கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

அக்பர் கொலை 16-08-2016

மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2].

அக்பர் கொலை 16-08-2016.நியூஸ்7டிவி

அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது.

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Akbar murder, Mannady 16-08-2016, TOI

Akbar murder, Mannady 16-08-2016, TOI

எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள்.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296

[2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

[3] http://news.lankasri.com/india/03/107579

[4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016

[5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html

[6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html

[7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf

Explore posts in the same categories: அக்பர், அடி உதை, இன்பம், இஸ்லாம், உதவி, உதவியாள், எதிர்ப்பு, கல்யாணம், கள்ள உறவு, கள்ளக் காதல், கள்ளக்காதல், காமம், குற்றம், கூடல், கௌரவம், சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சண்டை, சண்டை போடுவது, சந்தேகம், செக்ஸ், பாத்திமா, பாத்திமுத்து, மண்ணடி, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: