பட்கல் குடும்பமும், அர்மார் குடும்பமும்: வெடிகுண்டு தயாரிப்பும், ஐசிஸ் தொடர்புகளும் – இந்தியாவுக்கு எதிராக செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதித்துவம் முதலியன!

பட்கல் குடும்பமும், அர்மார் குடும்பமும்: வெடிகுண்டு தயாரிப்பும், ஐசிஸ் தொடர்புகளும் – இந்தியாவுக்கு எதிராக செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதித்துவம் முதலியன!

How Indian ISIS is controlled by ISIS Syria

சுல்தான் அர்மார் கொலையுண்ட பிறகு, ஷபி அர்மார் தலைவனாகிறான்: காரணம், இவரது சகதோரர் சுல்தான் சிரியாவில் நடந்த சம்டையின்போது கொல்லப்பட்டு விட்டார். இதனால் ஷபி வசம் அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தன[1]. இந்தியா முழுவதும் ஐஎஸ் ஆமைப்புக்கு ஆட்களைத் திரட்டும் பணிக்காக பல்வேரு கிளைகளை உருவாக்கியவர் ஷபி. சமீபத்தில் இப்படிப்பட்ட ஆளெடுப்பு மையம் ஒன்றைக் கண்டுபிடித்தது உளவுப் பிரிவு. அதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மும்பையைச் சேர்ந்த முடாபிர் ஷேக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் அர்மார் பேசிய பேச்சையும் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளெடுப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்மார். இதன் மூலம் ஆளெடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய அளவில், வலுவான அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ்ஸை உருவாக்குவதே இவர்களின் முக்கியப் பணியாக, நோக்கமாக இருந்துள்ளது. மேலும் தனது சகோதரர் உருவாக்கிய அன்சர் உல் தவாஹித் அமைப்பின் பெயரையும் கூட ஜுநுத் அல் கலீபா இ ஹிந்த் என்றும் மாற்றியுள்ளார் அர்மார். இதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் காட்டமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என்பது அவரது எண்ணம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு தவணைளாக ரூ. 6 லட்சம் வரை ஆளெடுக்கும் பணிக்காக செலவிட்டுள்ளாராம் அர்மார்[2].

Yasin Bhatkal arrestedஅர்மார் குடும்பமும், பட்கல் குடும்பமும்: பட்கல் சகோதரர்கள் எப்படி இந்திய முஜாஹித்தீன் ஆரம்பித்து, குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றார்களோ, அதே போல அர்மார் சகோதரர்களும் ஜிஹாதிகளாக இருந்தார்கள். அவர்களைத் தேடிச் சென்ற என்டிடிவி மற்றும் டைம்ச்ஸ்-நௌ இருவிதமான விவரங்களைத் தருகின்றன. என்டிடிவி பற்றியதை மேலே பார்த்தோம். டைம்ஸ்-நௌ நிருபர்களும் அர்மார் குடும்பத்தைத் தேடி பட்கல் நகரத்திற்குச் செல்கின்றனர். முதலில் நயாயத் காலனியில் தங்கியிருந்ததாக அறிந்ததால் அங்கு சென்றனர். ஆனால், அங்கிருந்து அர்மார் குடும்பம் மதீனா காலனிக்குச் சென்று விட்டதாக அறிந்தனர். உடனே, மதினா காலனி, இரண்டாம் குறுக்குத் தெருவில் அக்குடும்பம் தங்கியிருந்த வீட்டை அடைகின்றனர். ஆனால், இப்பொழுது வேறு யாரோ தங்கியிருக்கின்றனர். அவர்கள், அர்மார் குடும்பம் இங்கு தங்கியிருந்தது, ஆனால், இப்பொழுது இல்லை, மேலும் அவர்களைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றனர்[3]. அதாவது பட்கல் குடும்பம் போல, இந்த அர்மார் குடும்பமும், வீடு மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதிலிருந்து, அக்குடும்பமே அவர்களுக்கு உடைந்தையாக இருக்கிறது என்று தெரிகிறது. பேட்டிகளில் மட்டும், தங்களது மகன்கள்-மகள்கம் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுபவர்கள், இதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், குடும்பத்தார், குறிப்பாக திருமணம் ஆனவர்கள், மனைவிக்குத் தெரியாமல், இத்தகைய வேலைகளில் ஈடுபட முடியாது. மனைவி அமைதியாக இருக்கிறாள் என்றால், ஒத்துழைக்கிறாள் என்றாகிறது.

Mohammed Afzal, Najumul Huda, Rizwanஇவர்கள் இப்படி இருக்கலாமா? – பெற்றோர்-மற்றோர் ஏன் கண்டுகொள்ளவில்லை?: ஷபி அர்மானுக்குப் பிறகு காலித் அஹமது அலி கான் அல்லது ரிஸ்வான் [Khalid Ahmed Ali Khalid alias Rizwan, 20] என்பவன் இரண்டாவது தளபதியாக இருக்கிறான். மல்வானி என்ற இடத்தைச் சேர்ந்த அயஸ் சுல்தான் என்பவனை மூளைசலவை செய்தத்தில் இவன் முக்கிய பங்கு வகித்திருக்கிறான். அயஸ் சுல்தான் இப்பொழுது காணாமல் போயிருக்கிறான். மொஹம்மது அலீம் [Mohd Aleem (23)] இந்திராநகரிலிருந்து [லக்னௌ, உபி] பிடிபட்டுள்ளவன் இணைதளத்தின் மூலம் ஆட்களை சேர்ப்பது தெரியவந்தது. இவன் வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்புக் என்று எல்லாவற்றிலும் புகுந்து, இளைஞர்களை மூளை சலவை செய்து ஐசிஸ் பக்கம் இழுத்து, சேர்த்துள்ளான்[4]. இது தவிர,

  1. மொஹம்மது நபீஸ் கான் ஹைதராபாத்
  2. மொஹம்மது ஷரீப் மௌந்தீன் கான் ஹைதராபாத்
  3. மொஹம்மது அப்சல் பெஙளூரு

என்று கைது செய்யப்பட்டனர்.

Indian Muslim youth become ISIS supporters, warriorsஇந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின்விஸ்வரூபம்“![5]: தமிழ்.ஒன்.இந்தியா, ரியாஸ் பட்கலுக்கு, நிறைய மரியாதைக் கொடுத்து எழுதியுள்ளது, “கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், யாரைக் கவர்ந்ததோ இல்லையோ, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்து விட்டதாம். இந்தப் படம், அல் கொய்தா அமைப்பின் இந்திய வருகையை அறிவிக்கும் படமாக அமைந்து விட்டதாகவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் கருதினார்களாம். குறிப்பாக கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய இப்படத்தை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான ரியாஸ் பத்கல் அதிகம் விரும்பிப் பார்த்தாராம். அவருக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது இந்தியக் கிளை குறித்த அறிவிப்பை அல் கொய்தா வெளியிட்டது. இருப்பினும் அந்த அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அல் கொய்தாவின் வருகைக்கு முன்பாகவே அதுகுறித்து குறிப்பிட்டுள்ளார் ரியாஸ். விஸ்வரூபம் படத்தை மேற்கோள் காட்டி இதைக் கூறியிருந்தார் ரியாஸ்”.

இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டதுஎன்று விஸ்வரூபம் முன்னரே கணித்துவிட்டதாம்![6]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “ஒரு நேரத்தில் வலிமையான அமைப்பாக திகழ்ந்த இந்தியன் முஜாஹிதீன் தற்போது பிளவுபட்டு விட்டது. ஒரு பிரிவு அல் கொய்தாவுக்கும், இன்னொரு பிரிவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் ஆதரவாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ரியாஸ் பத்கல், பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவில் இருந்த தனியால் என்ற தனது கூட்டாளியுடன் சாட் செய்துள்ளார். அப்போது தான் விஸ்வரூபம் படம் பார்த்ததாக கூறியுள்ளார் ரியாஸ். அதாவது மார்ச் 25ம் தேதி அப்படத்தைப் பார்த்ததாகவும், படத்தின் முடிவில், இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டது குறித்த வசனம் இடம் பெற்றதாகவும், அது உண்மைதான் என்றும், விரைவில் அது நடக்கப் போவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அன்றுதான் விஸ்வரூபம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது. தனது உரையாடலின்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ளவர்களை விட சிறந்தவர்கள் என்றும் பாராட்டியுள்ளார் ரியாஸ்”.

ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள், பாகிஸ்தான் தலிபான்கள் என்று விமர்சித்த ரியாஸ் பட்கல்[7]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “அடி முட்டாள்கள் மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் குறித்தும், பாகிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நிலவரம் குறித்தும் பேசியுள்ளார் பத்கல். இந்தியாவில் உள்ள நமது அமைப்பினர் அனைவரும் ஒன்று திரண்டு, நேட்டோ படையினருக்கு எதிராக, அல் கொய்தாவுக்கு ஆதரவாக தோள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் பத்கல். மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும். அல் கொய்தாவுடன் இணைய வேண்டும் என்றும் பத்கல் கூறியுள்ளார். அதேபோல தனது சகோதரரான யாசின் பத்கலுடன் (அவர் பின்னர் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விட்டார்) பேசிய பேச்சு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. யாசினுடன் நடந்த உரையாடலின்போது ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள் என்று காட்டமாக வர்ணித்துள்ளார் ரியாஸ் பத்கல். தன்னை ஐஎஸ்ஐ மோசமாக நடத்தியதாகவும், தான் அல் கொய்தாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அதேபோல பாகிஸ்தான் தலிபான்களை அடி முட்டாள்கள் என்றும் அவர் வர்ணித்துள்ளார். 2013ம் ஆண்டு மே 11ம் தேதி தனது இந்திய அமைப்பினருடன் நடந்த பேச்சின்போது, பாகிஸ்தான் தலிபான்கள் அடி முட்டாள்களாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், இன்று காலை 5 குண்டுவெடிப்புகளை தெஹரிக் தலிபான்கள் நடத்தியுள்ளனர். இவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் முட்டாள்களாக உள்ளனர். அவர்களுடன் இணைய நான் விரும்பவில்லை. நான் அல் கொய்தாவுடன் இணையவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரியாஸ்”.

வேதபிரகாஷ்

06-02-12016

[1] http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html

[2] Read more at: http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html

[3] https://www.youtube.com/watch?v=NqWwt_6bvcE

[4] The official said that Mohd Aleem (23), the IS suspect arrested from the city’s Indira Nagar area on Friday, was also recruited through a social networking site. “IS modules, still out of reach of intelligence and security agencies, are trying to expand their base in the state, especially west UP, using the same method,” he said.

http://www.hindustantimes.com/india/tech-for-intake-terror-outfits-go-online-for-hiring-new-recruits/story-OMpZiqBqZOU8Kfb83TaJxM.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின்விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].

[6] http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின்விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].

Explore posts in the same categories: அமோனியம், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், கிலாபத், சவுதி, சவுதி அரேபியா, சவூ‌தி அரே‌பியா, ஜமாத்-உத்-தாவா, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தாலிபன் நீதிமன்றங்கள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: