Archive for the ‘அடிமை’ category

தி கேரளா ஸ்டோரி – திரைப் படத்திற்கு எதிர்ப்பு-தடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

மே 17, 2023

தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்புதடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள்.  உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடைஉச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].  வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.

[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1

[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்,  By Anamika, Published on May 14, 2023

[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days

[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்ததுதி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.

[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html

[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்ததி கேரளா ஸ்டோரிதிரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM

[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380

[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).

[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html

[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23

[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]

[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html

[14]  https://m.dinamalar.com/detail.php?id=3322142

[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN  |   Published On : 16th May 2023 02:50 PM  |   Last Updated : 16th May 2023 02:50 PM

[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (2)

மதம் மாறியவர் வெறும் முஸ்லிமா, லெப்பை முஸ்லிமா?:  நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:

“1. Ansar – அன்சார்,

2. Dekkani Muslims  – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],

3. Dudekula – துதேகுல,

4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),

5. Mappilla – மாப்பிள்ள [குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்],

6. Sheikh – ஷேக்,

7. Syed – சையத்.”

இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜி.மைக்கேல் தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.

எஸ்.ருஹய்யா பேகம் வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலையில் உள்ள வழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய  கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது  தேவையற்றதும் ஆகும்”.

இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்இடவொதிக்கீடுமுதலிய அரசியல்வாதிகளின் சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள்  எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.

முரண்பாட்டுடன் இறையியல் சித்தாந்தம் இருக்க முடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.

பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும்.  இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-12-2022 


[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.

[2] https://www.livelaw.in/news-updates/madras-high-court-a-person-cannot-carry-his-community-of-birth-even-after-conversion-rejects-backward-class-reservation-of-man-215673

[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.

[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST

[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.

https://www.thehindu.com/incoming/converted-muslims-losing-out-on-reservation-in-tnpsc-jobs/article65265386.ece

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

ஜூலை 14, 2018

 

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்குஇந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

FMG - India demonstrates-13

செக்யூலரிஸ இந்தியாவில், பெண்கள் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்றுவது: வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் உடலோடு ஒட்டிய பகுதியை மத நடவடிக்கை என்ற பேரில் ஏன் வெட்டி எடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகள் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கும் போக்ஸா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது[1]. இருப்பினும் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. பெண் சுன்னத் நட்டந்து கொண்டுதான்ன் இருக்கிறது. மேலும் தாவூதி போராஹ் வகுப்பினர் மத்தியில் இருந்த இதுபோன்ற பழக்கம் ஏற்கெனவே குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், சுன்னிகள் இதை ஏற்றுக் கொள்ள வாட்டார்கள். இதையடுத்து ஒருவர் பெண்ணுறுப்பு சிதைப்பினை செய்துகொள்ள விரும்பவில்லை எனில், அதை செய்து கொள்ளும்படி யாரும் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்[3]. அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட் ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா?[4] எனவே, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சுகாதாரத்துறை, சமூகநீதித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும், மஹாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய நான்கு மாநில அரசுகளும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது[5].FMG - India demonstrates-12

பெண்ணுறுப்பு அறுப்புபெண்கள் உன்னத்[6]: “ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன்” [Female Genital Mutilation] என்ற கொடுமைக்கு எதிரான நாளாக பிப்ரவரி-6 -ம் தேதியை 2016, ஐ.நா அறிவித்துள்ளது. ஆனால், பெண்ணிய போராளிகள் எல்லாம் கண்டுகொள்ளவில்லை போலும். ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன் என்றால் புரியாதவர்களுக்கு தமிழில் விளக்கம் ‘பெண் உறுப்பு சிதைவு’.  படிக்கும் பொழுதே பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த கொடிய செயல், ஆப்ரிக்க நாடுகளில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இன்று வரை வலுக்கட்டாயமாக நடத்துப்பட்டுவரும் ஒரு புனித சடங்கு என்றால் நம்ப சங்கடமாகத்தான் இருக்கும்[7]. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, இன்றும் மம்மி களாக பிரமிடுகளுக்குள் இருக்கும் பெண்களுக்கும் இந்த கொடுமை நடந்தேறியுள்ளது. ஆப்ரிக்கா நாடுகளான சோமாலியா, சூடான், எகிப்து, உகாண்டா, கானா, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் பெண்களில், எழுபது சதவீதத்திற்கும் மேல் இப்படி பெண் உறுப்பு சிதைவுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தகவல். அதன் எதிரொலியாகத்தான் ஐ.நா சபை, பெண் உறுப்பு சிதைவிற்கு எதிரான நாளாக பிப்ரவரி-6ம் தேதியை அறிவித்துள்ளதுணப்படியென்றால், 06-02-2016, 06-02-2017 மற்றும் 06-02-2018 நாட்கள் எல்லாம் அமோகமாக கொண்டாடப் பட்டிருக்க வேண்டுமே, ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லையே? கிறிஸ்துவ சமயத்தின் துவக்கத்திற்கு முன்பே, இஸ்லாமிய மதம் ஆப்ரிக்காவை அடைவதற்கு பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது, என்று சையது அபுதாஹிர் எடுத்துக் காட்டினார்.

FMG - India demonstrates-11
பெண் சுன்னத் ஏன் செய்யப்படுகிறது?: பெண் உறுப்பு சிதைவு என்று இன்றைய உலகம் இதற்கு பெயர் சூட்டி இருந்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட இந்த சடங்கிற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் பெண் சுன்னத். அதாவது இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு சுன்னத் என்பது கட்டாயம். அதேபோல் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு பெயர்தான் பெண் சுன்னத். இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சுன்னத் உள்ளதென அதன் மதகுருமார்கள் அறிவித்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக இந்த வழக்கத்தை பின்பற்றுவதும் அதே இஸ்லாமிய சமூகம்தான். “பெண்கள் சைத்தானின் வடிவங்கள் என்று புனித நுால்கள் சொல்லியுள்ளது. அவர்களுக்கு பாலுணர்வு மட்டுமே இருக்கும். அந்த பாலுணர்வை கட்டுப்படுத்தி அவர்களை ஒழுக்கமான பெண்ணாக இருக்கச் செய்யத்தான் இந்த செயல்” என்று அர்த்தமற்ற விளக்கத்தை அதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள்.

FMG - India demonstrates-10
எப்பொழுது செய்யப்படும்?: இந்த பெண் உறுப்பு சிதைவு என்பதை பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது இதற்கு எழுதப்படாத விதி. அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதிற்குள் இந்த சடங்கை முடித்துவிட வேண்டும். ஓடி விளையாடும் சிறுமியை பிடித்துவந்து வலுக்கட்டாயமாக இந்த செயலை அரகேற்றியபின் தான் அவள் துாய்மையடைந்துவிட்டாள் என்று அந்த சிறுமியின் தாய் பெருமை பேசுவார். பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் பெண்ணிற்கான உணர்ச்சி கூறுகள். பெண்ணின் பாலுணர்வு ரீதியான உந்துதலுக்கு இதுதான் முதல் காரணமாக இருக்கின்றது. இதை அறுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும் என்ற கருத்துதான் இந்த வன்கொடுமைக்கு அடிப்படையாக இருந்துவருகிறது. ஆணுக்கு இப்படி, பெண்ணுக்கு அப்படி எப்படி என்பது எப்படி என்று தெரியவில்லை. இதெல்லாம் உண்மையா-பொய்யா ஏன்ற சோதித்துப் பார்த்தனரா?

