அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்[1]. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு (24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம் (7) அஜிராபானு (5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

08-11-2010 அன்று மாயமான ஆதிலாபானு, குழந்தைகள்; வேலைக்காக முத்துச்சாமி அகமது மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் (ஆகஸ்ட் 2010), தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது தாய்க்கு தனது மகளின் கள்ள உறவுகள் தெரிந்தே இருக்கிறது.

11-11-2010 அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகள் பிணங்கள் கிடந்தன:  இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று (11-11-2010) அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருந்ததனராம்: காதலுக்காக மதம் மாறி வந்த முத்துசாமியை இவ்வாறு மோசம் செய்யலாமா? கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு இந்து தேவநாதன் செய்தலால், தான் மனம் மாறி முஸ்லீமாக மாறினேன் என்ற்யு பெருமையாக சொல்லிக் கொண்டது நினைவிற்கு வருகிறது. இப்பொழுது, அந்த மாதிரி மதம் மாறிய இந்துக்கள் என்ன சொல்வர்? இவளும்தான், ஒரு பெண்-தேவநாதன் போலத்தானே நான்கு பேரிடத்தில் சோரம் போயுள்ளாள்.

கதறி அழுத அகமது என்ற முத்துசாமி – காதல் கணவர்: மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். “இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,” என, கதறியுள்ளார். முஸ்லீமாக மாறியும், இவரது காதல் பாவமாகத்தான் போய் விட்டது. இது என்ன காதலோ, மத மாற்றாமோ? இப்பொழுது அழுவதனால் காதல் புதுப்பிக்கப்படுமா அல்லது காதலி உயிர் பெற்றெழுவாளா, அகமது என்பாளா, முத்துசாமி என்பாளா? அல்லாவிற்கே வெளிச்சம்.

மைனர் காதல் மங்கியது, வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது: தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த சாத்தான்குளத்தினர் இப்பொழுது என்ன சொல்லப்போகின்றனர்? முத்துசாமி ஆதிலா பானுவை காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அகமது ஆனவுடன் முகமது மலர்ந்து அமையாகி விட்டனர் போலும். அனால், பிறகு, மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்த போது, கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டபோது, ஏன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை? இது சமூகப் பிரச்சினை மட்டுமல்லாது, மற்ற பிரச்சினைகளும் சம்பந்தப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. இனியாவது, இத்தகைய பிரச்சினைகள் வராத மாதிரி செய்வதற்கு ஏதாவது வழி உண்டா?

வேதபிரகாஷ்

© 11-11-2010


[1] தினமலர், இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? பதிவு செய்த நாள்: நவம்பர் 11, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124503

Explore posts in the same categories: அஜிராபானு, அதிரா பானு, அதிலா பானு, அழுகிய நிலையில், ஆதிரா பானு, ஆதிலா பானு, கள்ளக்காதல், சொத்துக்கள், முகமது அஸ்லம், முத்துச்சாமி, வட்டிக்குக் கடன், வணிக வளாகம், ஹம்சத்நிஷா

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

15 பின்னூட்டங்கள் மேல் “அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?”

  1. elumugam Says:

    அந்த பெண் காதலித்து திருமணம் செய்தும் பிற நபர்களோடு தொடர்பு வைத்து இருந்தது உண்மை என்று அதறப்பூர்வமாக தெரிந்து இருந்தால் அவள் செத்தது வருத்தம் இல்லை அவள் செய்யாத தப்பை செய்தால் என்று சொன்னால் அது மிகவும் தவறு ஆனால் காதலித்து திருமணம் செய்தவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்…

    • M. Nachiappan Says:

      அவள் சாகவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

      அது தவிர, இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் கொன்றிருக்கிறார்கள்.

      காதலித்துதான் கல்யாணம் செய்திருக்கிறான். என்ன ஒழுங்காக படிக்கவில்லையா? “ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு (24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்”. பிறகு எதற்கு எதிர்ப்பு, பெயர் மாற்றம், மதம் மாற்றம், முத்துச்சமி-அகமது எல்லாம்?

      இஸ்லாத்தில் காதல் கூட ஓன்-வே-யில் தான் செல்லும் போல.

      • vedaprakash Says:

        “இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்” – அதாவது முஸ்லீம் பெண்-இந்து ஆண் காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றால், திருமணத்திற்குப் பிறகு, அவள் அப்படி பலருடன் உறவு வைத்திருந்ததை ஏன் எதிர்க்கவில்லை?

    • vedaprakash Says:

      கொலையை நியாப்படுத்துவது சரியில்லையே?


  2. ராமநாதபுரம் : மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம்(7) அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

    வேலைக்காக முத்துச்சாமி மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

    கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கதறி அழுத காதல் கணவர் : மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். “”இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,” என, கதறியுள்ளார்.

    மைனர் காதல் மங்கியது : தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    • vedaprakash Says:

      என்னுடைய பெய்ரை வைத்துக் கொண்டு, தினமலரில் வந்த அ்தே செய்தியை பதிலாகப் போட்டிருப்பதில் சந்தேகமாகத்தான் இருக்கிறது.

      மறைந்திருக்கும் நபர் யாரென்று தெரியவில்லை!

      இதைவிட, உங்களது விமர்சனத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

  3. M. Nachiappan Says:

    மலேசியாவில் இருந்து திரும்பிய தாய்-மகன்-மகள் கடத்தல்; கேணிக்கரை போலீசில் புகார்
    Ramanathapuram புதன்கிழமை, நவம்பர் 10, 5:21 PM IST

    http://www.maalaimalar.com/2010/11/10172123/malaysia-return-mother-daughte.html

    ராமநாதபுரம், நவ. 10- ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் சைபுநிஷா மகள் ஆதிலாபானு (வயது28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு அஸ்லம் (7) என்ற மகனும், காஜிராபானு (5) என்ற மகளும் உள்ளனர். மலேசிய நாட்டில் வேலை பார்த்து வந்த முத்துச்சாமி திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தை களையும் மலேசியாவுக்கு அழைத்து சென்றார். அங்கு காஜிரா பானு மலேசிய நாட்டின் குடியுரிமையும் பெற்றார்.

    இந்த நிலையில் திடீரென கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆதிலாபானு தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு மலேசியாவில் இருந்து சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தார். இங்கு தனது தாய் வீட்டில் வசித்து வந்த அவர் கடந்த 8-ந்தேதி திடீரென மாயமானார். அவர் மட்டும் மின்றி 2 குழந்தைகளையும் காணவில்லை.

    இதையடுத்து ஆதிலா பானுவின் தாய் சைபுநிஷா தனது உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மலேசியாவில் வசித்து வரும் மருமகனிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசா ரித்தார். அங்கும் வராத தால் அதிர்ச்சியடைந்த சைபுநிஷா இது தொடர்பாக கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகள் மற்றும் பேரன், பேத்தியை யாராவது “மர்ம” ஆசாமிகள் கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆதிலாபானு மற்றும் அவரது குழந்தை களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • vedaprakash Says:

      இந்த செய்திக்கு நன்றி.

      “மலேசிய நாட்டில் வேலை பார்த்து வந்த முத்துச்சாமி திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தை களையும் மலேசியாவுக்கு அழைத்து சென்றார்”, அப்படியென்றால், முத்துசாமி சாதாரண இந்தியன் போல, தனது குடும்பத்தை, மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

      “அங்கு காஜிரா பானு மலேசிய நாட்டின் குடியுரிமையும் பெற்றார்”, அதாவது 5 வயது மகளுக்கு மட்டுமா குடியுரிமை வாங்கினார்கள்?

      “இந்த நிலையில் திடீரென கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது”, இது புரியவில்லை – அதாவது என்ன காரணம் என்பது தெரியவில்லை.

      “இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆதிலாபானு தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு மலேசியாவில் இருந்து சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தார்”, அதாவது கணவனைவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

      • vedaprakash Says:

        வாடிப்பட்டியில் சா‌லையோரம் வீசப்பட்ட 3 சடலங்கள்: அடையாளம் கண்டறியப்பட்டது
        பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2010,10:11 IST
        மாற்றம் செய்த நாள் : நவம்பர் 11,2010,18:36 IST
        http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124370

        வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட 3 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. மது‌ரை மாவட்டம் வாடிப்பட்டி கட்டங்குளம் 4 வழிச்சாலையில் தரைப்பாலம் அடியில் வெள்ளைவேஷ்டியால் கட்டப்பட்டு இருந்த சடலம் ஒன்று கிடந்தது. அங்கிருந்து சரியாக 3 கிலோ மீட்டர் தூரத்தில் இதே போல் மற்றொரு பார்சல் கிடந்தது. 2 பார்சல்களையும் போலீசார் கைப்பற்றினர். முதல் பார்சலில் ‌35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது. மற்றொரு பார்சலில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன், மற்றும் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் ச‌டலம் இருந்தது. அனைவரும் இறந்து 4 நாட்கள் ஆகியிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சடலங்களை வீசிச்சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அந்த சடலங்கள் ராமநாதபுரம் கேணிக்கரை, பாரதி நகரைச் சேர்ந்த ஆதிரா பானு(27), அவரது குழந்தைகள் முகமது அஸ்லாம் கனி(7) மற்றும் ஆசியா பானு(5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிரா பானுவின் தாய் சயுபு நிஷா அடையாளம் காட்டினார். ராமநாதபுரத்தில் கடந்த 8ம் தேதி இவர்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இவர்களை யாரேனும் கடத்தி கொலை செய்தனரா என்பது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  4. vedaprakash Says:

    Missing Malaysian woman, children found murdered in Madurai
    http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/12/nation/20101112160859&sec=nation

    CHENNAI: A Malaysian mother and her two children who went missing last Monday in south India have been found dead, police here said.

    The decomposed bodies of M. Adhila Banu, 24, her son Mohd Aslam, seven, and daughter Ajira Banu, five, were found in Vadipatti in Madurai, in Tamil Nadu on Thursday morning.

    “It’s a murder case, the bodies were identified by the victim’s mother (Adhila’s mother) and she confirmed they were the bodies of her daughter and two grandchildren.

    “The three heavily decomposed bodies were found about five kilometres apart and were wrapped in white dhotis.

    “The bodies were dumped in a canal filled with water, under a bridge. We are yet to establish the motive, the actual place and the reason for the murder,” Vadipatti police inspector P.R. Lakshmanan said Friday.

    Adila and her two children had returned to their native village in Barathi Nagar in Ramanathapuram District from Malaysia about a month ago and were staying with her parents.

    According to her mother Saibu Nisha, 56, Adila and her two children left home last Monday afternoon to purchase cooking gas cylinder but failed to return.

    The bodies, which were found about 150km from their home, are now in Rajaji Government Hospital in Madurai, undergoing post-mortem.

    The district police have set up a special team to probe into the crime.

    Her Malaysian husband, a driver, is still in Malaysia, said police. – Bernama

  5. vedaprakash Says:

    13/11/2010
    Two detained in connection with murder of NRI”s wife, kids
    http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4571334

    Rameswaram (TN), Nov 12 (PTI) Two persons have been detained for interrogation in connection with the murder of the wife and two children of a Malaysian NRI, who were missing since November 8 from Ramanathapuram town, police said today.
    Police said the mother and the children were found murdered near Vadipatti in Madurai district.
    While the bodies of the children, Ajira Banu and Mohammed Aslam, were found under a bridge at Vadipatti yesterday, their mother Adhila Banu”s body was found at a place three km from Vadipatti, police said.
    Adhila Banu”s husband, Muthusamy alias Mohammed, was working in Malaysia. They had fallen in love and later got married.
    Adhila Banu had left her house to book a gas cylinder along with her children and did not return, according to a complaint lodged by her mother Saibunisha.
    Saibunisha identified the bodies after Madurai police informed their counterparts in Ramanathapuram district about discovery of the bodies.
    A special team has been formed to trace the culprits.
    Adhila Banu was born in Malaysia, but had come back to India after her father died. Adhila, according to police, had lent money to some people in the same area. The reason for the murders was under investigation,police said.

  6. vedaprakash Says:

    இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூ’ கிடைப்பதில் பின்னடைவு
    பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2010,23:17 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=125110

    ராமநாதபுரம் : குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்.,கள் குவிந்துள்ளதால், “க்ளூ’ கிடைப்பதில் பின்னடைவு உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம், குப்பான்வலசையை சேர்ந்த முத்துச்சாமி, சாத்தான்குளம் ஆதிலாபானு(24) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துச்சாமி மாதம் மாறிய நிலையில், இவர்களுக்கு முகமது அஸ்லம்(7), அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக முத்துச்சாமி, மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், தம்பதியினரிடையே பிரச்னை ஏற்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ஆதிலாபானு, ராமநாதபுரம் பாரதிநகரில் குடியேறினார். கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான பானு, மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. “இந்த கொலை சம்பவத்தில் கள்ளக்காதலர்கள் இடையேயான மோதல் ஏற்பட்டிருக்கலாம்’ என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையில், இறந்த பெண்ணின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவருக்கு பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பி உள்ளார். இதனால், அந்த மொபைலின் “இன் பாக்ஸ்’ நிரம்பிவழிந்தது. போலீசார் பெரிதும் எதிர்பார்த்த மொபைல் போனில், உரிய “க்ளூ’ கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், ஆதிலாபானுவுக்கு வந்த மொபைல் அழைப்புகள் குறித்த விசாரணையில் நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிகிறது.

  7. K. Venkatraman Says:

    With reference to your comments made above, I find some discrepancy:

    First, it is mentioned as, “முதல் பார்சலில் ‌35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது. மற்றொரு பார்சலில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன், மற்றும் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் ச‌டலம் இருந்தது”.

    But, later, it is mentioned as, “இந்நிலையில், அந்த சடலங்கள் ராமநாதபுரம் கேணிக்கரை, பாரதி நகரைச் சேர்ந்த ஆதிரா பானு(27), அவரது குழந்தைகள் முகமது அஸ்லாம் கனி (7) மற்றும் ஆசியா பானு (5) என்பது தெரியவந்தது”.

    இவர்களது உடல்களை ஆதிரா பானுவின் தாய் சயுபு நிஷா அடையாளம் காட்டினார்.

    Why the difference?

  8. vedaprakash Says:

    கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்?
    தினமலர், நவம்பர் 13,2010
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=125685

    ராமநாதபுரம்: மதுரை வாடிபட்டி அருகே, குழந்தைகளுடன் கொலையான ராமநாதபுரம் பெண் ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருடன் திருச்சி, மதுரை நபர்கள் மொபைலில் பேசியதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஆதிலா பானு(24). இவர் குழந்தைகளுடன் கடந்த நவ., 8ல் மதுரை வாடிபட்டி அருகே கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர்கள் கணேசன் (கேணிக்கரை), லெட்சுமணன் (வாடிபட்டி), மதுரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஆதிலா பானு வீட்டில் தனிப்படையினர் சோதனை மேற்கொண்டபோது, ஆதிலா பானு பயன்படுத்திய மேலும் ஒரு மொபைல் போன் கிடைத்துள்ளது.

    விசாரணையில், “ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார். இதுபோல் திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் அடிக்கடி போனில் பேசியுள்ளதும்’ தெரிய வந்துள்ளது. மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர். அதில், ராமநாதபுரத்தில் உள்ள பல முக்கிய நபர்களின் எண்களும் உள்ளன. ஆதிலா பானுவுக்கு, வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் இருப்பதால், சொத்துக்காக கொலை நடந்ததா, கள்ளத் தொடர்பால் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். அடையாளங்கள் இல்லாத வகையில் கொலை நடந்துள்ளதால், கூலிப் படையினர் மூலம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் எனவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: