மொஹம்மது அஸ்கர் (71 வயதான) தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

மொஹம்மது அஸ்கர் (71 வயதான) தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

 

பிரிடிஷ் பிரஜைக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது: மொஹம்மது அஸ்கர் (71 வயதான) ஒரு பிரிடிஷ் பிரஜை ஆவர். பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இங்கிலாந்தில் தங்கி விட்டார், குடிமகனாகவும் இருக்கிறார். அந்நிலையில், சொத்து தகராறு விசயமாக பாகிஸ்தானுக்கு வரவேண்டியிருந்தது. அப்பொழுது, இவர் மீது வழக்கும் போடப் பட்டது. ஏற்கெனவே மனநிலை பாதிக்கப் பட்டவர் மற்றும் வயதானவர் என்பதால், ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டு, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று பேசியிருக்கிறார். ஆனால், பிறகு, அதற்கும் ஒருபடி மேலே போய், தான்தான் மொஹம்மது நபி தன் மீது யாரும் குற்றஞ்சாட்ட முடியாது என்றேல்லாம் பேசியதாகவும், எழுதியதாகவும் சொல்லப் பட்டது[1].

 

தான்தான்  மொஹம்மது  நபி  என்று  சொல்லிக்  கொண்டதால்  ஷரீயத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது: தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் 2010ல் அவன் ராவல்பின்டியில் போலீசரால் மததுவேஷச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். தான் போலீசாருக்கு எழுதிய கடிதங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது[2]. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன[3]. இந்த வழக்கு மூடிய நீதிமன்றத்தில் ரகசியமாக நடத்தப் பட்டது. 23-01-2014 அன்று அவனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டது. அதுமட்டுமல்லாது ரூ. 10,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது[4]. ஆனால், அவனது வழக்கறிஞர் அவன் மனநிலை சரியாகவில்லை, மேலும் முதலில் சொத்து விவகாரத்தில் தான் அவன் மீது வழக்குப் போடப்பட்டது என்று வாதிடினார்[5].  இருப்பினும் 97% சதவீதம் முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட பாகிஸ்தானில் இத்தகைய வழக்குகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்[6].

 

இங்கிலாந்து சட்டரீதியில் போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை: மொஹம்மது அஸ்கர் இங்கிலாந்தின் பிரஜை எடின்பர்கில் மனச்சிதைவு மற்றும் குழப்பம் [treated for paranoid schizophrenia in Edinburgh] முதலிய நோய்களுக்காக 2003ல் சிகிச்சைப் பெற்றவர். இதற்கான ஆதாரங்களையும் வக்கீல் தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்பதால் மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது[7]. இப்பொழுது அவனது மனநிலை மற்றும் பாகிஸ்தானிய சிறையில் அவனது உடல் ஆரோக்யம் முதலியவை கேள்விக்குறியாகியுள்ளது. ஒன்று அவன் அடித்துக் கொல்லப் படலாம் அல்லது தற்கொலையும் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று சொல்லப் படுகின்றது. பாகிஸ்தானில் பொதுவாக, இஸ்லாம் மதத்திற்கு எதிராக ஷரீயத் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை மிகவும் அபாயத்தில் உள்ளது. மக்களே அவர்களை அடித்துக் கொல்லக் கூடிய நிலைக் கூடவுள்ளது. இதனால், மனித உரிமைக் குழுக்கள், ஆங்கிலேய சங்கங்கள், பிரிடிஷ் அரசாங்கம் முதலியவை கவலையைத் தெரிவித்துள்ளன. பிரிடிஷ் அரசாங்கம் தூதரகத்தின் மூலம் முடிந்த வரையில் உதவிகளை அளித்து வருகின்றது. ஷரீயத் சட்டத்தின் கீழ் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாதிட முடியாது[8].

 

Allah for muslims only - Vedaprakash.3

Allah for muslims only – Vedaprakash.3

இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா – நிலைமை: செக்யூலரிஸத்தில் இந்தியா மூழ்கித் திளைத்து வருகின்றது. இங்கிலாந்து பாதிரி, சென்னையிலேயே சிறுவர்-சிறுமிகளைப் புணர்ந்த குற்றங்களுக்காகக் கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, பிரிடிஷ் போலீசார் சென்னைக்கு வந்து, அவனை கைது செய்து கொண்டு போய், தங்களது நாட்டில், தங்களது சட்டங்களின் கீழ் அவனுக்கு தண்டனை விதிக்கப் படும் என்று அறிவித்தது. அதேபோல, கள்ளக் கடத்திலில் ஈடுபட்ட ஒரு பேராசிரியரை (F. A. A. Flynn) ஆஸ்திரேலியா கொண்டு சென்றது. மும்பை குண்டு வழக்கில் சிக்கிய இன்னொரு கிருத்துவப் பாதிரியும், அமெரிக்கப் பிரஜை என்பதால், அவனை கொண்டு சென்றது. ஆனால், பாகிஸ்தானில் இவ்வாறு நடக்கும் போது, எல்லா நாடுகளும் “சட்டப்படி” நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. பிரிடிஷ் காமன்வெல்த் கட்டமைப்பில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே ஒரு இந்தியர் சிக்கிக் கொண்டிருந்தால், மனித உரிமைகள், கருத்துரிமை, எழுத்திரிமை என்றேல்லாம் சொல்லிக் கொண்டு, எல்லா கூட்டங்களும் கிளம்பியிருக்கும். அதுவும் அந்த இந்தியன் முஸ்லிம் என்றால், வேறுமாதிரி திசைத் திரும்பியிருக்கும். ஆனால், இங்கிலாந்தே இப்பொழுது அமுக்கி வாசிக்கிறது.

 

வேதபிரகாஷ்

© 25-01-2014

 

 


[2] Mohammad Asghar, a British national of Pakistani origin, was arrested in 2010 in Rawalpindi for writing blasphemous letters, police said.

http://www.thenews.com.pk/Todays-News-13-28159-Briton-sentenced-to-death-for-blasphemy

[3] “Asghar claimed to be a prophet even inside the court. He confessed it in front of the judge,” Javed Gul, a government prosecutor, told AFP news agency.

http://www.bbc.co.uk/news/world-asia-25874580

[8] Maya Foa of Reprieve said: “The evidence is clear that he is unable to defend himself in court. “Worse still, he is currently being held in utterly unsuitable conditions in prison, and we are very concerned about his health.”

http://www.heraldscotland.com/news/home-news/mentally-ill-scots-grandfather-faces-death-penalty-in-pakistan.23265318

 

Explore posts in the same categories: அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அரேபியா, அல்லாஹ், அஹ்மதியா, ஆப்கானிஸ்தான், இமாம், இஸ்லாம், கராச்சி, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சரீயத், சரீயத் சட்டம், சுன்னி, சுன்னி சட்டம், ஜிஹாதி, மரண தண்டனை, மொஹம்மது அஸ்கர்

குறிச்சொற்கள்: , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: