Archive for the ‘ஆண்மை’ category

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

மார்ச் 30, 2014

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இஸ்லாமில்  பெண்களின்  உரிமைகள்  பற்றி  பேசுவதும்,   நடப்பதும்: பெண்களின்  உரிமைகள்  பற்றி  முஸ்லிம்கள்  பிரமாதமாகப்  பேசுவார்கள். ஆஹா  பாருங்கள்  இஸ்லாதில்  போல உரிமைகள் மற்ற வேறு எந்த மதத்திலும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், தொடர்ந்து பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் பாலியில் வன்மங்களுக்கு பெண்கள் ஈடுபடுத்தப் படவேண்டும்,  மாறாக அவர்கள் செக்ஸ் கொடுமையை தாங்கமுடியாமல், ஒருவேளை கொதித்து எழுந்தால்,  அவர்களை அடித்து,  நொறுக்கி வழக்குகள் போட்டு,  சரீயத் சட்டம் மூலம் மரணதண்டனைக் கொடுத்து ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள் அல்லது அவ்வாறெல்லாம் இப்பொழுது நடக்கிறதா என்பது போல மௌனமாக இருக்கிறார்கள்.  இந்நிலையில் வழக்கம் போல இப்படியொரு செய்தி வந்துள்ளது.  வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரைக்கும்,  இந்த பெண்களை வேலைக்கு வரவழைப்பது என்பது,  நவீனகால அடிமைத்தனம்,  அடிமை வியாபாரம் என்றுதான் மெய்பிக்கப்படுகிறது[1].

 

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலைதுண்டிப்பு: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு,  சவுதி அரேபியஅரசு,  10 கோடி ரூபாய் கேட்டுள்ளது[2]. சவுதி அரேபியாவில்,  நுராஅல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த,  சேத்தினா ஹ்பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும்,  கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச்சென்றது தொடர்பாக, கடந்த 2007ம்ஆண்டு,  ஜூமாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தமாதம், 14ம்தேதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.  இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்டஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து  (ரத்தப்பணம்), மரணதண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதிநீதி மன்றம், “இருவாரங்களுக்குள், இந்தத்தொகையை கொடுத்தால், பெண்ணின்  மரணதண்டனை  நிறுத்தப்படும்[3];  இல்லை  எனில், மரணதண்டனை  நிறைவேற்றப்படும்’  என,  கூறியுள்ளது[4]. ஆனால்,  11 கோடிரூபாய்  இல்லாததால், ஜூமாதியின்  குடும்பத்தினர்,  நிதிதிரட்டும்  பணியில்  ஈடுபட்டுள்ளனர்[5].  அவர்களுக்கு  ஆதரவாக, பொதுமக்கள்  நிதியுதவி  அளிக்கத்  துவங்கியுள்ளனர்[6]. இந்தோனேசியாவும்  ஒரு  இஸ்லாமியநாடு  தான், இருப்பினும்  இவ்விசயத்தில்  அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முயன்று வருகிறது.  ஊடகங்களிலும் தண்டனைக்கு  எதிராக  கருத்துருவாக்கம் ஏற்படுகிறது[7].

 

satinah-binti-jumadi-ahmad

satinah-binti-jumadi-ahmad

தெற்காசிய  நாடுகளினின்று  ஏற்றுமதி  செய்யப்படும்  பெண்கள்:  வீட்டுவேலைக்கு  என்று  பல  தெற்காசிய  நாடுகளிலிருந்து ஆயிரக்ககணக்கான  பெண்கள்  வருடந்தோறும்  ஏஜென்டுகள்  மூலம்  அழைத்துச்  செல்லப்பட்டு, ஷேக்குகள்  வீடுகளில்  விடப்  படுகிறார்கள். அதற்குப் பிறகு,  பெரும்பாலான  பெண்களின்  கதி என்ன என்று தெரிவதில்லை. ஷேக்குகள்  அப்பெண்களை  தங்களது  காமத்திற்கு  உபயோகப்படுத்திக்  கொண்டு, வீட்டுவேலைகளைக்கும்  உட்படுத்திக் கசக்கிப்பிழிந்து  விடுகின்றனர். சரியாக  வேலை  செய்யாவிட்டால், மறுத்தால்  அடித்து  உதைக்கப்படுகிறார்கள். அத்தகைய சித்திரவதைகளுக்கு அளவேயில்லை.

செக்ஸ் அடிமைகள்

செக்ஸ் அடிமைகள்

கொடுமைப்  படுத்தப்பட்ட  பெண்க்ளின்  படங்கள்  சிலநேரங்களில்  வெளியில்  வருவதும்  உண்டு[8]. சவுதி  அரேபியா  இவ்விசயத்தில்  மிகவும்  குரூரமாகவே  செய்து  வருகின்றது[9].   பொதுவாக  குரூரமாக  சித்திரவதை  செய்யப்படும்  இப்பெண்கள், ஒருநிலையில்  தடுக்கப்  பார்க்கிறார்கள்,   எதிர்க்க  முயல்கிறார்கள். அந்நிலையில்  பொய்வழக்குப்  போட்டு  தண்டனைக்குட்படுத்தப்  படுகிறர்கள்.  பல  நேரங்களில்  பாதிக்கப்பட்ட  பெண்களே  பழிவாங்க  தாங்களே  சந்தர்ப்பம்  பார்த்து  எஜமானர்களைத்  தாக்குவது, ஏன்கொலை  செய்வதும்உண்டு. ஆனால், இஸ்லாமிய  சட்டத்தில்  பெண்களுக்கு  எதிராகத்தான்   சரத்துகள்  இருப்பதால்,  அவர்களால்  ஒன்றும்  செய்ய  முடியாது. ஒன்று  குரூரமாக  அடிபட்டு  சாகவேண்டும்  அல்லது  இவ்வாறு  மரணதண்டனைக்குட்பட வேண்டும்.  இதுதான்  கதி[10]. ஜனவரி 2013ல்  ஒரு  இலங்கைப்பெண்  கொல்லப்பட்டபோதும்  இத்தகைய  விவரங்கள்  வெளிவந்தன[11].  அப்பொழுது  45 பெண்கள்  தண்டனைக்காகக்  காத்துக்  கிடக்கின்றனர்  என்று  செய்தி  வெளியாகின[12].  குவைத்திலிருந்து  ஒரு  பெண்  எழுதிய  கடிதத்திலும்  அத்தகைய  விவரங்கள்  வெளியாகின[13].

 

Saudi Arabian women slavery

Saudi Arabian women slavery

ஷரீயத்  என்கின்ற  இஸ்லாம்  சட்டப்படி கடுமையான, குரூரமான  தண்டனைகள்  கொடுக்கப்  படல்: சவுதி  அரேபியாவில்  கொலைகுற்றத்துக்காக  2  பேருக்கு  தலைதுண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது [14]. இந்தாண்டில்  இதுவரை 7 பேரின்  தலை  துண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  இஸ்லாமிய  நாடான  சவுதி  அரேபியாவில்  பலாத்காரம், கொலை, மதத்தை  அவமதித்தல்,  ஆயுதங்களுடன்  கொள்ளையடித்தல்,  போதைமருந்து  கடத்துதல்  ஆகிய  குற்றங்களுக்கு  மரணதண்டனை  அளிக்கப்படுகிறது. தலையை  துண்டித்து  மரணதண்டனையை  நிறைவேற்றுகின்றனர். தெயிப்  நகரில்  பழங்குடியினத்தை  சேர்ந்த  அப்துல்லா  என்பவர்,  அதே  இனத்தை  சேர்ந்த  ஒருவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டது.  அதுபோல  தென்மேற்கு  அசிர்  பகுதியில்  நாசர் அல்  கதானி  என்பவர்  அயத்  இல்கதானி  என்பவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டார்.  இருவர்  மீதும்  குற்றம்  நிரூபிக்கப்பட்டதை  தொடர்ந்து  அவர்களுக்கு  மரணதண்டனை  விதிக்கப்பட்டது.   பிறகு இருவரின்  தலையைத் துண்டித்து  தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக  உள்துறை  அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  இந்தாண்டு  தொடங்கி 35  நாட்களே  ஆகியுள்ள  நிலையில்,   இதுவரை 7 பேருக்கு  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  கடந்த  ஆண்டு  தலை  துண்டிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை  78.  இதில்  வெளிநாட்டினரும்  அடக்கம்.   2012ல்   79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும்  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது  குறிப்பிடத்தக்கது[15]. சவூதியில் 5  வயது  மகளை  கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்  கொன்ற  இஸ்லாமிய  போதகருக்கு 8 ஆண்டு  சிறை, 800 சவுக்கடி –  சாட்சி  சொன்ன  மனைவிக்கும்  தண்டனை!  என்ற  செய்திகள்  எல்லாம்  சகஜமாக  வந்துள்ளன[16].

 

Saudi treatment of migrant workers

Saudi treatment of migrant workers

முலைப்பால்  ஊட்டுங்கள்,   ஆனால்  காரை  ஓட்ட  பெண்களுக்கு  அனுமதியில்லை!: சவுதி  அரேபியாவில்  பெண்களுக்கு  பற்பல  கட்டுப்பாடுகள்  உள்ளன.   எல்லோரும்  உடலை  மறைப்புத்துணியால்  மூடிக்கொண்டு  இருக்க  வேண்டும். வெளியேபோனால், ஒரு  ஆணுடன்தான்  போகவேண்டும். வேலைக்குப்  போகக்  கூடாது…………….இப்படி  ஏராளமான  விதிகள். இந்நிலையில்  பெண்கள்  காரோட்ட  வேண்டி  கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம்  மறுப்புத்  தெரிவித்துள்ளது. செய்க்  அப்துல்  மோஷின்  பின்நாசர்  அலி ஒபைகன்  என்ற  இஸ்லாமிய  வல்லுனர்  சமீபத்தில்  ஒரு  பத்வா  கொடுத்துள்ளார்.  இதன்படி,  சௌதி  பெண்கள்  வெளிநாட்டு  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  கொடுக்கலாம்,   அவ்வாறு  செய்வதால்,   இஸ்லாமிய  முறைப்படி,  அவர்கள்  மகன்கள்  ஆவார், தமது  மகள்களுக்கு  சகோதரர்கள்  ஆவர்.   இதன்படி,   புதியவர்கள்  கூட  இந்த  பத்வா  மூலம்,   குடும்ப  பெண்களுடன்  கலந்து  இருக்கலாம்.   இதனால்,   முலைப்பால்  உண்ட  அந்த  அந்நிய  ஆண்மகன்  பெண்களிடம்  செக்ஸ் ரீதியிலாக  தொந்தரவு  கொடுக்கமாட்டான்.   இஸ்லாம்  இதை  அனுமதிக்கிறது.

 

saudi slavery cartoon

saudi slavery cartoon

“ஒன்று  எங்களை  காரோட்ட  அனுமதியுங்கள்  அல்லது  எங்களது  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”: சவுதியில்  என்ன  பிரச்சினை  என்னவென்றால்,  கடைக்குச்  சென்றுவிட்டு  வரும்  பெண்கள்  திரும்ப  வீட்டுக்கு  போக, காரோட்டி  வருவதற்காகக்  காத்துக்  கிடக்க   வேண்டியுள்ளது.  அதனால், தாங்களே  காரோட்ட  வேண்டும்  என்று  விரும்புகிறார்கள்.  இதனால்  தேவையில்லாமல் நேரத்தை  வீணடிக்க  வேண்டாம்  என்கிறார்கள்.  இதையே,   சவுதி  பெண்கள்  தமக்கு  சாதகமாக  எடுத்துக்கொண்டு,  பிரச்சாரம்  செய்ய  ஆரம்பித்துள்ளதாகத்  தெரிகிறது.சவுதி  குடும்பத்திற்கு  ஒரு  காரோட்டித்  தேவைப்படுகிறது.  அதற்கு  பெண்களே  காரோட்ட  அனுமதிக்கப்  படவேண்டும்  என்று  அந்நாட்டுப்  பெண்கள்  போராடி  வருகின்றனர்.  இந்நிலையில்,   அப்பெண்கள்  கூறுவதாவது,    “ஒன்று  எங்களை  காரோட்ட   அனுமதியுங்கள்  அல்லதுஎங்களதுகாரோட்டிகளுக்கு   முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”   என்று  அதிரடியாகக்  கேட்டுள்ளார்கள்[17]!  வளைகுடாநாடுகளில்  பெண்கள்  வேலைக்குப்  போவதும்  அதிகரித்துள்ளது.  சுமார்  மூன்று  வருடங்களுக்குப்  பிறகு,   இப்பொழுது  அல்  வலீது  பின்  தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற  பில்லியனர்  இளவரசர்  பெண்கள்  காரோட்டுவது  பற்றி  தனது  இணக்கமாகக்  கருத்தை  வெளியிட்டுள்ளாராம்.

 

© வேதபிரகாஷ்

30-03-2014

 

[1] http://www.algeria.com/forums/world-dans-le-monde/23714-saudi-slave-treatment-migrant-workers-condemned.html

[2]தினமலர், இருவாரங்களில்ரூ.10 கோடிதராவிட்டால்பணிப்பெண்ணின்தலைதுண்டிப்பு, சென்னை, 30-03-2014.

[3] http://www.ibtimes.co.uk/savesatinah-abused-indonesian-maid-be-beheaded-saudi-arabia-unless-family-pays-1m-1441598

[4] http://www.thejakartaglobe.com/news/indonesia-to-pay-1-87m-to-save-maid-from-death-row-in-saudi-arabia-bnp2tki/

[5] http://www.thejakartaglobe.com/news/indonesia-raising-blood-money-domestic-worker-death-row-saudi-arabia/

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=944177

[7] http://www.thejakartapost.com/news/2014/03/27/editorial-the-tale-satinah.html

[8]In 2010, shocking photographs emerged of maid Sumiati Binti Salan Mustapa, 23, who suffered severe injuries from being stabbed, burned and beaten. Her employer was sentenced to just three years in jail but was later acquitted altogether, in a case that outraged human rights groups.

Speaking at the time, Wahyu Susilo of the Indonesian advocacy group, Migrant Care, said: ‘Again and again we hear about slavery-like conditions, torture, sexual abuse and even death. ‘But our government has chosen to ignore it. Why? Because migrant workers generate £4.7billion in foreign exchange every

[9]Saudi Arabia is notorious for its treatment of domestic staff, the majority of who migrate from poverty-stricken countries.

[10] http://www.dailymail.co.uk/news/article-2261655/Scores-maids-facing-death-penalty-Saudi-Arabia-crimes-child-murder-killing-employers.html

[11] http://www.theguardian.com/world/2013/jan/13/saudi-arabia-treatment-foreign-workers

[12]More than 45 foreign maids are facing execution on death row in Saudi Arabia, the Observer has learned, amid growing international outrage at the treatment of migrant workers.

The startling figure emerged after Saudi Arabia beheaded a 24-year-old Sri Lankan domestic worker, Rizana Nafeek, in the face of appeals for clemency from around the world.

[13]https://islamindia.wordpress.com/2010/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

[14] http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346

[15]See more at: http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346#sthash.I7cDgE99.dpuf

[16] https://islamindia.wordpress.com/2013/10/10/islamic-clergy-raped-her-daughter-tortured-and-killed-also-but-only-jailed/

[17] https://islamindia.wordpress.com/2010/06/24/saudi-women-threaten-to-breastfeed-their-drivers-if-not-allowed-to-drive/

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.