Archive for the ‘அல்-முஹாஜிரோன்’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

ஜூலை 10, 2016

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

J-K - New type of young terrorists- Tral hotbed of terror

ரம்ஜான் முடியும் வாரத்தில் நடந்த தீவிரவாத கொலைகள் 07-07-2016 வரை: முதல் வாரத்தில் ரம்ஜான் முடியும் தருவாயில் உலகத்தில் பல இடங்களில் இஸ்லாம் பெயரில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், துப்பாக்கி சூடுகள், குரூர கத்திக் குத்துகள்-வெட்டுகள் என்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். தினபதற்கு விலங்குகள் என்றால், அவர்களது ஜிஹாதி-பசிக்கு மனிதர்களே தேவைப்பட்டனர் போலும். 01-07-2016 மற்றும் 07-07-2016 தேதிகளில், இந்தியாவுக்குள் இருக்கும் அண்டை நாடான பங்களாதேசத்தில் 9/11 மற்றும் போன்ற தாக்குதலில் மக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதே வாரத்தில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதே போன்ற தீவிரவாத செயல்கள் தினம்-தினம் நடந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு, இந்தியாவும் தாக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அந்நிலையில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சுட்டுக் கொன்றனர்.

Burhan Wani - praised by Urudu PAK media

08-07-2016 வெள்ளிக்கிழமைபாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு சுட்டதில் கொலை: இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி கே.ராஜேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]: “பர்ஹன் முசாஃபர் வானி (21) என்ற பயங்கரவாதி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்து இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர வைக்க முயற்சி செய்து வந்தார். இவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைத் தேடினர். அப்போது, ஓர் இடத்தில் பதுங்கி இருந்த பர்ஹன் முசாஃபரும், மேலும் 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்”, என்று ராஜேந்திரா தெரிவித்தார். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான பர்ஹன் முசாஃபர் வானி தனது 15-ஆவது வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது[2].

J-K - New type of young terrorists- Pandits, Bhats turning into jihadists

ஹிஜ்புல் முஜாஹித்தீன் அட்டகாசமும், புர்ஹான் வானியின் இணைதள ஜிஹாதும், உண்மையன ஜிஹாதும்: கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தர வேண்டுமென்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது, என்றாலும், மத அடிப்படையில் நடந்து வரும் அத்தகைய தீவிரவாதம், காஷ்மீரத்திலிருந்து எல்லா இந்துக்களையும் கொன்று விட்டது, மிச்சமிருந்தவர்களை விரட்டி விட்டது என்று இங்கு குறிப்பிடவில்லை. இந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார் புர்கான் என்ற 21 வயது இளைஞர். இவரை 08-07-2016 அன்று இரவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும். பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில்  படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று “விகடன்” விளக்கவில்லை. பெற்றோர்கள் அத்தகைய மாற்றத்தைக் கண்காணித்து சரிபடுத்தியிருக்க வேண்டும். பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அப்போது அவனுக்கு வயது 15 தான். அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீடிருக்க வேண்டும். செய்யவில்லை என்றே தெரிகிறது.

 J-K - New type of young terrorists

தேசத்துரோகியை புகழ்ந்து தள்ளிய தமிழ் ஊடகங்கள்: இணையதளங்கள், சமூக வலைத் தளங்களை கையாளுவதில் புர்கான் கெட்டிக்காரனாக இருந்ததால், இதன் வாயிலாக தீவிரவாத இயக்கத்துக்கு வேண்டிய நபர்களை தேர்ந்தெடுப்பதில் திறமையாக செயல்பட்டான், என்று திடீரென்று “விகடன்” கூறுகிறது. அவ்வாறான திறமையை அவன் எப்படி, எங்கு, எவ்விதம் பெற்றான் என்று விளக்கவில்லை. தீவிரவாதச் செயல்களை வீடியோவாக பதிவு செய்து அதனை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவான்[3]. அதற்கு லைக் போடுபவர்கள், காமாண்ட் போடுபவர்களை குறி வைத்து நட்பாக்கிக் கொள்வான்[4]. பின்னர் அந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவான். அப்படி 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்த இயக்கத்தில் புர்கான் சேர்த்துள்ளான்[5]. தான் சேர்த்து விட்டவர்கள் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளான். டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி பறக்கவிட வேண்டுமென்பதுதான் புர்கானின் கோஷமாக இருந்தது. ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருந்த இவனது தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் அறிவித்திருந்தது, என்றேல்லாம் புகழ்ந்து தள்ளின ஊடகங்கள். தேசத்துரோகத்தில் ஈடுபட்டான் என்று ஒரு வரி கூட இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் ஒரு கிரிக்கெட் வீரனும் கூட.  கடந்த 2015ம் ஆண்டு புர்கானின் சகோதரன் காலீத்தையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.  காலீத், புர்கானை சந்திக்க சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்று அரைகுறையாக செய்தியை வெளிட்டுள்ளது. தாக்கினால், பதிலுக்கு தாக்கத்தான் செய்வர், அதனை குறிப்பிடாமல், இவ்வாறு செய்திகளை வெளியிடுவது விசித்திரம் தான்!

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016. A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group's ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016.
A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group’s ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

09-07-2016 சனிக்கிழமை பிண ஊர்வலம்: ஸ்ரீநரில் 114 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்[6]. இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக வலைத்தளங்களின் மூலம் வீண் வதந்திகள் பரவுவதை தவிர்க்கும் வகையில்  மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. உள்மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது[7].  நான்கு ஹிஜ்புல் முஜாஹித்தீன் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ராணுவம், போலீஸார் முதலியோர் இருக்கு போதே, இவ்வாறு ஹிஜ்புல் முஜாஹித்தீன் எப்படி துப்பாக்கிகளோடு வந்தனர் என்று தெரியவில்லை. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[8]. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்[9]. சட்டத்தை மீறியது பற்றி எந்த மனித உரிமை மற்றும் செக்யூலரிஸ பழங்கள் தங்களது கருத்துகளை வெளியிடவில்லை. இந்த கூட்டத்தினரிடையே பேசுவதற்காக சில பிரிவினைவாதிகள் வர முயற்சித்தனர். அதாவது சாவிலும் ஆதாரம் தேடத்தான் அந்த ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்பதை, அந்த முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வினோதம் தான். ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி பிரிவினைவாதிகளால் அங்கு செல்ல முடியவில்லை.

© வேதபிரகாஷ்

10-07-2016


[1] தினமணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்ஹன் வானி சுட்டுக் கொலை: காவல்துறை டிஜிபி, By dn-First Published : 09 July 2016 11:31 AM IST

[2]http://www.dinamani.com/latest_news/2016/07/09/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/article3521154.ece

[3] விகடன், ஃபேஸ்புக்கில் ஆள் பிடிப்பார்:ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான்!, Posted Date : 16:59 (09/07/2016).

[4] Burhan Wani managed in five years, to create a band of 60-70 young locally recruited terrorists. Many were well educated and technically proficient to exploit social media for their cause. Their photographs in combat fatigues with weapons went viral on Facebook and Whatsapp.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[5] http://www.vikatan.com/news/india/65996-dead-in-protests-after-terrorist-burhan-death.art

[6] தினத்தந்தி, பர்ஹான் வானி இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல், பதிவு செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST.

[7] Tral is notorious for its alienation and use of violence over the last 26 years. The Wagad ridge to its West and the Dachigam Forest to the North afford excellent hideouts. Despite presence of a full RR unit here along with CRPF the area has only been passingly under control. Burhan belonged to Tral and last year in April his brother was killed in an encounter when he was mistakenly taken to be Burhan even as he had gone to the forest to meet his renegade brother.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[8] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/09142807/Thousands-Gather-at-Tral-For-Funeral-of-Hizbul-Militant.vpf

ஆயிஷா அன்ட்ரப் – பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

திசெம்பர் 31, 2015

ஆயிஷா அன்ட்ரப் பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

ஆயிஸா அன்ட்ரபி கத்திகளுடன்

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி: துக்தரன்-இ-மில்லத் [(Dukhtaran-e-Millat (DeM), உம்மாவின் மகள்கள்] என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி-தலைவி ஆஷியா அன்ட்ரபி (Asiya Andrabi, வயது 53) 2010களில் “கல்லடி கலாட்டா” என்ற யுக்தியைக் கையாண்டு, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தெருக்களில் வந்து, பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். கடந்த ஆகஸ்ட் 14, 2014 அன்று பாகிஸ்தான் கொடியேற்றி, பாகிஸ்தான் விடுதலை தினத்தைக் கொண்டாடினாள். இதே போல மார்ச்.23, 2014 அன்றும் செய்துள்ளாள். செப்டம்பர் 2014ல் கைது செய்யப்பட்டாள்[1]. உடன் பெஹ்மிதா சூபி [Fehmida Soofi] என்ற இன்னொரு பிரிவினைவாதக்குழுத் தலைவியும் இருந்தாள். இதனால், இவள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது[2]. உடனே, தொலைபேசியில், மும்பை குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேடப்பட்டுவரும், தீவிரவாதியான  ஹாவிஸ் சையதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். சையது ஜிலானியின் மாணவி, பிரிவினைவாதத்தில் ஈர்க்கப்பட்டு, ஜிலானி வழியில் செயல்பட்டும் அடிப்படைவாத போராளி. மனித உரிமைகள் பெயரில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் குரூரக் கொலைகள், கற்பழிப்புகள் முதலியவற்றை மறைத்து, அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் உரிமைகள் பற்றி பேசிவரும் திறமைசாலி. இதனால், சிறைக்குள் செல்வது, வெளியே வருவது என்பது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி என்று போதிக்கும் இவள் பிரிவினைவாதப் போர்வையில், ஜிஹாத் தத்துவத்தை பெண்களுக்கு போதித்து வருகிறாள்.

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்

ஜிஹாதி குடும்பத்தில் பிறந்து, ஜிஹாதியாக செயல்பட்டுவரும் ஜிஹாதிபெண்: ஆயிஷா அன்ட்ரபி 1962ல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. 1990ல் ஆஷிக் ஹுஸைன் என்ற பயங்கரவாதியை நிக்காஹ் செய்து கொண்டாள், அவனும் பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 23 ஆண்டுகளாக 1992லிருந்து சிறையில் இருக்கிறான். ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவன். மொஹம்மது பின் காசிம் (23) மற்றும் அஹமது பின் காசிம் (15) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவளுடைய மற்ற உறவினர்கள் பாகிஸ்தான், சௌதி அரேபியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். 1990ல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி, பிறகு 2004-2007 காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தாள். சர்வகட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் [All Parties Hurriyat Conference] கிளையாக துக்தரன்-இ-மில்லத் செயல்பட்டு வருகிறது. இவளின் மூன்று மைத்துனர்கள், தீவிரவாத தொடர்புகளுக்காக, பாகிஸ்தானில் செப்டம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். 2010ம் வருடம் மஸ்ரத் ஆலத்துடன் “கல்லடி கலாட்டாவில்” இறங்கியவள். இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய இந்த கல்லடி கலாட்டாக்களில் சுமார் நூறு பேர் இறந்ததாக தெரிகிறது. வெளிப்டையாக ஜிஹாதித்துவத்தை போதித்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி வருகிறாள் என்று காஷ்மீர மிதவாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.1

கல்லெறி கலாட்டா ஜிஹாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட்.2011)[4]: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தும் கொழுத்தினார்கள். கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாலஸ்தினத்தில் பயன்படுத்தப் படும் முறை என்பதனையும் அறியப்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஊடகக்காரர்கள் காயப்பட்டனர். ஆனால், இதைப் பற்றி அவர்கள் ஒன்றும் ஆர்பாட்டம் செய்யவில்லை. இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கலவரத்தின் போது தீ வைப்பு போன்ற சட்ட விரோத செயலில் சம்பந்தப்படாமல் கல்வீச்சில் மட்டும் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டது[5]. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது[6]. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்[7].

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.2

பசுமாட்டை அறுத்து எதிர்ப்புத் தெரிவித்த பயங்கரவாதி[8]: ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட பசு-மாமிச விற்பனை தடையை எதிர்த்து செப்டம்பர் 2015ல் ஒரு பசுவைக் கொன்று, அந்த கொலைக்காட்சி விடியோவை வெளியிட்ட[9] ஆயிஷா அன்ட்ரபியை என்னென்பது? அவளைக் கொடூரக்காரி எனலாமா அல்லது ஜிஹாதி என்று பாராட்டலாமா? பெண்களுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பசுமாட்டை இழுத்து வந்து, அவள் முன்னால் அறுக்கிறார்கள். அந்நேரத்தில் “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்” என்று கத்துகிறாள். வெறியோடு கத்தும் அவளது குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இதில் திகிலூட்டுவது என்னவென்றால், குழந்தை ஏந்திய ஒரு பெண் முன்வரிசையில் நின்று கொண்டு அவ்வாறு கத்துகிறாள். இப்படி பயங்கரமான செயல்களை சிறுவயதிலிருந்தே பார்த்து, கடினமாகி, இருகிவிட்ட இம்மனங்களுக்கு ஜீவகாருண்யம் என்பதெல்லாம் எப்படி புரியும்? பெண்கள் மென்மையானவர்கள் என்றெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. பெண் என்றால், பேயும் இரங்கும் என்றேல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில், பேயே இவளைக் கண்டால், பயப்படும். மற்ற பெண்களின் துன்பத்தை கண்டுகொள்ளாமல் மரத்துப் போன, வெறிபிடித்த ஜிஹாதி, முஸ்லிம் பெண்களுக்காக பாடுபடுகிறாள் என்று வேறு சொல்லிக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி வெளிப்படையாக ஊடகங்களில் வரவில்லை. மறைக்கப்பட்டது எனலாம். “பீப்” விசயத்தில் அத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்த ஊடகங்களை இதனை ஏன் மறைக்க வேண்டும்? இது சகிப்புத்தன்மையா என்று யாரும் கேட்கவில்லை.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.3

ஆயிஷா அன்ட்ரபி ஐசிஸ்க்கு ஆள்பிடிக்கும் போராளியா?: இப்பொழுது டிசம்பர் 2015ல் ஹைதரபாதிலிருந்து மூன்று இளைஞர்கள் அன்ட்ரபியை சந்தித்து ஐசிஸ்ஸில் சேர செல்வதாக மத்தியாரசு புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது[10].

  1. மொஹம்மது அப்துல்லா பசித் [Mohd Abdulla Basith],
  2. சையது ஒமர் பரூக் ஹுஸைனி [Syed Omer Farooq Hussaini]
  3. மாஜ் ஹஸன் பரூக் [ Maaz Hasan Farooq]

இவர்கள் எல்லோருமே 20-22 வயதினர், உறவினர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, அன்ட்ரபியை சந்தித்து, பாகிஸ்தான் வழியாக ஐசிஸ் சேர செல்வதாக இருந்தது. கடந்த வாரம் மஹாராஷ்ட்ரா ஏ.டி.ஸ்.பிரிவு போலீஸாரால், நாக்பூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவ்விவரம் தெரியவந்தது. அவர்கள் அன்ட்ரபியை சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்[11]. இவர்களது மாமா சையது சலாவுத்தீன், தடை செய்யப்பட்ட சிமியின் தலைவர் ஆவார். இவர்கள் ஐசிஸ், தாலிபான், அல்-குவைதா அல்லது ஹிஜ்புல் முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத இயக்கத்துடன் சேருவதாக திட்டமிட்டிருந்தனர்[12]. ஆனால், அன்ட்ரபி அவர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும், அவர்கள் யார் என்பதும் தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேண்டுமென்றே தன் பெயரை இழுத்து விட்டனர் என்றும் கூறியுள்ளாள்[13]. சட்டத்தை வளைப்பதற்கு இவ்வாறு பேசுவது, பலமுறை சிறைச் சென்று விடுவிக்கப்பட்ட இவளுக்கு கைவந்த கலை என்பதால், ஒன்றும் வியப்பில்லை. விடுவிக்கப்பட்ட பிரிவினைவாதியான மஸரத் ஆலமும் [Masarat Alam] மறுபடியும் கைது செய்யப்பட்டான்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.4 - கைக்குழந்தயுடன்

© வேதபிரகாஷ்

31-12-2015

[1] The youngest child of prominent Srinagar doctor Sayeed Shahabuddin Andrabi, 1962-born Ms. Andrabi had completed a degree in biochemistry, and hoped to study further in Dalhousie. http://www.geo.tv/article-197860-Asiya-Andrabi-arrested-four-Kashmiris-killed-in-Indian-army-firing-

[2] The DeM chief celebrated Pakistan’s Independence Day on August 14 at her residence by singing that country’s national anthem and unfurling the flag of the neighbouring country on the outskirts of the city. Hours after that, Andrabi had stoked another controversy by addressing via phone a rally in Pakistan which was organized by Mumbai attack mastermind Hafiz Saeed-led Jamat-ud Dawa (JuD).

Saeed was sitting on the stage during Andrabi’s address. Andrabi had earlier also celebrated Pakistan’s National Day on March 23 this year and hoisted the flag of the country and sung its national anthem, following which the police registered a case against her under the Unlawful Activities Prevention Act.

http://articles.economictimes.indiatimes.com/2015-09-18/news/66677405_1_dem-chief-pakistani-flag-saeed

[3] http://www.thehindu.com/news/national/inside-kashmirs-new-islamist-movement/article580687.ece?ref=relatedNews

[4] மாலைமலர், கல் எறிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு: காஷ்மீர் அரசு அறிவிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28, 3:04 PM IST.

[5] http://www.maalaimalar.com/2011/08/28150458/Amnesty-for-throwing-stones-Ka.html

[6] தினமலர், கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு, ஆகஸ்ட்.28, 2011, 17:14.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=302950

[8] https://www.youtube.com/watch?v=UVwF71dJWMQ

[9] Ms. Andrabi, who slaughtered a cow after a court ordered banning the same, faces a number of FIRs in the Valley. She released a 1:15-minute video on September 10 wherein she slaughtered a cow to defy the beef ban.

http://www.thehindu.com/news/national/separatist-andrabi-arrested-for-antinational-activities/article7664426.ece

[10] The central government has ordered an investigation by a high-level body after three boys, Mohd Abdulla Basith, Syed Omer Farooq Hussaini and Maaz Hasan Farooq (all aged around 20-22) from Hyderabad claimed they were on their way to Srinagar to meet Andrabi.

http://www.hindustantimes.com/punjab/dukhtaran-e-millat-chief-asiya-andrabi-denies-isis-links/story-uSQaI3tGwRuMcn9g6Q00tL.html

[11] Whether Kashmiri separatist leader Asiya Andrabi visited Telangana has yet to be determined, said the local police today amid reports that three young men arrested for wanting to join jihadi groups in Pakistan have confessed that they wanted to meet the 53-year-old.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[12] During the interrogation, the arrested men reportedly confessed that they were trying to join any of the jihadist groups — ISIS, Al Qaeda or Hizbul Mujahideen. The police say their uncle was Sayed Salahuddin, the former chief of the banned Students Islamic Movement of India or SIMI.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[13] “I came to know about the story through the media. Even the ATS (Anti-Terrorism Squad) Hyderabad was quoted saying that they [the boys] wanted to meet me. I think the arrested boys know better why they named me. It seems my name has been deliberately dragged in,” said Ms. Andrabi.

http://www.thehindu.com/news/national/other-states/never-met-hyderabad-youths-andrabi/article8046023.ece

“அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று கத்தி, நடுத்தெருவில் கோடலியால் வெட்டிக் கொன்ற தீவிரவாதிகள்!

மே 25, 2013

“அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று கத்தி, நடுத்தெருவில் கோடலியால் வெட்டிக் கொன்ற தீவிரவாதிகள்!

London terrorist Woowich2005ற்குப் பிறக்கும் நடக்கும் தீவிரவாதச் செயல்: ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். 2005 தாக்குதலுக்குப் பிறகு, சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமிஸ்டுகளின் தாக்குதல் என்று அறியப்படுவதாக லண்டன் போலீஸார் கூறியுள்ளனர்[1]. அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவம், ஆப்கன் மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து, 2005ம் ஆண்டு, பிரிட்டனில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐடிவியில் கட்டப்பட்ட வீடியோவில்[2], ரத்தக்கறைப் படிந்த கைகள், ஒரு கையில் கோடாலியுடன், அந்த தீவிரவாதி பேசுவது பயங்கரமாகத் தான் இருந்தது, “அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்”, என்று வெறிபிடித்தவன் போல பேசினான்.

London terrorist speaking with axe and bloodநடுத்தெருவில் கழுத்தை வெட்டிய தீவிரவாதிகள்: பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை, இரு இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். சாலையில் பலர் சென்று கொண்டிருந்த நிலையில், காரில் இருந்த ராணுவ வீரர், என்ன, ஏது என கேட்கும் போதே, அவரை கீழே இழுத்து போட்ட அந்த நபர்கள், ஆட்டின் கழுத்தை நறுக்குவது போல, வீரரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3].  லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்றுள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர்[4]. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்[5].

London terrorist speaking with axe and blood2“அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் வேலையா என்ற சந்தேகம்: இங்கிலாந்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஆராய்ந்தால், ஐந்தில் ஒருவர் “அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் உறுப்பைனராக இருப்பது தெரிய வருகிறது[6]. அதுமட்டுமல்லாது, அத்தகைய குற்றங்கள் புரிந்து தண்டனைக்குள்ளானவர்களும் அந்த இயக்கரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்[7]. இன்று இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் செய்தித்துறை வல்லுனர்கள் உள்ளூர் தீவிரவாதம், உள்ளூரில் வளர்ந்த தீவிரவாதம், உள்ளூரில் வளர்த்து விட்ட தீவிரவாதம், என்று “இந்திய முஜாஹித்தீன்” போன்ற இயக்கங்களைக் குறிப்பிட்டு வருகின்றனர். எனவே அவ்வாறு பார்க்கும் போது, இது இங்கிலாந்தின் உள்ளூர் தீவிரவாதம் எனலாம். “அல்-முஹாஜிரோன்” முதலில் சவுதி அரேபிடயாவில் 1983ல் ஒமர் பக்ரி முஹம்மது என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் 1986ல் அதற்கு அங்கு தடைவிதிக்கப் பட்டவுடன், பக்ரி இங்கிலாந்துக்கு ஓடி வந்துவிட்டார்[8]. ஹிஜ் உத்-தஹ்ரீர் என்ற சர்ச்சைக்குரிய இயக்கத்தில் 1996ல் சேர்ந்தார், ஆனால், அது தனக்கேற்ற வகையில் தீவிரமாக செயல்படுவதில்லை என்று “அல்-முஹாஜிரோன்” என்ற தனது இயக்கத்தை ஆரம்பித்தார்[9]. இதற்கு தலைவராக அவரும், சௌத்ரி என்பார் துணைத்தலைவருமாக உள்ளனர். 11/9ற்குப் பிறகு “மிகச்சிறந்த 19” என்ற கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து, அதில் ஜூலை 7 வெடிகுண்டு போட்டவர்களை “அபாரமான தீரர் 4” என்று போற்றிப் புகழ்ந்தார்[10]. அதாவது, அவ்வாறு உள்ளூர் தீவிரவாதத்தை வளர்த்தார்.

al-Muhajiroun head Mohammed Bakriவெட்டிய தீவிரவாதிகள் பிடிப்பட்டது: நடப்பது சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என, அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கருதினர். ஆனால், கழுத்தறுக்கப்பட்ட ராணுவ வீரர், ரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்ததும், அலறினர். முதலுதவி ; இங்கிரிட் லோயா – கென்னட் என்ற பெண், ஓடிச் சென்று, கழுத்தறுபட்ட ராணுவ வீரரை தூக்கி, மடியில் கிடத்தி, உயிரைக் காப்பாற்ற, முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார். இதனால், கோபம் கொண்ட அந்த இரு இளைஞர்களும், அவளை தாக்க முற்பட்டனர். ரத்தம் சொட்டும் கத்திகளுடன், அவர்கள், அந்தப் பெண்ணை அணுகினர். அவர்களைக் கண்ட, இங்கிரிட் லோயா, “நீங்கள் செய்தது படுகொலை; எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” என, கோபமாக கேட்டார். “இவன், ஆப்கன் சென்று, அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்தவன். அவனை பழிவாங்கவே இவ்வாறு செய்தோம். பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண் அல்லா………. ,” என, கத்தினர்[11]. இவ்வாறு, லோயாவுக்கும், பயங்கரவாதிகள் இருவருக்கும், கோபாவேசமாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, தைரியம் அடைந்த சிலர், அந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில், சிலர், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சுற்றி வளைத்தவர்களை நோக்கி, ரிவால்வரை நீட்டிய இளைஞர்கள், சுட்டு விடுவதாக மிரட்டினர். தகவல் அறிந்து, அங்கு வந்த போலீசார், நிலைமையை சட்டென புரிந்து, ரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்றிருந்த இரு இளைஞர்களையும், காலில் சுட்டு, கீழே வீழ்த்தினர். உடனடியாக பாய்ந்து, கை விலங்கிட்டு, அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர். ஏராளமான ரத்தம் வெளியேறியதால், கழுத்தறுபட்ட ராணுவ வீரர், அந்த இடத்திலேயே இறந்தார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், படுகாயமடைந்த பயங்கரவாதிகள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Anjem Choudary with mike deuty of al-muhajiroonடேவிட் கேமரூன் நாடு திரும்பினார்: பிரதமர் திரும்பினார், சம்பவம் பற்றி அறிந்ததும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, லண்டன் திரும்பினார். “கோப்ரா’ என்ற பெயரிலான, உயர் மட்ட அவசர நிலை கூட்டத்தைக் கூட்டி, நிலைமை குறித்து விவாதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ராணுவ முகாம்களுக்கும், ராணுவ கட்டடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது; மசூதிகள் மற்றும் முஸ்லிம்கள் கூடும் இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. “ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது, பயங்கரவாத தாக்குதல் சம்பவம்’ என, பிரதமர், டேவிட் கேமரூன் அறிவித்ததும், லண்டனில் சில இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்தவர் மற்றும், பதிலுக்குப் பதில், வன்முறையில் ஈடுபட திட்டமிட்ட மற்றொருவர் என, இருவர் கைது செய்யப்பட்டனர்.

இங்கிரிட் லோயாவுக்கு நன்றி: பயங்கரவாதிகளிடம் பேச்சு கொடுத்து, அவர்கள் தப்பாமல் தடுத்து நிறுத்திய, இங்கிரிட் லோயாவுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவரால் தான், மேலும் சில வீரர்கள் படுகொலையில் இருந்து தப்பினர் எனக் கூறி, நன்றி கூறினர். இது குறித்து லோயா கூறும் போது, “நான் முன்னர், நர்சாக பணியாற்றியுள்ளேன் என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டேன். என்னை அவர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்களுடன் கோபமாக பேசி, அவர்கள் கவனத்தை திசை திருப்பினேன். அவர்கள் வசம், ரிவால்வர் போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்த நான், அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ந்து பேச்சு கொடுத்தேன். இல்லையேல், அவர்கள் பலரை சுட்டுக் கொன்றிருப்பர்,” என்றார்.


[3] தினமலர், லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: பிரிட்டன் ராணுவ வீரரை கழுத்தறுத்து கொ;ன்ற பயங்கரவாதிகள் தினமலர்பதிவு செய்த நாள் : மே 24,2013,00:18 IST; http://www.dinamalar.com/news_detail.asp?id=719707

[6] A study shows that one in five terrorists convicted in Britain over more than a decade were either members of or had previous links to the extremist group al-Muhajiroun. Telegraph, London dated Saturday 25 May 2013

[8] Al-Muhajiroun was first founded by the hate cleric Omar Bakri Muhammad in Saudi Arabia in 1983 but was banned there three years later and Bakri fled to the UK.

http://www.telegraph.co.uk/news/uknews/terrorism-in-the-uk/10079827/Woolwich-attack-Al-Muhajiroun-linked-to-one-in-five-terrorist-convictions.html

[9] He first joined Hizb ut-Tahrir but left the controversial organisation in 1996, because it was not extreme enough for him, and he relaunched Al-Muhajiroun, along with his deputy Choudary.

http://www.telegraph.co.uk/news/uknews/terrorism-in-the-uk/10079827/Woolwich-attack-Al-Muhajiroun-linked-to-one-in-five-terrorist-convictions.html

[10] Bakri helped organise a seminar after the September 11 attacks in favour of the “Magnificent 19” and went on to call the July 7 bombers the “Fantastic Four”.

http://www.telegraph.co.uk/news/uknews/terrorism-in-the-uk/10079827/Woolwich-attack-Al-Muhajiroun-linked-to-one-in-five-terrorist-convictions.html