தேவநாதனால் மதம் மாறினேன்!

தேவநாதனால் மதம் மாறினேன்!

தமிழன் எக்ஸ்பிரஸில் Jan14- jan21, 2010 இப்படியொரு செய்தி வெளிவந்துள்ளது.

வேதமா, குரானா, காதலா?: குமரன் என்ற இளைஞன் சொல்வதில் அறியப்படுவதாவது, அவன் பெனாஸிர் என்ற ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்துள்ளான். பெனாஸிரும் குமரனைக் காதலித்து இருக்கலாம். ஆனால், குமரனுக்கு மட்டும் இஸ்லாம் மீது காதல் ஏற்படுவது தான் ஆச்சரியமாக உள்ளது! ஏனெனில், காதல் செய்யும் பெனாஸிருக்கு இந்துமதவேதங்களின் மீது காதல் வரவில்லை!

ஏன் பாசம், நெகிழ்வு, வேறு மதம் இல்லை எனும்போது எங்கிருந்து வந்தது மதம் மாற்றம்?: எங்கள் இருவீட்டார் சம்மதத்துடந்தான் இந்தத் திருமணம் நடந்தது. என்னை  வேறு மதம் என்று பிரித்துப் பார்க்காத, பாச நெகிழ்வான குடும்பத்தில் புகுந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்“, என்று சொல்வது பெனாஸிர்! அப்படி மாமியார் வித்தியாசமே பார்க்கவில்லையென்றால், பிறகு எதற்கு குமரன் உமராக வேண்டும்? அப்படியே இருக்கலாமே அல்லது அத்தகைய பாசம், நெகிழ்வு…………..முதலியவற்றைக் கண்டு பெனாஸிர் “வள்ளி” ஆகியிருக்கலாமே? இங்குதான் சந்தேகம் வருகிறது! கூட “சுன்னத் ஜமாத்”ம் வருகிறது!

தற்காப்புப் பேச்சு!: நான் இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட முஸ்லீம் நண்பர்கள் நட்பும், குர்-ஆன் மீது ஏற்பட்ட ஈடுபாடும் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் தேவநாதன், கோயில் கருவறையில் நடத்திய அசிங்கமும் என்னை பெரிதும் பாதித்தது. நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் இணைத்துக் கொண்டேன். மதம் மாறுவது என் உரிமை. என்னை யாரும் மாற்றவில்லை……” என்று குமரன் கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது! இது குற்றம் செய்து, மனசாட்சி உறுத்தும் வேளையில், தவறு செய்ததை நியாயப் படுத்தும் போகுடன், ஒரு தற்காப்புத் தன்மையுடன் பேசப்பட்டது தெரிகிறது.

குமார் / உமரின் தாயார் இந்திரா அ.அ.தி.மு.க மகளிர் அணி தலைவியாக உள்ளார். ஆகவே, அவர் தமது அரசியல் ஏற்றத்திற்கு இத்தகைய உறவுகளைப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். மேலும் தந்தையைப் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை.

காஞ்சிபுரம் தேவநாதன்!: “சுன்னத் ஜமாத்”தின் முக்கிய திட்டமே மதம் மாற்றம்தான். அதற்கு குமரன் உட்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில் காதல் ஏற்பட்டதா, ஏற்படுத்தப்பட்டதா என்ற நிலை! லவ்-ஜிஹாத்! “என்ன தைரியம் இருந்திருந்தா, எங்க பெண்ணை லவ் பண்ணியிருப்பே”, “ஐயோ வேணாங்க, நான் இயிருக்கு உயிராக நேசிக்கிறேன்”,……, என்ற நிலையைத் தாண்டி, அதாவது காதலித்தப் பிறகு, நிச்சயமாக முஸ்லீம்கள் கேட்டுருப்பர், “எங்க பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டுமானால், முஸ்லீமாக வேண்டும்”, ……….”சரி, மாறுகிறேன்”. ஆக, ஒரு புது ஆள் கிடைத்தவுடன், இனி விளம்பரம் கிடைக்கவேண்டும்.

kanchipuram-conversion

“காஞ்சிபுரம் தேவநாதனால் மதம் மாறினேன்” – ஓர் இளைஞரின் அதிரடி! இப்படி தலைப்பு! இத்தனை தனிமனித விருப்பங்கள், ஆசைகள், மோகங்கள், ……………அரசியல், மதம் மாற்றம், சுன்னத் ஜமாத்……..முதலியன இருக்கும்போதுதான், காஞ்சிபுரம் தேவநாதன் வருவது அல்லது இழுக்கப்படுவது போலித்தனமாக இருக்கிறது!

ஆரம்பித்ததோ இப்படி, நான் இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்.“மிக அதிக நம்பிக்கை”, வைத்து இந்துமதத்தை ஏமாற்றியுள்ளார்.

சென்னையில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட முஸ்லீம் நண்பர்கள் நட்பும், குர்-ஆன் மீது ஏற்பட்ட ஈடுபாடும் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது காதலுக்குப் பின் ஏற்பட்டிருந்தால், அதன் மகத்துவனம் நன்றாகவே புரிகிறது. அல்லது, அதன் விளைவாகவே காதல் ஏற்பட்டிருந்தால், ஜிஹாத் லவ் ஆகிறது. அதாவது குர்-ஆனுடன், பெனாஸிரும் சேர்கிறது.

காஞ்சிபுரம் தேவநாதன், கோயில் கருவறையில் நடத்திய அசிங்கமும் என்னை பெரிதும் பாதித்தது. இது எப்படி இங்கு வருகிறது என்பதுதான் புரியவில்லை! இப்படி, எல்லோருமே பாதிக்கப்பட்டால், முஸ்லீம் ஆகிவ்டுவார்களா? தேவநாதனின் விஷயத்தில் ஒரு முஸ்லீம் பெண் இருக்கிறாள். அப்பொழுது, நாளைக்கு அவனே முஸ்லீம் ஆகிவிட்டால் என்னாவது?

நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் இணைத்துக் கொண்டேன். நான் மதம் மாறி சுன்னத் ஜமாத்தில் ஈனைத்துக் கொண்டேன், என்பதும், நம்பிக்கயின் மேன்மையைக் காட்டுவதாக இல்லை! தவறு செய்ததின் உறுத்தல் வெளிப்படுவது தெரிகிறது!

மதம் மாறுவது என் உரிமை. மாறவேண்டியதுதான். யாரும் கவலைப்படப் போவதில்லை! இங்கு ஒரு “இந்து” தாயாரே ஒப்புக் கொண்டு தன் மகனை “முஸ்லீம்” ஆக ஏற்பாடு செய்துள்ளார்!ஆனால், இப்படி படிப்படியாக “defense mechanism” வேலைசெய்வது தான் உண்மையைக் காட்டுகிறது!

“என்னை யாரும் மாற்றவில்லை……, கடைசியாக, இப்படி போட்டு உடைக்கிறார், அதாவது ஏதோ பாவம் தானாகவே இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்து, திடீரென்று இஸ்லாம் மதத்தை காதலால் இருகத் தழுவிய பின்னர், “என்னை யாரும் மாற்றவில்லை……என்று சொல்வது பொய்யாகிறது. ஏனெனில், மதம் மாறுவது / மாற்றம் என்றாலே இஸ்லாத்தில் பல சடங்குகளுடன் நடக்கும். அவை எல்லாவற்றையும் முமரன் தானாகவே செய்து கொண்டு “உமர்” ஆகியிருந்தால், உலகத்திலேயே அவர்தான், அத்தகைய முதல் “முஸ்லீமாக” இருப்பார்!


Explore posts in the same categories: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, இந்து காதலனும் முகமதிய காதலியும், ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்!, காதலில் போரா காதலன்-காதலி போரா?, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, மதமா மனமா மணமா?, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை

குறிச்சொற்கள்: , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “தேவநாதனால் மதம் மாறினேன்!”

  1. Kuppusamy Says:

    அந்த ஆள் பேசுவதிலிருந்தும், உமது பகுப்பு-விளக்கத்திலிருந்தும் நன்றாகவே தெரிகிறது ஒன்று இவன் அவளிடத்தில் காதல் வயப்பட்டு / மயக்கப்பட்டு, மதம் மாற்றத் தூண்டியிருக்கவேண்டும். அல்லது, ஏடா-கூடா நிகழ்ச்சிகளை சொல்லி மிரட்டி முகமதியர்களே மதம் மாற்றியிருக்கவேண்டும்.

    • vedaprakash Says:

      இந்த விஷயத்தில் தனது தவறுகளை மறக்க, மறைக்க, மறுக்க, தோல்விகளை ஜீரணிக்கமுடியாத நிலையில், மனசாட்சி குருகுருக்க, இதயத்தைக் குத்தி கிழிக்கும் நிலையில் தனது தாய் மதம் மீது அபாண்டமாக பழியைப் போடுகிறான்.

      தனது காதல் / காமத்திற்காக தாயை / தாய் மதத்தை அடகு வைக்கும் / விற்கும் இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், இவ்வாறு அவதூறு பேசுவதை ஒப்புக் கொள்ளமுடியாது.

      இப்படி அல்லாவைவிட எனக்கு தேவநாதன் தான் பெரியது, தேவநாதன் தான் என்னைத் தூண்டி இஸ்லாத்திற்கு மாறச் சொன்னான் என்ற ரீதியில் பேத்துவது கேவலமானது.

      உண்மையான முஸ்லீம்களுக்கும் அது அழகல்ல, நியாயமல்ல.

      நாளைக்கே, இப்படி கோடிக்கனக்கானவர்கள் கிளம்பி வந்தால், அவர்களுக்கு இதே மாதிரி பெண் கொடுத்து திருமணம் செய்து வைத்து மதம் மாற வைப்பீர்களா?

      ஆகவே தயவு செய்து அவரவர் கடவுளர்களை வணங்கிக் கொண்டு, நம்பிக்கையோடு இருந்து வாழ்வதே சாலச் சிறந்தது.

      ஏதோ மனித காரணங்களுக்காக, மதத்தையும் இறைவனையும் இழுக்கவேண்டாம்.

      அதற்காக ஏதோ ISO சான்றிதழ் கொடுப்பதைப் போன்று பேசவேண்டாம், விளம்பரம் படுத்தவேண்டாம், தேவையற்ற வார்த்தகளைக் கொட்டவேண்டாம், அல்லது “தேவநாதனால்தான் மதம் மாறினேன்” என்றெல்லாம் உளரவேண்டாம்.

  2. Brahmallahchrist Says:

    This is simply cock and bull story and no sane person would take. That fellow must have been obviously screwed up with his blunder or threatened to get converted and continue his play. Having pointed out the Islamic examples, would that fellow get reconverted back to Hindu religion? Would he be abled to convert his wife accordingly when she has been so fond of her mother in law? As a Muslim, as an ex-Hindu or an Indian, he has to come out with his stand. When the Devanathan could provooke him, what these Imans would have done?

    • vedaprakash Says:

      In the instant case, the person who has got converted is suppressing his guilty conscience.

      In his defense mechanism, he s in fact, exposing the ugly side of Islam – the forced conversion.

      To suppress and cover-up or rather whitewash such religious crime, they divert the issue just like the Dravidian politician, linking to Devanathan.

      Thus as pointed pointed out by you, this fellow has not only to convert back to Hindu religion, but also convert the perpetrators to Hindu religion.

      In other words, as the involved Muslims have utterly been defeated in their attempts, they have to renounce their religion or just keep quite with them without poking nose into Hindu affairs like this.

  3. Abdulrahman Says:

    Definitely, it is nonsensical.

    Islam doers not require this type of converts.

  4. thangappa Says:

    ஏதோ மனித காரணங்களுக்காக, மதத்தையும் இறைவனையும் இழுக்கவேண்டாம்.

    • vedaprakash Says:

      தங்கப்பன் அவர்களே,

      தாங்கள் குறீப்பிட்டுள்ள –

      1. மனித காரணங்கள்

      2. மதம்

      3. இறைவன்

      இந்த மூணையும் யார் இழுத்தார்கள் என்று பார்க்கவும், இல்லை மறுபடியும் படிக்கவும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: