அல்-உம்மா தீவிரவாதிகள், அல்-முஜாஹித்தீன் ஆனதும், பிடிபட்டதும் எப்படி – இரண்டு வருடம் வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தவர்கள் பிடிபட்டனர்!

அல்-உம்மா தீவிரவாதிகள், அல்-முஜாஹித்தீன் ஆனதும், பிடிபட்டதும் எப்படி – இரண்டு வருடம் வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தவர்கள் பிடிபட்டனர்!

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.1

இரண்டு வருடங்களாக வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தது: புத்தூரில், முஸ்லிம் காலனி மேதரா தெருவில் உள்ள இரண்டு வீடுகளிலும் சோதனையிட்டபோது, ஒரு பிஸ்டல், பைப் குண்டுகள், ஐந்து மேம்படுத்தப் பட்ட குண்டுகள், தூரத்திலிருந்து இயக்கும் கருவி (ரிமோட்) முதலியவை கண்டெடுக்கப்பட்டன[1]. இவற்றையெல்லாம் எடுத்து வந்துள்ளனர், மறைத்து வைத்துள்ளனர் எனும்போது, அவர்களுக்கு “லாஜிஸ்டிக்ஸ்” உதவிகள் யார் கொடுத்தது என்றும் ஆராய வேண்டியுள்ளது. “இந்த இடம் தீவிரவாதிகளால் திட்டமிட்டே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. எந்நேரத்திலும், ரயில் மூலம் தப்பித்துச் செல்ல முடியும். மேலும் அவர்கள் சிறிதும் சந்தேகமே வராத அளவிற்கு நடந்து கொண்டுள்ளனர், என்று போலீசார் சொல்கின்றனர்[2]. ஆக அவர்கள் திட்டமிட்டே, இவ்வாறு பதுங்கி வாழ்ந்துள்ளனர். இரண்டு வருடங்களாக இவர்கள் இப்படி மறைந்து வாழ்ந்துள்ளனர்[3]. சென்னை போன்ற நகரங்கள் மீது தாக்குதல் நடத்தவும் தீர்மானித்ததாகத் தெரிகிறது[4]. இஸ்லாமிய மதவெறி இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய எண்ணத்தில் இருந்திருக்க மாட்டார்கள் எனலாம்.

chittoor-puttur-jihadi-hideout-DC

முஸ்லிம் காலனியில், மசுதிக்கு அருகில் வீட்டைத் தேர்ந்தெடுத்தது: முஸ்லிம் காலனியில், கேட் புத்தூர், ஸ்கூல் தெரு, கேட் தெரு, மஸ்கித் தெரு, மேத ரா தெரு என்றுள்ளன. மஸ்ஜித் தெருவிலிருந்து ரெயில்வே ஸ்டேசன் அருகில் உள்ளது. மேதரா தெருவில் இரண்டு வீடுகளை வாடகை எடுத்துத் தங்கியுள்ளனர். யாசின் பாட்சா என்ற மத்திய கலால் துறை சூப்பிரென்டென்ட் வீடுகளுக்கு சொந்தக்காரர். அவர் சமீபத்தில் இறந்து விட்டதாகத் தெரிகிறது. ரூ.1000/- வாடகையில் அவர்கள் தங்கியுள்ளனர். பழைப் பொருட்களை வாங்கி-விற்கும் வியாபாரத்தை செய்வது போல இருந்துள்ளனர்[5]. அதாவது அல்-உம்மா திவிரவாதிகள் வியாபாரிகள் போல நடித்து, திரிந்துள்ளனர்[6]. அவர்களைப் பற்றி கேட்டதற்கு, எதுவும் பேசாமல் வாய்மூடிக் கொண்டு உள்ளூர்வாசிகள் இருக்கிறார்களாம். இங்கிருப்பவர்கள் தெலுங்கு பேசுபவர்கள், இவர்களோ தமிழர்கள், அதனால், “நாங்கள் அவர்களிடத்தில் என்ன பேசியிருக்க முடியும்?”, என்று ஹஷீனா என்ற பெண்மணி அங்கலாய்த்தாராம்[7]. முஸ்லிம்கள் எப்படி விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை, அப்பெண்கள் நடந்து கொண்ட விதத்திலிருந்தே தெரிகின்றது. மசூதி மற்றும் மசூதி சுற்றிலும் முஸ்லிம்களின் வீடுகள் இருப்பது, அத்தெருக்களில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்வது, அத்தெருக்களில் மற்றவர்கள் செல்வது மறைமுகமாகத் தடுப்பது முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்.

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.3

போலீசார் – அக்டோபஸ் கமாண்டோஸ் தீவிரவாதிகளைப் பிடித்த விதம்: பி. பிரசாத் ராவ், டி.ஜி.பி, ஆந்திரபிரதேசம், “பிடிபட்ட மூன்று பேரும் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் ஆவர். அதில் பில்சால் மாலிக் மற்றும் பம்மா இஸ்மாயில், பெங்களூரு பிஜேபி.அலுவலகத்தில் குண்டு வைப்பு, எல்.கே.அத்வானி மீது தாக்குதல் சதி, பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது” என்றார். “விடியற்காலை 4.30க்கு, லட்சுமணன், சென்னை போலீஸ் நுழைய முற்பட்டபோது, பிலால் இஸ்மாயில் அவரை அரிவாளல் வெட்டியதில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சென்னை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பொழுது அபாயத்திலிருந்து தப்பிவிட்டார் என்று தெரிகிறது. பெண் மற்றும் குழந்தைகள் இருந்ததால், போலீசார் மற்றும் சிறப்புப் படையினர், பொறுமையாக செயல் பட்டுள்ளனர். வீட்டின் கூரையில் இரண்டு இடங்களில் துளையிட்டு உள்ளே புகைக்குண்டுகள் போடப்பட்டன. இதனால், உள்ளேயிருந்தவர்கள் முன்புள்ள அறையில் பதுங்கிக் கொண்டனர். எச்சரிக்கை விடுத்த பிறகு, பெண் குழந்தைகளுடன் வெளியே வந்தாள். பிறகு இரண்டு பேரும் வெளியே வந்து சரணடைந்தனர்.”, என்று அவர் விளக்கினார்[8].

ISI-Residence-putur-DC.3 Bana Ismail wife

இந்திய முஜாஹித்தீன் போன்று அல்முஜாஹித்தீனும் அதேவிதமான குண்டுகள்,  வெடிப்பொருட்கள் வைத்திருந்தது: போலீசார் பக்ருதீனின் மறைவிடத்திலும் சோதனையிட்டு வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் [ஒரு பிஸ்டல், பைப் குண்டுகள், ஐந்து மேம்படுத்தப் பட்ட குண்டுகள், தூரத்திலிருந்து இயக்கும் கருவி (ரிமோட்) உட்பட] எடுத்துள்ளனர். “அக்டோபஸ்” – தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை இயக்கம் [OCTOPUS (Organisation for Counter Terrorists Operations)] என்கின்றதன் வீரர்கள் தயாராக இருந்த ஆறு உள்ளிருந்து வெடுக்கும் தன்மையுள்ள குண்டுகளை [six IEDs ready for use] செயலிழக்கச் செய்தனர்[9]. “இவ்வியக்கம் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையாகும், இதில் அவர்கள் தங்களது வேலையை நன்றாகச் செய்துள்ளனர்”, என்று பி. பிரசாத் ராவ், டி.ஜி.பி சொன்னார். இந்த IEDக்களை இந்திய முஜாஹித்தீன் உபயோகித்து வருகிறது என்பது தெரிந்த விசயமே. அதனால், இரண்டு இயக்கங்களும் ஒத்துழைத்தே செய்து வருகின்றன என்று தெரிகிறது. சமீபத்தில்தான் யாசின் பட்கல், அப்துல் கரீம் துண்டா முதலியோர் பிடிபட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத் தக்கது. இதனால் தான், போலீசார், இவர்களுக்கும் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐக்கும் தொடர்புள்ளதாகக் கருதுகின்றனர்.

ISI-Residence-putur-DC.4

திருப்பதிதிருமலை மீது தாக்குதல் திட்டமிடப்பட்டதா?: திருப்பதி-திருமலை புத்தூரிலிருந்து 35 கி,மீ தொலைவில் தான் உள்ளது. மேலும், இப்பொழுது பிரம்மோட்சவம் நடந்து வருகிறது. மேலும், ஆந்திரா பிரிவினை பிரச்சினையால் பந்த்-கடையடைப்பு முதலியனவும் நடந்து வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒருவேளை, அத்தீவிரவாதிகள், திருமலையைத் தாக்க திட்டமிட்டனரா என்று கேட்டபோது, “அத்தகைய விவரம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் புலன் விசாரணை செய்பவர்கள் அத்தகைய விவரங்களை ஆராய்வார்கள்”, என்றும் கூறினார்[10]. அக்டோபஸ் கமாண்டோக்கள் திருமலை கோவிலுக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்[11]. முகலாயர்கள், போர்ச்சுகீசியர் போன்ற முஸ்லிம்-கிருத்துவர்களின் கண்களை எப்பொழுதுமே இக்கோவில் உறுத்தி வந்துள்ளது. அக்கோவிலைக் கொள்ளையடிக்க பலமுறை முயற்சித்துள்ளனர். ஆனால், மக்கள் மற்றும் அரசர்கள் அதனைத் தடுத்து வெற்றிக் கொண்டுள்ளனர். ஆகவே, இக்காலத்திலும், முஸ்லிம் தீவிரவாதிகள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் அடுத்தவர்களின் கோவில்களை இடிப்பது, அழிப்பது என்ற வெறித்தனம் ஏன் உள்ளது என்பதும் மனோதத்துவ ரீதியில் அறிய முடிகிறது. முஸ்லிம்கள், இவர்களை மாற்றாமல், அவர்களது வெறியை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பது, அவர்களது அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை முதலியவற்றைத் தான் எடுத்துக் காட்டுகிறது.

ISI-Residance-putur-DC.2

நாட்டுப்பற்று கொண்ட முஸ்லிம் லீக்கின் செயலாளர் பக்ருதீனை விடுவிக்க மனு: சொல்லிவைத்தால் போல, ஜே. அப்துல் ரஹிம், இந்திய தேசிய லீக் கட்சியின் பொது செயலாளர் [The petitioner J. Abdul Rahim, general secretary, Indian National League Party], ஆள்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 4 அன்று தாக்குதல் செய்துள்ளார். “பக்ருதீன் எனது நண்பர். செய்திகள் வாயிலாக அவரை போலீஸார் கைது செய்து, ஏதோ மறைவிடத்திற்கு விசாரிக்க எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. போலீசார் அவரது குடும்பதிற்கு இவ்விவரங்களை சொல்லவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது. உடனே அவரை விடுவிக்கவேண்டும்”, என்று வாதித்துள்ளார்[12]. ஆனால், மதுரையிலுள்ள சையது மீரா என்ற பக்ருதீனின் தாயாருக்கு கைது பற்றி தெரிவித்துள்ளதாகவும், கைது முதலியன சட்டப்படித்தான் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் எடுத்துக் காட்டியுள்ளனர்.

ISI-Residence-putur-DC.6

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக நடந்து கொள்வது: முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாதிகளாக, குண்டுகள் வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வது, இந்துத் தலைவர்களை மதவெறியோடுத் தாக்கிக் கொல்லுதல், முதலிய செயல்களை செய்து வரும் போது, மற்ற முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள். நாட்டைத் துண்டாடியதில் “இந்திய முஸ்லீம் லீக்கின்” பங்கு அனைவரும் அறிந்ததே. பெயரை மாற்றிக் கொண்டு விட்டதால், “முஸ்லிம்” என்ற வார்த்தையை எடுத்து விட்டால், இந்தியர்கள் மறந்து விட மாட்டார்கள். அடிக்கொரு தடவை, நாட்டுப் பற்றில் நங்கள் எந்தளவிலும் சளைத்தவர்கள் அல்லர் என்று மார் தட்டிக் கொள்ளும் இவர்கள், எப்படி இத்தகைய தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர் என்று அவர்கள் தாம் விளக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

06-10-2013


[7] Women in the street told this correspondent that the duo was always tight-lipped. “They are Tamils and we are Telugus. What’s there for them to talk to us?”, snaps Hasina, an elderly woman who has seen one of them regularly collect water from the public tap.

http://www.thehindu.com/news/national/alumma-men-masqueraded-as-traders-in-puttur/article5205425.ece

[9] Police then searched the hideout of the other terror suspect Fakruddin and recovered the weapons and explosives. “An OCTOPUS team along with a team from the Army defused six IEDs ready for use.

[11] Tirumala is a potential terrorist target. A team of OCTOPUS commandos is stationed round the clock at Tirumala guarding the Lord Venkateswara Temple.

[12] The petitioner J. Abdul Rahim, general secretary, Indian National League Party, submitted that on October 4, he came to know that his friend, Fakruddin, had been arrested by CB CID (Special Investigation Team.) He was illegally detained. There were also press reports that he had been taken to an unknown place by the police. The police did not inform the relatives or family about the arrest and detention. He sent a representation to the authorities demanding the immediate release of Fakruddin.

http://www.thehindu.com/news/cities/chennai/fakruddin-not-illegally-detained-state-tells-court/article5205069.ece?ref=relatedNews

Explore posts in the same categories: அல் - உம்மா, அல்-முஜாஹித்தீன், சித்தூர், புத்தூர், மசூதி தெரு, முஸ்லிம் காலனி

குறிச்சொற்கள்: , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: