Archive for the ‘அன்சார்’ category

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில் இட-ஒதுக்கீடு கேட்பதுஏன்?

திசெம்பர் 20, 2022

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில்  இட-ஒதுக்கீடு கேட்பது ஏன்?

சமத்துவம், சகோதரத்துவம், பேசும் மதங்களில் திடீரென்று எப்படி ஜாதி வந்தது?: சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இப்பொழுது சதவீதத்தில் இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. எங்களிடமும் ஜாதி, ஜாதித்துவம், பிரிவுகள் உள்ள என்று ஒப்புக் கொள்ளும் வரைக்கு வந்து விட்டன. இதுவரையில் ஏன் இன்னும், இந்துமதம் தான் ஜாதிய கட்டமைப்பிற்கு காரணனம் என்று சொல்லிக் கொண்டு வரும் நிலையில், இந்த பிரகடனங்கள் செய்யப் பட்டு வருகின்றன. கிருத்துவ டினாமினேஷன்கள் இனி ஜாதிப் பிரிவுகள் ஆகலாம். சுன்னி, ஷியா, அஹமதியா, போரா, போன்றவை இச்லாமிய ஜாதிகள் ஆகலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டுள்ள வகுப்பினர்களுக்கு (Socially and educationally backward classes) இட-ஒதுக்கீடு என்பதை, ஜாதி ரீதியில் திரித்து பேசி, விளக்கம் கொடுக்கப் பட்டு வருகிறது. OBC (Other Backward Classes) என்றதிலும், மதரீதியில் இட-ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதில், முஸ்லிம்கள் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் பெற்று வருகின்றனர்.

50% / 69% கணக்கை சுற்றி வளைக்க உள்-இட-ஒதுக்கீடு கொடுத்தது: அ.தி.மு.க, 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது[1]. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது[2]. இது இந்திய அரசியல்நிர்ணயச்சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றாலும், மற்ற மாநிலங்களில் இத்தகைய இட-ஒதுக்கீடு கொடுக்கப் பட்டு, எதிர்க்கப் பட்டு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. ஆகையால், கொடுத்து வைப்போம், அவர்களும் இட-ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கட்டும். பிறகு, கொடுத்து விட்டதால், அவர்கள் அனுபவித்து வருவதால், அதனை திரும்பப் பெறக்கூடாது என்றும் மேல்முறையீடு செய்யலாம், அரசியல் ரீதியில், எதிர்ப்பு மனு இருக்காது. ஆக, அப்படியே அமைதியாக விவகாரத்தை மூடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கலாம்.

முஸ்லிம்களின் மக்கள் தொகையும், இடஒதுக்கீடும்: முஸ்லிம்களின் மக்கள் தொகை முஸ்லிம்களின் மக்கள் தொகை நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது[3]. 2022ல் மேலும் உயர்ந்துள்ளது. போதாகுறைக்கு, பன்களாதேசத்திலிருந்து வேறு உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அஸாமில் இதுவே 5 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினையாகி, இப்பொழுது அமுக்கப் பட்டு விட்டது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது[4]. பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு;  இது குறித்து ஏப்ரல் 2022ல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: “இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்[5]. ..எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்[6]. இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது. இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது”.

17-07-2022 அன்று கோரிக்கை 20-12-2022 அன்றும் வைத்தது: ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றார். மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்[7]. முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது[8]. இப்பொழுது மறுபடியும், 20-12-2022 அன்று இதே கோரிக்கையை, தவ்ஹீத் ஜமாத் வைத்துள்ளது. 7% எப்படி எங்கிருந்து வந்தது, எப்படி அமூல் படுத்தப் படும் என்று கவனிக்க வேண்டும்.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். இப்பொழுது, வெளிப்படையாக கோரிக்கைகளும் வைக்கப் படுகின்றன. அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செயல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இறையியல் வல்லுனர்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 50% மற்ரும் 69% என்னாகும் என்று தான் கவனிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களது இறையியல் வல்லுனர்களே விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது. இருப்பினும் ஏதோ காரணங்களுக்காக இட-ஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் ஆதரிப்பது போலத் தெரிகிறது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது தலித் போர்வையில் எஸ்சி முஸ்லிம்களுக்கும் இட-ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கப் பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலினையிலும் உள்ளது.

© வேதபிரகாஷ்

20-12-2022


[1] தமிழ்.இந்து, முஸ்லிம் உள் இடஒதுக்கீடு: சட்ட மறுசீரமைப்பு நடக்குமா?, புதுமடம் ஜாபர் அலி, Published : 13 Sep 2022 07:10 AM, Last Updated : 13 Sep 2022 07:10 AM

[2] https://www.hindutamil.in/news/opinion/columns/865866-muslim-internal-reservation-1.html

[3] தமிழ்.இந்து, 2001-2011-ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரிப்பு, பிடிஐ, Published : 23 Jan 2015 10:35 AM, Last Updated : 23 Jan 2015 10:35 AM.

[4] https://www.hindutamil.in/news/india/27909-2001-2011-24.html

[5] தினமலர், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாளை.,யில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம், Added : ஏப் 19, 2012  01:59

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=450943

[7] தினமணி, முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், By DIN  |   Published On : 17th July 2022 11:13 PM  |   Last Updated : 17th July 2022 11:13

[8] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/jul/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3881897.html

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (2)

மதம் மாறியவர் வெறும் முஸ்லிமா, லெப்பை முஸ்லிமா?:  நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:

“1. Ansar – அன்சார்,

2. Dekkani Muslims  – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],

3. Dudekula – துதேகுல,

4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),

5. Mappilla – மாப்பிள்ள [குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்],

6. Sheikh – ஷேக்,

7. Syed – சையத்.”

இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜி.மைக்கேல் தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.

எஸ்.ருஹய்யா பேகம் வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலையில் உள்ள வழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய  கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது  தேவையற்றதும் ஆகும்”.

இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்இடவொதிக்கீடுமுதலிய அரசியல்வாதிகளின் சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள்  எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.

முரண்பாட்டுடன் இறையியல் சித்தாந்தம் இருக்க முடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.

பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும்.  இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-12-2022 


[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.

[2] https://www.livelaw.in/news-updates/madras-high-court-a-person-cannot-carry-his-community-of-birth-even-after-conversion-rejects-backward-class-reservation-of-man-215673

[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.

[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST

[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.

https://www.thehindu.com/incoming/converted-muslims-losing-out-on-reservation-in-tnpsc-jobs/article65265386.ece

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

ஜூன் 26, 2020

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

Empty space arond Kaba in Mecca

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்திருப்பது: கொரோனா உடல், மனம், ஆரோக்கியம், படிப்பு, வேலை, தொழில், வாழ்வாதாரம், பொருளாதாரம், மதம், சமூகம் என்று அனைத்தையும் பாதித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி கொன்றுள்ளது. இன்றும் பீடித்து வருகிறது, அதன் தீவிரம் தெரிகிறது. மதநம்பிக்கையாளர்கள் தத்தம் கடவுளர்களை பிராத்தனை செய்து, வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குறையவில்லை. அந்நிலையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைப் பெற்று வரும் வருடாந்திர பண்டிகைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், விரதங்கள், சடங்குகள் என்று எல்லாமே தடுக்கப் பட்டுள்ளன. ஏனெனில், மக்கள் கூடினால், நெருங்கினால், கொரோனா தொற்று அதிகமாகும். உயிரின் மீது ஆசை இருப்பதால், மக்கள் அடங்கி இருக்கிறர்கள். கடவுள் மீதான பயத்தை விட கொரோனாவின் மீதான பயம் அதிகமாக இருப்பது தெரிகிறது.

Empty space arond Kaba in Mecca-2
ஹஜ் பயணத்தையும் கட்டுப்படுத்திய கொரோனா: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ளது[1]. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள்[2]. ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது[3]. சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது[4].

cleaning Kaba in Mecca-4

கொரோனா மெக்கா-மதினாவைத் தாக்கியது: ஒரோனா பாதிப்பு, தொற்று என்று சவுதி அரேபியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் இறந்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் முதலே, மெக்கா / மக்கா, மதினா போன்ற, இஸ்லாமிய மத-ஸ்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு அங்கு, உட்புறம்-வெளிப்புறம் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், ஜம்-ஜம் என்ற இடத்தில் உள்ள நீரை பக்தர்கள் குடிப்பது, எடுத்துச் செல்வது உண்டு. மார்ச் மாதத்திலேயே, சவுதி அரேபியா, ஹஜ் திட்டங்களை நிறுத்து வைத்தது. இத்தாண்டும் அடையாளமாக சிலரே, தகுந்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப் படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[5]. விமானங்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை மார்ச் மாதத்திலிருந்து தடை செய்துள்ளது[6]. திராவிட நாத்திகர், இந்துவிரோத அவநம்பிக்கையாளர், கடவுள்-மறுப்பாளிகள் போல இந்துக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், துலுக்கர், இன்றும், இப்பொழுதும் இந்துமதத்தைத் தூஷித்து வருவது, சரியில்லை என்றோ, அவர்களை கண்டிப்பதோ இல்லை. அந்நிலையில் தான், இந்துக்கள் துலுக்கர், வெறிபிடித்த முஸல்மான்கள், முஸ்லிம்களின் நம்பிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதாகிறது.

Cleaning Kaba in Mecca-5

வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாதுசவுதி அரேபியா: கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாத சூழலால் அதற்கு செல்வதற்காக இந்தியாவில் விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் 23-06-2020 அன்று தொடங்கியுள்ளது[7]. கரோனா தொற்று சவால்கள் காரணமாக, சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தி்ல் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை (1441 H/2020 AD) மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[8].

Cleaning Kaba in Mecca-6

சவுதி அரேபியா முடிவால், இந்தியா பணத்தைத் திரும்ப கொடுத்தது: 23-06-2020 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசினார். சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு (1441 H/2020 AD[9]), இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என சவுதி அரேபியா அமைச்சர் ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து விரிவாக ஆலோசித்தாகவும், கரோனா தொற்று சாவல்களை இந்த உலகமே சந்தித்து வருவதாகவும், இதனால் சவுதி அரேபியாவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்[10]. இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்[11]. விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்[12]. இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்[13].

Ozone ech to sterlize Kaba in Mecca-7

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது: இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு (2021) ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த 2019ஆம் ஆண்டில், மொத்தம் 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர் என நக்வி தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதபெண்களும் அடங்குவர். ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மத்திய அரசு கடந்த 2018-இல் உறுதி செய்த பின், மொத்தம் 3,040 பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்[14]. இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது இதுவே முதல்முறை என்று முக்தாஸ் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[15].

Sheikh Al-Sudais participates in the washing and disinfecting of the Holy Kaaba.

நாத்திகர், முகமதியர், மற்ற மதத்தினர் உணர்ந்து ஒழுங்காக இருக்க வேண்டும்: மெக்காவில் இருக்கும் பெரிய மசூதி மற்றும் நபிகள் மசூதி இவற்றை ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ், “ஹூஷோன் டெக்” உபயோகப் படுத்தி, காபா பகுதியை கிருமிகள் நீங்க, மருந்து அடித்து, ஏப்ரல் மாதத்தில் சுத்தப் படுத்தினார்[16]. அதேபோல, மற்ற பகுதிகள், உள்ளே இருக்கும், முக்கியமான இடங்கள் முதலியனவும் சுத்தம் செய்யப் பட்டன.[17] காபா, காபத்துல்லாஹ் என்றால், அல்லாஹ் கடவுள் வாழும் இடம், அப்படியென்றால், கடவுள் தன்னுடைய இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டாரா, சுத்தமாக வைத்திருக்க மாட்டாரா, தெரியாதா என்று நாத்திகவாதிகள், திராவிட கடவுள் மறுப்பு கோஷ்டிகள், பெரியாரிஸ வெங்காயங்கள் கேட்கவில்லை. ஆக, உண்மையில், இந்த கொரோனா, இத்தகைய போலிகளை, பொய்யர்களை, சித்தாந்த இரடைவேட கபோதிகளை வெளிப்படுத்தியுள்ளன. துலுக்கரும்ம் தம் நிலை உணர வேண்டும். இத்தகைய உண்மைகளை அறிந்து, மற்ற மதத்தினரைத் தாக்குவது, இழிவு படுத்துவது போன்ற வேலைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கிருத்துவர்களுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

26-06-2020

To enter-Cleaning Kaba in Mecca-7

[1] மாலைமலர், ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லைகட்டணம் திரும்ப கொடுக்கப்படும்முக்தார் அப்பாஸ் நக்வி, பதிவு: ஜூன் 23, 2020 14:13 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/06/23141342/1639365/Indian-pilgrims-will-not-travel-to-Saudi-Arabia-for.vpf

[3] தினத்தந்தி, குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும்சவுதி அரேபியா, பதிவு: ஜூன் 23, 2020 07:38 AM

[4] https://www.dailythanthi.com/News/World/2020/06/23073805/Saudi-Arabia-confirms-Haj-to-be-held-this-year.vpf

[5] Gulfnews, Saudi Arabia considers limiting Haj numbers amid COVID-19 fears, Reuters, Published: June 08, 2020 22:25.

[6]  https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-considers-limiting-haj-numbers-amid-covid-19-fears-1.1591641097152

[7] தமிழ்.இந்து, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் பணத்தை பிடித்தம் இல்லாமல் திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை, Published : 23 Jun 2020 04:04 PM; Last Updated : 23 Jun 2020 04:29 PM.

[8] https://www.hindutamil.in/news/india/560783-muslims-from-india-will-not-go-to-saudi-arabia-to-perform-haj-2020.html

[9]  இந்து நிருபர்கள் இன்னும் AD போடுவதை கவனியுங்கள், மெத்டப் படித்த, பயிற்சி எடுத்த அவர்களுக்கு CE தெரியாதா என்ன?

[10] ZH Web (தமிழ்), இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி , Updated: Jun 23, 2020, 06:24 PM IST.

[11] https://zeenews.india.com/tamil/india/indian-muslims-will-not-go-to-haj-this-year-mukhtar-abbas-naqvi-337185

[12] நக்கீரன், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு, Published on 23/06/2020 (17:21) | Edited on 23/06/2020 (17:43), நக்கீரன் செய்திப்பிரிவு.

[13] https://www.nakkheeran.in/24-by-7-news/india/hajj-trip-cancelld-india-2020

[14] தினமணி, நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி, By DIN | Published on : 23rd June 2020 11:06 PM

[15] https://www.dinamani.com/india/2020/jun/23/hajj-trip-canceled-central-senchach-naqvi-3429099.html

[16] Tuqa Khalid, Al Arabiya English, Coronavirus: Saudi Arabia’s Al-Sudais uses ‘Ozone tech’ to sterilize Kaaba in Mecca, Tuesday 28 April 2020

[17] The General President of the Affairs of the Grand Mosque and the Prophet’s Mosque, Sheikh Abdul Rahman Al-Sudais used on Monday “Ozone tech” to sterilize Islam’s holiest site, the Kaaba, in the Grand Mosque in Mecca, amid the coronavirus outbreak.

https://english.alarabiya.net/en/coronavirus/2020/04/28/Coronavirus-Saudi-Arabia-s-Al-Sudais-uses-Ozone-tech-to-sterilize-Kaaba-in-Mecca

ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பிப்ரவரி 16, 2018

ஐசிஸ் தொடர்புஅன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது: கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, என சில ஊடகங்களும். ஐ.எஸ்.ஐ.எஸ்.- அமைப்புக்கு ஆதரவான கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியதாக, என்று மற்ற சில ஊடகங்களும், தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் சென்னையில் 12-08-2018 திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டான்[1], என்று செய்திகள் வெளியிட்டன. 13-02-2018 அன்று கைது செய்யப்பட்ட அன்சார் மீரான், முறைப்படி, தேசிய புலனாய்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்[2]. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[3]. இந்நிலையில் அவனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்[4]. மனு தாக்கல் செய்தனர் என்ற செய்தியையே, ஏதோ, பெரிய விசயமாக வெளியிட்டுள்ளன[5]. என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விசயங்களைக் கூட வெளியிடவில்லை. மேலும், “கைது செய்யப்பட்டார்,” என்று மரியாதையோடு குறிப்பிட்டன[6]. மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை 14—02-2018 புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்[7]. இதையே எல்லா நாளிதழ்களும் / ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[8]. சென்னையில் நடக்கும் விசயங்களே இவர்களுக்கு தெரியாதா என்ன?

Indian Muslim youth become ISIS supporters, warriors

14-02-2018 அன்று நீதிமன்றம் மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி[9]: தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மூன்று நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை ரகசியமாக தொடங்கினர். இவ்வளவு வெளிப்படையான விசாரணை, முதலியவை இருந்தும், தமிழகத்தில் ஏன் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்பது பற்றி யோசிப்பதில் தயக்கம், மறைத்தல் மற்றும் பயமும் இருக்கிறது போலும். தவிர குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பெற்றோர், உற்றோர், மற்றோர் பேசுவது, செயல்படுவது முதலியனவும், தீவிரவாதத்திற்கு உடன் போவதை காட்டுகிறது.

Isis, Tamilnadu links, arrests 2017-18

தினமலர் கூடுதலாக கொடுக்கும் விசயம்: – அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது[10]: “.எஸ்..எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..எஸ்..எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. ஓரளவிற்கு, அதிலும், அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறினார் என்று இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதெல்லாம் மற்ற ஊடகத்தினருக்கு தெரியாதா என்ன?

shahul-hameed-chennai-arrested-by-nia-and-khaja-moideen

முழு விவரங்களைக் கொடுக்கும் தினத்தந்தி[12]: தினத்தந்தி கூறுவதாவது, “.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது. அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல் அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலை மறைவாக இருந்தபடி .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரியவந்தது[13].

nasser-who-designed-isis-flag-is-from-chennai

.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும்[14]: தினத்தந்தி தொடர்கிறது, “.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த .எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நாட்டில் .எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது. சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே .எஸ். தீவிரவாத  அமைப்புக்கு நிதி  திரட்டி கொடுத்துள்ளான்மேலும் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான்  என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள .எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[15]. சாகுல் அமீது மற்றும் காஜா மொஹித்தீன் பற்றிய விவரங்களை இங்கு படித்து அறியலாம்[16].

swalih-was-settled-in-chennai-for-some-time-now-with-wife-and-2-year-old-son

இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?: ஆக தினத்தந்தி மற்றும் தினமலர் தவிர, பின்னணி தெரிந்தும், மற்ற ஊடகங்கள் இவ்வாறு செய்திகள் வெளிட்டுள்ளது, அவற்றின் பாரபட்சம் மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு வெளிப்படுகிறது. NIA தனது இணைதளத்தில் உடனுக்குடன் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்கள், பின்னணி, வழக்கு எண் என்ற எல்லா விவரங்களையும் “ஊடகங்களுக்காக” [Press release] என்று வெளியிட்டு வருகின்றது. அதனை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டாலே போதும், எல்லா விவரங்களும் பொது மக்களுக்குத் தெரிய வரும். அதனால், ஒருவேளை அவர்கள் விழிப்புடன் இருக்கலாம். ஆனால், அதையே கண்டுகொள்ளாமல், மறைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது அவர்களுக்கு சாதகாமாக இருப்பது அல்லது அவர்கள், ஊடகக்காரர்களுக்கு ஏதோ “சென்ஸார்” போன்ற ஆணையிட்டது அல்லது மிரட்டியுள்ளது போன்றது உள்ளதா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

16-02-2018

Isis, Tamilnadu links, Haja Fakrudeen

[1] நியூஸ்7, கைதான .எஸ் ஆதரவாளரை 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய புலனாய்வு அமைப்பு!, February 14, 2018

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/2/2018/person-arrested-chennai-national-intelligence-agency

[3] பாலிமர் செய்தி, ISIS ஆதரவாளர் அன்சார் மீரானை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை, 13-பிப்-2018 18:30

[4] https://www.polimernews.com/isis-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/

[5] தி.இந்து, சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு, Published :  14 Feb 2018  07:51 IST; Updated :  14 Feb 2018  11:00 IS

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22748394.ece

தினமணி, [7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!, Posted By: Mathi, Published: Tuesday, February 13, 2018, 11:47 [IST].

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrests-pakistan-spy-311239.html

[9] தினமணி, .எஸ். ஆதரவாளரிடம் என்ஐஏ விசாரணை தொடக்கம், Published on : 15th February 2018 02:28 AM.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863616.html

[10] தினமலர், .எஸ்..எஸ்., ஆதரவாளரை போலீஸ் காவலில் விசாரிக்க மனு, Added : பிப் 14, 2018  02:18.

 

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1958705

[12] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[13] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[14] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[15] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[16] வேதபிரகாஷ், மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!, செப்டம்பர் 23, 2017.

https://islamindia.wordpress.com/2017/09/23/isis-funder-from-chennai-arrested-by-nia-more-jihadis-in-south/

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் – அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த், புதிய முகமூடி! (2)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள்அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த், புதிய முகமூடி! (2)

Hurriyat terror fund raid ans arrest

சோதனையில் ஆதாரங்கள் சிக்கின: இந்த அமைப்பு, அல்டாப் அகமது ஷா, கிலானியின் நெருங்கிய கூட்டாளிகளான, அயாஸ் அக்பர், பீர் சைபுல்லா உள்ளிட்ட ஏழு பேரை, கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியது[1]. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாகத் தகவல்கள் வெளியாகின[2]. காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டபோது பிரிவினைவாதிகள் தீவிரவாதிகளிடம் பெற்ற பணத்தை கல்வீச்சாளர்களுக்கு வழங்கியதாகவும், இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில், இந்த மாத துவக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், அனைத்துலக மற்றும்  பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களிலிட்மிருந்து பணம் பெற்ற விவரங்கள் தெரியவந்துள்லன. அவற்றில் ஆவணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தது[3]. இந்தச் சோதனையில், ரூ.2 கோடி பணம், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கடித நகல்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் சிக்கின[4].

  1. கணக்குப் புத்தங்கள் [some account books],
  2. ரூ. 2 கோடி பணம் [Rs 2 crore in cash],
  3. தடை செய்யப் பட்ட இயக்கங்களின் கடித-தாள்கள் [letterheads of banned terror groups, including the LeT and the Hizbul Mujahideen]

NIA arresred 7 in Kashmir terror fund case - 434_1_PressRelease24-07-2017

24-07-2017 (திங்கட்கிழமை) அன்று கைது செய்யப்பட்ட ஏழு பேர்[5]: தெஹ்ரீக் – இ – ஹுரியத் என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக, அல்டாப் அகமது ஷா கருதப்படுகிறான். தீவிரவாதத்தின் பன்முனை முகங்கள் பெரிதாகிக் கொண்டிருப்பதால், அவர்களை கைது செய்யவும் என்.ஐ.ஏ தீர்மானித்தது. இந்நிலையில், வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க இயலாததால்,

  1. அல்டாப் அகமது ஷா ஃபுந்தூஸ் கிலானி [Altaf Ahmed Shah Funtoosh Geelani] – கிலானியின் மருமகன்,
  2. அயாஸ் அக்பர் கன்டே [Tehreek-e-Hurriyat’s Ayaz Akbar Khandey] – தெஹ்ரீக்-இ-ஹரியத் செய்தித் தொடர்பாளர்,
  3. பீர் சபியுல்லா [Peer Saifullah] – ஜம்மு காஷ்மீர் நேஷனல் பிரென்ட்,
  4. ஷாகித் அல் இஸ்லாம் [Aftab Hilali Shah @ Shahid-ul-Islam] – மிர்வாய்ஸ் உமர் பாரூக் தலைமையிலான ஹரியத் மாநாட்டுக் கட்சியின் செய்தி தொடர்பாளர்,
  5. ராஜா மெஹ்ரஜுதின் கல்வாபல் [Raja Mehrajuddin Kalwal],
  6. நயீம் கான் [Nayeem Khan] – ஜம்மு காஷ்மீர் நேஷனல் பிரென்ட்,
  7. பரூக் அஹமது தார் என்கின்ற பிட்டா கரதய் / பிட்டா கராதே [Farooq Ahmed Dar aka Bitta Karatay], தில்லியில் கைது செய்யப்பட்டான்.

ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[6]. அவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் [NIA Case No. RC-10/2017/NIA/DLI (J&K Terror Funding Case) under sections 120B, 121, 121A of IPC and sections 13, 16, 17, 18, 20, 38, 39, 40 of Unlawful Activities (Prevention) Act, 1967] கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிபதி முன்பு ஆஜராக்கப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. 30-05-2017 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக, இந்நடவடிக்கைகள் உள்ளன. அரசு, இத்தகைய நடவடிக்கைகள் எடுத்து வரும் போது, தீவிரவாதிகளும் தங்களது தாக்குதல் முறைகளை மாற்றி வருகிறார்கள்.

Ansar Ghawat ul Hind statement

ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்‘ [Ansar Ghazwat-ul-Hind] என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது.  ஜம்மு காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல் குவைதா, பல நாடுகளில், பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீரில், ‘அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்’ [Ansar Ghazwat-ul-Hind] என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது[8]. அல் குவைதா பயங்கரவாத அமைப்பின், ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை[9]:  முஸ்லிம் நாடான காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிக்க, புனித போரான, ஜிகாத்தை துவக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. இந்திய முஸ்லிம்கள், கோழைகளாக உள்ளனர். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள், ஜிகாத் துவக்க வேண்டும். இதற்காக, காஷ்மீரில், அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கமாண்டராக, ஜாகிர் ரஷீத் பட் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Musa, Brhan and friend

பட் என்கின்ற முஸ்லீமாக மாறியவன் தான் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளான்: புதிய பயங்கரவாத அமைப்பின், கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள பட், காஷ்மீரைச் சேர்ந்தவன். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கல்லுாரியில் படித்து கொண்டிருந்தவன், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். பின், ஹிஸ்புல் அமைப்பிலிருந்து பிரிந்து, தனி பயங்கரவாத அமைப்பை துவக்கினான். இப்போது, அல் குவைதா துவக்கியுள்ள அமைப்பில், கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளான். காஷ்மீரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது பற்றி, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காஷ்மீர் உட்பட இந்தியாவின் எந்த பகுதியிலும், அல் குவைதாவால் கால் பதிக்க முடியாது. ‘சர்வதேச பயங்கரவாதத்தில், முஸ்லிம் இளைஞர்களை ஈர்ப்பதற்காக, இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் முயற்சி இது’ என்றனர்.

Ansar Ghawat ul Hind statement-confession

பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், ஜிஹாதிகள், முஜாஹித்தீன்கள், என்று பல பெயர்களில், பயங்கரவாதிகள்-தீவிரவாதிகள், பொது மக்களைக் கொன்று வருகிறார்கள்: அல்கொய்தாவின் உலகளாவிய இஸ்லாமிய ஊடக முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது[10]: ஹீரோ முஜஹித் புர்கான்  வானி வீரமரணத்திற்கு பிறகு  காஷ்மீரில் ஜிஹாத் விழிப்புணர்வு அடைந்துள்ளது. காஷ்மீர் முஸ்லீம்களின் மீது இந்திய படையெடுப்பாளர்களின் கொடூரமான  ஆக்கிரமிப்பைத் தடுக்க ஜிகாத் கொடியைக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளதால், ஜிஹாத் மூலம், மற்றும் அல்லா உதவியுடன் நாங்கள் எங்கள் தாயகம் காஷ்மீரை விடுவிப்போம். ” இந்த இலக்கை அடைவதற்கு,ஜிகாத் ஒரு புதிய இயக்கம் தியாகி புர்கான் வானி தோழர்களால் முஜஹித் ஜாகீர் மூஸாவின் தலைமையில் நிறுவப்படுகிறது என கூறப்பட்டு உள்ளது[11]. ஆனால் சையது சலாவுத்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன் பிரதம தளபதி [HM supreme commander Syed Salahuddin], “இது காஷ்மீர முஜாஹித்தீன்களைப் பிரிக்க இந்தியா செய்துள்ள சதியாகும். ஆப்கானிஸ்தான், இராக், துருக்கி முதலிய நாடுகளில் எப்படி அல்குவைதா மற்றும் அரசு படைகள் சண்டையிட்டுக் கொண்டு, ரத்தம் சிந்தப் படுகிறதோ, அதுபோல தங்களுக்குள் சண்டியிட்டு அழிய போட்ட திட்டம்,” என்று குறிகூறினான்[12]. லஸ்கர்-இ-டொய்பா, “ஹுரியத் தலைவர்கள் ஒன்றாக வந்த போதே, இந்திய அரசின் சதி முறியடிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய விடுதலை போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறுகிறது,” என்கிறது[13]. இப்படி இவர்கள் கூறுவது, முரண்பாடான அறிக்கைகள் அல்ல, தெரிந்துதான், விசமத்தனமாக பேசி வருகிறார்கள்[14]. பாகிஸ்தானிலிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் என்று வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், ஜிஹாதிகள், முஜாஹித்தீன்கள், என்று பல பெயர்களில், பயங்கரவாதிகள்-தீவிரவாதிகள், பொது மக்களைக் கொன்று வருகிறார்கள்[15]. ஆனால், முஸ்லிம்கள் உண்மை அறிந்தும், அவர்களுக்கு துணை போவதால், அவர்களும் கொல்லப்படுகிறார்கள். இதை அவர்கள் திரித்துக் கூறி, பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Syed ul Islam arrested on 24-07-2017

[1] தமிழ்.ஒன்.இந்தியா, காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாதிகள் 7 பேர் அதிரடி கைது, Posted By: Lakshmi Priya, Published: Monday, July 24, 2017, 18:36 [IST]

http://tamil.oneindia.com/news/india/7-hurriyat-leaders-arrested-money-laundering-nia-290670.html

[2] http://tamil.oneindia.com/news/india/7-hurriyat-leaders-arrested-money-laundering-nia-290670.html

[3] The Hindustan Times, Terror funding probe: NIA arrests 7 separatists, including Geelani’s son-in-law, Azaan Javaid , Hindustan Times, New Delhi,  Updated: Jul 24, 2017 23:47 IST

[4] http://www.hindustantimes.com/india-news/nia-arrests-7-kashmiri-separatists-on-charges-of-funding-terrorism-unrest-in-valley/story-LC3Y23VBV2TNW68xNLJWxI.html

[5] The National Investigation Agency (NIA) has today, i.e. on 24.07.2017, arrested 07 persons in connection with the NIA Case No. RC-10/2017/NIA/DLI (J&K Terror Funding Case) under sections 120B, 121, 121A of IPC and sections 13, 16, 17, 18, 20, 38, 39, 40 of Unlawful Activities (Prevention) Act, 1967. http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/434_1_PressRelease24072017.pdf

[6] TIMESOFINDIA.COM,  Terror funding: NIA arrests seven separatist leaders, Updated: Jul 24, 2017, 04:01 PM IST.

[7] http://timesofindia.indiatimes.com/india/terror-funding-nia-arrests-seven-separatist-leaders/articleshow/59736878.cms

[8] தினமலர், காஷ்மீருக்கு தனி அமைப்பு துவங்கியது அல் குவைதா, பதிவு செய்த நாள். ஜூலை.29, 2017. 07:12.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1822223

[10] தினத்தந்தி, ஹிஜிபுல் முகஜாகிதீன் முன்னாள் தளபதி தலைமையில் அல் கொய்தா புதிய அமைப்பு காஷ்மீரில் தொடக்கம், ஜூலை 28, 2017, 04:55 PM

[11] http://www.dailythanthi.com/News/India/2017/07/28165538/AlQaeda-Announces-New-Unit-In-Kashmir-Zakir-Musa-As.vpf

[12] Times of India,  Hizbul Mujahideen leader Zakir Musa starts outfit for Islamic rule in Kashmir, Bharti Jain & Raj Shekhar | TNN | Jul 28, 2017, 02:26 AM IST

[13] http://timesofindia.indiatimes.com/india/hizbul-mujahideen-leader-zakir-musa-starts-outfit-for-islamic-rule-in-kashmir/articleshow/59799817.cms

[14] The Hindu, Zakir Musa heading Al-Qaeda in Kashmir?, Peerzada Ashiq JULY 27, 2017 22:20 IST.

[15] http://www.thehindu.com/news/national/zakir-musa-heading-al-qaeda-in-kashmir/article19372503.ece

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5].

SYurriat meeting Abdul Basit - August .2014

இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன.

Kashmir separatist leaders aiding and abeting terror

காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால்

NIA press release 19-05-2017

19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது.

  1. பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது,
  2. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது,
  3. பள்ளிகளை எரித்தது,
  4. அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது

போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது:

  1. சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani],
  2. நயீம் கான் [Naeem Khan],
  3. பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar],
  4. காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba],
  5. மற்றும் பலர் [and others]

இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர்.

Curfew in rajouri

Curfew in rajouri

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குகல்லெறிஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Burhan Wani - praised by Urudu PAK media

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3]  Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36.

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments.

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf

[8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்..., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1818923

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

ஒக்ரோபர் 29, 2016

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

huthis-accused-of-attacking-mecca-with-missiles-2

காபாவைக் காப்பவர்கள் யார்?: மெக்காவில் உள்ள காபா, மெதினா முதலியவற்றை இன்று சவுதி அரேபியா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருவதால், இஸ்லாத்தையே தான்தான் காக்கிறது என்பது போல காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இரானுக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணத்தின் போதும், இந்த வேறுபாடு, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். இரான் முஸ்லிம்கள் பெரும்பாலோர் ஷியா என்பதினால், ஷியா-எதிர்ப்பு மூலம் வெளிப்படும், ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தினர், இயக்கங்கள் முதலியற்றில் அதிகமாக இருப்பது சுன்னிகள் தாம். இதனால் தான், ஐசில் ஜிஹாதிகள் கூட ஷியாக்களைத் தாக்கிக் கொன்று வருகின்றனர். ஒருபக்கம் சுன்னி-ஷியா வித்தியாசம் இருந்தாலும், இவற்றுடன், போராளிகள்-தீவிரவாதிகள் சண்டையும், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு முதலியனவும் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அமெரிக்கா இரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஷாவின் ஆட்சி தூக்கியெரியப் பட்டப் பிறகு, அமெரிக்க விரோத கொள்கை பின்பற்ரப்பட்டு வருகின்றது.

houthi-militant

27-10-2016 வியாழக்கிழமை அன்று ஹௌத் போராளிகள் தாக்கினரா?: ஏவுகணையை வீசி தாக்குதல் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை [Houthi rebels] ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு 2015 மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன[1]. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு தெற்கில் உள்ள அல்-தைப் [al-Taif] குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து 27-10-2016 வியாழக்கிழமை அன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்[2] என்று செய்திகள் வந்துள்ளன.   இந்த ஏவுகணைகள் சி-802 என்ற [Chinese C-802] சைனாவின் கப்பல் தடுப்பு ஏவுகணையின் சிறந்த வகையைச் சேர்ந்ததாகும்.  சைனாவின் ஏவுகணைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

houthi-militant-yemeni-civil-war-position

ஹௌத் என்ற போராளிகள் யார்?: ஹௌத் என்ற போராளிகள் “அன்சார் அல்லா”, கடவுளை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஷியைத் பிரிவைச் சேர்ந்த ஜெயித் குலத்தைச் சேர்ந்தவர்கள்[3]. சுன்னி முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் சில இறையியல் வித்தியாசங்கள் உள்ளன. 1960களிலிருந்தே, சவுதி அரேபியா, ஏமனின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. அமெரிக்க-சவுதி அடக்குமுறைகளினால் சுமார் 10,000 மக்கள் இறக்க நேர்ந்துள்ளது. அதில் 4,100 சாதாரண குடிமக்கள் ஆவர். தவிர, 3.2 மில்லியன் / 32,00,000, 32 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வியாதி போன்றவற்றாலும் பாதிப்புள்ளது[4]. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்க இங்கு நடந்துள்ளவற்றிற்கு பொறுப்பேற்பதானால், அமெரிக்கா முதலில் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்[5]. சவுதிக்கு ஆதரவு கொடுப்பதையும், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[6].

houthi-militant-attack-mecca

ஏவுகணைகளை உபயோகிப்பதாக ஹௌதி போராளிகளின் மீது குற்றச்சாற்று: ஜூலை 14, 2006 அன்று C-802 ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ஏவுகணை கப்பலைத் தாக்கி [Israeli missile ship INS Hanit] சேதத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவு கூற வேண்டும். முதலில் சைனாவின் ஏவுகணைகள் எப்படி, இப்பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளிடம் வருகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு உபயோகமாக அவை உபயோகப்படுத்தப்படுகின்றன என்றால், அமெரிக்கா அதை எதிர்ப்பதில்லை என்பதும் வியப்பான விசயமே. ஆயுத உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும். சைனா போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டுதான் வருகின்றன, அவை, ஜிஹாதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி, உலகத்தில் எல்லை சண்டைகள், உள்நாட்டு போர்கள், ஜிஹாதி தாக்குதல்கள், ஐசில் போன்ற குரூர கொலைகள்-ஆக்கிரமிப்புகள் முதலியன இருக்கும் வரை, இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லோரும் தமது தீவிரவாதத்தை விட்டுவிட்டால், அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி தொழிஸ்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலை உண்டாகும்!

huthis-accused-of-attacking-mecca-with-missiles

ஹௌதி போராளிகள் குறி வைத்தது மெக்காவா இல்லையா?: ஹௌதி போராளிகள் தாங்கள் மெக்காவைத் தாக்க ஏழுகணைகளை உபயோகித்தனர் என்ற செய்தியை மறுத்துள்ளனர்[7]. இரானும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்துள்ளது. மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் [40 miles] தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. சவுதி அரேபியா அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளை [U.S.-made, surface-to-air Patriot missile batteries]  உபயோகித்தனர். இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது[9]. மொஹம்மது அல்-பெகைதி [Mohammed al-Bekheity] என்ற ஹௌதி தலைவர், “நாங்கள் மெக்காவுக்கு குறிவைக்கவில்லை. நாங்கள் மக்கம் மற்றும் புனித இடங்களை தாக்குவதில்லை,” என்றார்[10]. இதைப் பற்றி இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது[11].

irans-proxy-missile-as-alleged-by-american-interpretation

ஏமனின் இரானிய எதிர்ப்பு: யாமெனி பிரத மந்திரி அஹமது ஒபெய்த் பின் இத்தகைய தாக்குதலை ஊக்குவிக்க இரானின் மீது குற்றஞ்சாற்றியுள்ளார். “ஏமனில் மார்ச்.26, 2015 அன்று யுத்தம் ஆரம்பித்தது. ஹௌதி போராளிகள் தங்களது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் அரசிற்கு விரோதமாக போரில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரான் அல்லது பெய்ரூட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது,” என்று பின் தகர் பிரெஞ்சு தூதுவர் ஏமன் கிரிஸ்டியன் திஸ்தியை சந்தித்தபோது கூறினார். இரானின் புரட்சி பாதுகாப்புப் படை [Iranian Revolutionary Guard Corps (IRGC)] மற்றும் ஹிஜ்புல் [Hezbollah] இவ்வாறு செயல்படுவது, அரசியல் திட்டத்தை இவ்வாறு புரட்சியாளர்களின் மூலம் தீர்த்துக் கொள்வதாகத் தெரிகிறது.

houthi-militant-carrying-flag

இரான் நீர்போக்குவரத்து பாதைகளை பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செல்லுத்த விரும்புகிறாதா?: இரான் பப் அல்-மன்டப் குடாவை [Bab al Mandab Strait] தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வரவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. ஏனெனில், அதனை பிடித்து விட்டால், சூயஸ் கால்வாயை ஆதிக்கம் செய்யும் நிலை வந்துவிடும்[12]. ஹோர்மூஸ் கால்வாயையும் [Strait of Hormuz] பிடித்து விட்டால், அரேபிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்களை இரன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்[13]. அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா பரஸ்பர உடன்படிக்கை 1945லிருந்து 71 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இத்தகைய நீர்வழி ஆதிக்கத்தின் மூலம், இரான் அந்த ஒப்பந்தத்தை வலுவிழக்கத்தான் திட்டம் தீட்டுகிறது என்று அமெரிக்கா குறை கூறுகிறது[14]. இரான் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத்தை உபயோகப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் குறைகூறுகிறது.

© வேதபிரகாஷ்

29-10-2016

Middle east - who is for, who is against.jpg

[1] மாலைமலர், மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு, பதிவு: அக்டோபர் 28, 2016 11:08

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/28110835/1047538/Saudi-Arabia-says-Yemen-rebels-fire-missile-toward.vpf

[3] The Houthis, known as Ansar Allah, or “Supporters of God” (who doesn’t claim to be that in the Middle East?), belong to the Zaydi sect, and are Shia-lite, maintaining some theological similarities with Sunnis.

[4] As a result of Washington’s support for Saudi ruthlessness, Yemen has suffered desperately. Roughly 10,000 people, including some 4100 civilians, have died, 3.2 million people (12 percent of the population) have been displaced, pestilence (in the form of Cholera) has hit the capital, and famine approaches, with more than half the population “food insecure,” according to the UN World Food Program. Eight in ten people need some outside aid.

http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[5] CATO Institute, America Should Quit Saudi Arabia’s War in Yemen: the Senseless Killing Must Stop, By Doug Bandow, This article appeared in “Forbes” on October 25, 2016.

[6] http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[7] The Washington times, Iran’s proxy missile attacks- The Islamic regime seeks control of Middle East waterways, By James A. Lyons – – Tuesday, October 25, 2016

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்தடுத்து அழித்த செளதி அரேபியா, By: Amudhavalli, Updated: Friday, October 28, 2016, 20:58 [IST]

[9] http://tamil.oneindia.com/news/international/yemeni-rebels-attack-holy-mecca-265932.html

[10] Mohammed al-Bekheity, a Houthi leader, denied that the missile targeted Mecca. “We do not target civilians and, in turn, we would not target holy areas,” he said.

http://www.aljazeera.com/news/2016/10/yemens-houthis-accused-firing-missile-mecca-161028132859767.html

[11] Al-Jazeera, Yemen’s Houthis accused of firing missiles at Mecca, October.28.11.40 pm

[12] http://www.washingtontimes.com/news/2016/oct/25/irans-proxy-missile-attacks/

[13] IBTimes, Yemen Rebels Target Saudi Holy City Of Makkah; Missile Intercepted And Destroyed, by Marcy Kreiter, 10/27/16 AT 8:48 PM.

[14] http://www.ibtimes.com/yemen-rebels-target-saudi-holy-city-makkah-missile-intercepted-destroyed-2438403

 

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

மார்ச் 13, 2014

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

Nellai Muslim married 4 and tries for 5 - 2014

Nellai Muslim married 4 and tries for 5 – 2014

நதிரா பானு என்ற பெண் அன்சார் என்பவர் மீது புகார் (மார்ச்.2014): நெல்லை தச்சநல்லூர் பகுதியில் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நதிராபானு (வயது 25). இவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகளுடன் நெல்லை கலெக்டர் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: “எனக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அன்சார் (48) என்பவருக்கும் கடந்த 30.5.2009 அன்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. அன்சார் நெல்லையில் பல இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். தனது முதல் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலேயே, என்னை திருமணம் செய்து கொள்வதாக அன்சாரி கூறியிருந்தார். ஆனால், ஏற்கனவே அவருக்கு ஏற்கெனவே இரண்டாவது மனைவி நூர்ஜஹான், மற்றும் மூன்றாவது மனைவி என்று மொத்தம் மூன்று மனைவிகள் இருப்பது பின்னர் தெரியவந்தது[1]. இதுதவிர அவர் ஏராளமான பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளார் என்பதும் எனக்கு தெரிய வந்தது”. நான்கு மனைவியர் கூட ஐந்து, அதுவில்லாமல் மற்ற பெண்களிடம் தகாத தொடர்பு வைத்துள்ளது என்றால், இஸ்லாம் எப்படி இவற்றை அனுமதிக்கிறது, மற்றும் அதற்கும் குரான், ஷதீஸ் மற்றும் ஷரீயத்தில் ஆதாரம் உள்ளது என்று காட்டுவார்களா, அப்படியென்றால், முஸ்லிம் பெண்களின் கதியென்ன?

