Archive for the ‘அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்’ category

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ்ஜிஹாத் செய்யலாம்,  எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

திசெம்பர் 6, 2022

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ் ஜிஹாத் செய்யலாம்எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

05-12-2022 – தமிழ்.இந்து மறுபடியும் அதே செய்தியை வெளியிட்டது: “பெண்களுக்கு 18 முதல் 20 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கும் இஸ்லாமிய பார்முலாவுக்கு இந்துக்களும் மாற வேண்டும்[1]. அப்போதுதான் குழந்தைப்பேறு எளிதாக இருக்கும் என்பதுடன் பெற்றோரும் தங்களது இளம் வயதிற்குள்ளாகவே தங்களது பிள்ளைகளுக்கும் வசதியாக திருமணம் நடத்தி வைக்க முடியும்,” என அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் மேலும் கூறியது, “இஸ்லாமிய வழக்கப்படி ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் முடித்து வைக்கப்படுகிறது. அதே போன்று பெண்களுக்கும் அரசு அனுமதித்துள்ள 18 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மறுபக்கம், அவர்கள் (இந்துக்கள்) திருமணத்துக்கு முன்பாகவே சட்டவிரோதமாக இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர்[3]. [தமிழில் தமிழ்.இந்து உட்பட முதலில் இப்படி வெளியிட்டு விட்டு, பிறகு, “சட்டவிரோத மனைவிகளை……” என்றதை சேர்த்து வெளியிட்டனர்.] இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே அத்தகைய “எடிடிங்” போன்ற முறை கையாளப் பட்டதா என்று தெரியவில்லை.

இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்: [இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்.– தினத்தந்தி] பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல், வாழ்க்கையை அனுபவித்து பணத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்[4]. 40 வயதில் என்னபெற்றோரின் நிர்பந்தத்தால் 40 வயதுக்குப்பிறகு அவர்கள் முறைப்படியான திருமணத்தை செய்து கொள்கின்றனர்[5]. 40 வயதிற்குப் பிறகு திருமணம் செய்து அவர்கள் எப்படி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பார்கள்[6]. நிலத்தில் சரியான நேரத்தில் விதைக்கும் போதுதான் நல்ல வளர்ச்சியையும், விளைச்சலையும் எதிர்பார்க்க முடியும்”. [இந்த கடைசி வரியும் விசமத்தனமானது. இத்தகைய கருத்துகளை இந்துக்கள் சொல்லியிருந்தால், அது பெருத்த சர்ச்சையாகி இருக்கும். எல்லா முஸ்லிம் தலைவர்களும் குதித்திருப்பார்கள்….இந்துக்கள் படித்து, வேலைக்குச் சென்று சம்பாதித்து, பெற்றோர்களை மற்ற குடும்பத்தினரை பொறுப்புடன் காப்பாற்றி வரவேண்டியுள்ளது. சகோதரிகள்-சகோதரர்களுக்கு திருமணம் ஆனப் பிறகு, தம்பி-தங்கைகளுக்கு திருமணம் போன்ற சம்பிரதாயங்களும் அனுசரிக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம் கொச்சைப் படுத்த முடியாது…..இந்து இளைஞர்கள் அவ்வாறு பினைப்புகளுடன் இருப்பதனால், முஸ்லிம்களை போல பயங்கரவாதம், தீவிஅவாதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் எனலாம்….]

நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்: முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், டெல்லியில் ஷ்ரித்தா வாக்கர் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் லவ் ஜிகாத் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியாவுக்கு அப்தாப்புக்கள் வேண்டாம், கடவுள் ராமர் போன்ற நரேந்திர மோடி தான் வேண்டும் என்றும் கூறியிருந்தார். அது குறித்து கூறிய பத்ருதீன், “உங்களை யாரும் தடுக்கவில்லையே. நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள். நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்று கூறியுள்ளார். வக்ஃபு வாரியம் நாடு முழுவதும் புதிதாக பெண்களுக்காகவே 10 கல்லூரிகளை கட்டவிருப்பதாக அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய பத்ருதீன், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். [நிச்சயமாக இதெல்லாம் உள்நோக்கம் கொண்ட கருத்துகள், பேச்சுகள்…எந்த இந்துவும் அம்மாதிரி முஸ்லிம் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லமாட்டான்.  “உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதிலும் வெறுப்புப் பேச்சுதான் வெளிப்படுகிறது….]. இப்பொழுது அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களைப் போல, இந்துக்கள் காரியங்களைச் செய்ய முடியாது: கருத்து சொல்வதற்கே முஸ்லிம்கள் பொறுப்பதில்லை. சமீபத்தில் நூபுர் சர்மா கருத்திற்கு தலை வெட்டி கொலை செய்த குரூரங்கள் எல்லாம் நடந்தேறி விட்டன. பிறகு, ஒரு இந்து முஸ்லிம் பெண்ணைத் தூக்கிச் செல்வது என்பதெல்லாம் கலவரங்கள், குண்டுவெடிப்புகளில் தான் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். “நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதில் மிரட்டல் தொணி தான் வெளிப்படுகிறது. ஆமாம், நிச்சயமாக, இந்துக்களுக்கு அத்தகைய, அந்தவிதமான பலம் இல்லை. இருந்தாலும், அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஆகவே, அவ்வாறு தூண்டிவிடு வகையில் பேச வேண்டிய தேவை, அவசியம், எதிர்பார்ப்பு என்னவென்று தெரியவில்லை. வக்ஃ / முஸ்லிம்கள் கல்லூரிகளில், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்,” என்றால், அவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்குமா அல்லது அவர்கள் திரும்பி வரமுடியாத நிலை ஏற்படுமா என்று ஆராய வேண்டியுள்ளது.

எதிர்ப்பு கிளம்பியதும், மன்னிப்பு கேட்டதும்: இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அஜ்மல் பேசியுள்ளதாக காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தாவடு, உயர்வு நவிற்சி, கிண்டல், நக்கல், இருமாப்பு முதலியவற்றைக் கண்டுகொள்ளாமல், காங்கிரஸ் வ்வாறு செய்கிறது என்பது உஅனாகிறது. குஜராத் தேர்தல் நடக்கும் நிலையில், திசை திருப்பும் வகையில் பா.ஜ., கூறியபடி அஜ்மல் பேசியுள்ளதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன. மேலும், அஜ்மலிமன் விசமத்தனமான பேச்சுக்கு எதிராக அசாமின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிணமுல் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தப்பட்டது[7]. இந்நிலையில், பத்ருதீன் அஜ்மலின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்[8]. இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் ஹிந்துக்கள் குறித்தும், ஹிந்து பெண்கள் குறித்தும் குறிப்பிடவில்லை; பொதுவாக குறிப்பிட்டேன்[9]. இருப்பினும் இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது[10]. என் பேச்சுக்காக அவமானப்படுகிறேன். அவ்வாறு நான் பேசியிருக்கக் கூடாது.என் பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். எனது வார்த்தைகள் யாருடைய உணர்வையும் புண்படுத்தி இருந்தால் நான் என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்[11]. யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அரசு சிறுபான்மையினருக்கு நீதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார்[12].

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Badruddin Ajmal: இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலாவை பின்பற்ற வேண்டும்: அசாம் ஏஐடியுஎப் தலைவர் சர்ச்சைப் பேச்சு, Pothy Raj, First Published Dec 3, 2022, 5:08 PM IST; Last Updated Dec 3, 2022, 5:10 PM IST.

[2] https://tamil.asianetnews.com/india/hindus-should-adopt-the-muslim-model-says-badruddin-ajmal-of-assam-rmbcbv

[3] தமிழ்.இந்து, முஸ்லிம்களைப் போல இந்துக்களும் 18-22 வயதில் திருமணம் செய்ய வேண்டும்: ஏஐயுடிஎஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கருத்து, செய்திப்பிரிவு, Published : 05 Dec 2022 10:07 AM; Last Updated : 05 Dec 2022 10:07 AM.

[4] https://www.hindutamil.in/news/india/910345-like-muslims-hindus-should-marry-at-age-18-22-aiudf-president-bhadruddin-ajmal.html

[5] தினத்தந்தி, இந்துக்கள் முஸ்லீம்களைப்போல் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 3, 1:57 pm

[6] https://www.dailythanthi.com/News/India/hindus-should-follow-muslim-formula-assams-badruddin-ajmal-on-population-boom-850045

[7] புதியதலைமுறை, இளவயது திருமணம் கருத்து தெரிவித்த அசாம் எம்.பி மீது அரசியல் கட்சிகள் தொடர் வழக்குகள், Justin Durai, Published: 04, December 2022 10:17 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/151933/Police-cases-continue-against-Ajmal-over-controversial-remark-Assam-Congress-leader-latest-complainant.html

[9] தினமலர், ஹிந்து பெண்கள் குறித்து கருத்து: மன்னிப்பு கேட்டார் அசாம் எம்.பி., பதிவு செய்த நாள்: டிச 05,2022 04:54

[10] https://m.dinamalar.com/detail-amp.php?id=3186557

[11] தினத்தந்தி, , இந்து மதத்தினர் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்கருத்துக்கு மன்னிப்பு கோரிய பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 4, 2:36 am.

[12] https://www.dailythanthi.com/News/India/ajmal-apologises-for-hurting-sentiments-parties-link-his-comments-to-guj-polls-850580

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு-எதிர்ப்பு (3)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஆதரவுஎதிர்ப்பு (3)

Modes of talaq

ஆதரவுஎதிர் பிரச்சாரங்கள், முஸ்லிம்கள் செய்து வருவது: முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது. பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[1].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறியதாக ஒரு செய்தி. ஆனால், தெரிவித்த உதவி ஜனாதிபதி மனைவி சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[2], என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். இதிலிருந்து, முஸ்லிம்களில் சிலர், சில இயக்கங்கள், முத்தலாக்கை ஆதரித்து, அவ்வாறே பெண்கள் கஷ்டப்பட்டு, அவதிபட்டு, ஜீவனாம்சம் இல்லாமல் அல்லது குறைவாக வாங்கிக் கொண்டு, குழந்தை-குட்டிகளோடு இருக்க வேண்டும் என்று சொல்வது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளும் அமைதி காக்கின்றன.

Modes of talaq -ul - whatsup etc

இந்தியாவில் உள்ள சிவில்கிரிமினல் சட்டநிலைகள்: நாட்டில் பல விவகாரங்கள், விவரங்கள், பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை ஒரே மாதிரியாகத்தான் கையாளப்பட்டு வருகின்றன.  பொது இடங்கள், சாலைகள் போன்ற இடங்களில் எல்லோரும் பொதுவாக-சமமாக பாவிக்கப் படுகிறார்கள். அதாவது, சிவில்-கிரிமினல் சட்டங்கள் ஒன்றாக இருந்தால் தான், மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்க முடியும், சட்டமுறை அமூலாக்க முடியும். பொதுவாக குடும்பம் என்றாலே, தாய், தந்தை, குழந்தை என்று தான் உள்ளது. குழந்தை தனது தாய், தந்தை யார் என்று அறிந்து தான் வளர்கிறது. இப்பந்தம், சொந்தம், உறவுமுறை பிறப்பு சான்றிதழ் முதல், அனைத்து ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென்று தாய், தந்தை மாறிவிட்டால், அதாவது விவாக ரத்தாகி விட்டால், குழந்தைக்கு குழப்பம் ஏற்படுகிறது. வளர்ந்த மகன் அல்லது மகளுக்கு பிரச்சினை உண்டாகிறது. தாய், தந்தை மறுவிவாகம் செய்து கொண்டு விட்டால், அக்குழப்பம் பெரிதாகிறது. தாய் ஒருவர், தந்தை வேறு அல்லது தந்தை ஒருவர், தாய் வேறு என்று குறிப்பிட்டு, முந்தைய-பிந்தைய ஆவணங்கள் இருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கே, வருத்தம் ஏற்படுகிறது. சிந்தனை போராட்டம் ஏற்படுகிறது. இது பொதுவாக உள்ள நிலை.

Modes of talaq -ul - biddat

முஸ்லிம்களின் பலதார முறை, விவாக ரத்து, குடும்பப் பிரச்சினைகள்: ஆனால், மதரீதியில், இஸ்லாமியர், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்றால், அந்நேரத்தில், ஒரு நதை மூலம், நான்கு தாய்களுக்கு குழந்தைகள் பிறக்கலாம். ஆனால், தலாக்-தலாக்-தலாக் என்ற விவாக ரத்தால், ஒரு மனைவி விவாகரத்து செய்யப்பட்டு, அவள், இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவளுக்கு அந்த ஆணின் மூலமும் இன்னொரு குழந்தை பிறக்கலாம். ஆனால், அவ்விரு குழந்தைகளும் சந்தித்துக் கொண்டால், தமக்கு தாய் ஒருவர் தான், ஆனால், தந்தை வெவ்வேறானவர்கள் என்று தெரிய வரும். இது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவி என்று நீண்டால், குழந்தைகள் கதி அதோகதிதான். குழந்தைகள் வளர-வளர, சமூகத்தில் அவர்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும். இதனால்,  பாதிப்பும் ஏற்படலாம். மேலும், ஒரே நேரத்தில் நான்கு என்பதில்லை, இரண்டு என்றால் கூட, விவாகரத்தின் நிலைமை பாதிப்பதாக உள்ளது. இந்துக்களில் பலதார முறை, முஸ்லிம்களை விட அதிகமாக இருக்கிறது என்று வாதிக்கின்றனர். ஆனால், 85%ல் 15% என்பதும் 15%ல் 85% என்பதிலும் உள்ள நிதர்சனத்தை கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை வைத்து சமூக சீர்திருத்ததிற்கு செல்ல வேண்டுமே தவிர, அங்கும் உள்ளது, அதனால், இங்கும் இருக்கட்டும் போன்ற வாதம் சரியாகாது.

Muslim women oppose talaq etc

நிக்கா ஹலாலா போன்ற முறைகள்[3]: முகமதிய விவாகரத்து, மறுமணம் போன்றவற்றில், மதரீயில் உள்ளவை, நடைமுறையில் பிரச்சினையாக, ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைகளில் உள்ளன. உதாராணத்திற்கு, நிக்கா ஹலாலா என்பதை எடுத்துக் கொண்டால், ஒரு ஆண், தனது முந்தைய மனைவியை திருமணம் செய்ய விருப்பப் பட்டால், முதலில் அவளை இன்னொரு ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பிறகு, அவள் அவன் கூட சேர்ந்து வாழ வேண்டும். உடலுறவு கொண்ட பிறகே, அவள் விவாக ரத்து பெற முடியும். அவ்வாறான பிரிந்திருக்கும் கலத்தை இத்தத் எனப்படுகிறது. இதெல்லாம் நடந்த பிறகே, அவன் / முதல் கணவன் அவளை திருமண செய்து கொள்ள முடியும். இந்த உறவுகளின் முடிவுகளைப் பற்றி சிந்தித்து, விவாதிக்க முடியாது. பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றியும் பேச முடியாது.

முஸ்லிம்கள் அல்லாத பெண்களுக்கு பிரிந்து வாழ்வதால் / விவாக ரத்தாகி தனியாக வாழ்ந்தால் ஏற்படும் தொல்லைகள், சங்கடங்கள், நஷ்டங்கள்: இதே பிரச்சினை மற்ற மதத்தினருக்கும் ஏற்படலாம். ஆனல், சட்டப்படி கட்டுப்படுத்தப் படுவதால், அத்தகைய பிரச்சினை மிகக்குறைவாகவே உள்ளது அல்லது காணப்படுவதில்லை எனலாம். பொதுவாக, இந்து பெண்கள், கணவன் விவாக ரத்தானாலோ, பிரிந்து வாழ நேர்ந்தாலோ, குழந்தையை தன்னோடு, எடுத்து வந்து வளர்க்கிறாள். குழந்தை வளர்ந்து பெரியவனா/ளாகும் வரை அவன்/அவள் பல இடங்களில், பல நேரங்களில் உன்னுடைய தந்தை யார் என்றால், பெயரைத்தான் சொல்ல முடிகிறதே தவிர ஆளைக் காட்டமுடிவதில்லை. பெண்ணிற்கும் / மனைவிக்கும் அதைவிட கொடுமையான நிலைமை, குடும்பத்தார், சமூகத்தார் என்று எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை. அதற்கு, அவளது குடும்பத்தினர் உதவுகின்றனர். இவ்வாறு, அந்த சோகமானது மறைக்க/மறக்கப் படுகிறது.

Muslim women oppose , PROTEST talaq etc

முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டதால், இன்று போராட வந்து விட்ட நிலை: ஆனால், முகமதிய பெண்கள், அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அவர்கள் இன்று துணிச்சலாக உரிமைகள் கேட்டு போராட ஆரம்பித்து விட்டனர். உச்ச நீதிமன்றத்தில், வழக்கும் பதிவு செய்து விட்டனர். அதன் தொடர்ச்சிதான், இப்பொழுதைய நிகழ்வுகள், மேலே குறிப்பிடப்பட்ட விவரங்கள். இதற்குள்,  அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட இயக்கம் [AIMPLB ] இவ்விசயத்தில், 90 நாட்களில் / மூன்று மாதங்களில் தாங்களே, முத்தலாக் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று அறிவித்துள்ளது[4]. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா மற்றும் பலதாரமுறை இஸ்லாமிய பெண்களின் சமத்துவம் மற்றும் சுயமரியாதைகளை மீறுவதாக உள்ளதாகவும், அவை, அரசியல் ந்ர்ணய சட்டப் பிரிவு 25(1)  [Article 25(1) of the Constitution] ற்கு புறம்பாக இருப்பதாகவும், 10-04-2017 அன்று உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது[5].  உச்சநீதி மன்றம் இதனை ஏற்றுக்கொண்டது[6]. அடுத்த விசாரணை மே மாதம்.11, 2017 அன்று எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது[7]. மேலும், உபியில், முத்தலாக் செய்யப்பட்ட, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது[8]. பஸ்தி மாவட்டம், திகாவுரா கிராமம், பைக்வாலியா போலீஸ் ஷ்டேசன் கீழ்வரும் இடத்தில், இது நடந்துள்ளது[9].

© வேதபிரகாஷ்

11-04-2017

mO UNIFORMITY ON ucc

[1] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[2] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[3] Nikah halala is a practice intended to curb incidence of divorce under which a man cannot remarry his former wife without her having to go through the process of marrying someone else, consummating it, getting divorced, observing the separation period called Iddat and then coming back to him again.

http://www.firstpost.com/india/triple-talaq-impacts-dignity-of-muslim-women-denies-fundamental-rights-centre-to-supreme-court-3378828.html

[4] ZeeNews, Triple talaq: AIMPLB says will do away with practice in 18 months, no need for govt intervention, By Zee Media Bureau | Last Updated: Tuesday, April 11, 2017 – 10:48.

[5] http://zeenews.india.com/india/triple-talaq-aimplb-says-will-do-away-with-practice-in-18-months-no-need-for-govt-intervention-1994931.html

[6] The Hindu, Polygamy is not a religious practice, government tells Supreme Court, NEW DELHI APRIL 11, 2017 00:58 IST UPDATED: APRIL 11, 2017 12:49 IST.

[7] http://www.thehindu.com/news/national/polygamy-is-not-a-religious-practice-government-tells-sc/article17915070.ece

[8] Financial Express, Triple Talaq victim hangs herself in Uttar Pradesh, another sits on dharna outside in-laws’ house, By: FE Online | Noida | Updated: April 11, 2017 2:01 PM.

[9] http://www.financialexpress.com/india-news/shocking-triple-talaq-victim-hangs-herself-in-yogi-adityanaths-uttar-pradesh/623732/

 

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷாபானு வழக்கிலிருந்து சர்ளா முதுகல் வரை (1)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷாபானு வழக்கிலிருந்து சர்ளா முதுகல் வரை (1)

ஷா பானு வழக்கு

ஷாபானு வழக்கின் விளைவு, தனி சட்டம் உருவானது (1986): இஸ்லாம் மதத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கமுள்ளதால், முறையால் பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சட்டரீதியில் சென்றால் கூட, பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 1986ல் ராஜிவ் காந்தி காலத்தில் “ஷாபானு வழக்கு” மூலம் பிரச்சியானது, பலரால் விவாதிக்கப் பட்டது. இருப்பினும், இஸ்லாமிய அடிப்படைவாத அழுத்தத்திற்கு, மிரட்டல்-உருட்டல்களுக்கு ராஜிவ் காந்தி பயந்து, உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாக, தனி சட்டத்தை உருவாக்கினார். உண்மையில், சிவில் சட்டம் [Code of Criminal Procedure] 125வது பிரிவின் படி, விவாக ரத்து செய்யப்படும் பெண்ணிற்கு, கணவன் உரிய ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது. இதனால், ஷாபானு, தனக்கு அளிக்கப் படும் ஜீவனாம்சம் போதவில்லை என்று, மேற்குறிப்பிட்ட சரத்தின் படி வழக்கு தொடர்ந்தாள். ஆனால், கணவன் மொஹம்மது கான், இஸ்லாமிய சட்டமுறையில், தான் விவாகரத்து செய்திருப்பதால், அச்சட்டத்தின் படியே மஹர் / ஜீவனாம்சம் கொடுக்க தீர்மானித்ததால், அச்சட்டம் [S.125 CrPC] தனக்கு பொறுந்தாது என்று வாதாடி, உயர்நீதி மன்றத்தில் வெற்றிபெற்றான். ஆனால், உச்சநீத் மன்றத்தில், அதை தள்ளுபடி செய்து, ஷாபானுக்கு உரிய ஜீவனாம்சம் அளிக்கும்படி ஆணையிட்டது[1].

Children affected by talaq

ஷாபானு வழக்கிற்கு எதிர்ப்பு, மதஅரசியலின் ஆரம்பம்: இதனால், முஸ்லிம்கள் தங்களது மதச்சட்டத்தில் அரசு அல்லது நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி ஆர்பாட்டம் செய்தனர்[2]. 125ற்கு விலக்கு அளித்தது. தனியாக, முஸ்லிம் பெண்கள் உரிமைகள்  பாதுகாப்பு மற்றும் விவாக ரத்து சட்டம், 1986 [The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986] என்று உருவாக்கப்பட்டது. இங்கு ஷாபானு என்பது 70 வயதிற்கும் மேலான மூதாட்டி என்று குறிப்பிடத் தக்கது. அத்தகைய நிலையில், பெண்கள், என்ன பாடு படுகிறாள் என்பது உலகிற்கு தெரிய வந்தது. இருப்பினும், செக்யூலரிஸ மற்ற சித்தாந்திகள் அதனை பெண்கள் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ளாமல், மதப்பிரச்சினை, முஸ்லிம்களின் உள்விவகாரம் அதில் மற்றவர்கள் நுழையக் கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அந்நிலையிலும், பொது சிவில் சட்டம் தேவை என்ற கருத்தும் உருவாகி, விவாதத்திற்கு வந்தது. அப்பொழுது, பிஜேபி ஆட்சியில் இல்லை, மேலும், அது அக்கட்சியினையும் தொடர்பு படுத்தவில்லை. ஆனால், தேர்தல் வாக்குருதிகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம் என்று குறிப்பிட்டது.

