ஜிஹாதி மனிதகுண்டு – ஃபிதாயீன் கைது!

ஜிஹாதி மனிதகுண்டு – ஃபிதாயீன் கைது!

நோமன் அர்ஸத் என்ற இளைஞன் பாகிஸ்தானில் லாஹூருக்கு அருகிலுள்ள சிங்புரா என்ற ஊரில் வாழ்பவன். நேற்று இந்திய எல்லையில் மற்ற ஃபிதாயீன் எனப்படுகின்ற 6-7 மனித குண்டுகளுடன் [fidayeen = suicide attackers] நுழைய முயன்றபோது 55வது எல்லைக்காவல் படையினரால் பிடிக்கப்பட்டான். தங்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் மனிதகுண்டாக செயல்பட்டு 26/11 போன்ற தாக்குதலில் ஈடுபடவே தாம் வந்ததாகவும் ஒப்புக்கொண்டான். அதுமட்டுமல்லாது, வந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் என்ரும் குறிப்பிட்டான்!

BSF parades Nauman Arshad, a Pakistani citizen who was apprehended near Indo-Pak Attari border on Tuesday, before the media in Attari on Thursday. PTI“எங்கள் கண்களைக் கட்டி பயிற்சிக்கான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். அங்கு நாங்கள் எப்படி ஜிஹாத் (புனித போர்) இந்திய காஃபிர்களுக்கு எதிராக நடத்தவேண்டும் என்று விளக்கப்படும்.நாங்கள் ஃபிதாயீன் என்பதனால் உயிர்விடத் தயாராக இருக்கவேண்டும், இறந்த பிறகு நாங்கள் சஹீதுகளாக மதிக்கப் படுவோம். அல்லா எங்களுக்கு சொர்க்கத்தைக் கொடுப்பார். சாவதைப் பற்றிக் கவலைப் படவேண்டியதில்லை, ஏனெனில் எங்அளது குடும்பங்களை அவர்கள் காப்பாற்ற வாக்க்குக் கொடுத்துள்ளார்கள்”, என்றெல்லாம் விளக்கினான்!

பாகீஸ்தானில் பல இடங்களில் அத்தகைய ஜிஹாதி பயிற்சி பள்ளிகள் இருப்பதாகக்கூறினான். அஜ்மல் கஸாப் பயிற்சி பெற்ற அதே இடத்தில் ( ஒக்ரா என்ற மாவட்டத்தில் Okhara உள்ள தீவிரவாத பயிற்சிப் பள்ளி) தனக்கும் பயிற்சியளிக்கப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டான்.

இப்பொழுது சிதம்பரமும் மற்ற நியாயவான்களான முஸ்லிம்களும் என்ன சொல்லப் போகிறார்கள்?

http://www.ndtv.com/news/index.phpDEVIL

DEVIL’S SON: Officials claim that the youth was trained in use of weapons and explosives at the Okaya training camp in Pak

பெரிய-காஷ்மீர்-பத்திரிக்கையின்-கார்ட்டூன்

பெரிய-காஷ்மீர்-பத்திரிக்கையின்-கார்ட்டூன்

இந்தியாவிற்கு எதிராக, நக்கலாக வெளியிடப் பட்டுள்ள, ஒரு கார்ட்டூன்!

இந்தியாவை யார் காப்பாற்றப் போகிறர்கள்?

Explore posts in the same categories: ஃபிதாயீன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், ஜிஹாத்

4 பின்னூட்டங்கள் மேல் “ஜிஹாதி மனிதகுண்டு – ஃபிதாயீன் கைது!”

  1. vedaprakash Says:

    ப்ரீ-பெய்டு இணைப்புக்கு தடை ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
    ஜனவரி 15,2010,00:00 IST
    http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4931

    புதுடில்லி:“பாதுகாப்பு காரணங்களுக்காகவே காஷ்மீரில் ப்ரீ-பெய்டு மொபைல் போன் இணைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள் ளது.காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள், போலியான முகவரிகளை கொடுத்து “ப்ரீ-பெய்டு’மொபைல் போன் இணைப்புகளை பெற்று, அவற்றை இந்தியாவில் நாச வேலைகளை செய்வதற்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, காஷ்மீரில் “ப்ரீ-பெய்டு’இணைப்புகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.இதை எதிர்த்து, காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி சார்பல் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில்,”மொபைல் போன் இணைப்பு வழங்கும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் அதிக பயன் பெறும் வகையில் தான், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ப்ரீ-பெய்டு இணைப்புகளுக்கு தடை விதித்தால், வேறு வழியில்லாமல் வாடிக்கையாளர்கள் போஸ்ட்-பெய்டு இணைப்புக்கு மாறுவர் என்பதை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு மத்திய அரசு சார்பல் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது அரசு சார்பல் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் கூறியதாவது:“ப்ரீ-பெய்டு’இணைப்புகளை பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துவதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில், முற்றிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே, காஷ்மீரில் ப்ரீ- பெய்டு இணைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த தடை விதிக்கப்பட்ட பன், பயங்கரவாதிகளின் நெட் ஒர்க்கில் பன்னடைவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் தொடர்பு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.இவ்வாறு, கோபால் சுப்ரமணியம் கூறினார்.

  2. vedaprakash Says:

    அமெரிக்க விமான தாக்குதல்: தலிபான்கள் 15 பேர் பலி

    ஜனவரி 15,2010,00:00 IST
    http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4629

    பெஷாவர்: பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில், தலிபான் அமைப்பின் முக்கிய தளபதி உட்பட 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வாசீரிஸ்தான் பகுதியில் தலிபான் அமைப்பின் ஆதிக்கம் உள்ளது. இங்குள்ள பசால்காட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கருதப்பட்ட ஒரு வீட்டின் மீது, அமெரிக்கா ராணுவத்தின் ஆளில்லா விமானம் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஏழுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதில், அந்த வீட்டில் பதுங்கியிருந்த தெரிக் -இ-தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் உட்பட 15 பேர் கொல்லபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஹகிமுல்லா பலியானதாக கூறப்படும் தகவலை கிராம மக்கள் மறுத்துள்ளனர்.

  3. குப்புசாமி Says:

    என்னய்யா கூத்து இதில்லாம்?

    “…….அங்கு நாங்கள் எப்படி ஜிஹாத் (புனித போர்) இந்திய காஃபிர்களுக்கு எதிராக நடத்தவேண்டும் என்று விளக்கப்படும்.நாங்கள் ஃபிதாயீன் என்பதனால் உயிர்விடத் தயாராக இருக்கவேண்டும், இறந்த பிறகு நாங்கள் சஹீதுகளாக மதிக்கப் படுவோம். அல்லா எங்களுக்கு சொர்க்கத்தைக் கொடுப்பார். சாவதைப் பற்றிக் கவலைப் படவேண்டியதில்லை, ஏனெனில் எங்அளது குடும்பங்களை அவர்கள் காப்பாற்ற வாக்க்குக் கொடுத்துள்ளார்கள்”, இப்படியேல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா?

    மனிதர்களை கொல்லும், இந்த மனித குண்டுகளுக்கு சொர்க்கம் கிடைக்குமா?

    ஒன்றுமே புரியவில்லையே!

    இந்த பூமியை நரகமாக்கிச் செல்லும் இந்த அரக்கர்கள் எப்படி சொர்க்கத்திற்கு போவார்கள்?

    அப்பாவி மக்கள் இறக்கும்போது, அவர்களின் குழந்தைகள், தாய்மர்கள், முதலியோர் என்ன செய்வர்?

    ஆமாம், இந்த பையனின் தாயாருக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?

    இப்படி அவள் இம்மாதிரி தன் மகன் தயாராகுவதை விரும்பினாள்?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: