Archive for the ‘இறைத்தூதர்’ category

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

புனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்?

ஜூலை 6, 2016

புனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்?

Ramadan jihad terror ISIS

புனிதமாதத்தில் இத்தகைய குரூரக் கொலைகள் ஏன்?: புனித மாதம் ரம்ஜான் வரும்போதே, அம்மாதத்தில் காபிர்களைக் கொன்றால் நல்லது என்ற பிரச்சாரம் ஜிஹாதிகளால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது[1]. ஐசிஸ் பிரச்சாரகன், “அல்லாவின் ஆணையால், இம்மாதம் காபிர்களுக்கு மிக்கவும் வலியுள்ள மாதமாக்குங்கள்”, என்றான். அதுதான் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு குரூரமாக அறுத்துக் கொலைசெய்கிறார்களே? இவர்களுக்கு மனிதத்தன்மையே இல்லை என்ற அளவுக்குத்தானே மற்றவர்கள் இன்று புரிந்து கொண்டு விட்டனர். இன்னொரு தீவிரவாதி அதை விளக்கி, விஷத்தைச் சேர்த்து, ஒரு குறும்புத்தகத்தைத் தயாரித்து விநியோகித்தான், “ரமதான் முடியப்போகிறது, மறந்து விடாதீர்கள், இது வெற்றி-மாதமாகும்”, என்று போதையோடு கூறினான்[2]. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் போன்றவற்றின் ஊடகங்களளே, அந்த உண்மையினை மறைக்கவில்லை[3]. அல்லாவின் பெயரால் தான் இக்கொலைகள், குண்டுவெடிப்புகள் நடக்கின்றன[4]. இதுவரை ரம்ஜான் மாதத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[5]. இராக் மற்றும் சிரியாவில் 400க்கும் மேற்பட்டவர்களை சிரமறுத்து, சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது[6].

Ramadan jihad terror ISIS.illustrationநடந்துள்ள கொலைகளும், ஒப்புக்கொண்டுள்ள நிலையும்: ஐசிஸ், ஐசில் எது ஒப்புக்கொண்டாலும், உண்மையில் இவை நடந்துள்ளன. அதுபோலவே,

  1. ஓர்லான்டோ – 49 பேர் கொல்லப்பட்டனர்.
  2. ஒரு தற்கொலை குண்டுவெடிப்பில் ஜோர்டனில் ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  3. அதே நாளில், அல் முகல்லா, யேமன், லெபனாலில் உள்ள ஒர்யு கிருத்துவ கிராமம் முதலிய இடங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
  4. இஸ்தான்புல் – அடுத்தநாளில், இஸ்தான்புல், அதத்ருக் விமானநிலையம் தாக்கப்பட்டது – குறைந்தபட்சம் 41 பேர் கொல்லப்பட்டனர்.
  5. ஆப்கானிஸ்தான்
  6. டாக்கா 01-07-2016 வெள்ளியன்று தூதரகங்கள் இருக்கும் பகுதியில், ஒரு ரெஸ்டாரென்ட் தாக்கப்பட்டு, 22 அயல்நாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
  7. பாக்தாத் – 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாக்தாத் குண்டுவெடிப்பில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம்கள் இருந்தாலும், அங்கிருந்த ஒரு கடைக்காரன், “ரம்ஜான் முடிந்து, எங்களுடைய நோன்பு முடித்துக் கொள்ளப் போகின்ற நிலையில் சந்தோஷப்படுகிறோம், இருப்பினும், அது ரத்தத்துடன் பூசப்பட்டுள்ளது”, என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான்[7]. ஆனால், அவனும் உடைந்த கண்ணாடி துகள்கள் பறந்து வந்து விழும்போது, பாதிக்கப்பட்டான்[8].

the Battle of Badr- 313 vs 1000

ரம்ஜான் மாதத்தில் ஜிஹாதி குரூரங்கள் அதிகமாக இருப்பதேன்?: ஜிஹாதி பிரச்சாரகர்கள் பத்ர் யுத்தத்தை [the Battle of Badr] ரம்தான் மாத வெற்றிப் போரை, மற்ற இக்கால ஜிஹாத் போராட்டங்களுடன் ஒப்பிட்டு, தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகின்றனர்[9]. முகமது நபி மெக்காவில் எப்படி தனது எதிரிகளை ரமதான் மாதத்தில் வெற்றிக் கொண்டாரோ, அதேபோல, இம்மாதத்தில் ஜிஹாதில் இறங்கினால் வெற்றி கிடைக்கும் என்று மதவெறியை ஏற்றி வருகின்றனர்[10]. குறிப்பாக 313 சேனையை வைத்டுக் கொண்டு 1000 பேர் சேனையை வென்றது, இன்று குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டுவெடிப்புகள், அதிநவீன துகபாக்கிகள் மூலம் பலரை சுட்டுக் கொல்வது என்று நிறைவேற்றப்பட்டு வருகிறது[11]. தீவிரவாத-பயங்கரவாத கூட்டத்தின் பெயர் மாறினாலும், இந்த ஜிஹாதி கொள்கை ஒன்றாகவே-இதுவாகவே இருக்கிறது. இந்த மோமின்-காபிர், தாருல் இஸ்லாம், தாருல் ஹராப், முதலிய சித்தாந்தங்களே, இந்த ஜிஹாதிக்கு ஊக்குவிப்பதாக இருக்கிறது[12]. ஐசிஸ், ஐ.எஸ், ஐசில், அல்-குவைதா, தலிபான் போன்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கங்கள் இவ்வாறூ தான் வெறியோடு செயல்பட்டு வருகின்றன. இதனால், ஜிஹாத்-போதையில், தீவிரவாதிகள் எப்படியாவது காபிர்களைக் கொல்லவேண்டும் என்றா வெறியில் அலைய ஆரம்பித்து விடுகிறார்கள். ஓர்லான்டோ கொலைகாரன் இவ்வீரர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டான்[13]. இந்த ரமதான் காலத்தில் நடந்துள்ள தீவிரவாத-பயங்கரவாத கொலைகளை “நியூயார்க் டைம்ஸ்” பட்டியல் இட்டுள்ளது[14].

தேதி, இடம் குண்டுவெடிப்பில் கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை முதலியன
ஜூலை.4, 2016 சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதுவரள் மற்ரு ஷியாக்களை குறிவைத்து நடத்தியகுண்டுவெடிப்புகளில் ஐந்து பேர் சாவு.
JULY 1, 2016
Bangladesh
Gunmen detonated explosives and took a number of people hostage at a restaurant in Dhaka. MORE »
JUNE 30, 2016
Egypt
A gunman fatally shot a Christian minister in El Arish, the main town in northern Sinai. MORE »
JUNE 29, 2016
Turkey
At least 44 people were killed and 238 people wounded in suicide bombings at Istanbul’s main international aiport. Turkey blamed the Islamic State for the attack. MORE »
JUNE 13, 2016
France
A police captain was fatally stabbed and his companion was also killed at their home in a small town northwest of Paris. MORE »
JUNE 12, 2016
Florida
A man who called 911 to proclaim allegiance to the Islamic State terrorist group, and who had been investigated in the past for possible terrorist ties, stormed a gay nightclub wielding an assault rifle and a pistol and carried outthe worst mass shooting in United States historyMORE »
JUNE 7, 2016
Bangladesh
A Hindu priest was attacked while riding a bicycle in a rural area not far from his home and hacked to deathMORE »
JUNE 5, 2016
Bangladesh
A Christian man was hacked to death in his grocery store. MORE »

PAKISTAN-RELIGION-ISLAM-RAMADAN

A Pakistani policeman stands guard as Muslims as faithfull perform a special evening prayer “Taraweeh” on the first day of the Muslim fasting month of Ramadan on a street of Karachi on July 10, 2013. Islam’s holy month of Ramadan is celebrated by Muslims worldwide marked by fasting, abstaining from foods, sex and smoking from dawn to dusk for soul cleansing and strengthening the spiritual bond between them and the Almighty. AFP PHOTO / ASIF HASSAN

முஸ்லிம்கள் வாதிடும் முறை: உலக நாடுகளில், ஜிஹாதிகளால் ஏகப்ப்ப்பட்ட பாதிப்புகளை அடைவதால், அவர்கள் இஸ்லாத்துக்கும் தீவிரவாதம்-பயங்கரவாத செயல்களுக்கும் உள்ள சம்பந்தத்தை, இணைப்புகளை, ஊக்குவிப்புகளை தெள்லத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்கள். இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறெல்லாம் வாதிட்டு வருகின்றனர்:

  1. இஸ்லாம் என்றால் அமைதி, இவர்கள் அமைதியைக் குலைக்கிறார்கள்;
  2. இந்த தீவிரவாதிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை,
  3. தீவிரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை.
  4. அவர்கள் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்,
  5. அவர்கள் பெயரளவில் தான் முஸ்லிம்கள், முஸ்லிம்கள் போன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள்,
  6. இன்னும் ஒருபடி போய் அவர்கள் முஸ்லிம்களே இல்லை.

ஷேக் அஸினா, “என்ன முஸ்லிம்கள் நீங்கள்? ரம்ஜான் மாதத்தில் இப்படி கொலை செய்கின்றீர்களே?”, என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார்[15]. அதாவது அவருக்கும் அந்த உண்மை தெரிந்துள்ளது. இனி முஸ்லிம்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை!

© வேதபிரகாஷ்

06-07-2016

saudi_bomb blast in Medina 04-07-2016

[1] The New York Times, ISIS Uses Ramadan as Calling for New Terrorist Attacks, By Ben Hubbard, JULY 3, 2016.

[2] http://www.nytimes.com/2016/07/04/world/middleeast/ramadan-isis-baghdad-attacks.html?_r=0

[3] The Nation, ISIS using Ramzan to call for new terror attacks, July 04, 2016, 1:31 am

[4] http://nation.com.pk/international/04-Jul-2016/isis-using-ramzan-to-call-for-new-terror-attacks

[5] The News-18, Over 800 Killed by ISIS During the Holy Month of Ramzan, D. P. Dash, First published: July 5, 2016, 2:10 PM IST | Updated: 18 hours ago.

[6] http://www.news18.com/news/world/over-800-killed-by-isis-during-the-holy-month-of-ramzan-1265979.html?utm_source=fp_top_internal

[7] http://www.firstpost.com/world/ramzan-a-time-for-terror-jihadists-interpret-religion-in-a-way-most-muslims-deplore-2874146.html

[8] Firstpost, Is Ramzan a time for terror? Most deplorably to Muslims, that’s what jihadis think, FP Staff  Jul 5, 2016 14:56 IST

[9] A large share of the victims have been Muslims, belying the Islamic State’s claim to be the defender of their faith. “We were happy and preparing to break the last day of the fasting month very soon and to celebrate Eid, but our feelings have been stained with blood,” said Hadi al-Jumaili, a shopkeeper who was hit with flying glass in the attack in Baghdad.

[10] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer

[11] Frontpage.magazine, Ramadan: month of jihad – As Muslims struggle to increase their devotion to Allah, expect more mass murder, Robert Spencer June 7, 2016

[12] http://www.frontpagemag.com/fpm/263111/ramadan-month-jihad-robert-spencer

[13] http://www.nytimes.com/2016/06/19/us/omar-mateen-gunman-orlando-shooting.html

[14] http://www.nytimes.com/interactive/2016/03/25/world/map-isis-attacks-around-the-world.html

[15] http://indiatoday.intoday.in/story/dhaka-attack-restaurant-isis-sheikh-hasina/1/706051.html

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

ஏப்ரல் 20, 2016

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

16-04-2016 னிக்ஹ்ட் Taking-the-opposition-coalition-dmk-protest-in-vaniyambadiதிமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை?: உளுந்துார்பேட்டையை போல வாணியம்பாடி தொகுதியை, அண்ணா அறிவாலயத்தில், ‘சரண்டர்’ செய்து விடு’ என, முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு, தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது[1] என்ற செய்தி வியப்பாக உள்ளது. என்ன மீலாது நபி விழாக்களில் கலந்து கொண்டு, ரம்ஜான் நோன்பு விழாக்களில் நன்றாக சாப்பிட்டு முஸ்லிம்களை புகழ்ந்த திராவிடர்களா, முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. வேலுார் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், 10ல் தி.மு.க., போட்டியிடுகிறது; மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியும், வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகிறது[2]. வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், முகமது பாரூக் போட்டியிடுகிறார்.

Fight among the mohammedan parties in Tamilnaduஉளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடம் ஒப்படைத்தது ஏன்?: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ம.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்தது[3]. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.  இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்[4]. ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா வெள்ளி மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்பு உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக வசம் அளித்ததாகத் தெரிவித்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ள நிலையில் ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் நிலவரம்:

  1. ராமநாதபுரம்: ஜவாகிருல்லா.
  2. தொண்டாமுத்தூர்: எம்.ஏ.சையது முகமது.
  3. நாகப்பட்டிணம்: ஏ.எம்.ஜபருல்லா.
  4. ஆம்பூர்: வி.எம்.நஜீர் அகமது.

தொகுதி உடன்பாடு பிரச்சனையில் திமுக கூட்டணியிலிருந்து எஸ் .டி.பி.ஐ.கட்சி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது[5]. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை.

கருணாநிதி முஸ்லிம்களுடன். எஸ்.டி.பி.ஐவாணியம்பாடி திமுகவுக்கே: கடந்த, 37 ஆண்டுகளாக, கூட்டணி கட்சிகளுக்கே, வாணியம்பாடி ஒதுக்கப்பட்டு வந்துள்ளதால், இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். தொகுதி முழுவதும், சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தொகுதி கைமாறியதால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர்[6]. நேற்று முன்தினம் இரவு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வினர், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க., போட்டியிட வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[7]. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, உளுந்துார்பேட்டை தொகுதியை, தி.மு.க.,விடம் சரண்டர் செய்தது[8]. அதேபோல், வாணியம்பாடி தொகுதியையும் சரண்டர் செய்ய வேண்டும் என, முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது பாரூக்கை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக, 16-04-2016 அன்று தகவல் பரவியது[9].

SDPI, MMK, IUML all in DMK 2016முஸ்லிக் லீக் நிர்வாகி திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை பற்ரி கூறுவது: இது குறித்து, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இதன் பின்னணியில், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் தேவராஜ் உள்ளார். அவரது மைத்துனர் அசோகன், ஆலங்காயம் ஒன்றிய செயலராக இருக்கிறார். அவரது துாண்டுதலில் தான், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆம்பூரிலும் எதிர்ப்பு: ஆம்பூர் தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் நடத்திய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பின், நகர தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ‘ஆம்பூர் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்’ என, கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்[10].

IUML splinter groupsதங்களது மக்கட்தொகைக்கு அதிகமாக முஸ்லிம்கள் சீட்டுகள் பெறுவது: தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15 சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர “தேர்தெடுக்கும் முறையில்” ஒரு எம்.பி பதவியையும் சேர்த்து பேரத்தில் பேசி வருகிறார்கள். தவிர அரசு ஒதுக்கீடு இடங்கள், கடைகள், குத்தகைகள் முதலியவற்றி;உம் முஸ்லிம்கள் கணிசமான இடங்களைப் பெறுகிறார்கள், கோடிகளை அள்ளுகிறார்கள். இதெல்லாம், மற்ற திராவிட அரசியல்வாதிகளை பாதிக்கின்றன. 30-50 ஆண்டுகள் என்று உழைத்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று வந்தவர்கள் சீட் பெற்று பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. திராவிடக் கட்சித் தலைவர்கள் அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகின்றனரே தவிர மற்றவர்களுக்கு, தொண்டர்களுக்கு எந்த லாபமுன் இல்லை.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்தமிழகத்தில் முஸ்லிம் அரசியல் நிலை என்ன?: 1948 முதல் 1972 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்), திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஆதாரங்கள் பெற்றன. 1970-80களில் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்றது, இலங்கை (மலேசியா, சிங்கப்பூர் முதலியவற்றைச் சேர்த்து) வியாபார இணைப்புகள், தங்கம், போதை மருந்து கடத்தல் போன்றவற்றில் கோடிகளை அள்ளினர். இதற்காகத்தான் அவர்களது அரசியல் உறவுகள் உதவின. பணம் அதிகமாக வரவர, மசூதிகள், டிரஸ்டுகள், நிறுவனங்கள் அதிகமாகின. அதற்கேற்றப்படி, முக்கியஸ்தர்கள் அரசியல் ஆதாயம் பெற விரும்பினர். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 1987ல் ஷாபானு வழக்கு உதவியது. இதை வைத்துக் கொண்டு, ஐ.யூ.எம்.எல் அடக்கி வாசிக்கிறது, இந்துத்த்வத்திற்கு துணை போகிறது என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தன. 1992ல் ராமஜென்பபூமி விவகாரம் அவர்களுக்கு பெரிதும் உதவியது. இதனால், 1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தனர். 1997ல் கோயம்புத்தூரில் கான்ஸ்டெபில் செல்வராஜ் முஸ்லிம்களால் கொலை செய்யப் படுகிறார். பிப்ரவரி 14, 1998ல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. அதில் 58 பேர் கொல்லப்படுகின்றனர், 200ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைகின்றனர். 2009ல் மனிதநேயக் கட்சி தோன்றியது. இப்படியாக முஸ்லிம் கட்சிகள் தீவிரவாத அரசியலில் இறங்கின.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

முஸ்லிம் கட்சிகளினால் தமிழகத்திற்கு கிடைத்த பலன் என்ன?: ஒவ்வொரு திராவிட கட்சி அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ, தான் பதவியில் இருந்த காலத்தில், தான் மக்களுக்காக இதை செய்தேன் – அதை செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் பதவிக்கு வந்தால், தமிழக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இதுவரை யாரும் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கட்சி வேட்பாளராக நின்று வெற்ற்ப்பெற்றப் பிறகும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்து, தங்களது நலன்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர மற்ற மக்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கும்பகோணம் போன்ற தொகுதிகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும், அங்குள்ள கோவில்களை, கோவில் சொத்துகளை பாதிக்கும் வகையில் தான் நடந்து கொள்கின்றனர். கோடிக்கணக்கில் வருகின்ற பக்தர்கள் மூலம், வியாபாரங்களில் லாபங்களை அள்ளுகின்றனரே தவிர, பதிலுக்கு அவர்கள் எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை. பிறகு அரசியல் மற்றும் அரசியல் இல்லாத நிலைகளில் அவர்களினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனும் போது, விகிதாசாரத்திற்கு அதிகமாக அவர்களாஇத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதனால் என்ன பலன்?

© வேதபிரகாஷ்

20-04-2016

[1] தினமலர், தொகுதியை சரண்டர் செய்‘: முஸ்லிம் லீக்கிற்கு தி.மு.., மிரட்டல், ஏப்ரல்,18,,220016.011:22..

[2] மாலைமலர், கூட்டணிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: வாணியம்பாடியில் தி.மு..வினர் போராட்டம், பதிவு: ஏப்ரல் 17, 2016 16:37, மாற்றம்: ஏப்ரல் 17, 2016 16:40.

[3] இன்னேரம்.காம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு தொகுதி திமுகவிடம் ஒப்படைப்பு!, சனிக்கிழமை, 16 April 2016 00:44.

[4]http://www.dinamani.com/tamilnadu/2016/04/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/article3382392.ece

[5] http://www.inneram.com/news/tamilnadu/8641-mmk-one-seat-submitted-to-dmk.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1503913

[7] தினமணி, உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு, By  சென்னை, First Published : 16 April 2016 12:47 AM IST

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மமக அறிவிப்பை தொடர்ந்து .பேட்டையில் திமுக போட்டி..ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக அறிவிப்பு, By: Karthikeyan, Updated: Friday, April 15, 2016, 20:32 [IST].

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-contest-ulundurpet-constituency-251346.html

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/17163725/1005449/cni-47.vpf

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், ஷரீயத் மரண தண்டனைகளும், பகுத்தறிவுகள் மாட்டிக் கொண்ட விதமும்!

ஏப்ரல் 10, 2016

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், ஷரீயத் மரண தண்டனைகளும், பகுத்தறிவுகள் மாட்டிக் கொண்ட விதமும்!

நாகை நாகராஜன் திகவுக்கு டொனேசன் கொடுத்தது 2013

கருணாநிதி நாகராஜனை தெரியாது என்று ஏன் சொல்ல வேண்டும்?: கருணாநிதி, “தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”, என்றது[1] வேடிக்கையாக இருக்கிறது. ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன் அவர்கள், ரூ.25 ஆயிரத்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  அவர்களிடம் வழங்கினார் (நாகை, 18.11.2013) என்று “விடுதலையில்” காணப்படுகிறது[2].  தி.மு.க., தலைமை பேச்சாளர் நாகை நாகராஜன், என்று தினமலரிலும் குறிப்பு காணப்படுகிறது[3]. எனவே கலைஞர், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், எல்லாம் தெரிந்தவர் பிரச்சினையில் சிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வாறு கழட்டி விட பார்க்கிறார் என்று தெரிகிறது.

கருணாநிதி முஸ்லிம்களுடன். எஸ்.டி.பி.ஐ

சகிப்புத் தன்மை, பேச்சுரிமைபற்றி யாரும் குரல் எழுப்பவில்லையே?: இப்பொழுது சகிப்புத் தன்மை, பேச்சுரிமை… என்றெல்லாம் ஏன் பேச மறுக்கிறார்கள்? இணைதளங்களில் முஸ்லிம்கள் இந்து மதம், இந்துக்கள், இந்துமத நூல்கள், பழக்க-வழக்கங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் கேலி, கிண்டல், ஏன் தூஷித்தும் வருகின்றனர். அவற்றை முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பதில்லையே, கண்டிக்கவில்லையே, தட்டிக் கேட்கவில்லையே? பிறகு அதே மாதிரி திக-திமுக கட்சிக்காரர் இப்படி கூறிவிட்டார் என்று ஏன் கொதிக்க வேண்டும்? பிறகு அத்தகைக் கட்சிகளுடன் ஏன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும். காபிர்களுடன் எந்தவிதமான நெருக்கமும், நட்பும், கூட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் நூல்கள் தாராளமாகவே கூறுகின்றனவே? ஆனால், அவற்றை எதிர்த்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் கூட்டு வைத்துக் கொள்ளலாம்?

கலைஞருக்கு சவால் ரிசானா விவகாரம்திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி..கட்சி விலகியது ஏன்? (08-04-2016): சென்னை (08-04-16): திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தெஹல்கான் பாகவி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை. 12 தொகுதிகளுக்கான பட்டியலை திமுகவிடம் அளித்திருந்தோம், எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக தரப்பில் தராததால் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.” என்றார். மேலும் “இன்று (08-04-2016, வெள்ளிக்கிழமை) செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்று கலந்து ஆலோசிக்கப்படும். அதற்குப் பிறகு எங்களின் நிலைப்பட்டை அறிவிப்போம்” என்றார்[4] . இக்கட்சி இருக்கும் முஸ்லிம் கட்சிகளில் தீவிரவாதமான கட்சி என்றுள்ள நிலையில், உண்மையில் எதற்காக விலகியது என்று தெரியவில்லை. தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறாற்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்ரூ அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15% சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை. “இறைதூதர் கருணாநிதி” உருத்தியிருக்குமோ என்னமோ, அல்லாவுக்குத்தான் தெரியும்.

திலகவதியை வசைபாடிய முஸ்லிம் இயக்கங்கள்கௌரவகொலை, திலகவதி ஐ.பி.எஸ் விமர்சனம், முஸ்லிம்களின் ஆர்பாட்டம் (ஜூன். 2009)[5]: சென்னை புளியந்தோப்பில் சலீம் என்ற ஆட்டோ டிரைவர் தனது மகள் காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து மகளையோ கொலை செய்தபோது, நக்கீரன் வார இதழுக்கு பேட்டியளித்த திலகவதி ஐ.பி.எஸ் அவர்கள் கௌரவக் கொலைகள் அதிகமாக அரபு நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மத்திற்கு இந்தச் சம்பவம் புதிதல்ல என்று பேட்டியளித்தார். அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் அளவுக்கதிகமாக நடைபெற்று வருவதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியன் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் செய்தி புதிதானதல்ல என்று கூறினார். திலகவதியின் இந்தப் பேட்டி, அரபு நாடுகளில் கவுரவக் கொலைகள் அங்கீகரிக்க ப்பட்டுள்ளதாகவும், அது இஸ்லாமிய மதத்திற்கு ஏற்புடையது போலவும் சலீம் இஸ்லாமியர் என்பதால் இந்தச் சம்பவம் அதாவது இஸ்லாமிய மதம் இத்தகைய காட்டுமிராண்டித்தனச் செயலை அங்கீகரிப்பது போலவும், இஸ்லாமிய மக்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் இஸ்லாமியர்கள் இவைகளை பின்பற்றுகிறார்கள் என்ற கருத்தை உண்டாக்கியுள்ளது. திலகவதியின் இந்த பேட்டி பிறசமய மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த கருத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற முஸ்லிம் அமைப்புகள் திலவதியின் இந்த பேட்டியை கண்டித்தும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 2009ல் நடத்தின.

2010ல் நக்கீரனை வசை பாடியது முஸ்லிம்கள்நித்தியானந்தா விசயத்தில் கூட நக்கீரன் கோபால் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது (மார்ச்.2010)[6]: 2010ல் முஸ்லிம்கள் நக்கீரன் கோபாலை மிகக்கேவலமாக, மோசமாக வசைப்பாடின மூஸ்லிம் அமைப்புகள்[7]. இஸ்லாமிய சகோதரர்களுக்கு…..போலிச்சாமியார் நித்யானந்தாவின் உண்மை முகத்தை உலகறியச்செய்வதற்காக தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது நக்கீரன். அந்த வகையில், நபிகள் நாயகம் உள்ளிட்ட பெருந்தகைகளின் பெயரை களங்கப் படுத்திய நித்யானந்தாவின் போலித் தனத்தை வெளிப்படுத்தவே…  நித்யானந்தா தன் ஆசிரமவாசிகளிடம் கூறிய சில கருத்துக்களை வெளியிட்டிருந்தோம். மற்றபடி, இஸ்லாமிய சகோதரர்களின் மனதை புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல.   குறிப்பிட்ட செய்தியின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர்[8].

மரண தண்டனையை எதிர்த்த முஸ்லிம்கள் 2013

ரிசானா மரண தண்டனை சர்ச்சையும், கருணநிதியும் (2013): ரிசானா நபீக் என்ற இளம்பெண் ஶ்ரீலங்காவிலிருந்து சவுதிக்கு வேலை செய்ய 2005ல் சென்றாள். ஆனால், வேலை செய்யும் இடத்தில் ஒரு குழந்தையைக் கொன்றாள் என்று 2007ல் மரண தண்டனை ஷரீயத் சட்டத்தின் படி விதிக்கப்பட்டது, 09-01-2013 அன்று தண்டனை நிறைவேறியது. அப்பொழுது கருணாநிதி முரசொலியில் மரண தண்டனை கூடாது என்று எழுதினார். “மரண தண்டனை என்ற ஒரு கொடுமை ஒழிக்கப்பட்டிருந்தால் ரிசானா குரூரமாகக் கொல்லப்பட்டிருக்க மாட்டாள் அல்லவா? இதற்கு எப்போது விடியல்? உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி இதுபோன்ற கொடுமைகள் இனியும் நேராமல் இருக்க, மானுடம் காத்திடும் மனித நேய உணர்வோடு, மனித நாகரிக மாண்பினை வெளிப்படுத்தும் வகையில், முடிவெடுத்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வர மாட்டார்களா?,” என்று தனது கருத்தைத் தெரிவித்தார். அப்பொழுதும், கருணாநிதி இஸ்லாமிய சட்டத்தை எதிர்க்கிறார், அதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எச்சரித்து கண்டம் தெரிவித்தன. பிறகு, கருணநிதி மழுப்பலாக பதில் அளித்ததால் விசயம் மறக்கப்பட்டது. சரீயத்தின் படி “மரண தண்டனை” புண்ணியமானது, ஆனால், இந்திய சட்டதிட்டங்களின் படி அது கொடுமையானது, மனிதத்தன்மையற்றது என்றெல்லாம் வாதிப்பது முரண்பாடாக அவர்கள் கருதுவதில்லை. ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எப்படி கொலையாளிகள் விடுவிக்கப்பட்டனரோ அதேபோல, இஸ்லாம்ய தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கேட்டு வருவதும் விசித்திரமானதே[9].

கலைஞருக்கு சவால் ரிசானா விவகாரம்- பீஜே கடிதம்முஸ்லிம்கள் விசயங்களை ஏன் மதவாதமாக்கி வருகிறார்கள்?: திக-திமுகவில் சிலர் சில நேரங்களில் செக்யூலரிஸத்துடன் செயல்பட நினைக்கும் போது, செயல்படும் போது இவ்வாறு தடுக்கப்படுகின்றனர் என்றும் தெரிகிறது. அதாவது கருணாநிதி போன்றோரே முஸ்லிம்களைக் கண்டு பயப்படுகின்றனர் அல்லது அவ்வாறு பயமுருத்தி வைத்துள்ளன என்று தெரிகிறது. இதனால், ஆனானப்பட்ட கருணாநிதியின் பகுத்தறிவே அடிப்படைவாத முஸ்லிம்களிடம் மண்டியிட வேண்டியதாகிறது. ஆனால், தமிழக மக்கள் கவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கு என்று ஒரு கார்ட்டூன் போட்ட போது, “தி ஹிந்து” மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. நக்கீரன், திலகவதி ஐ.பி.எஸ், கருணாநிதி போன்றோர் தங்களது கருத்துகளை வெளியிட்டதற்கு மிரட்டப்பட்டனர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர், மிரட்டினர். “விஸ்வரூபம்” பிரச்சினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழகத்து முஸ்லிம் அமைப்புகள் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிப்பதாகவே தங்ளைக் காட்டிக் கொண்டு வருகின்றன.

© வேதபிரகாஷ்

10-04-2016

 

[1] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am

By : Sam Kumar.

[2]  http://www.viduthalai.in/page1/70908.html

[3] http://www.dinamalar.com/twitter_detail.asp?id=1478105&Print=1

[4] http://www.inneram.com/news/tamilnadu/8499-sdpi-party-dmk.html

[5] http://www.tntj.net/2760.html

[6] நக்கீரன், இஸ்லாமிய சகோதரர்களுக்கு….., பதிவு செய்த நாள் : 24, மார்ச் 2010 (21:48 IST); மாற்றம் செய்த நாள் :24, மார்ச் 2010 (21:48 IST)

[7] http://thaquatntjtvr.blogspot.in/2010/10/blog-post_03.html

[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=29297

[9] காபிர்கள் மோமின்களுக்கு தண்டனைக் கொடுக்க முடியாது, இஸ்லாம்-அற்ற சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று வெளிப்படையாக இவ்வாறு கூறிவருவதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும்.

ஹதீஸின் படி இந்துக்களைக் கொல்வோம் என்றால், ஹதீஸ்களில் எது உண்மை-பொய் என்பதிலேயே தகராறு உள்ளதே?

ஜனவரி 5, 2016

ஹதீஸின் படி இந்துக்களைக் கொல்வோம் என்றால், ஹதீஸ்களில் எது உண்மை-பொய் என்பதிலேயே தகராறு உள்ளதே?

Forged Hadith

அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில்ஹிந்த்பற்றிக் காணப்படுவது: அத்தகைய வகையில் அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில் “ஹிந்த்” பற்றிக் காணப்படுவது என்னவென்று பார்ப்போம். அவற்றைப் பற்றி “ஹிந்த்” என்ற ஹதீஸுக்கள் உள்ளதாக ஐந்து குறிப்பிடப்படுகின்றன[1].

  1. ஹஜரத் அபு ஹுரைராஹ் (ரலி), மொஹம்மது நபி தன்னிடம் சொன்னதாக கூறுவது[2], “இந்த உம்மாவில், படைகள் சிந்த்-ஹிந்த் நோக்கிப் புறப்படும்”.
  1. அல்லா நெருப்பிலிருந்து இரண்டு குழுக்களைக் காப்பாற்றியுள்ளார். ஒன்று இந்தியாவைத் தாக்க செல்லும், இன்னொன்று மரியத்தின் மகனுடம் இருக்கும் சைனியத்தை எதிர்க்கும்[3].
  1. நிச்சயமாக, இரு படை இந்துஸ்தானுடன் சணையிடும்……………..[4].
  1. ஜெருசலேத்தின் அரசன் ஹிந்துஸ்தான் நோக்கி படையுடன் செல்வான். ஹிந்த் நாட்டை அழிப்பான், செல்வங்களைக் கொள்ளையெடிப்பான், அவற்றை வைத்து, ஜெருசலேத்தை அலங்கரிப்பான். தஜ்ஜல் வரும் வரை அவர்கள் ஹிந்துஸ்தானத்தில் தங்கியிருப்பார்கள்[5].
  1. உம்மாவின் சில வீரர்கள் ஹிந்துஸ்தானுடன் போரிடுவார்கள். அல்லா அவர்களுக்கு உதவுவான், இந்திய அரசர்கள் சங்கிலில் சிக்குவதையும் அவர்கள் காண்பார்கள். பிறகு அவர்கள் சிரியாவை நோக்கி செல்வார்கள், அங்கு மரியத்தின் மகனை சந்திப்பார்கள்[6].

“சிந்த்-ஹிந்த்” என்ற வார்த்தை அரேபிய மொழியில் “சித்தாந்த்” என்ற முறையிலும் உபயோகத்தில் உள்ளது. அப்பாஸித் காலத்தில் இந்திய வானவியல் சித்தாந்தங்கள் அரேபியத்தில் மொழிபெயர்த்த போது, அச்சொற்றொடர் பிரபலமாகியது. “ஹிந்த்-ஸா” என்று இந்தியாவிலிருந்து வந்ததைக் குறிப்பிட்டனர்.

Forged faked weak Hadith

ஹதீஸுக்களின் உண்மைத்தன்மை அறிவது எப்படி?: ஹதீஸ்கள் என்பது மொஹம்மது இப்படி சொன்னார் என்று அவரது உறவினர்கள், நண்பர்கள் கூறியுள்ளதாக பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அம்மதத்தலைவர்கள், காஜிக்கள், உலேமாக்கள் இடையே கருத்து வேறுபாடுள்ளது. சில உண்மை, சில பொய்; சில அதிகாரப்பூவமானது, சில இடைசெருகல், என்று பலவித சச்சரவுகள் உள்ளன. தமிழ்.விகிபிடியா இவ்வாறு விளக்கம் அளிக்கிறது[7].

  1. எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு
  2. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
  3. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
  • மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
  1. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது என்பது பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவு.

  1. தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.
  1. அரபு மொழியல்லாத ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது
  1. நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள். அதாவது, 1% தான் உண்மையானது, 99% பொய்யானது என்றாகிறது.
  1. 1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.

2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும். 4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான – ஹதீஸ்கள் என்பர்.

  1. அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான – ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
  1. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி (ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.
  1. ஜைனப் (ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
  1. தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.
  1. தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

Understanding Islam through Hadth

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வீடியோ ஆதாரம்வெளியானது (செப்டம்பர் 2014): அய்மன் அல்- ஜவாஹரி [Ayman Al-Zawahari] என்ற அல்-குவைதாவின் படைத்தலைவனின் வீடியோ வெளியானப் பிறகு, இந்தியாவைத் தாக்க ஜிஹாதிகள் ஈடுபட்டுள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. ஊடகங்கள் இவற்றை ஏதோ புதியது போல வெளியிட்டு வந்தாலும், இவ்விவரங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு தெரிந்த விசயமே. இந்தியாவை முஸ்லிம் நாடுகளுடன் இணைக்க வேண்டும் என்ற நப்பாசை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் உருவானதிலிருந்தே இருந்து வருகிறது. கஜ்வா-இ-ஹிந்த் [Ghazwa-e-Hind] என்ற பெயரில் இந்தியாவின் மீதான கடைசியான போர் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாத ஜிஹாதி சித்தாந்தம் மூலம் பல முஸ்லிம்களை மதரீதியில் கவர வைத்து, இந்தியாவின் மீதான தாக்குதலை மேற்கொண்டு, அதை காபிர்களின் பிடியிலிருந்து விடுபட வைத்து மறுபடியும், இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாதி அஸ்திவாரம் அமைத்து அதன் மூலம் புனித போரைத் தொடர வேண்டும் [Jamaat Qaidat al-jihad fi’shibhi al-qarrat al-Hindiya or the Organisation of The Base of Jihad in the Indian Sub-Continent] என்று இவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதாக ஜிஹாதிகள் கூறியிருக்கிறார்கள். இடைக்காலத்திலிருந்தே முகமதியர் இம்முறையைக் கையாண்டு வந்ததை நினைவுகூர வேண்டும்.

© வேதபிரகாஷ்

05-01-2015

[1] http://english.ghazwa-e-hind.org/

[2] “In this Ummah, the troops would be headed towards Sindh & Hind”,

http://english.ghazwa-e-hind.org/hadith-1-ghazwa-e-hind-english/

[3] “Two groups amongst My Ummah would be such, to whom Allah has freed from fire; One group would attack India & the Second would be that who would accompany Isa Ibn-e-Maryam (A.S.).”

http://english.ghazwa-e-hind.org/hadith-2-ghazwa-e-hind-english/

[4] “Definitely, one of your troop would do a war with Hindustan, Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains / fetters. And Allah would forgive those warriors (by the Blessing of this great war). And when those Muslims would return, they would find Hazrat Isa Ibn-e-Maryam(A.S.) in Syria (Shaam)”.

http://english.ghazwa-e-hind.org/hadith-3-ghazwa-e-hind-english/

[5] “A King of Jerusalem (Bait-ul-Muqaddas) would make a troop move forward towards Hindustan. The Warriors destroy the land of Hind; would possess its treasures, then King would use those treasures for the décor of Jerusalem. That troop would bring the Indian kings in front of King (of Jerusalem). His Warriors by King’s order would conquer all the area between East & West. And would stay in Hindustan till the issue of Dajjal”.

http://english.ghazwa-e-hind.org/hadith-4-ghazwa-e-hind-english/

[6] “Some people of My Ummah will fight with Hindustan, Allah would grant them with success, even they would find the Indian kings being trapped in fetters. Allah would forgive those Warriors. When they would move towards Syria, then would find Isa Ibn-e-Maryam (A.S.) over there.”

http://english.ghazwa-e-hind.org/hadith-5-ghazwa-e-hind-english/

[7] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D

இந்திய முஸ்லிம்கள் ஐ.எஸ்சில் சேர்ந்து ஜிஹாதில் ஈடுபடுவது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?

நவம்பர் 23, 2015

இந்திய முஸ்லிம்கள் .எஸ்சில் சேர்ந்து ஜிஹாதில் ஈடுபடுவது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?

ஐ.எஸ் கொடி

ஐ.எஸ் கொடி

இந்திய முஸ்லும்கள் .எஸ்சில் சேர்வது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?: பாரீஸ் தாக்குதலை [13-09-2015 வெள்ளிக்கிழமை] தொடர்ந்து இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்து உள்ளது.  ஐ.எஸ் அமைப்பு இந்த வாரம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய உள்துறை கூறி உள்ளது. சிரியா, ஈராக்கில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பில் குறைந்தது 23 இந்தியர்கள் இணைந்து உள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பிவிட்டார். இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்[1]. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பி விட்டார்.  இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும், இந்தியாவில் உள்ள 150 பேர் ஐ.எஸ் பிரசாரத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை இந்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

huji Bangaladesh

huji Bangaladesh

உள்ளூர் தீவிரவாதம்”, “உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாதம்”, “நாட்டுப்புற தீவிரவாதம்: இன்றைக்கு “உள்ளூர் தீவிரவாதம்”, “உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாதம்”, “நாட்டுப்புற தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படுகிறது. அதாவது, இஸ்லாமிய தீவிரவாதம் என்றால், அனைத்துலகில் செயல்படுகிறது என்ற எண்ணம் கூடாது. அந்தந்த நாட்டில், உள்ளூர் சமாசாரங்களுக்கு ஏற்பக்கூட அது செயல்படும், வேலை செய்யும் என்றுணர்த்த அவ்வாறான பிரச்சாரம் ஆரம்பிக்க வைக்கப்பட்டது. ஆனால், இணைதள விவகாரங்கள், கண்காணிப்புகள், தகவல் பரிமாற்றங்கள் முதலியன, இந்த உள்ளூர் தீவிரவாதிகள் அனைத்துலக தொடர்புகளுடன் தான் வேலை செய்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டின. முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், அரேபிய-வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ளனர். வேலை-வியாபாரம் முதலியவற்றைத் தாண்டி அவை வேலை செய்வது, பலமுறை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இது “அனைத்துலக தீவிரவாதம்” தான் என்பது, உலத்தில் பட இடங்களில் ஜிஹாதிகள் மேற்கொண்டு வரும் குரூர-கொடூர தாக்குதல்களிலிருந்து தெரியவருகிறது.

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் வந்து போகும் போது, அவர்களுடன் தீவிரவாதிகளும் வருவது: இந்தியாவைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு முறை, மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் அங்கிருந்து வரும் போது, மதவிரும்பங்களுக்கு ஏற்பத்தான் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இஸ்லாம் வளர நிதியுதவி அளித்துள்ளனர். இதனால், மசூதிகள் பெருகின; முஸ்லிம் பிரிவுகளும் பெருகின; அரசியல் கட்சிகளும் வளர்ந்தன. இவையெல்லாம் நிதியுதவி பெறவே அவ்வாறு பிரிந்துள்ளது போல காட்டிக் கொள்வதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் மதரீதியில், விருப்பங்களில் ஒன்றாகத்தான் வேலை செய்து வந்துள்ளனர். இதே முறைதான் அயல்நாட்டு தொடர்பிகளிலும் வேலை செய்து வருகின்றன. மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் வந்து போகும் போது, அவர்களுடன் தீவிரவாதிகளும் வருவது திடுக்கிட வைப்பதாக உள்ளது. இது அஷ்ரப் அலி வழக்கில் தெரியவந்துள்ளது. கேரளாவுக்கு முன்பு 1980களில் ஷேக்குகள் வந்து சென்றபோது பிரசினை ஏற்பட்டதை நினைவு கூறலாம். அவர்கள் வியாபார நிமித்தம், சுற்றுலா என்ற போர்வைகளில் வந்து, மதப்பிரச்சாரத்தில் ஈடுபடுவது, மசூதிகள் கட்டுவதற்கு, நிதியுதவி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். வெறும் மதரீதியில் அவர்களது காரியங்கள் இருந்தால் பரவாயில்லை. அப்பொழுது மதமாற்றம் என்ற பிரச்சினை இருந்தது, இப்பொழுது தீவிரவாதம் என்று மாறியுள்ளது.

Indian Muslim youth become ISIS supporters, warriorsஎஞ்சினியர்கள் .எஸ் வேலையில் சேர்வதன் மர்மம் என்ன?: கடந்த பிப்ரவரி 2015ல் ஒன்பது இந்திய முஸ்லிம்கள் துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். பெங்களுருக்கு வந்தபோது, போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். சுற்றுலா விசா மூலம் அவர்கள் பெங்களுரிலிருந்து டிசம்பர் 24,2014 அன்று இஸ்தான்புல் நகருக்குச் சென்றனர். ஜனவரி.30, 2015 அன்று துருக்கிய அதிகாரிகள் அவர்களை நாடுகடத்தியுள்ளனர்[2].

  1. இப்ராஹிம் நௌபல் – Ibrahim Nowfal, 24, from Hassan
  2. ஜாவித் பாபா – Javeed Baba, 24, from Khammam district, Telangana.
  3. மொஹம்மது அப்துல் அஹத் – Muhammed Abdul Ahad, 46, belonged to a family from Chennai
  4. மொஹம்மது அப்துல் அஹத்தின் மனைவி – his wife belonged to a family from Chennai
  5. மொஹம்மது அப்துல் அஹத்தின் ஐந்து குழந்தைகள் – their five children seven belonged to a family from Chennai[3].

மொஹம்மது அப்துல் அஹத் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியர் மற்றும் அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வேலை செய்தவர் என்று குறிப்பிடத் தக்கது[4]. அமெரிக்காவில் தங்கிவிட்டாலும், இன்னும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறான் என்று போலீஸார் எடுத்துக் காட்டினர். இங்கு படித்தவர்கள் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்பது முக்கியமல்ல, படித்தும் முஸ்லிம்களின் மனங்கள் மதவாதம், அடிப்படைவாதம், ஜிஹாதித்துவம் முதலியவற்றால் இருகிவிடுவதால், தீவிரவாதத்தில் ஈடுபடுவது, ஒரு தெய்வீக காரியமாக, கடவுளுக்கு செய்கின்ற காரியமாக மனவுவந்து செய்கிறார்கள். அவர்களது மனைவி, பேற்றோர், மற்றோரும் அறிந்தே உதவுகின்றனர். இது சித்தூரில் தீவிரவாதிகள் பிடிபட்டபோது தெரியவந்தது.

HSBC-drugs-and-terrorism-financing

HSBC-drugs-and-terrorism-financing

தீவிரவாதத்தையே, ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்தும் விதம்:  ஒருவேளை, தீவிரவாதத்தையே, ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்த தீர்மானித்து விட்டு, ஒரு கம்பனி போன்ற அமைப்பை உருவாக்கி வைத்தால், அக்கம்பெனிக்கும் பற்பலவிதமான ஆட்கள், தொழிலாளர்கள் என்று தேவைப்படுவார்கள் இல்லையா. ஒருவேளை, ஒரு கம்பெனி என்ன செய்கிறது என்று வெளிப்படுத்தாமல் அல்லது ஏதோ ஒருவேளையை செய்வது போல செய்து வந்தாலும், அக்கம்பெனிக்கு வரவு-செலவு பார்க்க, கம்பெனியின் கட்டிடம் பராமரிக்க, டீ-காபி மற்றும் உணவு சப்ளை செய்ய, என்று ஆட்கள் தேவைப்படுவார்களே? ஒரு வங்கி வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அவ்வங்கியின் வேளை, பொது மக்கள், வியாபாரிகள், மற்ற முதலீட்டார்களிடமிருந்து பணத்தை சேமிப்பாகப் பெறுவது, அதனை அதிக வட்டிக்குக் கொடுப்பது என்று தானே வியாபாரம் செய்து வருகிறது. பணம் எப்படி வருகிறது, யாருக்கு என்ன காரியத்திற்குப் போகிறது என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லையே. உரிய ஆவணங்கள் இருந்தால் கடன் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். ஆக, தீவிரவாதத்தை ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்தும் கம்பெனிகளும் சார்டர்ட் அக்கௌன்டென்ட், எஞ்சினியர்கள், டாக்டர்கள் என்று எல்லோரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.  HSBC  வங்கி அதுபோலத்தான், தீவிரவாதிகளுக்கு உதவியுள்ளது.

Haqqani network affecting India

Haqqani network affecting India

நன்றாக சம்பளம் கொடுத்தால், எந்த வேலைக்கும் தயாராகத்தானே இருப்பார்கள்: அதிகமாக பணம் வரும்போது, சம்பளத்தையும் அதிகமாகக் கொடுத்து வந்தால், வேலை செய்பவர்கள் எந்த கவலையும் இல்லாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். முஸ்லிம்களையே பெரும்பாலும் வேலைக்கு வைத்துக் கொண்டால், அவர்களிடயே யாருக்கு ஜிஹாதித்துவம் பிடித்திருக்கிறது, போராட தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். பிறகு நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டால், அவர்களை நன்றாக மூளைசலைவை செய்து, அவர்களுக்கு வேண்டியவற்றை, எல்லாம் கொடுத்து, கைப்பொம்மைகளாக்கி விட்டால், அவர்கள் மனித-வெடிகுண்டாகக் கூட வேலை செய்ய தயாராகி விடுவார்கள். அப்படித்தான், ஒருவன் சென்னையிலிருந்து சென்றவன் மனித-வெடிகுண்டாக வேலை செய்து செத்திருக்கிறான். ஆனால், அவன் குடும்பத்திற்கு லட்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, யாரும் கவலைப்படாமல் அமைதியாகத்தான் இருப்பார்கள். மேலும், அவன் ஒரு ஷஹீதாகக் கருத ஆரம்பிக்கப்பட்டுவிடுவான். இப்படித்தான், பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஐசிஸ்க்கு ஆள் சேர்க்கும் வேலையை ஆரம்பித்திருப்பான்.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1]  தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ்..எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 தமிழக இளைஞர்கள் முயற்சிஅதிரடியாக நாடு கடத்தியது துருக்கி!!, Posted by: Mayura Akilan, Updated: Saturday, November 21, 2015, 11:54 [IST].

[2] Nine persons from India, including one from Hassan, have been deported by Turkey after they were allegedly caught trying to cross over to Syria to join the terror outfit ISIS, police say. The group is being questioned by Bengaluru police and central agencies after they arrived at the Kempegowda International Airport (KIA) on Sunday. According to police, they went to Istanbul from Bengaluru on tourist visas on December 24, 2014, and were sent back by the Turkish authorities on January 30.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[3] Among those sent back from Turkey are engineers Ibrahim Nowfal, 24, from Hassan and Javeed Baba, 24, from Khammam district, Telangana. The remaining seven belonged to a family from Chennai – Muhammed Abdul Ahad, 46, his wife and their five children.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[4] Police said Ahad has done masters in computer science from Kennedy-Western University, California, US, and worked in the US for more than 10 years. A senior police officer said Ahad had left India soon after doing his graduation in engineering and was settled in the US. “Two of his children are US citizens, but he still holds an Indian passport,” said the police officer.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!

செப்ரெம்பர் 17, 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள்திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!

A R REhmans reply to fatwa

A R REhmans reply to fatwa

மெசஞ்சர் ஆஃப் காட் என்ற  ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர், ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையை சேர்ந்த’ ரஸா அகாடமி ‘ என்ற சன்னி முஸ்லிம் அமைப்பு ஃபத்வா விடுத்தது.லிரான் ஒரு ஷியா நாடு, இருப்பினும் இஸ்லாத்தை காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இன்றைய நாட்களில், சுன்னி நாடுகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்க்ஜள், அவர்களது மசூதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுதுள்ள தீவிரவாத இயக்கங்களும் சுன்னி ஆதரவு கோஷ்டிகளாக உள்ளன. ஐ.எஸ் / ஐசிஸ் போன்றவையும் ஷியா-விரோத இயக்கங்களாக இருக்கின்றன. இந்நிலையில், இப்படத்திற்கு சுன்னி அமைப்பு பத்வா கொடுத்துள்ளது வினோதமாக இருக்கிறது. மேலும் ரஹ்மான் போன்ற கலைஞர்களை இஸ்லாமிய அடிப்படவாதத்தில் சுருக்கிவிடும் வகையில் இந்த மிரட்டல் உள்ளது. சூபித்துவத்தில் பற்று கொண்ட ரஹ்மான் இஸ்லாத்தை பக்தியுடன் அணுகியுள்ளார். அவர் ஒரு சிறந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, அவரை சுன்னி-ஷியா சர்ச்சகளில் சிக்கவைக்க வேண்டிய தேவையும் இல்லை.

Mohammed-messenger of god - a sceneஏ.ஆர். ரஹ்மானின் பொருட்செறிவு மிக்க பதில்: இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் ரஹ்மான் தனக்கு விடுக்கப்பட்டுள்ள ஃபத்வாவிற்கு பதிலளித்துள்ளார்[1]டாங்கிலத்தில் உள்ள அவரது பதிலை ஒவ்வொரு இந்திய முஸ்லிம், ஏன், இந்துவும் கூட படித்து அதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த படத்துக்கு இசையமைத்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. படத்தை இயக்கியதிலும் தயாரித்ததிலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அந்த பணியில் எனக்கு கிடைத்த ஆன்மீக தொடர்பான ஆத்ம திருப்தியை நான் பகிர விரும்பவில்லை[2]. இது எனது தனிப்பட்ட விஷயம்என கூறியுள்ளார்[3][அதாவது ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவேளை ஆன்மிகமாக உணர்வதற்கு, காணுவதற்கு பல சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை பற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவை ஒருவேளை உருவம் கொடுப்பது போன்ற நிலை ஏற்பட்டு விட்மோ என்ற அச்சம் தேவையில்லை என்று எடுத்துக் காட்டுகிறார்].

 

Ranbir-Kapoor-In-Rockstar-concert-03

Ranbir-Kapoor-In-Rockstar-concert-03

முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?ரஹ்மான் தொடர்லகிறாற், “ராஸா அமைப்பின் தலைவரான  நூரி , ‘இது போன்ற  படத்தை எடுப்பதை ஏன் தடுக்கவில்லைஎன அல்லா என்னிடம் கேட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிலளித்துள்ள ரஹ்மான்[4], ”இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் அதே காரணத்திற்காகத்தான். ஒருவேளை அல்லாவை  சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்தை ஒருங்கிணைப்பது, அன்பை பற்றிய போதனைகள், ஏழைகளின் முன்னேற்றம், தர்ம சிந்தனை, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை தவிர்த்து விட்டு மனித இனத்துக்கு சேவை செய்வது போன்ற போதனைகளை உள்ளடக்கிய முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?”. கடைசிநாளில், உயித்தெழும் போது, அல்லா அவரவருக்கு ஏற்றபடி தீர்ப்பு கொடுப்பார், அந்நாளில், அல்லா அப்படி ஒருவேளை கேட்டால்…………..என்று ரஹ்மான் கேட்டுள்ளதில், அவரது ஆழ்ந்த பக்தி, இறையுணர்வு, அசைக்கமுடியாத நம்பிக்கை, அல்லாவை காணத்துணிக்கும் துடிப்பு என்று எல்லாமே வெளிப்படுகிறது. இசையால் இறைவனைக் காணத்துடிக்கும், அப்பக்தனின் ஏக்கமும் புரிகிறது. அத்தகைய கலைஞனை மிரட்ட வேண்டிய தேவையே இல்லை.  

 

A R Rahman sufism

A R Rahman sufism

எல்லோரும் அமைதியாக, சந்தோஷமாக இருப்போம்: ரஹ்மான் தொடர்கிறார், “நபிகளை பற்றிய போதனைகளை முறையாக புரிந்து கொள்ளாமல், தவறான கருத்துகளை இணையங்களில் காண முடிகிறது[5]. காட்சி ஊடகங்கள் வழியாக சரியான விஷயங்களை கொண்டு புரிய வைக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன்[6]. மத சுதந்திரம் கொண்டுள்ள இந்திய நாட்டில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது, அதற்காக நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கிறோம்[7]. இங்கே எல்லா சமூகங்களும் குழப்பம் மற்றும் வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை வாழ்வதே நோக்கம்[8]. நான் இஸ்லாமியத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை அறிந்துள்ள அறிஞர் அல்ல. பிரச்னைகளை கருணையோடு எதிர்கொள்வாம். கண்ணியத்தோடு கையாள்வோம் வன்முறை வழியாக அல்ல. இந்த உலகத்திற்காகவும், எந்த நாட்டில் நாம் வாழ்கிறோமோ, அந்நாட்டை ஆசிர்வதிக்கவும், நாம் இதயப்பூர்வமாக மன்னிப்புக்காக வேண்டுவோம், அதுதான் மிக உயர்ந்த மற்றும் ஞானம் இவற்றின் தன்மை கொண்ட மதொப்பிக்குரிய மொஹம்மதை (PBUH) இறைஞ்சுவதாகும்‘, இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்[9]. அவரது உருக்கமான பதில் எல்லா ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது[10]. இதைவிட, ஒரு முஸ்லிம் என்ன சொல்லவேண்டும் என்று ராஸா அகடெமி எதிர்பார்க்கிறது?

A R Rahman sufism experiences felt

A R Rahman sufism experiences felt

ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்: மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற அந்த அமைப்பு முகமது: மெஸஞ்சர் ஆஃப் காட் படத்திற்கு இசையமைத்தற்காக விடுக்கப்பட்ட ஃபத்வாவில் புனிதப்படுத்தும் கலீமா உறுதி மொழியை மீண்டும் எடுக்க வேண்டுமென்றும் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி , ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் திருமண பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தது. சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றி திரைப்படம் எடுப்பதே மிகவும் தவறானது என்று அந்த ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது[11]. இந்த நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று, தன் முயற்சிகளால் தமிழகத்துக்கும் தேசத்துக்கும் உலக அரங்கில் புகழ் ஈட்டித்தந்துள்ள ரஹ்மான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பக்க பதிவின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்.

ar-rahman-fatwa-reply-true muslim

ar-rahman-fatwa-reply-true muslim

ரஹ்மான் தாய்மதம் திரும்பவேண்டும்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே[12]. அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது[13]. வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து கூறியதாவது[14], “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல. எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்”, இவ்வாறு சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[15]. இந்துக்களுக்கு, ஒருவேளை அத்தகைய நிலை சிறிது சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ரஹ்மான் இதே நிலையில் உள்ளவரை, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முஸ்லிம்களில் நிறைய பேர் ஷிரிடி சாய்பாபா, புட்டபர்தி சாய்பாபா மற்ற இஸ்லாமிய பாபாக்கள் முதலியோரை நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்க்கலாம். ஆனால், சூபித்துவத்தில் ஊறிய அம்மனங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எப்படி ஒரு இந்து அல்லாவை ஏற்றுக் கொண்டு, இஸ்லாத்தை ஒதுக்கலாமோ, அந்நிலை தான் அது.

வேதபிரகாஷ்

© 17-09-2015

[1] விகடன், ரஹ்மான் பதில்: இறைதூதரின் படத்துக்கு இசையமைக்காதது ஏன் என்று அல்லா கேட்டால் என்ன சொல்ல முடியும்?, Posted Date : 12:08 (15/09/2015); Last updated : 12:08 (15/09/2015).

[2] “I am not a scholar of Islam. I follow the middle path and am part traditional and part rationalist. I live in the Western and Eastern worlds and try to love all people for what they are, without judging them,” said the double Grammy winner.

http://www.hindustantimes.com/music/ar-rahman-replies-to-fatwa-against-him-says-composed-music-in-good-faith/article1-1390446.aspx

[3] நக்கீரன், நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்; யாரையும் புண்புடுத்துவது எனது நோக்கமில்லை: .ஆர்.ரஹ்மான், பதிவு செய்த நாள் : 15, செப்டம்பர் 2015 (19:30 IST);மாற்றம் செய்த நாள் :15, செப்டம்பர் 2015 (19:30 IST).

[4] தினமணி, ஃபத்வா குறித்து .ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம், By DN

First Published : 15 September 2015 11:46 AM IST.

[5] தமிழ்.இந்து, நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்: ‘ஃபத்வாவிதித்த அமைப்புக்கு ரஹ்மான் அழுத்தமான பதில், Published: September 15, 2015 11:02 ISTUpdated: September 15, 2015 12:20 IST.

[6] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7654749.ece

What, and if, I had the good fortune of facing Allah, and He were to ask me on Judgement Day: ‘I gave you faith, talent, money, fame and health… why did you not do music for my beloved Muhammad film? A film whose intention is to unite humanity, clear misconceptions and spread my message that life is kindness, about uplifting the poor, and living in the service of humanity and not mercilessly killing innocents in my name’,” he continued.

[7]http://www.dinamani.com/cinema/2015/09/15/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/article3029453.ece

[8] Rahman bats for religious freedom in India, “We are indeed fortunate and blessed to live in a country like India where religious freedom is practiced and where the aim of all communities is to life in peace and harmony sans confusion and violence.”

http://www.thehindu.com/entertainment/music-director-ar-rahman-writes-back-after-fatwa/article7652238.ece

[9] “Let us set a precedent in clearing conflict with grace and dignity and not trigger violence in words or actions. Let us pray for forgiveness, and from our hearts bless those who suffer in the world and bless the country that we live in. To so pray is to reflect the noble and enlightened nature of our beloved Muhammad,” the musician concluded.

http://www.vikatan.com/news/article.php?aid=52444

[10] http://www.newsx.com/entertainment/10723-ar-rahmans-excellent-reply-to-the-fatwa-issued-against-him

[11] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151172

[12] தமிழிந்து, .ஆர்.ரஹ்மானின்கர்வாப்ஸி’-க்கு உகந்த நேரம் இதுவே: வி.எச்.பி., Published: September 16, 2015 17:34 ISTUpdated: September 16, 2015 17:34 IST

[13] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து சமூகம் புதல்வனுக்க காத்திருக்கிறது. ஏஆர்.ரஹ்மானை தாய் மதத்திற்கு அழைக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் Posted by: Sakthi Kumar Published: Wednesday, September 16, 2015, 22:50 [IST].

[14]http://tamil.thehindu.com/india/%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article7659610.ece

[15] http://tamil.oneindia.com/news/india/vhp-appeals-a-r-rahman-return-hinduism-235848.html

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

செப்ரெம்பர் 13, 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

Mohammed messenger of God - A R RAhman fatwa

Mohammed messenger of God – A R RAhman fatwa

முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்[1]. ஆஸ்கார் விருது பெற்ற, ஸ்லம்-டாக் மில்லியனர் படம் இசைப்புகழ் ரஹ்மானுக்கு பத்வா போடப்பட்டுள்ளது என்று “ஹாலிவு ரிப்போர்டர்” தலைப்பிட்டு அறிவித்துள்ளது[2]. 1989ல் முஸ்லிமாக மாறிய இவர், தனது பெயரான திலிப் குமார் என்பதனை மாற்றிக் கொண்டார்[3]. அதிலிருந்து, இவர் பழுத்த முஸ்லிமாக நாகூருக்குச் செல்வது, மொட்டை அடித்துக் கொள்வது, சூபித்துவத்தில் ஈடுபடுத்திக் கொள்வது, சூப்பாடல்களை சினிமா பாடல்களில் சேர்ப்பது என்று பரிசோதனை செய்து வந்தார். சினிமா பாடல்களில் கூட இஸ்லாமிய ராகங்கள், இசைக்கருவிகள், கவ்வாலிகள் போன்ற மெட்டுகள் முதலியவற்றைக் காணலாம். இருப்பினும், இப்பொழுது பத்வாவிக்கு உட்பட்டிருக்கிறார்.

A R Rhman and Majid Majith

A R Rhman and Majid Majith

மஜித் மஜீதும், ரஹ்மானும், இறைத்தூதர் மொஹம்மது திரைப்படமும்: ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை மஜித் மஜிதி தன் பக்கம் ஈர்த்தார். உலகப்பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, ‘த சாங் ஆப் ஸ்பாரோ’ போன்ற அன்பைப் பற்றி பேசும் தரமான திரைப்படங்களை இவர் அளித்துள்ளார்[4]. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ [ ‘Muhammad: Messenger of God’] என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்[5].

Muhammad_-_The_Messenger_of_God_poster

Muhammad_-_The_Messenger_of_God_poster

இறைத்தூதர் மொஹம்மது திரைப்படத்திற்கு எதிப்புத் தெரிவிக்கும் முஸ்லிம்கள்: ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்[6].  மஹாராச்ட்ரா முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் போன்றோரை சந்திப்போம் என்றும் கூறியுள்ளனர். தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி [Saeed Noorie, chief of Raza Academy] தெரிவித்துள்ளார்[7]. இந்த ராஸா அகடெமி ஏற்கெனவே பல சர்ச்சைகளில், கலவரங்களில் ஈடுபட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மொஹம்மது இறைத்தூதர் - சினிமா

மொஹம்மது இறைத்தூதர் – சினிமா

மும்பை முதி பத்வா போட்டது ஏன்?: இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[8]:  “மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத்மெஸஞ்சர் ஆப் காட் படம்  இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தன்னைப்பற்றிய எந்த உருவத்தையும் எவ்விதத்திலும் உருவாக்கக் கூடாது என்று மொஹம்மது நபி கூறியுள்ளார்[9]. இந்நிலையில் இஸ்லாம் மத கோட் பாட்டுக்கு எதிராக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்த படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், முஸ்லிம்-அல்லாத பிற மதக்கலைஞர்களும் (காபிர்களும்) பணியாற்றியுள்ளனர்[10]. இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ.ஆர்.ரகுமானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறி இருக்கிறார்கள்[11]. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் .ஆர்.ரஹ்மானுக்குபத்வாவிதிக்கப்படுகிறது”, இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது[12].

Mohammed messenger of God - An Iranian film

Mohammed messenger of God – An Iranian film

பிராயசித்தம் செய்ய வேண்டியது என்ன?: மொஹம்மது அக்தர், மும்பை முப்தி அந்த பத்வாவை அறிவித்துள்ளார்[13]. அப்படத்தில் நடித்த, வேலை பார்த்த முஸ்லிம்கள், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. மஜீதி மற்றும் ரஹ்மான் இருவரும், அவர்களது கருத்துகளைக் கேட்க முற்பட்டபோது, இருவரையும் காணவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதாவது காபிர்களுடன், மோமின்கள் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இருக்கும் நிலையில், முஸ்லிம்களான இவர்கள், காபிர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர். “இறைவனின் தூதர்” என்ற பெயரை வைத்து, அதில் காபிர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதனால், அவர்களை காபிருத்துவம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் காபிர்களாகவும் மாறி விட்டனர். அதனால், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்வதின் மூலம் மோமின் நிலையை அடையலாம் என்று, தனக்கேயுரிய பாணியில் முப்தி கூறியுள்ளார். இனமவர்கள் பிராயசித்தம் செய்து மறுபடியும் முஸ்லீம்களாக மாறுவார்களா அல்லது அப்படியே இருப்பார்களா என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-09-2015

[1] पैगंबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे महंगी फिल्म में संगीत देने वाले भारत के सबसे बड़े संगीताकार को मुस्लिम समुदाय ने फतवा जारी कर दिया है। मुंबई के सुन्नी मुस्लिम समुदाय की राजा एकेडमी ने इरानी फिल्मकार माजिद मजीदी और संगीतकार भारतीय संगीतकार एआर रहमान को फतवा जारी कर पैंगबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे बड़ी फिल्म पर कड़ा विरोध जताया है।

http://www.amarujala.com/photo-gallery/multiplex/entertainment-photo-gallery/fatwa-against-a-r-rahman-for-film-on-prophet/

[2] http://www.hollywoodreporter.com/news/fatwa-issued-slumdog-millionaire-composer-822668

[3] Rahman, 48, is one of India’s most successful composers, whose multiple awards include an Oscar and Grammy for his work onDanny Boyle‘s Slumdog Millionaire. He worked again with Boyle on the 2010 release 127 Hours. Rahman officially converted to Islam in 1989, replacing his Hindu birth name Dileep Kumar.

[4] தினமணி, .ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்புஃபத்வாஅறிவிப்பு!, By எழில்

First Published : 12 September 2015 05:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2015/09/12130105/Fatwa-issued-against-AR-Rahman.html

[6]http://www.dinamani.com/cinema/2015/09/12/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/article3024497.ece

[7] மாலைமலர், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்த .ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 1:01 PM IST.

[8] தினகரன், முகமது நபிகள் பற்றிய ஈரான் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானுக்கு பத்வா: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு, செப்டம்பர்.13, 2015, 03.22.14, ஞாயிற்றுக்கிழமை.

[9] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/fatwa-against-a-r-rahman-majid-majidi-for-film-on-prophet/

[10] http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/09/12142522/Fatwa-against-AR-Rahman-Majid-Majidi-for-film-on-Prophet.vpf

[11] தினத்தந்தி, .ஆர்.ரகுமான்ஈரான் இயக்குனருக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம், மாற்றம் செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST; பதிவு செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=166848

[13] Saeed Noorie, chief of Raza Academy, which initiated the fatwa that was issued by Muhammad Akhtar – the chief mufti of Mumbai.

http://www.thehindu.com/news/national/fatwa-against-ar-rahman-for-film-on-prophet/article7642275.ece

[14] In the fatwa, they cite as the reason the Prophet’s word that no visual or picture of him be created or kept. The fatwa claims the film makes a mockery of Islam, and professional actors, including some non-Muslims, have been cast in the key roles.The fatwa adds that the Muslims working on the film, especially Majidi and Rahman, have thus committed sacrilege and will have to read the kalma again and also solemnise their marriage again. Despite repeated attempts, Rahman remained unavailable for comment.