சம்சுதீன், உக்கடம் கோவையில் கைது!
சம்சுதீன், உக்கடம் கோவையில் கைது!
மற்றுமொரு கேரள தீவிரவாதி தமிழகத்தில் கைது[1]: கேரள மாநிலம் மூவாட்டுபுழா என்ற இடத்தில் கல்லூரி விரைவுரையாளரின் கையை தாலிபான் மாதிரியை பின்பற்றி வெட்டிய குழுவினரில் ஒருவரை – சம்சுதீனை காவல் துறையினர் இன்று (ஆக.20) கைது செய்துள்ளனர்[2]. மொத்தம் 49 பேர் குற்றாஞ்சாட்டப்பட்டு, அதில் 39 பேர் காணாமல் இருப்பதால், போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார்கள்[3]. ஏற்கெனெவே, சம்சுதீன் பி.எஃப்.ஐ. எற்பாடு குற்றங்களில் ஈடுபட்டுள்ளான். 2001ல் அலுவாவில் பினானிபுரம் என்ற இடத்தில், கலாதாரன் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரரைக் கொலை செய்தக் குற்றத்திற்காக, மற்றொருவருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜோஸப் கையை வெட்டிய கோஷ்டியில் ஒருவன்: தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சம்சுதீன் என்கிற அரக்கபாடி சாம்சுவை கோயம்புத்தூர் புறநகர் பகுதியான உக்கடத்தில் நேற்றிரவு (ஆக.19) கைது செய்து இன்று மூவாட்டுபுழாவுக்கு கொண்டு வந்ததாக காவல் துறை கண்காணிப்பாளர் எஸ் பி முனிராஜன் தெரிவித்தார். கை வெட்டப்பட்ட டி ஜே ஜோசஃப் என்ற இந்த விரிவுரையாளர் கேள்வித் தாள் ஒன்றை தயாரிக்கும்போது, முஹமது நபி பற்றி தரக்குறைவான குறிப்புகளை எழுதினார் கூறி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்று அவரது வலது கையை சென்ற மாதம் 4ஆம் தேதி வெட்டியது.
மற்றவர்களும்கைது செய்யப்படலாம்: செய்யப்பட்டவரை விசாரித்ததில், தாம் இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருந்ததை ஒப்புக் கொண்ட சாம்சு, இதர ஆறு கூட்டாளிகளின் பெயர்களையும் தெரிவித்துள்ளார். முன்னதாக காவல் துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக இந்திய மக்கள் முன்னணி தீவிரவாதிகள் 24 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை நீதிபதி ஹேமா தள்ளுபடி செய்தார்.
[1] சென்ற மாதம், நாகூரில் ஒரு கேரள தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
[2] http://www.dailypioneer.com/277395/First-crucial-arrest-in-prof-attack-case.html
Explore posts in the same categories: ஆர்.எஸ்.எஸ், உக்கடம், கோவை, சம்சுதீன், மூவாட்டுபுழாகுறிச்சொற்கள்: ஆர்.எஸ்.எஸ், உக்கடம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவை, சம்சுதீன், ஜிஹாத், தாலிபான், மூவாட்டுபுழா
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 23, 2010 இல் 12:26 பிப
It is very clear that these terror groups have been spoiling the secular fabric and nature of Kerala.
Unless, the Muslim brethren seperate terror, particularly, the Jihadi type of terror from their life, they cannot live peacefully with others.
Others also do not consider them as peace loving people, as their actions prove differently.
India has been peace loving country for all religiouis believers and therefore, Muslims should change their attitude.
Theyy should advice the fanatic members to change, eliminate the terror groups and punish the jihadis, as they do not deserve any sympathy, as they do not have any sympathy towards other humanbeings.
ஓகஸ்ட் 24, 2010 இல் 9:30 முப
கோவையில்தான் எல்லாமே நடக்கும்போல இருக்கிறது!
முன்பு குண்டுவெடிப்புகள் நடந்தன, அப்பாவி மக்கள் இறந்தனர்.
ஆனால், அந்த அல்-உம்மா காரர்கள் மாறியதாகத் தெரியவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு, மறுபடியும், அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டு, நாடகம்மாடுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும், கருணநிதியைக்கேட்டுதான் செய்யவேண்டும், என்ற நிலையில், தமிழ்நாட்டு போலீஸார் உள்ளனர். பாவம், பிறகு, அவர்கள் என்ன செய்வார்கள்?
கேரளா போலீஸாருக்கு வேறு வழியில்லை. முன்பு போல அரசியல் செய்யமுடியவில்லை.
முந்தைய முதலமைச்சரின் போன் நெம்பர்களே, மதானியின் போனில் உள்ளனவாம். பெங்களூரில், குண்டு வெடித்த பிறகு, மதானி, அவரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறானாம்!
ஓகஸ்ட் 26, 2010 இல் 8:16 முப
Now, even Karunanidhi cannot do anything.