லவ்-ஜிஹாத் இருப்பது உண்மைதான்!
லவ்-ஜிஹாத் இருந்ததா இல்லையா என்பது பற்றி, ஊடகங்கள் ஓடிபிடித்து விளையாடி வரும்போது, தினகரனில், இப்படி ஒரு செய்தி “காதலிப்பது போல் நடித்து பெண்களை மத மாற்றம் செய்வது உண்மைதான்“:
என்ன செய்வது?
காதலில்கூட “செக்யூலரிஸம்” பொய்த்து விடுகிறது!
அதுவும் இந்தியாவில் சொல்லவே வேண்டாம்.
காதலுக்கு மதம் உண்டு.
மதம் இருக்கிறதால் ஜிஹாத் உண்டு.
ஜிஹாத் இருக்கும்போது, காதல் எப்படியிருந்தது?
ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்!
இந்தியா ஆப்கானிஸ்தான் ஆகவேண்டியதுதான்!
அதுதான்போலும், கமலஹாசனும் கருணாநிதியும் “இந்துக்களை” ஏன் ராமனின் தாய் கோசலையை அங்கு அனுப்பத் துடிக்கிறார்கள் போலும்!
ஆகவே, ஒருவேலை அவர்களும் “நாத்திக ஜிஹாத்தில்” ஈடுபட்டிருக்கின்றனர் போலும்!
Explore posts in the same categories: இந்து காதலியும் முகமதிய காதலனும்!, ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை!, காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது!, காதலில் போரா காதலன்-காதலி போரா?, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, லவ் ஜிஹாத்
நவம்பர் 2, 2009 இல் 1:03 முப
கேரள, கர்நாடக மாநிலங்களில் ‘லவ் ஜிகாத்’ பற்றி விசாரணை
நவம்பர் 02,2009,00:00 IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18437
திருவனந்தபுரம்: இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, “ஜிகாத்’ என்ற பெயரில் தேச விரோதச் செயல்களில் ஈடுபடுத்தும் இளைஞர்கள் குறித்து தீவிர விசாரணையில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்கள் இறங்கியுள்ளன. கேரளாவில் சமீபத்தில், இளம்பெண்களை காதலிப்பதாகக் கூறி மூளைச் சலவை செய்து பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக இரு முஸ்லிம் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. மேலும், “லவ் ஜிகாத்’ என்ற பெயரில் மதமாற்றம் மூலம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை இளம்பெண்கள் இவ்விதம் மதம் மாற்றப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது.இந்த வழக்கின் தொடர்ச்சியாக, மாநில டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் “லவ் ஜிகாத்’ பற்றிய முதற்கட்ட அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;”லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இளம்பெண்களை மயக்கி காதலில் விழவைத்து, அவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவது மாநிலம் முழுவதும் பரவலாக நடந்து வருகிறது. இந்தச் சதிவேலையில் ஈடுபடுபவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி வருகிறது. இந்தக் கட்டாய மதமாற்றம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் எவரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கர்நாடகாவில், செல்வராஜ் என்பவர் “தன் மகள் சில்ஜா ராஜ் என்பவரை,கேரளத்தைச் சேர்ந்த அஜ்கர் என்ற முஸ்லிம் வாலிபர் திருமணம் செய்து கட்டாயமாக மதம்மாற்றி உள்ளார்’ என்று புகார் அளித்து கர்நாடக ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். செல்வராஜின் வழக்கறிஞர், இது “லவ் ஜிகாத்’தின் அடிப்படையில் நடந்துள்ளது என்று வாதிட்டார். சில்ஜா ராஜ், தான் விரும்பித்தான் மதம் மாறியதாக கோர்ட்டில் வாதாடினார்.இந்த வழக்கை விசாரித்த அம்மாநில ஐகோர்ட், சில்ஜா ராஜின் விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டது.
மேலும், கேரள ஐகோர்ட், “லவ் ஜிகாத்’ பற்றி அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் தீர்ப்பில்,”சில்ஜா ராஜின் வாக்குமூலம், சந்தேகத்தை அளிக்கிறது. “இது போன்ற செயல்கள் தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும். இதனால், மாநிலத்தில் இளம்பெண்களை சட்டவிரோதச் செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவது குறித்து பல கேள்விகள் எழுகின்றன. எனவே, இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியான மறுநாள், போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா,” இதைப் பிரச்னைக்குரிய விஷயமாகக் கருத வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மே 25, 2013 இல் 1:49 முப
[…] [7] https://islamindia.wordpress.com/2009/10/31/%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E… […]