Archive for the ‘அமெரிக்க இஸ்லாம்’ category

அமெரிக்க ஓரினச்சேர்க்கை விடுதியில் துப்பாக்கி சூடு, 53 பேர் கொலை, சுமார் 60ற்கும் மேலானவர் காயம்: சுட்ட உமர் மீர் சித்திக் மாடீன் கொலையுண்டான்!

ஜூன் 13, 2016

அமெரிக்க ஓரினச்சேர்க்கை விடுதியில் துப்பாக்கி சூடு, 53 பேர் கொலை, சுமார் 60ற்கும் மேலானவர் காயம்: சுட்ட உமர் மீர் சித்திக் மாடீன் கொலையுண்டான்!

Omar maateen, the killer 12-06-2016

ஆர்லான்டோ நகர் துப்பாக்கிசூடு: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது[1]. விடுதியில் 12-06-2016  இரவு அன்று விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்விடுதியில், துப்பாக்கியுடன் புகுந்த நபர், கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; தகவலறிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரின் பெயர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஓமர் எஸ் மடீன் [Omar Mir Seddique Mateen] எனவும் அவன் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவனாக இருப்பான் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது, பயங்கரவாத தாக்குதலா என, போலீசார் விசாரிக்கின்றனர்[2].

Omar Mateen photos

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் – ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதல்:: அமெரிக்காவில், பொது இடங்களில், எந்த காரணமும் இன்றி, துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எல்லா இடங்களிலும் நடப்பதால், இது ஏதோ சாதாரண விசயம் போலாகி விட்டது. அமெரிக்க வரலாற்றில் துப்பாக்கிச்சூட்டின் மூலம் அதிக நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும், ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது நடந்துள்ள பெரிய தாக்குதலாகும். இதற்கு முன்னர் 2007-ஆம் ஆண்டு விர்ஜினியா பல்கலைகழகத்தில் 32 பேர் படுகொலை செய்யப்பட்டதே இது வரை அதிகபட்சமாக இருந்தது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி தாக்குதல்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது[3].

Christina [o singer - killer - 12-06-2016

பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி சுடப்பட்டு கொலை (12-06-2016): ஒரலாண்டோ பகுதியில், வெள்ளிக்கிழமை 12-06-2016 அன்று இரவு, இசை நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி, 22, சுட்டுக் கொல்லப்பட்டார்[4]. கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த ‘தி வாய்ஸ்’ இசைப் போட்டி நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஜிரிமி 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இளம் பாப் பாடகிகளில் ஒருவராக உருவெடுத்த அவர் 1106-2016 அன்று இரவு புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்தினார். அதன்பிறகு ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்மநபர் கிறிஸ்டினாவை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் மயங்கி சரிந்தார். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்[5].

pulse club shooting - location map -scene-2

அக்கொலை யை அடுத்து 24 மணி நேரத்தில் இந்த சம்பவம்: இந்த சம்பவம் நடந்து, 24 மணி நேரத்திற்குள், அதே பகுதியில், மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. ஒரலாண்டோவில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்படுகிறது. அங்கு, நேற்று அதிகாலை, வழக்கமான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், 2.02 அதிகாலையில் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டான். அப்போது, அந்த விடுதியில், 300க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்க, அவன் முயற்சித்தான்[6]. துப்பாக்கி சத்தம் கேட்டதும் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆரஞ்சு கௌன்டியின் செரிப் உடனே வந்து சமாதானம் பேச ஆரம்பித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவனுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவன், துப்பாக்கியை கீழே போடாமல், மீண்டும் மீண்டும் சுட்டான். இதையடுத்து, அந்த இடம், போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

Pulse club - 12-06-2016

அதிரடி போலீஸாரின் நடவடிக்கை: காலை 5 மணிக்கு “ஸ்வாட்”, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை வரவழைப்பப்பட்டு, அவசரகால ஏற்பாடுகள் விரைவாகச் செய்யப்பட்டன. கட்டடத்தை தகர்த்து உள்ளே சென்ற போலீசார், அவன் மீது தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், அந்த நபர், சுட்டுக் கொல்லப்பட்டான். மர்ம நபர் நபர் நடத்திய தாக்குதலில், 50 பேர் வரை உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர். 53க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ‘இரவு விடுதியில் இருந்தவர்கள், அந்த மர்ம நபர் சுட்டதால் இறந்தனரா அல்லது போலீசாருக்கும், அவனுக்கும் நடந்த மோதலில் இறந்தனரா என்ற தகவல், உறுதியாக தெரியவில்லை’ என்றனர்[7].

orlando-shooting-pulse-gay

ஒமர் மாட்டின் பயங்கரவாதியா?: சம்பவம் நடந்தபோது, துப்பாக்கி மட்டுமின்றி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாக, அந்த மர்ம நபர் கூறினான். இதனால், அவன் பயங்கரவாதியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது[8]. இதுகுறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்டவனின் பெயர், ஒமர் மேட்டின், 29, ஒரு அமெரிக்க முஸ்லிம் என தெரிய வந்துள்ளது[9]. புளோரிடா மாகாணத்தில், போர்ட் செயின்ட் லுாயிஸ் பகுதியில் வசித்து வந்துள்ளான். 2009ல் திருமணம் செய்து கொண்டு 2011ல் விவாகரத்து செய்தான். பிறகு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளான். அவனுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. முதல் மனைவி ஒமர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன், தன்னை அடிக்கடி அடித்துத் துன்புருத்துவான் என்றெல்லாம் கூறியுள்ளாள். ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவனுக்கு, ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என, கருதப்படுகிறது. எனினும், இது பயங்கரவாத தாக்குதலா என விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அதிபர் ஒபாமா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும், ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் வருத்தம் தெரிவித்துள்ளனர்[10]. 2013 மற்றும் 2014 ஆண்டுகளில், இவனது விசித்திரமான பேசுகளால், எப்.பி.ஐ மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது.

pulse club shooting - scene-1

துப்பாக்கிக்கு கட்டுப்பாடு- வன்முறை வளர்க்கும் சரித்திரம்-சித்தாந்தம்: அமெரிக்காவில் 2015ம் ஆண்டில் மட்டும் பொது இடங்களில் 372 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 475 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,870 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள, கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் சட்டத்தை, அதிபர் ஒபாமா கொண்டு வர முயன்றார். ஆனால் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்நாட்டு பார்லிமென்ட் இந்த சட்டத்தை முடக்கி வைத்துள்ளது[11]. ஆக வன்முறை வளர்க்க, எதிர்க்க, முடக்க, சித்தாந்தமாகி, கொலைகள் செய்ய என்று பல இயக்கங்கள், நிறுவனங்கள் என்றுள்ளன என்று தெரிகிறது. பிறகு, அப்பாவி மக்களை யார்தான் காப்பது? இப்படியே கொலையாகும் மக்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்?

pulse club shooting - scene- Orlando police

© வேதபிரகாஷ்

13-06-2016

[1] http://www.pulseorlandoclub.com/

[2] தினத்தந்தி, அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST; மாற்றம் செய்த நாள்:

ஞாயிறு, ஜூன் 12,2016, 9:29 PM IST.

[3] http://www.dailythanthi.com/News/World/2016/06/12212900/Florida-nightclub-shooting-50-killed-53-injured-in.vpf

[4] தமிழ்.இந்து, அமெரிக்க பாப் பாடகி சுட்டுக் கொலை, Published: June 12, 2016 11:08 ISTUpdated: June 12, 2016 11:09 IST.

[5]http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article8720771.ece

[6] தினகரன், அமெரிக்காவில் இரவு விடுதியில் பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி, Date: 2016-06-13@ 00:36:37

[7] மாலைமலர், அமெரிக்க இரவு விடுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு, பதிவு: ஜூன் 12, 2016 18:00.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/12180012/1018351/Pulse-Night-Club-mass-shootings-Approximately-20-dead.vpf

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223548

[10] தினமலர், அமெரிக்க விடுதியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி, ஜூன்.13, 2016.

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1541113

 

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!

திசெம்பர் 6, 2011

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!


ஷியா முஸ்லீம்கள் சன்னி முஸ்லீம்களா; தாக்கப் படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[3]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[4] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[5] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்[6].

மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : சுமார் 54 பேர்பலி: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் சிக்கி 54 பேர் பலியாயினர்[7]. நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள் அபு பசல் மசூதி [Abu Fazal shrine] யில் கூடி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இது தற்கொலை குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது[8]. 160 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இது ஒரு தற்கொலை மனித வெடிகுண்டாகும்[9]. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. இக்குண்டு ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்தது. காபூலில் குண்டு வெடித்ததும், இக்குண்டு வெடித்ததாம். குண்டு வெடித்ததும், ஒரு இளம் வயது பெண் சிறுவர்களின் பிணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு கூக்குரல் இட்டதாக பார்த்தவர்கள் சொல்கின்றனர்[10]. சால்வார்-கமீஜ் அணிந்திருந்த அவள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததாம்[11].

முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 30 மில்லியன் ஆப்கன் மக்கள் தொகையில் ஹஜ்ராக்கள் என்ற ஷியா முஸ்லீம்கள் 20% உள்ளனர். 1990களில் சன்னி-தாலிபான்கள் ஷியக்களைத் தாக்கி வந்தனர், கொன்றும் உள்ளன.

முகரம் / முஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதத்தில் சண்டைகள் தடை செய்யப் பட்டுள்ளன. முஸ்லீம்கள் இம்மாதத்தின் போது உண்ணாநோன்பு இருப்பர் .முகரம் மாதத்தின் பத்தாம் நாள் – அஷுரா  ஷியாக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப் படும். அன்று ஷியாக்கள் மற்றும் சன்னிகள் ஒன்பதாம் அல்லது பதினொராம் நாளில் உண்ணாதிருப்பர்.

ஆனால், பிறகு அவர்கள் தமது கவனத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் – காபிர்கள் என்ற ரீதியில் அமெரிக்க-நாடோ வீரர்களை, அந்நிய சுற்றுலா பயணிகள், வேலையாட்கள் முதலியோர் மீது திருப்பி, அவர்களைக் கொன்று வந்தது. அதனால், இப்பொழுது, சியாக்கள் மறுபடியும் தாக்கப்படுவதற்கு, உலக கவனத்தை ஈர்க்கவே என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஷியா முஸ்லீம்கள் முஹரம் பண்டிகையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று அதற்காக விடுமுறையும் உள்ளது. பொதுவாக ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைப் போல இல்லாமல், ஷியா-சன்னி மோதல்கள் குறைவாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இல்லை பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-கைதா தாக்கியிருக்கக் கூடும், ஏனெனில் பாகிஸ்தானிய சன்னிகள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கருதுவதில்லை.மற்றும் அவகள் தாக்கப்படுவது, அவர்களின் மசூதிகளில் குண்டு வெடிப்பது முதலியவை சாதாரணமா விஷயங்களாக இருந்து வருகின்றன[12]. இருப்பினும் தாலிபனைச் சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் மூலம் தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் மூவர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டுகளில் தாலிபனால் நடட்தப் பட்ட குண்டுவெடிப்புகள், தாலிபனின் தாக்குதலால் இறந்தவர்கள் முதலிய விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன:

January 14, 2008 A Taliban suicide attacker leaves eight dead at the Serena, Kabul’s most luxurious hotel.
July 7, 2008 A car-bomb attack on the Indian embassy building kills more than 60 people.
February 11, 2009 At least 26 people die and 55 are wounded in three almost simultaneous Taliban attacks on official buildings.
 October 28, 2009 An attack claimed by the Taliban kills at least eight people, including five UN staff, at a Kabul hostel. Three attackers also die.
December 15, 2009 At least eight die and 40 are wounded in a suicide attack near a hotel hosting foreigners.
January 18, 2010 Five people die and at least 71 are injured as Taliban guerrillas carry out a wave of coordinated bomb and gun attacks around the capital.
February 26, 2010 Suicide attacks on two Kabul guesthouses kill at least 16 people, including seven Indians, a French national and an Italian.
May 18, 2010 A suicide bomber kills at least 18 people, including five US soldiers and one Canadian soldier, in an attack on a Nato convoy in a busy city centre street.
December 19, 2010 Two suicide bombers attack an Afghan army bus, killing five soldiers.
January 28, 2011 Eight people are killed in a suicide bombing at a central Kabul supermarket popular with Westerners.
May 21, 2011 Six medical students are killed in a Taliban suicide attack at Afghanistan’s main military hospital.
June 18, 2011  Nine people are killed when suicide attackers storm a police station in the capital.
June 28, 2011 21 are killed, including 10 civilians, when suicide bombers storm Kabul’s luxury Intercontinental Hotel.
August 19, 2011  Nine people, including a New Zealand special forces soldier, die when suicide bombers attack the British Council cultural centre in Kabul.
September 13/14, 2011 Taliban attacks targeting locations including the US embassy and headquarters of foreign troops kill at least 14 during a 19-hour siege.
September 20 Burhanuddin Rabbani, Afghanistan’s former president leading efforts to find a peace deal with the Taliban, is assassinated in a suicide attack at his home in Kabul’s supposedly secure diplomatic zone.
October 29, 2011 13 US troops operating under Nato are among 17 people killed in a car-bomb attack on a foreign military convoy in Kabul.
December 6 , 2011  At least 54 people are killed in a shrine bombing in Kabul, with four more dead in another blast at a shrine in the northern city of Mazar-i-Sharif, a day after a major conference in Germany on Afghanistan’s future pledged sustained support for another decade.

வேதபிரகஷ்

06-12-2011


 


[7] தினமலர், மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : 40 பேர்பலி, http://www.dinamalar.com/News_detail.asp?Id=362666

[13] An email message to news organizations from the spokesman for the Taliban, Zabiullah Mujahid, denied responsibility. “We strongly condemn this wild and inhuman act by our enemies, who are tyring to blame us and trying to divide Afghans by doing such attacks on Muslims.”

http://www.nytimes.com/2011/12/07/world/asia/suicide-bombers-attack-shiite-worshipers-in-afghanistan.html

சையது தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – II

ஒக்ரோபர் 17, 2010

சையது தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்கஜிஹாத் கூட்டு – II

அமெரிக்கஇஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு[1]: Syed Dawood Jilani / Syed daood Gilani / Daood Armani / Daood Gilani / David Jilani / David Jilani  என்பவன் தான், டேவிட் கோல்மென் ஹெட்லி என்றே குறிப்பிடப்பட்டு இந்தியர்களை ஊடகங்கள் ஏமாற்றி வருகின்றன. ஜாஹிர் நாயக் போன்றவர்களும் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரிக்கன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள் / ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), …………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.

அமெரிக்கா கூறுவது உண்மையா, பொய்யா? மும்பையில் தாக்குதல் நடத்த தீவிரவாதி ஹெட்லி திட்டமிட்டது பற்றி அவனது மூன்று மனைவிகளில் இரண்டு பேர் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளிடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்துள்ளனர்[2]. இதை இந்தியாவிடம்  அமெரிக்கா தெரிவிக்கவில்லை என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை  அமெரிக்கா மறுத்துள்ளது. அவனிடம் அமெரிக்க அதிகாரிகளின் அனுமதியின் பேரில் இந்திய விசாரணை அதிகாரிகளும் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் போது ஹெட்லி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளான். குறிப்பாக மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த திட்டம் வகுத்துக் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உள்ளான். விசாரணைக்கு ஒத்துழைக்க அவன் சம்மதித்து இருப்பதால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க எப்பிஐ  புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வெளியிடவில்லை. எனினும் மும்பைத் தாக்குதலுக்கு முன்பு வெளியான சில முக்கிய தகவல்களை “நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.

ஃபைஜா அவுத்லாஹ் என்பவள் இந்தியாவிற்கே வந்துள்ளபோது ஏன் இந்திய உளவுதுறையினர் அறியவில்லை? டேவிட் ஹெட்லிக்கு மூன்று மனைவிகள். இவர்களில் ஒருவர் மொராக்காவைச் சேர்ந்தவர் – ஃபைஜா அவுத்லாஹ். இளம் வயதினரான இவர் ஹெட்லியின் தாக்குதல் திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். இந்த தகவல்களை  ஹெட்லியின் மனைவி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் இந்த தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மறுத்து உள்ளது.தங்களது கூட்டாளி நாடான பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் கிடைத்து விடும் என்பதால் அமெரிக்க அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் விட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது பற்றிய தகவல்களையும் இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை  என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் மைக் ஹாமர் வெளியிட்ட அறிக்கையில், ” தீவிரவாத தாக்குதல் பற்றிய தகவல்களை 2008ல் இந்தியாவுக்கு அவ்வப்போது தெரிவித்துக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் மும்பைத் தாக்குதல் பற்றிய நேரம் மற்றும் தாக்குதல் நடத்தப்போகும் இடம் பற்றிய தகவல் கிடைத்து இருந்தால் அதை முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரிவித்துத் தான் இருப்போம் என்றார். இதற்கிடையில் ஹெட்லியின்  அமெரிக்க மனைவியும்  அவனைப் பற்றிய திடுக்கிடும் தகவல்களை பொது நலன் கருதி அமெரிக்காவின் எப்பிஐ யிடம் தெரிவித்ததாக  நியூயார்க்கில் புலனாய்வுப் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஹெட்லியின் மனைவிகள் கூறிய புகார்கள் தொடர்பாக ஹெட்லி 2005ல் கைது செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகை செய்தி மேலும் கூறுகிறது.

அமெரிக்க உளவுத்துறையும், ஊடகத்துறையும்[3]: இது தவிர பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுடன் ஹெட்லிக்கு இருந்த தொடர்பு பற்றி அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் இந்த தகவல் இந்தியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் “வாஷிங்டன்’ போஸ்ட் பத்திரிகையும் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி  ரோமர் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நம்பகமான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டோம். டேவிட் ஹெட்லி பற்றி தற்போது வெளியாகி இருக்கும் தகவல் பற்றி உறுதியாக தெரிந்து கொண்ட பிறகே கருத்து தெரிவிக்க முடியும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமானது என்றார்.

அரைத்த மாவை அரைக்கின்றனவா அல்லது அமெரிக்க ஜிஹாதித்தனத்தை மறைக்க சதியா? தாவூத் ஜிலானி என்கின்ற டேவிட் ஹெட்லி கோல்மென் பற்றி இப்படி அவ்வப்போது அரைத்த மாவையே அரைக்கும் ஊடகங்களின் வேலை மர்மமாக இருக்கிறது. இப்பொழுது வெளிவரும் விஷயங்கள் எல்லாமே ஏற்கெனெவே தரிந்தது தான்[4]. மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்து அவரது மனைவி பலமுறை தகவல் அளித்தும் அவரை எப்.பி.ஐ., நழுவ விட்டுவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது, என்று ஊடகங்கள் இன்று கூறுகின்ரன (16-10-2010). ஆனால், வாகா வழியாக அவள் நடந்தே வந்தபோது[5] எப்படி யாரும் அறியாமல் இருந்தனர்?  ஹெட்லி குறித்த தகவல்களை சேகரித்து வந்த “பிரோ பப்ளிக்கா” எனும் பத்திரிகை இத்தகவலை தெரிவித்துள்ளது. எப்.பி.ஐ., அதிகாரிகளிடம் ஹெட்லியின் மனைவி ஹெட்லி பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து எப்.பி.ஐ., இதுவரை எந்த ஒரு கருத்தும், விளக்கமும் அளிக்கவில்லை.

தாவூத் ஜிலானியும், டேவிட் ஹெட்லியும்! அப்பப்பா, இந்த செக்யூலார் ஊடகவாதிகள் இருக்கிறார்களே சரியான பூடகவாதிகள், பாஷாண்டிகள்! தாவூத் ஜிலானி என்ற இஸ்லாமிய / ஜிஹாதி தீவிரவாதியை ஒரேயடியாக David Coleman Headley என்று குறிப்பிட்டு ஜாலங்கள் செய்கின்றனரே? மதத்தின் பெயரால் அப்பாவி, மக்களைத் திட்டம் போட்டுக் கொன்று குவித்த நெஞ்சில் ஈரமில்லா கயவர்களை ஏன் மற்றொரு பெயரில் மறைக்கவேண்டும்? டேவிட் ஹெட்லி என்றால் கிருத்துவர், தாவூத் ஜிலானி என்றால் முகமதியன் என்று செக்யூலார் மட-இந்தியர்களுக்குக் கற்றுத் தருகிறார்களா! இவர்கள் உண்மையிலேயே ஊடகத் தீவிரவாதிகள்! பத்திரிக்கைத் தீவிரவாதிகள்!! நாளிதழ்த் தீவிரவாதிகள்!!! தாவூத் ஜிலானி என்ற இஸ்லாமிய / ஜிஹாதி தீவிரவாதியை ஒரேயடியாக David Coleman Headley என்று குறிப்பிட்டு இந்தியர்களை ஏமாற்றி வருவது செல்யூலரிஸ மாயைத்தான்[6].

இருவரும் இந்தியாவிற்கு புதியவர்கள் அல்லர்: பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை தாக்குதலில் தொடர்பு கொண்டிருந்தானா என்று தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,) விசாரிக்கத் துவங்கியுள்ளது[7]. ஹெட்லியும், தாகாவுர் ராணாவும் இந்தியாவில் பல இடங்களுக்கு குறிப்பாக மும்பை, டில்லி, புனே, லக்னோ, ஆக்ரா, கொச்சி, சூரத் மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு அடிக்கடி வந்திருக்கின்றனர். மேலும், புனேயிலுள்ள ஓஷா ஆசிரமத்துக்கு 2008ம் ஆண்டிலும், இந்த ஆண்டு மார்ச்சிலும் ஹெட்லி சென்றிருக்கிறான். மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல மாதங் கள் முன், 2007ல் தாஜ், டிரிடென்ட் ஓட்டல் களில் ஹெட்லியும், ஒரு விருந்தினர் மாளிகையில் ராணாவும் தங்கியிருந் துள்ளனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகிலுள்ள பிரீச் கேண்டி பகுதியில் ஒரு பிளாட்டில் வாடகை கொடுத்து தங்கியுள் ளான் ஹெட்லி. அங்கு தங்கியிருந்தபடியே, பின்னர் தாக்குதல் நடந்த நான்கு இடங் களான தாஜ் ஓட்டல், டிரிடென்ட் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சுற்றியிருக்கிறான். கசாப் ஒன்பது பயங் கரவாதிகளுடன் மும் பைக்கு வருவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகத்தான் ராணா மும்பையிலிருந்து கிளம்பியிருக் கிறான்.மும்பை தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்துள் ளனர்.இந்தத் தகவல்களை சேகரித்த தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ), கசாப் புக்கு இருவரையும் தெரியுமா என்று அவனிடம் விசாரித்து வருகிறது. கசாப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட மும் பைப் பகுதி போட் டோக்கள், வீடியோக் கள் ஹெட்லி கொடுத்தவைதானா என்றும் விசாரணை நடக்கிறது.மும்பைத் தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்தனர் என்ற தகவலுக்கு, பாகிஸ்தானிடமிருந்து இதுவரை எவ்வித மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி மூணாறில் தங்கியது குறித்து விசாரணை[8]: மூணாறு : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இரண்டு மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மூணாறில் தங்கியிருந்த தகவலையடுத்து, புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அவனது நண்பர் ராணா, அவரது மனைவி சாம்ராய் ராணாவுடன் கொச்சியில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.டேவிட் ஹெட்லி குறித்து மும்பையில் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியபோது, இதே பெயரில் ஒருவர் மூணாறில் தங்கியிருந்தது தெரிந்தது.

டாடா கம்பெனிக்கு சொந்தமானஹைரேஞ் கிளப்விடுதியில் கடந்த செப்., 18, 19 2009ல் டேவிட் ஹெட்லி ஒரு பெண்ணுடன் தங்கியிருந்த மர்மம் என்ன?: இதையடுத்து புலனாய்வுத் துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தினர். மூணாறில் டாடா கம்பெனிக்கு சொந்தமான “ஹைரேஞ் கிளப்’ விடுதியில் கடந்த செப்., 18, 19 ல் டேவிட் ஹெட்லி என்பவர் ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார். 2006ல் அமெரிக்காவில் பெறப்பட்ட பாஸ்போர்ட்டில் ஹெட்லியுடன் மனைவி என்று கூறப்படும் பெண்ணும் உடன் வந்துள்ளார். அவர்களது பாஸ்போர்ட் நகல்களையும், அவர்கள் பயன்படுத்திய இந்திய, அமெரிக்க தனியார் நிறுவன மொபைல் போன் எண்களையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பாஸ்போர்ட்டில் உள்ள ஹெட்லியின் போட்டோவிற்கும் தேசிய புலனாய்வுத்துறை கைவசமுள்ள போட்டோவிற்கும் சிறிய வித்தியாசங்கள் உள்ளதால், இரு போட்டோக்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் உதவியர்கள் யார்-யார்? சுற்றுலாவிற்காக மூணாறு வந்ததாகவும் மும்பையில் தொழில் செய்து வருவதாகவும் ஹெட்லி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் மூன்று பேருக்கு மூன்று அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன[9]. இறுதியில் ஹெட்லியும் ஒரு பெண்ணும் மட்டுமே வந்துள்ளனர். இங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்த இவர்கள் நெடும்பாசேரி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டில்லி சென்றுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் தங்கினால் அவர்கள் ஓட்டலில் பூர்த்தி செய்து கொடுக்கும் “சி’ படிவத்தையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.” மூணாறில் தங்கியிருந்த ஹெட்லியும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹெட்லியும் ஒருவர்தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து வேறு தகவல்கள் வெளியிட இயலாது’ என்றும் அதிகாரிகள் கூறினர்.

மும்பை தாக்குதல் சதி: அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது எப்படி[10]? மும்பை : “மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிம் அன்சாரி, போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான்’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அஜ்மல் கசாப், பாகிம் அன்சாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் வழக்கின் விசாரணை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.நேற்று நடந்த விசாரணையின் போது, நீதிபதி தகிலியானி முன் ஆஜரான வெளியுறவு அமைச்சக இணைச் செயலர் மான்பிரீத் ஓரா கூறியதாவது: இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நான், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் ஹை-கமிஷனராக இருந்தேன்.

பாகிஸ்தானின் நேரிடை தொடர்பு: அப்போது பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் என்னை அழைத்தார். அவரைச் சந்தித்த போது, மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பான சில விவரங்களைத் தெரிவித்தார். அப்போது, “மும்பை தாக்குதல் சதி தொடர்பாக, கைது செய் யப்பட்டுள்ள பாகிம் அன்சாரி, பாகிஸ்தானில், போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான் என்றும், அந் நாட்டின் பதிவு ஆணைய ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன’ என்றும் கூறினார். அதேநாளில், பாகிஸ்தானில் தெற்கு ஆசிய விவகாரங்களை கவனிக்கும் டைரக்டர் ஜெனரல் என்னை சந்தித்தார். அந்த நேரத்தில், பாகிம் அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பான விபரங்களைக் கூறினார். போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து, அந்த பாஸ்போர்ட் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ஓரா கூறினார்.

I don’t know Rahul Bhatt: Kangna[11]: கங்கணா சொல்கிறார்எனக்கு ராஹுல் பட்டைத் தெரியாது”! கோல்மென் ஹெட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா,எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் மும்பை திறைப்பட உலகத்திற்கு உள்ள சம்பந்தம், மிகவும் நெருக்கமானது எனலாம்[12].

வேதபிரகாஷ்

© 17-10-2010


[1] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்கஜிஹாத் கூட்டு – I , https://islamindia.wordpress.com/2010/03/20/தாவூத்-ஜிலானி-தஹவ்வூர்-ராணா-ஹ/

[2] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி என்ற ஹெட்லியின் இந்தியாவின் மீதான தாக்குதல்!, https://islamindia.wordpress.com/2009/12/14/தாவூத்-ஜிலானி-என்ற-ஹெட்ல/

[4] வேதபிரகாஷ், இந்தியாவின் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தீவிரவாத வலை பெரிதாகிறது!, https://islamindia.wordpress.com/2009/11/18/இந்த்ய-தாக்குதலில்-ஈடுபட்ட/

[6] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானியும், டேவிட் ஹெட்லியும்!, https://islamindia.wordpress.com/2009/12/10/தாவூத்-ஜிலானியும்-டேவி-ஹ/

[8] தினமலர், அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி மூணாறில் தங்கியது குறித்து விசாரணை, நவம்பர் 18,2009,00:00  IST; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14131

[9] கேரளாவில் ஜிஹாதி தீவிரவாதம் பெருகுவது பற்றி முன்னமே விளக்கமாக என்னால் எழுதப் பட்டுள்ளது.

[10] தினமலர், மும்பை தாக்குதல் சதி: அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது எப்படி?

நவம்பர் 18,2009,00:00  IST;  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18951

[11] Neha Sharma, I don’t know Rahul Bhatt: Kangna, Hindustan Times; New Delhi, November 18, 2009; First Published: 20:50 IST(18/11/2009);  Last Updated: 00:00 IST(19/11/2009)

[12] வேதபிரகாஷ், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் மும்பை திறைப்பட உலகத்திற்கு உள்ள சம்பந்தம், https://islamindia.wordpress.com/2009/11/19/இஸ்லாமிய-தீவிரவாதிகள்-மற/

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்!

மார்ச் 20, 2010

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.

ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!

LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…

https://i0.wp.com/img.thesun.co.uk/multimedia/archive/01002/Jihad_Jane_682_1002325a.jpg

ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].

பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!