Archive for the ‘இந்து-முஸ்லிம் ஒற்றுமை’ category
ஏப்ரல் 2, 2020
இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [1]

தென்கொரியாவில் ஒரு கிருத்துவ சர்ச் மூலம் கொரோனா பரப்பப் பட்ட நிகழ்ச்சி [மார்ச்.2020]: தென்கொரிய டேகு நகரத்தில் [the southern city of Daegu] உறுதி செய்யப் பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus] உடன் சம்பந்தப் படுகிறது[1]. 75% தில்லி நிஜாமுத்தீன் தப்லிக் மசூதி போல, தென் கொரியாவில், ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus] கொரோனா வைரஸ் பரப்புவதில் சிக்கியுள்ளது. சுமார் 7,400 பேர் தாக்குதலில் உறுதி செய்யப் பட்ட நிலையில், அவர்களுடைய தொற்றுக்கு மூலம, அந்த சர்ச் என்று அறியப் பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட நோயாளி எண்.31 [Patient No. 31] என்றழைக்கப் படும் பெண்மணி தான், முதன்முதலில் அந் த வைரஸைப் பெற்று, மற்றவர்களுக்குப் பரப்பியதாக தெரிகிறது. அதன் படி, பரிசோதனை செய்ததில், 63.5% கொரோனா வைரஸ் பரப்பு மூலம் அந்த சர்ச் தான் என்று காட்டியது. வைரஸ் பாதிப்பில் சைனாவுக்கு அடுத்தபடியாக, தென்கொரியா உள்ளது. ரகசியமாக கூடுதல், மாஸ்க் அணியாமல் இருத்தல், நெருக்கமாக இருந்து வேண்டுதல், முதலிய காரணங்களினால் கோவிட்-19 பரவியது, இதனால், கொரிய அரசு உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்ச் தலைவர் மன்னிப்பு கேட்டது [31-03-2020]: ஆனால், சர்ச் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. இந்த சர்ச்சின் எதிரிகள் மற்றும் பிடிக்காத கணவன் – மனைவிமார் தான் புகார் கூறியுள்ளனர் என்கிறது. மேலும், அச்சர்ச்சை சேர்ந்தவர்களை பலர் வேலையிலிருந்தும் நீக்கியுள்ளனர். 27% ஒவ்வாத, கிருத்துவர்கள் இருக்கும் தென்கொரியாவில் புரொடெஸ்டென்ட் சர்ச்சுகள் அதிகம். இதனை கிருத்துவ-எதிர் சர்ச்சாகக் கருதுகின்றனர். ஆக தென்கொரியாவிலும், கிருத்துவர்களா, கிருத்துவர்கள் அல்லாதவர்களா என்ற பிரச்சினையை விட தொற்று நோயை எதிப்பில் தான் நிற்கிறது. அந்த பெண்ணின் விவரங்கள், சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் என்று ஆய்ந்து வருகிறது, தொடர்பில் பல தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் அந்த சர்ச்சின் தலைவர் லீ மேன் ஹீ [Lee Man-hee] மன்னிப்புக் கேட்டார்[2]. இருப்பினும், சென்ற உயிர்கள் திரும்ப வராது. அதனால், கிளம்பியுள்ள பீதியும் அடங்கவில்லை. தனிமைப் படுத்துதல், வீட்டில் அடைப்பட்டு கிடத்தல், உணவு அத்தியாவச பொருட்களுக்காக கவலைப் படுதல் முதலிய கஷ்டங்கள் தொடர்ந்து இருக்கின்றன.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே என்று திராவித்துவவாதிகள் கூறுவது [30-03-2020, விடுதலை]: தில்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய தமிழக துலுக்கர்களில் பலர், இந்த கொரோனா தொற்றுக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே மதுரையில் 25-03-2020 அன்று ஒருவர் இறந்தாகி விட்டது. இந்நிலையில், திராவிட சித்தாந்திகள், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், “பார்ப்பனியம், கொரோனா வைரஸை விட கொடியது,” என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்[3]. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசிய உரையில், “மக்களை, உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக் கக்கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே. பார்ப்பனீயத்தையே பதற வைக்கக்கூடிய திராவிடர் கழகம் துணிச்சலோடு எதையும் எதிர்கொள்ளும். எங்கள் தலைவர் ஆசிரியர் ‘கரோனா‘ பற்றிய விழிப்பு ணர்வை மக்கள் மத்தியில் விதைத்து உள்ளார். எங்கள் பெரியார் மருத்துவக் குழுமம் விழிப்புணர்வை – பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தி வருகிறது”. அதாவது உலகத்தில் என்ன நடந்தாலும், அவற்றை எல்லாம் மறைத்து, பிராமணர்களை எதிர்த்து துவேசமாக பேசுவது, காழ்ப்புடன் சித்தரிப்பது, பொது இடங்களில் கிண்டல் செய்வது, பூணூல் அறுப்பது, அடிப்பது, ஏன் கத்தியால் வெட்டுவது என்ற நிலைக்கு வந்துள்ளது. அந்நிலையில், இவர்கள் இன்றும் இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலிவற்றை வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள் என்றால், வன்மம், வன்முறை, அவதூறு போன்றவை அவர்களிடம் தான் நோய் போன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஆகவே, இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் எங்கிருந்து வந்தது என்று பார்க்க வேண்டியுள்ளது.

திராவிடத்துவவாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்து வந்துள்ளனர்: திமுக, முஸ்லிம்லீக்குடன் எப்பொழுதுமே கூட்டு வைத்துக் கொண்டிருந்தது. அதே போல திகவும் இஸ்லாத்தை விமர்சித்தது கிடையாது. ஈவேரா முதல் இப்பொழுது வரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. புத்தகக் கண்காட்சிகளில், அடுத்த-அடுத்த ஸ்டால்களில் திகவும், முஸ்லிம் புத்தக விற்பனை நடந்தது சகஜமாக இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத, நாத்திகக் கூட்டம் என்றால், முஸ்லிம்களால் அவ்வாறு இருக்க முடியாது. ஆனால், இவர்கள் எல்லொருக்கும் தெரியும், அவர்கள் இந்து மதம், இந்து கடவுள், இந்து மத நூல்கள் முதலியவற்றைத் தான் எதிர்க்கிறார்கள், மற்ற மதங்களை அல்ல என்பது. 01-04-2020 அன்று முகநூலில், கீழ்கண்ட விசயங்களை, குறிப்பாகச் சுட்டிக் காட்டினேன்:
- தமிழ், தமிழ் என்று சொல்லி, போராட்டங்கள் நடத்தி, கடைசியில் தமிழ்நாட்டிற்கு இழுக்கைத் தேடி தந்துள்ளனர்!
- நிஜாமுத்தீன் மர்கஸ்-லிருந்து, பெரியார் மண் ஈரோடு வரை, என்னத்தான் நடந்தது, தம்பி, சொல்வாயா, அண்ணன் கேட்கிறான்?
- கொரோனாவா, வெங்காயமா, பெரியார் பிஞ்சா, தடியா? வாங்க பெரியார் திடலில் பட்டி மன்றம் நடத்தலாம்! இனமான தலைமையில்!
- கழகக் கண்மணிகளே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தமே, கடைசியில் கொரோனா வைரஸ் நிலைக்கு போய் விட்டதே, எல்லாமே அந்த ஆரிய சதிதான்!
- திராவிடனும், துலுக்கனும் ஒன்றாக சேர்வான் – இனம் இனத்தோடு சேரும் என்றான் அண்ணன், ஈரோட்டில், மதுரையில் சேர்ந்து விட்டனரே!
- கொரோனா என்றால் குரானா ஞாபகம் வருகிறது, ஆட்சி கலைக்க அன்று திட்டமிட்டவர்களுள் ஒருவர், இன்றோ, இது எல்லாவற்றையும் ஆட்டுகிறது!
- தப்லிக் என்றால் என்ன, மர்கஸ் என்றால் என்ன, மார்பகத்தில் மச்சம் உள்ளதா, நாடாவை கழட்ட பார், தமிழில் பாட்டு பாடு!
- ஹேய்..அட்டக் பட்டக்…அப்சகல்லு மாலியா, லாலாக்கு டோல் டப்பிம்மா, கூட தப்லிக், மர்சஸ் எல்லாம் சேர்த்திருப்பேனே, என் கொரோனா!
- வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது என்றாயே, இப்பொழுது பார் தம்பி, தில்லியிலிருந்து உனக்கு கொரோனா வருகிறது!
- அன்று அடியே மீனாக்ஷி மூக்குத்தியை கழட்டடி என்றேன், இன்று தப்லீக்கைக் காட்டடி மர்கஸை மறைக்காதே என்பேன் [10]
இன்றைக்கும், ஸ்டாலின் அத்தகைய வன்ம-வார்த்தை பிரயோகங்களை செய்து வருகிறார்.

திராவிடத்துவம், கம்யூனிஸம், ஜிஹாதித்துவம் எல்லாம் ஒன்றாகி செயல்படுவதால் அவற்றை சித்தாந்த ரீதியில் எதிகொள்ள வேண்டியுள்ளது: இதனால், சில நண்பர்கள், எதிர்த்து, சரி இல்லை என்று பதிவு செய்தனர். அதனால், அதன் பின்னணியை கீழ்கண்டவாறு, சுருக்கமாக விளக்கினேன்:
- அண்ணாதுரையின் “ஆரிய மாயை” படித்தால், என்னுடைய பதிவுகளுக்கான ஆதாரமும், பின்னணியும் புரியும்.
- அண்ணாதுரை தான் ஜின்னாவை சந்தித்தப் பிறகு, “இனம் இனத்தோடு சேரும்,” என்ற தத்துவத்தை பாகிஸ்தான் – திராவிடஸ்தான் பிரிவினைவாதத்திற்கு வைத்தார். ஈவேரா ஜின்னாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். ஆனால், ஜின்னா திராவிடர்களைத் தூக்கியெறிந்தார், ஈவேராவையும் சாடினார்[4].
- ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்றவர்களுக்கு, என்றுமே இந்துவிரோதத் தனம் சகஜமாக இருந்தது. அவர்களது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றில் தான் என்றுமே வன்மம், வார்த்தை குரூரம் என்றெல்லாம் இருந்தது.
- திராவிட-கம்யூனிஸ-இந்துவிரோத சித்தாந்திகளை, நிச்சயமாக, எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை ஆகிறது. ஏனெனில், செக்யூலரிஸ-பகுத்தறிவு போர்வையில், அவர்கள் இந்து விரோதிகளாக இருக்கின்றனர்.
- இப்பொழுது கூட “கரோனா வைரசை விட கொடியது” என்று 30-03-2020 அன்று திக-வீரமணி-விடுதலை செய்தி வெளியிட்டது.
- அதிலும் திருமண ஒப்பந்தம் போது, அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்ரவாதம், வெறுப்பு-காழ்ப்புகளுடம் பீரிட்டது.
- கல்யாணத்திற்கும், பார்ப்பன எதிர்ப்புக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றால், அது என்ன என்று பகுத்தறிவுவாதிகள் விளக்கவேண்டும்.
- நிஜாமுத்தீன் மர்கஸ் மாநாட்டிற்கும் துலுக்கர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை, என் கருத்தை எதிர்ப்பவர்கள் தான் மெய்ப்பிக்க வேண்டும்.
- எனக்கு அரசியல் ஆதரவு எதுவும் இல்லை, தவறு இருந்தால், எல்லா கட்சிகளையும் விமர்சித்து வருகிறேன். இந்துத்துவம், தவறு என்றாலும் சுட்டிக் காட்டுகிறேன்.
- ஆமாம், நகைச்சுவை, கிண்டல், நக்கல் முதலியவற்றுடன் தான் அவர்கள் உபயோகப் படுத்திய சொற்கள், சொற்றோடர்களை உபயோகப் படுத்தியுள்ளேன்
© வேதபிரகாஷ்
01-04-2020

[1] Of the confirmed cases, about 75% are from the southern city of Daegu and 73% of those have been linked to the Shincheonji Church. https://www.bbc.com/news/world-asia-51701039
[2] BBC News, Coronavirus: South Korea church leader apologises for virus spread, 2 March 2020
[3] விடுதலை, கரோனா வைரசை விட கொடியது பார்ப்பனீயம்– பிரபாகரன்–சந்திரலேகா மணவிழாவில் கழகப் பொதுச் செயலாளர் முழக்கம், மார்ச்.30, 2020, பக்கம்.3. http://www.viduthalai.in/page1/197844.html
[4] K. V. Ramakrishna Rao, The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar, in “Proceeding volume of the Twenty first Annual session”, of South Indian History Congress-2001, School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai, January 2002, pp.128-136.
https://velivada.com/2019/05/09/the-historic-meeting-of-ambedkar-jinnah-and-periyar/
https://archive.org/stream/TheHistoricMeetingOfAmbedkarJinnahAndPeriyar/The Historic Meeting of Ambedkar%2C Jinnah and Periyar_djvu.txt
பிரிவுகள்: அச்சம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், ஈ. வே. ரா, கருத்து, கருத்துச் சுதந்திரம், கலவரம், காஃபிர், கொடிய நோய், கொரோனா வைரஸ், தென் கொரியா, வைரஸ் கொரோனா, Uncategorized
Tags: இஸ்லாம், கரோனா தொற்று, கொடிய நோய், கொரோனா, கொரோனா வைரஸ், தொற்று, நோய், பரவுதல், பார்ப்பனர், பார்ப்பனீயம், பார்ப்பன், பிராமணர், வைரஸ், வைரஸ் கொரோனா, ஷின்சியோஞ்சி சர்ச்
Comments: Be the first to comment
பிப்ரவரி 21, 2020
வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை. பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.
© வேதபிரகாஷ்
21-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”
Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece
[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.
[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.
[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST
https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html
[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்க… கொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.
[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow
பிரிவுகள்: அகிம்சை, அசாம், அடி உதை, அடிப்படைவாதம், அன்சாரி, அமைதி, அல்-உம்மா, அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ஸாம், அஹம்மதியா, ஆப்கன், ஆப்கானிஸ்தான், ஆர்.எஸ்.எஸ், இந்திய கொடி, இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியப் பிரச்சினை, இந்து தமிழன், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமிய சாதி, இஸ்லாமியத் தீவிரவாதி, உள்ளே நுழைவது, ஊடுருவல், ஊர்வலம், எச்சரிக்கை, எதிர்ப்பு, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, கருத்து, கருத்துச் சுதந்திரம், கருத்துரிமை, கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காவலர், குடியுரிமை சட்டம், சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சமரசப்பேச்சு, ஜனநாயகம், ஜமா அத், ஜமாஅத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தமிமும் அன்சாரி, தமிமுல் அன்சாரி, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் இந்து, தமிழ் ஜிஹாதி, தமிழ் நாத்திகன், நரேந்திர மோடி, பாகிஸ்தான், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, பாராளுமன்றம், பிரசாரம், பிரச்சாரம், பிரஜை, பிரிவினை, பிரிவினைவாதம், போலீஸ், மண்ணடி, மயன்மார், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம் தெரு, முஸ்லிம் பிரச்சினை, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லிம்கள் முற்றுகை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், ரோஹிங்க, ரோஹிங்கர், ரோஹிங்கா, ரோஹிங்கிய, ரோஹிங்கியா, ரோஹிங்ய, ரோஹிங்யா
Tags: ஆப்கானிஸ்தான், ஆர்பாட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஊடுருவல், குடியுரிமை, குடியுரிமை சட்டம், தமிழ் முஸ்லிம், பங்களாதேசம், பங்களாதேஷ், பர்மா, போராட்டம், போராளி, மியன்மார், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், வண்ணாரப்பேட்டை
Comments: Be the first to comment
மே 13, 2018
“தலித்–முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

“பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டியில்….மதநல்லிணக்கம் சீர்குலைகிறது”: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டி…….” என்று ஆரம்பித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. கலவரம் நடந்தவுடன் என்னால் உடனே வரமுடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். நடந்து முடிந்த கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் நோக்கிலே சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன”, இவ்வாறு திருமாவளவன் கூறினார்[1]. “குடிசைகள் எரிந்த காலத்தில் வராத சில அமைப்புகள் தற்போது இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் நோக்கிலே செயல்படுகின்றனர்,” என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன்[2]. 12-05-2018 அன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[3].

திருமாவளவனை பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்விகள் கேட்டது: முன்னதாக, இஸ்லாமியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருமாவளவன் இதுவரை நேரில் சென்று பார்வையிடவில்லை என பல்வேறு பிரிவினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்[4]. இதனால், வேறு வழியில்லாமல், அங்கு செல்ல தீர்மானித்தார்[5]. தினசரி, “திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது, பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.” என்று தினத்தந்தியும் குறிப்பிட்டுள்ளது[7]. திருமா கொடுத்த விளக்கம், “கலவரம் நடந்த இடத்துக்கு நான் தாமதமாக வந்ததாக கூறுகிறார்கள். நான் வராவிட்டாலும், என்னுடைய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இங்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்[8]. பல ஊர்களில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளானார்கள். அங்கெல்லாம் ஆர்வம் காட்டாத சிலர், இந்த ஊர் பிரச்சினையில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது…..எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் இருதரப்பிடமும் ஒற்றுமையாக இருக்க கூறினர். ஆனால் காழ்ப்புணர்ச்சியில் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள்…….” என்றார்[9].

திருமாவளவனின் போக்கு, மனப்பாங்கு முதலியன: திருமா நிச்சயமாக, துலுக்கரிடம் “தாசன்” போன்றுதான் நடந்து கொள்கிறார். அதன் பின்னணி என்ன என்பதனை காரரியங்களுடன் தெரியப் படுத்தப் பட வேண்டும், அறியப் பட வேண்டும். இங்கு தனது இனத்தவரிடமும், துலுக்கருடனும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டது:
மசூதிக்குச் சென்று குல்லா போட்டுக் கொண்டு பேசுகிறார். |
ஏ.பி.ஆர். மஹாலில் “தலித்துகளுடன்” பேசுகிறார். அதாவது, கோவிலில் உட்கார்ந்து பேசவில்லை, எந்தவித இந்துமத சின்னங்களையும் திக்கவில்லை. |
துலுக்கர் முன்பு நின்று கொண்டு பேசுகிறார். |
தலித்துகள் தரையில் உட்கார, இவர் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்[10]. |
முஸ்லிம் சொல்வதை பவ்யமாக, தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். |
கையை நீட்டி பேசுகிறார், ஒரு பெண் எழுந்து நின்று பேசும் போது, முகத்தை இருக்கமாக வைத்துக் கொள்கிறார். |
துலுக்கரைக் கட்டிப்பிடித்தும், பணிவோடும் பேசுகிறார். |
ஒரு இந்து பெண்ணிடம் பேசும் போது, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்க்கிறார். |
40 நிமிடம் உட்கார்ந்ததால், இடது பக்கம் என்றெல்லாம் சாய்ந்து உட்காருகிறார், தண்ணீர் குடிக்கிறார். |
இங்கோ, பேசிவிட்டு முஸ்லிம்களிடம் சென்று விடுகிறார். |
முஸ்லிம் பெண்கள் – அங்கு அப்படி கேட்டதாகத் தெரியவில்லை. |
பெண்கள் கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். |
இப்படி துலுக்கர்-தலித்துகளிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதையும் செக்யூலரிஸ, நடுநிலைவாதிகள் கவனமாக கவனிக்க வேண்டும் அரசியல், அரசியல் கூட்டு, நாளைக்கு பாராளுமன்ற எம்.பி பதவி என்ற ஆசையில், தில்லிக்குச் சென்றதால், தேனி பிரச்சினை அவௌக்கு தேனாகவில்லை போலும். அவரது “துலுக்க சார்பு, ஆதாவு” முதலியவை, எஸ்சிக்களை தனிமைப் படுத்துகிறது என்று தெரிகிறது. இவரது முந்தைய இந்து-விரோத பேச்சுகள் முதலியவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

‘‘பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,” எச்.ராஜா 12—05-2018: தேனி, ”பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,”என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார். தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது[11]: “கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதே வழக்குப்போட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னை குறித்து ஸ்டாலின், வைகோ, சீமான் பேசாதது, வராதது ஏன். இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் ரத்து செய்யவேண்டும்”, என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[12]. எச்.ராஜா, பாதிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை நேரில் சென்று, கண்டு, நலம் விசாரித்தார். இவ்வாறு “இந்துக்களை” ஒன்று சேர்க்கும்முயற்சியில், பிஜேபி ஈடுபடும் நேரத்தில், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “இந்து தலித்துகள்” என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டன. முன்னெரே குறிப்பிட்டப் படி, எஸ்சி என்றாலே இந்துதான் எனும்போது, “இந்து தலித்” பிரயோகம் தேவையில்லை.
© வேதபிரகாஷ்
13-05-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி பொம்மிநாயக்கன்பட்டி மோதல்– இரு சமூகத்தினரையும் சந்தித்து திருமாவளவன் சமாதான பேச்சு!, Posted By: Hemavandhana Published: Saturday, May 12, 2018, 18:10 [IST] .
https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-is-the-comfort-the-periyakulam-incident/articlecontent-pf307398-319537.html
[2] விகடன், `மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்!’ − பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன்,வீ.சக்தி அருணகிரி, Posted Date : 16:30 (12/05/2018) Last updated : 16:30 (12/05/2018)
[3] https://www.vikatan.com/news/tamilnadu/124849-thirumavalavan-visited-bomminayakanpatti.html
[4] ஈநாடு.இந்தியா, இஸ்லாமியர்-தலித் மோதல் எதிரொலி: திருமாவளவன் ஆறுதல்!, Published 12-May-2018 17:59 IST
[5] http://tamil.eenaduindia.com/State/South/Theni/TheniDistrict/2018/05/12175910/IslamDalit-conflict-Thirumavalavan-comfort.vpf
[6] தினசரி, திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள், பொதிகைச்செல்வன், மே.12, 2018. 6.37 மாலை.
http://dhinasari.com/local-news/madurai-news/38487-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81.html
[7] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு, மே 13, 2018, 03:45 AM
[8] https://www.dailythanthi.com/News/State/2018/05/13013352/Thirumavalavan-comfort-for-the-victims-of-the-riots.vpf
[9] தினமலர், காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் திருமாவளவன் குற்றச்சாட்டு, Added : மே 13, 2018 05:31
http://www.dinamalar.com/news_detail.asp?id=2020083
[10] சங்கராச்சிரியார் முன்பு, பொன்.ராதாகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தார், சுப்ரமணியம் சுவாமி, இணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்றெல்லாம் படம் போட்டு விவாதிக்கும் ஆட்கள் இதையெல்லாமும் கவனிக்க வேண்டும்.
[11] தினமலர், இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், Added : மே 13, 2018 04:25.
[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=2020009
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அடிப்படைவாதம், அழிப்பு, அழிவு, அழுக்கு, அவதூறு, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்கள், எஸ்சி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சமரசப்பேச்சு, சமரசம், திருமா, திருமா வளவன், திருமாவளவன், தீண்டாமை, துருக்க, துருக்கன், துருக்கர், துருக்கி, துலுக்க, துலுக்கன், துலுக்கப்பட்டி, துலுக்கர், துலுக்கி, மசூதி, மசூதி தெரு, முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லிம் பிரச்சினை, முஸ்லீம் ஜாதி
Tags: உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எச்.ராஜா, கலவரம், கலாட்டா, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், தலித், தலித் இந்து, தலித் முஸ்லீம், திருமா, திருமா வளவன், திருமாவளவன், துலுக்கச்சி, துலுக்கன், துலுக்கப்பட்டி, துலுக்கர், துலுக்கி, தேனி, தேவதானப்பட்டி, பாஜக, பொம்மிநாயக்கன்பட்டி, முஸ்லிம் தெரு, முஸ்லீம்கள், மோதல்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 7, 2017
கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (2)

திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர்: இதுபற்றிய தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதால் இருதரப்பினரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதுகுறித்து அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பிறகு இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒரு தரப்பினர் கோவிலில் திருவிழாவை நடத்துவோம் என்றும், அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது ஒரு தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதான் துலுக்கரின் லட்சணம் என்று தெரிந்து விட்டது! செக்யூலார் நாட்டில் துலுக்கருக்கு உரிமைகள் இருந்தால், இந்துக்களுக்கு இல்லை என்று எப்படி இருக்கலாம். இதனால் தான் அடக்கப் படும் இந்துக்கள் பொங்கி எழுகிறார்கள்.

ஜூன் 2016ல் முஸ்லிம்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டது[1]: இந்தியா, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜமாத்தலைவர் மீராமுகைதீன், மசூதி இமாம் ஜாபர்அலி தலைமையில் முஸ்லிம்கள், பூஜைக்கு உரிய தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாகிகள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். முஸ்லிம்கள், யாகசாலை பந்தலுக்கு முன் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினரும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஜமாத் தலைவர் மீரா முகைதீன், ‘மத பாகுபாடு இன்றி ‘மாமா’, ‘அண்ணன்’ என்ற உறவு முறை சொல்லித் தான் இன்று வரை பழகி வருகிறோம். இல்ல விழாக்களில் இருமதத்தினரும் பங்கேற்க தவறுவது இல்லை. இந்த உறவு என்றும்தொடரும்,’ என்றார். மசூதி இமாம் ஜாபர் அலி கூறுகையில், ‘ரமழான் நோன்பு காலத் தடையை கடந்து கோயிலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்,’ என்றார். ஆனால், இதை பதிவு செய்த முஸ்லிம் கேட்பது[2], “எங்கே செல்கிறது முஸ்லிம் சமூகம்?”! அதாவது, “இந்து-முஸ்லிம்” வளர்க்கலாம் என்றாலும், தூண்டிவிடும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வரும் போது, தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்?: இது ஒருபுறம் இருக்க, கிச்சிபாளையம் மெயின்ரோட்டில் ஒரு தரப்பினரும், பிரிவு ரோட்டில் மற்றொரு தரப்பினரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் (பொறுப்பு) மாதேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வருவதாகவும், ஆனால் தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்று ஒரு தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், அந்த தகவலை மற்றொரு தரப்பினரிடம் தெரிவித்தனர்.

மதவாத காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: அவர்கள் சொல்லியது மதவாதமாக இருந்தது. ஆண்டாண்டுகளாக கோவில்கள் இருக்கும் போது, திடீரென்று முஸ்லிம்கள் வந்து, முழுத் தெருவையும் ஆக்கிரமித்துக் கொண்டு, எங்கள் தெருவின் வழியாக வராதே என்பது எப்படி சட்டப் படி சரியாகும். அவர்களைத் தானே, போலீஸார் முதலில் தடுத்திருக்க வேண்டும்? அதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் தலா ஐந்து பேர் வீதம் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[3]. இதனால் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்[4]. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதையொட்டி கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. மறியலில் ஈடுபட்டு, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 85 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6].

ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை?: மனித நேயம், மத நல்லிணக்கம், ஒற்றுமை, அமைதி என்றால் பேசினால் வந்து விடாது. மக்களை மக்களாக மதிக்கத் தெரியாமல் இருந்தால், முஸ்லிம்களும் அமைதியாக மற்றவரோடு வாழ முடியாது. இதனால் தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டும், இந்தியன் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றதை போல மற்ற முஸ்லிம்கள் ஏன் செய்ய முடியவில்லை. ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை. மாறாக தடுக்க, எதிர்க்க, அவதூறு செய்ய ஏன் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னணி என்ன? அதிலும் முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
06-08-2017

[1] ஜைஜில் நியூஸ், எங்கே செல்கிறது நம் சமூகம்? கோயில் கும்பாபிஷேகத்தில் முஸ்லிம்(?)கள், By admin3, June 18, 2016
[2] http://www.zajilnews.lk/37777
[3] The Hindu, Timely intervention by police prevents clash between two groups in Salem, SPECIAL CORRESPONDENT, SALEM,AUGUST 03, 2017 07:11 IST, UPDATED: AUGUST 03, 2017 07:12 IST.
[4] http://www.thehindu.com/news/cities/Coimbatore/timely-intervention-by-police-prevents-clash-between-two-groups-in-salem/article19412808.ece
[5] தினமலர், திருவிழா நடத்துவதில் மோதல்: சேலத்தில் 85 பேர் மீது வழக்கு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.4, 2017, 07:17.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1826492
பிரிவுகள்: அடிமை, அடையாளம், அத்தாட்சி, அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அழிவு, அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய விரோதம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், தீவிரவாதிகள், துலுக்கர், Uncategorized
Tags: ஆடி, ஆடி விழா, இந்துக்களின் உரிமைகள், உரிமை, எதிர்ப்பு, கரீம் காம்பவுண்ட், கிச்சிப் பாளையம், கிச்சிப்பாளையம், சேலம், திருவிழா, தீக்குளிப்பு, துலுக்கர், மறியல், மாரியம்மன், முளைப்பாறி, விழா
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 28, 2015
தங்களது மகன்களது உயிர்களைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்கள், மற்ற உயிர்களைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும் – மகன்களை ஜிஹாதிகளாக வளர்த்திருக்கக் கூடாது, தடுத்திருக்க வேண்டும், அப்பொழுதே மாற்றியிருக்கவேண்டும்!

Panna Ismail, Bilal Malik, Police Fakruddhin – இவர்கள் ஏன் மாறவில்லை?
ஊடகங்களில் இந்நால்வர்களின் புராணங்கள் அதிகமாகவே உள்ளன.தொகுத்து சுருக்கமாகக் கொடுக்கப்படுகிறது.

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,
- போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin] –மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன். அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்[1].

பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு
- பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], – இவரது வீடு மேலப்பாளையம் ஆமீம்புரத்தில் உள்ளது. கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பன்னா இஸ்மாயில் மீது உள்ளது. தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்திலும் இவர் செயல்பட்டு வந்துள்ளார். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.

பிலால் மாலிக், – அல்-உம்மா,
- பிலால் மாலிக் [Bilal Malik] – டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012].; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல, சென்ட்ரல் குண்டு வெடிப்பு
- அபுபக்கர் சித்திக் – அபுபக்கர் சித்திக் என்ற காக்கா (46). நாகூரைச் சேர்ந்தவன். டாக்டர். வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012] கடந்த 1995–ம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் தங்கமுத்து கிருஷ்ணனை கொலை செய்வதற்காக இவன் புத்தக பார்சலில் குண்டு வைத்து அனுப்பினான். இதனை வாங்கி பிரித்து பார்த்த அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல, மயிலாடு துறையில் இந்து அமைப்பை சேர்ந்த ஜெகவீர பாண்டியன் என்பவரை கொலை செய்வதற்கும், அபுபக்கர் சித்திக் புத்தக குண்டுகளை அனுப்பினான். ஆனால், தபால் நிலையத்தில் வைத்தே கண்டுபிடித்து புத்தக குண்டு செயல் இழக்க வைக்கப் பட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கும் அபுபக்கர் சித்திக் மீது உள்ளது. இப்படி கடந்த 18 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வரும் சித்திக், பா.ஜக. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்[2]. சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் மற்றும் மலேசியாவில் அபுபக்கர் சித்திக் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது[3]. தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல – சென்ட்ரல் குண்டுவெடிப்பு
ஜிஹாதிகள் உருவாக்கப்படிவது எவ்வாறு?: இந்நால்வர்களைத் தவிர மற்ற குற்றாவாளிகள், தீவிரவாதிகள் முதலியோரைப் பற்றி பார்க்கும் போது, அவர்கள் எப்படி மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல், மனித உயிர்களைப் பறிக்கும் அரக்கர்களை விட, மிகக்கொடியக் குரூர ஜிஹாதிகளாக மாறியுள்ளனர் என்று தெரிகிறது. இவர்கள் இவ்வாறு மாறுவதற்கு, மற்ற ஜிஹாதிகள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. குழந்தையாகப் பிறந்து, வளரும் போது பெற்றோர்களிடம் தான் அக்குழந்தைகள் முதலில் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், அப்பொழுதே அடிப்படைவாதம் கற்பிக்கப் பட்டால், அக்குழந்தைகள் அத்தகைய மனப்பாங்குடன் தான் வளரும். பிறகு பள்ளிக்குச் செல்ல வேண்டும்[4]. அங்கும் அத்தகைய மதபோதனைகள், மக்களை “மோமின்-காபிர்” என்று பிரித்துப் பார்ப்பது, “தாருல்-இஸ்லாம் மற்றும் தாருல்-ஹராப்” என்ற போரிடும் இடங்களை உருவாக்குவது, “ஜிஹாத் என்ற புனிதப்போரின்” தத்துவத்தை மனங்களில் ஏற்றி, உலகத்தில் உள்ள காபிர்களை எப்படியாவது ஒழ்த்துக் கட்டுவது என்றெல்லாம் கற்றுக் கொடுத்தால், அவர்கள் அப்படித்தான் வளர்வார்கள், பெரியவர்கள் ஆவார்கள். கல்லூரிகளில் படிக்கும் போது கூட அத்தகைய எண்ணங்களை வைத்துக் கொண்டிருந்தால், தமது படித்த-திறமைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்ற யோசனை தான் வரும். பட்கல் சகோதர்களின் செயல்களே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். படித்தப் படிப்பு, எப்படி குண்டுகளைத் தயாரிக்கலாம் என்றுதான் புத்தி போயிற்று. பெற்றோர், மற்றோர் இவர்களை ஜிஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் பாராட்டிப் பேசி, வாழ்த்திக் கொண்டிருந்தால், அவர்கள் மனம் மாறமாட்டார்கள். இஸ்லாமிய இறையியலில் அத்தகைய பேச்சுக்கே இடமில்லை.

தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் – கொலை-குண்டுவெடிப்பு முதலியன
- காஜா மொய்தீன் [Khaja Moideen], ஜூன்.2014ல் அம்பத்தூரில் கே.பி.எஸ். சுரேஷ் குமார் கொலைக்காக கைது செய்யப்பட்டான். இப்பொழுதைய ஜெயில் கலவரத்திற்கு வித்திட்டவன் இவன் தான் என்று கருதப்படுகிறது[5].
- முன்னா [Munna alias Mohammed Rafiq] – கிச்சன் புகாரிக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தான்.
- கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip],
- அஷ்ரப் அலி (34). கோவையை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தேடப்படுபவர்.
- அயூப் என்ற அஷ்ரப் அலி (33). இஸ்லாம் டிபென்ஸ் ஃபோர்ஸ் (ஐடிஎப்) என்ற அமைப்பை சேர்ந்தவர். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குண்டு வைக்க திட்டம் தீட்டியது தொடர்பாக வழக்கு. இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது[6].
- இப்ராகிம் (31). என்டிஎப் இயக்கத்தில் இருந்த இவர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் (32). மேலபாளையத்தை சேர்ந்தவர். சென்னை விக்டோரியா அரங்கில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வருபவர்.
- முஜிபுர் ரகுமான் என்ற முஜி (38). கோவையை சேர்ந்தவர். 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
- முஸ்டாக் அகமது (53). வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர். அல்-உம்மா அமைப்போடு தொடர்புடையவர். இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். தீவிரவாதிகளுக்காக டெட்டனேட்டர் வாங்கி வந்தவர். இவரை பிடித்து கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
- ஜாகுபர் சாதிக் என்ற சாதிக் என்ற டெய்லர் ராஜா (28). கோவையை சேர்ந்தவர். அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது[7].
- நூகு என்.பி என்ற ரஷீத் (21). கேரளா கல்குட்டையை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்.
- குஞ்சு முகமது என்ற கனி (42). கேரளா மலப்புரத்தை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்.
© வேதபிரகாஷ்
28-09-2015
[1] http://www.maalaimalar.com/2013/07/25113951/hindu-munnani-leaders-murder-p.html
[2] http://www.maalaimalar.com/2013/10/06141843/18-year-wanted-militants-abupa.html
[3] http://www.puthiyathalaimurai.tv/chennai-bomb-blast-incident-enquiry-with-criminals-141123.html
[4] இங்கும் மதரஸாக்களில் படித்தால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று விளக்கவேண்டிய அவசியல் இல்லை. இன்றைக்கு தலிபான்கள், ஐசிஸ், ஐ.எஸ் போன்றவையே உலகத்திற்கு வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டிருக்கின்றன.
[5] Prison officials said Khaja Moideen, arrested in connection with Hindu Munnani leader K P S Suresh Kumar murder in Ambattur in June 2014, was the brain behind the clash.
http://www.nyoooz.com/chennai/210598/back-door-diplomacy-by-2-unarmed-officers-helped-avert-crisis-at-puzhal
[6] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943
[7] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943
பிரிவுகள்: அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, செல்போன், ஜெயிலர், புழல், புழல் சிறை, புழல் ஜெயில்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காபிர், சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, ஜிஹாத், ஜெயிலர், ஜெயில், பக்ருதீன், புழல், புழல் ஜெயில், போலீஸார், வார்டன்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 28, 2015
தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?

puzhal_ஜெயிலர், வார்டன், போலீஸ் தாக்கப்படல்
புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்[1]: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[2]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”. இவையெல்லாம் யாரோ சொல்லிக் கொடுத்து பேசப்பட்டவை என்று நன்றகவே தெரிகிறது[3].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், ஒஇலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,
ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[4]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[5], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[6]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும்” என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[7]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது. பன்னா இஸ்மாயில் நேற்று மதியம், மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் ரிமாண்ட் கைதிகள் உள்ள 2 வது ‘செல்’லில் அடைக்கப்பட்டார். அவரை சிறை காவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[8].

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு
பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி: சிறை நிலவரம் குறித்து மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கிடையில் பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது[9]: “சிறையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன். பாதுகாப்பு மிகுந்த சிறையில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறைக்காவலர்களை எப்படி தாக்க முடியும். காயம்பட்ட அவர்களை மட்டும் காண்பிக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் அவர்களை சந்திக்க முயன்ற போது, ஜெயிலர் எங்களை மோசமாக நடத்துகிறார். நோன்பு கஞ்சியை கூட சரியாக தருவதில்லை. மேலும் எங்களிடம் வேண்டுமென்றே வம்பு செய்கிறார் என்று கூறினார்கள். நாங்கள் இது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் அங்கு கலவரம் ஏற்படுத்தி, அவர்களை என்கவுண்ட்டர் செய்ய தான் திட்டம் தீட்டி உள்ளனர். முதியவர்களாகிய நாங்கள் வெகு தூரத்திற்கு சென்று அவர்களை சந்திக்க முடியவில்லை. எனவே அரசு அவர்களை நாங்கள் எளிதில் சந்திக்கும் வண்ணம் மதுரை அல்லது திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். நாங்கள் அடிக்கடி சந்திப்பதால் அவர்கள் திருந்த அதிக வாய்ப்பு உள்ளது. அதை விட்டு, விட்டு அவர்களை தனித்தனியாக பிரித்து என்கவுண்ட்டர் செய்ய சதி நடப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது. அவர்களை அருகில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்[10]. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜாகிர் உசேனை அடித்து கலாட்டா செய்து, கலவரம் உண்டாக்கி ஜெயிலர், வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கியதால், அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

“திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”: குண்டுவெடிப்பு, கொலைகள், அப்பாவி மக்களின் உயிர்பலி, குடும்பங்கள் அதோகதி, தந்தையர்களை இழந்த மகன்கள் – மகள்கள், கணவர்களை இழந்த மனைவிகள், மகன்களை இழந்த தாயார்கள், சகோதர்களை இழந்த சகோதரிகள், இவர்களைப் பற்றி இந்த தாய்மார்கள் யோசித்துப் பார்த்திருப்பார்களா? பிறகு மகன்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட எப்படி சம்மதம் கொடுத்தனர், ஒப்புக் கொண்டனர்? அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவஎகளை அப்பொழுதே திருத்தி இருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? “திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”, என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாமானது? இவர்கள் திருந்தியிருந்தால், புழல் ஜெயிலில் இத்தகைய கலவரம், தாக்குதல், முதலியன நடந்திருக்காதே? சித்தூரில் குடும்பம் முழுவதும் சேர்ந்து கொண்டு தானே இதே தீவிரவாதிகளுக்கு உதவி செய்தனர்? குழந்தைகளை முன் வைத்து, தப்பிச் செல்லப்பார்த்தனரே? அவர்களுக்கு உண்மைகள் எல்லாமே தெரிந்து தானே இருந்திருக்க வேண்டும். இல்லாமலா அவர்கள் போலீஸாரையும் எதிர்த்து வேலை செய்திருக்கிறார்கள்?
© வேதபிரகாஷ்
28-09-2015
[1] தினமலர், பிலால் மாலிக், பக்ருதீன் உயிருக்கு ஆபத்து போலீஸ் மீது சகோதரர் குற்றச்சாட்டு, செப்டம்பர்.26, 2015: 22.29.
[2] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].
[3] முன்பு பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதானவர்களை, எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கைதானவர்களின் மனைவிகள் வழக்கு போட்டார்கள், பேட்டி கொடுத்தார்கள், ஆனால், குற்றவாளிகள் தாம் என்றவுடன் அமைதியாகி விட்டன. விளம்பரம் கொடுத்த ஊடகங்களும் அடங்கிவிட்டன.
[4] விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)
Last updated : 16:05 (26/09/2015).
[5] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html
[7] http://www.vikatan.com/news/article.php?aid=52934
[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350856&Print=1
[9] மாலைமலர், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கை என்கவுண்டர் செய்ய சதி: உறவினர்கள் பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 6:23 PM IST.
[10] http://www.maalaimalar.com/2015/09/27182331/Police-Fakhruddin-Bilal-Malik.html
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அல் - உம்மா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், என்கவுன்டர், காவலர், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, கொலை, சிறை, ஜெயிலர், ஜெயில், புழல், வார்டன்
Tags: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், என்கவுன்டர், கலவரம், காபிர், சிறை, சிறைச்சாலை, ஜிஹாதி, ஜெயிலர், ஜெயில், புழல், போலீஸார், வார்டன்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 27, 2015
அல்–உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

Puzhal jail
புழல் சிறையில் பயங்கரமான குற்றவாளிகள் இருப்பது, போலீஸார் குறைவாக இருப்பது[1]: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் 230 பேரும், விசாரணை கைதிகள் 2003 பேரும், பெண் கைதிகள் 150 பேர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். 3 விதமான கைதிகளுக்கும் தனித்தனி ஜெயில்கள் விசாலமாக உள்ளது. போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முக்கிய பிரமுகர்களை தீர்த்து கட்டிய பயங்கரமான கைதிகளும் இங்கு அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2014ல் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது[2]. அப்போது என் கவுண்டரும் நடந்தது. இதில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழங்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தனை முக்கியமான சிறைக்கு பாதுகாப்பாக போலீஸார் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

Puzhal attacked -Puthiya thalaimurai – 25-09-2015
கொலைக்குற்றவாளிகள், தீவிரவாதிகள் எப்படி வசதிகளை சிறைகளில் அனுபவிக்கின்றனர்?: திரைப்படங்களில் தாம், சிறைக்குற்றவாளிகள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போல காட்டுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மையாகவே அத்தகைய வசதிகள் குற்றவாளிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, தீவிரவாதிகளுக்குக் கிடைக்கிறது என்று அஜ்மல் கசாப், அபு சலீம் போன்றோரின் விவரங்களிலிருந்து அறியப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து திருப்தி படுத்தினர். அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதால், கோடிக்கணக்கில் செலவான பணம் நின்றது. ஆனால், அபு சலீம் போன்றோர் இன்னும் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே 24-07-2010 அன்று காலை (சனிக்கிழமை) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டான்[3]. அதாவது, இந்திய சிறைச்சாலைகள் அந்த அளவுக்கு ஓட்டையாக உள்ளனவா அல்லது தீவிரவாதிகள் தங்களது ஆடிக்கத்தைச் செல்லுத்தி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வில் ஹியூம் என்ற குழந்தை கற்பழிப்பாளி புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டான் என்ற செய்திகள் வந்தன. இப்பொழுது, அச்சிறையில் கலவரம், அல்-உம்மா தீவிரவாதிகள் ஜெயில் வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கினர், செல்போன் வைத்திருந்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

Puzhal police attacked – chennai patrika- 25-09-2015
முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்[4]: கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை ஜெயிலர் இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்தார்[5]. அப்படியென்றால், செல்போனை யார் கொடுத்தது, எப்படி ஜெயிலின் உள்ளே சென்றாது போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர். இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[6]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர் இளவரசன் கைதிகளை தீவிரமாக கண்காணித்தார். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்[7]. அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது[8].

Puzhal attacked police admitted in Hospital – 25-09-2015
ஜாகிர் உசேனை சிறையிலேயே அல்–உம்மா ஆட்கள் அடித்தது ஏன்?: ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர். இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[9]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜாகிர் உசேன் சொன்னான், அதனால், அல்-உம்மா கும்பல் அவனை அடித்தது என்றால், சிறைக்குள்ளேயே அவர்கள் தங்களது ராஜ்யத்தை நடத்துகின்றனர் என்றாகிறது. மும்பை சிறைகளில் தான் அத்தகைய வசதிகளை பெறுகிறார்கள் என்றால், இங்கும் அதே நிலைதான் என்று தெரிகிறது. ஜெயிலில் கைதிகள் அடித்துக் கொள்வது, கலவரம் செய்வது, ஜெயிலரை அடிப்பது, தாக்குவது முதலியன போலீஸார் கட்டுப்பாட்டில் சிறை உள்ளதா அல்லது இந்த தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆட்டி வைக்கிறார்களா, இதன் பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றான.

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu
அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து ஜெயிலர் இளவரசனை தாக்குதல்: இந்த நிலையில் 25-09-2015 அன்று மாலை வழக்கம் போல் ஜெயிலர் இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கினார்கள்[10]. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலை குலைந்த ஜெயிலர் இளவரசன், அலறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தார். அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள். இதைப் பார்த்த சிறை காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர். ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள். கேரம் போர்டை உடைத்து அந்த கட்டையாலும் தாக்கினர். அப்போது கைதிகள் காவலர் முத்துமணியை இரும்பு கம்பியாலும் குத்தினர். இதில் ஜெயிலர் இளவரசன் மற்றும் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
© வேதபிரகாஷ்
27-09-2015
[1] Vivek Narayanan, Shortage of personnel hits secuirity at Puzhal prison, The Hindu, September.27, 2015.
[2] https://islamindia.wordpress.com/2013/10/05/tn-police-clash-with-jihadis-in-ap-one-policeman-killed/
[3]https://islamindia.wordpress.com/2010/07/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A/
[4] தினத்தந்தி, புழல் சிறையில் வார்டன் மீது தாக்குதல்:கைதிகள் 6 பேர் வேறு சிறைக்கு மாற்றம், மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST
பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST.
[5] The clashes in which two jail personnel were taken hostage and four others injured, was a fallout of an altercation over use of mobile phones in the prison and visitors bringing in prohibited food items. The Al Umma cadres attacked prison staff with carrom board and stones, the sources added.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews
[6] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.
தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.
[7] தினமணி, புழல் சிறையில் கைதிகள் – காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர், By சென்னை, First Published : 26 September 2015 01:49 AM IST.
[8]http://www.dinamani.com/tamilnadu/2015/09/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D—%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/article3047911.ece
[9] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.
தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.
[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=169216
பிரிவுகள்: ஆர்பாட்டம், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், என்கவுன்டர், கலவரம், கலாட்டா, கைதி, சாப்பாடு, சிறை, ஜிஹாதித்தனம், ஜிஹாத், பிரியாணி, புழல், வார்டன்
Tags: அப்துல் வகாப், அல் - உம்மா, இளவரசன், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், காஜா மொய்தீன், காபிர், கைதி, சிறை, ஜாகிச் உசேன், ஜெயில், தமீம் அன்சாரி, பன்னா, பிலால், புழல், மண்ணடி அப்துல்லா, முகமது ரபீக், முன்னா, ராஜா முகமது, வார்டன்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 17, 2015
மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!

A R REhmans reply to fatwa
மெசஞ்சர் ஆஃப் காட் என்ற ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர், ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையை சேர்ந்த’ ரஸா அகாடமி ‘ என்ற சன்னி முஸ்லிம் அமைப்பு ஃபத்வா விடுத்தது.லிரான் ஒரு ஷியா நாடு, இருப்பினும் இஸ்லாத்தை காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இன்றைய நாட்களில், சுன்னி நாடுகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்க்ஜள், அவர்களது மசூதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுதுள்ள தீவிரவாத இயக்கங்களும் சுன்னி ஆதரவு கோஷ்டிகளாக உள்ளன. ஐ.எஸ் / ஐசிஸ் போன்றவையும் ஷியா-விரோத இயக்கங்களாக இருக்கின்றன. இந்நிலையில், இப்படத்திற்கு சுன்னி அமைப்பு பத்வா கொடுத்துள்ளது வினோதமாக இருக்கிறது. மேலும் ரஹ்மான் போன்ற கலைஞர்களை இஸ்லாமிய அடிப்படவாதத்தில் சுருக்கிவிடும் வகையில் இந்த மிரட்டல் உள்ளது. சூபித்துவத்தில் பற்று கொண்ட ரஹ்மான் இஸ்லாத்தை பக்தியுடன் அணுகியுள்ளார். அவர் ஒரு சிறந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, அவரை சுன்னி-ஷியா சர்ச்சகளில் சிக்கவைக்க வேண்டிய தேவையும் இல்லை.
ஏ.ஆர். ரஹ்மானின் பொருட்செறிவு மிக்க பதில்: இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் ரஹ்மான் தனக்கு விடுக்கப்பட்டுள்ள ஃபத்வாவிற்கு பதிலளித்துள்ளார்[1]டாங்கிலத்தில் உள்ள அவரது பதிலை ஒவ்வொரு இந்திய முஸ்லிம், ஏன், இந்துவும் கூட படித்து அதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த படத்துக்கு இசையமைத்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. படத்தை இயக்கியதிலும் தயாரித்ததிலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அந்த பணியில் எனக்கு கிடைத்த ஆன்மீக தொடர்பான ஆத்ம திருப்தியை நான் பகிர விரும்பவில்லை[2]. இது எனது தனிப்பட்ட விஷயம் ” என கூறியுள்ளார்[3]. [அதாவது ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவேளை ஆன்மிகமாக உணர்வதற்கு, காணுவதற்கு பல சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை பற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவை ஒருவேளை உருவம் கொடுப்பது போன்ற நிலை ஏற்பட்டு விட்மோ என்ற அச்சம் தேவையில்லை என்று எடுத்துக் காட்டுகிறார்].

Ranbir-Kapoor-In-Rockstar-concert-03
முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?: ரஹ்மான் தொடர்லகிறாற், “ராஸா அமைப்பின் தலைவரான நூரி , ‘இது போன்ற படத்தை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை‘ என அல்லா என்னிடம் கேட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிலளித்துள்ள ரஹ்மான்[4], ”இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் அதே காரணத்திற்காகத்தான். ஒருவேளை அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்தை ஒருங்கிணைப்பது, அன்பை பற்றிய போதனைகள், ஏழைகளின் முன்னேற்றம், தர்ம சிந்தனை, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை தவிர்த்து விட்டு மனித இனத்துக்கு சேவை செய்வது போன்ற போதனைகளை உள்ளடக்கிய முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?”. கடைசிநாளில், உயித்தெழும் போது, அல்லா அவரவருக்கு ஏற்றபடி தீர்ப்பு கொடுப்பார், அந்நாளில், அல்லா அப்படி ஒருவேளை கேட்டால்…………..என்று ரஹ்மான் கேட்டுள்ளதில், அவரது ஆழ்ந்த பக்தி, இறையுணர்வு, அசைக்கமுடியாத நம்பிக்கை, அல்லாவை காணத்துணிக்கும் துடிப்பு என்று எல்லாமே வெளிப்படுகிறது. இசையால் இறைவனைக் காணத்துடிக்கும், அப்பக்தனின் ஏக்கமும் புரிகிறது. அத்தகைய கலைஞனை மிரட்ட வேண்டிய தேவையே இல்லை.

A R Rahman sufism
எல்லோரும் அமைதியாக, சந்தோஷமாக இருப்போம்: ரஹ்மான் தொடர்கிறார், “நபிகளை பற்றிய போதனைகளை முறையாக புரிந்து கொள்ளாமல், தவறான கருத்துகளை இணையங்களில் காண முடிகிறது[5]. காட்சி ஊடகங்கள் வழியாக சரியான விஷயங்களை கொண்டு புரிய வைக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன்[6]. மத சுதந்திரம் கொண்டுள்ள இந்திய நாட்டில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது, அதற்காக நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கிறோம்[7]. இங்கே எல்லா சமூகங்களும் குழப்பம் மற்றும் வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை வாழ்வதே நோக்கம்[8]. நான் இஸ்லாமியத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை அறிந்துள்ள அறிஞர் அல்ல. பிரச்னைகளை கருணையோடு எதிர்கொள்வாம். கண்ணியத்தோடு கையாள்வோம் வன்முறை வழியாக அல்ல. இந்த உலகத்திற்காகவும், எந்த நாட்டில் நாம் வாழ்கிறோமோ, அந்நாட்டை ஆசிர்வதிக்கவும், நாம் இதயப்பூர்வமாக மன்னிப்புக்காக வேண்டுவோம், அதுதான் மிக உயர்ந்த மற்றும் ஞானம் இவற்றின் தன்மை கொண்ட மதொப்பிக்குரிய மொஹம்மதை (PBUH) இறைஞ்சுவதாகும்‘‘, இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்[9]. அவரது உருக்கமான பதில் எல்லா ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது[10]. இதைவிட, ஒரு முஸ்லிம் என்ன சொல்லவேண்டும் என்று ராஸா அகடெமி எதிர்பார்க்கிறது?

A R Rahman sufism experiences felt
ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்: மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற அந்த அமைப்பு முகமது: மெஸஞ்சர் ஆஃப் காட் படத்திற்கு இசையமைத்தற்காக விடுக்கப்பட்ட ஃபத்வாவில் புனிதப்படுத்தும் கலீமா உறுதி மொழியை மீண்டும் எடுக்க வேண்டுமென்றும் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி , ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் திருமண பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தது. சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றி திரைப்படம் எடுப்பதே மிகவும் தவறானது என்று அந்த ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது[11]. இந்த நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று, தன் முயற்சிகளால் தமிழகத்துக்கும் தேசத்துக்கும் உலக அரங்கில் புகழ் ஈட்டித்தந்துள்ள ரஹ்மான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பக்க பதிவின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்.

ar-rahman-fatwa-reply-true muslim
ரஹ்மான் தாய்மதம் திரும்பவேண்டும்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே[12]. அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது[13]. வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து கூறியதாவது[14], “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல. எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்”, இவ்வாறு சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[15]. இந்துக்களுக்கு, ஒருவேளை அத்தகைய நிலை சிறிது சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ரஹ்மான் இதே நிலையில் உள்ளவரை, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முஸ்லிம்களில் நிறைய பேர் ஷிரிடி சாய்பாபா, புட்டபர்தி சாய்பாபா மற்ற இஸ்லாமிய பாபாக்கள் முதலியோரை நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்க்கலாம். ஆனால், சூபித்துவத்தில் ஊறிய அம்மனங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எப்படி ஒரு இந்து அல்லாவை ஏற்றுக் கொண்டு, இஸ்லாத்தை ஒதுக்கலாமோ, அந்நிலை தான் அது.
வேதபிரகாஷ்
© 17-09-2015
[1] விகடன், ரஹ்மான் பதில்: இறைதூதரின் படத்துக்கு இசையமைக்காதது ஏன் என்று அல்லா கேட்டால் என்ன சொல்ல முடியும்?, Posted Date : 12:08 (15/09/2015); Last updated : 12:08 (15/09/2015).
[2] “I am not a scholar of Islam. I follow the middle path and am part traditional and part rationalist. I live in the Western and Eastern worlds and try to love all people for what they are, without judging them,” said the double Grammy winner.
http://www.hindustantimes.com/music/ar-rahman-replies-to-fatwa-against-him-says-composed-music-in-good-faith/article1-1390446.aspx
[3] நக்கீரன், நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்; யாரையும் புண்புடுத்துவது எனது நோக்கமில்லை: ஏ.ஆர்.ரஹ்மான், பதிவு செய்த நாள் : 15, செப்டம்பர் 2015 (19:30 IST);மாற்றம் செய்த நாள் :15, செப்டம்பர் 2015 (19:30 IST).
[4] தினமணி, ஃபத்வா குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம், By DN
First Published : 15 September 2015 11:46 AM IST.
[5] தமிழ்.இந்து, நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்: ‘ஃபத்வா‘ விதித்த அமைப்புக்கு ரஹ்மான் அழுத்தமான பதில், Published: September 15, 2015 11:02 ISTUpdated: September 15, 2015 12:20 IST.
[6] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7654749.ece
What, and if, I had the good fortune of facing Allah, and He were to ask me on Judgement Day: ‘I gave you faith, talent, money, fame and health… why did you not do music for my beloved Muhammad film? A film whose intention is to unite humanity, clear misconceptions and spread my message that life is kindness, about uplifting the poor, and living in the service of humanity and not mercilessly killing innocents in my name’,” he continued.
[7]http://www.dinamani.com/cinema/2015/09/15/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/article3029453.ece
[8] Rahman bats for religious freedom in India, “We are indeed fortunate and blessed to live in a country like India where religious freedom is practiced and where the aim of all communities is to life in peace and harmony sans confusion and violence.”
http://www.thehindu.com/entertainment/music-director-ar-rahman-writes-back-after-fatwa/article7652238.ece
[9] “Let us set a precedent in clearing conflict with grace and dignity and not trigger violence in words or actions. Let us pray for forgiveness, and from our hearts bless those who suffer in the world and bless the country that we live in. To so pray is to reflect the noble and enlightened nature of our beloved Muhammad,” the musician concluded.
http://www.vikatan.com/news/article.php?aid=52444
[10] http://www.newsx.com/entertainment/10723-ar-rahmans-excellent-reply-to-the-fatwa-issued-against-him
[11] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151172
[12] தமிழிந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் ‘கர்–வாப்ஸி’-க்கு உகந்த நேரம் இதுவே: வி.எச்.பி., Published: September 16, 2015 17:34 ISTUpdated: September 16, 2015 17:34 IST
[13] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து சமூகம் புதல்வனுக்க காத்திருக்கிறது. ஏஆர்.ரஹ்மானை தாய் மதத்திற்கு அழைக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் Posted by: Sakthi Kumar Published: Wednesday, September 16, 2015, 22:50 [IST].
[14]http://tamil.thehindu.com/india/%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article7659610.ece
[15] http://tamil.oneindia.com/news/india/vhp-appeals-a-r-rahman-return-hinduism-235848.html
பிரிவுகள்: ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், அல்லா, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இறைத்தூதர், ஏ.ஆர்.ரஹ்மான், மொஹம்மது, ரஹ்மான்
Tags: ஃபத்வா, அனுபவம், அல்லா, ஆன்மீகம், இந்துக்கள், இரான், இறைத்தூதர், இறையுணர்வு, ஈரான், ஏ.ஆர்.ரஹ்மான், காலிப், சன்னி, சுன்னி, சூபி, சூபித்துவம், ச்ன்னி, திலிப் குமார், மொஹம்மது, ரஹ்மான், ஷியா
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 2, 2015
யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி
கே. வீரமணி, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்?[1]: தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை மனிதநேய அறிக்கை என்று மேலேயுள்ள விசயங்களைத் தொகுத்து கே. விரமணி வெளியுட்டுள்ளார். மும்பைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப் பட்டு சிறையிலிருந்த யாகூப் மேமனுக்கு அவசர அவசர மாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது – பல விமர்சனங்களுக்கு வழி வகுத்து விட்டது[2].
- மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிரான கலவரத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டனரே! அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
- நீதிபதி கிருஷ்ணா ஆணையம் குற்றவாளிகளைப் பட்டியலிட்டுக் காட்டியதே – அன்றைய பிஜேபி சிவசேனா ஆட்சி ஒரே ஒரு வரியில் கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுப்ப தாகக் கூறிடவில்லையா?
- மும்பைக் குண்டு வெடிப்பு என்பது அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் எதிரொலிதான்; நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அய்யப்பாடு- மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது ஏன்? இன்னும் சொல்லப் போனால் வழக்கு விசாரணை முறையாகக் கூடத் தொடங்கப்படவில்லையே ஏன்?
- இதன் பொருள் என்ன? நீதித்துறையும், ஆட்சித் துறை யும் நபர்களைப் பொறுத்து வளையும் – நெளியும் என்பதைத்தானே இது காட்டுகிறது! மனுதர்மத்தை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்களே!
- அத்வானியின் ரத யாத்திரை (1991 அக்டோபர்) காரணமாக ஏற்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 564 பேர்.
- மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி களான பெண் சாமியார் பிரக்யாசிங், சாமியார் அசிமானந்த், கர்னல் புரோகித் உள்ளிட்டோருக்கான வழக்கு விசாரணை ஏன் முடிக்கப்படவில்லை – உரிய தண்டனை ஏன் வழங்கப் படவில்லை?
- தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படட்டும்! தூக்குத் தண்டனையே கூடாது; இது மிகவும் காட்டு விலங்காண்டித்தனம்; மனித நேயத்துக்கும், உரிமைக்கும் எதிரானது என்று குரல் உலகெங்கும் கிளர்ந்தெழும் இந்தக் கால கட்டத்தில், இப்படியொரு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை கண்டிக்கத்தக்கது!
- மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் காட்டிய இந்த அசாதாரண நடைமுறைகள் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்து விடும். யாகூப் மேமன் தூக்குத் தண்டனையே கடைசியாக இருக்கட்டும்!

Yakub versus prohit, etc
தி இந்துவின் ஒருதலைப் பட்சமான கருத்துத் திணிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான விவரங்கள் “தி இந்து” (தமிழ்) இதழிலிருந்து எடுத்தாளப்பட்டவை ஆகும். தொடர்ந்து, தூக்குத்தண்டனை கூடாது, மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று யாகூப் மேமன் தூக்கிற்கு முன்னரும் பின்னரும் அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால், ஏன் தூக்குத்தண்டனை அல்லது மரணதண்டனை தேவை, மனிதத் தன்மையற்ற குரூர தீவிரவாதிகளுக்குக் கருணைக் காட்டக் கூடாது, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை, திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை யாரிடமிருந்தும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை அத்தகைய கருத்தே தேவையில்லை என்று “தி இந்து” மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பது போலிருக்கிறது. பிறகு, எப்படி அவர்களை சமநோக்குள்ளவர்கள், பாரபட்சமற்றவர்கள், உள்ள நாட்டி சட்டங்களை மதிப்பவர்கள், நீதிமன்றங்களை போற்றுபவர்கள் என்று கருத முடியும்?

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு
மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்: விக்கிப்பீடியாவின் விளக்கமும் பாரபட்மாக இருக்கிறது[3], “மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம்[4] தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன. மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.” சரி, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாத் பற்றி ஒன்றும் விவாதங்கள் இல்லையா?

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2
மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள் (1993 முதல் 2011 வரை): மும்பை, இந்தியாவின் வணிக-வியாபார தலைநகரம், பொருளாதார மையம் என்பதனால், தொடர்ந்து குண்டுவெடிப்பில் தாக்கப்பட்டு வருகின்றது. இதில் அப்பாவி-பொது மக்கள் பலிகடாக்களாக குரூரமாகக் கொல்லப்பட்டு வருகிறர்கள்.
- 12 மார்ச் 1993 – 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
- 6 டிசம்பர் 2002 – கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
- 27 ஜனவரி 2003 – வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .
- 14 மார்ச் 2003 – முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்,
- 28 ஜூலை 2003 – காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் .
- 25 ஆகஸ்ட் 2003 – இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்
- 11 ஜூலை 2006 – தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை
- 26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை – ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர்.
- 13 ஜூலை 2011 – வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்.
இவற்றில், நிச்சயமாக பழிவாங்கும் எண்ணம் எல்லைகளை மீறி, இந்தியாவையே அழிக்க வேண்டும் என்ற வெறித்தனம், குரூர சதிதிட்டம், நாசகாரத்தனம் முதலியவை அடங்கியிருப்பது வெளிப்படுகிறது. இது தீவிரவாதத்தை விட மிக-மிக அதிகமானது. அதனை எப்படி, எவ்வாறு, ஏன் அறிவிஜீவிகள் உணராமல் இருக்கின்றனர் என்று புரியவில்லை. ஒருவேளை அவர்களும் அந்த அதி-தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
02-08-2015
[1] விடுதலை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , சனி, 01 ஆகஸ்ட் 2015 14:47 http://www.viduthalai.in/e-paper/106140.html
[2] கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், சென்னை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , விடுதலை, 1-8-2015
[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
[4] நீதிமன்றங்களை அவ்வாறு கூறலாமா, சரி பிறகு உயிர் எடுப்பவர்களை, கொலைகாரகளை, தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை என்னென்று கூறுவார்கள்?
பிரிவுகள்: அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், மும்பை, மேமன், யாகுப், யாகுப் மேமன், யாகூப், யாகூப் மேமன்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கைது, கொலை, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டைகர் மேமம், தாவூத் இப்ராஹிம், மிதிக்கும் இஸ்லாம், மும்பை, யாகுப், யாகுப் மேமன், யாகூப், யாகூப் மேமன்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 2, 2015
யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

1993 Mumbai blast- who pay for the victims.1
மார்ச். 2013 – சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12–ந்தேதி அன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 12 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தீர்ப்பில் யாகுப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.2
பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது – சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் மூலம் அறிவித்தது (மார்ச்.2013): மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.3
போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் (மார்ச்.2013): போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது[1]. குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடுமையான தடா சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்த கிரிமினல் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். தற்போது கோர்ட் சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுதைய தீர்ப்பைப் படித்தறிய வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால், செக்யூலரிஸ போர்வையில், காங்கிரஸ்காரர்கள் தங்களது வாய்களைத் திறந்து உளாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

1993 Mumbai blast- who pay for the victims.4
காங்கிரஸ் தலைவர்கள் யாகுப்பின் தூக்கிற்கு வருத்தப் பட்டது (ஜூலை.2015): யாகுப் மேனன் 30-07-2015 அன்று காலை தூக்கிலிடப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “அரசு இதே போல, மற்ற எல்லா தீவிரவாத வழக்குகளிலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று டுவிட்டரில், தனது கருத்தை வெளியிட்டார்[2]. பல நேரங்களில் விசித்திரமாக பேசி வரும் இவர், இதே வேகத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட வேண்டும் என்று கமென்ட் அடித்தார்[3]. சசி தரூர், “அரசு ஒரு மனிதனை தூக்கிலிட்டது குறித்து வருத்தமடைகிறேன். அரசு மூலம் நடக்கும் கொலைகள் நம்மையும் கொலைகாரர்களாக்கி விடும். கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல”, என்றெல்லாம் கமென்ட் அடித்தார்[4]. ஒருவேளை தனது மனைவி மர்ம மரணத்தில் / கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் தான் சம்பந்தப் பட்டிருப்பதால், அவ்வாறு பேசினாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel
ஜூலை 30.2015 காலை தூக்கிலிடப்பட்ட நாள்: உச்ச நீதிமன்ற அமர்வு அந்த நேரத்தில் கூடி, மரண தண்டனையை நிறுத்தக் கோரும் குற்றவாளியின் மனுவை ஆய்வு செய்தது. ஆனால் “மிகுதியான அளவு காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டே மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் காலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். யாகூபின் அண்ணன் சுலைமான் உடலைப் பெற்றுக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்றார். மாஹிமில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக, மும்பை முழுவதும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மும்பை பகுதியான மாஹிம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை இஸ்லாமிய முறைப்பட்டி யாகூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மும்பையில் இவர்களது குண்டுவெடிப்பில் பலியான 257 ஆத்மாக்களும் சாந்தியடைந்தன என்று அவர்களது உறவினர்கள் கூறிக்கொண்டார்கள். இதை ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை, மனித உருமைகள் பேசுபவர்களையும் கண்டுகொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்[5] கூறும்போது, “யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல” என்றார். [இதை ஏற்கெனவே அதிகாரிகள் மறுத்துள்ளனர், ஏனெனில் அதிகாரிகளுக்கு அத்தகைய பேரம் பேசவும், எந்தவித தண்டனை குறைப்பு உத்திரவாதம் கொடுக்கவும் சட்டப்படி உரியையும், அதிகாரமும் இல்லை. எனவே, வழக்கம் போல கம்யூனிஸ்டுகள், இறந்தவரின் கருத்தைக் குறிப்பிட்டு குழப்ப முயற்சி செய்கின்றனர்]
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். [இவரது கருத்தும் அர்த்தமில்லாதது, பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு, முறைப்படி கருணை மனு, அது மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனு என்று எல்லாவற்றையும் விசாரித்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வைத்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாது].
© வேதபிரகாஷ்
02-08-2015
[1] இதனை செக்யூலரிஸவாதிகள், யாகுப்-ஆதாரவாளர்கள் கண்டு கொள்வவதில்லை.
[2] Congress general secretary Digvijaya Singh fired the first salvo, saying that the BJP- led government should show “similar commitment” in all cases of terror as it showed in the case of Yakub Memon. “I hope similar commitment of the government and the judiciary would be shown in all cases of terror, irrespective of their caste, creed and religion,” he said in a tweet following Memon’s execution in the Nagpur central jail on Thursday morning (30-07-2015).
[3] http://indianexpress.com/article/india/india-others/show-same-urgency-in-other-terror-cases-digvijaya-singh-on-yakub-memons-hanging/
[4] Party colleague and former union minister Shashi Tharoor said he was “saddened” by Memon’s execution.”Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too,” Tharoor tweeted. “There is no evidence that death penalty serves as a deterrent, to the contrary in fact. All it does is exact retribution, unworthy of a government,” the Thiruvananthapuram parliamentarian said.
[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/article7484832.ece
பிரிவுகள்: 1993, அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இப்ராஹிம், உயிர், உரிமை, கருணை, கருணை மனு, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, தாவூத் இப்ராஹிம், மனித உயிர், மும்பை, மும்பை குண்டு, மும்பை குண்டுவெடிப்பு, மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இப்ராஹிம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உயிரை எடுப்பது, உயிர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, கைது, கொலை, கொலை செய்வது, கொலைவெறி, செக்யூலரிஸம், ஜிஹாத், டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், தூகுத் தண்டனை, தூக்கு, மதவெறி, மரண தண்டனை, மரணம், மும்பை, மும்பை குண்டுவெடிப்பு, மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன்
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்