talaq-case-nikkah-namah-divorce

1995ல் சர்ளா முதுகல்பொது சிவில் சட்ட ஞாபகவூட்டல் தீர்ப்பு: 1995ல் சர்ளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1949லிருந்து, 41 வருடங்களாக இந்த 44 பிரிவு குளிர்பெட்டியிலேயே வைத்திருக்கிறார்கள். அரசுகள் வந்தன, சென்றன, ஆனால், இருப்பினும், இந்திய மக்கள் அனைவரையும் இணைக்கும் முறையில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் தோல்வி அடைந்துள்ளனர்”, என்று நீதிபதி பதிவு செய்தார்[3]. இது எப்படி ஆண்கள் இரண்டாவது திருமணத்தை முகமதிய மதம் மாறி சட்டப்படி செய்து கொள்கிறார்கள், அதனால், முதல் மனைவி, இந்துவாக இருப்பதனால் பாதிக்கப்படுகிறாள் என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[4]. செக்யூலரிஸம், பெண்ணுரிமைகள் சமநீதி, சமூகநீதி என்றெல்லாம் பேசும், பேசிய வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜரால், தேவ கௌடா முதலியோர் கண்டுகொள்ளவில்லை. ”என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பிஜேபி எப்பொழும் “பொது சிவில் சட்டத்திற்கு” ஆதரவாக குரல் கொடுத்து வருவது தெரிந்த விசயமே. ஆனால், அது “கம்யூனலிஸம்” என்று முத்திரைக் குத்தப்பட்டு, ஒதுக்கப்படுவது, மனித உரிமைகள் பேசும் கூட்டங்களின் போக்காகவே இருந்து வருகின்றது.  இந்துக்கள் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு சாதகமாக இருக்கும் போன்ற வாதங்களும் வைக்கப்பட்டன. ஆனால், மதரீதியில், எந்த இந்து பெண்ணும் / ஆணும், இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அல்லது வேறெந்த சட்டமும் தனக்கு பொறுந்தாது, தனது மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று யாரும் வழக்குத் தொடரவில்லை. இருக்கும், சிவில்-கிரிமினல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு மதித்து நடந்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் என்று முஸ்லிம்கள் தான் எதிர்த்து வருகின்றனர். கிருத்துவர்கள் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

UCC

பொது சிவில் சட்டம் எதிர்ப்பு, முத்தலாக் ஆதரிப்பு: பொது சிவில் சட்டம் இவ்வாறு, செக்யூலரிஸ்டுகள், முஸ்லிம்கள் மற்ற சித்தாந்திகள் எதிர்த்து தங்களது வாதங்களை வைத்டுள்ளனர்:

  1. இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, பல மதங்கள் இருப்பதனால், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ளலாம். அதற்கான உரிமைகள் அரசியல் நிர்ணய சட்டம் கொடுத்துள்ளது.
  2. மதரீதியில் மக்களை செக்யூலரிஸப்படுத்தலாம், ஆனால், சட்டரீதியில் அவர்களை செக்யூலரிஸப்படுத்த முடியாது.
  3. மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது.
  4. பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும்.
  5. எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும்.
  6. இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை செய்து வருகிறது.
  7. அதனால், அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்க நாங்கள் விரும்பவில்லை.
  8. பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன.
  9. முஸ்லிம்கள், தாமாகவே முன் வந்து, அத்தகைய சட்டத்தை ஏற்றுகொள்ள முன்வரும் வரை வற்புருத்தக் கூடாது.
  10. அதுவரை, அவர்களுக்கு ஷரீயத் சட்டம் தொடர்ந்து அமூல் படுத்த வேண்டும்.

செக்யூலரிஸ ஊடகங்கள், 1995லிருந்து, இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றன. ஆனால், இணைதள விவரங்கள், செய்திகள் முதலியவை பரவி வருவதால், பொது மக்களுக்கு பற்பல உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன.

Muslim women oppose talaq etc

முஸ்லிம்கள் தாமாகவே முத்தலாக் முறையற்றது, பெண்களின் உரிமைகளைப் பறிப்பது என்று வாதிட வந்தது, வழக்குத் தொடுத்தது: முத்தலாக் முறை பெண்களின் விருப்பத்துக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும் பா.ஜ.க அரசின் சார்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில், பா.ஜ.க முத்தலாக் முறையை எதிர்ப்பதாகவும், முத்தலாக் முறையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை “தலாக்” என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய  சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016 சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் மாற்றி எழுதக்கூடாது என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

© வேதபிரகாஷ்

11-04-2017

We are one - UCC - divide

[1] Supreme Court of India, Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844; Author: Y Chandrachud; Bench: Chandrachud, Y.V. ((Cj), Desai, D.A., Reddy, O. Chinnappa (J), Venkataramiah, E.S. (J), Misra Rangnath; PETITIONER: MOHD. AHMED KHAN Vs. RESPONDENT:SHAH BANO BEGUM AND ORS.; DATE OF JUDGMENT23/04/1985.

[2] https://indiankanoon.org/doc/823221/

[3] “I do not think that at the present moment the time is ripe in India for me to try to push it through”. It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.

[4] Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: K Singh; Bench: Kuldip Singh (J);            PETITIONER: SMT. SARLA MUDGAL, PRESIDENT, KALYANI & ORS. vs. RESPONDENT: UNION OF INDIA & ORS. DATE OF JUDGMENT10/05/1995

https://indiankanoon.org/doc/733037/

 

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

திசெம்பர் 21, 2016

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

dinakaran-madras-high-court-to-ban-shariat-court

தலாக், தலாக், தலாக்விசயத்தில் வழக்கு: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு 20-12-2016 திஙட்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது, என்று தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை [ illegal ‘sharia courts’ functioning from various mosques across Tamil Nadu], சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[1]. தினகரன் மட்டும் தான் “ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[2]. மேலும் நான்கு வாரங்களில் செயபடுத்திய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டது[3]. ஷரீயத் போல, மத சட்டங்களின் அடிப்படையில், நீதிமன்றம் போன்று கோவில்களில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை. இருப்பினும் செக்யூலரிஸ முறையில் நீதிபதிகள் அவ்வாறு சொல்லியிருப்பது தெரிகிறது.

dinamalar-madras-hingh-court-about-sharia-court-20_12_2016_005_005

முகமதிய பெண்களும் மாறி வருவது தெரிகிறது: சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் “தலாக், தலாக், தலாக்”     என்று மூன்று முறை வாயால் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், பெரும்பாலும், முகமதிய ஆண்கள் இந்த நவீன காலத்தில், போன், செல்போன், ஈ-மெயில் போன்ற முறைகளிலும் அத்தகைய  “தலாக்” செய்து வருகின்றனர். காரணம் இல்லாமல், பல பெண்களுடன் வாழ வேண்டும் போன்ற நோக்கில் செயல்படும் ஆண்களும் இருக்கிறார்கள். அதற்காக இந்துக்களில் சிலர் மதம் மாறியுள்ளார்கள். ராஜிவ் காந்தி ஆட்சியில், “ஷாபானு” வழக்கில் மெத்தனமாக இருந்ததால், இப்பிரச்சினை பெரிதாகியுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத வழக்கத்தை, செக்யூலரிஸப் போர்வையில் இந்தியாவில் இத்தகைய இடைக்கால, ஒவ்வாத பழக்க-வழக்கங்களை இந்தியாவில் ஏற்றுக் கொண்டுள்ளதை, முகமதிய பெண்களே சமீபகாலத்தில் எடுத்துக் காட்டி, எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். பலதார முறை இருந்தாலும், பெரும்பாலான முகமதிய பெண்கள், ஒரு ஆண் – ஒரு பெண் என்ற நியதியை விரும்புகிறார்கள். படித்தவர்கள் அவ்வாறே கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் அடிப்படைவாதிகள் மதவாத அச்சுருத்தல்களுடன், சமூகத்தை மிரட்டி வருகிறார்கள்.

mont-rosd-mosque-shariat-council

சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலை எதிர்த்து வழக்கு: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றினேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். அவரை சேர்த்து வைக்கும்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் [Makka Masjid Shariat Council] முறையிட்டேன். ஆனால், அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, என்னை அனுப்பி விட்டனர். என்னைப் போல பலர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஷரியத் நீதிமன்றம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாஅத்களில் குடும்ப பிரச்சினைகளை விசாரிக்கின்றனர். இவ்வாறு ஜமாஅத்களில் நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தங்களது ஷரியத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமாத்தார்கள் கூறி வருகின்றனர்.” சென்னை அண்ணா சாலையில் அத்தகைய ஷரீயத் கோர்ட் இருப்பதே யாருக்கும் தெரியாது எனலாம். ஹெரிந்திருந்தாலும், முகமதியர் விவகாரங்கள் என்று கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கலாம்.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-toi

ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுவதால் பெண்களுக்கு பாதிப்பு: அப்துர் ரஹ்மான் மேலும் கூறியிருப்பது[5], “இந்த ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகின்றன. சொத்துப் பிரச்சினைகளிலும் இவர்கள் தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமாஅத்களில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்,”  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது[6]. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. முதன்முதலாக இப்பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்று, இவ்வாறு வெளி வந்திருப்பது தெரிகிறது. பொதுவாக முகமதியர், இத்தகைய விவகாரங்களை, வெளியே வராமல் அமுக்கி விடுவார்கள். ஜமாத்தை மீறி செயல்படுவதை ஒதுக்கி வைப்பது, மிரட்டுவது, தீர்த்துக் கட்டுவது போன்ற நிலைகளும் உள்ளன.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-hindusthan-times

விவாக ரத்து செய்த தம்பதியரிடம் கருத்து வேறுபாடு: இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது[7]: “மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனுதாரர் அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் புகார் செய்துள்ளார். அந்த கவுன்சிலின் பொதுச் செயலாளர், இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக இருவருக்கும் கவுன்சிலிங்கும் நடந்துள்ளது.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-financial-express

மறு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[8], “இதன்பின்னர் மனுதாரர் முஸ்லிம் சட்டம் மற்றும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில், அவரது மனைவியிடம்தலாக்சொல்லியுள்ளார். அவரது மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விவாகரத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் நடந்துள்ளது. இதன்பின்னர் மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19–ந் தேதி குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனைவியிடம் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் இந்த இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரரை விவாகரத்து செய்த பெண், வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 27–ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.”

 

© வேதபிரகாஷ்

21-12-2016

ஷா பானு வழக்கு

[1] Times of India, Madras high court bans unauthorised ‘Sharia courts’, A Subramani| TNN | Updated: Dec 20, 2016, 07.02 AM IST.

[2] தினகரன், ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு, Date: 2016-12-19 15:44:48

http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=266694

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-bans-sharia-courts/articleshow/56061972.cms

[4] தினத்தந்தி, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 20,2016, 7:28 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், டிசம்பர் 21,2016, 1:15 AM IST.

[5] தினமணி, வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, Published on : 20th December 2016 03:58 AM

[6] http://www.dailythanthi.com/News/State/2016/12/20192814/Temples-churches-mosques-participate-in-acts-of-worship.vpf

[7]http://www.dinamani.com/tamilnadu/2016/dec/20/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2618328.html

[8] தமிழ்.இந்து, மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோத நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு, Published: December 20, 2016 08:17 ISTUpdated: December 20, 2016 08:18 IST

தலாக் செய்யப் பட்ட பெண், தப்பான தீர்ப்பு என்று மௌலானாவை அடித்தாளாம்!

ஜூலை 1, 2010

தலாக் செய்யப் பட்ட பெண், தப்பான தீர்ப்பு என்று மௌலானாவை அடித்தாளாம்!

“தலாக், தலாக், தலாக்”: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[1]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[2]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.

Maulana-thrashed-by-women-for-talaq

Maulana-thrashed-by-women-for-talaq

ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்: ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்[3]. லக்னௌவில் சுல்தான்-அன்னுவல் மத்ராஸி என்ற முஸ்லீம் மடம் இருக்கிறது. மௌலானா அஸ்கர் அலி என்பவர் அங்கு இஸ்லாமிய முறைப்படி தீர்ப்பு வழங்கி வந்தார். கடந்த புதகிழமையன்று (23-06-2010), மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்றும்  அலி இம்ரான் என்பவர்களுக்கிடையேயுள்ள ஒரு விவாக ரத்து வழக்கில் / தலாக்கில் தீர்ப்பு வழங்கி தலாக்-நாமா என்ற விடுதலைப் பத்திரத்தையும் வழங்கி விட்டார்.

சரியாக ஆராயாமல் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்று கோபம் கொண்ட பெண்கள் மௌலானவை அடித்தனர்: பாதிக்கப்பட்ட மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்ற பெண்களிடம் சொன்னதாகத் தெரிகிறது. உடனே, ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்பதனால், கோபம் கொண்ட பெண்கள் – ஹீனா, நிஷாத் ஃபாதிமா, அர்ஷி முதலியோர், மத்ரஸாவிற்குச் சென்று, அந்த மௌலானாவை- இவ்வாறு அதிரடியாகத் தாக்கி அடித்தனர். போலீஸ் இதனை அறிவித்துள்ளனர். அடிவாங்கிய மௌலானா வாஸிர் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்[4]. பதிலுக்கு பெண்களும், சரியாக விசாரிக்காமல் உண்மைக்குப் புரம்பாக மற்றும் இருதரப்பினரது ஒப்புதலை வாங்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளர் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[5].

இந்திய முஸ்லீம்கள் அந்த பெண்ணைப் பாராட்டுவார்களா, குறைகூறுவார்களா? ஏற்கெனவே, அந்த பெண்கள் இஸ்லாமிய அமைப்பிற்கு செட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று, உள்ளூரில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பெண்களோ, தாங்கள் மதத்தை மதிப்பதாகவும், ஆனால், ஆண்கள் இம்முறையால் தங்களது வாழ்க்கையினைக் கெடுத்து விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.


[1] http://www.indianexpress.com/news/triple-talaq-dowry-to-top-agenda-at-aimplb/579755/

[2] http://timesofindia.indiatimes.com/articleshow/757515.cms

[3] http://www.hindu.com/2010/07/01/stories/2010070162670700.htm

[4] http://www.ndtv.com/article/cities/women-thrash-maulana-for-endorsing-one-sided-talaq-34763

[5] http://www.mid-day.com/news/2010/jun/300610-women-thrash-maulana-endorsing-one-sided-talaq-UP.htm?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+mdnews%2Fnational+%28Mid+Day+National+News%29