Archive for the ‘அவூலியா’ category

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

திசெம்பர் 7, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

Sikandar Dragah - Tirupparangundram.entrance

லண்டனில் வழக்கு: தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sikandar mosque - Tirupparangundram

ராஜகோபால் உயிர்த் தியாகம்: ஹிந்து முன்னணி தலைவராக இருந்த மதுரை ராஜகோபால்,  திருப்பரங்குன்ற மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முஸ்லிம்கள் எதிர்த்தபோது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் மதுரையில் ராஜகோபால் அவரது வீட்டு வாசலிலேயே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்.

 Sikander Dargah, 2014 HC stayed, The Hindu 04-12-2014

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.

Sikandar mosque claim

ஹிந்து முன்னணி தொடர் போராட்டம்: ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி போராடி வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் அரசு பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்று முத்துக்குமார் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

Sikandar Dragah - Tirupparangundram.sign board

ஆகஸ்ட் 2017ல் நீதிமன்ற உத்தரவு[1]: அகில பாரத இந்து மகா சபா துணைத் தலைவர் கணேசன். இவர்,’கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றம் மலை குதிரை சுனை திட்டு பகுதியில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நிறுத்தப் பட்டது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்[2].  இது, சுல்தான் சிக்கந்தர் அவூலியா தர்காவிற்கு [Sulthan Sikkandhar Avulia Dargha] அருகில் உள்ளது. போலீஸார் மற்றும் கோவில் நிர்வாகம், அவ்வாறு அனுமதி அளித்தால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மற்றும் கலவரம் ஏற்படும் என்று தெரிவித்து அனுமதி மறுத்தனர். எந்த தனி இயக்கமும், அத்தகைய உரிமையைக் கோர முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்[3]. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், மதுரையில் மதவாதப் பிரச்சினையுள்ளதால், அங்கு விளக்கேற்ற அனுமதி கொடுக்க முடியாது, மாறாக, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் விளக்கேற்றலாம் என்றும் கூறினார். தனிநீதிபதநெம். வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார்[4]. இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவு[5]: “சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்,”என்றனர். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, எனும்போது, அறநிலையத் துறை எவ்வாறு அந்த சமாதியை / தர்காவை அனுமதித்தது என்று தெரியவில்லை.

Tirupparangundram - 2012 position - TOI

இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது.  சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது.  இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

06-12-2017

Sikandar Dragah - Tirupparangundram.1805

[1] தினமலர், கார்த்திகை தீபம்: உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.01, 2017. 00:56.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1824074

[3]  The Madras High Court Bench in Madurai on Thursday dismissed a writ petition filed by an office-bearer of Akhil Bharat Hindu Maha Sabha (ABHMSB) seeking permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, a stone tower close to Sulthan Sikkandhar Avulia Dargha atop Tirupparankundram hills, near here, on Friday. Justice M. Venugopal rejected the plea on the ground that the police as well as the temple administration feared break out of communal clashes in the district if such permission was granted. “No religion prescribes that prayers should be performed by disturbing the peace of others and in fact, others’ rights should also be honoured and respected,” the judge said. According to the petitioner, it had been a practice since time immemorial to light the Mahadeepam at Kudhirai Sunai Thittu during the Tamil month of Karthigai every year. However, due to certain disputes, the location was shifted to Uchipillaiyar Temple for the last few years. This year, his organisation sought police protection to light it in the traditional place. But the request was rejected and hence the writ petition. On the other hand, Special Government Pleader B. Pugalendhi contended that no private organisation could claim a right to light the Mahadeepam since it vests exclusively with the temple management which owns the hillock and falls under the control of the Hindu Religious and Charitable Endowments Department.

 

The Hindu, HC says no to lighting Mahadeepam close to Dargah, Mohamed Imranullah S., MADURAI:, DECEMBER 04, 2014 21:19 IST, UPDATED: APRIL 07, 2016 02:52 IST.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[4] He said that the High Court too had recognised the right way back in 1996 itself. Further stating that Madurai district was a communally sensitive place, he said that the Revenue Divisional Officer had called for a peace committee meeting on November 25 to decide the modalities for the Karthigai Deepam festival to be conducted this year. It was resolved in the meeting that the Mahadeepam would be lighted at Uchipillayar Temple this year also. However, with respect to the festival to be celebrated next year, it was resolved that a committee would be formed at least a month before the festival to convey to the State Government the desire of Bharatiya Janata Party, Hindu Munnani and other organisations to light the Mahadeepam on Kudhirai Sunai Thittu and to act according to the Government’s decision.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[5] http://www.dinamalar.com/district_detail.asp?id=1824074&dtnew=8/1/2017&Print=1

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)

திசெம்பர் 6, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், அதனால் ஏற்பட்ட முடிவுகள் (2)

Malikafur army attack and killing people-imaginary

தில்லியிலிருந்து துலுக்கர் படை எவ்வாறு ஆரும் அறியாத படி மதுரைக்கு வந்து சேர்ந்தது?: தில்லியிலிருந்து, மதுரைக்கு வர ஆறுமாதங்கள் ஆகும் என்று எழுதி வைத்துள்ளனர். ஆறுமாத பிரயாணத்திற்கு, தங்க இடம், உடை, உணவு எல்லாமே தேவையாக இருந்திருக்கும். அதாவது, இடையில், மற்றவர் துணை, உதவி இல்லாமல் சென்றிருக்க முடியாது. அப்படியென்றால், துலுக்கர் எப்படி குதிரைகளில் அவ்வாறு கூட்டமாக வந்திருப்பர், வரும் போது, அவர்களை யாரும் பார்க்காமல் / கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர் என்று யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. துலுக்கர் அவ்வாறு கூட்டமாக செல்கின்றனர் என்றால், நிச்சயம் பார்த்தவர்கள் விசயம் அறிந்து சொல்லியிருப்பர். ஆகவே, அவர்கள், ஆயுதங்களை மறைத்துக் கொண்டு, ஏதோ தீர்த்த யாத்திரை செல்வது போல சென்றிருக்க வேண்டும். இல்லை, மற்றவர் போல ஆடை அணிந்து, வியாபார நிமித்தம், பொருட்களை வாங்குவது-விற்பது போன்ற ரீதியில் சென்றிருக்க வேண்டும். ஆக வேடமிட்டு தான் துலுக்கர் சென்றுள்ளனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகள் போல, பீதியைக் கிளமப்பிக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.

Madurai sultanate-Amir khusru

முகமதியதுலுக்க படையெடுப்பு, பாண்டியர் பற்றிய சரித்திராசிரியர்களின் விளக்கங்கள்: வஸாப் [Wassaf], அமீர் குர்ஷூ [Amir Khusru] மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி [Zia-ud-din Barni] முதலியோரின் வர்ணனைகளை வைத்துக் கொண்டு, தெளிவாக விசயங்களை தீர்மானிக்க முடியவில்லை என்று நீலகண்ட சாஸ்திரி கருத்து தெரிவித்தார்[1]. அமீர் குர்ஷூ மற்றும் ஜியா-உத்-தீன் பர்ணி சுந்தர-வீர பாண்டியர் சண்டைபற்றி குறிப்பிடவில்லை என்கிறார். இருப்பினும், அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு வீழ்ந்தனர் என்று ஒப்புக் கொள்கிறார். எல்லியட் மற்றும் டாவ்ஸன், வஸாப் வர்ணனை, அமீர் குர்ஷூ மூலம் உறுதி படுத்தினர்[2]. பொதுவாக, ராஜாக்கள், ராஜ்ஜியங்கள், நகரங்கள் முதலியவற்றின் பெயர்களை, இந்திய மொழிப் பெயர்களுடன் ஒப்பிட்டு, அவற்றை கல்வெட்டு விவரங்களுடன் சரிபார்த்து, அடையாளம் காண்பதில் தான், அத்தகைய கஷ்டம் ஏற்படுகின்றன. ஆனால், துலுக்கர் கோவில்களை இடித்தது, கொள்ளையடித்தது, சூரையாடியது, தர்கா-மசூதிகளாக மாற்றியது முதலியவை கண்கூடாகவே தெரிகின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

Madurai sultanate

1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள்  மதுரைப்  பகுதியில் சுல்தான்களின் ஆட்சி: 1293 முதல்1422 வரை பாண்டியர்களே ஆளவில்லை என்பது போல இடைவெளி காட்டுவதும் வினோதமாக உள்ளது. 1329-1330ல் “சுல்தானிய ஆட்சி” தொடங்குவதாக, நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகின்றார்[3]. 1323-ல் பராக்கிரம தேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினான். முகமது பின் துக்ளக் ஆட்சியில் மாபார் என்றழைக்கப் பட்ட தமிழகம் தில்லி சுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா என்பவன் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டான். பின்பு இவன் தில்லி சுல்தானாகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக மதுரையை சுதந்திர பிரதேசமாக அறிவித்தான். இவனின் வழிவந்தவர்களே மதுரை சுல்தான்கள் என்று கூறிக்கொள்கின்றனர். சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா 1335ல் தனித்து ஆட்சி புரிய துவங்கினான்.  1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. ஏழு சுல்தான்கள் ஆட்சி செய்தனர் என்கின்றனர்.  ஆனால், இவற்றை சரி பார்க்க, தமிழக ஆவணங்கள் என்ன என்று தெரியவில்லை. கம்பண்ணாவின் கல்வெட்டுகளில், அவனது தளபதி கோபண்ணா 1377-78ல் துருஷ்கர்களை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளதால், அத்துடன், துலுக்கரது ஆட்சி முடிவுற்றது என்றாகிறது[4].

Dargah interior- tomb-withh bell-door

தர்காமசூதி வைத்து, இடத்தை ஆக்கிரமித்து, குடியிருப்பை உண்டாக்கி பெரிதாக்குவது துலுக்கரின் திட்டம்: துலுக்கர் தமது சரித்திரத்தை இவ்வாறு தொடர்கின்றனர், “மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப் பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையத்தில் பள்ளிவாசல்தர்கா உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா, 14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவன் 14ம் நூற்றாண்டில்  மதுரைப்பகுதியை ஆண்ட (1338 CEல்) சுல்தான் அலாவுதீன் உதௌஜி என்று சொல்லப்படுகிறதுஇவனே தற்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டான் என்றும் சொல்கின்றனர். இவனது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குசும் இதில் அடக்கமாயுள்ளான்,” என்கின்றனர். இப்படி சமாதிகளை உருவாக்கினர் என்று சொல்வதைத் தவிர, இவர்களால் மதுரைக்கு, மதுரை மக்களுக்கு என்ன நல்லது செய்தார்கள், இவர்களது ஆட்சியால் என்ன பலன் என்பதனை யாரும் சொல்வதாக இல்லை. இந்துக்களைக் கொன்று, கோவில்களை கொள்ளையெடித்து, இடித்தொழித்தவற்றை இவர்கள் சொல்லலாம், ஆனால், அதனால், மதுரைக்கோ, தமிழகத்திற்கோ, பாரதத்திற்கு எந்த பெருமையும் இல்லை.

Sikandar Dragah - Tirupparangundram.interior with pillars, lamps

துலுக்கரின் படையெடுப்பினால் உண்டான தீய விளைவுகள்: மாலிகாபூர் தங்கம், வெள்ளி, வைரம் முதலியவற்றை யனைகளின் மீது வைத்து கொண்டு சென்றான் போன்ற செய்திகளைத் தான் நாம் படிக்கிறோம். ஆனால், அவ்வாறு யானைகள் மீது மெதுவாக தில்லி வரை சென்றதைப் பார்த்த, அக்காலத்தைய சைவர்களுக்கு, எந்த ரோஷமும் வரவில்லையா? பாண்டிய மன்னர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தங்கள் பிள்ளை-பெண்டுகள் விட்டு ஓடியபோது கூட, இந்துக்களுக்கு எந்த கோபமும் வரவில்லையா? இங்கிருந்து தில்லிக்கு செல்ல சுமார் ஆறுமாத காலம் ஆகும் என்று அவர்களே எழுதி வைத்துள்ளனர். அப்படியென்றால், ஆறுமாத காலத்தில் சென்றபோது, பாரதத்தில், எங்குமே எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்று விட்டனவா? இதைப் பற்றி எந்த ஆசிரியனும் யோசிப்பதில்லை போலும். துலுக்கர், அக்காலத்திலும், தீவிரவாதிகளாக இருந்திருக்கின்றனர். எதிர்ப்பவர்களை கண்ட-துண்டமாக கத்திகளால் வெட்டிக் கொன்றிருக்கின்றனர். அவற்றை நாற்சந்திகளில் எல்லோரும் பார்க்கும் படி, போட்டு, பீதியை, திகிலை, பேரச்சத்தை உண்டாக்கி வைத்தனர். எதிர்த்தால் “காபிர்களின்” கதி இதுதான் என்று மிரட்டிவைத்துள்ளனர். துலுக்கரை படைவீரன், துபாஷி, தரகன், போன்ற வேலைகளில் வைத்துக் கொண்டதால், விவரங்களை அவர்கள் மற்ற துலுக்கர்களுக்கு தாராளமாக தெரிவித்துள்ளனர். அதனால் தான், மாலிக்காபூர் போன்றவர்கள், தில்லியிலிருந்து, சரியான பாதையில் ராமேஸ்வரம் வரை வந்து, கொள்ளையெடித்து, திரும்பச் சென்றிருக்கிறான். இது தவிர காடு, மலைப்பகுதிகள் வழியாக ரகசியமாகச் செல்லவும் பாதைகள் இருந்திருக்கின்றன. அவற்றுன் மூலம் சென்றதால், மறைக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் இடித்தது, கொள்ளையெடித்தது, தர்கா-மசூதிகளாக மாற்றப் பட்டது உண்மையாகிறது.

Veera Vallala, Tiruvannamalai

வீரவல்லாளன் கொலையுண்டது, உடல் தொங்கவிடப்பட்டது[5]: 1340 CE-இல் மதுரையை ஆட்சி செய்து வந்த ஜலாலுதீன் அசன்ஷா கொல்லப்பட்டான். அலாவுதீன் உதாஜிக்குப் பின்னர் அவனது மருமகன் குத்புதீன் மதுரையில் சுல்தான் பதவியேற்றான். இவனது ஆட்சி வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே நடந்தது. இச்சுல்தானும் இந்துக்களின் வீர உணர்வுக்குப் பலியானான். அதன் பின்னர் கியாஸ் உதீன் தம்கானி [1342-1344 CE] மதுரையில் சுல்தான் பொறுப்பில் அமர்ந்தான். இச்சமயத்தில் போசள அரசன் மூன்றாம் வீரவல்லாளன் தமிழகப் படையெடுப்பைத் தொடங்கினான். கண்ணனூர்க் கொப்பத்தைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னேறி வந்தான். இசுலாமியருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்த போசளப் படையினர்க்கும் இடையே கடுமையான போர் மூண்டது. இதில் போசள அரசன் வீரவல்லாளன் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டான். பின்பு வீரவல்லாளனைத் தம்கானி கொன்று அவனுடைய தோலை உரித்து, உடலுக்குள் வைக்கோலை அடைத்து, அதை மதுரையின் மதில் சுவரின் மேல் தொங்கவிட்டான். வீரவல்லாளனின் உடலை 1342 CE-இல் மதுரையில் பார்த்ததாக இபன்பதூதா என்பவன் தனது குறிப்பில் கூறியுள்ளான்.

© வேதபிரகாஷ்

06-12-2017

Madurai sultanate-wraper

[1] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.204

[2] Elliot and Dowson, History of India as told by Indian Historians, Vol.III, p.88.

[3] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p.259.

[4]  K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37

[5] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm

முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்!

ஒக்ரோபர் 12, 2013

முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்!

muslim-sacrifices-child-2010 (1)

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!: முந்தைய இடுகைகளில் இதைப் பற்றி அதிகமாகவே இப்பிரச்சினை அலசப்பட்டுள்ளது. அப்பொழுது (ஜூலை 2010) விசயங்களை கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவது விவரங்களோடு எடுத்துக் காட்டப்பட்டது. இதில் காணப்படும் முறை,

  • குழந்தைகள் காணாமல் போவது,
  • பெற்றோர் புகார் கொடுப்பது,
  • ஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல்,
  • உடற்பாகங்கள் காணப்படுவது,
  • சில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது,
  • அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..

பிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[1].

uslim-sacrifice-2010

நரபலி முஸ்லீம்களுக்கோ,  தமிழகத்திற்கோ புதியதல்ல[2]: இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேண்டியிருந்தது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அலப்பட்டது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். அதை பற்றியும் அவ்விடுகையில் விளக்கப்பட்டது[3].

muslim-sacrifice-torso-found-nie

இரண்டாண்டுகள் கழித்து அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர் மேல்முறையீடு செய்தல்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தனர் அப்துல்கபூர்,30. இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில், சமையல்காரராக இருந்தார். அங்கிருந்த ரமீலா பீவிக்கும், 32, அப்துல்கபூருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். “தலைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், முன்னேற்றம் அடையலாம்’ என, சிலர் கூறியதை நம்பி, தலைப்பிரசவ குழந்தையைத் தேடி, மதுரை வந்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கவுகர்பாட்ஷா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி சிரின் பாத்திமா, தன் ஒரு வயது குழந்தை காதர்யூசுப் மற்றும் தாய் சுல்தான் பீவி ஆகியோருடன், நேர்த்திக்கடன் செலுத்த, 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் தர்காவில் தங்கினர். மறுநாள் இரவு, மூன்று பேரும் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். காதர்யூசுப்பை கடத்திய அப்துல்கபூரும், ரமீலாபீவியும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு ஒரு விடுதி குளியலறையில், காதர்யூசுப்பின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை வாளியில் பிடித்தனர். தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி, பூஜை செய்து, குழந்தையின் உடலை புதைத்தனர். தலையை திருச்செந்தூர் அருகே கடற்கரையில் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, 2012 ஆக.,3 ல் அப்துல்கபூர், ரமீலாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

Abdul Gaffor-Ramila Bivi-child-sacrifice

குழந்தையை கடத்தி நரபலி கொடுத்த தம்பதி : ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு[4]: மதுரையில், ஒரு வயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில், கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில், கணவன், மனைவி மேல்முறையீடு செய்தனர்[5]. இதை ரத்து செய்யக்கோரி, இருவரும் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டனர். நேற்று, இவ்வழக்கு பட்டியலில் இடம் பெற்றது. விசாரிக்கப்படவில்லை. முன்பு கூட “காளி உத்தரவின் படி பலி கொடுத்தேன்”, என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தான்[6]. கொலைக்கு தண்டனை கொடுப்பதானால் காளிக்குக் கொடுங்கள்[7] என்று சொன்னதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.

Abdul Gaffor-Ramila Bivi-child-sacrifice2

கத்தி போய் வால் வந்தது டும்,  டும்,  டும்:  அப்பொழுது செக்யூலரிஸ ரீதியில் ஊடகங்கள் செயல்பட்டன. முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட பிரச்சினை என்பதால், வெறும் கொலை போல, டிவிக்களிலும் காட்டப்பட்டது. “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாற்றி வர்ணிக்கப்பட்டன. கீழுள்ளவை முந்தைய பதிவில் உள்ளபடி கொடுக்கப்படுகின்றன:

  • மந்திரவாதி, தாந்திரிக்[8], ஃபகிர்[9] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[10].
  • அசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;
  • மனைவி, காதலியாகி, கள்ளக்காதலியாகிவிட்டாள்;
  • திடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்!
  • பலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………
  • காளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.
  • 15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
  • தர்கா லாட்ஜாகிறது, வீடாகிறது;
  • குரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்!

killed-the-child-and-roaste

 முஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது,  பரப்புவது முதலியன[11]: “ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்”, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்”, என்று அப்பொழுது முடித்திருந்தேன். இப்பொழுது, “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், இவ்வாறு தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனராம்.

Abdul Gaffor-Ramila Bivi-child-sacrifice3செக்யூலரிஸ அமைதி,  ஊமைத் தனம் மற்றும் பாரபட்சம்: திராவிட சித்தாந்திகள், கம்யூனிஸ வல்லுனர்கள், பெண்ணிய வீராங்கனைகள், “கற்பில்” வேதாந்தியான குஷ்பு போன்ற பெண்மணிகள், யாருமே, இவ்வழக்கைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. “தேவதாசி” பற்றி பேசினால், வீராங்கனைகள் கிளம்பி விடுகிறார்கள், ஆனால், உண்மையாகவே, ஒரு பெண் நரபலியில் சம்பந்தப் பட்டிக்கும் போது, அந்த வீராங்கனைகள் “ஆள்-அட்ரஸ்” தெரியாமல் இருக்கிறார்கள்! நாத்திக-சித்தாந்திகள், மூட-நம்பிக்கைகளை சாடுகின்ற தமிழனத் தலைவர்கள், இனமானப் போராளிகள் எல்லோருமே கப்-சிப் தான்! சட்ட வல்லுனர்கள், நீதிமான்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முதலியோரும் ஊமைகளிகி விடுகின்றனர்.

© வேதபிரகாஷ்

12-10-2013


[3] வேதபிரகாஷ், முஸ்லீம்மாந்திரீகநரபலிகள்திராவிடநாட்டில்தொடரும்மர்மம்!, https://islamindia.wordpress.com/2010/07/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/

[4] தினமலர், நரபலிகொடுத்ததம்பதி : ஆயுள்தண்டனையைஎதிர்த்துமேல்முறையீடு, சென்னை பதிப்பு, பக்கம்.4, பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2013,00:30 IST

[8] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது!

[9] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது

[10]  ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.