சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்!
சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ்!
சேஷாசல முதலியார் என்றிருந்த சேஷாசலம்: சேஸாசல முதலியார் என்றிருந்த சேஸாசலம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவர் வேலைக்கு வந்ததே சாதி அடிப்படையில்தான். அவ்வப்போது தெலுங்கில் பேசிக் கொண்டும் இருப்பார்.
பெரியார்தாசன்: திகவினர் தொடர்பு ஏற்பட்டபோது, அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேரலாம் என்று அவர்கள் மேடையிலே பேச்சாளராக இடம் பிடித்தார். “பெரியார்தாசன்” ஆனார்.
கிருத்துவர் ஆனாரா? சினிமாவில் சந்தர்ப்பம் கிடைத்ததும் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு கிருத்துவ தொடர்பால், கிருத்துவராகி விட்டார் என்ற பேச்சும் அடிபட்டது. குறிப்பாக மாலைநேர குடிபார்ட்டி தொடர்ந்ததால் ஏற்பட்ட விளைவு.
சித்தர்த்தா: இடையில் புத்தரைப் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்த்தபோது கிடைத்த சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொண்டார். “சித்தார்தா …………………னந்தா.” ஆனார்.
அப்துல்லாஹ்: இப்பொழுது ரியாத்தில் தாவா சென்டரில் சென்றவுடன், ஏற்கெனவே தீர்மானித்தப்படி 11-03-2010 (வியாழக்கிழமை) மதம் மாறி அப்துல்லாஹ் ஆனார்!
இப்படியாக இந்துவான சேஷாசலம், நாத்திக பெரியார்தாசனாகி, “………………..” கிருத்துவராகி (?), பௌத்த மதத்தில் சித்தார்த்த……..னந்தாவாகி, இப்பொழுது அப்துல்லாஹ் ஆகியிருக்கிறாராம்!
கடவுளர்கள் பாவம்! இத்தனைக் கடவுளர்களைத் தூற்றி, ஏமாற்றி, போற்றி………………..தூற்றி, ஏமாற்றி, போற்றி…………..எப்படித்தான் மனம் வருகிறதோ. மதம் மாற்றத்தில் மனம் மாறுதல்தான் முக்கியம். அப்படியிருக்கும்போது, இப்படி மனம் மாறுவது கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது! இதை பகுத்தறிவு புரட்சி என்பதா, ஆன்மீக அபச்சாரம் என்பதா, தெய்வீக விபச்சாரமென்று சொல்வதா,……………..”சேஷுவின்” விளையாடல்……………யா அல்லாஹ்…………….!
- மனம் மாறியதா, மதம் மாறியதா?
- மதம் மாறியதா, மனிதன் மாறினானா?
- மனிதன் மாறியதால் கடவுள் மாறினானா?
- உள்ள மனிதனின் உள்ளம் மாறுமா?
- நாத்திகம் எப்படி ஆத்திகம் ஆகும்?
- கற்பிழந்தவள் எப்படி கற்பைத் திரும்பப் பெறுவாள்?
- கடவுளை நம்பி, மறுத்து, ………..நம்பி, மறுத்து,……..நம்பி, மறுத்து,…………..வாழ்ந்தவன் யார்?
- மனம் மாறினால் கடவுள் மாறினால் என்னாவது?
குறிச்சொற்கள்: அப்துல்லாஹ்!, சித்தார்த்தா, சேஷாசல முதலியார், சேஷாசலம், பெரியார்தாசன்
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 25, 2010 இல் 6:13 முப
As for I come to know about this guy and the group that works in Riyadh, the entire episode has been stage-managed (some of my friends at Dubai allege that money has played a crucial role) and it does not give any credit to Islam.
Moreover, under the guise of a psychologist, this man appears to be theologically schezophrenic, mentally self-deceptiive and unreliable believer (as he has been an atheist also), as he has already cheated three religions.
I do not know whether he can be fit into a religious parasnoid, theological cheat or ideological prostitute or all rolled into one!
Whether he is a dalit or otherwise is also shrouded with mystery.
When Islam has been accused of terrorism all over the world, the educated, elite and others should be so careful in dealing with this type of theological gambling is involved.
மார்ச் 31, 2010 இல் 1:44 முப
மொஹம்மது இக்பால் செரிஃப் என்பவர் சொல்வதாவது,
இந்த மனிதன் மற்றும் ரியாதில் வேலை செய்யும் அந்த குழு பற்றி நான் அறிவதாவது, இந்நிகழ்ச்சியே முன்கூட்டியே ஜோடனை செய்யப்பட்டதாகும். துபாயில் உள்ள என் நண்பர்கள் சொல்வதாவது, பணம்தான் முக்கியமான வேலை செய்துள்ளது என்கிறார்கள். ஆகவே இத்தகையவை இஸ்லாத்திற்கு புகழ் சேர்க்காது.
மனோதத்துவ நிபுணர் என்ற போர்வையில் இருக்கும் இவரே, இறையியல் ரீதியில் மனச்சிதைவு, மனத்தளவில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் நிலை மற்றும் நம்பத்தககுதியற்ற நம்பிக்கையாளராக இருக்கிறார். ஒரு நாத்திகராகவும் இருந்துள்ளார். அவ்வகையில் மூன்று மதங்களை ஏமாற்றியுள்ளார்.
எனக்கு இவர் ஒரு மதப்பித்தர், இறையியல் ஏமாற்றுவாதி, இல்லை சித்தாந்த விபச்சாரி என்று எதில் வருவார் அல்லது எல்லாம் சேர்ந்த நிலையில் வருவாரா என்றுத் தெரியவில்லை.
அவர் ஒரு தலித்தா இல்லையா என்பதும் மர்மாகவே உள்ளது.
இஸ்லாம் தீவிரவாதத்திற்கு காரணம் என்று உலகம் முழுவதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், படித்தவர்கள், பண்பாளர்கள், மற்றவர்கள், இத்தகைய இறையியல் சூதாட்டங்களில் ஈடுபடும்போது மிகவும் ஜாக்கிரத்தையாக இருக்கவேண்டும்.
——————————————————————————–
உடனடியாக பதில் அளிக்காமைக்கு மன்னிக்கவும்.
இன்றுதான் உமது பதிவைப் பார்க்க நேர்ந்தது.
உங்களுடைய அலசல் மிகவும் நன்றாக இருப்பதால், அதனை தமிழில் முடிந்த வரையில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
நன்றி.
மார்ச் 31, 2010 இல் 1:28 முப
அப்துல்லா என்பவர் எழுதியுள்ளதாக இப்பதிவில் சில முக்கியமான விஷயங்கள் எழுப்பப் பட்டுள்ளன.
அவை விவாதத்திற்குரியவை என்பதால், இங்கு சேர்க்கப் பட்டுள்ளது.
அப்துலாவிற்கு நன்றி.
—————————————————————————–
பெரியார்தாசன் செய்த ஆள்மாறாட்டம்..! By abdullah
http://gullah.wordpress.com/2010/03/30/பெரியார்தாசன்-செய்த- ஆள்ம/
ஆள்மாறாட்டம் என்ற குற்றம் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது; பதவி உயர்வு பெறவும் வேலை வாய்ப்பைப் பெறவும் கொள்ளையடிக்கவும் பணத்துக்காக ஓட்டுப் போடவும் இப்படி பல்வேறு காரணங்களுக்கிடையே ஆள்மாறாட்டத்தினால் அண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டதும் கூட நடந்தது;
இன்றைய தொலைக்காட்சி செய்தியில் செல்லப்பன் என்ற பெயரில் கருப்பையா என்ற பட்டதாரி இளைஞர் ஆள்மாறாட்டம் செய்து ரூபாய் 5000 பணத்துக்காக தேர்வு எழுதிய போது பிடிபட்டிருக்கிறார்;அதுவும் இந்த ஆள்மாறாட்டத்தைக் கடந்த பத்து வருடமாகச் செய்து வந்திருக்கிறார் என்பதே சுவாரசியம்;
அதைக் குறித்த செய்தியின் ஆதாரத்துக்காக இணையத்தில் தேடினால் வேறொரு குற்றச் செய்தியும் கிடைத்தது;இதுவும் அதுவும் ஒன்று தானா என்பது தெரியவில்லை;
http://www.viparam.com/index.php?news=9739
இதேபோல ஒரு புத்திசாலி (என நாம் இதுவரை எண்ணியிருந்த…) யான பெரிய மனிதர் கடந்த பத்து வருடமாக ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கிறார்;அதனை யாரும் குற்றமாக பாவிக்கவில்லை;
சேஷாச்சலம் என்ற அவர் நாத்திகம் பேசி பெரியார்தாசன் ஆனதோ பிறகு பௌத்த மதத்தைத் தழுவி சித்தார்த்தன் ஆனதோ பெரிய விஷயமில்லை; இன்றைக்கு அவர் அப்துல்லாவாக மாறியிருப்பதே புதிய செய்தி..!
வெவ்வேறு பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்வது குற்றமானால் தன் வாழ்நாள் முழுவதும் பெயர் மாற்றம் செய்து ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு கொள்கையைப் பேசி மக்களைக் குழப்பும் இவர் செய்வதென்ன?
இதுவரை எதிலுமே இன்னும் ஒரு முடிவுக்கு வராத இவரை
இனி யார்தான் நம்பமுடியும்? தானே நிர்ணயித்துக் கொள்ளாத வாழ்க்கை தத்துவங்களை ஏன் சொற்பொழிவாக ஆற்றவேண்டும்?
ஆடுபோல சிக்கிக் கொண்ட பயத்தில் அப்துல்லா..!
இறை மறுப்பாளனாக நீ பிறக்கவில்லை;அதுபோலவே இறைமறுப்பாளனாக இறந்துவிடாதே என்ற நண்பர் சிராஜுதீனின் கூற்றையே தான் இஸ்லாமியனானதற்கு காரணமாகக் கூறுகிறார்;
முகமதுவிடமே பேசியிராத அல்லா இவரிடம் பேசி கட்டளையிட்டதைப் போல ஈமான் விடுகிறார்;
இறைவனுக்கு இணை வைக்கக்கூடாதாம்; ஆனால் ஒரு ஸ்லோகம் மூலம் தன்னை இறைவனுக்கு இணை வைத்த முகமதுவைக் குறித்து என்ன சொல்வார்?
“முகமது அல்லாவின் ரசூல்” என்பதை அல்லா சொன்னானா?
அதை யார் கேட்டது, முகமதுவுக்கு மட்டும் கேட்ட ஜிப்ரில் சத்தம் உடனிருந்தோர்க்கு கேட்காதது ஏன்?
இவரைப் பெறுவதற்கு இவரை யாரும் கேட்கவில்லையென்று, தனது பிறப்பையே கேவலப்படுத்திக் கொண்ட ‘ சேஷாச்சலம் ‘ ‘பெரியார்தாசன் ‘ என்ற போதும் அவருக்கு தாசன் கிடையாதாம்; ‘சித்தார்த்தன்’ ஆனபோதும் புத்தரை அம்பேத்கரில் இழந்துவிட்டார்;
2500 வருடமுன்னரே உலக முழுவதையும் கவர்ந்து அதன் பாதிப்பை இன்றைக்கும் உணரச் செய்த புத்தரையும் இவர் சிறுமைப்படுத்திவிட்டார்; அம்பேத்கரையும் கேவலப்படுத்திவிட்டார்;
தனது அந்திம காலத்தில் இறையுணர்வும் பாதுகாப்பற்ற உணர்வும் வருவது இயல்பே; ஆனால் அது ஆள்மாறாட்டம் போலாகிவிட்டதே?
பெயரை மாற்றாவிட்டால் இஸ்லாமில் சேரமுடியாதா?
அரபு மொழியைக் கற்காவிட்டால் அந்த வேதத்தினைக் கற்று அறியவும் முடியாதா? எல்லாம் முடியும்;
ஆனால் எந்த ஒரு மனுஷனும் குரானின் படியும் முகமதுவின் போதனையின்படியும் ஒரு முஸ்லிம் ஆக்வே முடியாது;அவன் சாகும்வரை ஒரு காஃபிர்தான்;
அந்த அளவுக்கு பாகுபாடுகளும் முரண்பாடுகளும் நிறைந்த இஸ்லாமில் இணைந்த ‘சேஷாச்சலம்’ என்ற ‘பெரியார்தாசன்’ ஆகி, ‘சித்தார்த்தன்’ ஆன “அப்துல்லா” (தனது டாக்டர் பட்டத்தை மட்டும் விடவில்லை..!) அவர்களின் நிலைமை பரிதாபம்தான்;அதான் சொல்வாங்களே,ஆடு கசாப்பு கடைக்காரனைத்தான் நம்பும் என்று..!
இவர் தற்போது எந்த பெயரில் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறாரோ, இவருடைய சொத்துக்களை என்ன செய்வாரோ? ஏனெனில் தவறான வழியில் தவறான ஒரு கொள்கையைப் பேசி சம்பாதித்த பணமும் ஒருவகை மோசடிதானே?
ஏப்ரல் 28, 2010 இல் 9:21 முப
முன்பு அப்துல்லா என்ற இந்தி படச்ம் பார்த்த ஞாபச்கம். அதில் ஒரு முஸ்லீம், ஒரு இந்து பையனை இந்து மாதிரியே வளர்த்து ஆளாக்குகின்ற கதை. அத்தகைய சுமுகமான நிலை இந்தியாவில் இருந்தது. அந்நிலையில், இத்தகைய மதமாற்றங்கள் தேவையில்லை. அதிலும், நாத்திகம் பேசும் இந்த ஆளின் வரவு தேவையில்லை.
ஓகஸ்ட் 19, 2013 இல் 7:18 முப
Reblogged this on atheism.