மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?
மதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா?
மதரஸாவில் நடந்த ரெயிட்/அதிரடி சோதனை: பாகிஸ்தான் தலைநகரமான கராச்சியில், சோரம் கோத் என்ற இடத்தில் மசூதிக்குப்பக்கத்தில் இயங்கி வரும் ஒரு மதரஸாவிலிருந்து 50ற்கும் மேற்பட்ட 10-14 வயது சிறுவர்கள், 15-30 வயது இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்[1]. ஜக்கரியா மதரஸா என்ற இஸ்லாமிய மத போதனை செமினரி / பள்ளிக்கூடம் / குருகுலம் இயங்கி வரும் இடத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கு அங்கிருந்து வினோதமான சப்தங்கள் வருவதினால் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால், அவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்[2]. அதன்படி, 12-12-2011 (திங்கட்கிழமை இரவு) அன்று அந்த ஜக்காரியா மதரஸாவின் அடித்தளத்தை போலீஸார் அதிரடியாக சோதனையிட்ட போது, சிறு-சிறு புறாக்கூண்டுகள் போன்ற அறைகளில் சங்கிலிகளால் கட்டுண்ட, அடிபட்ட, மனநிலை சமமாக/சரியாக இல்லாத, போதை மருந்துக்குட்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட என்ற பலர் காணப்பட்டனர்[3]. உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்டவர்களின் மனோநிலை: இலவசமாக இஸ்லாம் மதக்கோட்பாடுகள் சொல்லித்தரப்படும் என்று அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால், அவர்களை சங்கிலியிலால் பிணைக்கப்பட்ட நிலையிலும், அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், செக்ஸ் தொல்லைக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது பிடோபைல் போன்ற தொந்தரவு / வழக்கம் பின்பற்றப்பட்டதா அல்லது, அந்த சிறுவர்கள்-இளைஞர்கள் அவ்வாறு துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டனரா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பாடி-ஆட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோருமே மன-அளவில் பாதிக்கபட்டவர்கள் என்று தெரிந்தது[4]. இதே மாதிரியான அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள்-இளைஞர்களின் நிலை முன்பு மூல்தான், சிந்த், கைபர் பக்துன்ங்வா முதலிய இடங்களிலிலும் கண்டறியப்பட்டன.
மதரஸாக்கள் என்ன செய்கின்றன?: அரசு புள்ளி விவரங்களின் படி, 15,000ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன. அவை சுமார் 2 மில்லியன்கள் – 20,00,000 அதாவது 20 கோடி மாணவர்களுக்கு இத்தகைய இஸ்லாம் மதகோட்பாட்டு கல்வி கொடுத்து வருகின்றன. மக்கள் மற்ற பள்ளிகளுக்கு தங்களது சிறுவர்களை அனுப்பினால் செலவாகும் என்பதினாலும், தீவிரவாத கொள்கைகளில் பிடிப்புள்ளதனாலும், கல்வி, உணவு இலவசம் என்பதினாலும் பெற்றோர்கள் அனுப்பிவைப்பதாக தஎரிகிறது. இத்தகைய மதரசாக்கள் அரசின் கட்டுப்பாடுகள், விதிகள் முதலியவற்றில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மனித உரிமை மற்றும் சமூக சேவகர்கள் கூறுகிறார்கள். நாஸிஸ் புரோஹி என்ற சமூகவியல் ஆர்வலர், அடிப்பது, தண்டிப்பது முதலியன சட்டப்படி குற்றம் என்றாலும், இத்தகைய பள்ளிகள், மதரஸாக்களில் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன என்கிறார்[5].
மூளைச்சலவை ஏன் செய்யப்படுகிறது?: மதரஸா ஜக்கரையாவின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்[6]. உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமைசர் ரஹ்மான் மாலிக், “அவர்கள் மூளசலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சமூகத்திலுள்ள மற்ற மக்களின் மீதான எதிர்ப்புத்தன்மை முதலியவற்றை அறிந்து கொள்வது கடினம். அவர்களை மிருகங்களைப் போலக் கட்டிவைத்துள்ளார்கள்”, என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[7]. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் “மூளைச்சலவை” செய்யப்படவேண்டும்? இன்றைய நிலையில் “சிக்ஸோபிடனியா” என்ற சாதாரண நிலைகளுக்கே மருத்துவர்கள், ஆஸ்பத்திரிக்களில், விஞ்ஞான ரீதியில் சிகிச்சை அளிக்கிறார்கள். பிறகு, மதரஸாக்களில் கட்டிப் போட்டு அடித்தால், அவர்கள் குணமாவார்களா? அல்லது இதன் பின்னணி என்ன?
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறியப்பட்ட விஷயங்கள்: தீவிரவாத, பயங்கரவாத இயகங்களுக்கும், இந்த மதரஸாவிற்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அடைப்பட்டுள்ளவர்களை கேட்டபோது, அவர்கள் பலவிதமான விவரங்களைக் கூறியுள்ளது திகைப்படையச் செய்துள்ளன[8]:
- எங்களுக்கு ஜிஹாத் போதிக்கப் படுகிறது. புனித போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
- வடமேற்கிலிருந்து தாலிபான்கள் எங்களை தயார்படுத்து அழைத்துச் செல்கிறார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். எங்களை ‘முஜாஹித்தீன்’களாக மாற்றுகிறார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளனர்[9].
- எங்களுக்கு சாப்பாடே சரிவர கொடுப்பதில்லை, அடைத்து வைத்து அடிக்கிறார்கள். எங்கள் பொற்றோர்களைப் பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.
- முப்பது நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வெயிலையே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
- மாறாக, பெற்றோர்கள் தாம் அவர்களை அங்கு சேர்த்துள்ளனர். அவர்கள் சில குற்றங்களில் அகப்பட்டுள்ளதால், தப்பிவிடாமல் இருக்க பிணைத்து வைத்துள்ளோம் என்று மதரஸாவில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
- போதை மருந்துக்குட்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சிகிச்சையளிக்க அழைத்துவரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
- ஹெராயின் போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையான அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்றுதான் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டுள்ளார்கள்.
- ஆனால் மருத்துவ ரீதியில் சிகிச்சையளிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவுமே அங்குக் காணப்படவில்லை.
- தனித்தனியாக கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டவிதம், சங்கிலிகளால் பிணைத்து வைக்கப்பட நிலை, கை-கால்களில் அடி-காயம் முதலியவை இருப்பது, சரியான பேச்சில்லாமை அல்லது முன்னுக்கு முரணாக பேசுவது முதலியன சந்தேகங்களை எழுப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- சமூகத்தில் கீழுள்ளவர்கள்[10] இவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்று “டான்” பத்திக்கைக்கூறுகிறது. அப்படியென்றால், இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது[11].
மதரஸாக்கள்: மதரீதியில் இயங்குகின்றனவேயன்றி, பொது காரணங்களுக்கக இயங்குவதில்லை: பாகிஸ்தானின் “டான்” என்ற பத்திரிக்கை, ஏன், எதற்காக, எவ்வாறு இப்படி முஸ்லீம் சிறுவர்கள்-இளைஞர்கள் போதை மருந்து, மன-நோய், மனச்சிதைவு முதலிய தவறுகளுக்கு-குற்றங்களுக்கு அடிமையாகிறார்கள் என்று அலசியுள்ளது. ஆனால், மற்ற சமுகங்களைப் போல பொதுவான காரணங்களையே கூறியுள்ளது[12]. ஒரு இஸ்லாமிய சமூகத்தில், இஸ்லாம் அடிப்படவாதம் போற்றும் நாட்டில், எப்படி அதுவும் இஸ்லாம் போதிக்கும் மதரஸாக்களில் அத்தகைய சீரழிவுகள் ஏற்படமுடியும் என்ற முக்கிய விஷயத்தை தவிர்த்து மற்ற பொதுகாரணங்களின் மீது முடிவாக தீர்வைக் காணுவது வேடிக்கையாக உள்ளது[13].
வேதபிரகாஷ்
15-12-2011
[1] http://www.hindustantimes.com/world-news/Pakistan/Kids-rescued-from-Pak-seminary-scarred-for-life/Article1-782196.aspx
[3] http://www.smh.com.au/world/chained-and-beaten-pakistani-children-rescued-in-raid-on-school-20111214-1ouv4.html
[7] http://zeenews.india.com/news/south-asia/chained-youth-for-terror-training-in-pak-madrassa_746710.html
[8] http://timesofindia.indiatimes.com/world/pakistan/53-kids-chained-in-Pak-madrassa-for-becoming-fighters-for-Taliban-freed-madrassa-basement-freed/articleshow/11101477.cms
[9] http://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/8953925/Police-rescue-50-boys-from-Karachi-madrassah-dungeon.html
[10] …………….“detoxification/rehabilitation” center for the underprivileged people, located in the outskirts of Karachi.
http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html
[11] ‘Privileged addicts’ are however, given the best of facilities which include a diet and exercise regime to assist them in staying sober and straight. There are various not-for-profit organisations operating in Pakistan specialising in the causes to eradicate addictions from our society, however how many of those are actually working to constructively assist the underprivileged and needy addicts remain ambiguous.
http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html
The debate entailing whether these Medressahs are helping the underprivileged or taking advantage of their poverty and ignorance is a moot point. However, the will to change and challenge the current situation by questioning the governance of our religious clerics and many such seminaries should top the government’s agenda.
http://www.dawn.com/2011/12/14/spiritually-healed-or-derailed.html
குறிச்சொற்கள்: இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தாலிபான், பாகிஸ்தான், போதை, மசூதி, மதரஸா, மனச்சிதைவு, மனநிலை, மனநோய், மனம், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், ஹெராயின்
You can comment below, or link to this permanent URL from your own site.
திசெம்பர் 15, 2011 இல் 4:50 முப
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிப் பள்ளி சுற்றி வளைப்பு : 45 சிறுவர்கள் மீட்பு (பட இணைப்பு) _
கவின் / வீரகேசரி இணையம் 12/14/2011 12:45:36 PM
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35578
பாகிஸ்தான் கராச்சி நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பள்ளியொன்றில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த 45 சிறுவர்களை அப்பகுதி பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதையடுத்து பொலிஸார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது சுமார் 12 முதல் 20 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக அவர்களை விடுவித்த பொலிஸார் அங்கிருந்த மதகுருமார் இருவரைக் கைது செய்துள்ளனர். இப்பள்ளியின் நிர்வாகி இதன்போது தலைமறைவாகி உள்ளார்.
இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் பலர் மோசமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் பலர் பாகிஸ்தானின் பின்தங்கிய மாகாணங்களில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இப்பள்ளிக்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்ளும் தலிபான் உறுப்பினர்கள் தங்களைப் போருக்கு தயாராகும்படி வலியுறுத்தியதாகச் சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
திசெம்பர் 15, 2011 இல் 4:51 முப
தீவிரவாத பயிற்சி: சிறை வைக்கப்பட்ட 45 சிறார்கள் மீட்பு
கராச்சி, செவ்வாய், 13 டிசம்பர் 2011( 20:19 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/international/1112/13/1111213064_1.htm
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி அளிப்பதற்காக மதரசா ஒன்றில் சங்கிலியா கட்டி வைக்கப்பட்டிருந்த 45 சிறார்கள் மீட்கப்பட்டனர்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருப்பதாகவும், அங்குள்ள சில குறிப்பிட்ட மதரசாக்கள்,மார்க்க கல்வி என்ற பெயரில் குழந்தைகளுக்கு தீவிரவாதத்தை பயிற்றுவிப்பதாகவும் நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு இருந்துவருகிறது.
இந்நிலையில் அதனை நிரூபிக்கும்விதமாக, கராச்சியில் உள்ள மதரசா ஒன்றின் ரகசிய அறையில் தீவிரவாத பயிற்சி அளிக்கும் திட்டத்துடன் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்த 45 சிறார்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கராச்சியின் மத்திய பகுதியில் உள்ள ஜகாரியா என்ற மதரசாவில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார், அங்குள்ள ரகசிய அறை ஒன்றில் சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்டிருந்த 45 சிறார்களை மீட்டனர்.
இந்த சிறுவர்களை அடித்து துன்புறுத்தி,கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 18 பேர் 20 வயது அல்லது அதற்கும் கீழானவர்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே சிறார்களை சங்கிலியால் கட்டிவைத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த அந்த மதரசா நிர்வாக அதிகாரி ஒருவர், அவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்களாக இருந்ததால், அவர்களை சிறந்த முஸ்லிமாக மாற்றும் நோக்கிலேயே அவ்வாறு சங்கிலியால் கட்டிவைத்ததாக கூறினார்.
இருப்பினும் இது குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திசெம்பர் 15, 2011 இல் 4:54 முப
பாக்:மதரஸா ரகசிய அறையில் அடைத்துவைக்கப்படிருந்த 50 சிறார்கள் மீட்பு
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 13, 2011, 15:24 [IST]
http://tamil.oneindia.in/news/2011/12/13/world-pak-50-kids-found-chained-seminary-dungeon-aid0128.html
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மதராஸாவின் ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரி்ன் சொராப் காத் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவின் ரகசிய அறையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதை செய்ய மறுக்கும் சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த மதரஸாவிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரி கடாப் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றும் மதரஸாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். நாட்டில் 20,000க்கும் அதிகமான மதரஸாக்கள் குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி கற்றுத் தருகின்றன. அவை அனைத்தையும் அரசாங்கத்தில் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
வடமேற்கு கைபர் பக்டுங்வா மாகாணத்தில் உள்ள பல மதரஸாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட பல மதரஸாக்களில் அரசு சோதனை நடத்தியது. பெஷாவர் அருகே உள்ள மவுலானா சமி உல் ஹக் மதரஸாவில் தான் தாலிபான் தலைவர் முல்லா உமர் பயிற்சி பெற்றதாக நம்பப்படுகிறது.
திசெம்பர் 15, 2011 இல் 4:56 முப
ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறார்கள் மீட்பு
By moghana arushothy 13/12/2011 19:07:00
http://vanakkammalaysia.com/permalink/3330.html
இஸ்லாமாபாத், டிசம்பர் 13- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மதராசா ஒன்றில் தனி அறையில் சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறார்கள் மீட்கப்பட்டனர்.
தீவிரவாதிகள் இந்தச் சிறார்களைக் கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் சிறார்களை இவர்கள் அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
50க்கும் மேற்பட்ட சிறார்கள் கராச்சி நகரின் சொராப் காத் பகுதியில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அந்த மதராஸாவில் திடீர் சோதனை நடத்தினர்.
ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றும் மதராஸாக்கள் தீவிரவாதத்தைக் கடைப்பிடிப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கடந்தாண்டு கூறியிருந்தார். பாகிஸ்தானில் 20000க்கும் மேற்பட்ட மதராஸாக்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வி போதிக்கின்றன. அவையனைத்தையும் அரசாங்கம் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 27, 2013 இல் 4:17 முப
[…] [22] https://islamindia.wordpress.com/2011/12/15/1590-madrassas-solution-for-treatment-or-production-of-lu… […]