இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?
இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?
இஸ்லாத்தில் உருவ வழிபாடு (Idol worship) இல்லை என்று சொல்லப்படுகிறது. உருவ வழிபாடு பாவம் – Idolworship is sin என்றும் அவ்வாறு செய்பவர்களைப் பாவிகள் (sinners) என்றும் கிருத்துவர்களும் கூறுவர். இதனால் அவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களை ஏதோ மிகவும் மோசமானவர்கள், நம்பிக்கையில்காதவர்கள் (infidels, idolators, kafirs), செய்யக்கூடாததை செய்துவிட்டவர்கள் என்பதுபோலக் குறைகுஊறுவர். அதுமட்டுமல்லாது அத்தகைய நிலை வெறியாகும்போது அத்தகைய மக்களைக் கொன்றுக் குவிக்கவும் செய்துள்ளனர். அவர்களது உருவங்களை உடைத்தெரிந்துள்ளனர். வழிபாட்டுத் தளங்களை அழித்துள்ளனர். ஆனால் உண்மை என்ன?
ஆண்டவனையேப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், பார்க்கலாம் என்ற சிரத்தையான, நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாத்தில் உருவம் இல்லை என்றால் எல்லோருமே குருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அதாவது என்றுமே பார்க்க முடியாததை, கேட்க முடியாததை, உணர முடியாததை, சுவைக்க முடியாததை…………….அவ்வாறேதான் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது இல்லாததை இருக்கிறது என்று பொய் சொல்லும் நிலைக்கூட வரலாம்!
“இல்லை” அல்லது “இருக்கிறது” என்ற இரு நிலைகளில் தான் இத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன.
“கடவுள் இல்லை” அல்லது “கடவுள் இருக்கிறார்”
தெரிந்ததலிருக்கும் நிலையிலிருந்து தெரியாததை அறியும் நிலை: இங்கேயே கடவுள், ஆண்டவன், தெய்வம், இறைவன்………….என்றெல்லாம் சொல்லி வாதிட்டாலும், அதற்கானப் பொருளை எந்த மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமானாலும் தெரிந்ததிலிருந்துதான் தெரியாததற்குச் செல்ல முடியும்.
கண்ணால் காணாததை அறிவது: அதாவது காண்பதை / பார்ப்பதை அறியாமல் தெரியாமல், புரியாமல் இருக்கும் போது, காணானதை / பார்க்காததை அறிந்து-தெரிந்து-புரிந்து கொள்ள முடியாது.
சுவைத்தால் சுவைத் தெரியும் என்ற உணர்ச்சி: இனிப்பு என்றால் சுவைத்தால்தான் அறியும்-தெரியும்-புரியும். வெறும் வாயினால் சொல்லிக் கொண்டிருந்தால் இனிப்பு இனிப்பாகாது.
“ஒன்று” இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதைத் தவிர “மற்றது” இல்லை எனும்போது, “மற்றது” இருக்கும் நிலையைத் தான் காட்டுகிறது.
“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரு நிலைகள்: அதாவது எப்படி “இருக்கிறது” என்ற நிலை (the state of existence) இருக்கும்போது “இல்லை” என்ற நிலையும் (the state of non-existence) அறிய-தெரிய-புரியப்படுகிறதோ அது போல!
Explore posts in the same categories: இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, உருவ வழிபாடு, சிலை வழிபாடு, Uncategorizedகுறிச்சொற்கள்: அடையாளம், இருக்கின்ற நிலை, இருக்கிறது, இல்லாத நிலை, இல்லை, உருவ வழிபாடு, குறி, சின்னம், சிலை வழிபாடு
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 25, 2010 இல் 6:20 முப
You have nicely raised the fundamental and basis issue and it involves a lot of philosophy and psychology.
The subjectve and objective symbolism act vigorously in Islamic theological processes, which are to be understood very carefully.
It is not a question of halal or haram; al-kitabia and people without books; dar-ul-harab and dar-ul-Islam etc., and more than that.
The issue of concept of existence and non-existence has been crucial.
ஏப்ரல் 28, 2010 இல் 9:37 முப
பழைய புத்தகங்களில் உள்ளபடி, காபா முக்கியமான வழிபாட்டுத் தளமாக இருந்து வந்துள்ளது. ராமதேவர் என்ற யாக்கோபு மெக்காவிற்கு சென்ரு வந்துள்ள விவரம் உள்ளது. முன்னர் ஆதிசங்கரரே அங்கு சென்று போதித்தாக உள்ளது. இதையெல்லாம் சொன்னால், நீ முஸ்லீமே இல்லை என்றெல்லாம் சண்டைக்கு வருவார்கள் இமாந்தாரிகள். இருப்பினும் மோமினாக இருந்து உண்மையை அறியவேண்டும். உருவ வழிபாடு இல்லை என்ரு சொல்பர்களுக்குத் தான் அத்தகைய சின்னங்கல், அடையாளங்கள் முதலியன அதிகமாகத் தேவைப் படுகின்ரன.
மே 14, 2011 இல் 7:21 பிப
மே 16, 2011 இல் 6:19 முப
சொல்லியுள்ள கருத்துகளில் சாராம்சம்:
1. கடவுளுக்கு உருவம் இல்லை.
2. அத்தகைய உருவத்தை ஓவியனோ, சிற்பியோ தனது கற்பனையில் உருவாகியதுதான். அதாவது மனிதனால் கடவுளின் உருவம் அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு ஏற்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஏசுவின் உருவம்.
3. கடவுள் ஒன்று என்றால், அவனது உருவம் ஒரே மாதிரித்தான் இருந்திருக்க வேண்டும்.
4. அப்படியென்றால், கடவுள் என்று வரையப் பட்ட / செதுக்கப்பட்ட உருவம் / சிலை உலகம் முழுவதும் ஒரே மாதிரி இருந்திருக்க வேண்டும்.
5. ஆனால், மதத்திற்கு ஏற்ப கடவுளின் உருவம் வேறுபடுவதால், அத்தகைய உருவம் கடவுள் ஆகாது.
6. மனத்தை ஒருமித்து வைக்க ஒரு உருவம் தேவையில்லை. அது இல்லாமலேயே, கவனத்தைச் சிதறாமல் வைத்திருக்கலாம்.
7. இந்துக்களும் கடவுளை வணங்கும்போது, கண்களை மூடிக்கொண்டு வணங்குகிறார்கள். அப்படியென்றால், எதிரே இருக்கும் விக்கிரங்களை தாண்டியுள்ள பரம்பொருளைத்தான் அவர்கள் வணங்குகிறார்கள்.
8. சித்தர்களும் அதனால்தான் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
9. இஸ்லாமியர், காபாவின் உருவம், அதன் தங்கக் கதவு, குரான் புத்தகம் முதலியவற்றின் படங்களை, உருவங்களை வைத்துக் கொண்டு வணங்குகிறார்கள். இதுவும் தவறானதே.
10. ஆகவே உருவமில்லாத கடவுளை, உருவம் ஏற்படுத்தி வணங்குவதால் எந்த பலனும் இல்லை.
இவையெல்லாம் தெரிந்தவைதாம். ஆனால், இதெல்லாம் கண்ணிருக்கும் நம்பிக்கையாளன், கண்ணில்லா நம்பிக்கையாளன் கடவுளை நெருங்கும் விதம் தான்.