FMG - India demonstrates-14
சடங்கு எப்படி செய்யப்படுகிறது?: அறுப்பது என்றால் முறையாக மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து அல்ல; விளையாடி கொண்டிருக்கும் சிறுமியை சாப்பிட அழைப்பது போல் “இங்கே வா” என்று அழைத்து, நடக்கப் போகும் கொடுமையை அந்த சிறுமி பார்க்க கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் கண்ணை பொத்தி, அவளை இருட்டு உலகிற்கு கொண்டு சென்று, அதன் பின் சிறுமியின் கதறலோடு இந்த பாதக செயலை செய்கின்றனர். சாதாரணமாக சவரம் செய்யும் பிளேடுதான் இந்த ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படுகிறது. க்ளிட்டோரியஸ் என்ற மேல் தோலை, ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசிவிடுவது இதன் முதல் படி. அதற்கு அடுத்தது “லேபியா பிளாஸ்டர்” என்று சொல்லப்படும் பெண்ணுறுப்பு உதட்டுப் பகுதியை அறுத்து எடுத்து, அதன் பின் “வெஜைனா பிளாஸ்டி” என்று சொல்லபடும் பெண்ணுறுப்பை சிறு துளை மட்டும் விட்டு, துணி தைக்கும் நூலால் தைப்பது என்ற மூன்று நிலைகளில் இது செய்யப்படுகிறது. அறுப்பது முதல் தைப்பது வரை இத்தனை விஷயங்களையும் அரங்கேற்றுவது ஒரு மருத்துவர் அல்ல; அந்த ஊரில் இதற்கென ‘வாழ்ந்துகொண்டிருக்கும்’ பெரிசுகள் அல்லது அந்த சிறுமியின் தாய். இந்த சடங்கை சங்கடம் இல்லாமல் செய்து முடிக்கின்றார்கள்.

FMG - India demonstrates-9
40 நாட்களுக்குப் பிறகு தூய்மை வரும்: அனைத்தும் முடிந்த பின், அந்த பெண்ணின் கால்களை அகட்ட முடியாத அளவிற்கு கட்டிப் படுக்க வைத்துவிடுவார்கள். நாற்பது நாட்கள் கழித்தால்தான் அந்த புண் ஆறும் என்பது அவர்கள் கணக்கு. புனித சடங்கு முடித்த உற்சாகத்தில், வழிந்தோடிய குருதி படிவை தண்ணீரால் கழுவி விட்டு, அந்த வீட்டில் சடங்கு விருந்து நடத்தும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கிராமங்களில் நடந்து வருகின்றன. இந்த பாதக செயலை செய்தால்தான், அந்த பெண்ணின் உடலில் உள்ள துர்நாற்றம் போய் அவளுடைய மேனி அழகு பெற்று, திருமணம் செய்யும் பொழுது பாலுணர்வு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். தைக்கப்பட்ட நுாலை அந்த பெண் திருமணம் செய்த பின் அவளின் கணவன் அறுத்தால்தான் அந்த பெண்ணின் கன்னித்தன்மைக்கு தரப்படும் சான்று. ஆனால் சில நாடுகளில் க்ளிட்டோரியஸை அறுப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.

FMG - India demonstrates-8
செக்யூலரிஸ இந்தியாவில் இதை ஏன் மத சடங்காக கருத வேண்டும்?: மதச்சடங்கு என்ற பெயரில் காலங்காலங்கமாக இந்த கொடுமை நடந்தேறி வந்தாலும், இது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் உலக அளவில் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் எகி்ப்தில் இந்த கொடூர சடங்கிற்கு ஆளான பெண் மரணம் அடைந்து, அது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்க, அதன் பின் அந்த நாட்டில் இந்த சடங்கிற்கு தடை செய்யப்பட்டது. ஆப்ரிக்கா நாடான உகாண்டாவில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் “இது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டும். அந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலான பெண்களுக்கு பெண் உறுப்பு சிதைவு நடந்தேறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கும் இதற்கு தடை வந்து விட்டது.

FMG - India demonstrates-16
.நா ஒப்புக்கொண்ட உண்மை: ஐ.நா. சபை பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில், ஆப்ரிக்க நாடுகளுக்கு பல முறை அழுத்தம் கொடுத்துவிட்டன. சமூக மாற்றமும், பெண் கல்வியும் இந்த முறைக்கு எதிரான மனோபாவங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பழங்குடி மக்களிடையே இருக்கும் இந்த பழக்கத்தை இதுவரை முற்றிலும் தடைசெய்யமுடியவில்லை என்று ஐ.நா சபையே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பெண் சிதைவுக்கு உட்பட்ட பெண்களை வைத்தே பல பிரச்சாரங்களை தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுவருகின்றன. இந்த பெண்சிதைவுக்கு ஆளானவர்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமாக இருப்பார்கள் என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. நாடாளும் சக்தியாக பெண்கள் உருவாகி வரும் இந்தநாளில், இன்றும் எங்கோ ஒரு சிறுமிக்கு பெண் உறுப்பு சிதைவு நடைபெற்றுவருவது வேதனைக்குரிய முரண். ஆனால், பெரியார் பிறந்த மண்ணிலேயே, பெரியாரிஸ்டுகள் கூட பொத்திக் கொண்டு இருந்தது முரணாக இல்லை போலும்!

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-15

[1] The Week, Female Circumcision: ‘Should religious purity involve cutting a body part?’, Mini P Thomas By Mini P Thomas July 13, 2018 17:16 IST

[2] https://www.theweek.in/leisure/society/2018/07/13/female-genital-mutilation-should-religious-purity-involve-cutting-a-body-part.html

[3] https://tamil.news18.com/news/national/why-should-the-bodily-integrity-of-a-woman-be-subject-to-some-external-authority-sc-33235.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, பெண் உறுப்பு சிதைப்பு சடங்கிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விவீடியோ, By : Oneindia Tamil Video Team Published : July 10, 2018, 11:39

[5] https://tamil.oneindia.com/videos/no-one-can-violate-the-integrity-and-the-bodily-privacy-of-a-woman-323004.html

[6] விகடன், உயிரைக்குடிக்கும் பெண் உறுப்பு சிதைவு சடங்குஇன்றும் தொடரும் கொடூர வழக்கம்!, – அ.சையது அபுதாஹிர்,  Posted Date : 13:59 (06/02/2016) Last updated : 15:14 (06/02/2016).

[7] https://www.vikatan.com/news/coverstory/58646-anti-female-genital-mutilation-day.html

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil-2

ஜைனுல் ஆபிதீனுக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்கரீம்: 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு முற்போக்குக் கருத்துகளை எடுத்துவைத்து தனி செல்வாக்குடன் வலம் வந்தவர் பி.ஜெ. ‘‘தவ்ஹித் ஜமாத்துக்கு என்று தனி பள்ளிவாசல், தனி நிர்வாகம் என சகலமும் இருக்கின்றன. தவ்ஹித் ஜமாத்தின் மீடியா நிர்வாகம் முழுவதும் பி.ஜெ கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது. ஏற்கெனவே பி.ஜெவுடன் முரண்பட்ட பலர் இதேபோல குற்றச்சாட்டை சந்தித்து வெளியேற்றப்பட்டனர்’’ என்கிறார்கள்.  இந்த விவகாரம் குறித்து பி.ஜெ-வின் கருத்துக் கேட்க முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை[1]. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம்[2]. “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெவை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம். முதலில் வெளியான ஆடியோ குறித்து எங்களிடம் யாரும் புகார் தரவில்லை. எனவே அதனை நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையை ரமலான் மாதத்துக்குப் பிறகு பொதுக்குழுவில் பேசி முடிவெடுக்க உள்ளோம். பி.ஜெ இல்லையென்றாலும் எங்களது சமூக, மார்க்கப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். இந்த அமைப்பை நிறுவிய தலைவர்மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதிலிருந்தே, எங்கள் அமைப்பின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்’’ என்றார் சிம்பிளாக.- அ.சையது அபுதாஹிர்.

Jainul Andeen -Vedaprakash-FB-3

பாக்கர்ஆபிதீன் லடாயும், இரண்டாகப் பிரிந்த டி.என்.டிஜேயும்: 2009ல் எஸ்.எம்.பாக்கர் மற்றும் ஜெயினுல் ஆபிதீனுக்கு இடையில் வேறுபாடு உண்டாகி, ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்‘அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற புது இயக்கம் உருவானது. பிற்றகு,  அதுவும் உடைந்து ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘என்றொரு புது அமைப்பு உதயமாகியிருக்கிறது. ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்‘அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம்.பாக்கர் மீது செக்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி அவரையும் வேறு சிலரையும் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட பாக்கர், ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘தைத் தொடங்கினார். தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீனிடம் பேசினோம் [ஜூனியர் விகடன்]. ”பாக்கர் மீது புகார்கள் வரத் தொடங்கியதுமே அவரை ஒதுங்கி யிருக்கச் சொன்னோம். அவரோ,மேலும் பண மோசடிகளில் இறங்கினார். விண் டி.வி. முதலீட்டில் இரண்டே கால் கோடி ரூபாய் உட்பட பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கிறார். நிலங்களை விற்றதிலும் அவர் மீது புகார்கள் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தோம். அவர் நடத்திய ஹஜ் சர்வீஸிலும் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. இத்தகைய காரணங்களால்தான் அவரை நீக்கி னோம்.”

Jainul Andeen -Vedaprakash-FB-2

பரஸ்பர குற்றச்சாட்டுகளா, திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தியா?:  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒன்றாக, இரண்டாக பிரிந்தால், இழைத்த குற்றங்கள் போய் விடுமா? கற்பழிக்கப் பட்ட பெண்கள் க்ற்பைத் திரும்பப் பெற்று விடுவார்களா? ஆனால், இங்கும், சட்டப் படி என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியாது. இருவர் மீதும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் – பாலியல் புகார், பெண்களுடன் தொடர்பு, பண மோசடி…..பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்காமல், கட்சிகள் போல உடைவதால், குற்றங்கள் மறைக்கப் படுகின்றன என்றாகிறது. இது பரஸ்பர குற்றச்சாட்டுகள் என்பதை விட, ஏதோ, ஒரு திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தி என்றே தெரிகிறது. போலீஸைப் பொறுத்த வரையில், புகார் கொடுக்காமல், அவர்கள் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். ஆகவே, இந்தியாவிற்குள் வாழ்ந்து, இந்தி சட்டங்களில் சிக்காமல் வாழும், இந்த இந்திய குடிமகன்களை நினைத்தால் தமாஷாகத் தான் உள்ளது.

Jainul Andeen -Vedaprakash-FB-1

கற்பழிப்பு சாமியார்களுக்கு எல்லாம் சட்டத்தின் படி நட்டவடிக்கை எடுக்க வேண்டும்: ஜைனுல் ஆபிதீன் ராம் ரஹீமை விட எப்படி வேறுபட்ட சாமியாராக இருக்க முடியும்? இல்லை நித்தியானத்தாவை விட மாறுபட்ட வழக்காக, இவரது நிலை உள்ளதா? சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்றால், இவர் மீதும், அதே முறையில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வருடமாக அவர்களே, தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு, முதலில் மறுத்து, பிறகு ஒப்புக் கொண்டு, மே 2018 வரை இழுத்துள்ளனர். இதில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. போலீஸுக்கு செல்ல்லாமல், ஜமாத்தில் முடிவெடுப்போம் என்றால், அது இந்திய சட்டங்களையே அவமதிப்பதாகும். இத்தகைய முறை எவ்வாறு செயல்படுகிறது, அரசாங்கத்திற்கு தெரியுமா-தெரியாதா, தெரிந்தால் ஏன் அமைதியாக இருக்கிறது போன்ற கேள்விகளும் எழுகின்றன. தீவிரவாதிகள் விசயங்களிலும், இவர்கள் இவ்வாறு இருப்பதினால், பலர் தீவிரவாதத்தில் இருப்பதே தெரியாமல் போகிறது. பிறகு மாட்டிக் கொள்ளும் போது தெரிகிறது. பிஜே விசயமும், இப்பொழுது அப்படியாகி விட்டது. “சுயோ மோடோ” முறையில், “தேசிய மகளிர் ஆனையம்”  சட்டமீறல்களை எடுத்துக் கொண்டு, விசாரிக்க ஆணையிடுகிறதே, இவ்விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?

PJ Baker fight-1

நிச்சயமாக செக்யூலரிஸவாதிகளின் போலித்தனம் வெளிப்படுகிறது:  இந்தியாவில் “செக்யூலரிஸம்” என்றால், துலுக்கர், கிருத்துவர் இந்திய சட்டங்களில் வரமாட்டார் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டம், நீதிமன்றம், போலீஸார் என்று எல்லோருமே, அவர்களைக் கண்டு கொள்வதில்லை. பெர்ரிதாக பிரச்சினை வரும் போது தான், நடவடிக்கை எடுக்கின்றனர். ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன. சட்டமீறல்களை, ஒரே மாதிரியாக அவை அணுகுவதில்லை.

  1. பிஜே, ஜைனுல்ஆபிதீன்பாலியல்விவகாரம், மற்றஅதிரடிசெய்திகளால்மறைக்கப்பட்டுவிட்டன, டிவிசெனல்களும்கண்டுகொள்ளவில்லைபோலும்.
  2. இந்தியாவில்பாலியல்-செக்ஸ்விவகாரங்கள்கூடசாமியார்கள்விசயங்களில் “செக்யூலரிஸ” மயமாக்கப்பட்டுள்ளதுபோலும்!
  3. துலுக்கர்-கிருத்துவர்களுக்குஎல்லாம்நீதிமன்றம்முதலியவைதேவையில்லை, அவர்களேபேசித்தீர்த்துக்கொள்வர், அல்லதுநீக்கிவைப்பர்போலும்.
  4. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார்.
  5. இதேபோல் 13 பெண்களிடம்பி.ஜெஆபாசமாகப்பேசியுள்ளதோடு, அவர்களுடன்தொடர்பில்இருந்ததற்கானஆதாரங்களும்எங்களிடம்உள்ளன – இப்ராஹிம்.
  6. சன்-டிவிஏன்இந்தஆடியோ-வீடியோக்களைவெளியிடவில்லை? நித்தியானந்தாபுகழ் – லெனின்குருப்புக்குதெரியவில்லையா?
  7. 13 பெண்களின்கதி, அவர்களின்குடும்பங்கள்கதிஎன்ன?, பெண்ணியவீராங்கனைகள்ஏன், எப்படி, எவ்வாறுபொத்திக்கொண்டுஇருக்கிறார்கள்?
  8. கற்பழிப்பாளிகளுக்கு, இவ்வாறுவெவ்வேறுமுறைகளில்தண்டனைகொடுக்கலாம், கூடாதுஎன்றெல்லாம், செக்யூலரிஸஇந்தியாவில்இருக்கமுடியுமா?
  9. இனி “யூனிபார்ம்கிரிமினல்கோட்” [Uniform Criminal Code] எடுத்துவரவேண்டும்என்றுஇந்துத்துவவாதிகள்கேட்பார்களா?
  10. ஹரியோ, வர்த்தினியோ, பாண்டேயோ, புதியதலைமுறைஇத்யாதிகள், இதைப்பற்றிஒன்றும்கண்டுகொள்ளவில்லையோ?

 

© வேதபிரகாஷ்

29-05-2018

PJ Baker fight-2

[1] தி.இந்து, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை ஏன்?: தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம்உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார், Published : 16 May 2018 09:02 IST; Updated : 16 May 2018 09:04 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23899778.ece

 

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)

Tiruma wants tirumala temple demolished

“கோவில் இடிப்பு” பற்றி திருமா பேசிய முழு விவரங்கள்: இனி திருமா பேசியதை அலச வேண்டியுள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் ஆதாரமாக பேசியதை இடது பக்கத்திலும், என்னுடைய “கமென்டுகளை” வலது பக்கத்திலும் காணலாம்: இன்னொரு இடத்தில் உள்ள வீடியோ பேச்சு இவ்வாறு இருக்கிறது[1],

இனிமேல் மசூதி கட்டினால் பாபர் பெயர் வைத்து கட்டுங்கள் இது தான் முஸ்லிம் சமூகத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள்….

துலுக்கருக்கு, இவர் இவ்வாறு பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் என்ன? துலுக்கர் அந்த அளவுக்கு முட்டாள்களா, காபிர் சொன்னதை கேட்டு நடந்து கொள்வதற்கு!

அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ற சான்றுகளும் இல்லை. சான்று ஆவணங்களைக் காட்டுங்கள் என்று நாம் கேட்பது பொருத்தமானது தான் ஏன் ராமர் பிறந்திருந்தால் தானே காட்ட முடியும் (கைதட்டல்) ஒருகற்பனை பாத்திரம் (கைதட்டல்) அதற்கு வாய்ப்பே இல்லை (ஏளனமான சிரிப்பு)

இப்படி ஆவணத்துடன் பேசியது, திருமாவின் உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளது. கருவின் கருவியத் தன்மையும்ம், இந்த விஷத்தமான வெளிப்பாடும் ஒன்றுதான். துலுக்கருக்கு ஆதரவான, விஷத்தைக் கக்கிய பேச்சு இது. ஏனெனில், இத்தகைய கேள்விகளை இஸ்லாம் பற்றி கேட்க திருமாவுக்கு தைரியம் கிடையாது.

அப்படியே இருந்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகள் தான் வரலாறு[2] (ஏளனமான சிரிப்பு) அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்ததாக சொல்கிறார்கள் (அஹ்ஹா. ஹஹ்ஹா….ஏளனமான சிரிப்பு, கைதட்டல்)

2,000 ஆண்டு வரலாறு என்பதை இவரிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், குரான் கூறும், தீர்க்கதரிசிகள், நபிகள் எல்லோரும் கட்டுக்கதை, கற்பனை பாதிரங்களே! துலுக்கர் ஒப்புக் கொள்வார்களா?
அப்படி பார்த்தால்,  இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன……..பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள்.

இவ்வாறு இப்படி கூறியிருப்பதிலிருந்தே, இவரது சரித்திர ஞானமும், பிருகஸ்பதித்தனமும் வெளிப்பட்டுள்ளது. ஜைன-பௌத்த மோதல்கள் பற்றி இவருக்குத் தெரியாதது வேடிக்கை தான். இதற்கான ஆதாரங்களயும் கொடுக்கவில்லை.

எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும்…...[3]

முதலில், இவருக்கு இந்து கோவில், சமண கோவில் மற்றும் பௌத்த விஹாரம் அமைப்பு எப்படி இருக்கும் என்பதே தெரியாது என்பது தான், இவர் பேச்சிலிருந்து வெளிப்படுகிறது.

உங்க வாதத்திற்காக சொல்லுகிறேன்….. (கைதட்டல்) ராமர் கோவிலலிருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றால் 450 ஆண்டு கால பழமையான இந்த வரலாற்றுச் இச்சின்னமான இந்த பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலலைக் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால் …….

இப்படி துலுக்கருக்கு தொடந்து ஜால்ரா போடுவதிலிருந்து, வரும் சந்தேகமாவது, ஒன்று இந்த ஆள் துலுக்கரின் அடிமை, கைகூலி அல்லது விலைக்கு வாங்கப்பட்டவர் அல்லது துலுக்கனாகவே மதம் மாறி இருக்க வேண்டிய நிலை…..

திருப்பதி ஏழுமலையான் இருக்கின்ற இடத்திலே பௌத்த விகாரை கட்ட வேண்டும். திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரை கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரை கட்டப்படவேண்டும் ….

திருமலை கோவில் பற்றி இதுவரை ஊடகங்களில் சொல்லப்படவில்லை ஆனால், அதைப்பற்றி பேசியதிலிருந்து, இவரது வன்மம், குரூரம் மற்றும் கொடிய எண்னங்களின் வெளிப்பாடு அறியப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதும் நோக்க வேண்டியுள்ளது.

சொல்லிக் கொண்டே போகலாம்…… இந்தியா முழுவதும் இருக்கின்ற சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் ஒரு காலத்தில் பௌத்த விஹாரங்களாகவும் சமண கோவில்களாகவும், இருந்தனயாரும் மறுக்க முடியுமா? அதற்கான சான்றுகள் உண்டா? முடியாது. ஏனென்றால் வரலாற்றை அப்படி பார்க்க முடியாது.

தமிழகம் என்று ஆரம்பித்து, ஆந்திர கோவிலைக் குறிப்பிட்டு, பிறகு இந்தியா முழுவதும் அப்படித்தான் என்றது, ஏதோ ஒரு திட்டத்தைக் காட்டுகிறது. துலுக்கர் ஒருவேளை ஏதாவது திட்டத்தை வைத்திருக்கின்றனரா என்று கவனிக்கப்பட வேண்டும்.

அண்ணன் ஹவாஹிருல்லா அவர்கள் ஒரு அருமையான கருத்து சொன்னார்கள் இந்த ஆர்பாட்டத்திலே, இஸ்லாம் என்பது மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறி, அது மசூதியைக் கட்டுவதற்காக என்ற வழிபாட்டு முறை வேறு, மசூதியைக் கட்டுகிறபோது, அது ஒரு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடமாக இருக்கக் கூடாது, இன்னொருவரின் வழிபாட்டு கூடமாக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டுகிறது[4],

இப்படி பெயிலில் வெளிவந்த ஆளைப் பாராட்டி, போற்றியிருப்பது, துல்லர் ஆதரவை மெய்ப்பிக்கிறது. இதையெல்லாம் உண்மை என்பது நம்பியுள்ளதும், திருமாவின் முகத்திரையைக் கிழிக்கிறது. ஏற்கெனவே கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பது நிரூபனம் ஆகிவிட்டது. அதனை வைத்து தான், நிலத்தையும் உச்சநீதி மன்ற கொடுத்து விட்டது. பிறகு நான் துலுக்கன் சொல்வதைத் தான் நம்புவேன் என்றால், அந்நிலையை என்னவென்பது?
அப்படிபட்ட இடத்தில் நாங்கள் மசூதியை கட்ட மாட்டோம், அதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் எங்கள் மரபுஎங்கள் இஸ்லாம் காட்டுகிற வழி என்று சொன்னார்.”

தமிழகத்திலேயே நூற்றுக்கணக்கான மசூதிகளின் உட்புறம் கோவில்களாகத் தான் உள்ளது. இது கூட திருமாவுக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு,ம் துலுக்கர் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்களா அல்லது அடிமையாக்கி விட்டார்களா?

 

 Tiruma opposes Ram temple

தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும்! திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம்! சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது! பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும்? சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது!

© வேதபிரகாஷ்

09-12–2017

VCK can be considered as Islamic movement

[1] https://www.youtube.com/watch?v=zRtvN7mFiJk

[2] 2000 வருடங்களுக்கு முன்னர் வரலாறே இல்லை என்று சொல்லும் இந்த அறிவு ஜீவியை என்ன்னவென்று சொல்வது?

[3] பாவம் இங்கு சமண கோவில்களை ஏன் விட்டு விட்டார் என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு பௌத்தவெறி வந்து விட்டது போலும்!

[4] அப்படி வழிகாட்டித்தான், பாபர் அந்த ராமர் கோவிலை இடித்துள்ளான். மசூதி, கோவிலை இடுத்துக் கட்டப்பட்டது என்பதை நீதி மன்றமே ஒப்புக்கொண்யடாகி விட்டது.

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

திசெம்பர் 6, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

Malikafur attack

பாண்டியர் துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இடம் கொடுத்தமுறையில் செயல்பட்டது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I [1268] கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் கூறுவதும், துலுக்கரின் அவைப்புலவர்கள் மற்றும் சுற்றிப்பார்க்க வந்தவர்ககளின் தென்னிந்திய படையெடுப்புக் கொள்ளை விவரங்களும் எதிரும்-புதிருமாக இருக்கின்றன. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசப் ஹொய்சள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான். ஆனால், கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். இதனால், சோழர்காலத்து பாதுகாப்பு கொண்ட கட்டுபாடு, கடற்படை, மற்ற அரசர்களின் நட்புறவு முதலியை பாதிக்கப் பட்டது என்று தெரிகிறது. பௌத்தர்களும் விரோதியானார்கள் எனும் போது, பாண்டியர் பெருமளவில் தென்னிந்தியாவின் கூட்டமைப்பை, கட்டுக்கோப்பை பாதித்தனர் என்றாகிறது. மேலும், துலுக்கரை தென்னிந்தியாவில் வர முடியாமல், ஹோய்சளர் யுக்திகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், அவர்களையும் வென்றது, அவர்களைச் செயலிழக்கச்செய்தது. அதாவது, துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வர எளிதாகியது.

Tamilnadu ports

கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது இந்து விரோதமானது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I ற்கு இரண்டு மகன்கள் சுந்தர பாண்டியன் [வேறொரு பெண்ணிற்கு / காமக்கிழத்திற்குப் பிறந்தவன்] மற்றும் வீர பாண்டியன் [அரசியின் மூலம் பிறந்தவன்] கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை ஆட்சி புரிந்தான். குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவன் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரேபியன் குறிப்பிட்டுள்ளதாக, ஜே.பி. ப்ரஷாந்த் மோரே குறிப்பிடுகிறார்[1].  வியாபாரம் நிமித்தமாக ஏஜென்ட் போல தந்ததை, அவ்விடங்களே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன போல எழுதி வைத்திருப்பது தெரிகிறது. எப்படியாகிலும், சோழர்கள் காலத்தில் முக்கியமாக இருந்த கடற்கரை பகுதிகளில் துலுக்கர் ஆதிக்கம் செல்லுதினார்கள், அதனால், அங்குள்ள கோவில்கள் இடிக்கப்பட்டன என்று தெரிகிறது. இப்பொழுதுள்ள மசூதி-தர்காக்களின் உட்புற சிற்பத் தூண்கள், கருவற்றை, மண்டபங்கள், குளங்கள் முதலியவை அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. வியாபாரத்திற்கு, முக்கியமாக குதிரை இறக்குமதி போன்றவற்றிற்கு ஏஜென்டுகள், தரகர்கள், துபாஷியாக இருந்தவர்கள், அவ்வாறு நெருக்கமாகினர் என்று தெரிகிறது. மேலும் படைகளிலும், துலுக்கர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

Vira-Sundara Pandyan - imaginary

சுந்தர பாண்டியன் அலாவுத்தீன் கில்ஜியிடம் உதவி கேட்டானா?: சகோதர போட்டி துவேசத்தில், துலுக்கரைப் போன்றே சதியில், துரோகத்தில், கொலைகளில் ஈடுபட்டது, அம்மண்ணில் இருந்த பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றிற்கே ஒவ்வாததாகும். இருப்பினும் சுந்தர பாண்டியன் தனது தந்தையை – மாற வர்மன் குலசேகர பாண்டியன் – 1310 / 1311ல் கொலை செய்தது திகைப்படையச் செய்தது. இக்கொலைக்குப் பின்னரும், தகியுத்தீன் தனது பதவியைத் தொடர்ந்தான் என்பதும் ஆச்சரியமாக உள்ளது. 1311ல் மாலிகாபூர் மதுரையை நோக்கி படையெடுத்து வந்து, துலுக்கப்படைகள் தாக்கியபோது, இந்த இரு பாண்டியர்களும் புறமுதுக்கிட்டு ஓடி ஒளிந்தனர். சுந்தர பாண்டியன், அலாவுத்தின் கில்ஜியிடம் தில்லிக்கே சென்று சரணடைந்தான், என்று சரித்திராசிரியர்கள் எழுதுகின்றனர். அப்படியென்றால், சகோதரனைக் காட்டிக் கொடுத்தவனே அவன் தான் என்றாகிறது. ஆனால், வீர பாண்டியன் உள்ளூர் ஆதரவினால் தப்பித்தான். மாலிக்காபூர் கோவிலை கொள்ளையெடித்து, இடித்து, எரித்தான். அதாவது அந்த காலகட்டத்தில் தான், துலுக்கர்களின் அழிப்பிற்குண்டான கோவில்களை அசுத்தமாக, மிலேச்சர்களினால் தாக்கப்பட்டது என்ற முறையில் பூஜை-புனஸ்காரம் விடுத்து, ஒதுக்கி வைத்தனர் என்று தெரிகிறது. பிறகு, பரிகாரம் போன்ற முறைகளினால், அவை மீட்டெடுக்கப் பட்டன. விஜய நகர காலத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் புதிப்பிக்கப் பட்டன.

Malikafur attack -tent

பாண்டியனின் துரோகத்தால், துலுக்கர் ஆதிக்கம் பெற்றது: சுந்தர பாண்டியனுக்கு ஆதரவாக துலுக்கப்படை ஒன்று ஆதரவாக நிறுத்தப் பட்டது. ஏனெனில், 1313ல் கேரளத்து ராஜா ரவி வர்மன், தென் பெண்ணாரைத் தாண்டி, பூந்தமல்லி மற்றும் நெல்லூரை பிடித்துக் கொண்டான் என்றுள்ளது. அதாவது பாண்டியரை வென்றான் என்றாகிறது. அதனால், குர்ஷூ கானை [இவனும் இந்துவாக இருந்து துலுக்கனாக மதமாற்றப்பட்டவன்] 1318ல் மலபாருக்கு அனுப்பியது, மறுபடியும், அதனை, துலுக்கர்களின் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பியிருக்க வேண்டும். அமீர் குர்ஷூ எழுதியவற்றை வைத்து தான், சரித்திராசிரியர்கள் இத்தகைய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். வெறும் கலிமா சொல்ல வைத்தே, துலுக்கராக்கினர், அவர்கள் “பாதி துலுக்கர்” அதாவது “பாதி இந்துக்கள்” என்று அமீர் குர்ஷூ எழுதி வைத்தான். 1335ல் முகமது துக்ளக்கின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு துலுக்க ஆட்சி மதுரையில் ஏற்படுத்தப் பட்டது. துலுக்க ஆவணங்கள் பிரகடனப்படுத்திக் கொள்வது போல, அவர்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்ததா என்பது சந்தேகமே.

Malikafur attack and kill people

கொடியகுரூரதுலுக்க அரக்கர்களின் முடிவு அவ்வாறே அமைந்தது: 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், தங்கம், வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் தில்லிக்குச் சென்ற மாலிக் கபூருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அலாவுதீன் கில்ஜி பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனைவரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தி, ‘மாலிக் நைப்’ என்ற பட்டத்தை அனனுக்குக் கொடுத்தான். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தான், அந்நிலையில், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டான். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினான். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர், மாலிக் கபூர் பாதுகாவலர்களைக் வைத்தே, அவனை நள்ளிரவில் சுற்றி வளைத்து, கை வேறு கால் வேறாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறு கில்ஜி மற்றும் மாலிகாபூர் கொடிய-குரூர-துலுக்க அரக்கர்களின் முடிவு அமைந்தது. இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.

Kampanna saw the broken linga by Malikafur

மாலிக்காபூருக்குப் பிறகு தங்கி விட்ட துலுக்கரின் நிலை, திட்டம் முதலியன: மாலிகாபூர் 1311லேயே தில்லிக்குத் திரும்பி சென்று விட்டான். இருப்பினும், அவனுடன் வந்தவர்களில் சிலர் தங்கி விட்டனர்.  அவர்கள் தான் பகீர், சாமியார் போல திரிந்து தகவல்களை அறிந்து தில்லிக்கு அனுப்பி வைத்தவர்கள் எனலாம். ஜெசுவைட் என்கின்ற கத்தோலிக்க கிருத்துவ சாமியார்களும் இதே முறையைக் கையாண்டனர்[2]. முகமது துக்ளக் கி.பி.1324ல், அதே ஆசையுடன் மதுரைக்கு படைகளை அனுப்பி வைத்தான். பாண்டியர்களை தெற்காகத் துரத்திவிட்டதால், 1334 முதல் 1378 வரை மதுரையை சுல்தான்கள் பெயரால் பட்டாணியர்கள் எட்டுப்பேர்கள் மதுரையை ஆண்டு வந்து இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் உடெளசி சலாதீன், குப்தீன், கியாஸ் உத்தீன், நாசீர் உத்தின், அடிலபெருதீன், முபராக்சா, அல்லாவுதீன், சிக்கந்தர். இவர்களடைய கொடுங்கோல் ஆட்சி என்றும் வரலாற்று ஆசிரியர் – 60,000 பட்டாணியர்கள் மதுரை நகர்க்குள் ஆயுதம் கையில் வைத்துக் கொண்டு தங்கி இருந்து தமிழ்நாட்டில் கொள்கையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் மதுரை மற்றும் சுற்றியுள்ள நகரங்கள், பகுதிகளில், அதிகமான அளவில், சேதங்கள் விளைந்தன.

© வேதபிரகாஷ்

06-12-2017

Malikafur attack -atrocities- imaginary

[1] J. B. Prashant More, Muslim Identity, Print Culture, and the Dravidian Factor in Tamil Nadu, Orient Longman, New Delhi, 2004, pp.9-12.

[2] ஜெசுவைட் பாதிரிகள் தங்களது கடிதங்கள், குறிப்புகள் முதலியவற்றில் இதைப் பற்றி எழுதியுள்ளனர். மதம் தவிர, பொருளாதாரம், பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றைப் பற்றி விவரமாக எழுதி அனுப்ப்பியுள்ளனர்.

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (2)

ஓகஸ்ட் 7, 2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (2)

Salem - Hindu festival opposed- why then shops put-up-3-08-2017

திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர்:  இதுபற்றிய தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதால் இருதரப்பினரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதுகுறித்து அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பிறகு இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒரு தரப்பினர் கோவிலில் திருவிழாவை நடத்துவோம் என்றும், அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது ஒரு தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதுதான் துலுக்கரின் லட்சணம் என்று தெரிந்து விட்டது! செக்யூலார் நாட்டில் துலுக்கருக்கு உரிமைகள் இருந்தால், இந்துக்களுக்கு இல்லை என்று எப்படி இருக்கலாம். இதனால் தான் அடக்கப் படும் இந்துக்கள் பொங்கி எழுகிறார்கள்.

Muslims participated in Kumbabisekam - July 2016

ஜூன் 2016ல் முஸ்லிம்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டது[1]: இந்தியா, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜமாத்தலைவர் மீராமுகைதீன், மசூதி இமாம் ஜாபர்அலி தலைமையில் முஸ்லிம்கள், பூஜைக்கு உரிய தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாகிகள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். முஸ்லிம்கள், யாகசாலை பந்தலுக்கு முன் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினரும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஜமாத் தலைவர் மீரா முகைதீன், ‘மத பாகுபாடு இன்றி ‘மாமா’, ‘அண்ணன்’ என்ற உறவு முறை சொல்லித் தான் இன்று வரை பழகி வருகிறோம். இல்ல விழாக்களில் இருமதத்தினரும் பங்கேற்க தவறுவது இல்லை. இந்த உறவு என்றும்தொடரும்,’ என்றார். மசூதி இமாம் ஜாபர் அலி கூறுகையில், ‘ரமழான் நோன்பு காலத் தடையை கடந்து கோயிலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்,’ என்றார். ஆனால், இதை பதிவு செய்த முஸ்லிம் கேட்பது[2], “எங்கே செல்கிறது முஸ்லிம் சமூகம்?”!  அதாவது, “இந்து-முஸ்லிம்” வளர்க்கலாம் என்றாலும், தூண்டிவிடும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

Why Muslims oppose festivals celebrated over 60 years-03-08-2017

60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வரும் போது, தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்?: இது ஒருபுறம் இருக்க, கிச்சிபாளையம் மெயின்ரோட்டில் ஒரு தரப்பினரும், பிரிவு ரோட்டில் மற்றொரு தரப்பினரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் (பொறுப்பு) மாதேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வருவதாகவும், ஆனால் தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்று ஒரு தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், அந்த தகவலை மற்றொரு தரப்பினரிடம் தெரிவித்தனர்.

Muslims received Hindus with garlands 03-08-2017-Vikatan

மதவாத காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: அவர்கள் சொல்லியது மதவாதமாக இருந்தது. ஆண்டாண்டுகளாக கோவில்கள் இருக்கும் போது, திடீரென்று முஸ்லிம்கள் வந்து, முழுத் தெருவையும் ஆக்கிரமித்துக் கொண்டு, எங்கள் தெருவின் வழியாக வராதே என்பது எப்படி சட்டப் படி சரியாகும். அவர்களைத் தானே, போலீஸார் முதலில் தடுத்திருக்க வேண்டும்? அதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் தலா ஐந்து பேர் வீதம் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[3]. இதனால் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்[4]. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதையொட்டி கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. மறியலில் ஈடுபட்டு, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 85 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6].

Muslims received Hindus with garlands - August 2011- Ervadi Dargah

ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை?: மனித நேயம், மத நல்லிணக்கம், ஒற்றுமை, அமைதி என்றால் பேசினால் வந்து விடாது. மக்களை மக்களாக மதிக்கத் தெரியாமல் இருந்தால், முஸ்லிம்களும் அமைதியாக மற்றவரோடு வாழ முடியாது. இதனால் தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டும், இந்தியன் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றதை போல மற்ற முஸ்லிம்கள் ஏன் செய்ய முடியவில்லை. ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை. மாறாக தடுக்க, எதிர்க்க, அவதூறு செய்ய ஏன் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னணி என்ன? அதிலும் முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

06-08-2017

Muslims received Hindus with garlands - August 2017-Ramanathapuram Daily Thanthi

[1] ஜைஜில் நியூஸ், எங்கே செல்கிறது நம் சமூகம்? கோயில் கும்பாபிஷேகத்தில் முஸ்லிம்(?)கள், By  admin3, June 18, 2016

[2] http://www.zajilnews.lk/37777

[3] The Hindu, Timely intervention by police prevents clash between two groups in Salem, SPECIAL CORRESPONDENT, SALEM,AUGUST 03, 2017 07:11 IST, UPDATED: AUGUST 03, 2017 07:12 IST.

[4] http://www.thehindu.com/news/cities/Coimbatore/timely-intervention-by-police-prevents-clash-between-two-groups-in-salem/article19412808.ece

[5] தினமலர், திருவிழா நடத்துவதில் மோதல்: சேலத்தில் 85 பேர் மீது வழக்கு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.4, 2017, 07:17.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1826492

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

மார்ச் 30, 2014

சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இந்தோனேசிய பெண் தண்டனை 2014

இஸ்லாமில்  பெண்களின்  உரிமைகள்  பற்றி  பேசுவதும்,   நடப்பதும்: பெண்களின்  உரிமைகள்  பற்றி  முஸ்லிம்கள்  பிரமாதமாகப்  பேசுவார்கள். ஆஹா  பாருங்கள்  இஸ்லாதில்  போல உரிமைகள் மற்ற வேறு எந்த மதத்திலும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், தொடர்ந்து பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் பாலியில் வன்மங்களுக்கு பெண்கள் ஈடுபடுத்தப் படவேண்டும்,  மாறாக அவர்கள் செக்ஸ் கொடுமையை தாங்கமுடியாமல், ஒருவேளை கொதித்து எழுந்தால்,  அவர்களை அடித்து,  நொறுக்கி வழக்குகள் போட்டு,  சரீயத் சட்டம் மூலம் மரணதண்டனைக் கொடுத்து ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள் அல்லது அவ்வாறெல்லாம் இப்பொழுது நடக்கிறதா என்பது போல மௌனமாக இருக்கிறார்கள்.  இந்நிலையில் வழக்கம் போல இப்படியொரு செய்தி வந்துள்ளது.  வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரைக்கும்,  இந்த பெண்களை வேலைக்கு வரவழைப்பது என்பது,  நவீனகால அடிமைத்தனம்,  அடிமை வியாபாரம் என்றுதான் மெய்பிக்கப்படுகிறது[1].

 

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இந்தோனேசிய பெண் சவுதி தண்டனை 2014

இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலைதுண்டிப்பு: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு,  சவுதி அரேபியஅரசு,  10 கோடி ரூபாய் கேட்டுள்ளது[2]. சவுதி அரேபியாவில்,  நுராஅல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த,  சேத்தினா ஹ்பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும்,  கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச்சென்றது தொடர்பாக, கடந்த 2007ம்ஆண்டு,  ஜூமாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தமாதம், 14ம்தேதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.  இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்டஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து  (ரத்தப்பணம்), மரணதண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதிநீதி மன்றம், “இருவாரங்களுக்குள், இந்தத்தொகையை கொடுத்தால், பெண்ணின்  மரணதண்டனை  நிறுத்தப்படும்[3];  இல்லை  எனில், மரணதண்டனை  நிறைவேற்றப்படும்’  என,  கூறியுள்ளது[4]. ஆனால்,  11 கோடிரூபாய்  இல்லாததால், ஜூமாதியின்  குடும்பத்தினர்,  நிதிதிரட்டும்  பணியில்  ஈடுபட்டுள்ளனர்[5].  அவர்களுக்கு  ஆதரவாக, பொதுமக்கள்  நிதியுதவி  அளிக்கத்  துவங்கியுள்ளனர்[6]. இந்தோனேசியாவும்  ஒரு  இஸ்லாமியநாடு  தான், இருப்பினும்  இவ்விசயத்தில்  அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முயன்று வருகிறது.  ஊடகங்களிலும் தண்டனைக்கு  எதிராக  கருத்துருவாக்கம் ஏற்படுகிறது[7].

 

satinah-binti-jumadi-ahmad

satinah-binti-jumadi-ahmad

தெற்காசிய  நாடுகளினின்று  ஏற்றுமதி  செய்யப்படும்  பெண்கள்:  வீட்டுவேலைக்கு  என்று  பல  தெற்காசிய  நாடுகளிலிருந்து ஆயிரக்ககணக்கான  பெண்கள்  வருடந்தோறும்  ஏஜென்டுகள்  மூலம்  அழைத்துச்  செல்லப்பட்டு, ஷேக்குகள்  வீடுகளில்  விடப்  படுகிறார்கள். அதற்குப் பிறகு,  பெரும்பாலான  பெண்களின்  கதி என்ன என்று தெரிவதில்லை. ஷேக்குகள்  அப்பெண்களை  தங்களது  காமத்திற்கு  உபயோகப்படுத்திக்  கொண்டு, வீட்டுவேலைகளைக்கும்  உட்படுத்திக் கசக்கிப்பிழிந்து  விடுகின்றனர். சரியாக  வேலை  செய்யாவிட்டால், மறுத்தால்  அடித்து  உதைக்கப்படுகிறார்கள். அத்தகைய சித்திரவதைகளுக்கு அளவேயில்லை.

செக்ஸ் அடிமைகள்

செக்ஸ் அடிமைகள்

கொடுமைப்  படுத்தப்பட்ட  பெண்க்ளின்  படங்கள்  சிலநேரங்களில்  வெளியில்  வருவதும்  உண்டு[8]. சவுதி  அரேபியா  இவ்விசயத்தில்  மிகவும்  குரூரமாகவே  செய்து  வருகின்றது[9].   பொதுவாக  குரூரமாக  சித்திரவதை  செய்யப்படும்  இப்பெண்கள், ஒருநிலையில்  தடுக்கப்  பார்க்கிறார்கள்,   எதிர்க்க  முயல்கிறார்கள். அந்நிலையில்  பொய்வழக்குப்  போட்டு  தண்டனைக்குட்படுத்தப்  படுகிறர்கள்.  பல  நேரங்களில்  பாதிக்கப்பட்ட  பெண்களே  பழிவாங்க  தாங்களே  சந்தர்ப்பம்  பார்த்து  எஜமானர்களைத்  தாக்குவது, ஏன்கொலை  செய்வதும்உண்டு. ஆனால், இஸ்லாமிய  சட்டத்தில்  பெண்களுக்கு  எதிராகத்தான்   சரத்துகள்  இருப்பதால்,  அவர்களால்  ஒன்றும்  செய்ய  முடியாது. ஒன்று  குரூரமாக  அடிபட்டு  சாகவேண்டும்  அல்லது  இவ்வாறு  மரணதண்டனைக்குட்பட வேண்டும்.  இதுதான்  கதி[10]. ஜனவரி 2013ல்  ஒரு  இலங்கைப்பெண்  கொல்லப்பட்டபோதும்  இத்தகைய  விவரங்கள்  வெளிவந்தன[11].  அப்பொழுது  45 பெண்கள்  தண்டனைக்காகக்  காத்துக்  கிடக்கின்றனர்  என்று  செய்தி  வெளியாகின[12].  குவைத்திலிருந்து  ஒரு  பெண்  எழுதிய  கடிதத்திலும்  அத்தகைய  விவரங்கள்  வெளியாகின[13].

 

Saudi Arabian women slavery

Saudi Arabian women slavery

ஷரீயத்  என்கின்ற  இஸ்லாம்  சட்டப்படி கடுமையான, குரூரமான  தண்டனைகள்  கொடுக்கப்  படல்: சவுதி  அரேபியாவில்  கொலைகுற்றத்துக்காக  2  பேருக்கு  தலைதுண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது [14]. இந்தாண்டில்  இதுவரை 7 பேரின்  தலை  துண்டித்து  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  இஸ்லாமிய  நாடான  சவுதி  அரேபியாவில்  பலாத்காரம், கொலை, மதத்தை  அவமதித்தல்,  ஆயுதங்களுடன்  கொள்ளையடித்தல்,  போதைமருந்து  கடத்துதல்  ஆகிய  குற்றங்களுக்கு  மரணதண்டனை  அளிக்கப்படுகிறது. தலையை  துண்டித்து  மரணதண்டனையை  நிறைவேற்றுகின்றனர். தெயிப்  நகரில்  பழங்குடியினத்தை  சேர்ந்த  அப்துல்லா  என்பவர்,  அதே  இனத்தை  சேர்ந்த  ஒருவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டது.  அதுபோல  தென்மேற்கு  அசிர்  பகுதியில்  நாசர் அல்  கதானி  என்பவர்  அயத்  இல்கதானி  என்பவரை  கொலை  செய்ததாக  குற்றம்  சாட்டப்பட்டார்.  இருவர்  மீதும்  குற்றம்  நிரூபிக்கப்பட்டதை  தொடர்ந்து  அவர்களுக்கு  மரணதண்டனை  விதிக்கப்பட்டது.   பிறகு இருவரின்  தலையைத் துண்டித்து  தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக  உள்துறை  அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  இந்தாண்டு  தொடங்கி 35  நாட்களே  ஆகியுள்ள  நிலையில்,   இதுவரை 7 பேருக்கு  மரணதண்டனை  நிறைவேற்றப்  பட்டுள்ளது.  கடந்த  ஆண்டு  தலை  துண்டிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை  78.  இதில்  வெளிநாட்டினரும்  அடக்கம்.   2012ல்   79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும்  மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டது  குறிப்பிடத்தக்கது[15]. சவூதியில் 5  வயது  மகளை  கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்  கொன்ற  இஸ்லாமிய  போதகருக்கு 8 ஆண்டு  சிறை, 800 சவுக்கடி –  சாட்சி  சொன்ன  மனைவிக்கும்  தண்டனை!  என்ற  செய்திகள்  எல்லாம்  சகஜமாக  வந்துள்ளன[16].

 

Saudi treatment of migrant workers

Saudi treatment of migrant workers

முலைப்பால்  ஊட்டுங்கள்,   ஆனால்  காரை  ஓட்ட  பெண்களுக்கு  அனுமதியில்லை!: சவுதி  அரேபியாவில்  பெண்களுக்கு  பற்பல  கட்டுப்பாடுகள்  உள்ளன.   எல்லோரும்  உடலை  மறைப்புத்துணியால்  மூடிக்கொண்டு  இருக்க  வேண்டும். வெளியேபோனால், ஒரு  ஆணுடன்தான்  போகவேண்டும். வேலைக்குப்  போகக்  கூடாது…………….இப்படி  ஏராளமான  விதிகள். இந்நிலையில்  பெண்கள்  காரோட்ட  வேண்டி  கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம்  மறுப்புத்  தெரிவித்துள்ளது. செய்க்  அப்துல்  மோஷின்  பின்நாசர்  அலி ஒபைகன்  என்ற  இஸ்லாமிய  வல்லுனர்  சமீபத்தில்  ஒரு  பத்வா  கொடுத்துள்ளார்.  இதன்படி,  சௌதி  பெண்கள்  வெளிநாட்டு  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  கொடுக்கலாம்,   அவ்வாறு  செய்வதால்,   இஸ்லாமிய  முறைப்படி,  அவர்கள்  மகன்கள்  ஆவார், தமது  மகள்களுக்கு  சகோதரர்கள்  ஆவர்.   இதன்படி,   புதியவர்கள்  கூட  இந்த  பத்வா  மூலம்,   குடும்ப  பெண்களுடன்  கலந்து  இருக்கலாம்.   இதனால்,   முலைப்பால்  உண்ட  அந்த  அந்நிய  ஆண்மகன்  பெண்களிடம்  செக்ஸ் ரீதியிலாக  தொந்தரவு  கொடுக்கமாட்டான்.   இஸ்லாம்  இதை  அனுமதிக்கிறது.

 

saudi slavery cartoon

saudi slavery cartoon

“ஒன்று  எங்களை  காரோட்ட  அனுமதியுங்கள்  அல்லது  எங்களது  காரோட்டிகளுக்கு  முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”: சவுதியில்  என்ன  பிரச்சினை  என்னவென்றால்,  கடைக்குச்  சென்றுவிட்டு  வரும்  பெண்கள்  திரும்ப  வீட்டுக்கு  போக, காரோட்டி  வருவதற்காகக்  காத்துக்  கிடக்க   வேண்டியுள்ளது.  அதனால், தாங்களே  காரோட்ட  வேண்டும்  என்று  விரும்புகிறார்கள்.  இதனால்  தேவையில்லாமல் நேரத்தை  வீணடிக்க  வேண்டாம்  என்கிறார்கள்.  இதையே,   சவுதி  பெண்கள்  தமக்கு  சாதகமாக  எடுத்துக்கொண்டு,  பிரச்சாரம்  செய்ய  ஆரம்பித்துள்ளதாகத்  தெரிகிறது.சவுதி  குடும்பத்திற்கு  ஒரு  காரோட்டித்  தேவைப்படுகிறது.  அதற்கு  பெண்களே  காரோட்ட  அனுமதிக்கப்  படவேண்டும்  என்று  அந்நாட்டுப்  பெண்கள்  போராடி  வருகின்றனர்.  இந்நிலையில்,   அப்பெண்கள்  கூறுவதாவது,    “ஒன்று  எங்களை  காரோட்ட   அனுமதியுங்கள்  அல்லதுஎங்களதுகாரோட்டிகளுக்கு   முலைப்பால்  ஊட்ட  அனுமதியுங்கள்”   என்று  அதிரடியாகக்  கேட்டுள்ளார்கள்[17]!  வளைகுடாநாடுகளில்  பெண்கள்  வேலைக்குப்  போவதும்  அதிகரித்துள்ளது.  சுமார்  மூன்று  வருடங்களுக்குப்  பிறகு,   இப்பொழுது  அல்  வலீது  பின்  தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற  பில்லியனர்  இளவரசர்  பெண்கள்  காரோட்டுவது  பற்றி  தனது  இணக்கமாகக்  கருத்தை  வெளியிட்டுள்ளாராம்.

 

© வேதபிரகாஷ்

30-03-2014

 

[1] http://www.algeria.com/forums/world-dans-le-monde/23714-saudi-slave-treatment-migrant-workers-condemned.html

[2]தினமலர், இருவாரங்களில்ரூ.10 கோடிதராவிட்டால்பணிப்பெண்ணின்தலைதுண்டிப்பு, சென்னை, 30-03-2014.

[3] http://www.ibtimes.co.uk/savesatinah-abused-indonesian-maid-be-beheaded-saudi-arabia-unless-family-pays-1m-1441598

[4] http://www.thejakartaglobe.com/news/indonesia-to-pay-1-87m-to-save-maid-from-death-row-in-saudi-arabia-bnp2tki/

[5] http://www.thejakartaglobe.com/news/indonesia-raising-blood-money-domestic-worker-death-row-saudi-arabia/

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=944177

[7] http://www.thejakartapost.com/news/2014/03/27/editorial-the-tale-satinah.html

[8]In 2010, shocking photographs emerged of maid Sumiati Binti Salan Mustapa, 23, who suffered severe injuries from being stabbed, burned and beaten. Her employer was sentenced to just three years in jail but was later acquitted altogether, in a case that outraged human rights groups.

Speaking at the time, Wahyu Susilo of the Indonesian advocacy group, Migrant Care, said: ‘Again and again we hear about slavery-like conditions, torture, sexual abuse and even death. ‘But our government has chosen to ignore it. Why? Because migrant workers generate £4.7billion in foreign exchange every

[9]Saudi Arabia is notorious for its treatment of domestic staff, the majority of who migrate from poverty-stricken countries.

[10] http://www.dailymail.co.uk/news/article-2261655/Scores-maids-facing-death-penalty-Saudi-Arabia-crimes-child-murder-killing-employers.html

[11] http://www.theguardian.com/world/2013/jan/13/saudi-arabia-treatment-foreign-workers

[12]More than 45 foreign maids are facing execution on death row in Saudi Arabia, the Observer has learned, amid growing international outrage at the treatment of migrant workers.

The startling figure emerged after Saudi Arabia beheaded a 24-year-old Sri Lankan domestic worker, Rizana Nafeek, in the face of appeals for clemency from around the world.

[13]https://islamindia.wordpress.com/2010/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

[14] http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346

[15]See more at: http://www.result.dinakaran.com/News_Detail.asp?Nid=78346#sthash.I7cDgE99.dpuf

[16] https://islamindia.wordpress.com/2013/10/10/islamic-clergy-raped-her-daughter-tortured-and-killed-also-but-only-jailed/

[17] https://islamindia.wordpress.com/2010/06/24/saudi-women-threaten-to-breastfeed-their-drivers-if-not-allowed-to-drive/