Archive for the ‘அறுப்பு’ category

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

ஜூலை 14, 2018

 

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்குஇந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

FMG - India demonstrates-13

செக்யூலரிஸ இந்தியாவில், பெண்கள் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்றுவது: வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் உடலோடு ஒட்டிய பகுதியை மத நடவடிக்கை என்ற பேரில் ஏன் வெட்டி எடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகள் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கும் போக்ஸா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது[1]. இருப்பினும் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. பெண் சுன்னத் நட்டந்து கொண்டுதான்ன் இருக்கிறது. மேலும் தாவூதி போராஹ் வகுப்பினர் மத்தியில் இருந்த இதுபோன்ற பழக்கம் ஏற்கெனவே குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், சுன்னிகள் இதை ஏற்றுக் கொள்ள வாட்டார்கள். இதையடுத்து ஒருவர் பெண்ணுறுப்பு சிதைப்பினை செய்துகொள்ள விரும்பவில்லை எனில், அதை செய்து கொள்ளும்படி யாரும் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்[3]. அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட் ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா?[4] எனவே, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சுகாதாரத்துறை, சமூகநீதித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும், மஹாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய நான்கு மாநில அரசுகளும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது[5].FMG - India demonstrates-12

பெண்ணுறுப்பு அறுப்புபெண்கள் உன்னத்[6]: “ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன்” [Female Genital Mutilation] என்ற கொடுமைக்கு எதிரான நாளாக பிப்ரவரி-6 -ம் தேதியை 2016, ஐ.நா அறிவித்துள்ளது. ஆனால், பெண்ணிய போராளிகள் எல்லாம் கண்டுகொள்ளவில்லை போலும். ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன் என்றால் புரியாதவர்களுக்கு தமிழில் விளக்கம் ‘பெண் உறுப்பு சிதைவு’.  படிக்கும் பொழுதே பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த கொடிய செயல், ஆப்ரிக்க நாடுகளில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இன்று வரை வலுக்கட்டாயமாக நடத்துப்பட்டுவரும் ஒரு புனித சடங்கு என்றால் நம்ப சங்கடமாகத்தான் இருக்கும்[7]. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, இன்றும் மம்மி களாக பிரமிடுகளுக்குள் இருக்கும் பெண்களுக்கும் இந்த கொடுமை நடந்தேறியுள்ளது. ஆப்ரிக்கா நாடுகளான சோமாலியா, சூடான், எகிப்து, உகாண்டா, கானா, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் பெண்களில், எழுபது சதவீதத்திற்கும் மேல் இப்படி பெண் உறுப்பு சிதைவுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தகவல். அதன் எதிரொலியாகத்தான் ஐ.நா சபை, பெண் உறுப்பு சிதைவிற்கு எதிரான நாளாக பிப்ரவரி-6ம் தேதியை அறிவித்துள்ளதுணப்படியென்றால், 06-02-2016, 06-02-2017 மற்றும் 06-02-2018 நாட்கள் எல்லாம் அமோகமாக கொண்டாடப் பட்டிருக்க வேண்டுமே, ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லையே? கிறிஸ்துவ சமயத்தின் துவக்கத்திற்கு முன்பே, இஸ்லாமிய மதம் ஆப்ரிக்காவை அடைவதற்கு பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது, என்று சையது அபுதாஹிர் எடுத்துக் காட்டினார்.

FMG - India demonstrates-11
பெண் சுன்னத் ஏன் செய்யப்படுகிறது?: பெண் உறுப்பு சிதைவு என்று இன்றைய உலகம் இதற்கு பெயர் சூட்டி இருந்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட இந்த சடங்கிற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் பெண் சுன்னத். அதாவது இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு சுன்னத் என்பது கட்டாயம். அதேபோல் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு பெயர்தான் பெண் சுன்னத். இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சுன்னத் உள்ளதென அதன் மதகுருமார்கள் அறிவித்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக இந்த வழக்கத்தை பின்பற்றுவதும் அதே இஸ்லாமிய சமூகம்தான். “பெண்கள் சைத்தானின் வடிவங்கள் என்று புனித நுால்கள் சொல்லியுள்ளது. அவர்களுக்கு பாலுணர்வு மட்டுமே இருக்கும். அந்த பாலுணர்வை கட்டுப்படுத்தி அவர்களை ஒழுக்கமான பெண்ணாக இருக்கச் செய்யத்தான் இந்த செயல்” என்று அர்த்தமற்ற விளக்கத்தை அதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள்.

FMG - India demonstrates-10
எப்பொழுது செய்யப்படும்?: இந்த பெண் உறுப்பு சிதைவு என்பதை பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது இதற்கு எழுதப்படாத விதி. அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதிற்குள் இந்த சடங்கை முடித்துவிட வேண்டும். ஓடி விளையாடும் சிறுமியை பிடித்துவந்து வலுக்கட்டாயமாக இந்த செயலை அரகேற்றியபின் தான் அவள் துாய்மையடைந்துவிட்டாள் என்று அந்த சிறுமியின் தாய் பெருமை பேசுவார். பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் பெண்ணிற்கான உணர்ச்சி கூறுகள். பெண்ணின் பாலுணர்வு ரீதியான உந்துதலுக்கு இதுதான் முதல் காரணமாக இருக்கின்றது. இதை அறுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும் என்ற கருத்துதான் இந்த வன்கொடுமைக்கு அடிப்படையாக இருந்துவருகிறது. ஆணுக்கு இப்படி, பெண்ணுக்கு அப்படி எப்படி என்பது எப்படி என்று தெரியவில்லை. இதெல்லாம் உண்மையா-பொய்யா ஏன்ற சோதித்துப் பார்த்தனரா?

FMG - India demonstrates-14
சடங்கு எப்படி செய்யப்படுகிறது?: அறுப்பது என்றால் முறையாக மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து அல்ல; விளையாடி கொண்டிருக்கும் சிறுமியை சாப்பிட அழைப்பது போல் “இங்கே வா” என்று அழைத்து, நடக்கப் போகும் கொடுமையை அந்த சிறுமி பார்க்க கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் கண்ணை பொத்தி, அவளை இருட்டு உலகிற்கு கொண்டு சென்று, அதன் பின் சிறுமியின் கதறலோடு இந்த பாதக செயலை செய்கின்றனர். சாதாரணமாக சவரம் செய்யும் பிளேடுதான் இந்த ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படுகிறது. க்ளிட்டோரியஸ் என்ற மேல் தோலை, ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசிவிடுவது இதன் முதல் படி. அதற்கு அடுத்தது “லேபியா பிளாஸ்டர்” என்று சொல்லப்படும் பெண்ணுறுப்பு உதட்டுப் பகுதியை அறுத்து எடுத்து, அதன் பின் “வெஜைனா பிளாஸ்டி” என்று சொல்லபடும் பெண்ணுறுப்பை சிறு துளை மட்டும் விட்டு, துணி தைக்கும் நூலால் தைப்பது என்ற மூன்று நிலைகளில் இது செய்யப்படுகிறது. அறுப்பது முதல் தைப்பது வரை இத்தனை விஷயங்களையும் அரங்கேற்றுவது ஒரு மருத்துவர் அல்ல; அந்த ஊரில் இதற்கென ‘வாழ்ந்துகொண்டிருக்கும்’ பெரிசுகள் அல்லது அந்த சிறுமியின் தாய். இந்த சடங்கை சங்கடம் இல்லாமல் செய்து முடிக்கின்றார்கள்.

FMG - India demonstrates-9
40 நாட்களுக்குப் பிறகு தூய்மை வரும்: அனைத்தும் முடிந்த பின், அந்த பெண்ணின் கால்களை அகட்ட முடியாத அளவிற்கு கட்டிப் படுக்க வைத்துவிடுவார்கள். நாற்பது நாட்கள் கழித்தால்தான் அந்த புண் ஆறும் என்பது அவர்கள் கணக்கு. புனித சடங்கு முடித்த உற்சாகத்தில், வழிந்தோடிய குருதி படிவை தண்ணீரால் கழுவி விட்டு, அந்த வீட்டில் சடங்கு விருந்து நடத்தும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கிராமங்களில் நடந்து வருகின்றன. இந்த பாதக செயலை செய்தால்தான், அந்த பெண்ணின் உடலில் உள்ள துர்நாற்றம் போய் அவளுடைய மேனி அழகு பெற்று, திருமணம் செய்யும் பொழுது பாலுணர்வு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். தைக்கப்பட்ட நுாலை அந்த பெண் திருமணம் செய்த பின் அவளின் கணவன் அறுத்தால்தான் அந்த பெண்ணின் கன்னித்தன்மைக்கு தரப்படும் சான்று. ஆனால் சில நாடுகளில் க்ளிட்டோரியஸை அறுப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.

FMG - India demonstrates-8
செக்யூலரிஸ இந்தியாவில் இதை ஏன் மத சடங்காக கருத வேண்டும்?: மதச்சடங்கு என்ற பெயரில் காலங்காலங்கமாக இந்த கொடுமை நடந்தேறி வந்தாலும், இது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் உலக அளவில் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் எகி்ப்தில் இந்த கொடூர சடங்கிற்கு ஆளான பெண் மரணம் அடைந்து, அது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்க, அதன் பின் அந்த நாட்டில் இந்த சடங்கிற்கு தடை செய்யப்பட்டது. ஆப்ரிக்கா நாடான உகாண்டாவில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் “இது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டும். அந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலான பெண்களுக்கு பெண் உறுப்பு சிதைவு நடந்தேறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கும் இதற்கு தடை வந்து விட்டது.

FMG - India demonstrates-16
.நா ஒப்புக்கொண்ட உண்மை: ஐ.நா. சபை பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில், ஆப்ரிக்க நாடுகளுக்கு பல முறை அழுத்தம் கொடுத்துவிட்டன. சமூக மாற்றமும், பெண் கல்வியும் இந்த முறைக்கு எதிரான மனோபாவங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பழங்குடி மக்களிடையே இருக்கும் இந்த பழக்கத்தை இதுவரை முற்றிலும் தடைசெய்யமுடியவில்லை என்று ஐ.நா சபையே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பெண் சிதைவுக்கு உட்பட்ட பெண்களை வைத்தே பல பிரச்சாரங்களை தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுவருகின்றன. இந்த பெண்சிதைவுக்கு ஆளானவர்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமாக இருப்பார்கள் என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. நாடாளும் சக்தியாக பெண்கள் உருவாகி வரும் இந்தநாளில், இன்றும் எங்கோ ஒரு சிறுமிக்கு பெண் உறுப்பு சிதைவு நடைபெற்றுவருவது வேதனைக்குரிய முரண். ஆனால், பெரியார் பிறந்த மண்ணிலேயே, பெரியாரிஸ்டுகள் கூட பொத்திக் கொண்டு இருந்தது முரணாக இல்லை போலும்!

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-15

[1] The Week, Female Circumcision: ‘Should religious purity involve cutting a body part?’, Mini P Thomas By Mini P Thomas July 13, 2018 17:16 IST

[2] https://www.theweek.in/leisure/society/2018/07/13/female-genital-mutilation-should-religious-purity-involve-cutting-a-body-part.html

[3] https://tamil.news18.com/news/national/why-should-the-bodily-integrity-of-a-woman-be-subject-to-some-external-authority-sc-33235.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, பெண் உறுப்பு சிதைப்பு சடங்கிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விவீடியோ, By : Oneindia Tamil Video Team Published : July 10, 2018, 11:39

[5] https://tamil.oneindia.com/videos/no-one-can-violate-the-integrity-and-the-bodily-privacy-of-a-woman-323004.html

[6] விகடன், உயிரைக்குடிக்கும் பெண் உறுப்பு சிதைவு சடங்குஇன்றும் தொடரும் கொடூர வழக்கம்!, – அ.சையது அபுதாஹிர்,  Posted Date : 13:59 (06/02/2016) Last updated : 15:14 (06/02/2016).

[7] https://www.vikatan.com/news/coverstory/58646-anti-female-genital-mutilation-day.html

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

ஜூலை 13, 2018

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

FMG - India demonstrates

இஸ்லாமிய பெண்கள் ஏன் தங்கள் உரிமைகளுக்காக வழக்குகள் போடுகிறார்கள்?: இஸ்லாமிய நடவடிக்கைகளான முத்தலாக், ஹலாலா, பலதாரமணம் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இப்போது, பெண்குழந்தைகளின் பெண்உறுப்பு அறுவைச் சிகிச்சையும் [Female Genital Mutilatatiom – FGM] விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது[1]. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தலாக் சொல்ல வேண்டும் என்று உள்ள விதியை மாற்றி, ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுக்கும் வழக்கம் இருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கு உரிய நிக்காஹ் ஹலாலா என்ற நடைமுறையையும், பாலிகாமி என்ற பலதார மண நடைமுறையையும் வினா எழுப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

FMG - India demonstrates-2

முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, பிஜேபி இஸ்லாத்தை எதிர்க்கிறது: உண்மையில் இஸ்லாம் பெண்கள் தான், இவ்வழக்குகளை போட்டது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத / தடை செய்யப்பட்ட வழக்கங்கள் இந்தியாவில் தொடவது, முஸ்லிம் பெண்களை அடக்கி ஆள்வதற்குத் தான் என்பதால், இப்பொழுது, அப்பெண்கள் வெளியில் வந்து வழக்கு தொடர்ந்துள்ளார்கள். மேலும் இக்காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் பெண்கள் நிலை எவ்வாறுள்ளது என்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த நடைமுறை பழக்க வழக்கங்களில் மனித உரிமை, பெண்ணுரிமை என்ற பேரில் பாஜக அரசு பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது, என்று “நக்கீரன்” கூறுகிறது[2].

FMG - India demonstrates-3

கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன: ஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில்  குறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சமீப காலத்தில் இது செய்தால் பெண்களை அதிக நேரத்திற்கு அனுபவிக்கலாம் என்ற எண்ணத்திலும் வலுக்கட்டாயமாக செய்யப்படுகிறது.

FMG - India demonstrates-4

கட்னா, காஃப்த் முதலிய பழக்கங்கள்:  இஸ்லாம் மார்க்கத்தில் ஆண் குழந்தைக்கு சுன்னத் எனும் சிறு ஆபரேசன் செய்யப்படுவது வழக்கம். ஆணுறுப்பின் முன்தோலை வெட்டி நீக்குவதைத்தான் இப்படி சொல்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித் தொற்று தவிர்க்கப்படும் என்றும், எய்ட்ஸ் தடுக்கப்படும் என்றும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளுக்கும் இதேபோன்று பெண்ணுறுப்பில் கிளிட்டோரியஸ் எனப்படும் பகுதியை வெட்டி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கட்னா, காஃப்த் என்று பெயர். இதுவும்கூட பெண்ணுறுப்பு சுத்தத்திற்காகவே செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்குழந்தைகளின் பெண்உறுப்புகளை சிதைப்பதை எதிர்த்து சுனிதா திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திரா ஜெய்சிங்கும், மனுவை எதிர்த்து மத சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சார்பில் அபிசேக் சிங்வியும் வாதாடினார்கள்.

FMG - India demonstrates-5
காங்கிரஸ் வழக்கறிஞர் சிக்வியின் வாதம்: சிங்வி தனது வாதத்தில், இஸ்லாமிய பெண்குழந்தைகளின் பெண் உறுப்பில் உள்ள மிகச்சிறிய பகுதியை வெட்டி எடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது என்றார்[3]. “கட்னா” போன்ற சடங்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது என்றும் வாதிட்டார்[4]. உண்மையில் அது ஆண்களுக்கு செய்யப்படுவது. இருப்பினும் இப்படி வாதிட்டு, வழக்கை தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டார்[5]. இந்த குழுமத்திற்காக, இப்படி சொன்னேன், இவர்களுக்கு இப்படி சொன்னேன் என்பதை விட, அல்லது சிங்வி ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்றெல்லாம் வாதிடுவதை விட, பொது மக்களுக்கு காங்கிரஸ் தன்னுடைய நிலைமை என்ன என்று எடுத்துக் கூறலாம்[6]. மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆண்குழந்தைகளுக்கு செய்யப்படும் சுன்னத் எனப்படும் அறுவைச் சிகிச்சை எய்ட்ஸ் கிருமி தாக்குதலில் இருந்த பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண்குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான சுதந்திரமும் உரிமையும்கூட பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதுதான் என்றார்.

FMG - India demonstrates-6

இந்தியாவில் இதைப்பற்றிய நிலைமை: இந்தியாவில், இது பின்பற்றப்பட்டு வந்தாலும், இதுவரை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், பெண்ணுறுப்புச் சிதைப்பிற்கு முழுமையான தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், ஊடகங்களில் செய்திகல் அவர ஆரம்பித்துள்ளன. அதன்படி 2012-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் (Prevention of children from sexual offences act 2012) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என மனுதாரரின் சார்பில் குறிப்பிடப்பட்டது[7]. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஐ.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ‘பெண்ணுறுப்பு சிதைப்பு’ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-7

[1] நக்கீரன், பெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்?, ஆதனூர் சோழன், Published on 10/07/2018 (18:34) | Edited on 10/07/2018 (18:42)

[2] https://nakkheeran.in/special-articles/special-article/why-does-religion-allows-touch-female-genital-organ-sunnath-islam

[3] Senior advocate A.M. Singhvi, appearing for a Muslim group, said the matter be referred to a constitution bench as it pertained to the issue of essential practice of the religion which needed to be examined.

[4] The Week, Genital mutilation violates bodily ‘integrity’ of girl child: SC, PTI | New Delhi July 09, 2018 22:16 IST

[5] Singhvi, on the other hand, referred to the practice of male circumcision (khatna) in Islam and said that it has been allowed in all countries and this is the accepted religious practice and sought adjournment of the hearing.

https://www.theweek.in/news/india/2018/07/09/genital-mutilation-violates-bodily-integrity-of-girl-child-sc.html

[6] India Today, Viral Test: Does Congress support female genital mutilation, Anand PatelNikhil Dawar , New Delhi, July 12, 2018; UPDATED: July 13, 2018 14:07 IST

https://www.indiatoday.in/fact-check/story/viral-test-congress-singhvi-female-genital-mutilation-1284346-2018-07-12

[7] நியூஸ்18.ட்தமிழ், பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா? உச்ச நீதிமன்றம் கேள்வி, news18 , Updated: July 10, 2018, 3:07 PM IST.

அல்லாவை மகிழ்விக்கவே பலி கொடுத்தேன் – ரம்ஜான் போது, நான்கு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்த 26 வயது தந்தை!

ஜூன் 12, 2018

அல்லாவை மகிழ்விக்கவே பலி கொடுத்தேன் – ரம்ஜான் போது, நான்கு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்த 26 வயது தந்தை!

Ramzan sacrifice- Enadu Tamil- 12-06-2018

செக்யூலரிஸ இந்தியாவில், மதபண்டிகைக்களுக்கு விடுமுறைகளும், அரசியலும்: முன்பெல்லாம், இந்தியர்களுக்கு, முகமதிய மற்றும் கிருத்துவப் பண்டிகைகளைப் பற்றியெல்லாம் அதிகமாக தெரியாது. ஏதோ விடுமுறைக் கொடுக்கிறார்கள், வீட்டில், விடுமுறையை அமைதியாக, சுகமாகக் கழிக்கலாம் என்று இருப்பர். பிறகு தான் அவர்களுக்கு, கொண்டாட்டம் மற்றும் துக்கம் அனுஷ்டிக்கும் நாட்கள் பற்றி தெரிய வந்தது. முன்பெல்லாம் சிலர், “குட் பிரைடே”விற்கு வாழ்த்து சொல்வார்கள், கிருத்துவர்களும் “தேங்க் யூ” என்பார்கள். ஆனால், பிறகு தான் தெரிந்தது, “குட் பிரைடே,” “நல்ல வெள்ளி” அல்ல, ஆனால், கெட்ட வெள்ளி, அதாவது, அன்று தான், ஏசு சிலுவையில் அறைப்பட்டு, இறந்த நாள்.. பிறகு, அது வேறுவிதமாகியது. இப்பொழுது 12% முகமதிய மற்றும் 2% கிருத்துவப் பண்டிகைகள், மற்ற 88% / 86% மக்கள் மீது திணிக்கப்பட்டுகின்றன. விளம்பரங்கள் வேறு, தொந்தரவு கொடுக்கும் முறையில் உள்ளன. ரம்ஜானுக்காக, காஷ்மீரத்தில் “சண்டை நிறுத்தம்” அறிவித்தாலும், ஜிஜாதிகள் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் ரம்ஜான் கொண்டாடவில்லை போலும். அதாவது, இது அரசியலாகத்தான் இருக்கிறது அதேபோலத்தான், ஒரு தந்தை, தனது நான்கு வயது குழந்தையை, அல்லாவுக்கு பலி கொடுத்தான் என்ற செய்தி வந்துள்ளது.

Qureshi sacrificed Riswana

காணாமல் போன நான்ஹ்கு வயது குழந்தை கழுத்தறுப் பட்டு இறந்து கிடந்தது: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் நவாப் அலி. இவருக்கு மனைவி ஷபானா, மகள்கள் ரிஸ்வானா (4) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்[1]. வியாழக்கிழமை 07-06-2018 அன்று எல்லோரும் தூங்கினர். 08-06-2018, வெள்ளிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, ரிஸ்வானாவைக் காணவில்லை.  இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை வேளையில் குழந்தையை காணவில்லை என அலியின் மனைவி ஷபானா தேடியுள்ளார், இன்னொரு இணைதள செய்தி [புதியதலைமுறை] கூறுகிறது. அப்போது தனது மகள் வேறொரு அறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தேடிபார்த்த போது, வீட்டின் தரை தளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள்[2]. சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் என்று கூறியதாக குறிப்பிடுகிறது[3]. சந்தேகப் பட்டதால், போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தந்தை நவாப் அலியை மீது சந்தேகம் எழ, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Father sacrificed daughter 06-06-2018

நரபலி கொடுத்த முகமதியன், தன்னை சாத்தான் / பேய் பிடித்துக் கொண்டது என்றது: குரேஷி சாத்தான் / பேய் தன்னுடலில் புகுந்து கொண்டது என்றான்[4]. இந்தியா டுடே குறிப்பிடுவதாவது[5], “சாத்தான் தான் என்னுடல் புகுந்து அவ்வாறு செய்ய வைத்துள்ளது. இதனை நம்புவதனால், அவன் செய்யவில்லை, சாத்ட்தான் செய்தது என்று சொல்வது போலுள்ளது…….”. மேலும், இது பக்ரீதின் போது, ஆட்டை பலி கொடுப்பது போலுள்ளது, ஆனால், இவனோ தனது மகளையே பலி கொடுத்துள்ளான்.[6] “நான் ஒரு நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம். என்னுடைய வாழ்வில், நான் என் மகளை உயிரைவிட மேலாக பிரியம் கொண்டிருந்தேன். இஸ்லாத்தில், தனக்குப் பிரியமானதை அல்லாவுக்குக் கொடுக்க வேண்டும் என்றுள்ளது. அதன்படியே, நான் செய்தேன். பலநாட்கள் பாட்டியின் வீட்டில் இருந்து வியாழக்கிழமை தான் வந்தாள். அவளை சந்தைக்குக்கூட்டிச் சென்று, அவளுக்கு இனிப்புகள், பழங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். பிறகு, கீழே கூட்டிச் சென்று, கலிமா சொல்லி, அவளது கழுத்தை அறுத்துக் கொன்றேன். மாடிக்கு வந்து படுத்துத் தூங்கினேன்,” என்று போலீஸாரிடன் சொன்னான்[7]. வெள்ளிக்கிழமை, 08-06-2018 அன்று போஸ்ட்மார்டம் செய்யப்பட்டுபுதைக்கப் பட்டாள்:[8] இது “பிடிஐ” செய்தியானதால், ஆங்கிலத்தில் ஒர்ரே மாதிரியாக செய்த் வெளியிடப்பட்டது[9].

Qureshi sacrificed Riswana-English-TOI

அல்லாவைத் திருப்தி படுத்தவே பலி கொடுத்ததை ஒப்புக் கொண்ட நம்பிக்கையான தந்தை: முதலில், சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். பிறகு முன்னுக்கு முறணாக பேசியதால், மனோதத்துவ முறையிலும், விசாரணை செய்துள்ளனர். விசாரணை நடைபெறும் வரை ஏதும் தெரியாதவராக இருந்த குரேஷி, சற்று அழுத்தமாக கேட்டதும் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்[10]. தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடவுளிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார்[11].  முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரேஷியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கடவுள்தான் எனக்கு பிடித்தமான ஒன்றை பலியிட வேண்டும், அப்போதுதான் நன்மை செய்வேன் என்று கூறினாராம்… அதனால், கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளின் கழுத்தை அறுத்து கொன்று பலியிட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Ramzan sacrifice- riswana- 06-06-2018

ரிஸ்வானா பலி பிறகு தமிழ் ஊடகங்கள் இவ்வாறு குறிப்பிட்டன: ரம்ஜான் மாதத்தில் அல்லாஹுவின் ஆசி தனக்கு கூடுதலாக கிடைக்க வேண்டும் என பிரார்தனை செய்து தனது நான்கு வயது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார் நவாப் அலி[12]. சம்பவ தினத்தன்று இரவு தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை ரிஸ்வானாவை அவரது தந்தை அலி தூக்கிக் கொண்டுசென்று வேறொரு அறையில் வைத்து பிரார்த்தனை செய்துள்ளார். இதையடுத்து, கூர்மையான கத்தி கொண்டு தனது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார். குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அலி தனது மனைவியுடன் சென்று உறங்கியுள்ளார். விசாரணையில், தனது குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாவின் ஆசி பெறுவதற்காக தன்னுடைய சொந்த மகளை கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் ஜோத்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2016ல் இதேபோல, ஒரு பெண் நான்கு வயது குழந்தையைக் கொன்று, “அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ,” என்று நீதிமன்றத்தில் சொன்னது ஞாபகத்தில் வருகிறது..

Four years baby sacrificed- in Russia, 2016

2016ல் இதேபோல, நான்கு வயது குழந்தை பலியிட்டது: நான்கு வயது குழந்தையை அல்லாஹ் கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையுடன் நடமாடிய ஆயா தெரிவித்துள்ளார்[13]. உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா (39) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து தலையை கத்தியால் துண்டாக வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார். மெட்ரோ நிலையத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் நின்று கொண்டு நான் ஒரு தீவிரவாதி என்று அவர் கத்தினார். இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குழந்தையை கொலை செய்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார்[14]. முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில், அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றார். போபோகுலோவா தனக்கு மனநல பாதிப்பு இருப்பதை மறைத்து அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

© வேதபிரகாஷ்

12-06-2018

 

Ramzan sacrifice- Father and daughter, 06-06-2018

[1] ஈநாடு.தமிழ், அல்லாவின் ஆசிவேண்டி 4 வயது மகளை பலி கொடுத்த தந்தை கைது, Published 10-Jun-2018 15:32 IST

[2] புதியதலைமுறை, கடவுளை மகிழ்விக்க குழந்தையை கொன்ற தந்தை!, puthiyathalaimurai.com ராம் பிரசாத், Published : 10 Jun, 2018 01:24 pm

[3] http://www.puthiyathalaimurai.com/news/india/46666-rajasthan-man-arrested-for-sacrificing-daughter.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

[4] Siasat.com, Jodhpur: Father sacrifice 4-year-old daughter to ‘appease Allah during Ramzan’, arrested, June 10, 2018, 11:21 AM IST.

[5] India Today, Man slits 4-year-old daughter’s throat as sacrifice to Allah, Rohit Parihar, Jaipur, June 10, 2018UPDATED: June 10, 2018 03:59 IST

[6] https://www.indiatoday.in/crime/story/jodhpur-rajasthan-father-slits-daughter-throat-ramzan-human-sacrifice-1256365-2018-06-10

[7] https://www.siasat.com/news/jodhpur-father-sacrifice-4-year-old-daughter-appease-allah-during-ramzan-arrested-1367122/

[8] NDTV, Rajasthan Man Allegedly Kills Daughter To “Appease Allah”, Goes Off To Sleep, All India | Press Trust of India | Updated: June 10, 2018 10:34 IST.

[9] https://www.ndtv.com/india-news/rajasthan-man-arrested-for-sacrificing-daughter-for-ramzan-police-1865056

[10] நியூஸ்.டிஎம், கடவுளுக்காக மகளை பலியிட்டேன்கொடூர தந்தையின் பகீர் வாக்குமூலம், Ishwarya | Last Modified : 11 Jun, 2018 04:42 pm

[11] http://www.newstm.in/news/national/38823-rajasthan-jodhpur-man-killed-4-year-old-daughter.html

[12] http://tamil.eenaduindia.com/Crime/CrimeNational/2018/06/10153211/man-arrested-for-sacrificing-daughter-to-appease-allah.vpf

[13] தமிழ்.ஒன்.இந்தியா, ரஷ்ய குழந்தையை அல்லாஹ் கொலை செய்ய உத்தரவிட்டார்: ஆயா பேட்டி, Posted By: Siva Published: Thursday, March 3, 2016, 14:47 IST.

[14] https://tamil.oneindia.com/news/international/allah-ordered-kill-the-child-says-babysitter-248198.html

 

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

ஜூலை 11, 2013

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.full

நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[1]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[2].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[3]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[4]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[5].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

ஒரு பக்கம் கைது,  மறுபக்கம்  3 பேருக்கு ஜாமின்: மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் “போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது[6]. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.  இந்தாண்டு மார்ச் 27ல், “போலீஸ்’ பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார்[7]. தென்காசியில் வடக்கு மவுண்ட் ரோட்டில் வசித்து வந்த முகமது அனீபா மீது இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் அவரது சகோதரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளிலும் முகமது அனிபா முக்கிய குற்றவாளியாவார்[8].

Mohammed Haneefa arrested - Advani murder plot

குற்றவாளிகள் விஷயத்தில் அரசியல் விளையாட்டு கூடாது: அத்வானியைக் கொண்டு வைத்து கொலைச்செய்ய முயன்றான் என்று காங்கிரஸார் அல்லது நாத்திகக் கட்சியினர் திமுக முதலியன சந்தோஷமாக இருந்து விடமுடியாது. குண்டுவெடிப்பில் தன் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அது திராவிட, தமிழ்சித்தாந்தங்களிடம் ஊறியிருந்ததால் இன்றளவும் காங்கிரஸாரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட சித்தாந்திகளுக்கும், காங்கிரஸ்காரர்கள்ளுக்கும் மோதல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதேபோல இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது, சீக்கிய தீவிரவாதம் தலைத்தூக்கியது. சீக்கிய படுகொலைகளுக்குப் பின்னர் சீக்கியர் காங்கிரஸின் நிரந்தர எதிரிக்கள் ஆனார்கள். இப்பொழுது, ராகுல் காந்தி சரப்ஜித் சிங்கின் அந்திமக் கிரியைகளில் பங்கு கொண்டதால் மட்டும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளை மறந்துவிடப் போவதில்லை. இதற்காக பிஜேபிகாரர்களுகும் சந்தோஷப்பட்ட முடியாது.

November 2011 - BJP demonstrated against terrorism

தொடர்ந்து குற்றவாளிகள் குற்றங்களை செய்வது ஏன்?: குற்றத்தைப் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் (habitual offenders / regular charge-sheeters / involved in multiple offences) இத்தகைய செயல்களை சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து கொலைகள் செய்து வருபவன்  சாவதற்கு தயாராக இருக்கிறான் என்பது தெரிகிறது. அதிலும் முஸ்லிம் என்பதால் ஜிஹாதித்துவத்தில் ஊறியப்பிறகு, தியாகி விட்டதால் இனி அதே மனநிலையில் அழிவுகளில் தான் அவன் ஈடுபடுவான். அத்தகைய போக்கு இவர்களில் காணப்படுகிறது. இதனால், மேன்மேலும் போலீஸார் வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பயனும் இல்லை. மேலும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்னர் என்றறிந்தும் மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது மற்றவர்களுக்குக் குற்றவாளிகளாக, கிரிமினல்களாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் “ஜியாதி” மற்றும் “ஷஹீத்” என்ற நிலையில் வைத்து விட்டதால் அமைதியாக இருக்கிறார்கள். இது இந்திராகாந்தி-ராஜிவ்காந்தி கொலையாளிகளை வீரர்களாகக் கருதி வழிபடுவதைப் போன்றதே ஆகும். மாறாக, நீதிமன்ற மறுப்பு, போலீஸ் தடைகளை மீறி அத்தகைய கிரிமினல் குற்றவாளிகளை பத்தாண்டு சிறைவாசம் முடிந்தால் விடுவிக்கவேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்துவதையும் காணலாம். இவையெல்லாம் பத்து-பதினைந்து  நாட்களில் நடக்கின்றன.

நடக்கும் நிகழ்சிகள் காட்டுவது என்ன?: பொதுமக்கள், தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் படித்து மரத்து போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புகள், குரூரக் கொலைகளைக் கூட அடிக்கடிக்காட்டி, பிரபலப்படுத்தி, உணர்ச்சியற்றத் தன்மையினை உருவாக்கி விட்டனர்.

01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[9]

04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[10].

07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.

08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[11].

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.

குற்றவாளிகளின் மனோதத்துவ அலசல்: சுருக்கமாக, கீழ்கண்ட நிலைகளை இக்குற்றவாளிகளின் போக்கில் காணலாம்:

  • குற்றம் செய்ய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது – தூண்டுதல்
  • தொடர்ந்து அதே குற்றத்தை செய்வது – குற்றஞ்செய்ய மனநிலை ஸ்திரமான நிலை
  • சட்டங்களை செயல்படுத்துவர்களைத் தாக்குதல்
  • நீதிமன்றத்திலேயே, நீதிபதிக்கு முன்பாக சட்டமீறல் காரியங்களை செய்வது.
  • தற்கொலை செய்துகொள்ள முயல்வது அல்லது அம்மாதிரி நடிப்பது.
  • “காவலில் இறப்பு” என்ற நிலை உருவாக அழுத்தத்தை ஏற்படுத்துவது.
  • இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து சட்டரீதியில் ஆதரவு, பாதுகாப்புக் கொடுப்பது.
  • பொய்யான வழக்குகள் போட்டு திசைத் திருப்புவது[12].
  • இக்குற்றவாளிகளின் குடும்பங்களை கவனித்துக் கொள்வது, ஆதரிப்பது, உதவுவது.

ஆகவே, இவையெல்லாம் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே ஆண்டில் தீர்மானித்து செயல்படுத்தும் காரியமல்ல. அவ்வாறு இவ்வுலகத்தில் எந்த மனிதனையும் தயார் படுத்து விடமுடியாது. ஏனெனில், எந்த மனிதனும் இறப்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தாம் எவனுக்கும் இருக்கும் ஆனால், மாறாக இறக்கத் தயாராகிரான், தயாராகி விட்டான் என்றால் அது இப்பொழுது காணப்படுகின்ற ஜிஹாதித்துவத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

© 11-07-2013


[9] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் –

ஜூலை 02, 2013  at   10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore

வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[10] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

http://dinamani.com/tamilnadu/2013/07/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1668100.ece