Archive for the ‘அலிகர்’ category

அலிகர் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகின்றனர் – இஸ்லாம் ஏன் அவர்களை “அமைதியாக” வைத்திருக்கவில்லை?

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகின்றனர் – இஸ்லாம் ஏன் அவர்களை “அமைதியாக” வைத்திருக்கவில்லை?

rk24amuviolence3

Burnt documents seen at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

 

பல்கலைக்கழகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது:23-04-2016 சனிக்கிழமை இரவன்று அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் வெளி-மாணவன். ‘மாணவர் விடுதியில் தங்கியுள்ள, வெளிநபர்களை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அப்படியென்றால், வெளியாட்கள் ஏன், எப்படி, எவ்வாறு மாணவர்கள் விடுதியில் வந்து தங்குகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மோதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆக உயிரிழந்த இவர்கள் மெஹ்தப் (22) மற்றும் மொஹம்மது வாகப் (18) [Mehtab (22) and Mohammad Waqif (18) ] என்று தெரியவருகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் கோவிந்த் அகர்வால் என்கின்ற போலீஸ் அதிகாரி[1].

rk24amuviolence5

A burnt two wheeler at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

நுழைவு தேர்வு நடைபெறுகின்ற வேளையில் நடந்த கொலைகள், கலவரம்:த்தகைய கலவரம், தீவைப்பு, கொலை போன்ற சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (24-04-2016) அன்று பல்கலைக்கழகத்தின் பொறியல் கல்லூரிக்கான நுழைவு தேர்வு பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 22,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். நாளை திங்கள் கிழமை மாணவர்கள் கலவரம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால், மத்திய பாதுகாப்புப் படையினர் வளாகத்தில் குவிக்கப்பட்டு பதட்டம் நீடிக்கிறது. குண்டுபட்ட மற்றவரான வாசீப் இப் பல்கலையின் மாணவர் அல்ல. அவரது உயிருக்கும் ஆபத்து நீடிப்பதால் அவர் டெல்லியின் கங்காராம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்[2].

rk24amuviolence6

A burnt vahicle at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

இறப்பையும் வைத்து கலவரத்தை உண்டாக்கும் இஸ்லாமிய முறை: அதாவது, இறப்பை வைத்துக் கொண்டும் கலவரத்தை உருவாக்கும் யுக்தியை முஸ்லிம்கள் செய்து வருவதை மறைமுகமாக எடுத்துக் காட்டப்படுகிறது. காஷ்மீரத்தில் முதலில் ஒரு நொண்டி சாக்கை வைத்து கலவரத்தை ஆரம்பிப்பர். அதில் யாராவது இறந்தால், அந்த உடலை எடுத்துச் செல்ல ஆர்பாட்டம் செய்வர். பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று ரகளை செய்ய திட்டமிடுவர். அதனைப் புதைத்தப் பிறகு, ஊர்வலமாகத் திரும்பி வரும் போது, இன்னொரு கலவரத்தை செய்வர். “கல்லடி கலாட்டா” போன்ற யுக்திகளைப் பின்பற்றி சிறுவர்கள் மற்றும் பெண்களை முன்னிருத்து, அத்தகய கலவரங்களை மேற்கொள்வர். இதனால், “ராபிட் ஆக்ஸன் போர்ஸ்” என்ற கலவரத்தை அடக்கும் போலீஸார் வரவழைப்பட்டு, பாதுகாப்பாக “வஜ்ரா” போன்ற வண்டிகள் நிற்க வைக்கப்பட்டுள்ளன.

rk24amuviolence9

Rapid Action Force (RAF) deployed inside the campus, after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

முஸ்லிம் பிரச்சினையை பொதுப்பிரச்சினை மற்றும் அரசியலாக்கும் போக்கு: துணை வேந்தர் ஜமீர் உத்தீன் ஷா [Vice Chancellor Lt Gen Zameer Uddin Sha] இந்த மோதலை கடுமையாகக் கண்டித்துள்ளார். மற்ற விசயங்களுக்கு இவர் வீரதீரமான அறிக்கைகள் எல்லாம் விடுவார், ஆனால், இப்பிரச்சினையில் அடக்கியே வாசித்துள்ளார். ஆனால், இவரும் செய்திகளில் வந்துள்ள விசயங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. வளாகத்தில் இணைதளவசதியும் முடக்கப்பட்டுள்ளது. அதாவது, இணைதளங்களில் தவறான செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரப்பி கலவரங்களை உண்டாக்குவது, சமீப காலத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களின் யுக்தியாக இருந்து வருகிறது. இப்பொழுதே, அலிகர் பல்கலைக்கழகத்தின் நிலை மறந்து, இதற்கும் பிஜேபி அரசு, மோடி, ஆ.எஸ்.எஸ் தான் காரணம் என்று சிலர் ஆரம்பித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்கள் எல்லாமே முஸ்லிம்கள் என்பதனால், அடக்கி வாசிக்கின்றனர்.

rk24amuviolence12

Rapid Action Force (RAF) deployed inside the campus, after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

ஆஸம்கர் நகர், சம்பல் நகர், காஜிப்பூர் மாணவர்களிடையே பிரச்சினை என்ன?: எல்லோருமே முஸ்லிம்கள் என்றால், இஸ்லாம் ஏன் அவர்களை இணைக்கவில்லை. இஸ்லாம் என்றால் அமைதி என்றால், ஏன் அவர்களுக்கு இஸ்லாம், அமைதியைக் கொடுக்கவில்லை. இரு முஸ்லிம் மாணவர்கள் ஏன் சுட்டுக் கொண்டு இறக்க வேண்டும். நாளைக்கு இவர்களையும் ஷஹீத் என்று அறிவித்து பிரச்சினையை முடித்து வைப்பார்களா? “ஈகோ பிரச்சினை” என்று ஆங்கில ஊடகங்கள் நாஜுக்காகக் கூறுகின்றன. அப்படியென்ன முஸ்லிம்களுக்குள் ஈகோ / தான் என்ற அகம்பாவம், திமிர் வரமுடியும்? அல்லாவுக்கு முன்னர் எல்லோரும் சமம் என்றால், எப்படி அத்தகைய மாற்று எண்ணங்கள், பிரிவினை சிந்தனைகள், சகோதரனை அடிக்க வேண்டும், துப்பாக்கி வைத்து சுட வேண்டும் போன்றவை வரமுடியும்? அப்படியென்றால் தவறு எங்கு இருக்கிறது? அதனை கண்டுபிடித்து தடுக்க வேண்டாமா? இன்றைக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள், அவர்களது தீவிரவாத கலவரங்கள், வன்முறைகள், குண்டுவெடிப்புகள். முதலியன பெரிய அச்சுருத்தலாக இருந்து வருகின்றன. மனித சமுதாயத்திற்கே எதிராக செயல்படும் நிலையும் அறியப்பட்டு விட்டது.

AMU VCமுஸ்லிம்கள் ஏன் முஸ்லிம்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்?: ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் முஸ்லிம்களையே கொன்று வருகின்றனர். பிறகு, இஸ்லாம் பெயரில் என்னதான் நடக்கிறது என்ற புதிர், குழப்பம் மற்றும் சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் இஸ்லாம் என்றால், இனி அதனை சீர்திருத்த வேண்டும் அல்லது விட்டுவிடும் நிலைமையும் ஏற்படலாம். மனிதர்கள், “மனிதர்கள்” என்று மதிக்கப்படாமல், “முஸ்லிம்கள்” மற்றும் “காபிர்கள்” என்று பிரித்து வைத்து, நாங்கள் எல்லோரையும் “முஸ்லிம்கள்” ஆக்குவோம் இல்லை ஒழித்துக் கட்டுவோம் என்றால் அது மதம் ஆகாது. இது சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் புரிந்து விட்டது. இருப்பினும், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத சக்திகள் அவர்களை மிரட்டி, அடக்கி வைத்துள்ளன. இந்நிலை மாறினால் தான் அந்த அடக்கப்படும் முஸ்லிம்களுக்கு வாழ்வு ஏற்படும் இல்லை அழிவுதான் என்று அந்த இயக்கங்களே தெளிவாக்கி வருகின்றன. பல்கலைக்கழகங்கள் இப்படி தொடர்ந்து, கலவர நிலை, துப்பாக்கி சூடு, தேச-விரோத ஆர்பாட்டங்கள் என்ற சூழ்நிலைகளில் செயபட்டுக் கொண்டிருந்தால், மாணவர்களின் படிப்பு முதலியவை என்னாகும் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1]http://www.dinamani.com/india/2016/04/25/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article3398102.ece

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8516087.ece

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

Aligarh கில்லிங் 2

அலிகர் பல்கலைக்கழகத்தின் சித்தாந்த நிலைப்பாடும், மாணவர்கள் பிளவுப்பட்டிருக்கும் நிலையும்: உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், முஸ்லிம்கள் கல்வி நிறுவனம் ஆகும். சமீபத்தில் இது “சிறுபான்மையினர்” பல்கலைக்கழமாகக் கருத முடியாது போன்ற செய்திகள் வெளி வந்தன. பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சிந்தனைகள் கொண்ட கல்வி நிறுவனமாக உள்ளது. இர்பான் ஹபீப் (Hirfan Habib) போன்ற இடதுசாரி, “மார்க்சீய சரித்திவியல் சிந்த்தாந்தம்” (Marxist ideology) கொண்ட சரித்திராசிரியர்களின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. “இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ்” (Indian History Congress) நடக்கும் பொழுது, “அலிகர் ஹிஸ்டாரியன்ஸ் போரம்” (Aligarh Historians Forum) என்ற பெயரில் அம்மாநாடு நடந்து கொண்டிருக்கும் போதே, இணையாக கருத்தரங்களம் நடத்தி தங்களது “மார்க்சீய” சரித்திர-வரைவியல் முறையை (Marxist historiography) திணித்து வருகின்றனர். இவ்வாறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் மார்க்சீயம் இரண்டும் சேர்வதால், படிக்கும் மாணவர்களில் சித்தாந்த ரீதியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் அடிக்கடி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது, ஆர்பாட்டம் நடத்துவது, முஸ்லிம்களின் உரிமைகள் என்று கூட்டங்கள் போடுவது முதலியவை நடந்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழகமான இங்கு சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

amu-story-vehicles burnt முஸ்லிம் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல், சண்டை, தகராறு: உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், வன்முறை வெடித்தது[1]. இதில், முன்னாள் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்[2]. உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக, மாணவர் விடுதியில், முன்னாள் மாணவர்கள் பலர் விதிமுறைகளை மீறி தங்கியுள்ளனர்[3]. இதுதவிர, இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் விரோதம் நிலவி வந்தது[4].  அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவு மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. இது தவிர இந்நிலையில் சனிக்கிழமை  இரவு (22-04-2016), இரு பிரிவு மாணவர்களும் பயங்கரமாக மோதினர்[6]. அப்போது, வளாகத்துக்குள் உள்ள”மும்தாஜ்’ என்ற பெயரிலான மாணவர் விடுதியில்  மோசீன் இக்பால் என்ற மாணவர் ஒருவரின் அறையை (எண்.12), மற்றொரு பிரிவினர் தீ வைத்து எரித்தனர்;  தாளாளர் அறை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மாணவர்கள் தீ வைத்து எரித்தனர்[7]. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டன[8]. தாளாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28,000 மாணவர்களின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கும் விவரங்களிலிருந்து, அவற்றை மீட்டு விடலாம் என்று நம்புகின்றனர்[9]. இதையடுத்து, இங்கிருந்து உயிர் தப்பிய பல்கலைக்கழகத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரியிடம் மோசீன் 9.30 அளவில் புகார் அளிக்கச் சென்றார். அப்பொழுது பைக்குகளில் சுமார் 30-40 மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர்[10]. அப்போது, அந்தச் செய்தி வெளியே பரவியது. இதையடுத்து, ஆஸம்கர் நகரைச் சேர்ந்த மாணவர்களும், சம்பல் நகரைச் சேர்ந்த மற்றொரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். காஜிப்பூர் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்[11]. 30 முறை துப்பாக்கிகள் சுடப்பட்டன என்று குறிப்பிடப்படுகிறது[12].

amuviolence தீவைப்பு

A burnt building of Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கி சுடும் வேலையை மாணவர்கள் எப்படி செய்தார்கள்?: இப்படித்தான் – அதாவது, மேலே குறிப்பிட்டப்படி, ஊடகங்கள் பொதுவாக செய்திகளில் சொல்லி வருகின்றன. மற்ற விசயங்களுக்கு “புலன்-விசாரணை ஜார்னலிஸம்” என்று எல்லா விசயங்களும் எங்களுக்குதான் தெரியும் என்பது போல புட்டு-புட்டு வைக்கும் ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிடுவது தமாஷாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிகளை வைத்து சுட்டுக் கொண்டனர் என்றால், படிக்கும் மாணவர்களிடம் எப்படி துப்பாக்கிகள் வந்தன? போலீஸார் அதைப் பற்றி ஏன் விவரங்களைக் கொடுக்காமல் இருக்கின்றனர்? ஹைதராபாத் மத்திய பல்கலை, ஜே.என்.யூ, புனே பிளிம் இன்ஸ்டிடுயூட் என்றேல்லாம் வரும் போது, நேரிடையாக சென்று, மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் பேட்டிக் கண்டு விவரங்களை அள்ளி வீசினவே? இப்பொழுது அவ்வாறு ஏன் செய்யவில்லை? யார் தடுக்குகிறார்கள்? மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள் என்றால், எண்களை வைத்து யார் என்று கண்டுபிடிக்கலாமே? உள்ளே நுழையும் போது, செக்யூரிடியில் அவ்விவரங்கள் பதிவாகி இருக்குமே? சரி, உள்ளே நடக்கும் நிகழ்சிகளை கண்காணிக்க வைத்துள்ள கேமராக்கள் என்ன விவரங்களைக் கொடுக்கின்றன?

rk24amuviolence1

Policemen stand next to the blood stains at Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கிப் பிரயோகம் மாணவர்களல் நடத்தப் பட்டது: இந்நிலையில் சில மாணவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் துப்பாக்கியால், ஒருவருக்கு ஒருவர் சுட்டதில், முன்னாள் மாணவர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் காயம் அடைந்தனர். தமிழ்.இந்து, “அப்போது அங்கும் வந்த அந்த மாணவர் கோஷ்டி புகார் செய்ய வந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் குண்டுபட்டு படுகாயம் அடைந்தனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸும் இதனை “கேம்பஸ் கன்பைட்”, அதாவது வளகத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டை என்றெ குறிப்பிட்டுள்ளது[13]. ஆனால், தினத்தந்தி, “அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.” செய்தி வெளியிட்டுள்ளது[14]. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களின் வன்முறையை கட்டுப்படுத்த முதலில் கண்ணீர் புகை வீசினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்[15]. இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த கலவர சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பலியானவர் பெயர் மெஹ்தாப் / மக்தாப்[16]. இவர், பல்கலைக்கழகத்தில் இருந்து, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட மாணவர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1] மாலைமலர், உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம்துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி, பதிவு: ஏப்ரல் 24, 2016 11:19

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/24111926/1008139/Clash-between-two-student-groups-in-AMU-one-killed.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, By: Jayachitra, Updated: Sunday, April 24, 2016, 10:43 [IST]

[4] தமிழ்.இந்து, அலிகர் பல்கலை. மாணவர் கோஷ்டி மோதலில் இருவர் பலி; பதற்றம்: மத்திய பாதுகாப்பு படை குவிப்பு, ஆர்.ஷபிமுன்னா, Published: April 24, 2016 14:16 ISTUpdated: April 24, 2016 18:13 IST.

[5] http://tamil.oneindia.com/news/india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-252013.html

[6] தினமலர், அலிகார் பல்கலையில் வன்முறை:முன்னாள் மாணவர் படுகொலை, ஏப்ரல்.24. 2016.20.02.

[7] நியூஸ்7.தமிழ், பல்கலைகழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் பலி, Updated on April 24, 2016; http://ns7.tv/ta/fight-among-students-university-and-student-died.html

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508546

[9] http://indiatoday.intoday.in/story/violence-in-amu-campus-2-students-killed-in-gun-battle-28000-student-records-gutted-in-fire/1/650495.html

[10] http://indianexpress.com/article/india/india-news-india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-2767734/

[11] Sources in the university told The Hindu at the clash was between students from Ghazipur, Sambhal and Azamgarh. “The tension between students and former students belonging to Sambhal, Azamgarh and Ghazipur has been simmering for quite some time now. And the violence which we saw on Saturday was result of an ongoing war of ego between these warring groups of regional students,” said a university official.

http://www.thehindu.com/news/national/other-states/exstudent-killed-in-amu-campus-clash/article8515953.ece

[12] At about 9.30 pm Saturday, Mohsin along with others reached the proctor’s office to lodge a complaint. “Meantime, a group of students belonging to a rival gang arrived on motorcycles. They were around 30 to 40 in number and were carrying weapons. After heated arguments, firing started from both the sides and went on for 15 minutes. At least 30 rounds were fired…we were helpless as the students were armed,” a member of the security staff, who was present at the spot, said.

[13] Indian express, Two killed in AMU campus gunfight, vehicles torched, Updated: April 25, 2016 1:53 am

[14] தினத்தந்தி, அலிகார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே மோதல்:போலீஸ் துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி , மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST

[15] http://www.dailythanthi.com/News/India/2016/04/24123829/1-killed-in-clashes-at-Aligarh-Muslim-University-proctors.vpf

[16] தினமணி, அலிகர் பல்கலை.யில் துப்பாக்கிச் சண்டை: 2 இளைஞர்கள் பலி, By அலிகர், First Published : 25 April 2016 12:31 AM IST

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

திசெம்பர் 11, 2014

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

ஆக்ரா முஸ்லிம்கள் மதமாற்றம் உண்மையா, பொய்யா?

ஆக்ரா முஸ்லிம்கள் மதமாற்றம் உண்மையா, பொய்யா?

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே சொன்ன விவரங்கள்[1]: தர்ம ஜாக்ரண் மஞ்ச் என்ற பஜ்ரங் தள் அமைப்பின் பிரிவு, “கர் வாபஸி” (வீட்டுக்குத் திரும்ப வருதல்) என்ற நிகழ்சி மூலம், சுமார் 60 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்றியுள்ளதாக செய்திகள் புகைப்படங்கள், வீடியோக்களுடன் வெளிவந்தன. அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், பணம் எல்லாம் கொடுக்கப் பட்டது என்றும் கூறப்படுகின்றது[2]. எகனாமிக்ஸ் டைம்ஸ், “ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது”, என்று வெளிப்படையாக செய்தியை வெளியிட்டுள்ளது[3]. “அலிகர் இதற்காகப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது இந்துக்களுக்கு அந்நகரத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ராஜபுத் வீரர்களால் கட்டப்பட்டது அந்நகரம், அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு கட்டப் பட்டுள்ள முஸ்லிம்களின் நிறுவனங்கள் தாம் இப்பொழுதுள்ளன. கிருஸ்துமஸ் தினம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது, ஏனெனில், அது பரீட்சை செய்து / சோதித்து பார்க்கும் தினமாக அமையும். அலிகர், பூலத்சர், ஹத்ராஸ் போன்ற சேரிக்களில் வாழும் முஸ்லிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 4,000 கிருத்துவர்களும் வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 1,000 முஸ்லிம் குடும்பங்கள் தாகூர் மற்றும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றெல்லாம் ராஜேஸ்வர் சிங் என்ற [RSS regional pracharak Rajeshwar Singh ] ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே அவ்வாறு சொல்லியுள்ளதாக வெளியிட்டுள்ளது. வெளிந்சாட்டு ஊடகங்களும் இதை வெளியிட்டுள்ளன[4]. ரீயூட்ட்ர்ஸ் இந்தியா [Reuters India], இலவச உணவு கொடுக்கப் படும் என்றுகூட வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்று சேர்த்துள்ளது. அதாவது, முன்பெல்லாம் பால் பவுடர், ரொட்டி போன்ற உணவு கொடுத்து கிருத்துவர்கள் இந்துக்களை மதமாற்றினார்கள் என்று சொல்வதுண்டு, அதனால், அப்படி நக்கலாக அதையும் சேர்த்துள்ளது போலும்! சத்தீஸ்கரில் இந்துத்வா கிருத்துவர்களை மாற்ற முயற்சிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன[5].

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

வெளிப்படையாக சொல்லி செய்யும் முட்டாள்களா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள்?:  இதெல்லாம் முந்தைய “தெஹல்கா”வின் குத்தும் ஆபரேஷன் செய்திகள் (Sting operation news) போன்றுள்ளது. குஜராத் கலவரங்கள் விவகாரங்கள் விசயத்தில் தெஹல்கா மற்றும் என்டிடிவி தொடர்ந்து சில காட்சிகளை பிரச்சாரரீதியில் நாள் முழுவதும் காட்டிக் கொண்டிருந்தது, பிறகு, அவையெல்லாமே வெட்டி-ஒட்டி செய்யப் பட்ட டேப்புகள் என்று தெரியவந்தது. ஆகவே, அந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் அப்படிபட்ட முட்டாளாஹைவ்வாறு டமாரம் அடித்து சொல்வதற்கு, என்று தெரியவில்லை. பொதுவாக, சில இந்துத்துவவாதிகள் விசயமே இல்லாமல் இருந்தாலும், தாங்கள் எதையோ சாதித்து விடுவோம், இல்லை சாதித்து விட்டோல் என்பது போல பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வர். அம்மாதிரியாக இவர் பேசினாரா அல்லது உண்மையிலேயே அத்தகைய திட்டம் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லை அந்த நாளிதழின் பேட்டியாளர் சொன்னதைத் திரித்து செய்தியாக வெளியிட்டுளாரா? நாளைக்கு ராஜேஸ்வர் சிங் தான் அவ்வாறு சொல்லவில்லை என்றுதான் கூறப்போகிறார்.

Members from Bajrang Dal and VHP hold a trident during a protest in New Delhi

Members from Bajrang Dal and VHP hold a trident during a protest in New Delhi – ரியூட்டர் இப்படத்தை இந்த செய்திக்குப் போட்டுள்ளது!

லோக்சபாராஜ்ய சபாக்களில் எதிர்கட்சிகள் அமளி: ஆக்ராவில் உள்ள முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன[6]. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் வாழுபவர்களுக்கான பிபிஎல் (BPL) ( ஏழை) அட்டை தருவதாக கூறி பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்[7]. மாநிலங்களவையில் நேற்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். அக்குடும்பத்தினர் கொடுத்துள்ளத் தகவல்களின் படி, கடந்த நான்கைந்து மாதங்களாக, அவ்வியக்கத்தினர் தங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும், தாங்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால், நிதியுதவி கிடைக்கும் என்ற காரணங்களுக்காக மதமாற ஒப்புக் கொண்டதாகவும் கூறியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன[8].

An Indian Hindu sadhu holds a trident during a protest in New Delhi

An Indian Hindu sadhu holds a trident during a protest in New Delhi –   ரியூட்டர் இப்படத்தை இச்செதிக்குப் போட்டுள்ளது!

மாயாவதி நேரிடையாக ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றஞ்சாட்டியது: மாயாவதி, ‘‘ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்கள் 100 பேரிடம் ஆசைவார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் இந்துவாக மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான பஜ்ரங்தள் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் முக்கிய பிரச்னை. அரசியலமைப்பு சட்டத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மதத்தையும் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஆக்ரா சம்பவத்துக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்[9].  மாயாவதி தொடர்ந்தார், “மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதேபோல அலிகாரிலும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.

Members of the Muslim community stage a protest against alleged forced conversion of 300 people, in Agra on Wednesday Raju Tomar- HT Photo

Members of the Muslim community stage a protest against alleged forced conversion of 300 people, in Agra on Wednesday Raju Tomar- HT Photo

இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான்கம்யூனிஸ்டுகள் உறுதி: இந்நிலையில் மாயாவதியின் கருத்தை காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர். இது தொடர்பாக காங்கிரûஸச் சேர்ந்த ஆனந்த் சர்மா கூறுகையில், “சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்[10]. இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இது சட்டம், ஒழுங்கு பிரச்னை என்பதால், இதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. இச்சம்பவத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் பெயர் இழுக்கப்படுகிறது. இதை அவை குறிப்பில் இருந்து, அவைத் தலைவர் நீக்க வேண்டும்’’ என்றார்[11]. இதே பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுல்தான் அகமது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்[12]. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களான டி.ராஜா, யச்சூரி முதலியோர், இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான். கிருஸ்துமஸுக்கு முன்னால், ஓட்டுவங்கி அரசியலுக்காக இப்பிரச்சினையைக் கிளப்புகிறது, என்றெல்லாம் பேசினர்[13].

எகானாமிக்ஸ் டைம்ஸ் படம்

எகானாமிக்ஸ் டைம்ஸ் படம்

தர்ம கஜாக்ரண் மஞ்ச்என்ற இயக்கத்தின் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு வழக்குப் பதிவு[14]: “தர்ம கஜாக்ரண் மஞ்ச்” [ Dharma Jagran Manch] என்ற இயக்கம் மற்றும் அதன் உபியின் தலைவர் கிஷோ மீது சதர் பஜார் போலீஸார் மக்கள் பிரிவுகளுக்குள் விரோதத்தை உண்டாக்குவது, மோசடி செய்வது போன்ற, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளில் [Police registered cases under Section 153 (A) (promoting enmity between different groups) and Section 415 (using fraudulent means) of the IPC.] எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது[15]. இந்தியாவில் மதமாற்றம் குற்றமாகுமா என்ற சர்ச்சையும் உள்ளது, ஏனெனில், கிருத்துவ இயக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே, மதமாற்றம் தங்களது உரிமை என்றும் அதற்கு அரசியல் நிர்ணயச் சட்டத்திலும் இடமுள்ளது என்று வாதிட்டு வருகின்றது. மேலும்ம் இங்கு இந்துபெயரில் உள்ள இயக்கங்கள் எல்லாமே, ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரைக் குத்தப் படுகிறது, சங்கப்பரிவார் என்று பேசப்படுகிறது. ஆனால், பிறகு ஆர்.எஸ்.எஸ் சம்பந்தமில்லை என்று மறுக்கிறது. பிறகு எதற்காக கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள்?

Noor Mohammad,  who alleged that the two RSSoffshoots had lured them into a programme to collect BPL and ration cards HT photo

Noor Mohammad, who alleged that the two RSSoffshoots had lured them into a programme to collect BPL and ration cards HT photo

முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முடியுமா?: பொதுவாக முஸ்லிம் மதமாற முடியாது, அப்படி மாறினால், உடனடியாக அவன் மதத்துரோகி, விரோதி (apostate) என்று முத்திரைக் குத்தப் பட்டு கொல்லப்படுவான். ஆகவே விசயம் தெரிந்த எந்த முஸ்லிமும் வெளிப்படையாக மதமாற மாட்டான், மாறினாலும், சொல்லிக் கொள்ளா மாட்டான். இப்பொழுதே, நாங்கள் ஒன்றும் மதமாற்றப் படவில்லை என்று ஆக்ரா முஸ்லிம்கள் சொல்லியதாக செய்திகள் வந்துள்ளன[16]. உடனே இந்துத்துவவாதிகள் அவர்கள் பயந்து அவ்வாறு பேசுகிறார்கள் என்றும் கூறுகின்றனர்[17]. எனவே, இதெல்லாம் பிரச்சாரத்திற்காக செய்யப் பட்டதா அல்லது ஏதோ பிரச்சினையைத் திசைத் திருப்ப செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படும் போது, அமைதியாக இருக்கும் அரசியல்வாதிகள், ஊடகங்கள் இப்பொழுது ஏன் குதிக்கின்றன என்று வினய் கத்தியார் கேட்டிருப்பதாகவும் செய்தியுள்ளது[18].

© வேதபிரகாஷ்

11-12-2014

[1] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-plans-to-convert-4000-christian-1000-muslim-families-to-hinduism/articleshow/45442684.cms

[2] Around 60 Muslim families participated in a “ghar wapsi” ceremony organised by Bajrang Dal’s Dharm Jagran Manch on Monday. ‘Ghar Wapsi’ literally means ‘return home’ and according to the organisers it is meant for people who had left the Hindu fold and are now returning to it. A day later, these families are alleging that they had been promised ration cards and money in exchange for participating in the religious conversion ceremony.

http://www.abplive.in/india/2014/12/09/article451711.ece/Ration-card-money-promised-for-converting-to-Hinduism-families-accuse-Bajrang-Dal#.VIjad_mSynU

[3] Vasudha Venugopal, RSS plans to convert 4,000 Christian & 1,000 Muslim families to Hinduism , ET Bureau | 10 Dec, 2014, 04.40AM IST, Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/45442684.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

[4] http://in.reuters.com/article/2014/12/10/india-religion-conversions-idINKBN0JO1CN20141210

[5] Firstpost, Hindutva targeting of Christians in Chhattisgarh over conversions really about land?, by Parivesh Mishra  Dec 10, 2014 18:54 IST.

[6] இந்நேரம்.காம், முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம், வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014 02:58, பதிவர்: ஜாஃபர்

[7] http://www.inneram.com/i-news/india/3311-muslims-convert-to-hidu-in-agra.html

[8] According to the details given by the families, volunteers from the Dharm Parivartan Mach had been in touch with them for the past four-five months. Since they were mostly poor and in dire financial straits, the families claim that they consented to change their religion for monetary compensation.

http://www.abplive.in/india/2014/12/09/article451711.ece/Ration-card-money-promised-for-converting-to-Hinduism-families-accuse-Bajrang-Dal#.VIjad_mSynU

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=122001

[10]http://www.dinamani.com/india/2014/12/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/article2565153.ece

[11] http://timesofindia.indiatimes.com/india/Agra-conversions-rocks-Parliament/articleshow/45464405.cms

[12] தினகரன், ஆக்ராவில் மதமாற்றம் மாயாவதி எதிர்ப்பு, சென்னை, 00.04.11, 12-11-2014.

[13] CPI-M leader and Rajya Sabha MP Sitaram Yechury said the re-conversions were a ploy to vitiate the environ¬ment before Christmas.“This is clearly a ploy, a scheme, being worked out before Christmas. This is the dirtiest of vote-bank politics being played by RSS and the BJP.

http://kashmirreader.com/forced-conversion-oppn-accuses-centre-of-hindutva-agenda-28105

[14] http://www.abplive.in/india/2014/12/10/article452586.ece/FIR-against-forced-religious-conversion#.VIjqx_mSynU

[15] http://www.deccanchronicle.com/141210/nation-current-affairs/article/fir-against-forced-religious-conversion-agra

[16] Hemendra Chaturvedi, Agra: Muslim families deny changing faith, slam Hindu groups, Hindustan Times  Agra, December 09, 2014; First Published: 20:12 IST(9/12/2014) | Last Updated: 10:10 IST(10/12/2014)

[17] http://www.hindustantimes.com/india-news/day-after-homecoming-muslim-families-deny-embracing-hinduism/article1-1294852.aspx

[18] http://www.ndtv.com/article/india/protests-in-parliament-against-mass-conversions-united-opposition-scores-debate-632030