ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)
இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.
மோகன்பகவத்மற்றும்ஐந்துமுஸ்லீம்சமூகதலைவர்களிடையேஅண்மையில்நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுவதைமற்றும்காஃபிர் (முஸ்லீம்அல்லாதவர்களுக்குகுறிக்கபயன்படும்சொல்) போன்றபிரச்சனைகள்குறித்துபேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தைசுமூகமானசூழலில்நடைபெற்றது. கூட்டத்திற்குப்பிறகு, முஸ்லிம்சமூகத்துடன்தொடர்ந்துதொடர்பில்இருக்கநான்குமூத்ததலைவர்களைபகவத்நியமித்தார். எங்கள்பக்கத்தில், ஆர்எஸ்எஸ்உடனானபேச்சுவார்த்தையைதொடரமுஸ்லீம்மூத்ததலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மற்றும்தொழில்வல்லுநர்களைநாங்கள்நியமிக்கஉள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன்மீதுஎங்களுக்கும்அக்கறைஉள்ளது. பசுவதையில்ஈடுபட்டால், சட்டத்தின்கீழ்தண்டிக்கப்படவேண்டும்என்றுகூறினோம். காஃபிர்என்பதுஅராபியமொழியில்நம்பிக்கையற்றவர்களைகுறிக்கபயன்படுத்துவது. இதுதீர்க்கப்படமுடியாதபிரச்சினைஅல்லஎன்றுஅவரிடம்கூறினோம். அதேபோல்இந்தியமுஸ்லீம்களைபாகிஸ்தானியர்அல்லதுஜெகாதிஎன்றுகூறும்போதுநாங்கள்வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.
நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நல்லிணக்கத்தைவலுப்படுத்தவும், உள்உறவுகளைமேம்படுத்தவும்முஸ்லீம்மதகுருகளைதலைவர்களைசந்தித்துவருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6].. மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8]. மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].
தீவிரவாததொடர்புகள்நீங்கவேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன்பகவத்– முஸ்லிம்தலைவர்கள்சந்திப்பு: பசுவதைஉட்படமுக்கியபிரச்னைகள்பற்றிபேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.
அக்டோபர் 2021ல்அப்துல்லாமீதுகுற்றப்பத்திரிக்கைத்தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1]. இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.
இஸ்லாமியஅடிப்படைவாதம்தூண்டும்துண்டுபிரசுரங்கள்: சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?
கிலாபத்இயக்கம்நடத்தும்அடிப்படைவாதமுஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
அதே பகுதியை சேர்ந்த முகமதுயா சின் (30),
காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)
இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.
போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர்.
14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள்மீதுவழக்குத்தொடரப்பட்டது[7].
பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),
இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று, “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
[3] தமிழ்.இந்து, 3 பேருக்குஐ.எஸ்உடன்தொடர்பு? – தஞ்சையில்என்ஐஏசோதனை: முஸ்லிம்கள்போராட்டத்தால்பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM
மிலேச்சன்திப்புவுக்குசிருங்கேரிஆச்சாரியார் “சண்டீஹவனம்” செய்து, ஜாதகம்கணித்துக்கொடுத்தாரா?: எதிரிகளை வெல்ல மற்றும் தனது அரசின் மேன்மைக்கு, சங்கராச்சாரியாரை தினமும் மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்யுமாறு வேண்டிக் கொள்கிறான்[1]. இங்கு எதிரிகள் என்றால் “இந்துக்கள்”, அதிலும் “ஹிந்து சாம்ராஜ்யம்” உருவாக்க பாடுபடும் மராத்தியர். அப்படியென்றால், சங்கராச்சாரியார் இந்துக்களுக்கு எதிராக மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்தாரா? இன்னொரு கடிதத்தில் தனது ஜாதகத்தைக் கணித்துத் தருமாறு சொல்கிறான். உண்மையிலேயே சங்கராச்சாரியார் அவ்வாறு செய்தாரா, இல்லையா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாம் சாஸ்திரங்களும் தெரிந்தவர், எப்படி “மிலேச்சனுக்கு” அவ்வாறு அருளினார் என்பதுதான் கேள்வி. மேலும் மிலேச்சனுக்காக அவ்வாறு செய்தார் என்று எந்த மடமும் ஒப்புக்கொள்ளாது. மேலும், ஜோதிடம் பார்க்க சில பிராமணர்களை அரசவையிலேயே வைத்திருந்தான் எனும் போது, இது அதிகமாகவேக் காணப்படுகிறது. ஏனெனில், எந்த சங்கரச்சாரியாரும், ஒரு முகமதியனுக்கு ஜாதகம் கணித்து கொடுத்தார் என்பதெல்லாம் பிதற்றலானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
What Sringeri informs about Tipu
திப்புஎழுதியதாகசொல்லப்படும்கடிதங்களுக்குஆதாரம்இருக்கிறதா?: ஏ. கே. சாஸ்திரி என்பவர் 1753-1799 ஆண்டுகளில் திப்பு சங்கராச்சாரியாருக்கு ஶ்ரீ சச்சிதானந்த பாரதி – III அனுப்பியதாக சொல்லப்படும் 47 கடிதங்களை பதிப்பித்தார்[2]. அதாவது, திப்பு அனுப்பியதாகத்தான் உள்ளது, பதிலுக்கு, இவர் அனுப்பியதாக எந்த கடிதமும் இல்லை. ஆகவே, இருவழி போக்குவரத்துக்கான ஆதாரம் இல்லை. கடிதங்களில் திப்புத் தரப்பில் உள்ளவற்றை, சிருங்கேரி ஆதரித்து சரித்திரம் போல அதன் தளத்தில் போட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆகவே, இக்கடிதங்களுக்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இடைக்காலத்தில் முகலாயர்கள் இந்துக்களை ஏமாற்ற அல்லாபுநிஷத், பாவிஷ்ய புராணம் முதலியவற்றை புழக்கத்தில் விட்டது போல, 18வது நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் அத்தகைய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இக்கடிதங்கள், “திப்புவின் கடிதங்கள்” என்று முன்னர் வெளியிடப்பட்ட எந்த புத்தங்களிலும் காணப்படவில்லை. எந்த விதத்திலும் ஒவ்வாத இத்தகைய போலித்தனமாக ஆதாரங்களை தவிர்ப்பதே நல்லது.
What Sringeri informs about Tipu.2
முகலாயர்மற்றும்திப்புபோன்றதீயசக்திகள்மக்களைக்கொல்லஅவற்றைஉபயோகப்படுத்தினர்: முகலாயர் மற்றும் திப்பு போன்றவர்கள் தீயசக்திகள் போன்று அறியப்பட்டிருந்ததால், மக்களைக் கொல்ல, அவற்றை – வெடியுப்பு, வெடிமருந்து போன்றவற்றை – உபயோகப்படுத்தினர் என்று பறைச்சாற்றிக் கொண்டால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் என்பதெல்லாம், உள்ள சரித்திரத்தை மறைத்து, அளவுக்கு அதிகமான வர்ணனை எனலாம். மேலும் சரித்திராசிரியர்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களின் தோற்றம், வளர்ச்சி, விருத்தி (Origin, progress and development of Science and Technology) போன்றாவற்றை அறிந்து கொள்ளாமல், சரித்திரத்தை விதவிதமாக எழுதிக் கொண்டிருப்பது, எல்லோரையும் ஏமாற்றுவது போலாகும். இன்றைக்கு, விவரங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால், உலக நாகரிகங்களைப் பற்றி ஒப்புமைப்படுத்தி அறியமுடியும் நிலை உருவாகி இருப்பதால், எதை, யார் முதலில் கண்டுபிடித்தார் என்பது, அங்கங்கு இருக்கும் பொருட்களான ஆதாரங்கள் (material evidences) மூலம் தெரியவருகிறது.
Hazarat Tipu Urs celebrated.1
ஹஜரத்திப்புசுல்தான்உர்ஸ்கொண்டாட்டம்: திப்புவை ஹஜரத் ஆகி, ஹஜரத் திப்புவுக்கு உர்ஸ் கொண்டாடத்தையும், முஸ்லிம்கள் நடத்தி வருகிறார்கள்[4]. ஜூன் 1999ல் திப்பு சமாதியில் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது[5]. 220 உர்ஸ் விழா மற்றும் படங்களை விவரங்களுடன் இங்கே காணலாம்[6]. இங்கு காந்திக்கு இணையாக திப்புவை வைத்திருப்பதால், இருவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்று எடுத்துக் கொள்ளாலாமா? முன்பு காந்தி விசயத்தில், அலி சகோதரர்களில் ஒருவரான, மொஹம்மது அலி, ஒரு கேடுகெட்ட முஸ்லிமை நான் மதிப்பேனே தவிர காந்தியை மதிக்க மாட்டேன், ஏனென்றால், அவர் ஒரு காபிர் என்றனர் [“In my eye, Gandhi is worse than a fallen Mussalman.”]. ஆக, இங்கு காந்தியை திப்புவுக்கு இணையாக வைத்து, உயர்த்துகின்றனரா அல்லது தாழ்த்துகின்றனரா என்று தெரியவில்லை. 223 உர்ஸுக்கு அழைப்பிதழ் “உர்ஸ்-ஏ-ஷரீப் முபாரக்” எல்லாம் அமர்க்களமாக அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. காந்தி மற்றும் திப்பு படங்களை ஒன்றாக வைத்து, மாலைப் போட்டு, தேங்காய் உடைத்து, ஊதுவத்திகள் ஏற்றி, வெற்றிலை-பாக்கு-பழங்கள் வைத்து, ஜோராக பூஜை செய்யப்பட்டது. இவற்றை புகைப்படங்களிலிருந்தே கண்டு கொள்ளாலாம். மைசூர் வக்ப் எஸ்டேட் இதற்கு ஆதரவு அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்கப்பட்டவையா என்று தெரியவில்லை. சமாதிகளை சின்னங்களாக வைக்கக்கூடாது; வணங்கக் கூடாது; விழா நடத்தக் கூடாது; என்றெல்லாம் ஆர்பாட்டமாக பிரச்சாரம் செய்யும் போது, இவற்றையெல்லாம் எப்படி முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?
Hazarat Tipu Urs celebrated.2
காஃபிர்–மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்றஎண்ணம்இருக்கும்வரையில்முஸ்லீம்முஸ்லீமாகத்தான்இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின்குணாதியம் (நடத்தை, பண்பு) எந்தஅளவிற்குதூய்மையாகஇருந்தாலும், எனதுமதத்தின் (இஸ்லாம்) பார்வையில்ஒருகுணாதியமேஇல்லாதஒருமுசல்மானைவிடதாழ்ந்தவராகத்தான்தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[7] – “ஆமாம், என்னுடையமதம்மற்றும்நம்பிக்கையின்படி, ஒருவிபச்சாரத்தனமுடையமற்றும்வீழ்ந்த (மிகமோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான்காந்தியைவிடஉயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[8].
Hazarat Tipu Urs celebrated.3
“ஷிர்க்” விவகாரங்களில்முஸ்லிம்களும், நாத்திகஅறிவுஜீவிகளும்இரட்டைவேடம்போடுவதேன்?: மொஹம்மது சமாதி-கல்லறையே ஷிர்க் என்று அழித்தவர்கள், திப்புவின் சமாதியை வைத்துக் கொண்டு ஏன் ஆர்பாட்டம் செய்கின்றனர் என்பதும் நோக்கத்தது. சைத்தானின் மீது கல்லெறிகிறேன் என்று, நெறிசல் ஏற்பட்டு ஹஜ் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அடிக்கடி இறக்கிறார்கள். உண்மையில் அல்லாவின் சக்தி பெரியதென்றால், அவர்களை அல்லா காப்பாற்றியிருக்கலாம். ஆனால், சாத்தான் வெற்றிக் கொள்வது போல, அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். திராவிட-நாத்திக வீரமணி “அல்லா ஏன் காப்பாற்றவில்லை”, என்று கேட்டு, “விடுதலையில்” கட்டுரை எழுதவில்லை. பகுத்தறிவாளிகள்-நாத்திகர்கள்-அறிவுஜீவிகளான தபோல்கர், பன்ஸரே, கல்புர்கி, முதலியோரும் பேசவில்லை, புத்தகங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, நாத்திகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்ற மாநிலங்களிலும் “செக்யூலரிஸ” ரீதியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால், அவர்களது பகுத்தறிவு, நாத்திகம், அறிவுஜீவித்தனம் முதலியவை வேலைசெய்யாது. ஆனால், முஸ்லிம்களே அவ்வாறு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, ஷிர்க் விசயத்தில் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெரிகிறது.
Hazarat Tipu Urs celebrated.4
ஒப்பீடு எப்படி செய்வது?: கஜினி மொஹம்மது, கோரி மொஹம்மது, மாலிக்காபூர், ஔரங்கசீப், போன்றோர்களின் ஜெயந்தியை கொண்டாடாமல் ஏன் இருக்கிறார்கள் என்ரும், செக்யூலரிஸ இந்தியர்கள் கேட்கலாம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பாராடவில்லை எனலாம், ஆனால், இந்தியர்களுக்கு அவர்கள் வீரர்களா, தேச பக்தர்களா, தேசபிமானிகளா? எந்த வகையில் அவர்கள் வைக்கப்படுவர்? நாதிர்ஷா, 1739 படையெடுத்து வந்து, தில்லியைக் கொள்ளையெடித்தான். ஆக, நாதிர்ஷா ஜெயந்தியையும் கொண்டாடுவார்களா? வெளியிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி விட்டவர்கள், என்றுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், இந்திய தேசத்துவத்தை யார் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது மூலம் அடையாளம் காணப்படுகின்றனரே? அரவிந்தர், வ,உ.சி.ஐயர், சவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரை, இந்தியர்கள் இன்றும் சில சித்தாந்த குழுக்கள் ராஜதுரோகிகள் என்று தான் பேசி-எழுதி வருகின்றனர். ஆனால், பெரும்பான்மையினர், அவர்களை மாபெரும் தலைவர்களாக, போராளிகளாக, தேச பக்தர்களாகத்தான் கருதப்பட்டு வருகிறார்கள். பிறகு எப்படி திப்பு எல்லா தியசக்திகளையும் விடுத்து, புண்ணியவானாக, தேவனாக, தூய்மையானவனாக கருதப்பட முடியும்?
[1] For over 10 years Tipu remained in constant touch with the Shankaracharya and even the last recorded letter written in 1798 request the Swami to offer worship , three times a day to Lord Isvara and perform the Chandihavana, a special oblation, for the destruction of enemies and the prosperity of the government.
[2] Dr. A.K. Shastry has published the contents of 47 letters from Tipu sent to the Sringeri Shankaracharya Sri Sacchidananda Bharati III who presided over the affairs of the mutt from 1753-1799 A.D. These letters range from Tipu Sultan enquiring after the Shankaracharya’s welfare to requesting him to pray for Mysore’s prosperity and even requesting his Holiness to cast a horoscope for Tipu. Tipu’s letters breathe an honest spirit of veneration for the Sringeri Guru.
சையத்அகமதுஅலிகொடுத்தவாக்குமூலம்[1]: விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: “திரிபுராமாநிலம்உன்னுகுட்டிகைலாஜெகர்பகுதி, தலியார்கந்திகிராமம்தான்எனதுஊர். என்னுடையமனைவிபெயர்லுக்பாபேகம். எங்களுக்குஒருமகனும், மகளும்உள்ளனர். நான்எனதுவீட்டின்அருகேகாய்கறிவியாபாரம்செய்துவந்தேன். கடந்த 2000–ம்ஆண்டுஎனக்கும்எனதுமனைவிக்கும்இடையேதகராறுஏற்பட்டது. அதில்எனதுமனைவிபோலீசில்புகார்கொடுக்கசென்றார். அதனால்நான்மண்எண்ணெயைஊற்றிக்கொண்டுதீக்குளித்தேன். பின்னர்என்னைமீட்டுசிகிச்சைக்காகமருத்துவமனையில்சேர்த்தனர். உடல்நிலைதேறியதும்நான்மீண்டும்காய்கறிவியாபாரம்செய்துவந்தேன். இந்தநிலையில்சிறிதுநாட்கள்கழித்துஎனக்குஉடல்நிலைசரியில்லாமல்போனதால்அசாமில்உள்ளமருத்துவமனையிலும், பின்புதிரிபுராமருத்துவமனையிலும்சிகிச்சைபெற்றேன். அப்போதுஎன்னைபரிசோதனைசெய்தடாக்டர்கள்உனக்குபுற்றுநோய்உள்ளதுஎன்றனர்.
புதியதலைமுறை – ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு
மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2015 சென்னைக்கு வந்து சென்றது: அப்போதுஎனதுபக்கத்துவீட்டுக்காரர்பையிம்ஜமான்என்பவரின்அக்காவிற்குசிகிச்சைஅளிப்பதற்காகஅவர்களுடன்சென்னையில்உள்ளமருத்துவமனைக்குகடந்தமேமாதம்வந்தேன். அங்குடாக்டர்கள்எனக்குபுற்றுநோய்இருப்பதைஉறுதிசெய்தனர். பின்னர்சி.எம்.சி. மருத்துவமனைக்குசிகிச்சைபெறுவதற்காகஎனதுதம்பியுடன்ஆகஸ்டுமாதம்வேலூருக்குவந்தேன். அப்போதுசி.எம்.சி. அருகில்உள்ளவிடுதியில்அறைஎடுத்துதங்கினேன். பின்புவேலூர்சைதாப்பேட்டைபள்ளிவாசல்அருகேஅறைஎடுத்துதங்கினேன். அதைத்தொடர்ந்துஉத்தரபிரதேசம்அலிகாரில்உள்ளமருத்துவமனையிலும், சென்னைஅப்பல்லோமருத்துவமனையிலும்சிகிச்சைஎடுத்துக்கொண்டேன். இதையடுத்துசென்னையில்இருந்துமீண்டும்வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில்சிகிச்சைபெறகடந்த 13–ந்தேதிஇரவுபீகாரைசேர்ந்தஹாலித்துஎன்பவருடன்காட்பாடிக்குவந்தேன். பின்னர்ஹாலித்எதுவும்கூறாமல்என்னைவிட்டுசென்றுவிட்டார். விடியும்வரைநான்சி.எம்.சி.க்குஎதிரேஉள்ளபள்ளிவாசல்அருகேதங்கினேன். 14–ந்தேதிகாலை 7–45 மணிஅளவில்டாக்டரைபார்க்கநான்சி.எம்.சி.க்குசென்றேன். அப்போதுடாக்டரைபார்க்கவிடாமல்காவலர்கள்என்னைதடுத்தனர். இதனால்நான்ஆத்திரமடைந்தேன். அவர்களுக்குகொலைமிரட்டல்விடுக்கமுடிவுசெய்தேன். இதையடுத்துநான்காலை 8 மணிஅளவில்சி.எம்.சி. மருத்துவமனைக்குபோனில்தொடர்புகொண்டேன். அவர்கள்வேறுஒருதொலைபேசிஎண்ணைகொடுத்துஅதில்தொடர்புகொள்ளுமாறுகூறினர். பின்புநான் 8–15 மணிஅளவில்எனதுதொலைபேசிஎண்ணில்இருந்துதொடர்புகொண்டுமருத்துவமனையில்வெடிகுண்டுகள்உள்ளதுஎனவும், அவைசரியாக 10 மணிக்குவெடிக்கும்என்றுகூறிபோனைதுண்டித்தேன். இதேஏற்கனவேநான்ஆக்ராவிலும், அலிகாரிலும், லக்னோவிலும், ராஜஸ்தானில்உள்ளஅஜ்மீர், மும்பையில்உள்ளகண்ட்ரோல்அறைக்கும்போன்செய்துவெடிகுண்டுமிரட்டல்விடுத்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.
UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015
விசாரணைக்குப்பிறகுஜெயிலில்அடைப்பு: சென்னை, ஆம்பூர், வேலூர் என்று பல இடங்களுக்கு பலமுறை சர்வ சகஜமாக வந்து போவது, எப்படி என்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாத செயல்கலில் ஈடுபட்டவர்கள் வந்து செல்கின்றனர் எனும் போது, நிச்சயமாக உள்ளூர் ஆட்கள் உதவி செய்கிறார்கள் என்றாகிறது. அதைத்தொடர்ந்து சையத் அகமது அலியை, துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் அணைக்கட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்–1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாசந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி சையத் அகமது அலி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஆம்பூர் மதரஸா – உதாரணம்
குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் பல மாநிலங்களுக்குச் சென்று வர யார் உதவுகிறார்கள்?: சையத் அகமது அலி உண்மையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து போகலாம், போயிருக்கலாம். இப்பொழுது பார்ப்பதற்கே பாவமகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் தீவிரவாதியாக இருக்கிறான். குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களுக்கு நோய் வரக்கூடாது, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால், உடல்நிலை ஆரோக்கியமாக மாறியதும், அவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. இங்கும் தனக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆனதால், குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்திருக்கிறான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனைகளில் காத்துக் கிடப்பது என்பது சர்வ-சகஜமான விசயம் தான். “அப்போதுடாக்டரைபார்க்கவிடாமல்காவலர்கள்என்னைதடுத்தனர். இதனால்நான்ஆத்திரமடைந்தேன். அவர்களுக்குகொலைமிரட்டல்விடுக்கமுடிவுசெய்தேன்”, என்பது இன்னும் விசித்திரமாக இருக்கிறது. மேலும், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் எனும்போது, உ.பி, அசாம், மேகாலயா என்ற பல மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுவது, மற்றும் தமிழகதுக்கு வந்து செல்வது என்பது, நிச்சயமாக மற்றவர்கள் உதவியுடன் வந்து செல்ல முடியாது. அதற்காக நிறைய பணமும் செலவாகிக் கொண்டிருக்கும். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார் எனும்போது, தனது அடையாளத்தையும் மறைத்துள்ளார் என்றாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறு-குறுத்துள்ளது. ஆனால், அதிலும் தன்னலம், அதாவது, மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதினால், அடங்கிப் போயிருக்கிறார். இங்கும், தன்னை எதிர்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.
தினமலர் – வேலூர் கைது
குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் மதரஸாக்களில் தங்க முடியுமா?: மதரஸாக்களில், பள்ளிவாசல்களில் தங்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விசயமா அல்லது யாராவது போன் செய்து அறிவித்தார்களா, கடிதங்களை கொண்டுவந்து, தங்கினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாமே நடந்தன எனும் போது, அவர்களுக்கு உள்ள பணபலம், நட்பு அல்லது வேறெந்த பலமோ உள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நிலையில் அறிமுகத்துடன் சென்றாலே, பலவித கேல்விகள் கேட்கப்படுகின்றன. லாட்ஜுகளில் அடையாள அட்டைகளை கேட்கிறார்கள், அவற்றை நகலும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் எடுத்து வைத்துக் கொல்வதால், இவற்றையும் மீறி, தங்க வேண்டுமானால், மதரஸா, பள்ளிவாசல் போன்ற இடங்களில் தான் தங்க வேண்டும். அவ்வாறு தங்கினால், விவரங்கள் மறைக்கப்படும் அல்லது அவ்வளவு சுலபமாக மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, ஒன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் அல்லது தீவிரவாதிகள் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் என்பதால் உதவுவது என்பதுள்ளது என்று தெரியவருகிறது. அதனால், குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. சித்தூரில் அல்-உம்மா தீவிரவாதிகள் தங்கியிருந்தது, சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது, அப்பொழுதும், போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில், ஈடுபட்டது போன்ற விவரக்களும் வெளிவருகின்றன. ஆம்பூரில் சமீபத்தில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரே தாக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் தீவிரவாதிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர், மதரஸாக்களில் தங்க இடம் கொடுக்கப்படுகிறது என்பதெல்லாம் நிச்சயமாக வேறெந்த விசயத்தையோ மறைப்பதாக உள்ளது.
[1] தினத்தந்தி, சி.எம்.சி. மருத்துவமனைக்குவெடிகுண்டுமிரட்டல்: கைதானதீவிரவாதிகோர்ட்டில்ஆஜர்படுத்திஜெயிலில்அடைப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 1:46 AM IST.
புழல்சிறையில்பயங்கரமானகுற்றவாளிகள்இருப்பது, போலீஸார்குறைவாகஇருப்பது[1]: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் 230 பேரும், விசாரணை கைதிகள் 2003 பேரும், பெண் கைதிகள் 150 பேர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். 3 விதமான கைதிகளுக்கும் தனித்தனி ஜெயில்கள் விசாலமாக உள்ளது. போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முக்கிய பிரமுகர்களை தீர்த்து கட்டிய பயங்கரமான கைதிகளும் இங்கு அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2014ல் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது[2]. அப்போது என் கவுண்டரும் நடந்தது. இதில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழங்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தனை முக்கியமான சிறைக்கு பாதுகாப்பாக போலீஸார் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுகிறது.
Puzhal attacked -Puthiya thalaimurai – 25-09-2015
கொலைக்குற்றவாளிகள், தீவிரவாதிகள்எப்படிவசதிகளைசிறைகளில்அனுபவிக்கின்றனர்?: திரைப்படங்களில் தாம், சிறைக்குற்றவாளிகள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போல காட்டுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மையாகவே அத்தகைய வசதிகள் குற்றவாளிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, தீவிரவாதிகளுக்குக் கிடைக்கிறது என்று அஜ்மல் கசாப், அபு சலீம் போன்றோரின் விவரங்களிலிருந்து அறியப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து திருப்தி படுத்தினர். அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதால், கோடிக்கணக்கில் செலவான பணம் நின்றது. ஆனால், அபு சலீம் போன்றோர் இன்னும் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே 24-07-2010 அன்று காலை (சனிக்கிழமை) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டான்[3]. அதாவது, இந்திய சிறைச்சாலைகள் அந்த அளவுக்கு ஓட்டையாக உள்ளனவா அல்லது தீவிரவாதிகள் தங்களது ஆடிக்கத்தைச் செல்லுத்தி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வில் ஹியூம் என்ற குழந்தை கற்பழிப்பாளி புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டான் என்ற செய்திகள் வந்தன. இப்பொழுது, அச்சிறையில் கலவரம், அல்-உம்மா தீவிரவாதிகள் ஜெயில் வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கினர், செல்போன் வைத்திருந்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.
Puzhal police attacked – chennai patrika- 25-09-2015
முகமதுரபீக்ஜெயிலில்செல்போனில்பேசிக்கொண்டுஇருந்தார்[4]: கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை ஜெயிலர் இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்தார்[5]. அப்படியென்றால், செல்போனை யார் கொடுத்தது, எப்படி ஜெயிலின் உள்ளே சென்றாது போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர். இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[6]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர் இளவரசன் கைதிகளை தீவிரமாக கண்காணித்தார். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்[7]. அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது[8].
Puzhal attacked police admitted in Hospital – 25-09-2015
ஜாகிர்உசேனைசிறையிலேயேஅல்–உம்மாஆட்கள்அடித்ததுஏன்?: ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர். இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[9]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜாகிர் உசேன் சொன்னான், அதனால், அல்-உம்மா கும்பல் அவனை அடித்தது என்றால், சிறைக்குள்ளேயே அவர்கள் தங்களது ராஜ்யத்தை நடத்துகின்றனர் என்றாகிறது. மும்பை சிறைகளில் தான் அத்தகைய வசதிகளை பெறுகிறார்கள் என்றால், இங்கும் அதே நிலைதான் என்று தெரிகிறது. ஜெயிலில் கைதிகள் அடித்துக் கொள்வது, கலவரம் செய்வது, ஜெயிலரை அடிப்பது, தாக்குவது முதலியன போலீஸார் கட்டுப்பாட்டில் சிறை உள்ளதா அல்லது இந்த தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆட்டி வைக்கிறார்களா, இதன் பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றான.
Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu
அனைத்துகைதிகளும்ஒன்றுசேர்ந்துஜெயிலர்இளவரசனைதாக்குதல்: இந்த நிலையில் 25-09-2015 அன்று மாலை வழக்கம் போல் ஜெயிலர் இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கினார்கள்[10]. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலை குலைந்த ஜெயிலர் இளவரசன், அலறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தார். அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள். இதைப் பார்த்த சிறை காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர். ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள். கேரம் போர்டை உடைத்து அந்த கட்டையாலும் தாக்கினர். அப்போது கைதிகள் காவலர் முத்துமணியை இரும்பு கம்பியாலும் குத்தினர். இதில் ஜெயிலர் இளவரசன் மற்றும் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
[4] தினத்தந்தி, புழல்சிறையில்வார்டன்மீதுதாக்குதல்:கைதிகள் 6 பேர்வேறுசிறைக்குமாற்றம், மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST
பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST.
[5] The clashes in which two jail personnel were taken hostage and four others injured, was a fallout of an altercation over use of mobile phones in the prison and visitors bringing in prohibited food items. The Al Umma cadres attacked prison staff with carrom board and stones, the sources added.
[6] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.
தமிழ்.இந்து, சிறைக்குள்காவலர்களைதாக்கிகலவரம்: புழலில்இருந்து 6 கைதிகள்இடமாற்றம் – 20 கைதிகள்மீதுவழக்குபதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.
[7] தினமணி, புழல்சிறையில்கைதிகள் – காவலர்கள்மோதல்: ஜெயிலர்உள்பட 4 பேர்காயம்; பணயக்கைதிகளாகஇருவரைசிறைப்பிடித்தனர், By சென்னை, First Published : 26 September 2015 01:49 AM IST.
கே. வீரமணி,யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்?[1]: தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை மனிதநேய அறிக்கை என்று மேலேயுள்ள விசயங்களைத் தொகுத்து கே. விரமணி வெளியுட்டுள்ளார். மும்பைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப் பட்டு சிறையிலிருந்த யாகூப் மேமனுக்கு அவசர அவசர மாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது – பல விமர்சனங்களுக்கு வழி வகுத்து விட்டது[2].
மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிரான கலவரத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டனரே! அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
நீதிபதி கிருஷ்ணா ஆணையம் குற்றவாளிகளைப் பட்டியலிட்டுக் காட்டியதே – அன்றைய பிஜேபி சிவசேனா ஆட்சி ஒரே ஒரு வரியில் கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுப்ப தாகக் கூறிடவில்லையா?
மும்பைக் குண்டு வெடிப்பு என்பது அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் எதிரொலிதான்; நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அய்யப்பாடு- மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது ஏன்? இன்னும் சொல்லப் போனால் வழக்கு விசாரணை முறையாகக் கூடத் தொடங்கப்படவில்லையே ஏன்?
இதன் பொருள் என்ன? நீதித்துறையும், ஆட்சித் துறை யும் நபர்களைப் பொறுத்து வளையும் – நெளியும் என்பதைத்தானே இது காட்டுகிறது! மனுதர்மத்தை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்களே!
அத்வானியின் ரத யாத்திரை (1991 அக்டோபர்) காரணமாக ஏற்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 564 பேர்.
மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி களான பெண் சாமியார் பிரக்யாசிங், சாமியார் அசிமானந்த், கர்னல் புரோகித் உள்ளிட்டோருக்கான வழக்கு விசாரணை ஏன் முடிக்கப்படவில்லை – உரிய தண்டனை ஏன் வழங்கப் படவில்லை?
தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படட்டும்! தூக்குத் தண்டனையே கூடாது; இது மிகவும் காட்டு விலங்காண்டித்தனம்; மனித நேயத்துக்கும், உரிமைக்கும் எதிரானது என்று குரல் உலகெங்கும் கிளர்ந்தெழும் இந்தக் கால கட்டத்தில், இப்படியொரு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை கண்டிக்கத்தக்கது!
மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் காட்டிய இந்த அசாதாரண நடைமுறைகள் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்து விடும். யாகூப் மேமன் தூக்குத் தண்டனையே கடைசியாக இருக்கட்டும்!
Yakub versus prohit, etc
திஇந்துவின்ஒருதலைப்பட்சமானகருத்துத்திணிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான விவரங்கள் “தி இந்து” (தமிழ்) இதழிலிருந்து எடுத்தாளப்பட்டவை ஆகும். தொடர்ந்து, தூக்குத்தண்டனை கூடாது, மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று யாகூப் மேமன் தூக்கிற்கு முன்னரும் பின்னரும் அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால், ஏன் தூக்குத்தண்டனை அல்லது மரணதண்டனை தேவை, மனிதத் தன்மையற்ற குரூர தீவிரவாதிகளுக்குக் கருணைக் காட்டக் கூடாது, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை, திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை யாரிடமிருந்தும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை அத்தகைய கருத்தே தேவையில்லை என்று “தி இந்து” மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பது போலிருக்கிறது. பிறகு, எப்படி அவர்களை சமநோக்குள்ளவர்கள், பாரபட்சமற்றவர்கள், உள்ள நாட்டி சட்டங்களை மதிப்பவர்கள், நீதிமன்றங்களை போற்றுபவர்கள் என்று கருத முடியும்?
யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு
மரணதண்டனைஎன்பது, ஒருஅதிகாரநிறுவனம்தனதுநடவடிக்கைகளூடாகக்மனிதர்ஒருவரின்உயிர்வாழ்வைப்பறிக்கும்தண்டனைஆகும்: விக்கிப்பீடியாவின் விளக்கமும் பாரபட்மாக இருக்கிறது[3], “மரணதண்டனைஎன்பது, ஒருஅதிகாரநிறுவனம்[4]தனதுநடவடிக்கைகளூடாகக்மனிதர்ஒருவரின்உயிர்வாழ்வைப்பறிக்கும்தண்டனைஆகும். மனிதர்இழைக்கும்குற்றம்அல்லதுதவறுஅவரின்உடல்சார்ந்தசெயல்பாடாகப்புரிந்துகொள்ளப்பட்டதொன்மைக்காலதண்டனைமுறைகளில்இதுவும்ஒன்றாகும். கொலைபோன்றகொடூரமானகுற்றங்களுக்கும், பாலியன்வன்புணர்வுபோன்றவையும்தவிர்த்துபோதைமருந்துதொடர்பானகுற்றங்களுக்கும்பலஉலகநாடுகள்மரணதண்டனையைதருகின்றன. மரணதண்டனைநவீனநீதிமுறைகளின்அடிப்படைக்கோட்பாடுகளுக்குஎதிரானதுஎன்றும்அதனைஒழிக்கவேண்டும்என்றும்பல்வேறுகருத்துகள்வலுப்பெறத்தொடங்கியபின்னர்பலநாடுகள்மரணதண்டனையைமுற்றாகஒழித்துவிட்டன. பெரும்பாலானஐரோப்பியநாடுகளில்இப்போதுமரணதண்டனைவிதிக்கப்படுவதுஇல்லை. வேறுபலநாடுகளிலும்இதுபற்றியவிவாதங்கள்நடைபெற்றுவருகின்றன.” சரி, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாத் பற்றி ஒன்றும் விவாதங்கள் இல்லையா?
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2
மும்பையில்பயங்கரவாததாக்குதல்கள் (1993 முதல் 2011 வரை): மும்பை, இந்தியாவின் வணிக-வியாபார தலைநகரம், பொருளாதார மையம் என்பதனால், தொடர்ந்து குண்டுவெடிப்பில் தாக்கப்பட்டு வருகின்றது. இதில் அப்பாவி-பொது மக்கள் பலிகடாக்களாக குரூரமாகக் கொல்லப்பட்டு வருகிறர்கள்.
12 மார்ச் 1993 – 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
6 டிசம்பர் 2002 – கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
27 ஜனவரி 2003 – வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .
14 மார்ச் 2003 – முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்,
28 ஜூலை 2003 – காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் .
25 ஆகஸ்ட் 2003 – இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்
11 ஜூலை 2006 – தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை
26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை – ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர்.
13 ஜூலை 2011 – வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்.
இவற்றில், நிச்சயமாக பழிவாங்கும் எண்ணம் எல்லைகளை மீறி, இந்தியாவையே அழிக்க வேண்டும் என்ற வெறித்தனம், குரூர சதிதிட்டம், நாசகாரத்தனம் முதலியவை அடங்கியிருப்பது வெளிப்படுகிறது. இது தீவிரவாதத்தை விட மிக-மிக அதிகமானது. அதனை எப்படி, எவ்வாறு, ஏன் அறிவிஜீவிகள் உணராமல் இருக்கின்றனர் என்று புரியவில்லை. ஒருவேளை அவர்களும் அந்த அதி-தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது.
The Memons at the wedding of Yakub and Ayub- The occasion provided a valuable photo album to the police- India today photo
கசாப்பைஅடுத்துயாகூப்மேமன்[1]: மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக இப்போது அங்கு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கசாப் புணே எரவாடா சிறையிலும், யாகூப் மேமன் நாக்பூர் சிறையிலும் தூக்கிலிடப்பட்டனர். மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்திய கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு. 2013 பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இரு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது[2]. முன்னதாக சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்ற வாளிகளான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நிறை வேற்றப்பட்டது. அவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா சிறையில் 1949-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோருக்கு 1989-ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை சுமார் 50 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் சமீப ஆண்டுகளில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்படுவதும், நிறைவேற்றப் படுவதும் அதிகரித்துள்ளதாக தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன[3]. ஆனால், அவர்களால் கொலையுண்டவர்களைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்வதில்லை? தீவிரவாதிகள் தொடர்ந்து இவ்வாறு குண்டுகளை வெடித்து, அப்பாவி மக்களைக் கொண்டு வந்தால், அது மனித உரிமைகளில் ஏற்கப்படுமா?
அம்புகளுக்குஆயுள், அம்பைஏவியவருக்குதூக்கு: உச்சநீதிமன்றம்கருத்து[4]: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மரணதண்டனை விதித்தது. வழக்கு விசாரணையின்போதே ஒருவர் உயிரிழந்துவிட்டார். எனினும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது. யாகூப் மேமனுக்கு மட்டும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அப்போது கூறியதாவது: “பத்துபேரின்மரணதண்டனைஆயுளாகக்குறைக்கப்பட்டிருக்கிறது. அந்த 10 பேரும்சமுதாயத்தில்மிகவும்பின்தங்கியநிலையில்வாழ்ந்தவர்கள். அவர்களுக்குநிரந்தரவேலைஇல்லை. இதனால்வறுமையில்வாடியஅவர்கள்சிலரின்சதிவலையில்சிக்கியுள்ளனர். இதைஏற்கமுடியாதுஎன்றாலும்அவர்கள்வெறும்அம்புகள்தான். அவர்களைவில்லில்இருந்துஏவியவர்களைமன்னிக்கமுடியாது. அவர்கள்தான்திட்டமிட்டுமும்பைதொடர்குண்டுவெடிப்பைநிகழ்த்தியுள்ளனர். அந்தந்தவழக்கின்பின்னணி, உண்மைகளைஆதாரமாகக்கொண்டேதீர்ப்பளிக்கவேண்டும்”, இவ்வாறு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது[5]. இங்கும், தீர்ப்பின் பகுதியை வெளியிட்டு அலசுவதைக் கவனிக்க வேண்டும். மேலே ஆரம்பத்தில் அதற்காகக் தான், மற்ற பத்திகளையும் சேர்த்துக் கொடுத்துள்ளேன்.
யாகூம் மேமன், ஒவைஸி, வீரமணி
யாகூப்மேமனுக்குதூக்குநிறைவேற்றம்: மரணதண்டனையைஒழிப்பதேகலாமுக்கானஉண்மையானஅஞ்சலி – தலைவர்கள்கருத்து[6]: இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறி யுள்ளனர். யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலியாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்”, என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மற்ற தலைவர்களும் – தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்), எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்), கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்) முதலியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்றால் 1993 முதல் 2011 வரை கொல்லப்பட்டவர்களுக்கு இவர்கள் எப்படி அஞ்சலி செல்லுத்துவ்வார்கள்?
யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஒருவர், அப்படியென்றால் அவர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியைக் கொடுக்கவில்லையா?
இங்கு இஸ்லாமிய சமூகம் என்று குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், பாதிக்கப்பட்ட இந்து சமூகத்தினைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை என்றாகிறது.
இது செக்யூலரிஸ இந்தியாவில், இத்தகையோர்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை, சமத்துவம் ஒத்துப் போகல்லை, மனிதநேயம் நோகடிக்கவில்லை, மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் பார்க்கச் சொல்கிறது என்றாகிறது.
தீவிரவாதிகளின் உரிமைகள், பயங்கரவாதிகளின் உரிமைகள், குண்டுத் தயாரிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடித்து ம்மக்களைக் கொல்பவர்களின் உரிமைகள்,……………..என்று பேசும் இவர்கள் மற்றவர்களின் உரிமைகளைப் பற்றி ஏன் நினைப்பதில்லை?
அந்த பலிக்கடாக்களுக்கு அஞ்சலியை, பரஸ்பர கருணையை, சமரச தீர்ப்பை, சமூகநீதி போன்ற முடிவை இவர்கள் எப்படி அளிப்பார்கள் என்று யோசிக்கவில்லையே?
தீவிரவாதிகளை இனிமேல் குண்டு தயாரிக்காதே, குண்டு வைக்காதே, குண்டுவெடிக்க வைத்து அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று ஒருவனும் சொல்லக் காணோமே?
பயங்கரவாதிகள் அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தபோது, அவர்கள் எந்த சட்டங்களையும், நீதிகளையும், விதிமுறைகளையும் மீறவில்லையா?
மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் இன்னொருவர், சரி மரணத்தை ஏற்படுத்தும் தீவிரவாய்திகள், பயங்கரவாதிகள், இவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஏன் எண்ணம் வரவில்லை அல்லது தைரியம் இல்லை?
[6] தி இந்து, யாகூப்மேமனுக்குதூக்குநிறைவேற்றம்: மரணதண்டனையைஒழிப்பதேகலாமுக்கானஉண்மையானஅஞ்சலி – தலைவர்கள்கருத்து, Published: July 31, 2015 08:18 ISTUpdated: July 31, 2015 08:18 IST
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)
Burdwan blast accused Shahnoor Alam -Photo- PTI-File
இந்திய-விரோத அந்நிய சக்திகளில் வடகிழக்கு மாநிலங்களில் சதிதிட்டங்களை செயல்படுத்தி வருவது: வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் இந்திய-விரோத செயல்கள், தீவிரவாத காரியங்கள், உள்ளூர் மக்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாத வேலைகள் முதலியவற்றில், பெரும்பாலும் அந்நிய சக்திகள் பின்னணியில் இருந்து கொண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, அல்-குவைதா, தலிபான், வங்காளதேசத்தின் ஜமாத்-உல்-முஜாஹித்தீன், கிருத்துவ மிஷனரிகள், இடதுசாரி-கம்யூனிஸ்ட் சித்தாந்த போடோலாந்து தீவிரவாதிகள், நக்சல்பாரிகள் முதலியோர் அடங்கும். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இக்காரயங்கள் நடந்து வந்தபோதிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்பொழுது திரிணமூல் கட்சி இவ்விசயங்களில் மெத்தனமாகவே செயல் பட்டு வந்துள்ளன. இதனால், வங்காளதேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி, அசாம் மாநிலங்களில், நிரந்தரமாகத் தங்கி வாக்காளர் அட்டை, ரேஷ்னகார்ட் முதலியவற்றைப் பெற்று ஆளும் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக செயல்பட்டு வருவதுடன், கடத்தல், கள்ளநோட்டு-போதை மருந்து விநியோகம், மனிதகடத்தல் (பெண்கள்-குழந்தைகளையும் சேர்த்து) முதலிய காரியங்களிலும் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தின் பங்கை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்து வருவதால், அவர்களும் அமைதியாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மறுபடியும் அந்நிய சக்திகள் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளன.
21-12-2014-10 grenades found JMB – Assam
ஒரே நாளில் இம்பால் குண்டுவெடிப்பில் மூன்று பேர் சாவு, பஸ்கா மாவட்டத்தில் 10 கையெறிகுண்டு கண்டுபிடிப்பு: 21-12-2014 அன்று மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் ஒரு குண்டு வெடித்து, மூன்று பேர் கொல்லப்பட்ட அதே நாளில்[1], அசாமில், பார்பேடாவில், நாம்பாரா மாவட்டத்தில், பதசர்குச்சி என்ற கிராமத்தில் ஷாஹநூர் ஆலத்தின் [Sahanur Alom] கையாளியான நூர்ஸலால் ஹக் [Nurjamal Haque வயது 25] என்பவன் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் குறிப்பிட்ட இடத்தில், மறைத்து வைக்கப்பட்ட தோண்டிப் பார்த்ததில் 10 நாட்டு கையெறி-வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன[2]. அக்குண்டுகள் பஸ்கா மாவட்டத்தில், பன்பரா கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன[3]. வெடிகுண்டுகள் தவிர, கையெறி குண்டுகளும் தயாரிக்கப்படுகின்றன என்று தெளிவாகிறது. சஹநூர் ஆலத்தின் வீட்டிற்கருகில் சுமார் 500 மீ தொலைவில் ரூபோஹி நதிக்கரையில் பாலிதீன் உறைகளில் சுற்றி அவை புதைக்கப்பட்டிருந்தன[4]. அதாவது, சோதனைக்கு வருகிறார்கள் என்பதும், அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கிறது என்றாகிறது. 90க்கும் மேற்பட்ட குண்டுகள் மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது[5]. இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் சோதனைக்குப் பின்னர் அழிக்கப்பட்டன.
jmb – Bangala terror
மதரஸாவின் முதல்வரே குண்டுகள் விசயத்தில் கைது: ஜிஹாதி நோட்டிசுகள், கையேடுகள், சிறுபுத்தங்களும் குழிகளில் கண்டெடுக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதி இயக்கத்திற்கு சேர்ப்பது, அவர்களை இத்தகைய பிரச்சார இலக்கியங்களினால் வெறிகொள்ள செய்வது, தீவிரவாதிகளாக மாற்றுவது போன்ற வேலைகளில் தான் மதரஸாக்கள் ஈடுப்பட்டுவருகின்றன என்பது தெளிவாகிறது. நூர்ஸலால் ஹக் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஸ்கா மாவட்டத்தில், சல்பாரி கிராமத்தில் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டான். இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டனர்[6]. இன்னொரு கூட்டாளியான நஜ்முல் இஸ்லாம் [ Nazmul Islam] என்பவன் ஞாயிற்றுக்கிழமை 14-12-2014 அன்று பார்பேடாவில் கைது செய்யப்பட்டான்[7]. இவன் கோராகுரி அஞ்சாலிக் மதரஸாவின் பிரின்சிபால் ஆவான்[8]. அதாவது, மதரஸாக்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
huji Bangaladesh
அனைத்துஅசாம்மாணவர்கள்குழுமத்தின் அறிக்கையில் வெளியாகும் தகவல்கள்: அடுத்த நாள் (22-12-2014), அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் [The All Assam Students’ Union (AASU)] அல்-குவைதா, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டுமானால், சட்டத்திற்குப் புறம்பாக, வங்காளதேசத்திலிருந்து ஊரடுருவியுள்ள முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மறுபடியும் வைத்தது[9]. அரசே பார்பேடா, நல்பாரி மற்றும் பஸ்கா போன்ற மாவட்டங்களில் தீவிரவாதிகள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒப்பொஉக் கொண்டுள்ளதால், உடனடியாக, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டது[10]. அசாம் உடன்படிக்கையை அரசு செயல்படுத்தத் தயங்கியதால், பாகிஸ்தானிலிருந்து வரும் ஐ.எஸ்.ஐ ஆட்களும் அந்த போர்வையில், வங்காளாதேசத்தின் வழியாக, எல்லைகளைக் கடந்து அசாமில் வந்து நுழைந்துள்ளார்கள்[11]. மேலும் உச்சநீதி மன்றம் சட்டவிரோதமாக உள்நுழைந்த-இடம் பெயர்ந்தவர்களை அடையாளம் காணும் சட்டத்தை [Illegal Migrants (Determination by Tribunals) Act] திரும்பப்பெற்றதால், அசாம் வெளியிலிருந்து தாக்குதல்களையும், உள்ளே கலவரத்தொந்தரவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளதையும், அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியது[12].
AASU demand on illegal immigration, infiltration etc
மதரஸாக்களைக் குறைகூறக்கூடாது என்றால், அவை ஏன் குண்டு தொழிற்சாலையாக, கிடங்குகளாக செயல்படவேண்டும்?: மதரஸாக்களை ஒட்டு மொத்தமாகக் குறைகூறக்கூடாது என்று எதிர்க்கும் முஸ்லிம்கள், மதரஸாக்கள் இவ்வாறு தீவிரவாதத்திற்கு உபயோகப்படுத்தப் படுவதை ஏன் எதிர்ப்பதில்லை, போலீஸாரிடம் புகார் கொடுப்பதில்லை அல்லது முளையிலேயே கிள்ளி எரிவதில்லை என்ற வினாக்களிலிருந்தே, அவர்களது, நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு வெளிப்படுகிறது. முன்பு பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு, அதில் சில இந்துக்களையும் ஆதரவாகப் பேசவைத்ததை நினைவு கூறவு, இப்பொழுது, அவர்கள் எல்லோருமே அமைதியாகி விடுவர். இதனை எதிர்த்துக் கூட்டம் போடமாட்டார்கள், கண்டன-அறிக்கைகளையும் வெளியிட மாட்டார்கள். அதுதான், அவர்களது தங்களது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்தும் விதம் போலும். உண்மையில், இத்தகைய செக்யூலரிஸாத்தால் தான் ஜிஹாதித்துவ-தீவிரவாதம், ஊக்குவிக்கப்படுகிறது, ஆதரிக்கப்படுகிறது மற்றும் வளர்க்கப்படுகிறது,
Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.
மதரஸாக்கள் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக செயல்பட்டது: அசாமில் உள்ள பல கிராமங்களில் தீவிரவாத செயல்களுக்கு, முஸ்லிம்களை தயாராக்கி வைத்திருக்கிறார்கள். லார்குச்சியில் உள்ள மதரஸா அதற்காகப் பயன்படுத்தப் பட்டது. பல இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஜிஹாதி பயிற்சி அளிக்கப்பட்டது[13]. கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் மிகவும் திட்டமிட்டு, இக்காரியங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று தெரிகிறது. ஒருவேளை, அக்டோபர்.2, 2014 அன்று குண்டுவெடித்து, அவர்கள் மாட்டிக் கொண்டிருக்காவிட்டால், இவர்கள் நாடு முழுவதும், பல குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், அவர்கள், ஜிஹாதி எண்ணங்களில் ஊறியுள்ளது, அவர்களது பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏதோ தீவிரவாத செயல்களை செய்கிறோமோ என்ற எண்ணமே இல்லாமல், புனித காரியத்தைச் செய்கிறோம் என்ற நிலையில் உள்ளார்கள். அப்பாவி மக்களைக் கொல்வதும், அவர்களுக்கு புனித காரியமாகவே தோன்றுகிறது.
he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre
வழக்கம் போல திரிணமூல்-பிஜேபி பரஸ்பர குற்றச்சாட்டுகள்: 21-12-2014 அன்று ஷகீல் அஹமதுவின் உடலும் புதைக்கப் பட்டது[14]. முன்பு உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கலாட்டா செய்து வந்தனர். தீர்ணமூல் காங்கிரஸ் தொடர்ந்து தனக்கும், இந்த குண்டுவெடிப்புகள், தொழிற்சாலை, ஜே.எம்.பி தீவிரவாத ஊக்குவிப்பு முதலியவற்றில் தொடர்பில்லை என்று வாதிட்டு வந்தாலும், அவற்றிற்கிடையே உள்ள சம்பந்தங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி பணமும், இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[15]. வழக்கம் போல மம்தா இது பிஜேபியின் சதி, ராவின் மூலம் தான் இவையெல்லாம் செய்யப்பட்டது என்று கூறிவருவது, மிக்க வியப்பாகவும், பொறுப்பற்ரதாகவும் இருக்கிறது. மதகலவரங்களை உருவாக்கவே இவையெல்லாம் செய்யப் பட்டு வருகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்[16]. அதற்கு மேலும் டெரிக் ஓபராய் என்ற அக்கட்சி ஊடக தொடர்பாளர், தமதிச்சைக்கேற்றபடி பேசி வருவதும் வியப்பாக உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று பலருடைய தொடர்புகள் இதில் மெய்ப்பிக்கப்பட்டும், இருவரும் அப்பட்டமாக இல்லவே இல்லை என்று சாதித்து வருகின்றனர்.
[2] The Special Operation Unit of the state police recovered the bombs that were hidden in Nampara village in Patacharkuchi following the alleged confession of Nurzalal Haque who is an alleged associate of Shahnoor Alam, the prime accused in the October 2 Burdwan blast. Alam, who was arrested nearly two weeks ago by the National Investigation Agency from the state, was the face of jihadi terror in Assam, according to the police.
[3] In a major breakthrough, the Assam Police today managed to recover 10 bombs of the Jamaat-ul-Mujaheedin, Bangladesh (JMB). Police sources said that the crude bombs were kept concealed inside a banana plantation in Panpara village in Baksa district. The recoveries were made following the confessions of JMB militant Nurjamal, who was arrested on Friday. Sources said that Nurjamal was a trained cadre of the JMB and he was a close associate of Sahanur Alom, one of the key men of the Bangladesh based militant outfit in the State. http://www.assamtribune.com/dec2214/at051.txt
[4] Based on Sahanur’s confession, the National Investigation Agency (NIA) recovered the grenades near Rupohi river, about 500 metre from his house in Salbari sub-division, NIA sources said.
[9] The All Assam Students’ Union (AASU) today reiterated its demand for uprooting the fundamentalist organisations like Al-Qaeda and Jamaat-ul-Mujahideen Bangladesh and also for deporting the illegal Bangla migrants from Assam. http://www.assamtribune.com/dec2314/at055.txt
[11] Illegal Bangla migrants, members of the fundamentalist organisations and even members of the intelligence organisation of Pakistan are entering Assam taking advantage of its porous border with Bangladesh. This is because of the failure of the Government to implement the Assam Accord, it said. http://www.assamtribune.com/dec2314/at055.txt
[12] It reminded the Central as well as the State Government of the observation made by the Supreme Court of India while repealing the infamous Illegal Migrants (Determination by Tribunals) Act. The apex court had, interalia, said in its verdict that due to illegal migration, Assam is facing external aggression as well as internal disturbances, said the student body. http://www.assamtribune.com/dec2314/at055.txt
ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!
Propaganda for Jihad in India works differently
இந்தியாவின்மீதுதாக்குதல்நடத்தவீடியோஆதாரம்வெளியானது: அய்மன் அல்- ஜவாஹரி [Ayman Al-Zawahari] என்ற அல்-குவைதாவின் படைத்தலைவனின் வீடியோ வெளியானப் பிறகு, இந்தியாவைத் தாக்க ஜிஹாதிகள் ஈடுபட்டுள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. ஊடகங்கள் இவற்றை ஏதோ புதியது போல வெளியிட்டு வந்தாலும், இவ்விவரங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு தெரிந்த விசயமே. இந்தியாவை முஸ்லிம் நாடுகளுடன் இணைக்க வேண்டும் என்ற நப்பாசை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் உருவானதிலிருந்தே இருந்து வருகிறது. கஜ்வா-இ-ஹிந்த் [Ghazwa-e-Hind] என்ற பெயரில் இந்தியாவின் மீதான கடைசியான போர் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாத ஜிஹாதி சித்தாந்தம் மூலம் பல முஸ்லிம்களை மதரீதியில் கவர வைத்து, இந்தியாவின் மீதான தாக்குதலை மேற்கொண்டு, அதை காபிர்களின் பிடியிலிருந்து விடுபட வைத்து மறுபடியும், இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாதி அஸ்திவாரம் அமைத்து அதன் மூலம் புனித போரைத் தொடர வேண்டும் [Jamaat Qaidat al-jihad fi’shibhi al-qarrat al-Hindiya or the Organisation of The Base of Jihad in the Indian Sub-Continent] என்று இவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதாக ஜிஹாதிகள் கூறியிருக்கிறார்கள்[1]. இடைக்காலத்திலிருந்தே முகமதியர் இம்முறையைக் கையாண்டு வந்ததை நினைவுகூர வேண்டும்.
HT news cutting about Jihadi expansion in India
சுன்னி–ஷியாபோராட்டமா, உலகத்தின்அமைதிக்குஅச்சுறுத்தலா?: அல்–கொய்தா தலைவன் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011ம் ஆண்டு மே 2–ந் தேதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான், ஆனால், அவ்வியக்கம் தொடர்ந்து தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டுதான் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். / ஐசிஸ் என்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்டு சிரியா) என்ற தீவிரவாத இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் நுழைந்து அரசு படைகளை துவம்சம் செய்துவருகிறது. சுன்னி-சன்னி முஸ்லிம்களாக இருக்கும் இவர்கள், ஷியா முஸ்லிம்களைக் கொன்று வருகின்றனர். பாகிஸ்தானிலும் ஷியாக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை கவனிக்கலாம். இதற்கு பாகிஸ்தானின் ஆதரவும் இருந்து வருகின்றது. முன்பு இராக்-இரான் சணையிட்ட போது, அது உலக யுத்தமாக மாறுமா என்ற யேஷ்யம் இருந்தது. இப்பொழுது, மறுபடியும் இஸ்லாம் தீவிரவாதம் ஐசிஸ் போர்வையில் எல்லைகளைக் கடந்து செயல்பட்டு வருவதாலும், ஷியாக்களைக் கொன்று வருவதாலும், இரான் பதிலுக்கு தாக்குதலை ஆரம்பிக்குமோ என்ற பயம் இருந்து வருகிறது.
Al-Quida plan in India for Jihad
ஐசிஸ்உலகயுத்தத்திற்குவழிவகுக்கிறதா?: தற்போது அல்–கொய்தாவை விட மிகவும் கொடிய தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈராக் தேசமே நிலைகுலைந்து உச்சக்கட்ட குழப்ப நிலையில் தவிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் அபரிமிதமான வளர்ச்சி சவூதி அரேபியா, ஈராக், துருக்கி போன்ற அண்டை நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அந்நாடுகளிலிருந்து தான் அதற்கு பணவுதவி கிடைத்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஹக்கானி என்ற குழுமம் அதிக அளவில் பணவுதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடட்ய்ஹ் தக்கது[2]. ஒருவேளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி விட்டால் தங்கள் நாட்டின் மீதும் கை வைக்கலாம் என்று கருதி அங்குள்ள ஆட்சியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். அமெரிக்கா உள்பட உலக நாடுகளும் இந்த புதிய திவீரவாத-ஜிஹாதி தாக்குதல்களை எதிர்க்க களத்தில் இறங்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் வளர்ச்சி மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று உணரப்பட்டு விட்டது. முஸ்லிம்களும் அதனை உணர்ந்து விட்டார்கள். இந்நிலையில் இந்தியாவில் அல்-கொய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவன் அய்மான்-அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்துள்ளான்[3].
IM Al-Quida nexus India
காலிபைட்டும், இந்தியாவைஅதில்சேர்க்ககையாளும்மானசீகமுறைகளும்: மியன்மார், அசாம், குஜராத், காஷ்மீரம் முதலிய இடங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் துன்பங்களுக்கு எதிராக இது செயல்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் வேலையாக இருக்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு இந்தியாவில் கலவரம் மற்றும் தீவிரவாதத்தையும் வளர்த்து வருகின்றது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அய்மான் அல் ஜவாஹிரி பேச்சு அடங்கிய 55 நிமிடம் ஓடுகிற வீடியோ யு-டியுப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி உள்ளது[4]. அல் கொய்தா இயக்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் – ஜிஹாத் என்று அழைக்கப்படும். இது அங்கு புனித போர்க்கொடியை தூக்கிப் பிடிக்கும். இஸ்லாமிய ஆட்சியை திரும்ப கொண்டு வரும். ஷரியத் சட்டத்துக்கு அதிகாரம் வழங்கும். இந்திய துணைக் கண்டத்திற்கு இஸ்லாம் திரும்ப வேண்டும்.
India Today cutting on ISIS-Jihad plot
ஆசியாவைஇஸ்லாம்மயமாக்கும்முயற்சி: ஆக்கிரமிப்புக்கு முன்பு இந்தியா, இஸ்லாமிய உலகின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. இந்திய துணைக்கண்டத்தில், பர்மாவில், வங்காளதேசத்தில், அசாமில், குஜராத்தில், ஆமதாபாத்தில், காஷ்மீரில் தீங்குகளிலிருந்து (இஸ்லாமியர்களை) காக்கும். காயிதத் அல் – ஜிஹாத்தில் உள்ள உங்கள் சகோதரர்கள் உங்களை மறக்கவில்லை. அவர்கள் உங்களை அநீதி, ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், பாடுகளில் இருந்து விடுவிப்பார்கள். இந்த இயக்கம் இன்றைக்கு தோன்றி விடவில்லை. இது 2 ஆண்டுகளுக்கு மேலாக புனிதப் போராளிகளை திரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக விளைந்திருக்கிறது. இது வெற்றி பெறும். முல்லா உமர் நம்பிக்கையாளர்களின் உத்தரவு இது. ஒசாமா பின்லேடனின் அழைப்பை புதுப்பித்து பிரகடனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இது. எதிரிகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுக்க வேண்டும். தனது சொந்த பூமியை மீட்டெடுக்க வேண்டும். தனது இறையாண்மையை மீட்க வேண்டும். என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அல் கொய்தா இயக்கம் புதிய கிளையை தொடங்கியுள்ளது. என்று அமெரிக்க மீடியா மற்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
Osama and Ayman Al-Zawahari
இந்தியாவில்தற்கொலைப்படைஉருவாக்கும்முயற்சிகள்: அல்-குவைதா, இந்தியாவில் உள்ள இந்திய முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி இவற்றின் உதவி கொண்டு ஃபிதாயீன் என்ற தற்கொலைப் படை அமைத்து இந்திய முக்கிய நகரங்களைத் தாக்கும் திட்டம் தெரிய வந்துள்ளது[5]. செயிக் என்ற இந்திய முஜாஹித்தீனின் தொழிற்நுட்ப ஆள் சஹரன்பூர் ரெயில் நிலைத்தில் வெள்ளிக்கிழமை (05-09-2014) அன்று பிடிபட்டான். தில்லி அதில் முக்கிய இடமாக உள்ளது, என்று அவனிடம் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது[6]. யாசின் பட்கல் பிடிபட்டபோது, இவன் நேபாளத்திற்கு ஓடிச் சென்று விட்டான். 2010ல் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்திய வெடிப்பொருட்களை தான் பெற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். ஜம்மு-காஷ்மீர், கேரளா, அசாம், குஜராத், தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் அவர்களுக்கு உதவி கிடைத்து வர் உவதாகவும் தெரிகிறது. இதனால் அம்மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா-காஷ்மீர் ஜிஹாதி இணைப்பு ஏற்கெனவே பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. அதில் தமிழகத்தின் பங்கும் இருப்பது கவனிக்கத் தக்கது.
Isis targets India
தேடப்பட்டுவரும்உலககுற்றவாளிகளைதெய்வீகமயமாக்கும்இஸ்லாமியஇறையியல்: அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவன் அய்மான் அல்–ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் இருப்பவன் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபுபக்கர் அல்–பாக்தாதி தான். சன்னி பிரிவைச் சேர்ந்த இவன், அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படுகிறான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கும் 43 வயதான அல்–பாக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை வெளிக்காட்டுவது இல்லை. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பான். இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறுகிறார்கள்[7]. இவ்வாறுதான் தீவிரவாத இறையியலை பயங்கரவாதிகள் வளர்த்து வருகிறார்கள். இது இஸ்லாமை சித்தாந்தமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளைஞர்களை எளிதில் ஜிஹாதில் ஈடுபட்டு, ஷஹீதுகளாக மாற வைக்கிறது.
Pan-Islamic jihadi and state assumed
இந்துக்களைக்கொல்லதயாகஇருக்கும்குரூரஜிஹாதிகள்: ஜிஹாதிகள் இவ்வாறு வெளிப்படையாக இந்தியாவைத் தாக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக மிரட்டிக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் அமைப்புகள் ஏதோ தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல ஒரு புறம் ஜிஹாதிகளைக் கண்டிப்பது, மற்றும் இன்னொருப் பக்கம், ஆஹா இதெல்லாம் பிஜேபிக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் பேசுவதும்[8] படுவேடிக்கையாக இருப்பதுடன், அவர்களது போலியான மனப்பாங்கையும், இரட்டை வேடங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், பெரும்பாலான முஸ்லிம்களின் எண்ணங்களில் ஒரு பக்கம் சந்தோஷமும், அதே நேரத்தில் சுன்னி-ஷியா போராட்டங்கள், அதிகமான ஷியாக்கள் கொல்லப் படுவது, இரானை உசுப்பிடுமோ என்றும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஷியாக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், இது வரையிலும் அமைதியாக இருப்பது கவனிக்கத் தக்கது.
முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குரூரஜிஹாதித்துவத்தைமறைக்கஇந்துத்வத்தின்போடும்பழிகள்: இந்துத்வவாதி மோடியின் கீழுள்ள பிஜேபி ஆட்சி இருப்பதினால், “இந்து ராஷ்ட்ரா” என்ற அவர்களது திட்டத்திற்குத்தான் இது உதவும் என்றும் திரித்து முஸ்லிம் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[9]. சையீத் நக்வி என்றவரும் “ஏற்கெனவே மதரீதியில் பிளவு பட்டுள்ள இந்து-முச்லிம்களிடையே இது மேலும் தீயை வளர்க்கும்”, என்று இதே தோரணையில் எழுதியுள்ளார்[10]. ஆனால், இந்தியாவின் மீது எப்படி முகமதியர்கள் 712லிருந்து தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்ற சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால், முஸ்லிம்களின் குரூரக்கொலை திட்டம், இந்துக்களை தாக்கியது, கொடுமைப்படுத்தியது, கோவில்களை இடித்தது என்ற பல உண்மைகள் வெளி வரும். ஆகவே, முகமதியர்கள் / முஸ்லிம்கள் ஏதோ சாத்துவிக சித்தர்கள், அஹிம்சை புத்தர்கள் என்ற ரீதியில் இவர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவது மிகக்கேவலமான பிரச்சாரம் ஆகும். முதலில் இத்தகைய ஜிஹாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர மறைமுகமாக அவர்களது குரூரச் செயல்களை நியாயப்படுத்துவது அவர்களுடன் சேர்ந்து செயல்படுவது போலத்தான் ஆகும்.
712லிருந்துநடந்துவரும்ஜிஹாதிதான் – இந்துக்கள்எதிர்க்கொண்டேஆகவேண்டியநிலையாகிறது!: இடைக்காலத்தில் இந்தியர்களின் / இந்துக்களின் ஆட்சியாதிக்கம் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இருந்து வந்துள்ளது. இஸ்லாம் வளர்ந்து கிழக்குப் பக்கம் பரவ ஆரம்பித்த போது, அது இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க ஆரம்பித்தது. திடீரென்று தாக்கி கொள்ளை-கொலைகளில் ஈடுபட்டு வந்த முகமதிய படைகள் என்றுமே வஞ்சக முறைகளைத் தான் கையாண்டு வந்துள்ளன. 700 ஆண்டுகள் ஆட்சி, ஐரோப்பியர்கள் / இங்கிலாந்துவாசிகளிடம் சென்று, விடுதலைப் பெற்றப் பிறகு, இந்தியாவை காலிபைட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்து வந்துள்ளது. இதற்கு “கிலாபத் இயக்கத்திற்கு” காந்தி ஆதரவு தெரிவித்ததும் தீயில் எண்ணையை வார்த்தது போலாகியது. இப்பொழுதைய காலக் கட்டத்தில் ஐசிஸ் கிலாபத்தை மறுபடியும் நிலைநிறுத்த பாடுபடுவதும், காந்திய ஆதரவையும் கூர்மையாக ஆராய வேண்டியுள்ளது. செக்யூலரிஸவாதிகள் மேற்குறிப்பிட்டபடி, இந்துத்வத்தை குறைகூறி, இந்த குரூர-பயங்கரவாதத்தை ஆதரிக்க இப்பொழுதே ஆரம்பித்து விட்டன. இனி இந்திய ஊடகங்களில் அத்தகைய பிரச்சாரங்கள் அதிகமாகும். வழக்கம் போல கம்யூனிஸ்டுகளும் தங்களது வலையை வீச ஆரம்பிப்பார்கள். இஸ்லாமிய நிதியுதவி, வழ்க்ஷக்கம் போல கிடைக்கும். எனவே இந்துக்கள் தங்களது மீதான தாக்குதலை, புதிய யுத்தமுறையை நன்றாகப் புரிந்து கொண்டு, இத்தகைய விஷமப்பிரச்சாரவாதிகளை வெளிக்காட்ட வேன்டும், தனிமைப் படுத்த வேண்டும்.
இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது பற்றி விமர்சித்த கமால் ஃபரூக் சமாஜ்வாடி கட்சி செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன என்ற தலைப்பில் இப்பிரச்சினை அலசப்பட்டது[1]. கமால் ஃபரூக்கின் விஷமத்தனமான பேச்சின் தன்மை எடுத்துக் காட்டப்பட்டது[2]. இவ்விசயத்தில் கர்நாடகா, பீகார், உபி தொடர்புகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவில் சென்று விட்டன[3]. இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளதில், பலர் உதவிய விஷயங்களும் வெளி வந்தன[4]. ஊடகங்கள் அவனுக்கு உதவும் விதமும் எடுத்துக் கட்டப் பட்டது[5]. இதனால், வேறு வழியில்லாமல், கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது.
கமால் ஃபரூக் நீக்கப் பட்டதன் பின்னணி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் கைது நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது[6]. இந்திய- நேபாள எல்லையில் அண்மையில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த கமால் ஃபரூக், பட்கலை கைது செய்தது அவர் செய்த குற்றத்தின் அடிப்படையிலா? அவர் இஸ்லாமியர் என்பதற்காக எனக் கேள்வி எழுப்பியிருந்தார்[7]. யாசின் பட்கலுக்கு ஆதரவாக கமால் ஃபரூக் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன[8]. தனது பேச்சின் தன்மையை அறிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் செய்தி வந்தது[9]. ஆனால், அதற்குள் அவரது பேச்சின் தன்மையினால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இவரின் பேச்சு மதநல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், இன்று கட்சி செயலர் பொறுப்பில் இருந்து கமால் ஃபரூக் நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது[10].
யாசின்பட்கல்லுக்குபரிந்துபேசுவதுஏன்?:சமஜ்வாதி கட்சியின் தலைவர் கமால் பரூக்கி என்பவர், “அவன்தீவிரவாதிஎன்றால்விடக்கூடாது. ஆனால், அவன்முஸ்லிம்என்றதால்மட்டும்கைதுசெய்யப்பட்டிருந்தால், பிறகுஎச்சரிக்கவேண்டியுள்ளது, ஏனெனில்அதுமுஸ்லிம்சமுதாயத்திற்குஒருதவறானசமிஞையைஅனுப்புகிறது. ஆகவேஅவன்கைதுசெய்யப்பட்டதுகுற்றத்தின்அல்லதுமதத்தின்அடிப்படையிலாஎன்பதைவிளக்கவேண்டும்”, இப்படி பேசியதும்[11][2], அங்கு மடி-கணினி வாங்க வந்த மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். உடனே, கூட இருந்த ராம்கோபால் யாதவ், “பட்டகல் ஒரு தீவிரவாதி தான், ஆகவே அவன் அவ்வாறுதான் நடத்தப்படுவான்”, என்றார். பிடிபட்ட தீவிரவாதி முஸ்லிம் என்றதும், மற்றொரு முஸ்லிம், உடனே இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. சாதாரண நேரத்தில், “தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று குறிப்பிடுவது தவறாகும்”, என்கின்றவர்கள் இப்பொழுது இப்படி பரிந்து கொண்டு பேசுவது அவன் முஸ்லிம் என்பதாலா அல்லது தீவிரவதியாக உள்ள முஸ்லிமுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலா?
இஸ்லாமியர்களைஇலக்குவைத்துகைதுநடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகிறது: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதை உத்தரப்பிரதேச மாநில ஆளும் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான கமால் ஃபரூக் –
யாசின் பட்கலை போலீசார் மதத்தின் அடிப்படையில் கைது செய்தனரா?
அல்லது குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கைது செய்தனரா?
என்பது பற்றி விளக்கம் வேண்டும். அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் யாசின் பட்கல் கைது நடவடிக்கையும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். பொறுப்பில்லாமல் இவர் இப்படி பேசியுள்ளது முஸ்லிமின் மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் இப்படி முஸ்லிமாகவே செயல்படுவதைத்தான் அடிப்படைவாதம், வகுப்புவாதம், இந்தியவிரோதம் என்று எளிதில் அறியப்பட்டாலும், செக்யூலரிஸம் என்ற மாயாஜாலத்தில் மறைத்து விடுவர். சி.என்-ஐ.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை இதை பெரிது படுத்தாது. கமால் பரூக்கியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும்[12] யாரும் அவரை எதிர்க்கப்போவதில்லை, கண்டிக்கப்போவதில்லை. நல்லவேளை, இவரே ஒப்புக் கொண்டு விட்டார், கைது செய்யப்பட்டது யாசின் பட்கல் தான் என்று. ஏனெனில், கைது செய்யப்பட்டது அவனில்லை என்று செய்திகளும் வந்துள்ளன, அவனுடைய வக்கீலும் அவ்வாறே கூறுகிறாராம்!
இப்பொழுது நீக்கப் பட்டாலும், வேறு வழியில் உள்ளே கொண்டுவரப்படுவார் என்பது நிச்சயம். ஏனெனில் முல்லாயம் முஸ்லிம்களை வைத்துக் கொண்டுதான், ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆகவே, பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அவ்வாறு செய்யமாட்டார்.
[11] Responding to the arrest of the 30-year-old accused, who is wanted in several blast cases, Farooqui had yesterday said, “Is this arrest based on crime or religion?”. “If he is a terrorist, then he should not be spared but if he has been arrested just because he is a Muslim, then caution should be exercised as we don’t want to send a wrong message to the entire community that we are trying to malign the it’s image without a thorough investigation,” he had said.
அண்மைய பின்னூட்டங்கள்