Archive for the ‘ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம்’ category

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

மார்ச் 26, 2013

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

Sanjaya with long beard - a sufi looking

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.

மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

Sanjaya with long beard sufi look

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.

முஸ்லீம்இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

Sanja with different look prompting Yasar Arafat

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.

முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

Sanjay with beard and all

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.

பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

Sanja coming to court

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.

Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”!

Sanjay Dutt worshipping in a Karnataka temple

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

Sanjay-Dutt with Tilak

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.

Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான்.
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.”
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான்.
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term.
 As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான்.
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6].

Sanjay with saffron shawl

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.

போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்

Sanjay-Dutt-after-paying-obeisance-at-Golden-Temple-in-Amritsar

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

sanjay-dutt-at Ajmir dargah posing as Muslim

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!

© வேதபிரகாஷ்

24-03-2013


[1] Zaibunnisa Kadri, who acted as a conduit for the arms without express realisation of the contents of the package, were charged under the more rigorous provision.

Read more at:http://indiatoday.intoday.in/video/zaibunnisa-kadri-sanjay-dutt-1993-mumbai-blasts-anees-ibrahim-abu-salem/1/259373.html

[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”

[10] Sanjay Dutt is a big man. He has sources. What do we have? I don’t even have money to pay the lawyer any more. Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer.

http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307Sanjay_dutt_CS.asp

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

பிப்ரவரி 23, 2013

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

Afzal-Hyderabad-Kasab-nexus

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

Hyderabad blasts - locations with time

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்

தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

IED - cycle bombs placed - locations

ஐ.ஈ.டி. விவரங்கள்

கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது  உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

CCTV images pointing to the suspects

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?

கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

IM-email-2010-1

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்

மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

Blasts taken place 2006-2013

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Key players in the blasts

இவர்களை பிடிக்க முடியாதா?

வேதபிரகாஷ்

23-02-2013


[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.

[2]  Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[4] Mohammed Ahmed Siddibapa Mohammed Zarrar alias Yasin Bhatkal, who is said to be heading the operations of Indian Mujahideen in India, has dodged the bumbling intelligence agencies on at least three occasions. He was first arrested and jailed in Kolkata’s Alipore jail between December 2009 and February 2010 in a case of fake currency seizure.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2283048/Indian-Mujahideen-head-jailed-2009-got-bail-cops-did-know-terror-links.html#ixzz2LjIERYiR

[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.

[6] India is one of the most vocal supporters of continued engagement and has given Afghanistan more than $2 billion since the US-led invasion in 2001 overthrew the Taliban regime, which sheltered virulently anti-Indian militants.

http://www.infowars.com/india-fears-for-afghanistan-after-nato-withdrawal/

[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.

[10] Once NATO forces pull out, several splinter groups will try to take over control of the troubled nation and this could lead to immense instability in the region, which could be fatal to India.

http://www.rediff.com/news/report/natos-afghan-pull-out-may-prove-costly-for-india/20121015.htm

ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!

பிப்ரவரி 22, 2013

ஐயோவெடிக்கும், அதிரும், அலறும்பாத்ஐதராபாத்!

நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை  காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன.  இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.

உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.  அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.

ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!

மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே  விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதுகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.

ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.

இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-bomb-blasts-Initial-probe-suggests-hand-of-Indian-Mujahideen/articleshow/18625615.cms

[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-delayed-timer-used-to-detonate-bombs_830723.html

[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.

http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092

[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.

http://www.ndtv.com/article/india/hyderabad-bomb-blasts-danger-signs-since-october-a-disconnected-cctv-this-week-334057

வெடிபொருள் வழக்கில் ஏர்வாடி காசிம்க்கு ஜாமீன்!

ஜூலை 8, 2010

வெடிபொருட்களை பதுக்கிய வழக்கில் ஏர்வாடி காசிமிற்கு ஐந்தாண்டு சிறை!

ஆகஸ்ட் 10,2010,                                                                http://www.dinamalar.com/News_Detail.asp?Id=59107

பூந்தமல்லி :சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து, டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி, கண்ணிவெடி, பைப் வெடிகுண்டு ஆகியவற்றை பதுக்கி வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்  தீர்ப்பளித்தது. சென்னை, புளியந்தோப்பு மசூதி தெருவைச் சேர்ந்தவர் மஸ்தான் (50). கடந்த 1998ம் ஆண்டு இவர் வீட்டின் மாடியில் ஏர்வாடி காசிம், அஸ்ரப் அலி ஆகிய இருவரும் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்று, 10 நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மஸ்தான், இது குறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது –

384 டெட்டனேட்டர்கள்,

159 ஜெலட்டின் குச்சிகள்,

கண்ணாடி ஜாடியில் 3 கண்ணிவெடிகுண்டுகள்,

ஒரு பைப் வெடிகுண்டு ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

வெடி பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், கடந்த 1998ம் ஆண்டு மே 22ம் தேதி புளியந்தோப்பு போலீசார், ஏர்வாடி காசிமை கைது செய்தனர். அதே ஆண்டு ஜூன் 8ம் தேதி இந்த வழக்கு, பூந்தமல்லி, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், அனைத்து கட்ட சாட்சியங்களும் விசாரித்து முடிக்கப்பட்ட பின், நீதிபதி வணங்காமுடி  தீர்ப்பளித்தார். வெடிபொருட்கள் பதுக்கிய குற்றத்திற்காக ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரான அஸ்ரப் அலி தொடர்ந்து தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெடிபொருள் வழக்கில் ஏர்வாடி காசிம்க்கு ஜாமீன்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33764

வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது: சென்னை: வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அவர் மீதான வழக்கை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டத்தின் கீழ், கடந்த 98ம் ஆண்டு மே மாதம் ஏர்வாடி காசிம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வேறொரு வழக்கில் எட்டு ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. எட்டு ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவித்து விட்டார். வெடிமருந்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

Erwadi-kasim-bailed-out

Erwadi-kasim-bailed-out

நிபந்தனையில் ஜாமீன்:  இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் காசிம் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: ஒரு குற்றத்துக்கான தண்டனைக் காலத்தை விட, அதிக நாட்கள் சிறையில் இருந்தால் அந்த நபரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான வழக்கு விசாரணையை ஏன் விரைந்து முடிக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. பூந்தமல்லியில் தங்கியிருக்க வேண்டும். காலையில் கோர்ட்டிலும், மாலையில் போலீஸ் நிலையத்திலும் ஆஜராக வேண்டும். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆத்திரமூட்டும் வகையில் பேசக் கூடாது. தங்கியிருக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை, இரண்டு மாதங்களில் பூந்தமல்லி சிறப்பு கோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.