 

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

5வது திருமணம் செய்ய முயன்ற போது, 4வது மனை புகார்: நதிராபானு தொடர்கிறார், “சில நாட்கள் கழித்தே எனது கணவர் என்னை 4வதாக திருமணம் செய்தது தெரியவந்தது.  எனக்கு 10 பவுன் நகை சீதனமாக எனது பெற்றோர் கொடுத்தனர்[2]. எங்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் என்னிடம், ‘‘எனக்கு 4 மனைவிகள், 14 குழந்தைகள் உள்ளனர். இதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் என்னுடன் நீ வாழ முடியாது”, என்றார். ஏழ்மை காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் திடீரென அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறி என்னை கையெழுத்து போட சொல்கிறார். நான் மறுக்கவே சாப்பாடு போடாமல் என்னை பட்டினி போடுகிறார். அவரது கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன்”[3]. அதாவது நான்காவதாகத்தான் இப்பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார், பிறகு வற்புறுத்தி ஒப்புதல் கடிதம் வாங்கிக் கொண்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ள முயல்கிறார் என்றாகிறது.

 

நதிரா பானு - அன்சார் - 5-நிக்காஹ் 2014

நதிரா பானு – அன்சார் – 5-நிக்காஹ் 2014

4வது மனைவியைக் கொடுமைப் படுத்தியது: நதிராபானு தொடர்கிறார், “இதைத் தட்டிக் கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து எனது அவரிடம் கேட்ட போது என்னை அடித்து சித்ரவதை செய்து தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். ஒரு முறை என்னிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, விரட்டியடித்தார். பின்னர் மறுபடியும் என்னிடம் வந்து தனியாக வீடு வாங்கி காஞ்சிபுரத்தில் குடிவைத்தார். என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து சென்றார். மீண்டும் நான் கார்ப்பமானோன். ஆனால் அவர் கட்டாயப்படுத்தி அதை கலைத்தார் அங்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பை வளர்த்து கொண்டார். இதை நான் கண்டித்தபோது, என்னை வீட்டில் அடைத்து வைத்து மேலும், மேலும் சித்ரவதை செய்தார். இந்நிலையில் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டி வருகிறார். தற்போது மீண்டும் வீட்டை விட்டு என்னை அடி த்து துரத்தி விட்டார்”[4].

 

5வது திருமணம் முஸ்லிம்

5வது திருமணம் முஸ்லிம்

முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது எதைக் காட்டுகிறது?: நதிராபானு தொடர்கிறார், “அதன் பின் அந்த வீட்டை காலி செய்து விட்டு மேல்பாளையம் வந்தோம். அங்கும் வேறொரு பெண்ணை அழைத்து வந்தார். தட்டி கேட்ட என்னை அடித்து மிதித்து வீட்டின் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் கூறியுள்ளார். எனவே  அடித்தும் மிரட்டியும் சித்ரவதை செய்த என் கணவர் அன்சாரி மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள மூத்த மனைவி நூர்ஜஹான், அவரது மகன் ரஷீத் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[5]. இந்த சம்பவத்தால் மேலப்பாளையமே அதிர்ந்து போய் கிடக்கிறது.  மனு அளிக்கும் இயக்கத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ஸ்ரீராம் உடன் இருந்தார். முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது, முறையான தாம்பத்தியத்தை, இல்லறத்தைக் காட்டுகிறாதா அல்லது அதற்கும் மீறிய காரியங்களைக் காட்டுகிறதா என்று மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தாம் விளக்க வேண்டும்.

 

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இது இஸ்லாம் பிரச்சினையா, பெண்கள் பிரச்சினையா அல்லது சமூகப் பிரச்சினையா?: மறைந்த அதிமுக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சைக்கு மூன்று மனைவிகள். அவரது மகன் ஆசிக் மீராவின் மீது தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து சில நாட்கள் தாம் ஆகியுள்ளன[6]. அதற்குள் இப்படி இன்னொரு புகார் வந்துள்ளது. முன்னர் யுவன் சங்கர் ராஜாவே பலதார திருமணத்திற்காக இஸ்லாம் மாறினார் என்ற செய்திகள் வந்தன[7]. இணைதளங்களில் முஸ்லிம்கள், இதை ஏதோ பெரிய வெற்றி போல விவரங்களை வாரி அளித்தனர்[8]. ஆர். எஸ். அந்தணன் என்ற புனைப்பெயரில் இஸ்லாம் ஏதோ சாதிக்கிறது என்பது போல வரைந்து தள்ளினர்[9]. பைசூல்-பர்வீன் விவகாரமும் எப்படி இஸ்லாம் பலதார மணத்திற்கு உதவுகிறது, பெண்களை ஒரு அற்ப செக்ஸ்-பண்டமாக உபயோகப் படுத்த பயன்படுத்தப் படுகிறது என்று அவர்களே எடுத்துக் காட்டிக் கொண்டார்கள்[10]. அதில் ஒரு முஸ்லிம் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் செக்ஸுக்கு உட்படுத்தி கொள்ளலாம், பணம் கொடுத்து சரிகட்டலாம், நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டலாம் என்றெல்லாம் கூட வெளியாகின[11]. இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[12]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[13]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[14]

இவ்விவகாரத்தில் குறிப்பாக, பைசூல் திருமணம் செய்து கொள்ளாமலேயே பர்வீனுடல் குடும்பம் நடத்தி வந்தார், உடலுறவு கொண்டார், அதனை வீடியோ எடுத்து பர்வீனை மிரட்டினார் என்ற குற்றங்கள் இருப்பதுக் கவனிக்கத் தக்கது.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்  கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[15]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[16]. இப்பிரச்சினை  பல உச்சநீதி மன்ற தீர்ப்புகளிலும் அலசப்பட்டு தான் 1995ல் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதி மன்ற ஒரு தீர்ப்பில் ஆணையிட்டது[17]. 2003 தீர்ப்பிலும் இது மறுபடியும் கூறப்பட்டது[18].

 

© வேதபிரகாஷ்

12-03-2014

 


[17] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531

[18] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.

http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஜூலை 29, 2013

தீவிரவாதிகளின் தொடர்பு பெங்களூரு குண்டுவெடிப்புடன் தொடர்பு இருப்பது முன்னமே ஏடுத்துக் காட்டப்பட்டது.

Indian Secularism

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும்…

View original post 1,070 more words

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

ஜூலை 29, 2013

Indian Secularism

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும்…

View original post 300 more words