவர், தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். தோல் காலணி இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்கிறார். வாணியம்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ.,.
6. முகம்மது ஷேக் தாவூது நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வேட்பாளர், முகம்மது ஷேக் தாவூதுக்கு வயது 60. ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர் என அழைக்கப்படும் இவர், நாகூர் தெற்கு தெருவில் வசிக்கிறார். டிப்ளமா பட்டதாரி. நாகூர் கல்வி அறக்கட்டளை மற்றும் கவுதியா சங்க தலைவராக உள்ளார். நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளரான இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேச தெரிந்தவர்

வேதபிரகாஷ்

22-03-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3),

https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/

[3] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[4] தினமலர், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா போட்டி, மார்ச் 22, 2011

http://election.dinamalar.com/election_news_detail.php?id=891

[5] தினமலர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்‌கள் அறிவிப்பு, மார்ச் 18, 2011

http://election.dinamalar.com/election_news_detail.php?id=534

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

மார்ச் 11, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

 

தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களின் மீது எந்த எதிர்மறையான நோக்கம் இல்லையெனெனும், அரசியல் ரீதியாக முஸ்லீம் லீக் இந்தியாவில் செய்து வரும் அரசியலை விமர்சித்து அலசும் கட்டுரை இது.

 

திராவிட கட்சிகளும், முஸ்லீம் லிக்கும்: ஜின்னா பெரியாருக்கு என்றுமே அரசியல் ரீதியில் உதவியது கிடையாது. ஆனால், பெரியார் தாம் தேவையில்லாமல், ஜின்னாவிடம் போய் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜின்னாவே பெரியாருக்கு வெளிப்படையாக கடிதமும் எழுதி விட்டார். தான் முஸ்லீம்களுக்காகத்தான் போராட முடியுமே தவிர முஸ்லீம் அல்லாதவர்களுக்கு முடியாது என்று தெரிவித்தார்[1]. அதுபோல திகவிற்கு பிறகு திமுக முஸ்லீம் லிக்குடன் நெருக்கமாக இருந்தாலும், திமுக தான் முஸ்லீம்களுக்கு நண்பன் என்று காட்டிக் கொள்ள உபயோகப் பட்டதே தவிர, முஸ்லீம் லீக்கினால் திராவிட கட்சிகளுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது என்றதை அவர்கள் தாம் கூறிக்கொள்ள வேண்டும்.

 

முஸ்லீம் லீக்குகள் கட்சிகள் பிரிந்திருந்தாலும் சாதிக்கும் நிலை: முஸ்லீம்களுக்குள் இறையியல் ரீதியில், இனம், மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பலவித காரணிகளால் பற்பல வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் பிரச்சினை என்று வரும்போது, ஒன்றாக வேலை செய்து வருகின்றார்கள். இந்தியா இரண்டாவதற்கு காரணம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தான் என்று காட்டுவது சரித்திரம். என்னத்தான் இந்தியா செக்யூலரிஸத்தில் ஊறினாலும், பாகிஸ்தான் மதவாதத்தில் திளைத்தாலும், பாதிக்கப்பட்டுள்ளது இந்துக்கள்தாம் என்பது அந்தந்த நாட்டு சரித்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன[2]. இந்தியாவில் முஸ்லீம்கள் எல்லா உரிமைகளையும் பெற்று இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் இந்துக்கள் மிருகங்கள் போல் வேட்டையாடப் படுகிறார்கள்[3]. இந்நிலையில், முஸ்லீம் கட்சிகள் பிரிந்துள்ளது போல காட்டிக் கொண்டு, இரண்டு அணியிலும் பங்குகளைக் கேட்டு தமது அரசியல் பலத்தைப் பெருக்கவே வழிகண்டு வருகின்றனர். ஆனால், வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொள்கின்றன[4]. மொத்தத்தில் ஆறு இடங்களை முஸ்லீம் கட்சிகள் பெற்றுவிட்டன. வெற்றிபெற்றதும், அவர்கள் ஒன்றாகத்தான் வேலை செய்யப் போகிறார்கள்.

 

திராவிட கட்சி கூட்டணிகளில் முஸ்லீம் லீக்குகள்-கட்சிகள்: அதிமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிகள் உள்ளன. திமுகவிலும் உள்ளன. “அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்என தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தெரிவித்தார்…………..மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக வந்துள்ளது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்[5].  மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது[6]. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் வந்தார். இரவிபுதூர்கடையில் நிருபர்களிடம் கூறியதாவது: “மனிதநேய மக்கள் கட்சி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த பார்லி., தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம். 1991க்கு பிறகு சிறுபான்மை கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்படுவது இது தான் முதல் முறை ஆகும்[7]. இருப்பினும், திமுகவில் உள்ள முஸ்லீம் கட்சிகள் வேறுவிதமாக பேசுகின்றன.

 

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[8]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார்.

 

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சசதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

 

முஸ்லிம் லீக் கட்சிகளின் இணைப்பு (10-03-2011): இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புடன், திருப்பூர் அல்டாப் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் இணைப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது. இது குறித்து காதர் மொய்தீன், அல்டாப் ஆகியோர் கூறியதாவது: “முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காகவும், அரசியல் களத்தில் ஒருங்கிணைந்த சக்தியாக தி.மு.க., கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்”, என்றனர்[10]. 2002ல் நடந்த ஒரு நிகழிச்சி இங்கு நினைவிற்கு வருகின்றது.

 

அதிமுகவுடன் தங்கள் கட்சி வைத்திருந்த உறவு முறிந்து விட்டதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர்சுலைமான் சேட் கூறினார் (05-05-2002). சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது[11]: வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீப் மறைவு காரணமாகவே தற்போதுஅத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்தத் தொகுதியை இந்திய தேசிய லீக்கிற்கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தேன். இதுபற்றிப் பரிசீலனை செய்வதாக அப்போது அவர் உறுதியளித்தார். ஆனால் பாரம்பரியமாகவே முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் முஸ்லீம்கள் அல்லாத ஒருவரைஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்துள்ளார். எங்களுடைய எந்த ஆலோசனையையும் கேட்காமலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதால், அதிமுகவுடனானஎங்கள் உறவை நாங்கள் துண்டித்து விட்டோம். முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறிய ஜெயலலிதா, தற்போது அந்தக் கட்சியுடன் உறவுவைத்துக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருப்பதும் எங்களுக்குப் பெரும் வேதனையை அளித்துள்ளது. வாணியம்பாடியில் எங்கள் கட்சி போட்டியிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன் என்றார்.

 

அரசியல் கட்சிகளிம் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசாட்ர்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

11-03-2011


[1] கே. வி. ராமகிருஷ்ண ராவ், ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் (3), ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதம், பம்பாய், ஆகஸ்டு 17, 1944, http://www.thinnai.com/?module=displaystory&story_id=209011514&format=print&edition_id=20090115

[2] இந்துக்களை ஒழித்துக் கட்டியதன் மூலம் பாகிஸ்தான் சிறுபான்மையினயை பிரச்சினையை அரவே ஒழித்துவிட்டடு போலும்!

[3] இதைப் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரைகளில் இணைதளத்தில் பார்க்கலாம்.

[5] தினமலர், 234 தொகுதிகளிலும் அதிமுக.,கூட்டணி பெறும் : தமுமுக பொது செயலாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=195519

[6] அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட், http://pfikaraikal.wordpress.com/2011/02/22/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/

[7] தினமலர், மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/news_Detail.asp?Id=195461

[8] தினமணி, எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக், First Published : 09 Mar 2011 03:53:36 PM IST http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=388118&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

[10] தினமலர்,  முஸ்லிம் லீக் அமைப்புகள் இணைப்பு,  மார்ச் 11, 2011,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203425

 

சங்கராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

ஜூலை 14, 2010

சங்சராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

சங்கராச்சாரி பிறந்தநாள் விழாவில் மதுரை ஆதீனம் ஏதோ கூறிவிட்டார் என்றதும், ஆதினத்தையே முற்றுகையிடுவோம் என்று ஔரங்கசீப், மாலிக்காஃபூர் மாதிரி மிரட்டினர். தமிழ்நாட்டிலும் இப்படி “நக்கீரன்” வடநாட்டு ஊடகங்களைப்போல “ஸ்டிங் ஆபரெஸன்” செய்திருக்கிறர்கள் போல. பாவம், இந்த சாமியார்களுக்கு இதெல்லாம் என்ன தெரியப்போகிறது?

கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்குக் கொள்ளை ஆசை!

அதுவும் குல்லா போட்டு கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஆசையோ ஆசை!!

முன்பெல்லாம் “குல்லா போட்ட கருணாநிதி”யின் போட்டோக்கள் நூற்றுக்கணக்கான இருந்தன. ஆனால், திடீரென்று அவையெல்லாம் மறைந்துவிட்டன!

அப்படி கஞ்சிக் குடித்துக் கொண்டே இந்துக்களை வசைப்பாட, அவதூறு பேச, தூஷிக்க, தூஷணம்…………… செய்யவேண்டும் என்றால் பேராசை!!!

இப்பொழுதுதான், கனிமொழியை, அன்பழகனை அனுப்பி வைக்கிறார் போலும்.

அவர்களும் தங்களது அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள்.

கனிமொழி, பொட்டில்லாமல், பூவில்லாமல், (நாத்திகர் என்பதால் தாலி இருக்கிறாதா என்று தெரியவில்லை), கருப்பு ஜாக்கெட்-புடவை சகிதம் சென்று கஞ்சி குடித்தூள்ளார். இது ஆத்திகத்தின் அமங்கலமா, நாத்திகத்தின் புரட்சியா என்று பெண்ணினம் தான் சொல்லவேண்டும் [ஆமாம், இத்தகைய பகுத்தரிவு புரட்சியாளர்கள் திருமணத்தின்போது ஏன் கருப்பு உடைகளை அணிவதில்லை என்று பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்]

அன்பழனுக்கோ சொல்லவே வேண்டாம், சிறப்பான உபச்சாரம், மரியாதை, சலுகைகள் எல்லாம்!

எஸ்ரா சற்குணம் பாதிரியார் கேட்கவே வேண்டாம், “உங்களுக்காகத்தான் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்தேன் “, என்று ஒரு குல்லாவை மாட்டிவிட்டார். அன்பழகன் குல்லாவில் அழகாகவே இருந்தார். ஆனால், பத்திரிக்கைக் காரர்கள் புகைப்படம் எடுக்கும் போது குல்லாவை எடுத்து கஞ்சிக் குடிப்பது போன்று போஸ் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது!

(தொடரும்).

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.