Archive for the ‘அந்நியசெலாவணி’ category

அத்வானியைக் கொல்ல முயற்சி: கைது, கைது இல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, ஆள்கொணர்வு மனு!

நவம்பர் 11, 2011

அத்வானியைக் கொல்ல முயற்சி: கைது, கைது இல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, ஆள்கொணர்வு மனு!

அத்வானி கொலை முயற்சி: அத்வானி கொலை முயற்சி வழக்கில் பைப் வெடிகுண்டு வைத்த மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற அப்துல்லா (26), மற்றும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத் (22), ஆகிய இருவரையும் சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்[1]. இவர்களிடம் இருந்து குண்டு வைக்க பயன்படுத்திய ஆட்டோ ரிக்ஷா, டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் பலரை தேடி வருகின்றனர். மொபைல் போன் மூலம் அம்பலம்: ஆலம்பட்டி பகுதியில் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்த போலீசார், இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மதுரை மேலூரைச் சேர்ந்த இமாம் அலியின் கூட்டாளிகளான இவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, பாலத்தின் அடியில் குண்டு வைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் புலன் விசாரணை நடக்கிறது.

Two Islamic fundamentalists ­— Abdul Rahman alias Abdullah (26)  of Nelpettai and Ismath (22) of Simmakkal — said to be sympathisers of extremist Imam Ali, were arrested here on Tuesday in connection with the alleged attempt on BJP leader L K Advani’s life during his visit to the temple town last week. Sources said a third person was detained in rural Thirumangalam late on Tuesday night. A hunt is on for their accomplices[2].

இருவர் கைது, மற்றவர் தலைமறைவு: மதுரையில் பழக்கடை வைத்திருக்கும் அப்துல் ரகுமான் (சிக்கந்தர் பாட்சாவின் மகன், நெல்பேட்டை) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இஸ்மத் (காஜா ஹுஸைனின் மகன், சிம்மக்கல்) ஆகிய இருவரையும் கைது செய்ததாகத் தெரிவித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி சேகர்[3], முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் இவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இவர்கள் மீது ஏற்கெனவே சிறு சிறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்[4].

 

கேரளாவிற்கு (பெங்களூருக்கு / ஆந்திராவிற்கு) ஏன் தப்பிச் செல்ல வேண்டும்? இதுகுறித்து ஏ.டி.ஜி.பி.,சேகர் கூறுகையில்,இந்த வழக்கில் முதல்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், சதித்திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இரண்டொரு நாளில் தெரியவரும்,” என்றார். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கேரளாவிற்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸார் ஆவணங்களில் ஏற்கெனவே அத்தகையவர்களின் பட்டியல் உள்ளது[5]. அவர்களை கைது செய்ய சிறப்புபடை போலீசார் கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.  ஆனால் எங்களூர் அல்லது ஆந்திரபிரதேசத்தில் பதுங்கியிருக்கலாம் என சில ஊடகங்கள் கூறுகின்றன[6]. ஆகவே அத்தகைய குற்றங்கள் செய்பவர், குற்றஞ்சாட்டப்படுபவர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாவர் என அனைவரும் இவ்வாறு பதுங்குவது என்பது வாடிக்கையாகயுள்ள்து தெரிகிறது. அதாவது அவ்வாறு அவர்கள் சென்றால், உதவக்கூடியவர்கள், மறைந்துகொள்ள இடங்கள், வேண்டிய வசதிகள் முதலிய ஏற்பாடுகள் உள்ளன என்று தெரிகிறது. இதில் உள்ள அபாயத்தைக் கவனித்து முஸ்லீம் நண்பர்கள் இத்தகைய தீவிரவாதம், பயங்கரவாதம் இன்னும் இருப்பதை, வளர்வதை, வளர்ந்து வருவதை ஆதரிக்கக் கூடாது; அச்செயல்களில் ஈடுபடுபர்களுக்கு ஆதரவு / உதவி செய்யக் கூடாது. இடம்-பொருள்-பணம் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது. இந்திய நாட்டு சரித்திரத்தில் முஸ்லீம்கள் ஆண்ட காலத்தில் இந்துக்களுக்கு என்ன சித்திரவதைகள், அவமானங்கள், தீங்குகள், கஷ்டங்கள், என்னவேல்லாம் நேர்ந்துள்ளதன என்பதனை நினைவில் கொண்டு, தேசப்பிரிவினை ஏற்பட்டுக் கூட இந்தியாவிலேயே இருப்போம் என்று முடிவு செய்த முஸ்லீம்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இக்கால முஸ்லிம்களை மாற்றவேண்டும். சேர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும்.

In a breakthrough in the case of pipe bomb that was planted on the scheduled route of BJP leader L.K. Advani, the special investigation team of the CB-CID arrested two persons on Tuesday. The accused were named as Abdul Rahman, 26, son of Sikkander Basha, of Nelpettai in Madurai and Ismath, 22, son of Khaja Hussain, of Simmakkal in Madurai. An official release[7] said the two were arrested for their “involvement in the perpetration of the crime.” Police said Rahman was related to Muslim fundamentalist Imam Ali who was killed in an encounter in Bangalore in September 2002.

என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது[8].

தேடப்பட்டுவரும் குற்றாஞ்சாட்டப்பட்டவரின் நண்பரின் மனு: சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவை சேர்ந்த எம்.அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், “நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவ‌‌ல்துறை‌யினரா‌ல் 2003ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு மீதான விசாரணை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ளது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிலையில், கடந்த 2ஆ‌ம் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்[9].

தேசிய லீக் கட்சி (முஸ்லீம் அரசியல் கட்சி) எழுதிய கடிதம்: “இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரகீமும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவு‌ம் இல்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தப்பட‌வில்லை. வாழும் உரிமைக்கு எதிராக போலீசார் செயல்பட்டு பக்ருதீனை அடைத்து வைத்துள்ளனர். அதோடு டி.கே.பாசு வழக்கில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் பிறப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. எனவே பக்ருதீனை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க காவ‌ல்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, எ‌ன்று மனு‌வி‌‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்[10]. இந்த மனு விசாரணைக்கு வந்தது.

போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது: போலீஸார் தரப்பில், “பக்ருத்தீன் என்பவர் கைது செய்யப்படவும் இல்லை அல்லது சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவுமில்லை. ஆனால், தலைமறைவாகியுள்ளார்[11]. மனுதாரர் வேண்டுமென்றே இத்தகைய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கிஞ்சித்தேனும் எந்த ஆதாரமும் இல்லை[12]. அடிப்படையே இல்லாதது, வெறுமையானது, பொய்யானது[13]. ஆகவே தள்ளுபடி செய்யப்படவேண்டும்”. என்று வாதிடப்பட்டது.

நீதிபதிகள் தள்ளூபடி செய்தது: நீதிபதிகள் குறிப்பிட்ட கேள்விகள் கேட்டபோது மனுதாரர் தரப்பில் சரியான பதில் சொல்லப்படவில்லை. பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, மனுதாரர் குறிப்பிடும் பக்ரூதினை போலீசாரை கைது செய்யவில்லை என்றும் போலீசார்  அவரை கைது செய்ய தேடி வருகிறார்கள் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொள்கிறோம்[14]. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்[15]. இப்பட்ரி நீதிமன்றங்களில், உள்ள சட்டங்களின் படி, வழக்குகளைத் தொடுத்து திசைத் திருப்பலாம். ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?


[8]Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.

 http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797

[11] In a counter affidavit in response to a Habeas Corpus plea filed by one M Abdullah, Inspector of CB-CID Madurai unit’s SIT R Krishnarajan said Bakrudeen was neither arrested nor detained illegally by the team as claimed by the petitioner but was absconding.

[12] Abdullah had come up with such “a bald and baseless” allegation only to defame CB-CID, the affidavit claimed.

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது

திசெம்பர் 17, 2010

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது[1]: கொல்லத்தில் இம்மாதம் – டிசம்பர் எட்டாம் தேதி டூரிஸ்ட் விசாவில் இந்தியாவிற்கு, இரண்டு சவுதி அரேபியர்கள் இங்கு வந்து நுழைந்துள்ளனர்[2]. சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்குள், இப்படி வருவது சகஜமாகவே இருந்துள்ளது. மேலும் சமீபத்தில் தீவிரவாதிகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் போக்குவரத்து அதிகம் இருப்பதால் போலீஸார்  கண்காணித்து வருகின்றனர். ஆகையால், விசா விதிகளை மீறி நுழைந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்[3].

மசூதி திறப்பு விழா: வளைகுடா நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் தரும காரியங்களுக்கு என்ற பெயரில் வருகின்றது. அந்நியசெலாவணி சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு வரும் அப்பணம், மசூதி கட்டுவது மற்றும் தருமம் அல்லாத அதாவது தீவிரவாதிகளுக்கு உதவுவது போன்ற காரியங்களுக்கும் திருப்பிவிடப்படுகிறது. 1980ளில் அரேபிய ஷேக்குகள் வந்து தங்கி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்[4]. அப்பொழுதெல்லாம் மதமாற்றம் செய்வதற்கு என்றுதான் பிரச்சினை வரும். சில நாட்களில் விவாதங்களுடன் அடங்கி விடும். ஆனால், இப்பொழுததோ தீவிரவாதம் என்ற பயம் வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தீவிரவாத கட்டுப்பாடு நடவடிக்கைகளில்  கண்ணுரில், எடக்காடு என்ற இடத்தில் மனப்புரம் மசூதியின் வளாகத்தில் வெடிகுண்டுகள், வெடிப்பொருள்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன[5]. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் அருகே, குளத்துப்புழா தைக்காடு குன்னின்புரா பகுதியில், புதியதாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்பே அந்த டிரஸ்ட் அனுமதி இல்லாமல் அயல்நாட்டவர் யாரும் நிகழ்ச்சியில் பங்குக் கொள்ளக்கூடாது, பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது[6].

அந்நியர் விழாவில் கலந்து கொள்ளுதல், பேசுதல்: அதில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (Abdul Kareem Abdul Muhasin Al-Jameel 49 and Abdul Abdul Khader Sulaiman 52) மற்றும் அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் ஆகிய, இருவர் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாது மேடையில் பேசவும் செய்தனர்.  அதைத்தவிர அழைப்பிதழிலும் அவர்கள் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதனல்ல் உள்ளூர்வாசிகளின் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகித்து விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் சவுதி அரேபிய நாட்டின் தூதரக அனுமதியோ, இந்திய நாட்டின் தூதரக அனுமதியோ பெறாமல், பயணிகள் விசா மூலம், கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்[7]. ஆயூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர்கள் குறித்து, ரகசிய தகவல் கிடைத்ததும், சடையமங்கலம் போலீசார் அவர்களை கைது செய்தனர். பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர். சவுதி அரேபியா தீவிவாத்தைதை ஏற்றுமதி செய்யும் நாடாகக் கருதப் பட்டு வருகின்றது[8]. இதைப் பற்றிய பயங்கரமான விஷயங்கள் சமீபத்தில் விக்கி-லீக்கில் கூட வந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அந்த அரசாங்கத்தை மதிக்காமலேயே தீவிரவாதத்திற்கு ஆதரவு, நிதியுதவி, புகலிடம் கொடுப்பது என்பது தொடர்ந்து நடந்து வருகின்றன. சமீபத்தில் நூற்றிற்கும் மேலாக அல்-கைதா தீவிரவாதிகளை அந்நாடு கைது செய்துள்ளது[9]. யேமன், சோமாலியா, எரிகத்ரிடயன், பங்களாதேஷ் என பல நாடுகளிலிருந்து ஹஜ் யாத்திரை என்ற பெயரில் வந்து தங்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியதாக, பாதுகாப்புப் படையினர் யேமன் நாட்டு எல்லைகளில் கைது செய்துள்ளனர்.

1. In the early 1990s, Amirul Azim, accompanied by Salauddin, the Sudanese instructor, entered India via Bangladesh and met Basheer and his associates  for discussing their future plans.

2. In August 1994, “Al-Sirat Al-Mustaqeem (The Straight Path)”, an Islamic journal published in Pakistan (Issue No. 33), carried an interview with Abu Abdel Aziz.  The journal, without identifying his nationality, reported  that Abu Abdel Aziz spoke perfect Urdu and that he had spent extended periods in Kashmir.  It was stated that  Abu Abdel Aziz’s followers, believed to be mostly Indian Muslims from the Gulf,  were part of the seventh battalion of the Bosnian Army (SEDMI KORPUS, ARMIJA REPUBLIKE BH).

3. Basheer, who must now be around 50, is from Parambayam in Kerala.

இப்பிரச்சினையின் கடுமை, கொடுமையான விளைவுகள், முடிவுகளை அறிந்து முஸ்லீம்களே இத்தகைய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேதபிரகாஷ்

© 17-12-2010


[4] இதைப் பற்றி கேரள சட்டமன்றத்தில் பெரிய அளவில் விவாதங்கள் எல்லாம் நடந்துள்ளன.