கேரளாவில்லவ்ஜிஹாத்தெரிந்தவிசயம்தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.
டிரைலருக்குப்பிறகுஅமைதியானவர்கள், மறுபதியும்எதிர்ப்பில்ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].
மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில்எச்சரிக்கை, திரையரங்களுக்குபாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி, தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது. திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].
திரைப்படத்தைப்பற்றியவிமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].
[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படிஇருக்கு ‘திகேரளாஸ்டோரி’ திரைப்படம்? ட்விட்டர்விமர்சனம்இதோ!, HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், திகேரளாஸ்டோரிபடத்தைதிரையிட்டவணிகவளாகம்முற்றுகை… போலீஸார் – எஸ்டிபிஐகட்சியினர்இடையேதள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..
[13] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story Twitter Review: வெறுப்புபிரச்சாரமா? உண்மைசம்பவமா? திகேரளாஸ்டோரிபடத்தின்ட்விட்டர்விமர்சனம்இதோ! , By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST) , Published at : 05 May 2023 01:08 PM (IST)
வண்ணாரப்பேட்டைமுஸ்லிம்ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]
வண்ணாரப்பேட்டைமுஸ்லிம்பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.
போலீஸாரைஒருதலைப்பட்சம்மாககுறைகூறும்ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை. பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].
தினத்தந்திடிவிதொலைக்காட்சியில், எஸ்டிபிஐஉறுப்பினர்போலீஸாருக்குஎதிராகபயங்கரமானபுகார்சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.
திருமாவளவன்உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத்திருத்தச்சட்டம், தேசியமக்கள்தொகைப்பதிவேடு, தேசியகுடியுரிமைப்பதிவேடுஆகியவற்றைத்தமிழ்நாட்டில்நடைமுறைப்படுத்தக்கூடாதுஎனவலியுறுத்தியும், குடியுரிமைத்திருத்தச்சட்டத்துக்குஎதிராகசட்டப்பேரவையில்தீர்மானம்நிறைவேற்றக்கோரியும்சென்னைபழையவண்ணாரப்பேட்டைபகுதியில்மக்கள்அறவழியில்கூடிபோராட்டம்நடத்தியுள்ளனர்.பெண்களின்போராட்டம்வெற்றிகரமாகநடப்பதைசகித்துக்கொள்ளமுடியாமல்அவர்கள்மீதுகாவல்துறைவன்முறையைஏவிஇருக்கிறது. அங்குஇருந்தபெண்கள்மீதுதாக்குதல்நடத்தியதைபார்த்தஆண்கள்அவர்களுக்குபாதுகாப்பாகஅங்கேவந்துள்ளனர். அவர்களைத்கடுமையாககாவல்துறையினர்தாக்கியுள்ளனர். அந்தநெரிசலில்சிக்கிமுதியவர்ஒருவர்உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும்மேற்ப்பட்டவர்களைக்காவல்துறைகைதுசெய்துள்ளது. இந்தச்செய்தியைஅறிந்ததும்நேற்றிரவுதமிழ்நாடுமுழுவதும்பல்வேறுஇடங்களில்பொதுமக்கள்சாலைமறியலில்ஈடுபட்டனர். அதன்பிறகுசென்னைபோலீஸ்கமிஷனர்பேச்சுவார்த்தைநடத்தி, கைதுசெய்தவர்களைவிடுவித்துள்ளார். இதனால்சாலைமறியல்போராட்டங்கள்விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.
உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின்பிறந்ததேதி, பிறந்தஇடம்ஆகியவிவரங்களைச்சேகரிக்கச்சொல்லும்தேசியமக்கள்தொகைப்பதிவேடுநடவடிக்கையைமேற்கொள்ளமுடியாதுஎன்றுபாஜகவின்கூட்டணிக்கட்சிகளானஐக்கியஜனதாதளம்மற்றும்பிஜுஜனதாதளம்ஆகியவைதெரிவித்துள்ளநிலையில்அதனால்எந்தபாதிப்பும்இல்லை, அதைநாங்கள்நடைமுறைப்படுத்துவோம்என்றுஇங்கேஉள்ளஅதிமுகஅரசுகூறிவருகிறது. குடியுரிமைமசோதாவுக்குஆதரவாகவாக்களித்துஅதைசட்டமாகநிறைவேற்றிஇன்றுஇந்தியாமுழுவதும்அமைதியற்றசூழல்நிலவுவதற்குவழிவகுத்தஅதிமுக, தமிழ்நாட்டைஉத்தரப்பிரதேசத்தைப்போலவன்முறைபூமியாகமாற்றுவதற்குதிட்டமிட்டுசெயல்பட்டுவருகிறது. அமைதியானஅறவழிப்போராட்டங்களைக்காவல்துறையைவைத்துஒடுக்குவதற்குமுயல்கிறது. அதன்ஒருவெளிப்பாடுதான்நேற்றுநடந்தசம்பவம். இதைஜனநாயகத்தின்மீதுநம்பிக்கைகொண்டவர்கள்அனுமதிக்கமுடியாது”.
[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”
[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.
[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.
[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST
[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரைசாகடித்தவர்கள்மீதுகொலைவழக்குப்போடுங்க… கொந்தளிக்கும்திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.
கேரளாமுதல்காஷ்மீர்வரை: இஸ்லாமியஅடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனிதவெடிகுண்டாகமாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)
காஷ்மீர்கல்லடி–கலாட்டாபொறுக்கிகள்ராணுவத்தினரைஅவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!
கிரிக்கெட்வீரர்கள்பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இதுஏற்றுக்கொள்ளமுடியாதது. நமதுதுணைராணுவத்தினரைஇப்படிசெய்யக்கூடாது. இத்தகையகெட்டசெயல்கள்தடுத்துநிறுத்தப்படவேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமதுராணுவவீரர்கள்மீதுவிழுகிறஒவ்வொருஅடிக்கும், 100 பேரின்உயிரைவீழ்த்தவேண்டும். யாருக்கெல்லாம்இங்கேஇருக்கஇஷ்டம்இல்லையோஅவர்கள்எல்லாரும்நாட்டைவிட்டுவெளியேறட்டும். காஷ்மீர்எங்களுக்கேஉரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோகாட்சிஉண்மையானதுதான். சம்பவம்எங்குநடைபெற்றது, பாதிப்புக்குள்ளானபடைப்பிரிவுஎதுஎன்பதைகண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாகதகவல்களைசேகரித்துசதூராபோலீஸ்நிலையத்தில்புகார்செய்துள்ளோம். வழக்குபதிந்து, தாக்குதல்நடத்தியவர்கள்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.
ரத்தவெள்ளம்ஏற்படுவதைசமயோஜிதமாகதடுத்ததைவிஷமத்தனமாகத்திரித்துக்கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.
உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள்மீதுகற்கள்படக்கூடாதுஎன்பதற்காகத்தான்அந்தஇளைஞர்ஜீப்பின்முன்பக்கமாககயிற்றில்கட்டப்பட்டுகொண்டுசெல்லப்பட்டாரா?. இதுமிகுந்தஅதிர்ச்சிஅளிக்கிறது. படையினரின்இந்தசெயல்மூர்க்கத்தனமானது. இதுஎதிர்விளைவைஏற்படுத்தாதுஎன்பதுஎன்னநிச்சயம்? கல்வீச்சில்ஈடுபடுபவர்களின்கதிஇதுதான்என்பதைவெளிப்படையாககூறும்இந்தசம்பவம்பற்றிஉடனடியாகவிசாரணைநடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.
தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.
இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.
பிரிடிஷ் பிரஜைக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது: மொஹம்மது அஸ்கர் (71 வயதான) ஒரு பிரிடிஷ் பிரஜை ஆவர். பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இங்கிலாந்தில் தங்கி விட்டார், குடிமகனாகவும் இருக்கிறார். அந்நிலையில், சொத்து தகராறு விசயமாக பாகிஸ்தானுக்கு வரவேண்டியிருந்தது. அப்பொழுது, இவர் மீது வழக்கும் போடப் பட்டது. ஏற்கெனவே மனநிலை பாதிக்கப் பட்டவர் மற்றும் வயதானவர் என்பதால், ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டு, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று பேசியிருக்கிறார். ஆனால், பிறகு, அதற்கும் ஒருபடி மேலே போய், தான்தான் மொஹம்மது நபி தன் மீது யாரும் குற்றஞ்சாட்ட முடியாது என்றேல்லாம் பேசியதாகவும், எழுதியதாகவும் சொல்லப் பட்டது[1].
தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் ஷரீயத் நீதிமன்றம்மரண தண்டனை விதித்துள்ளது: தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் 2010ல் அவன் ராவல்பின்டியில் போலீசரால் மததுவேஷச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். தான் போலீசாருக்கு எழுதிய கடிதங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது[2]. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன[3]. இந்த வழக்கு மூடிய நீதிமன்றத்தில் ரகசியமாக நடத்தப் பட்டது. 23-01-2014 அன்று அவனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டது. அதுமட்டுமல்லாது ரூ. 10,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது[4]. ஆனால், அவனது வழக்கறிஞர் அவன் மனநிலை சரியாகவில்லை, மேலும் முதலில் சொத்து விவகாரத்தில் தான் அவன் மீது வழக்குப் போடப்பட்டது என்று வாதிடினார்[5]. இருப்பினும் 97% சதவீதம் முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட பாகிஸ்தானில் இத்தகைய வழக்குகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்[6].
இங்கிலாந்து சட்டரீதியில் போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை: மொஹம்மது அஸ்கர் இங்கிலாந்தின் பிரஜை எடின்பர்கில் மனச்சிதைவு மற்றும் குழப்பம் [treated for paranoid schizophrenia in Edinburgh] முதலிய நோய்களுக்காக 2003ல் சிகிச்சைப் பெற்றவர். இதற்கான ஆதாரங்களையும் வக்கீல் தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்பதால் மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது[7]. இப்பொழுது அவனது மனநிலை மற்றும் பாகிஸ்தானிய சிறையில் அவனது உடல் ஆரோக்யம் முதலியவை கேள்விக்குறியாகியுள்ளது. ஒன்று அவன் அடித்துக் கொல்லப் படலாம் அல்லது தற்கொலையும் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று சொல்லப் படுகின்றது. பாகிஸ்தானில் பொதுவாக, இஸ்லாம் மதத்திற்கு எதிராக ஷரீயத் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை மிகவும் அபாயத்தில் உள்ளது. மக்களே அவர்களை அடித்துக் கொல்லக் கூடிய நிலைக் கூடவுள்ளது. இதனால், மனித உரிமைக் குழுக்கள், ஆங்கிலேய சங்கங்கள், பிரிடிஷ் அரசாங்கம் முதலியவை கவலையைத் தெரிவித்துள்ளன. பிரிடிஷ் அரசாங்கம் தூதரகத்தின் மூலம் முடிந்த வரையில் உதவிகளை அளித்து வருகின்றது. ஷரீயத் சட்டத்தின் கீழ் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாதிட முடியாது[8].
Allah for muslims only – Vedaprakash.3
இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா – நிலைமை: செக்யூலரிஸத்தில் இந்தியா மூழ்கித் திளைத்து வருகின்றது. இங்கிலாந்து பாதிரி, சென்னையிலேயே சிறுவர்-சிறுமிகளைப் புணர்ந்த குற்றங்களுக்காகக் கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, பிரிடிஷ் போலீசார் சென்னைக்கு வந்து, அவனை கைது செய்து கொண்டு போய், தங்களது நாட்டில், தங்களது சட்டங்களின் கீழ் அவனுக்கு தண்டனை விதிக்கப் படும் என்று அறிவித்தது. அதேபோல, கள்ளக் கடத்திலில் ஈடுபட்ட ஒரு பேராசிரியரை (F. A. A. Flynn) ஆஸ்திரேலியா கொண்டு சென்றது. மும்பை குண்டு வழக்கில் சிக்கிய இன்னொரு கிருத்துவப் பாதிரியும், அமெரிக்கப் பிரஜை என்பதால், அவனை கொண்டு சென்றது. ஆனால், பாகிஸ்தானில் இவ்வாறு நடக்கும் போது, எல்லா நாடுகளும் “சட்டப்படி” நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. பிரிடிஷ் காமன்வெல்த் கட்டமைப்பில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே ஒரு இந்தியர் சிக்கிக் கொண்டிருந்தால், மனித உரிமைகள், கருத்துரிமை, எழுத்திரிமை என்றேல்லாம் சொல்லிக் கொண்டு, எல்லா கூட்டங்களும் கிளம்பியிருக்கும். அதுவும் அந்த இந்தியன் முஸ்லிம் என்றால், வேறுமாதிரி திசைத் திரும்பியிருக்கும். ஆனால், இங்கிலாந்தே இப்பொழுது அமுக்கி வாசிக்கிறது.
[3] “Asghar claimed to be a prophet even inside the court. He confessed it in front of the judge,” Javed Gul, a government prosecutor, told AFP news agency.
[8] Maya Foa of Reprieve said: “The evidence is clear that he is unable to defend himself in court. “Worse still, he is currently being held in utterly unsuitable conditions in prison, and we are very concerned about his health.”
தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது!
ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது: ஹக்கானி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் பிரிவான தலிபான் குழுவொன்று தாம் தான் சுஷ்மிதா பானர்ஜியைக் கடத்திச் சென்று கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளது. காரி ஹம்ஸா [Qari Hamza] என்ற அத்தீவிரவாதக் கூட்டத்தின் தொடர்பாளன் “தி டெய்லி பீஸ்ட்” [Daily Beast] என்ற நாளிதழுக்கு, “அவள் இந்திய உளவாளி என்பதால் நாங்கள் கொன்றோம். அவளைக் கடத்திச் சென்று மூன்று மணி நேரம் விசாரித்தோம். பிறகு கொன்றுவிட்டோம்”, என்று தெரிவித்துள்ளான்[1]. ஜலாலாபாதில் உள்ள இந்திய தூதரகத்தை சமீபத்தில் தாக்கியதும் இக்கூட்டம் தான். காரி ஹம்ஸா, “எங்களது விசாரணையில் அவள் மேலும் சில ஏஜென்டுகளின் பெயர்களை தெரியப்படுத்தியுள்ளாள். அவர்களையும் நாங்கள் விடமாட்டோம்”, என்று அறிவித்தான்[2]. இதே செய்தியை மற்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. ஆனால், “தி டெய்லி பீஸ்ட்” வெளியிட்டுள்ளது கீழ்கண்டவாறு உள்ளது[3]:
A brutal renegade Taliban militia says they interrogated, then killed, the Indian author, bizarrely claiming she was a spy. Sami Yousafzai and Ron Moreau report.
“We killed Sushmita Banerjee because she is an Indian spy,” the group’s spokesman, Qari Hamza, tells The Daily Beast exclusively. He admits that his men kidnapped, harshly interrogated, and then killed her. “We took her from her house, investigated her for three hours and then left her dead,” he says. “During our investigation Sushmita Banerjee also disclosed the names of other agents and we will go after them as well,” he adds. “We are against everyone who is engaged against the Afghans, the jihad and works with the American attackers.”
இந்திய ஊடகங்கள் மறைத்த விவரங்கள்: வழக்கம் போல, “அவளை சித்திரவதை செய்து” விசாரித்தோம், மற்றும் “நாங்கள் ஆப்கானியர்களுக்கு எதிராக யார் வேலை செய்தாலும் ஒழித்துவிடுவோம், ஜிஹாத் மற்றும் அமெரிக்கர்களுடன் வேலை செய்பவர்கள் அனைவரையும் எதிர்ப்போம்”, என்றதையும் மறைத்து செய்தியை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, சுஷ்மிதா பானர்ஜி எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டார் என்பதையும் அந்நாளிதழ் விவரித்துள்ளது. நடு இரவில், 12 அடி உயரமான சுவரைத் தான்டி குதித்து, சுமார் 10-12 துப்பாக்கி ஏந்தியவர்கள் ஜான்பாஸ் கானின் வீட்டில் நுழைந்தனர். தூங்கிக்கொண்டிருந்த கானை துப்பாக்கி முனையில் எழுப்பிக் கண்களைக் கட்டிக் கட்டி போட்டு விட்டு, “கத்தினால் தொலைத்துவிடுவோம்”, என்று மிரட்டி, சுஷ்மிதாவைக் கடத்திச் சென்றனர். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த கானின் சகோதரர், காலையில் எழுந்த பார்த்த போதுதான் விவரத்தை அறிந்து கொண்டனர்.
துப்பாக்கிகளால் சுட்டுத்தான் எதையும் தெரிவித்துக் கொள்வார்கள்: விடியற்காலை 3 மணியளவில், அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு மூதாட்டி, “காலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. குழந்தை பிறந்ததால், அவ்வாறு கொண்டாடுகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்”, என்றாளாம். ஆனால், உண்மையில் அது தலிபானின் தண்டனை நிறைவேற்றிய சத்தம் தான். நயப் கான் என்பவர், தான் இரவு உடையுடன் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டதை கூறினார். அப்பெண்ணின் முகம் குரூரமாகச் சிதைக்கப் பட்டிருந்தது[4]. சுமார் 15-20 முறை துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கலாம். அவள் சாதாரணமாக, ஆப்கன் பென்களைப் போல உடையணிமல் இருந்ததால், சுஷ்மிதா தான் என்று எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர்.
இந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை[5]: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[6]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[7]. கான் சொன்னது, “நான் கதவை திறந்து போது, தலைப்பாகைகளுடன், முகங்களை மறைத்துக் கொண்டிருந்தார்கள். உடனே உள்ளே நுழைந்தார்கள்”, என்று கான் சொன்னதாக முன்னர் செய்தியை வெளியிட்டது[8].
சுஷ்மிதாபானர்ஜி, என்றசையதுபானர்ஜி கொலை செய்யப்பட்டவிதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[9]:
கணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.
தலைமுடியை பிடுங்கியது[10] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.
20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் காட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.
இத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.
யார் இந்த ஹக்கானி?[11]: ஆப்கானிஸ்தானிய மவ்லவி ஜலாலுத்தீன் ஹக்கானி 1980களில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். ஹக்கானி குழுவினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் தமது ஆதிக்கத்தைச் செல்லுத்தி ஆண்டு வருகின்றனர். இறக்குமதி, ஏற்றுமதி, கட்டுமானம், போகுவரத்து என்று எல்லா வியாபாரங்களிலும் நுழைந்து, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி, பணம் பிடுங்குதல் முதலியன செய்து, பணம் பெருக்கிவருகின்றன. போதைமருந்து, ஹவாலா, பணபரிமாற்றம், போன்ற எல்லா சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் “ஜிஹாத்” போர்வையில் நடத்தி வருகின்றன.
[1] Alleging she was an Indian spy, the Taliban group — Suicide Group of the Islamic Movement of Afghanistan — told a Western publication they were taking responsibility for the killing. This group was reportedly involved in the recent attack against the Indian Consulate in Jalalabad.”We killed Sushmita Banerjee because she was an Indian spy,” the group’s spokesman Qari Hamza told the Daily Beast, the online home of Newsweek magazine.
[4] Although Banerjee’s face had been obliterated by several of the 15-20 bullets that police say her executioners had fired into her, Nayab immediately realized who the dead woman was. “She was not wearing a normal Afghan village woman’s dress and chador,” he told The Daily Beast. “So I knew it was the Indian wife of Janbaz.”
[9] “We found her bullet-riddled body near a madrassa on the outskirts of Sharan city this morning,” provincial police chief Dawlat Khan Zadran said, confirming earlier reports from Indian media. “She had been shot 20 times and some of her hair had been ripped off by the militants,” he said, adding that masked men had tied up the writer and her Afghan husband, local businessman Jaanbaz Khan, before executing her.
[11] Gretchen Peters, Haqqani Network Financing: The Evo;lution of an Industry, Harmony Program, The Compating Terrorism Center at West Point, July 2012.
தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!
தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி
தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1].
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்
சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[2]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[3]. இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[4].
[2] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.
இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!
பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது: ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் பாகிஸ்தான் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் JK02F-0127 என்று பதிவு செய்யப் பட்ட சரக்குலாரி வழியாக நுழைந்தபோது, பிடிபட்டது[1]. சரக்கு லாரிகளை சோதனை போட பாகிஸ்தான் சகோடி என்ற இடத்திலும், இந்தியா சலமாபாதில், அமன் சேது என்ற இடத்திலும் சோதனைச் சாவடிகளை வைத்துள்ளன. லாரி ஓட்டுனர் அப்துல் அஹத் கனி [Abdul Ahad Ganie] என்பவன் பிடிபட்டான். வழக்கம் போல அவன் ஒரு குருவி போன்ற ஏஜென்ட் தான். இருப்பினும் தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால், விசாரித்தபோது, தானும் அவர்களைச் சேர்ந்தவன், சரக்கு ஹிஜ்புல் முஜாஹித்தீனுக்குச் சொந்தமானது என்பதை ஒப்புக் கொண்டான்[2].
ஜிஹாதிகளின் புதிய தீவிரவாத தாக்குதல் – போதை மருந்து: ஶ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக் [Faizan Traders PaK] என்ற கடையில் இறக்கி வைத்து திரும்ப வந்ததாகச் சொல்லப் பட்டது[3]. ஆனால், வண்டியை சோதனை செய்தபோது, ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட போதைப் பொருள் கண்டு பிடிக்கப் பட்டது. அப்பொருளை சோதனை செய்தபோது கோக்கைன் என்றும் தெரிய வந்தது[4]. பிறகு போலீஸார் ஒரு வழக்கைப் பதிவு [FIR No. 47/2013 ] செய்தனர். டிரைவர் மற்றும் கன்டக்டெர் கைது செய்யப்பட்டனர். இப்பொருள் காஷ்மீரில் ஒருவரிடம் டெலிவரி செய்யப் படவேண்டும் என்றும், அங்கிருந்து அவை பிரிக்கப் பட்டு விற்பனை செய்யப் பட்டு, அதிலிருந்து வரும் பணம் தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாத செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படும் என்று தெரிய வந்துள்ளது[5]. ஆப்கானிஸ்தானில் இத்தகைய போதை மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பட்டு, தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. அதனை விற்று அவர்கள் பணம் பெருகிறார்கள்.
இந்திய விரோத ஜிஹாதிகள் ஏன்?: தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் ஊடுருவல்காரர்களின் தீவிரவாதம், பயங்கரவாதம் முதலிய குரூரங்களைத் தடுப்பதற்காகத்தான் 1978ல் எல்லைகள் மூடப்பட்டன. எல்லைகள் வழியாக நடந்து வந்த சரக்குப் போக்கு வரத்தும் நிறுத்தப் பட்டது. வாஜ்பேயி ஆட்சியில் இருதரப்பு உறவுகள் ஓரளவிற்கு சரியாக ஆரம்பித்தன. பிறகு, முஸ்லிம்கள் விருப்பத்திற்கு இணங்க, 57 வருடங்களுக்குப் பிறகு சரக்குலாரிகள் மட்டும் குறிப்பிட்ட 10-15 பொருட்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று ஏப்ரல் 2005ல் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தளர்த்தப் நிலையை தீவிரவாதத்திற்குத்தான் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படடீந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகிகளாகத் தான் இருந்து வந்துள்ளார்கள் ஏன்று தெரியவில்லை. அவ்வப்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், பாகிஸ்தானிய சிம் கார்ட்டுகள் என்று எடுத்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையும், செக்போஸ்டில் இந்திய வீரர்கள் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இம்முறை இப்படி ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருள் பிடிப்பட்டுள்ளது[6].
ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது: தலிபான் – பாகிஸ்தான் – காஷ்மீர் போதை மருந்து வியாபார இணைப்பு, ஜிஹாதி தொடர்பு, தீவிரவாத சம்பந்தம் முதலியவை வெளிப்படையாகிறது[7]. உலகம் முழுவதும் இப்போதை பொருட்கள் ஊடுருவிச் செல்கின்றன. தலிபான் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தானில் போதை மருந்து பொருட்களின் உற்பத்தி அதிகமாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்படும் போதை பொருட்கள் பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்குக் கடத்தப் படுகிறது. மயன்மார் / பர்மாவிற்கும் செல்கிறது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றது. மத்திய ஆசிய நாடுகளும் இதில் சம்பந்தப் பட்டுள்ளன. கசாப் போன்றவர்கள் ஒரு முறையில் பயங்கரவாதத்தால் தாக்கினர் என்றால், முஜாஜித்தீன் பெயரில் பட்டகல் கும்பல் வெடிகுண்டுகள் வைத்து குரூரமாகக் கொல்கின்றனர் என்றால், இந்த போதை மருந்து ஜிஹாதி கும்பல் இவ்வாறு வேலை செய்கிறது[8]. ஆகவே, இந்திய பெற்றோர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனானப் பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானிவே போதை மருந்து கடத்தலில் தான் முதலில் பிடிபட்டான்[9]. பிறகு அவனது பின்னணி தெரிய வந்தது. ஆகவே ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பது உறுதியாகிறது.
முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: பொதுவாக முஸ்லிம்கள் தாங்கள் மது, போதை மருந்து முதலியவற்றை கையால் கூடத் தொடமாட்டோம். அல்லா அவற்றை ஒதுக்கியுள்ளார், என்றெல்லாம் பெருமையாக பேசுவார்கள், தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், இப்பொழுது, முஸ்லிம்கள் எப்படி சட்டங்களை மீறி, தார்மீக விதிகளை மீறி, மனித நேயங்களைத் தாண்டி, சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டத்தில், இப்படி போதை மருந்தைக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. முஸ்லிம் இணைத்தளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், ஒன்றுமே தெரியாதது போல நடிக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகள் என்று அவர்களை சாடவில்லை. நரகத்திற்கு போவார்கள் என்று சாபமிடவில்லை.
பாகிஸ்தான் பெண்கள் போல இந்திய பெண்களும் சீரழிய வேண்டுமா?: பாகிஸ்தான் பெண்களே போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி உழல்வதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பள்ளி-கல்லூரி மாணவிகள் அப்பழக்கத்தில் உள்ளதாக கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்[11]. பாகிஸ்தான் அரசின் போதை மருந்து தடுப்புப் பிரிவு சோதனை மேற்கொண்டதில் 70% பள்ளி-கல்லூரி மாணவிகள் போதை மருந்தை யாதாவது ஒரு முறையில் – புகைத்தல், உக்கா, பீடா, இஞ்செக்சன் – உட்கொள்வதாகத் தெரிகிறது[12]. அதில் 47% கல்லூரி மற்றும் 21% பள்ளி மாணவிகள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் இதே நிலை வரவேண்டுமா? பிறகு இஸ்லாம் பெயரில் ஏன் தாலிபான், முஜாஹித்தீன்,. லஸ்கர் போன்ற தீவிரவாத இயக்கங்கள் இவ்வாறு செய்து வருகின்றன? ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள் அதை ஆதரிக்க வேண்டும்? மற்ற இந்திய முஸ்லிம்களும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்? பாகிஸ்தானிலிருந்து வரும் போதை பொருள் தமிழகத்திற்கு வராதா என்ன?
[1] While claiming that the Rs. 10 crore worth cocaine consignment, seized from a truck across the LoC in Baramulla district, had been smuggled in for Hizbul Mujahideen, the Jammu and Kashmir Police have arrested an alleged operative of the militant outfit from the capital city on Friday – 02-08-2013.
[4] The vehicle had gone to Pakistan Administered Kashmir on Thursday with a load of Bananas from fruit Mandi Srinagar which were delivered to one Faizan Traders PaK, he said. “On through search of the vehicle on its return near Sheeri, nine Packets (approx.10Kgs) of contraband consisting of white colored substance (Cocaine) were seized from the vehicle which were concealed in a tyre in the overhead toolbox,” the spokesman said, adding, “The driver and conductor of the vehicle were questioned on spot who admitted that they had brought the illegal drugs from (PaK) which was to be delivered to some conduit in Srinagar.”
[6] Even as some prohibited items, including rounds of ammunition and Pakistani SIM cards have been recovered from some vehicles and passengers in Jammu, it is for the first time in the last five years of the cross-LoC trade that a sizable quantity of cocaine has been allegedly smuggled in and seized.
[8] In the late 1980s,Pakistan and Afghanistan exported nearly half the world’s heroin, and, although their relative share declined somewhat thereafter, they remain among the world’s major producers. Pakistanis one of the primary transit countries for drugs from Afghanistan and hence knowledge of new routes and evolving methods of drug trafficking is essential for successful interdiction. Pakistan’s population is currently 16 million.
[12] A new survey conducted by the Pakistan Ministry of Narcotics Control shows that nearly 70% of female drug addicts in the country are either high-school or college educated. The study, which interviewed 500 women in Islamabad, Lahore and other cities throughout Pakistan, finds that 47% of the women are college graduates, while 21% have had at least primary or matriculation education.
தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன
பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத – பயங்கரவாதங்கள்: இந்தியா பாகிஸ்தானிற்கு பல ஆவணங்களைக் கொடுத்து, எப்படி தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று எடுத்துக் காட்டி வருகின்றது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இயக்கங்களின் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு வருகின்றது. இருப்பினும் பாகிஸ்தான் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. மாறாக, அது பல வழிகளில் அவற்றை வளர்த்துக் கொண்டே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் விஷயத்திலேயோ அப்பட்டமான மறுக்கமுடியாத பங்கு வெளிப்பட்டுள்ளது. இப்பொழுதைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூட அது வெளிப்படையாக எடுத்துக் கட்டியுள்ளது. ஆனால், தாவூத் இப்ராஹிம் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது. மாறாக, குரூரங்களை மறைத்து, கொடுமைகளை மறைத்து, தன் “உடம்பில் முஸ்லீம் ரத்தம் ஓடுகிறது” என்று சொல்லிக் கொண்ட சஞ்சய் தத்திற்காக “கருணை” என்று திசைத்திருப்ப இந்திய ஊடகங்களே ஈனத்தனமாக செய்ல்பட்டு வருகின்றன.
தாவூத் இப்ராமின் பணம்: தாவூத்தின் பணம் புனிதமானது அல்ல, அது –
ரத்தக்கறைப் பட்ட பணம்;
போதை மருந்து வியாபாரத்தில் ஊர்ந்த பாவப் பணம்;
பெண்மையைக் கெடுத்தப் பணம்
பலருடைக் குடிகளைக் கெடுத்த பணம்
மனிதத்தன்மையற்றப் பணம்.
சுக்கமாக கேடு கெட்டப்பணம்.
ஆனால், அப்பணத்தைப் பற்றித்தான் இப்பொழுது, விவகாரங்கள் வெளிப்படுகின்றன. தாவூத் இப்ராஹிம் பணம் பரோடா வங்கி மூலம் பரிவர்த்தனைச் செய்யப்பட்டது என்று சில ஊடகங்களின் செய்தியை[1] அந்த வங்கி மறுத்துள்ளது[2]. மற்ற கணக்குகளைப் போன்றே, குறிப்பிட்ட கணக்கும் பஹாமாவில், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளையில் (Bank of Baroda, Nassau Branch, Bahamas) இருந்த கணக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. அதன் வழியாக, துபாய்க்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. இது அந்த நாடு மற்றும் துபாயின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தாவூதின் பணம் அல்ல என்று மறுக்கவில்லை. பரோடா வங்கியின் வாதம் முன்பு HSBC வங்கி எப்படி வாதிட்டதோ, அதுபோலத்தான் உள்ளது.
HSBC வங்கி – போதைமருந்து, தீவிரவாதம், இத்யாதி: முன்பு எச்.எஸ்.பி.சி. வங்கி செப்டம்பர் 2011 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களோடு பணம் பரிவர்த்தனை செய்ததில் தொடர்புப் படுத்தப்பட்டது[3]. சுலைமான் பின் அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் (Sulaiman bin Abdul Aziz al-Rajhi) பெயர் அல்-குவைதா பட்டியிலில் இருந்தது. அவருடைய அல்-ரஜி வங்கியுடன் HSBC வங்கி தொடர்பு கொண்டிருந்தது[4]. வங்காளதேசத்தின் கிளைக்கும் தொடர்பு இருந்தது[5]. 3000ற்கும் மேலான சந்தேகிக்கப்பட்ட கணக்குகள் அவ்வங்கி கிளைகளிடம் இருந்தன[6]. அவற்றில் தீவிரவாதிகளின் கையிருந்தது. இந்திய ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது[7]. இங்கிலாந்திலும் இவ்வங்கி கோடிக்கணக்கில் போதை மருந்து வியாபாரிகளுடன் சமந்தப்பட்டு £640million அபராதத்திற்கு உட்பட்டது[8]. அப்பொழுதும் சவுதியின் தீவிரவாத தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம்களைத் தீவிவாதிகள் என்று சித்தரிக்கக் கூடாது என்கிறாற்கள். அப்படியென்றால், இவ்விஷயத்திலும் கூட, ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகிறார்கள்? தீவிரவாதட் ஹ்திற்கு உபயோகப்படுகிறது எனும் போது, விலகிக் கொள்ளலாமே, புனிதர்களாக இருக்கலாமே?
தாவூ த்இப்ராஹிமின் நிழல் கம்பெனிகள் எவை: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களிடமிருந்து தாவூத் இப்ராஹிமுக்கு வரும் பணம் எப்படி செல்கிறது என்று ஆயும்போது, அது பஹாமாவில் இருக்கும், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளைக்குச் செல்கிறது. இப்பணம் கீழ்கண்ட நிதி பரிமாற்ற வங்கிகளினின்று, மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அக்கிளையை அடைகிறது:
அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange)
துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange)
அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange)
அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Almas Electronics),
யூசுப் டிரேடிங் (Yusuf Trading),
ரீம் யூசுப் டிரேடிங் (Reem Yusuf Trading),
ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company),
கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates).
இதைத்தவிர வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி என்கின்ற ( United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty) அமீரக பணமுதலையின் மூன்று ஹோட்டல்களிலும் பங்குள்ளது என்று சொல்லப்படுகிறது[9]. வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி ஊடகங்களில் டி-கம்பெனியுடன் தொடர்புப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்[10], ஷெட்டி அதனை மறுத்து வருகிறார்[11]. இவர் ராஜ் ஷெட்டி என்று பிரபலமாக அழைக்கப்ப்டுகிறார். ரமீ ஹோட்டல் குழுமங்களுக்கு இவர்தான் தலைவர். இவர் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்[12]. இருப்பினும் மற்ற நிறுவனங்கள் இப்ராஹிமிம் நிழல் கம்பெனிகள் தாம் என்று தெரிகிறது.
போதை மருந்து வியாபாரத்தை செய்யும் தாவூத் இப்ராஹிம்: போதை மருந்து கடத்தல் மற்றும் விநியோகதாரர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதில் தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டுள்ளான். தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடக்கும் $3.5 பில்லியன் வியாபாரத்திற்கு இவன் தான் காரணகர்த்தா. இதற்காக அந்தந்த நாடுகளில் பணத்தை பட்டுவாடா செய்ய மற்றும் வசூலிக்க நிறைய நிறுவனங்களை வைத்துள்ளான்[13]. அமீரகத்தில் மட்டும் அத்தகைய 11 கம்பெனிகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ள தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களின் விவரங்களைக் கொண்ட புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன[14]. இப்பணம் எப்படி பாகிஸ்தானிற்கு உபயோகமாக இருக்கிறது என்றால், சலவை செய்யப்பட்ட அப்பணம் அங்கு முதலீடு செய்யப்பட்டதால் 2012ல் பாகிஸ்தானின் பங்கு வர்த்தகம் 49% உயர்ந்தது[15]. அமெரிக்கா இவனது பணப்போக்குவரத்தை முடக்கியதால், இப்படி தனது யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளான் என்று அனைத்துலக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[16]. ஆனால், அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க எதிர்வேலைகளை செய்து வருகிறான்.
தாவூத் இப்ராஹிம் தீவிரவாதியும், இந்தியாவைத் தாக்கும் ஜிஹாதியும்: குலாம் ஹஸ்னைன் என்ற பத்திரிக்கையாளர் 2001ல் எழுதியது இன்று எப்படி மாறியிருக்கும் என்று தெரியவில்லை[17]: “தாவூத் இப்ராஹிம் ஒரு ராஜாவைப் போல வாழ்கிறான், அவனது இல்லம் 6,000 சதுர யார்டுகள் ஆகும், அதில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், ஸ்நூக்கர் அறை, தனிப்பட்ட ஜிம், அவனுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட உடைகள், மெர்சிடெஸ் மற்றும் விலையுயர்ந்த கார்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பெடேக் பிலிப் கடிகாரம் முதலியவற்றைக் கொண்டவன். சினிமா நடிகைகள், விபச்சாரிகள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படியே கரன்ஸி நோட்டுகளை அவர்கள் மீது வாரி இறைப்பான்”. அப்படி பட்டவன் தான், இப்படி இந்தியாவின் மீது ஜிஹாத் என்று குண்டுவெடிப்புகளில் இறங்கியுள்ளான்.
இஸ்லாமியர்கள் இத்தகைய செயல்களை செய்யலாமா: இப்படி எல்லாவிதங்களிலும், இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இந்த தீவிரவாத-பயங்கரவாத நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம், வெடிகுண்டு பயங்கரவாதம், இன்னொரு பக்கம் கள்ள நோட்டுப் புழக்கம், பங்கு வணிகத்தில் முதலீடு, தங்கத்தில் முதலீடு, இன்னொரு பக்கம் போதை மருந்து, சினிமா பெயரில் விபச்சாரம், கிரிக்கெட் பெயரில் எல்லாமே என்று கோடிகளில் முதலீடு செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறார்கள். என்னத்தான் இஸ்லாம், அமைதி, புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டாலும், அவர்கள் செய்து வரும் வேலை பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஹக்கானி நிதி பரிமாற்ற வலை[18] என்ற அறிக்கைப் புத்தகத்தில் இது எடுத்துக் காட்டப்படுகிறது. பஸிர் அலுவகலக கோப்பு (Pazeer Office File) என்ற இன்னொரு ஆவணம் எப்படி முஜாஹித்தீன்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று விளக்குகிறது[19]. இவையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆவணங்கள் தத்ரூபமாக அவர்களின் எண்ணங்களை, செயல்களை விளக்குகின்றன.
ஆனால், இந்திய முஸ்லீம்கள் இவற்றை –
எதிர்ப்பதில்லை;
கண்டிப்பதில்லை;
கண்டுக்கொள்வதில்லை
அமைதியாக இருக்கின்றனர்.
பிறகு இஸ்லாமிய தீவிரவாத-பயங்கரவாதம் என்றால் ஏன் எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை.
வேதபிரகாஷ்
06-04-2013
[1] The bank’s statement came a day after a CNN-IBN and FirstPost investigation found that Dawood’s cash was washing up in the offshore banking haven of Nassau in The Bahamas – a beach paradise also known for its zero-taxes and high-secrecy banking – in a Bank of Baroda branch.
[4] HSBC, the senate report says, did ill-monitored business with Saudi Arabia’s al-Rajhi bank – whose senior-most official, , appeared on an internal al-Qaeda list of financial benefactors discovered after 9/11. The al-Rajhi bank provided accounts to the al-Haramain Islamic Foundation, designated by the United States as linked to terrorism. Its owners, the Central Intelligence Agency asserted in 2003, “probably know that terrorists use their bank”. Lloyds, in a lawsuit, also alleged that al-Rajhi ran accounts used “to gather donations that fund terrorism and terrorist activities” – including suicide bombing. http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/2
[9] In addition, the dossier says Ibrahim has interests in three hotels controlled by United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty. Shetty has often been named in media reports as an associate of D-company, but vehemently denies the allegations.
[12] Varadaraj Manjappa Shetty, better known as Raj Shetty, the Chairman and Managing Worker of the Ramee Group of Hotels, told Gulf News yesterday that “my interaction with the underworld is zero.”
[13] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.
[14] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.
[17] In 2001, journalist Ghulam Hasnain wrote that Dawood “lives like a king”. “Home is a palatial house spread over 6,000 square yards, boasting a pool, tennis courts, snooker room and a private, hi-tech gym. He wears designer clothes, drives top-of-the-line Mercedes and luxurious four-wheel drives, sports a half-a-million rupee Patek Phillipe wristwatch, and showers money on starlets and prostitutes”.
[18] The CTC’s latest report leverages captured battlefield material and the insights of local community members in Afghanistan and Pakistan to outline the financial architecture that sustains the Haqqani faction of the Afghan insurgency. The Haqqani network is widely recognized as a semi-autonomous component of the Taliban and as the deadliest and most globally focused faction of that latter group. What receives far less attention is the fact that the Haqqani network also appears to be the most sophisticated and diversified from a financial standpoint. In addition to raising funds from ideologically like-minded donors, an activity the Haqqanis have engaged in since the 1980s, information collected for this report indicates that over the past three decades they have penetrated key business sectors, including import-export, transport, real estate and construction in Afghanistan, Pakistan, the Arab Gulf and beyond. The Haqqani network also appears to operate its own front companies, many of which seem to be directed at laundering illicit proceeds. By examining these issues this report demonstrates how the Haqqanis’ involvement in criminal and profit-making activities has diversified over time in pragmatic response to shifting funding conditions and economic opportunities, and how members of the group have a financial incentive to remain the dealmakers and the enforcers in their area of operations, a dynamic which is likely to complicate future U.S. and Afghan efforts to deal with the group.
லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?
13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.
13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].
கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).
கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:
இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL – Under Barrel Grenade Launcher,
அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades
கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!
தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?
ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].
ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இதுபோன்றபயங்கரவாதசம்பவத்தைதடுத்தமத்தியஅரசுபோதியநடவடிக்கைஎடுக்கவில்லை”, என்றார். ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?
11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.
திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?
Karunanidhi-with-kulla
என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!
[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.
[6]However, another police source told The Hindu that on specific information, the militant in his late 20s, codenamed Abu Talha, was arrested with a loaded pistol during a dramatic raid. The Army and the CRPF provided cover to the SOG unit.
மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!
மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[1]. 1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[2].
உண்மையைப் புரட்டும் எத்தன்: உண்மையில் 1980களில் தான் இந்துக்கள் ஒட்டு மொத்தமாக மிரட்டப்பட்டு, காஷ்மீரத்திலிருந்து விரட்டப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், மதம் மாற்றப்பட்டார்கள், ஆண்கள் மதம் மாறாவிட்டால், கொல்வோம் என்று மிரட்டி, தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களையும் விட்டுவிட்டு விரட்டப் பட்டார்கள். ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இக்கொடியவன் பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றப்பார்க்கிறான். சோனியா, ராஹுல் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
யாசின் மாலிக் பாகிஸ்தான் சென்று வரும் போதெல்லாம் ஜிஹாதி தீவிரவாதம் பெருகும் என்றால், அது ஏன் தடுக்கப்படுவதில்லை?: 2005ல் யாசின் மாலிக் சென்றிருந்தபோது, எப்படி பாகிஸ்தான் ஜிஹாதிகளை ஊக்குவிக்கிறது, கூலிப்படைகள் உருவாக்கப்படுகின்றன, பாகிஸ்தான் உதவுகிறது என்று அவனே விளக்கியதை பாகிஸ்தான் ஊடகங்கள்[3] பெருமையாக வெளியிட்டன[4]. இதோ அவன் சொன்னதை பாருங்களேன்[5]: “காஷ்மீரத்தில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, செய்க் ரஷீத் அஹமது, பாகிஸ்தானிய செய்தித்துறை அமைச்சர், ஒரு படையை ஏற்படுத்தி அதில் 3,500 ஜிஹாதிகளுக்கு கொரில்லா போர் முறைகளில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார்…………முன்னின்று போராடும் ஜிஹாதிகளுக்கு பலவழிகளில் உதவியுள்ளார். அவரது மகத்தான பங்களிப்பு சிலருக்குத்தான் தெரியும்”.
இந்தியப் பிரிவினைவாதிகளின் பாகிஸ்தான் விஜயம்[6]: இப்பொழுது கூட 26/11 தீவிரவாதி, பயங்கரவாதி ஹாபித் சையதுடன் உட்கார்ந்து, தண்டிக்கப்பட்ட தீவிரவாதியை ஆதரித்துக்கொண்டு, சுமார் 70 நாட்கள் பாகிஸ்தானில் இருந்துவிட்டு வந்திருக்கும் இவன் தான் இப்படி மிரட்டுகிறான்[7]. பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி வெளிப்படயாகவே குற்றஞ்சாட்டியது[8]. முன்னர் ஏழு பேர் அடங்கிய ஹுரியத் கட்சியினர், டிசம்பர் 15 முதல் 28 வரை பாகிஸ்தானில் இருந்து பல பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துள்ளனர்[9].
மீர்வாயிஸ் உமர் பரூக் Hurriyat chairman, Mirwaiz Umar Farooq,
கனிபட் professor Gani Bhat
பிலால் கனி லோன் Bilal Gani Lone
மௌலானா அப்பாஸ் அன்ஸாரி Moulana Abbas Ansari
ஆக சையது அல்-ஹஸன் Aga Syed Al-Hasan
முஸாதிக் அடில் Musadiq Adil
முக்தார் அஹ்மது வாஸா Mukhtar Ahmad Waza
இந்த ஹுரியத்தின் பயங்கரவாத இணைப்புப் பற்றி ஏற்கெனவே பல விஷயங்கள் வெளிவந்துள்ளன[10]. வளைகுடா நாடுகளினின்று வரும் பணத்தை காஷ்மீர தீவிரவாதிகளுக்கு அனுப்ப பலவிதங்களில் வேலை செய்து வருகின்றனர். 2003ல் பாகிஸ்தானிய தூதரே மேற்குறிப்பிடப்பட்ட அப்துல் கனி பட்டிற்கு பணம் கொடுத்தபோது, நாடு கடத்தப்பட்டார், அவர்களது கூட்டாளி சபீர் அஹமது தார் என்பவன் கைது செய்யப்பட்டான்[11]. இப்படி வர்ம் பணம் ஹவாலா மற்றும் போதை மருந்து விற்பனை மூலம் இந்த ஜிஹாதிகளுக்குக் கொடுக்கப்படுகிறது[12].
இப்பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துப் பேசியது என்ன?: இப்படி இவர்கள் வெளிப்படையாக பாகிஸ்தானிற்குச் சென்று பல நாட்கள் இருந்து கொண்டு, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வருகிறார்கள் என்றால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற விவரங்களை ஏன் இந்திய அரசாங்கம் தெரியப்படுத்துவதில்லை. இந்திய மக்களை ஏன் இருட்டில் வைத்திருக்க விரும்புகிறது? ராணுவ வீரர்களைக் கொல்கிறது, தலைகளை வெட்டி, முண்டங்களை அனுப்புகிறது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், இம்முண்டங்களுக்கு என்ன விளங்கும்?
ஷபீர்ஷாவை ஊக்குவித்தது போல சோனியா காங்கிரஸ், யாசின்மாலிக்கை ஊக்குவிக்கிறதா?: காங்கிரஸைப் பொறுத்தவரைக்கும் நாட்டுநலன் என்பது கிடையாது, எப்படி ராஜிவ் காந்தி இந்தியர்களை ஏமாற்றினாரோ, அதைவிட அதிகமாக, வெளிப்படையாகவே, சோனியா இந்தியாவை தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முஸ்தபா கமல் என்கின்ற, தேசிய மாநாட்டுக் கட்சி செயலாளர், முன்பு பிரிவினைவாதி ஷபீர் ஷாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் ஆக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. அதேபோல, இப்பொழுது ஊக்குவித்தது போல, யாசின் மாலிக்கை ஊக்குவிக்கிறதா?, என்று கேட்டிருக்கிறார்[13]. சோனியா காங்கிரஸ் எதையும் செய்யலாம் என்று தெரிகிறது.
ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்கவேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை: இந்துக்களைக் கொன்றுள்ள ஜிஹாதி மற்றும் முஸ்லீம் பிரிவினை, தீவிர பயங்கரவாதிகளை மன்னித்து, அரசியலில் சேர்த்துக் கொண்டால், அந்த கொல்லப்பட்ட இந்துக்களின் குடும்பங்களின் கதி என்ன? தில்லியில் கொட்டாய்களில், குடிசைகளில், தகர டப்பா வீடுகளில் வாழ்ந்து வரும் அந்த இந்து அகதிகளின் கதி என்ன? மறுபடியும் ஆயுதம் எடுப்போம் என்று மிரட்டினால், அரசு ஏன் மௌனமாக இருக்கிறது? ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்க வேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை?
சோனியாவின் கொள்கையே இப்படித்தான் இருக்கிறது, பாவம் காங்கிரஸ்காரர்கள்[24].
கத்தி போய் குண்டு வந்தால் நமக்கென்ன, ஓட்டு வருகிறதா என்று பார்க்கும் சோனியா[25].
குண்டு வெடித்தால் என்ன, சில நாட்கள் செய்திகளைப் போட்டு சும்மா இருந்து விடுவார்கள்[26].
யாசின் மாலிக் முஸ்லீம், அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் ஒன்றும் கேட்க முடியாது[27].
நாங்கள் அப்படித்தான் இருபோம், பேசுவோம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது[28].
வேதபிரகாஷ்
11-03-2013
[1] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.
[2] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”
[3] “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience. The JKLF leader praised Rashid for his contribution to the armed struggle, but the minister refused to comment when journalists approached him. http://www.dailytimes.com.pk/default.asp?page=story_14-6-2005_pg1_4
[4] The Yasin Malik event was predictably reported in the Pakistani media and the Daily Times – one of Pakistan’s most professional and credible newspapers had the following news report on June 14 with an Islamabad dateline. ‘When the armed struggle in held Kashmir was at its zenith, Information Minister Sheikh Rashid Ahmed set up a camp where around 3,500 Jihadis were trained in guerrilla warfare, revealed Yasin Malik, the Jammu & Kashmir Liberation Front (JKLF) chairman, at an exhibition of 1.5 million signatures by Kashmiris demanding their involvement in the dialogue process. “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience.’
[7] Even as the images of separatist leader Yasin Malik sharing the dais with LeT chief and 26/11 mastermind Hafiz Saeed has caused widespread outrage, Malik denies the report claiming that Saeed just happened to be at the venue where he was holding a meet. Enraged political leaders have demanded the government to stop pampering people with terrorist links and initiate stern action against Malik.
[11] Pakistan’s Charge d’Affaires, Jalil Abbas Jilani was asked to leave India on February 8, 2003 after the Delhi Police formally filed documents charging him with passing on Rs. 370,000 to Anjum Zamruda Habib, a key member of the far-right women’s organisation, the Khawateen Markaz. The money, police investigators say, was to be passed on to Abdul Gani Bhat, the head of the principal anti-India political coalition in Kashmir, the All-Parties Hurriyat Conference (APHC). The APHC’s representative in New Delhi, Sabir Ahmad Dar, was also arrested along with Habib.
அண்மைய பின்னூட்டங்கள்